Author: நலன் விரும்பி
ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம்
ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம்
வட மத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் மற்றும்
டிப்ளோமா தாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பம் வட மத்திய மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ளது.
பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையின் 03 ஆம் வகுப்பு 1 ( அ ) தரத்திற்கும் , டிப்ளோமாதாரிகளை 03 ஆம் வகுப்பு 1 ( இ ) தரத்திற்கும் சேர்த்துக் கொள்வதற்காக கல்வி வலய
மட்டத்தில் ஆட்சேர்கும் பொருட்டு ஆண், பெண் இருபாலாரிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 31 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாயின் வாயில் சிசுவின் சடலம் – பதறி ஓடிய மக்கள்
நாயின் வாயில் சிசுவின் சடலம் – பதறி ஓடிய மக்கள்
நுவரெலியா கொன்கோடியா தேயிலை தோட்டத்தில் நாய் ஒன்று சிசுவின் சடலம் ஒன்றை காவி சென்றுள்ளது ,இதனை கண்ணுற்ற அங்கு பணிபுரிந்த மக்கள் பதறி ஓடி காவல்துறைக்கு தெரிவித்தனர்
மீட்க பட்ட சிசுவின் சடலத்தில் இரு கால்களும் அற்ற நிலையில் சடலம் காணப்பட்டுள்ளது
குறித்த சிசு பிறந்து இரண்டு நாட்களில் ,தயார் சிசுவை இப்பகுதியில் வீசி விட்டு தலை மறைவாகியுள்ளதாக நம்ப படுகிறது
கள்ள தொடர்பின் மூலம் இந்த் சிசு பிந்திருக்கலாம் எனவும் ,அதனாலேயே இந்த சிசு கொலை இடம்பெற்றுள்தக தெரிவிக்க படுகிறது
போலீசார் தொடர் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
இலங்கையில் எகிறும் வாகன விபத்து – ஒரே நாளில் 7 பேர் மரணம்
இலங்கையில் எகிறும் வாகன விபத்து – ஒரே நாளில் 7 பேர் மரணம்
இலங்கையில் சமீப காலங்களாக வாகன விபத்துக்கள் அதிகம் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் சுமார் ஏழுபேர் இந்த விபத்துக்களில் பலியாகியள்ளனர்
இதனை கட்டு படுத்தும் நடவடிக்கையில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
18 வயதுக்கு குறைவானவர்கள் பணியில் அமர்த்த தடை
18 வயதுக்கு குறைவானவர்கள் பணியில் அமர்த்த தடை
இலங்கையில் 18 வயதுக்கு கீழ் பட்டவர்களை வீட்டு வேலைக்கு அமர்த்துவது தடை விதிக்க
பட்டுள்ளது ,இதனை மீறி அனுப்ப பட்டால் அவர்கள் மீது விசாரணைகள் நடத்த பட்டு நடவடிக்கை
மேற்கொள்ள படும் என ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார்
ரிச்சார்ட் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த 15 வயது சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்க பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது
தொடரும் அத்துமீறல் – 207 பேர் கைது
தொடரும் அத்துமீறல் – 207 பேர் கைது
இலங்கையில் நிகழ்கால கொரனோ விதிகளை மீறி செயல் பட்ட காரணத்தினால் கடந்த தினம்
மட்டும் 207 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் முக கவசம் அணிய மறுத்தமை, மற்றும் மாகாண எல்லைகளை மீறிய குற்ற சாட்டில் இந்த கைது இடம்பெற்றுள்ளது
கொரோனா-நேற்றைய தினம் 43 உயிரிழப்பு
கொரோனா-நேற்றைய தினம் 43 உயிரிழப்பு
இலங்கையில் நேற்றைய (19) தினம் மேலும் 43 பேர் கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதி செய்திருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (20) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கில் அறிமுகமாகும் ‘கர்ணன்’ பட நடிகை
தெலுங்கில் அறிமுகமாகும் ‘கர்ணன்’ பட நடிகை
கர்ணன் படம் மூலம் தமிழில் அறிமுகமான மலையாள நடிகை ரஜிஷா விஜயன், அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
தெலுங்கில் அறிமுகமாகும் ‘கர்ணன்’ பட நடிகை
ரஜிஷா விஜயன்
மலையாளத்தில் கடந்த 2016-ல் வெளியான ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமான ரஜிஷா விஜயன், தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான மாநில அரசு
விருதை வென்றார். தொடர்ந்து மலையாளத்தில் நடித்து வந்த இவர், அண்மையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
ரஜிஷா விஜயன்
ரஜிஷா விஜயன்
இதையடுத்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிந்தன. தற்போது கார்த்தி, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் ரஜிஷா, அடுத்ததாக தெலுங்கில் அறிமுகமாக
உள்ளார். அதன்படி பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா ஹீரோவாக நடிக்கும் ‘ராமாராவ்’ படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் சரத் மாந்தவா என்பவர் இயக்க உள்ளார். சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்
படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய சாக்ஷி அகர்வால்
படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய சாக்ஷி அகர்வால்
நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவருமான சாக்ஷி அகர்வால், படப்பிடிப்பில் தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.
படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய சாக்ஷி அகர்வால்
சாக்ஷி அகர்வால்
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ்
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். தற்போது நடிகை சாக்ஷி, சிண்ட்ரெல்லா, புரவி, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன.
மேலும் தி நைட் என்னும் படத்தில் சாக்ஷி அகர்வால் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. இன்று பிறந்தநாள் காணும் சாக்ஷி அகர்வால், தி நைட்
படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
இதற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து, பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
குஷ்புவின் டுவிட்டர் கணக்கு மீட்பு
குஷ்புவின் டுவிட்டர் கணக்கு மீட்பு
நடிகையாகவும், அரசியல்வாதியாகவும் வலம் வரும் குஷ்புவின் டுவிட்டர் கணக்கை விஷமிகள் சிலர் முடக்கி இருந்தார்கள்.
குஷ்புவின் டுவிட்டர் கணக்கு மீட்பு
குஷ்பு
தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி
வரும் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட குஷ்பு, அங்கு தோல்வியை தழுவினார். அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்ட குஷ்பு, டுவிட்டரில் ஆக்டிவாக இயங்கி வந்தார்.
குஷ்பு
முடக்கம் செய்யப்பட்ட போது இருந்த டுவிட்டர் பக்கம்
இந்நிலையில், இன்று காலை நடிகை குஷ்புவின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டது. அவர் பதிவிட்டிருந்த அனைத்து
பதிவுகளும் அழித்து ஹேக்கர்கள் கைவரிசை காட்டி இருந்தனர். மேலும் டுவிட்டர் பக்கத்தில் khushsundar என்பதற்கு பதிலாக briann என மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
குஷ்பு
மீட்கப்பட்ட நிலையில் இருக்கும் டுவிட்டர் பக்கம்
இது தொடர்பாக நடிகை குஷ்பு தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது குஷ்புவின் டுவிட்டர் பக்கம் மீட்கப்பட்டுள்ளது. இதுவரை குஷ்பு பதிவு செய்திருந்த அனைத்து பதிவுகளும் மீட்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பை தடுப்பதற்கு மாற்று வழி
எரிபொருள் விலை அதிகரிப்பை தடுப்பதற்கு மாற்று வழி
நாட்டின் எரிபொருள் விலை பிரச்சனை நீண்டகாலப் பிரச்சினை என்பதால், அதனை தீர்ப்பதற்கு
முறையான திட்டம் ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்று இன்று (20) பாராளுமன்றத்தில் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
தமக்கு எதிராக எதிர்க் கட்சியினர் கொண்டு வந்த பிரேரணை தொடர்பில் எதிர்க்கட்சியினர்
எரிபொருள் விலையை அதிகரிப்பை தடுப்பதற்கான மாற்று வழியை முன்வைப்பதற்கு தவறி விட்டனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
கடந்த காலங்களில் உலக சந்தையில் எரிபொருள் விலை பத்து சதவீதமாக அதிகரித்த போதும், இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவில்லை. விலைச் சூத்திரம் காணப்பட்டிருந்தால்,
ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 179 ரூபாவாகவும், ஒரு லீற்றர் டீசலின் விலை 134 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டிருக்கும் என அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்
300 பொலிஸாருக்குக் கொரோனா
300 பொலிஸாருக்குக் கொரோனா
தடுப்பூசி செலுத்திக் கொண்ட 300 க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குக்
கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட தடுப்பூசியையும் செலுத்திக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கே
இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிஷாட் வீட்டில் உயிரிழந்த மலையக சிறுமிக்கு நீதி கோரி, கொழும்பில் ஆர்ப்பாட்டம்
ரிஷாட் வீட்டில் உயிரிழந்த மலையக சிறுமிக்கு நீதி கோரி, கொழும்பில் ஆர்ப்பாட்டம்
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த மலையக சிறுமிக்கு நீதி கோரி, கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு − பெளத்தாலோக்க மாவத்தை பகுதியிலுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டுக்கு முன்பாக இடம்பெற்ற இவ்ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளர் எஸ். ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது ” சிறுவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்பது, அமைச்சராக இருந்த ரிஷாட் பதியூதீனுக்கு தெரியாதா?” என ஆனந்தகுமார் கேள்வி எழுப்பினார்.
அத்துடன் ”மலையகத்திலிருந்து சிறுவர்கள் அதிகளவில் செல்வந்தர்களின் வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், இவ்வாறு சிறுவர் தொழிலாளர்களை வேலைக்கு
அமர்த்துவதற்கு எதிராகக் கடும் சட்டங்களை இயற்ற வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
மேலும் ”இந்த சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமான அனைவரும் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு, உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும், சிறுமிக்கு நீதி கிடைக்க
தாமதமாகும் பட்சத்தில், இன்று அமைதி வழியாக நடத்தப்பட்ட போராட்டம், நாளை பாரியளவில் நடத்தப்படும் எனவும் தெரிவித்தா
1,000 ரூபாய் சம்பள விவகாரம் – கோட்டா காதில் ஒதால்
1,000 ரூபாய் சம்பள விவகாரம் – கோட்டா காதில் ஒதால்
1,000 ரூபாய் சம்பளத்தை முழுமையாக அனுபவிக்க முடியாத அவல நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் இருப்பதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்த குமார் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (19) இடம்பெற்ற ஆளும் கட்சியின் குழு கூட்டத்தில் இந்த விடயத்தை எடுத்து கூறியதாக அவர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
எனவே பெருந்தோட்ட கம்பனிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் இதற்காக தொழில் அமைச்சும், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சும் தலையீடு செய்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் எடுத்து கூறியதாகவும் அவர் கூறினார்.
அதேபோல் விலைவாசிகளின் அதிகரிப்பால் பெருந்தோட்ட மக்கள் பல சிரமங்களை எதிர்கொள்வது தொடர்பிலும் ஜனாதிபதியிடம் எடுத்து கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சேதன பசளை பாவனை குறித்து மக்களுக்கு பூரண தெளிவூட்டல் இல்லை எனவும் எனவே அது குறித்து மக்களை மேலும் தெளிவூட்டுவது அவசியம் எனவும் ஜனாதிபதியிடம் எடுத்து கூறியுள்ளதாகவும் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் பட்டம் பெற்றும் அவை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால்
அங்கிகரிக்கப்பட்டும் வெளிவாரி பட்டதாரிகள் அரச தொழில் வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுவதையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் கைது
பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் கைது
உஸ்பகிஸ்தான் நாட்டு பெண் ஒருவரை இந்நாட்டிற்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வௌ்ளவத்த பகுதியை சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட குறித்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்ணுக்கு 36 வயது எனவும் இவ்வாறு கைது செய்யப்பட்டவரின் மனைவியும் உஸ்பகிஸ்தான் நாட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது
வியட்நாமின் புதிய தூதுவர் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு
வியட்நாமின் புதிய தூதுவர் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு
புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஹோ தி தன் ட்ரக் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை 2021 ஜூலை 15ஆந் திகதி சந்தித்தார்.
இது தொடர்பாக வெளிநாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
ஊடக வெளியீடு
வியட்நாமின் புதிய தூதுவர் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு
புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஹோ தி தன் ட்ரக் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை 2021 ஜூலை 15ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் சந்தித்தார்.
இலங்கைக்கான வியட்நாம் தூதுவரை வரவேற்ற அமைச்சர் குணவர்தன, அனைத்து பன்முக அரங்குகளிலும் இலங்கைக்கு தொடர்ச்சியாக வியட்நாம் நல்கிய ஆதரவுகளுக்காக நன்றிகளைத் தெரிவித்தார். குறிப்பாக விவசாயம், மீன்பிடி மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இலங்கை –
வியட்நாம் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு பங்களிக்கும் திட்டங்களுக்கு அமைச்சர் அவதானம் செலுத்தினார். அரசியல், பொருளாதாரம், முதலீடு, வர்த்தகம், விவசாயம்,
தேசிய பாதுகாப்பு, விஞ்ஞானம் – தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் கல்வி ஆகியவற்றில் காணப்படுகின்ற பொறிமுறைகளின் மூலம் ஒத்துழைப்பை உயர்த்துவதற்கும்
மேம்படுத்துவதற்குமான அதிகரித்த ஆற்றல் இரு நாடுகளுக்கும் இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை – வியட்நாம் உறவுகள் தாபிக்கப்பட்டு 51 ஆண்டுகள் நிறைவடையும் விழா இந்த ஆண்டு அனுஷ்டிக்கப்படவிருக்கும் முக்கியமான மைல்கல்லை கவனத்தில் கொண்ட தூதுவர் ட்ரக்,
நிறுவப்பட்ட பாராளுமன்ற நட்புறவுக் குழுவின் மூலம் அரசியல் உறவுகளை புத்துயிர் பெறச் செய்வதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்குமிடையேயான
நட்புறவின் வலுவான பிணைப்புக்களையும் வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன வலியுறுத்தினார். அணிசேராக் கொள்கையின் அடிப்படையில் வியட்நாமுக்கு இலங்கை
அளித்துள்ள ஆதரவுகள் குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், சாத்தியமான பகுதிகளில் இலங்கை மற்றும் வியட்நாமுக்கு இடையில் சிறந்த ஒத்துழைப்பை உருவாக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆகியோர் 2021 ஜூன் 14ஆந் திகதி தொலைபேசி வாயிலான உரையாடலொன்றை வெற்றிகரமாக
முன்னெடுத்தனர். இந்த ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக பயனுள்ள ஒத்துழைப்புக்கு வழிவகுக்கும் இலங்கைக்கும் வியட்நாமுக்குமிடையிலான பாரம்பரிய நட்பு குறித்து இரு தலைவர்களும் இந்த உரையாடலின் போது கருத்து தெரிவித்தனர்.
2020ஆம் ஆண்டில் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதன் மூலம், பல நூற்றாண்டுகள் பழமையான வியட்நாம் இலங்கை உறவுகள் முக்கியமானதொரு மைல்கல்லைக் குறித்து நிற்கின்றது. இந்த ஆழமாக வேரூன்றிய
நட்புறவானது, கலாச்சாரம், வரலாற்று ஒற்றுமைகள் மற்றும் மிக முக்கியமாக, இரு நாடுகளினதும் மக்களிடையேயான வலுவானதொரு பிணைப்பு நூலாக பௌத்த மதத்தின் பொதுவான பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டது. 17ஆம் நூற்றாண்டில் தென் வியட்நாமில்
பௌத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதாக வரலாற்றுப் பதிவுகள் எமக்குக் கூறுகின்ற அதே வேளை, தென் வியட்நாமில் தேரவாத பௌத்த மதத்தை ஸ்தாபிப்பதற்காக இலங்கை மதகுருமார்கள் பங்களிப்புச் செய்ததாகவும் நம்பப்படுகின்றது.
2013 நவம்பர் 23ஆந் திகதி கொழும்பு பொது நூலகத்தில் மறைந்த ஜனாதிபதி ஹோ சி மின் அவர்களின் மார்பிளவு சிலை இலங்கையினால் திறந்து வைக்கப்பட்டது. மேலும், மறைந்த
ஜனாதிபதி ஹோ சி மின் அவர்களின் 124வது பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில், 2014ஆம் ஆண்டில் நினைவு முத்திரையொன்றும் வெளியிடப்பட்டது. மேற்கண்ட திட்டங்கள்
வியட்நாமுடனான இலங்கையின் நட்புறவை விளக்குவதுடன், ஒரு காலத்தில் தேசிய இயக்கத்தின் போது வியட்நாமுடனான இலங்கையின் ஒத்துழைப்பின் ஒரு முக்கியமான மைல்கல்லையும் குறித்து நிற்கின்றது.
வெளிநாட்டு அமைச்சு மற்றும் கொழும்பில் உள்ள வியட்நாம் தூதரகம் ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த சந்திப்பில் இணைந்திருந்தனர்.
வெளிநாட்டு அமைச்சு
சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு
சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு
கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் கிராம உத்தியோகத்தர் பிரிவொன்றும்
பிரதேசமொன்றும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலைத்
தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிராதானியும் இராணுவ தளபதியுமாக ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
வைரலாகும் அமலாபாலின் கவர்ச்சி புகைப்படங்கள்
வைரலாகும் அமலாபாலின் கவர்ச்சி புகைப்படங்கள்
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான அமலாபாலின் புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் அமலாபாலின் கவர்ச்சி புகைப்படங்கள்
அமலாபால்
தமிழில் மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் அமலாபால். தெலுங்கு,
மலையாளம், இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.
இந்நிலையில், தற்போது புதிய கவர்ச்சி புகைப்படங்களை அமலாபால் பதிவு செய்திருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது. மேலும் சமூக வலைத்தளத்திலும் வைரலாகி வருகிறது.
கதாநாயகியாக நடிக்கும் பத்மபிரியா
கதாநாயகியாக நடிக்கும் பத்மபிரியா
தவமாய் தவமிருந்து, சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம் படங்களில் நடித்த பத்மபிரியா மீண்டும் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
மீண்டும் கதாநாயகியாக நடிக்கும் பத்மபிரியா
பத்மபிரியா
சேரன் இயக்கிய தவமாய் தவமிருந்து படத்தில் அறிமுகமானவர் பத்மபிரியா. இப்படம் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர், சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம், உள்ளிட்ட படங்களில்
நடித்தார். அதேசமயம் மலையாள திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வந்தார். 2014 ஆம் ஆண்டு ஜாஸ்மின் ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
பத்மபிரியா
தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் பத்மபிரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் பத்மபிரியா, மலையாளத்தில்
பிஜுமேனன் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் பல படங்களில் நடிக்க பத்மபிரியா ஆர்வம் காண்பித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
போட்டோ ஷூட் எடுக்கும்போது தவறி விழுந்த ரித்திகா சிங்
போட்டோ ஷூட் எடுக்கும்போது தவறி விழுந்த ரித்திகா சிங்
தமிழில் இறுதிச்சுற்று, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரித்திகா சிங், போட்டோஷூட் எடுக்கும் போது தவறி விழுந்து இருக்கிறார்.
போட்டோ ஷூட் எடுக்கும்போது தவறி விழுந்த ரித்திகா சிங்… வைரலாகும் வீடியோ
ரித்திகா சிங்
சுதா கொங்கரா இயக்கத்தில் குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் இறுதிச்சுற்று. இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை ரித்திகா சிங், தேசிய
குத்துச் சண்டை வீராங்கனை. இறுதிச்சுற்று பெரிய வெற்றி பெற்றதால் குத்துச் சண்டையை மூட்டை விட்டு முழு நேர நடிகை ஆனார்.
இறுதிச்சுற்று படத்திற்குப் பிறகு தமிழில் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே படங்களில் நடித்தார். இவர் நடித்து முடித்துள்ள வணங்காமுடி படம் இன்னும் வெளிவரவில்லை.
இந்நிலையில், ரித்திகா சிங் குளம் அருகே போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த குளத்தில் தவறி விழுந்து இருக்கிறார்.
ரித்திகா சிங்
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோவை ரித்திகா சிங், தனது சமூக வலைத்தள
பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஆபாசப் படங்களைத் தயாரித்த- ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது
ஆபாசப் படங்களைத் தயாரித்த- ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது
ஆபாசப் படங்களைத் தயாரித்த ராஜ் குந்த்ரா அவற்றை மொபைல் செயலி மூலம் விநியோகம் செய்ததாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைது
ராஜ் குந்த்ரா
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விஷயத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும், இதில் ராஜ்
குந்த்ராவுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளது எனவும் தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும் மும்பை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது













