Author: நலன் விரும்பி
போலீசார் திடீர் சுற்றிவளைப்பு -3.009 பேர் கைது
போலீசார் திடீர் சுற்றிவளைப்பு -3.009 பேர் கைது
இலங்கை காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் பொழுது 3,009 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு கைது செய்ய பட்டவர்களில் பல் வேறு பட்ட குற்ற செயல்களுடன் தொடர்பு பட்டவர்கள் நீதிமன்ற பிடியானையின் மூலம் கைது செய்ய பட்டுள்ளனர்
மேலும் மது போதையில் வாகனம் செலுத்திய 580 பெரும் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைய முற்பட்ட சீன நாட்டவர் உள்ளிட்ட ஐவர் கைது
கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைய முற்பட்ட சீன நாட்டவர் உள்ளிட்ட ஐவர் கைது
கொழும்பு துறைமுகத்திற்குள் அனுமதியின்றி நுழைய முற்பட்ட சீன நாட்டவர் உள்ளிட்ட ஐவர் கைது செய்ய பட்டுள்ளனர்
உள்ளே நுழைவதற்கான அனுமதி பத்திரங்கள் எதுவும் இன்றி சட்ட விரோதமாக நுழைய முற்பட்ட
குற்றத்திற்கு கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
இலங்கை வந்தடைந்த 70,200 பைசர் தடுப்பூசிகள்
இலங்கை வந்தடைந்த 70,200 பைசர் தடுப்பூசிகள்
இன்று அமெரிக்காவில் இருந்து இளங்க்கு சுமார் 70,200 பைசர் தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளன
இவ்வாறு வந்தடைந்த ஊசிகள் விரைவில் மக்களுக்கு செலுத்த படும் என சுகாதர அமைச்சு அறிவித்துள்ளது
தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு
தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு
ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்தாவ பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (18) மாலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்டவர் ஹொரவ்பொத்தானை – கரடிக்குளம், கல்கந்தாவ பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான ஹனீபா நுஸ்ரினா (24 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
குறித்த பெண் குருநாகல் பகுதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் முடித்து தமது சொந்த ஊரான
கல்கந்தாவ பகுதியில் வசித்து வந்ததாகவும் கடந்த சில நாட்களாக குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
சடலம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரேத பரிசோதனைக்காக
அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
12 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் கொவிட் 19 தடுப்பூசி
12 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் கொவிட் 19 தடுப்பூசி
12 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிக்கையில் ,நாம் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆரம்பத்தில் கொவிட் 19
தடுப்பூசியை வழங்கினோம். இதனைத்தொடர்ந்து 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது தடுப்பூசி ஏற்றப்படுகிறது.18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் தற்போது தடுப்பூசி ஏற்றப்படுகிறது.
இதற்கு மேலதிகமாக 12 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பிலும் நாம் தற்போது கவனத்திற்கொண்டுள்ளளோம்.தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை
முறையாக முன்னெடுக்க வேண்டும் என்பதினாலேயே இவ்வாறு நடவடிக்ககைளை முன்னெடுத்துவருகின்றோம். தடுப்பூசியை வழங்குவதற்கு பணம் இல்லை என்ற பிரச்சினை எதுவும் இல்லை என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
ஜரோப்பா , அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இவ்வாறே செய்யப்படுகின்றன.உலக சுகாதார அமைப்பு தடுப்பூசிக்கான வழிகாட்டிகளை வழங்கியுள்ளது. அதற்கமைவாக நாம்
நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றோம் என்றும் மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் கூறினார்.
இலங்கையில் கொரனோவுக்கு 46 பேர் மரணம்
இலங்கையில் கொரனோவுக்கு 46 பேர் மரணம்
இலங்கையில் நேற்றைய (17) தினம் மேலும் 46 பேர் கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
சுகரா சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதி செய்திருப்பதாக அரசாங்க தகவல்
திணைக்களம் இன்று (18) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த படம் எப்போ ரிலீஸ் ஆகும்னு எனக்கே தெரியாது – காஜல்
அந்த படம் எப்போ ரிலீஸ் ஆகும்னு எனக்கே தெரியாது – காஜல்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் கைவசம் இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், கோஷ்டி போன்ற படங்கள் உள்ளன.
அந்த படம் எப்போ ரிலீஸ் ஆகும்னு எனக்கே தெரியாது – காஜல் அகர்வால்
காஜல் அகர்வால்
இந்தியில் கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் குயீன். இப்படத்தை தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்தில் நடிகை காஜல்
அகர்வால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் மற்றும் இயக்குனரான ரமேஷ் அரவிந்த் இயக்கி உள்ளார். அமித் திரிவேதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த
2018-ம் ஆண்டு எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக இன்னும் ரிலீசாகவில்லை.
இந்நிலையில், இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகை காஜல் அகர்வாலிடம், இப்படத்தின் ரிலீஸ் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த காஜல், “பாரிஸ் பாரிஸ்
திரைப்படம் எப்போது வரும் என்று எனக்கும் கூடத் தெரியாது,” என்று தெரிவித்துள்ளார். இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட படக்குழு முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
காதலனுக்கு முத்த மழை பொழிந்த சுருதிஹாசன்
காதலனுக்கு முத்த மழை பொழிந்த சுருதிஹாசன்
நடிகை சுருதிஹாசன், தனது காதலன் சாந்தனுவை கட்டிபிடித்து முத்தம் கொடுத்தபடி புகைப்படம் ஒன்றை எடுத்து அதை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
காதலனுக்கு முத்த மழை பொழிந்த சுருதிஹாசன் – வைரலாகும் புகைப்படம்
சுருதிஹாசன்
நடிகை சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபகாலமாக அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த சாந்தனு
ஹசாரிகாவுடன் நெருங்கிய பழகி வருகிறார். அவரை சுருதிஹாசன் காதலிப்பதாகவும்
கூறப்படுகிறது. அவ்வப்போது காதலனுடன் சுருதிஹாசன் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்கள் பரவி வருகிறது.
அந்தவகையில், சமீபத்தில் காதலன் சாந்தனுவுடன் மும்பையில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு சென்றிருந்தார் சுருதிஹாசன். அங்கு காதலனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தபடி
புகைப்படம் ஒன்றை எடுத்து அதை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
நடிகை சுருதிஹாசனின் இன்ஸ்டாகிராம் பதிவு
நடிகை சுருதிஹாசன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படம்
சுருதிஹாசன் வெளியிட்டுள்ள தற்போதைய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பல்வேறு விதமான கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.
சுருதியின் காதலன் சாந்தனு ஹசாரிகா ராப் பாடகர் ஆவார். இதுதவிர டூடுல் கலைஞராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமந்தா, காஜல் அகர்வாலை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா
சமந்தா, காஜல் அகர்வாலை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான ராஷ்மிகாவுக்கு சமூக வலைதளங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
சமந்தா, காஜல் அகர்வாலை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா
ராஷ்மிகா
கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இதையடுத்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படம் மூலம்
ரசிகர்களை கவர்ந்த அவர், குறுகிய காலத்தில் நானி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார்.
சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷ்மிகா, தற்போது பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். அங்கு அமிதாப் பச்சன், சித்தார்த்
மல்ஹோத்ரா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவ்வாறு தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான ராஷ்மிகாவுக்கு சமூக வலைதளங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், நடிகை ராஷ்மிகா இன்ஸ்டாகிராமில், அதிக பாலோவர்களை கொண்ட தென்னிந்திய நடிகையாக உயர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இவரை பின் தொடர்பவர்கள்
எண்ணிக்கை 19 மில்லியனை தாண்டியுள்ளது. இதன்மூலம் காஜல் அகர்வால், சமந்தா, ரகுல் பிரீத் சிங், சுருதிஹாசன் போன்ற நடிகைகளை பின்னுக்கு தள்ளியுள்ளார் ராஷ்மிகா.
நிவேதா பெத்துராஜுக்கு நக்சலைட் வேடம்
நிவேதா பெத்துராஜுக்கு நக்சலைட் வேடம்
தமிழ், தெலுங்கில் பிசியான நடிகையாக வலம்வரும் நிவேதா பெத்துராஜ், பார்ட்டி, பொன் மாணிக்கவேல், விராட பருவம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
பிரபல நடிகரின் படத்தில் நிவேதா பெத்துராஜுக்கு நக்சலைட் வேடம்
நிவேதா பெத்துராஜ்
ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இதையடுத்து டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் ஆகிய படங்களில்
நடித்து பிரபலமானார். தற்போது இவர் கைவசம் பார்ட்டி, பொன் மாணிக்கவேல் போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில், தெலுங்கில் நிவேதா பெத்துராஜ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம்
‘விராட பருவம்’. வேணு உடுகுலா இயக்கி உள்ள இப்படத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ், நக்சலைட்டாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராணா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. விரைவில் இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடியவகையில் கண்டி
சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடியவகையில் கண்டி
கலாச்சாரத்தை பாதுகாத்து சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடியவகையில் கண்டி, போகம்பறை
சிறைச்சாலை வளாகம் புனரமைக்கப்படவுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலியா ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
கண்டி, போகம்பறை சிறைச்சாலை புனரமைப்பு தொடர்பாக மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலுக்குப்பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் ,
மிக பழமைவாய்ந்த போகம்பறை சிறைச்சாலையின் புனரமைப்பு பணிகள் குறுகிய காலத்திற்குள் பூர்த்தி செய்யப்படும் என்று தெரிவித்தார்.
சுற்றுலாப் பயணிகள் நீண்ட காலம்; கண்டியில் தங்கியிருக்கக்கூடியவகையில் சுற்றுலா அபிவிருத்திட்டங்களை மேற்கொள்வது குறித்து கலந்துரையாடல் இடம் பெற்றதாக குறிப்பிட்ட அமைச்சர்
கண்டிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் ஓரிரு தினங்கள் மட்டுமே கண்டி விடுதிகளில் தங்கி வெளியேறுகின்றனர் இந்த நிலையை மாற்றி கண்டி கிராமங்களில் உள்ள சுற்றுலா
இடங்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்குமிடையில் நீண்ட காலதொடர்புகள் இருக்கக்கூடிய பரிவர்த்தனை இடமாக போகம்பறை சிறைச்சாலை புனரமைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார
வீட்டில் புதைத்து வைக்கப்பட்ட பணம்- தோண்டி எடுத்த பொலிஸ்
வீட்டில் புதைத்து வைக்கப்பட்ட பணம்- தோண்டி எடுத்த பொலிஸ்
தற்போது டுபாயில் உள்ளதாக கூறப்படும் போதைப்பொருள் வர்த்தகரான சரித் சந்தகெலும் எனும் ரன்மல்லி என்பவரின் உறுவு முறை சகோதரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பன்னிபிட்டிய பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரன்மல்லி என்பவரின் மனைவியின் சகோதரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் தற்காலிகமாக தங்கியிருந்த வீட்டில் புதைக்கப்பட்டிருந்த 13.9 மில்லியன் ரூபா பணத்தை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கையில் டெல்டா வைரஸ்
இலங்கையில் டெல்டா வைரஸ்
கொவிட் 19 வைரஸின் டெல்டா வகை எதிர்காலத்தில் காற்றின் ஊடாக பரவக்கூடிய அவதானம் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் பல்வேறு வகையான வைரஸ் தொற்றுக்கள் பரவு வருகின்றன நிலையில் இலங்கையில் டெல்டா வைரஸ் பரவும் அபாயம் நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடலுக்கு சென்ற மூவரை காணவில்லை
புத்தளம் கற்பிட்டி பகுதியிலிருந்து இயந்திரப் படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்கள் இதுவரை கரைதிரும்பவில்லை என குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (09) கற்பிட்டியிலிருந்து குறித்த படகில் சென்ற நிலையில் 10 நாட்களாக எவ்வித தொடர்புகளும் இன்றி தாங்கள் உள்ளதாக அவர்களின் குடும்பத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.
கற்பிட்டி வன்னிமுந்தல் பகுதியைச் சேர்ந்த எம்.எஸ்.முஹம்மட் அலிகான் (வயது 26), முஹம்மட் நபீல் (வயது 45) மற்றும் கற்பிட்டி மணல்தோட்டம் பகுதியைச் சேர்ந்த நிசங்க (வயது 21)
திருமணமான மூன்று மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அந்த மீனவர்களின் குடும்பத்தினர் குறிப்பிட்டனர்.
இவ்வாறு மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரும் இதுவரை கரைதிரும்பவில்லை என கற்பிட்டி பொலிஸ் நிலையத்திலும், கற்பிட்டி கடற்படை முகாமிலும் மூன்று மீனவர்களின் குடும்பத்தினர்களும் முறைப்பாடு செய்துள்ளதாக கூறினர்.
அத்துடன் கற்பிட்டி மீனவர்கள், பொதுமக்கள் ஆகியோரின் உதவியில் காணாமல் போன மூன்று மீனவர்களையும் தேடி வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த மீனவர்கள் பயணித்ததாக கூறப்படும் 7088 இலக்கமுடைய இயந்திப்படகு ஒன்று மன்னார் மாவட்டத்தின் பியர் பிரதேசத்திலுள்ள தீட தீவு பகுதியில் ஒதுங்கியுள்ளதாக
மன்னார் பொலிஸ் ஊடாக நேற்று (17) இரவு தகவல் கிடைத்துள்ளது என மீனவர்களின் உறவினர்கள் குறிப்பிட்டனர்.
எனினும் படகு மாத்திரமே இவ்வாறு கரையொதிங்கியுள்ளது எனவும் மீனவர்கள் தொடர்பில் தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும் உறவினர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
இவ்வாறு மூன்று மீனவர்களும் காணாமல் போயுள்ளமை கற்பிட்டி பிரதேசத்தில் மீனவர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருப்பதுடன், கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
றிஷாட் பதியுதீன் தேசிய வைத்தியசாலையில் அனுமதி
றிஷாட் பதியுதீன் தேசிய வைத்தியசாலையில் அனுமதி
சுகயீனம் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வு பிரின் பொறுப்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன்தான் சுகயீனமுற்றிருப்பதாக அதிகாரிகளுக்கு அறிவிதுள்ளார்
மருத்துவப் பரிசோதனைக்காக அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் – டயகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள்.
நீர்மூழ்கிக் கப்பல் பாதுகாப்பு விரிதிறன் கட்டமைப்பை இலங்கை அறிமுகப்படுத்துகின்றது
நீர்மூழ்கிக் கப்பல் பாதுகாப்பு விரிதிறன் கட்டமைப்பை இலங்கை அறிமுகப்படுத்துகின்றது
நீர்மூழ்கிக் கப்பல் பாதுகாப்பு மற்றும் விரிதிறன் கட்டமைப்பை இலங்கை அறிமுகப்படுத்துகின்றது
அதிமேதகு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி. பி.பி. ஜயசுந்தரவின் தலைமையில் 2021 ஜூலை 15ஆந் திகதி நடைபெற்ற பங்குதாரர் சந்திப்பொன்றில், நீர்மூழ்கிக் கப்பல் பாதுகாப்பு மற்றும் விரிதிறன் கட்டமைப்பை இலங்கை அறிமுகப்படுத்தியது.
ஆசியாவில் இதுபோன்ற ஒரு கட்டமைப்பைக் கொண்டுவந்த முதல் நாடாக இலங்கை அமைவதுடன், போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகம் – உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் மூலம் ஜப்பான் அரசாங்கத்தின் தாராள ஆதரவைப் பெறாவிட்டால் அது சாத்தியமானதாக அமைந்திருக்க முடியாது.
முடக்கநிலை, தொலைநிலை வேலை மற்றும் மெய்நிகர் மாநாடுகளின் மயமான இந்த புதிய யுகத்தில், உலகளாவிய டிஜிட்டல் தகவல் தொடர்புகளை நம்பியிருக்கின்றமை வியத்தகு வகையில் வளர்ந்துள்ளது, எனினும் அந்தத் தரவுகளை அனுப்புவதற்கு செயற்கைக்கோள்கள் தான் காரணம் என பெரும்பாலான மக்கள் இன்னும் தவறாகக் கருதுகின்றனர். உண்மையில், அனைத்து சர்வதேச டிஜிட்டல் தரவு மற்றும் தகவல் தொடர்புகளில் 99% க்கும் மேற்பட்டவை உலக சமுத்திரங்களில் 1.8 மில்லியன் கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தைக் கொண்டுள்ள 400 க்கும் மேற்பட்ட கேபிள்களின் வலையமைப்பினுடாக பரிமாற்றப்படுகின்றன.
2019 நவம்பர் மற்றும் 2020 ஏப்ரல் மாதத்தில் முடக்கநிலை ஆரம்பமான காலப்பகுதிக்கு இடையில் இணையப் பாவனை நெரிசல் 25% முதல் 50% வரை அதிகரித்துள்ளதுடன், இது ‘புதிய இயல்பு’ நிலைக்கு ஏற்ப மேலும் தொடரும் என சர்வதேச கேபிள் பாதுகாப்புக் குழு மதிப்பிடுகின்றது. 2020 ஜூலை 31 உடன் நிறைவடைந்த காலாண்டில் ஸூம் வீடியோ தொடர்பாடல் மூலமான வருமானம் முந்தைய ஆண்டை விடவும் 355% ஆல் அதிகரித்துள்ளது. பரவலான தொலைநிலை வேலை, தொலைநிலைக் கல்வி மற்றும் தொலைநிலை தனிப்பட்ட வீடியோ தகவல் தொடர்புகளின் விளைவாக அதிகரித்துள்ள வீடியோ மாநாட்டு நிலையின் அறிகுறியொன்றே இதுவாகும்.
இந்த உலகளாவிய வலையமைப்பில் எமது நம்பகத்தன்மையைப் பொறுத்தவரை, அது முடிந்தவரை நெகிழ்ச்சியுடன் இருப்பது மிகவும் முக்கியமானதாகும்.
தொடக்கக் கருத்துக்களை வழங்கிய வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, இலங்கையின் நியாயாதிக்கத்தில் பல கேபிள்களைக் கொண்டிருப்பதன் அச்சுறுத்தல்கள் மற்றும் பொறுப்புகளைப் புரிந்து கொண்டதன் மூலம், இலங்கைக்கு பாதுகாப்பு மற்றும் விரிதிறனை வழங்குவதற்காக நீர்மூழ்கிக் கப்பல் கேபிள்கள் குறித்த தேசிய திட்டத்தை உருவாக்குவதற்காக, போதைப்பொருள் மற்றும் குற்றவியல் உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டம் மற்றும் குற்றத் தடுப்புக்கான சர்வதேச மையம் போன்ற சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து இலங்கை பணியாற்றி வருவதாக எடுத்துரைத்தார்.
சர்வதேச சட்டத்தின் கீழ், கேபிள்களின் பாதுகாப்பிற்கு பங்களிப்பதற்காக பொருளாதாரங்கள் மற்றும் சமூகங்களுக்கு இந்த கேபிள்களால் சேவை செய்வதற்கான அரசுகளின் பொறுப்பை எடுத்துக்காட்டும் ஐ.நா. பொதுச் சபைத் தீர்மானத்தை (A/RES/73/124, 2018 டிசம்பர் 13) போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை – உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி. கைட்லின் மெரிடித் குறிப்பிட்டார். ‘இலங்கையின் தேசியக் கட்டமைப்பின் அபிவிருத்தியிலும், கடல்சார் பாதுகாப்புத் துறையிலும் இன்னும் விரிவாக இலங்கையின் தொடர்ச்சியான தலைமைத்துவத்தை போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் மதிப்பிடுவதுடன், போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகம் இலங்கையுடனான தொடர்ச்சியான கூட்டாட்சியை எதிர்நோக்கியுள்ளதுடன், சிறந்த சில நடைமுறைகள் மற்றும் பாடங்களை பரந்த பிராந்தியத்திற்கு பரப்புவதற்குத் தொடங்குகின்றது’ என அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இலங்கையில் குறித்த கட்டமைப்பை உருவாக்கும் பணிகள், குற்றத் தடுப்புக்கான சர்வதேச மையம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் தொழில்நுட்ப உதவியுடன், இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவு ஆகியவற்றால் கூட்டாக மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ச்சியான மெய்நிகர் ஆலோசனைகளினாலான பங்குதாரர்களின் ஈடுபாட்டைத் தொடர்ந்து, இந்த செயன்முறை 2020 செப்டம்பரில் தொடங்கியது. குற்றத் தடுப்புக்கான சர்வதேச மையத்தால் பரிந்துரைக்கப்பட்ட சர்வதேச சிறந்த நடைமுறைகளை இந்தக் கட்டமைப்பு உள்ளடக்கியுள்ளது.
கட்டமைப்பின் தொடக்கத்தில், கொழும்பில் உள்ள ஜப்பானியத் தூதரகத்தின் தூதரகப் பொறுப்பாளரும், பிரதி தூதரகத் தலைவருமான திரு. கிடமுரா தோஷிஹிரோ, ‘வணிக மற்றும் நிதி மையமாக அபிவிருத்தியடைவதற்கான இலங்கையின் அபிலாஷைகளை தேசிய் கட்டமைப்பானது நிச்சயமாக ஒருங்கிணைக்கும் அதே வேளை, ‘நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை’ இல் திட்டமிடப்பட்டுள்ள உலகளாவிய கண்டுபிடிப்பு மையமாகவும் இருக்கும்’ எனக் குறிப்பிட்டார். ‘போதைப்பொருள் மற்றும் குற்றவியல் உலகளாவிய கடல்சார் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகத்துடன் நெருங்கிய கூட்டுறவில், தேசியக் கட்டமைப்பை உருவாக்குவது இலங்கைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் ஒரு பெரிய திருப்புமுனையாகக் கருதப்படுவதுடன், இந்து சமுத்திரத்தில் இது ஒரு பிரகாசமான கலங்கரை விளக்கமாக அமைகின்றது’ என மேலும் சுட்டிக்காட்டப்பட்டது.
ஃபைபர்-ஒப்டிக் நீர்மூழ்கிக் கப்பலைப் பாதுகாப்பதற்காக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைத் தீர்மானத்திற்கு இணங்க இலங்கையில் ஒரு வலுவான மற்றும் நெகிழக்கூடிய நீர்மூழ்கிக் கப்பல் கேபிள் சுற்றுச்சூழல் அமைப்பை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனநாயக்க மீண்டும் வலியுறுத்தினார். ‘முற்போக்கான தேசிய நீர்மூழ்கிக் கப்பல் பாதுகாப்பு மற்றும் விரிதிறன் கட்டமைப்பொன்றை செயற்படுத்துவதற்காக இந்த முயற்சி இப்போது உதவும் அதே வேளை இலங்கையின் டிஜிட்டல் மாற்றம் குறித்த பார்வையை மேலும் வலுப்படுத்துவதோடு, தொழில்நுட்ப சேவைகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான மையமாக இலங்கையை நிலைநிறுத்தும்’ என அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இந்து சமுத்திரத்தில் ஒரு கடல் மற்றும் கப்பல் பரிமாற்ற மையமாக இலங்கையைக் காட்டும் வகையில், கட்டமைப்பில் மற்றும் செயற்பாட்டில் உள்ள சட்டங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த உருவத்திற்கு மேலும் பங்களிக்கும்.
இந்த செயற்பாட்டில் வெளிநாட்டு அமைச்சின் வகிபாகம் அனைத்து பங்குதாரர்களையும் ஒன்றிணைப்பதும், சம்பந்தப்பட்ட சர்வதேச அமைப்புக்களை இலங்கை நிறுவனங்களுடன் இணைப்பதும் இலங்கை கவனம் செலுத்த வேண்டிய ஒரு முக்கிய அம்சமாகும் என வெளிநாட்டு அமைச்சின் சமுத்திரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஹசந்தி உருகொடவத்தே திசாநாயக்க விளக்கினார். நீர்மூழ்கிக் கப்பல் கேபிள்களை ‘சிக்கலான உட்கட்டமைப்பாக’ அறிவிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் மேலும் எடுத்துரைத்தார்.
இந்த செயற்பாட்டில் இலங்கை பெற்ற அனுபவம் இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் உறுப்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுவதுடன், அதில் இலங்கை இந்த ஆண்டின் துணைத் தலைமையாக பொறுப்பேற்பதுடன், பின்னர் 2023 முதல் 2025 வரை தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றது.
அதிமேதகு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி. பி.பி. ஜயசுந்தரவின் பரிந்துரைகளுடன் வெளியீடு நிறைவடைந்தது.
யாழ். பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களுக்கு பதவி
யாழ். பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களுக்கு பதவி
யாழ். பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களுக்கு 17 ஜூலை 2021 முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவத்தின் 58 வது பதவி நிலை பிரதானியாக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நியமனமானது பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் பரிந்துரையில் அதிமேதகு ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா மேற்படி நியமனத்தை பெற்றுக்கொள்ளும் முன்பாக 19 ஜனவரி 2021 முதல் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 25 வது தளபதியாகவும் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி, ,59 வது
படைப்பிரிவின் தளபதி , 51 வது படைப்பிரிவின் மேற்பார்வை தளபதி, 513 வது பிரிகேட் தளபதி, 144 வது பிரிகேட் தளபதி உள்ளிட்ட பதவிகளையும் வகித்துள்ளதோடு, ஸ்ரீ ஜெயவர்தனபுரவில்
அமைந்துள்ள இராணுவ தலைமையக வளாகம், மற்றும் பல பாதுகாப்பு படை அலுவலகங்களின் சுகாதார அலுவல்களுக்கு பொறுப்பான அதிகாரியாகவும், இலங்கை மகளிர் படையணியின் தளபதியாகவும் அவர் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா (ஆர்.டபிள்யு.பி ஆர்.எஸ்.பி என்.டி.யூ) இறுதி யுத்த காலத்தில் வன்னியில் சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்கான போரில் பெரும் பங்களிப்பு செயத் ஒருவரும் ஆவார். அவருடைய கட்டளையின் கீழான 593 வது பிரிகேட் மற்றும் 631 பிரிகேட் படைகளால்
எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் வசமிருந்த மாங்குளம் நகரம், ஒழுமடு, அம்பகாமம் ஆகிய பகுதிளுடன் உடயர் கட்டுக் குளம் பகுதியில் நிறுவப்பட்டிருந்த நீர்மூல்கி கப்பல்களை கட்டமைப்பதற்கான
கட்டிடமும் கைபற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் 2009 ஆம் ஆண்டு இறுதிகட்ட சமாதான நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்ட பின்னர் 533 வது பிரிகேட் தளபதியாக நியமனம் பெற்றார்.
அவரது சிறப்புமிக்க இராணுவ வாழ்க்கையில், பல்வேறுப்பட்ட திறன்களுடன் வெவ்வேறான நியமனங்களை பெற்றுக்கொண்டுள்ளார். மேலும் உக்கிரமான போர் நடவடிக்கைகளின் போது களத்தில் செயப்பட்ட வீரமிக்க காலாட் படை வீரராகவும் அவருக்கு அங்கீகாரம் கிடைத்தது. 5 வது
கெமுனு ஹேவா காலாட் படையணியின் பிலட்டூன் தளபதியாக அவர் வடமராச்சி நடவடிக்கைகளின் பங்கேற்றார்., பின்னர் திருகோணமலை பகுதியில் பணியாற்றினார்.
தாய்நாட்டை இரக்கமற்ற பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்காக “பலவேகய” மற்றும் “அகுணு பிராஹார” ஆகிய முக்கிய போர் நடவடிக்கைகளிலும் பங்கெடுத்துளார்.
அத்தோடு 7 வது கெமுனு ஹேவா காலாட் படைகளின் கம்பணி தளபதியாக மன்னார் – சிலவத்துறையிலுள்ள கடற் புலி தளத்தை கைப்பற்றுவதற்காக நடத்தப்பட்ட முதலாவது நடமாடும் போர்க்கள நடவடிக்கைகளின் போதான அனுபவம் கொண்டவர். அத்தோடு யாழ். நகரத்தை
மீட்பதற்கான ரிவிரெச நடவடிக்கையிலும் பங்களிப்பு செய்தவர் ஆவார். 2000 ஆம் ஆண்டில் 9 வது கெமுனு ஹேவா காலாட் படையின் 2 ஆம் நிலை கட்டளை அதிகாரியாகவும் நியமனம் பெற்ற
மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா ஆணையிறவில் எதிர்கொண்டு பின்னர் நடத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கும் அர்ப்பணிப்புடன் பங்களித்தார்.
கொமாண்டோ படைப்பிரிவின் கீழான 7 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரியாகவும் 2007 ஆம் ஆண்டில் தொபப்பிகலவை விடுவிக்கும் நடவடிக்கைகளிலும் அவர்
ஒரு முக்கிய பங்கு வகித்தார். அத்தோடு, அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பட்டாலியன் மூலம் 593 பிரிகேடுக்கு பல எல்.டி.டி.ஈ வசமிருந்த முல்லைத்தீவு பகுதிகளை கைப்பற்றுவதற்கு படையினருக்கு காணப்பட்ட நெருக்கட்டிகளை கலைந்தவராகவும் அவர் திகழ்ந்தார்.
கனிஷ்ட காலாட்படை பயிற்சி கல்லூரியின் – மஹொவ் இந்தியா, எதிர்த்து போரிடும் உத்திகள் மற்றும் வனப் பகுதிக்குள் போரிடுதல் தொடர்பிலான கற்கைநெறி, வெரிகேட் இந்தியா
கல்லூரியில் சிரேஸ்ட போர் கட்டளை பயிற்சி கல்லூரியிலும், பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிரான பாதுகாப்பு கட்டமைப்பை விஸ்தரிப்பது தொடர்பிலான கற்கை நெறியை
அமெரிக்காவிலும் மூலோபாயங்கள் தொடர்பான பாடநெறியை சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்திலும் பயின்றுள்ளார்.
அதேபோல், சீனாவில் முதுநிலை இராணுவ அறிவியல் மூலோபாயம் மற்றும் முகாமைத்துவ கற்கை நெறியையும் , கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித வள முகாமைத்துவ கற்கை நெறியில் முதுகலை பட்டத்தையும், பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்தி
ல் தந்திரோயங்கள் தொடர்பான டிப்ளோமாவையும், சர்வதேச துறைமுகங்கள் மற்றும் கடல்சார் குறியீடுகள் தொடர்பிலான சான்றிதழுக்கான பயிற்சி நெறியை இலங்கை கடற்படையிலும்,
வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சினால் நடத்தப்படுகின்ற பயங்கர வாதத்திற்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை விஸ்தரிப்பது தொடர்பிலான பயிற்சி நெறி,
ஆகிய பசுபிக் நிலையத்தில் பாதுகாப்பு கற்கை நெறியை அமெரிக்காவிலும், இந்தியா மற்றும் மனித வள முகாமைத்துவ டிப்ளோமா பாடநெறியை கொழும்பு பல்கலைக்கழகத்திலும் அவர் தொடர்ந்துள்ளார்.
கொழும்பு 05 இன் இசிபதன கல்லூரியின் பெருமைமிக்க மாணவர்களில் ஒருவரான அவர், 1986 ஜூன் 2 ஆம் திகதி நிரந்த படையணியின் கெடட் (பயிலுனர்)-24 அதிகாரியாக இராணுவத்தில் இணைந்துகொண்டார். இவர் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் அடிப்படை
பயிற்சி நெறிகளை நிறைவு செய்துகொண்டதன் பின்னர் அவர் பாகிஸ்தான் மங்லாவிலுள்ள அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்டதுடன், கனிஷ்ட அதிகாரிகளுக்கான ஆயுத பயிற்சி பாடநெறியை பாகிஸ்தான் குவேட்டாவிலுள்ள காலாட் படை மற்றும் போய்
உபாயங்கள் தொடர்பான பயிற்சி கல்லூரியில் பெற்றுக்கொண்ட அவர், 18 மே 1987 அன்று 4 வது கெமுனு ஹேவா படையனியின் 2 ஆம் நிலை லெப்டினனாக நியமனம் பெற்றார். அவர் விரைவில் தனது புதிய அலுவல கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்.
மகள் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய ஸ்ரீதேவி
மகள் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய ஸ்ரீதேவி
நடிகர் விஜயகுமாரின் மகளும், தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்த பிரபல நடிகையுமான ஸ்ரீதேவி, தனது மகள் பிறந்த நாளை சிறப்பாக கொண்டிருக்கிறார்.
மகள் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய ஸ்ரீதேவி
ஶ்ரீதேவி
1992ம் ஆண்டு வெளியான ரிக்சா மாமா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீதேவி. நடிகர் விஜயகுமாரின் மகளான இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.
படங்களில் பிசியாக நடித்து வந்த இவர், 2009ம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமா படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.
இந்நிலையில் குடும்பத்துடன் வசித்து வரும் ஸ்ரீதேவி, தனது மகளின் 5வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார்.
ஶ்ரீதேவி
அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
வெப் தொடரில் நயன்தாரா
வெப் தொடரில் நயன்தாரா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, விரைவில் வெப் தொடரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பாகுபலி வெப் தொடரில் நயன்தாரா?
நயன்தாரா
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதில் பிரபாஸ், சத்யராஜ், நாசர், தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து இருந்தனர்.
இந்த நிலையில் பாகுபலி 3-ம் பாகம் வெப் தொடராக தயாராக உள்ளது. பாகுபலி படத்தில் வரும் ராஜமாதா சிவகாமிதேவி கதாபாத்திரத்தின் இளம் வயது வாழ்க்கையை மையமாக வைத்து இந்த
தொடர் தயாராக உள்ளது என்றும், பாகுபலி முதல் பாகத்துக்கு முன்பு நடந்த சம்பவங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
நயன்தாரா
இந்த தொடரில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. அந்த வகையில், இத்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில்
நடிக்க நயன்தாராவிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கதை பிடித்துள்ளதால் நயன்தாரா நடிக்க சம்மதிப்பார் என்று படக்குழுவினர் நம்புகின்றனர்.
படப்பிடிப்பை செப்டம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர். இந்த தொடர் அடுத்த வருடம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது
. காஜல் அகர்வால், சமந்தா, தமன்னா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் ஏற்கனவே வெப் தொடர்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓட்டல் கட்டிய சர்ச்சை… சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ்
ஓட்டல் கட்டிய சர்ச்சை… சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ்
தனது 6 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை அனுமதி பெறாமல் ஓட்டலாக மாற்றியதாக குற்றம் சாட்டி மும்பை மாநகராட்சி, நடிகர் சோனு சூட்டிற்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.
ஓட்டல் கட்டிய சர்ச்சை… சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ்
சோனு சூட்
தமிழில் ஒஸ்தி படத்தில் வில்லனாக நடித்தவர் சோனுசூட். கள்ளழகர், மஜ்னு, ராஜா, கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்தியில் அதிக படங்களில் நடித்துள்ளார்.
சோனுசூட் கொரோனா ஊரடங்கில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிகள் செய்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றார். இந்த நிலையில் மும்பை ஜூகு பகுதியில் உள்ள தனது 6
மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை அனுமதி பெறாமல் ஓட்டலாக மாற்றியதாக குற்றம் சாட்டி மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது.
சோனு
இதை எதிர்த்து சோனுசூட் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடியானது. இதனால் மும்பை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். அந்த மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்த நிலையில் மும்பை மாநகராட்சி, ஓட்டலாக மாற்றிய கட்டிடத்தை 2 வாரங்களுக்குள் அடுக்குமாடி
குடியிருப்பாக மாற்ற வேண்டும் என்று கெடுவிதித்து சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.







