Author: நிருபர் காவலன்
டிரம்ப்புக்கு கிடைக்காத நோபல் பரிசு
டிரம்ப்புக்கு கிடைக்காத நோபல் பரிசு
டிரம்ப்புக்கு கிடைக்காத நோபல் பரிசு .உலகளவில் நடைபெற்றுவந்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் உள்பட 8-க்கும் மேற்பட்ட போர்களைத் தடுத்து நிறுத்தியதாக தொடர்ந்து கூறி வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு .
நோபல் பரிசு வழங்கப்படும்
நோபல் பரிசு வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில், வேறு ஒருவருக்கு பரிசு வழங்கப்பட்டதால் அவர் பெரும் ஏமாற்றத்துக்குள்ளாகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அதிபர் டிரம்ப்புக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்ட விவகாரத்தில் மரியாவையும், நோபல் தெரிவு
குழுவினரையும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங் கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நோபல் பரிசு குழுவின் பதிவை மறுப்பதிவிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதிபர் டிரம்ப் தொடர்ந்து பல போர்களை முடிவுக்கு கொண்டுவருவார்,
அந்தப் பதிவில், “அதிபர் டிரம்ப் தொடர்ந்து பல போர்களை முடிவுக்கு கொண்டுவருவார், அமைதி ஒப்பந்தங்களை மேற்கொள்வார், உயிர்களைக் காப்பாற்றுவார்.
அவர் மனிதாபிமானமிக்கவர், அவரின் முழு சக்தியால் மலைகளைக்கூட நகர்த்தும் வல்லமை மிக்கவர், அவரைப் போல யாரும் இருக்க மாட்டார்கள்.
நோபல் குழுவினர் அமைதியைவிட அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பதை நிரூபித்துவிட்டனர்” எனப் பதிவிட்டுள்ளார்
பெற்றோருக்கு எதிராக பிள்ளைகள் முறைப்பாடளிக்கலாம்
பெற்றோருக்கு எதிராக பிள்ளைகள் முறைப்பாடளிக்கலாம்
பெற்றோருக்கு எதிராக பிள்ளைகள் முறைப்பாடளிக்கலாம் ,பெற்றோர், பிள்ளைகளுக்கு தண்டனை வழங்கினால் அதற்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்க முடியும் என்ற சட்டம் கலாசாரத்துக்கு முரணானது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
பெற்றோர் பிள்ளைகளுக்கு ஆலோசனை
இதன் மூலம் பெற்றோர் பிள்ளைகளுக்கு ஆலோசனை வழங்கினால் அவர்கள் மீது முறைப்பாடளிக்க வாய்ப்புள்ளது.
அத்துடன் ஆசிரியர்களுக்கும் இந்த நிலை ஏற்படும் என்று கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற சட்டங்கள் மேற்கத்தேய நாடுகளில் வழக்கத்தில் உள்ளன.
இதுபோன்ற சட்டங்கள் மேற்கத்தேய நாடுகளில் வழக்கத்தில் உள்ளன. அவற்றை இலங்கையில் நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும் கர்தினால் வலியுறுத்தியுள்ளார்.
எனவே இந்த விடயத்தின் மூலம் அரசாங்கம் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குவதை தாம் விரும்பவில்லை எனவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணதிருத்தம் இறுதி முடிவு
மின்சாரக் கட்டணதிருத்தம் இறுதி முடிவு
மின்சாரக் கட்டணதிருத்தம் இறுதி முடிவு ,மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இம்மாதம் 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை
மின்சாரக் கட்டணத்தை 6.8% உயர்த்த இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாக அதன் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் கூறினார்.
மறுசீரமைப்பு திட்டங்களை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தத் தவறியதால் கட்டண உயர்வு தேவைப்படுவதாக இலங்கை மின்சார சபையின்
தொழில்நுட்ப பொறியாளர்கள்
தொழில்நுட்ப பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் பிரதித் தலைவர் நந்தன உதயகுமார தெரிவித்தார்.
20ரூபாய்க்கு ஆசைப்பட்டு 6இலட்சம் கட்டியநபர்
20ரூபாய்க்கு ஆசைப்பட்டு 6இலட்சம் கட்டியநபர்
20ரூபாய்க்கு ஆசைப்பட்டு 6இலட்சம் கட்டியநபர் ,தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 6 இலட்சம் ரூபா
அபராதம் விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை (09) உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதேசத்தில் உள்ள கடை
கொழும்பு பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றின் உரிமையாளர் 70 ரூபாவுக்கு விற்கப்படும் தண்ணீர்
போத்தலை 90 ரூபாவுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள்
இது தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாட்டின்
அடிப்படையில் கடை உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது
ஈரானுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும் டிரம்ப்
ஈரானுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும் டிரம்ப்
ஈரானுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும் டிரம்ப் ,அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அமைச்சரவை இப்போது ஈரானுடன் இணைந்து செயல்படும் என்று கூறுகிறார்.
பிபிசியின் கூற்றுப்படி, அமைச்சரவைக் கூட்டத்தில், டிரம்ப்
பிபிசியின் கூற்றுப்படி, அமைச்சரவைக் கூட்டத்தில், டிரம்ப் இப்போது காசாவின் எதிர்காலம் குறித்து தனது பார்வையை அமைத்து, காசாவை
பிராந்தியத்தில் உள்ள பணக்கார நாடுகளால் “மெதுவாக மீண்டும் உருவாக்கப்படும்” என்று கூறினார்.
“அவர்கள் [அந்த நாடுகள்] செய்வது காசாவிற்கு அதிசயங்களைச் செய்யும்,” என்று அவர் கூறுகிறார். “நான் பார்த்திராத அளவுக்கு மிகப்பெரிய மனப்பான்மை உள்ளது.”
“ஒரு கட்டத்தில், அந்த முழு விஷயமும் நிறுத்தப்பட வேண்டும்,” என்று அவர் கூறுகிறார். “நாங்கள் அதைப் பார்க்கப் போகிறோம்.”
மீதமுள்ள கைதிகளை “திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை” விடுவிக்க வேண்டும் என்று டிரம்ப் கூறுகிறார்.
ஈரான் இப்போது அமைதிக்காகப் பாடுபட விரும்புகிறது
“ஈரான் இப்போது அமைதிக்காகப் பாடுபட விரும்புகிறது, அவர்கள் எங்களுக்குத் தகவல் அளித்துள்ளனர். மேலும் இந்த [காசா அமைதி] ஒப்பந்தத்திற்கு அவர்கள் முற்றிலும் ஆதரவாக இருப்பதாக அவர்கள்
ஒப்புக்கொண்டுள்ளனர், இது ஒரு சிறந்த விஷயம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்,” என்று டிரம்ப் தனது கருத்துக்களில் வேறு இடங்களில் கூறினார், அவர்கள் ஈரானுடன் இணைந்து செயல்படுவார்கள் என்று கூறினார்.
டிரம்ப் எகிப்து மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்திற்குச் செல்வார் என்றும் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது, ஆனால் காசாவில் நிறுத்துவது நிராகரிக்கப்பட்டுள்ளது அல்லது
காசா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தியது
காசா மீதான தாக்குதல்களை இஸ்ரேல்நிறுத்தியது
காசா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தியது ,போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த பிறகு காசா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தியது.
காசா பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் வான்வழித் தாக்குதல்
காசா பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் வான்வழித் தாக்குதல்களை நிறுத்தியுள்ளது.
அல் ஜசீரா தொலைக்காட்சி சேனலின்படி, இஸ்ரேலிய அமைச்சரவை போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த பிறகு தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.
முன்னதாக, பாலஸ்தீனிய இயக்கமான ஹமாஸ், காசா பகுதியில் மறைமுக போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளின் மத்தியஸ்தர்களும், அமெரிக்கத்
தலைமையும் இஸ்ரேல் மீது ஷெல் தாக்குவதை நிறுத்த வேண்டும் என்று கோரியதாக தெரிவிக்கப்பட்டது. மேற்கு காசா நகரத்தின் மீது ஷெல்
தாக்குதலைத் தொடர்ந்து 70 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்
தாக்குதலைத் தொடர்ந்து 70 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 9 அன்று, எகிப்தில் நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இஸ்ரேலும் ஹமாஸும் ஒரு சமாதானத் திட்டத்தின் முதல் கட்டத்தில் உடன்பாடுகளை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்
அறிவித்தார். அவரைப் பொறுத்தவரை, இந்த கட்டத்தில் எதிர்காலத்தில் அனைத்து கைதிகளையும் விடுவிப்பதும், காசா பகுதிக்குள் ஒப்புக்
கொள்ளப்பட்ட கோட்டிற்கு இஸ்ரேலிய துருப்புக்கள் திரும்பப் பெறுவதும் அடங்கும்.
“வலுவான, நீடித்த மற்றும் நித்திய அமைதியை நோக்கி” முதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று டிரம்ப் வலியுறுத்தினார்.
இராமர் பாலத்தை பார்வையிடவிசேட படகுசேவை
இராமர் பாலத்தை பார்வையிடவிசேட படகுசேவை
இராமர் பாலத்தை பார்வையிடவிசேட படகுசேவை ,தலைமன்னார் கடற்பரப்பில் அமைந்துள்ள இராமர் பாலத்தைப் பார்வையிடச் செல்லும் .
சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட படகு சேவை
சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட படகு சேவையை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய குறித்த தீர்மானம் பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களின்
படகு சேவைக்கான கட்டண அறவீட்டை
போது எடுக்கப்பட்டுள்ளதுடன், படகு சேவைக்கான கட்டண அறவீட்டை வன ஜீவராசிகள் திணைக்களத்தினூடாக முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
இதில் கட்டண அறவீடு குறித்து, வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் மன்னார் பிரதேசசபை உறுப்பினர்களிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது
இராமேஸ்வரம் மீனவர்கள் 30பேருக்கு விளக்கமறியல்
இராமேஸ்வரம் மீனவர்கள் 30பேருக்கு விளக்கமறியல்
இராமேஸ்வரம் மீனவர்கள் 30பேருக்கு விளக்கமறியல் ,இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 30 இராமேஸ்வரம்
மீனவர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் இராமேஸ்வரம் பாம்பன் பகுதிகளை சேர்ந்த 30 மீனவர்கள் நெடுந்தீவுக் கடற்பரப்பில் 4 படகில் மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த
நிலையில் கடற்படையினரால் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர் .
வழக்கை விசாரித்த மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்
போர் முடிவுக்கு வந்து ஹமாஸ் அறிவிப்பு
போர் முடிவுக்கு வந்து ஹமாஸ் அறிவிப்பு
போர் முடிவுக்கு வந்து ஹமாஸ் அறிவிப்பு ,போர் முடிவுக்கு வந்து நிரந்தர போர் நிறுத்தம் தொடங்குவதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
ஹமாஸின் நாடு கடத்தப்பட்ட காசா தலைவர் கலீல் அல்-ஹய்யா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இதனைக் கூறினார்.
இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்ட அனைத்து பலஸ்தீன பெண்கள் மற்றும் சிறுவர்களை விடுவிப்பதும் அடங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்
அணையா விளக்கு தூபி மீளக்கட்டப்பட்டது
அணையா விளக்கு தூபி மீளக்கட்டப்பட்டது
அணையா விளக்கு தூபி மீளக்கட்டப்பட்டது ,யாழ்ப்பாணம் – செம்மணியில் விஷமிகளால் அடித்து உடைக்கப்பட்ட அணையா விளக்கு நினைவுத் தூபி அதே இடத்தில் மீளக் கட்டப்பட்டுள்ளது.
அணையா விளக்கு நினைவுத் தூபி
அணையா விளக்கு நினைவுத் தூபி விஷமிகளால் நேற்று(09) அதிகாலை அடித்து உடைக்கப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணம் வரவேற்கின்றதுஎன்ற வளைவுக்கு அருகில் கடந்த ஜூன் மாத இறுதியில் செம்மணி மனிதப்
புதைகுழிக்குச் சர்வதேச நீதி கோரி ‘அணையா விளக்கு’ போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தின் போது அணையா விளக்கு ஏற்றபட்டது
போராட்டத்தின் போது அணையா விளக்கு ஏற்றபட்டது. போராட்டத்தின் முடிவில் அந்தப் பகுதியில் அணைய விளக்கு நினைவுத் தூபி ஒன்றும் அமைக்கப்பட்டது.
இந்த நினைவுத் தூபியைத்தான் விஷமிகள் நேற்று அதிகாலை அடித்து உடைத்திருந்தனர்.
இதையடுத்து நினைவுத் தூபியை மீள அமைக்கும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளன
அமிதாப் பச்சன் படத்தில் நடித்தவர் படுகொலை வெளியான பரபரப்பு தகவல்
அமிதாப் பச்சன் படத்தில் நடித்தவர் படுகொலை வெளியான பரபரப்பு தகவல்
அமிதாப் பச்சன் படத்தில் நடித்தவர் படுகொலை வெளியான பரபரப்பு தகவல் ,இந்தியில் நாகராஜ் மஞ்சுலே இயக்கி நடிகர் அமிதாப் பச்சன் நடித்த படம் “ஜுண்ட்”. இந்த திரைப்படம் ஸ்லம் சாக்கர் என்ற அரசு நிறுவனத்தின் .
நிறுவனர் விஜய் பார்சியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது
நிறுவனர் விஜய் பார்சியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. ஓய்வுபெறும் தருவாயில் உள்ள விளையாட்டு ஆசிரியர்
ஒருவர், குடிசைப்பகுதியை சேர்ந்த குழந்தைகளுக்காக ஒரு கால்பந்து அணியை உருவாக்குகிறார்.
அது அவர்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றுகிறது என்பதுதான் படத்தின் கதை.
இந்தப்படத்தில் பாபு சேத்ரி என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானவர் பிரியான்ஷு என்ற பாபு சேத்ரி(வயது21). இவர் நாக்பூர் நகரில் உள்ள லும்பினி நகர் பகுதியில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் பாபு சேத்ரி நேற்று அதிகாலை 3 மணி அளவில் அங்குள்ள ஜரிபட்கா பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீட்டின் அருகே அரை நிர்வாண நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.
கை, கால்கள் பிளாஸ்டிக் வயர்களால் கட்டப்பட்டு இருந்தது
மேலும் அவரது கை, கால்கள் பிளாஸ்டிக் வயர்களால் கட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்,
பாபு சேத்ரியை மீட்டு அருகில் உள்ள மேயோ ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுபோதையில் 2 பேருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சாகு, பாபு சேத்ரியை கம்பியால் தாக்கி பிளாஸ்டிக் வயரால் கட்டிப்போட்டுவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது.
இதையடுத்து சாகுவை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாபு சேத்ரி மற்றும் கைதான சாகு ஆகியோர் மீது திருட்டு மற்றும் தாக்குதல் வழக்குகள் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபர் தப்பியோட்டம்2 பொலிஸார் பணிநீக்கம்
சந்தேக நபர் தப்பியோட்டம்2 பொலிஸார் பணிநீக்கம்
சந்தேக நபர் தப்பியோட்டம்2 பொலிஸார் பணிநீக்கம் ,அனுராதபுரம் பொலிஸில் பணியாற்றும் ஒரு துணை இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு சர்ஜென்ட்
நேற்று காலை பொலிஸ் நிலையத்திலிருந்து
நேற்று காலை பொலிஸ் நிலையத்திலிருந்து ஒரு சந்தேக நபர் தப்பிச் சென்றதை அடுத்து பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
பொலிஸ் நிலையத்தின் ஒட்டுமொத்தப் பணிகளை எஸ்.ஐ. கவனித்துக் கொண்டிருந்தார், சர்ஜென்ட் ரிசர்வ் பணியில் இருந்தார்.
மாத்தளை, சமகிபுராவைச் சேர்ந்த 22 வயது சந்தேக நபர் செவ்வாய்க்கிழமை (07) ஒரு நபரைத் தாக்கி ரூ.30,000 கொள்ளையடித்ததாகவும், கைது
செய்யப்பட்ட நேரத்தில் ஹெரோயின் வைத்திருந்ததாகவும் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்
புதன்கிழமை (08) காலை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார், ஆனால் செவ்வாய்க்கிழமை இரவு அவர் காவலில் இருந்து தப்பிச் சென்றார்.
மேலதிக விசாரணைகளை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திலின ஹேவாபத்திரனவின் பணிப்புரையின் பேரில் தலைமையக பொலிஸ்
அநுராதபுரம் பொலிஸ் மா அதிபர் ஜயவீர ராஜபக்ஷ மேற்கொண்டு வருகின்றார்.
நீச்சல்குளத்தில் உயிரிழந்த சிறுவன் 7பேர் அதிரடியாககைது
நீச்சல்குளத்தில் உயிரிழந்த சிறுவன் 7பேர் அதிரடியாககைது
நீச்சல்குளத்தில் உயிரிழந்த சிறுவன் 7பேர் அதிரடியாககைது ,நுகேகொடையில் உள்ள ஒரு ஹோட்டலில் நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, குறித்த சிறுவன் படித்து வந்த பாலர்
பாடசாலையின் உப அதிபர் உட்பட 7 பேரை மிரிஹான பொலிஸார் கைது
பாடசாலையின் உப அதிபர் உட்பட 7 பேரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த 8 ஆம் திகதி காலை மிரிஹான, ஸ்டான்லி மாவத்தையில் உள்ள ஒரு ஹோட்டலில் பதிவாகியுள்ளது.
குறித்த தினத்தன்று இறந்த சிறுவன் பயிற்சியாளரின் வழிகாட்டுதலின் கீழ் ஹோட்டலில் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது, சிறுவன் நீரில் மூழ்கினார்.
இதில் சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவன் இறந்துவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுவனின் சடலம் மீதான் பிரேத பரிசோதனை
சிறுவனின் சடலம் மீதான் பிரேத பரிசோதனை நேற்று (9) நடைபெற்ற நிலையில், சம்பவம் தொடர்பாக பாலர் பாடசாலையின் அதிகாரி, விளையாட்டு ஒருங்கிணைப்பு அதிகாரி, சிறுவர்களுக்குப் பொறுப்பான
இரண்டு ஆசிரியர்கள், பாலர் பாடசாலை ஊழியர் மற்றும் இரண்டு நீச்சல் பயிற்றுனர்கள் உட்பட 7 பேரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் தங்க விற்பனை சரிவு
இலங்கையில் தங்க விற்பனை சரிவு
இலங்கையில் தங்க விற்பனை சரிவு ,உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்ததை அடுத்து, உள்ளூர் சந்தையிலும் தங்கம் அதி உச்சத்தை தொட்டுள்ளது.
இந்த வாரத்தில் மட்டும் 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை
இந்த வாரத்தில் மட்டும் 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 15,000 ரூபாய் அதிகரித்துள்ளது என்று அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.
இந்த விலை உயர்வால், தங்க விற்பனை சுமார் 60% குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஒரு வாரத்திற்கு முன்பு 24 காரட் தங்கத்தின் விலை 303,000 ரூபாயாக இருந்தது என்றும் அவர் கூறினார்.
நேற்று (09) காலை 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் தங்கத்தின் விலை 328,000 ரூபாயாக இருந்தது என்றும், ஆனால் நேற்று (09) பிற்பகல் 330,000 ரூபாயாக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
தங்க பிஸ்கட்களை இறக்குமதி செய்யும்போது
தங்க பிஸ்கட்களை இறக்குமதி செய்யும்போது 28% வரி செலுத்த வேண்டும் என்றும், மற்ற வரிகளுடன் சேர்த்து 50% அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
எனவே, நகை விற்பனையில் ஈடுபடும் யாரும் தங்க பிஸ்கட்களை இறக்குமதி செய்ய மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்
சிரியாவில் வெடிப்பு 7பேர் காயம்
சிரியாவில் வெடிப்பு 7பேர் காயம்
சிரியாவில் வெடிப்பு 7பேர் காயம் ,தெற்கு சிரியாவில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 7 பேர் காயமடைந்தனர்.
சிரிய தலைநகர் டமாஸ்கஸின்
சிரிய தலைநகர் டமாஸ்கஸின் தென்மேற்கே உள்ள சபினா நகரில் புதன்கிழமை ஏற்பட்ட வெடிப்பு, குறைந்தது ஏழு பேர் காயமடைந்ததாக அரசு நடத்தும் சனா தெரிவித்துள்ளது.
சபினா சிலோஸில் ஏற்பட்ட வெடிப்பால் ஏற்பட்ட இடிபாடுகளில் இருந்து காயமடைந்த ஏழு பேரை சிவில் பாதுகாப்பு குழுக்கள் மீட்டு, டமாஸ்கஸில்
உள்ள அல்-முஜ்தாஹித் மற்றும் அல்-சலாம் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெடிப்புக்கான காரணம், அதன் நேரம் அல்லது அது ஒரு விபத்து, நாசவேலை அல்லது பிற செயல்களின் விளைவாக இருந்ததா என்பது குறித்த விவரங்களை
சனா உடனடியாக வழங்கவில்லை. சனா வெளியிட்ட வரையறுக்கப்பட்ட ஆரம்பகால படங்கள் சிலோஸ் வளாகத்தில் சேதத்தைக் காட்டின.
காட்சிகள் மற்றும் சாட்சிகளின் அறிக்கைகளை மேற்கோள் காட்டி பிற செய்தி நிறுவனங்கள், நகரத்தின் ஆலைகளுக்கு அருகில் வெடிப்பு நிகழ்ந்ததாகவும்,
டமாஸ்கஸ் மீது ட்ரோன் பறந்ததாகக் கூறப்படும் போது குண்டுவெடிப்பு
டமாஸ்கஸ் மீது ட்ரோன் பறந்ததாகக் கூறப்படும் போது குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும் தெரிவித்தன.
சில அறிக்கைகள் இலக்கு வைக்கப்பட்ட இடம் சேமிப்பிற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தன, இருப்பினும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் கிடைக்கவில்லை.
ஹமாஸ் இஸ்ரேல் போர்நிறுத்த ஒப்பந்தம்
ஹமாஸ் இஸ்ரேல் போர்நிறுத்த ஒப்பந்தம்
ஹமாஸ் இஸ்ரேல் போர்நிறுத்த ஒப்பந்தம் ,ஹமாஸ், இஸ்ரேல் விடுதலை செய்யப்பட உள்ள கைதிகளின் பட்டியலை பரிமாறிக் கொண்டன.
பாலஸ்தீன இயக்கமான ஹமாஸ்
பாலஸ்தீன இயக்கமான ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய ஆட்சி, காசா பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கட்டமைப்பிற்குள் விடுவிக்கப்பட உள்ள
கைதிகளின் பட்டியலை மத்தியஸ்தர்கள் மூலம் பரிமாறிக் கொண்டதாக ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் தாஹர் அல்-நுனு தெரிவித்தார்.
“இன்று, முன்னர் ஒப்புக் கொள்ளப்பட்ட அளவுகோல்களின்படி விடுவிக்க திட்டமிடப்பட்டுள்ள பணயக்கைதிகள் மற்றும் கைதிகளின் பட்டியலை
நாங்கள் பரிமாறிக் கொண்டோம்,” என்று ஹமாஸ் டெலிகிராம் சேனல் செய்தித் தொடர்பாளர் கூறியதாக டாஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட பட்டியல்கள்
இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட பட்டியல்கள் பாலஸ்தீன கைதிகளின் “ஒரு குறிப்பிட்ட அளவு” என்பதைக் குறிக்கின்றன, ஆனால் ஹமாஸ் எத்தனை பேரை விடுவிக்க வேண்டும் என்று கோருகிறது என்பதைக் குறிப்பிடவில்லை
என்று அல்-நுனு வலியுறுத்தினார். ஷார்ம் எல் ஷேக்கில் பேச்சுவார்த்தைகள் “நம்பிக்கையான சூழ்நிலையில்” தொடர்கின்றன என்றும், மத்தியஸ்தர்கள்
ஒரு உடன்பாட்டை எட்ட “மிகப்பெரிய முயற்சிகளை” மேற்கோளிட்டுள்ளதாகவும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
அக்டோபர் 6 ஆம் தேதி மாலை, ஷார்ம் எல் ஷேக்கில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகளுக்கு இடையே மறைமுக பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கின.
எகிப்தும் கத்தாரும் பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்கின்றன. அமெரிக்காவை சிறப்பு ஜனாதிபதி தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும்
அமெரிக்கத் தலைவரின் மருமகன் ஜாரெட் குஷ்னர் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
ஈரானுக்கு எதிராக ஜெர்மன் இராணுவம் பங்கேற்பு
ஈரானுக்கு எதிராக ஜெர்மன் இராணுவம் பங்கேற்பு
ஈரானுக்கு எதிராக ஜெர்மன் இராணுவம் பங்கேற்பு ,ஜெர்மன் துருப்புக்கள் நேரடியாக ‘மோசமான வேலையில்’ ஈடுபட்டன.
ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் 12 நாள் ஆக்கிரமிப்பில்
ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் 12 நாள் ஆக்கிரமிப்பில் ஜெர்மனியின் இராணுவப் பங்கை தெஹ்ரான் டைம்ஸ் வெளிப்படுத்துகிறது
ஜூன் மாதத்தில், ஈரானின் பொதுமக்கள், அணுசக்தி மற்றும் இராணுவ தளங்கள் மீதான இஸ்ரேலிய
தாக்குதல்களை ஆதரித்த சில நாடுகளில் ஜெர்மனியும் ஒன்றாகும், மேலும் அவற்றில் மிகவும் குரல் கொடுத்தது.
மோதலின் போது இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை ஆதரித்த ஜெர்மன் அதிபர், மேற்கத்திய நாடுகளுக்கு “மோசமான வேலை” செய்வதாகக் கூறி, ஈரானியர்களையும் ஜேர்மனியர்களையும் கோபப்படுத்தினார்.
சட்டவிரோத தாக்குதல்கள்
சட்டவிரோத தாக்குதல்கள் குறித்து தனக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதாகவும், ஈரானியர்களைத் தாக்காமல் இருப்பது இஸ்ரேலியர்களுக்கு ஒரு “விருப்பம்” அல்ல என்றும், அவர்கள் “தங்களைத்
தற்காத்துக் கொள்ள” உரிமை உண்டு என்றும் ஃபிரெட்ரிக் மெர்ஸ் கூறினார். இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியது, ஈரான் அணு ஆயுதங்களை
உருவாக்குவதைத் தடுக்கும் நோக்கம் கொண்டதாகக் கூறி 1000 க்கும் மேற்பட்ட ஈரானியர்களைக் கொன்றது.
இருப்பினும், சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) ஈரான் அணு ஆயுதங்களை நோக்கி நகர்கிறது என்பதற்கான எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை – இந்த உண்மையை ஐ.நா.
அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோசி கடந்த வாரம் மீண்டும் வலியுறுத்தினார். ஈரானுக்கு எதிராக முழுமையான போரை நடத்த இஸ்ரேல் எடுத்த முடிவு, அந்தப் பகுதியை ஒரு தீயின்
விளிம்பிற்குக் கொண்டு வந்தது, அது கட்டுப்படுத்தப்படாவிட்டால், மேற்கு ஆசியாவிற்கு மட்டுமல்ல, மேற்கத்திய உலகிற்கும் நீண்டகால எதிரொலிகளை
ஏற்படுத்தியிருக்கும், இந்த நடவடிக்கையை ஜெர்மனி எப்போது ஆதரித்ததோ அதை முழுமையாக அறிந்திருந்தது.
12 நாள் போரின் போது இஸ்ரேலுக்கு ஜெர்மனி அளித்த ஆதரவு அரசியல் மற்றும் இராஜதந்திர அறிக்கைகளுக்கு அப்பால் நீட்டிக்கப்பட்டது என்பதை தெஹ்ரான் டைம்ஸ் பெற்ற புதிய தகவல்கள் வெளிப்படுத்துகின்றன.
உண்மையில், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு துருப்புக்களை அனுப்புவதன் மூலம் இஸ்ரேல் தனது போர் இலக்குகளை அடைய உதவுவதில் பெர்லின் தீவிர பங்கைக் கொண்டிருந்தது.
இந்த விஷயத்தை அறிந்த இஸ்ரேலிய இராணுவத்தின் உறுப்பினர் ஒருவர், 12 நாள் போரின் போது ஆட்சியின் வேண்டுகோளின் பேரில் இஸ்ரேலில் ஜெர்மன் இராணுவப் படைகளின் ஒரு குழு நிறுத்தப்பட்டதாக ஈரானிய
உளவுத்துறையிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் இராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்றனர், இஸ்ரேல் ஜெர்மனியின் ஈடுபாட்டை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் கீழ்.
இந்த ஒப்பந்தம் ஜெர்மன் மற்றும் இஸ்ரேலிய தளபதிகளுக்கு இடையே ரகசியமாக செய்யப்பட்டது, ஆனால் அது ஈரானியர்களால் பெறப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியபிரதிநிதிகளுடன் சஜித் சந்திப்பு
ஐரோப்பிய ஒன்றியபிரதிநிதிகளுடன் சஜித் சந்திப்பு
ஐரோப்பிய ஒன்றியபிரதிநிதிகளுடன் சஜித் சந்திப்பு அரசாங்கம் இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமையை இடைநிறுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழுவுடனான சந்திப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வுக்கும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ ஆகியோருக்கிடையில் நேற்று
(08) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
போட்டி விதிமுறைகளுக்கு இணங்குதல்
போட்டி விதிமுறைகளுக்கு இணங்குதல், தற்போதைய அரசாங்கம் இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமையை இடைநிறுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள், நுண், சிறிய மற்றும் நடுத்தர
தொழில்முயற்சியாண்மையாளர்கள் எதிர்கொள்ளும் பல சவால்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது
நகைகள் களவாடப்பட்டுள்ளதாக நாடகமாடிய பெண்
நகைகள் களவாடப்பட்டுள்ளதாக நாடகமாடிய பெண்
நகைகள் களவாடப்பட்டுள்ளதாக நாடகமாடிய பெண் ,நகைகள் களவாடப்பட்டுள்ளதாகப் கணவரிடம் தப்பிப்பதற்கு பொலிஸாரை ஏமாற்றி .
சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம்
நாடகமாடிய பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்- மஸ்லம் வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் சுமார் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான
நகைகள் கடந்த செப்டம்பர் 27 ஆந் திகதி அன்று களவாடப்பட்டு உள்ளதாகவும் தனது கணவர் வெளிநாடு ஒன்றில் இருந்து இலங்கைக்கு திடீரென
திரும்பவுள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் 32 வயதுடைய குடும்ப பெண் முறைப்பாட்டினை மேற்கொண்டிருந்தார்.
நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
குறித்த முறைப்பாட்டிற்கு அமைய நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு.எஸ். நிஷாந்த வெதகே
வழிகாட்டலில் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பரிசோதகர் ஏ.எல்.எம். அஸீம் தலைமையில் பொலிஸ் குழுக்கள் புலன் விசாரணைகள் துரித கதியில் மேற்கொண்டிருந்தன.
இதற்கமைய அம்பாறையில் இருந்து தடயவியல் பொலிஸ் பிரிவு இலங்கை பொலிஸ் மோப்ப நாய் பிரிவு என்பன இச்சோதனையில் பங்கேற்றிருந்தன.
இருந்த போதிலும் குறித்த வீட்டில் களவாடப்பட்டதற்கான சான்றுகளோ அல்லது மேற் கூறப்பட்ட 45 இலட்சம் ரூபாய் நகைகள் திருடப்பட்டமைக்கான எவ்வித ஆதாரங்களும் கிடைக்கவில்லை.
இருப்பினும் விசாரணையின் தொடர்ச்சியாக முறைப்பாடு செய்த குடும்ப பெண்ணில் சந்தேகமடைந்த பொலிஸார் அப்பெண்ணை கடந்த அக்டோபர் மாதம் 3 ஆந் திகதி துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர்.
இதன் போது பல்வேறு உண்மைகள் வெளிவரத் தொடங்கியது.
இதனடிப்படையில் கணவன் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சென்ற நிலையில் தனியாக இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்த குறித்த பெண் தனது
கையிருப்பில் இருந்த பணம் மற்றும் நகைகளை பல்வேறு தேவைகளுக்காக செலவு செய்துள்ளார்.
இந்நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சென்ற கணவன் திடீரென நாடு திரும்பும் நிலையில் இருப்பதாக அப்பெண்ணிடம் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் சற்று கலவரமடைந்த அப்பெண் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் களவாடப்பட்டுள்ளதாகப் நாடகமாடி கல்முனை பகுதியில் உள்ள
பிரபல நகையகத்திற்கு சென்று நகைகளை விற்பனை செய்ததை ஒப்புக் கொண்டதுடன் இச் செயற்பாட்டினை தனது கணவர் வெளிநாட்டில் இருந்து
திடீரென இலங்கை வரவுள்ளதாக என்னிடம் தெரிவித்ததால் இவ்வாறு நகைகள் திருடப்பட்டதாக நாடகம் ஆடியதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அப்பெண் கைது செய்யப்பட்டு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர் செய்தனர்.இதன்போது குறித்த பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில்
வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் உத்தரவிட்டார்.பின்னர் சந்தேக நபரான குறித்த பெண் சார்பில் இடைமனுக்
கோரிக்கை முன்வைக்கப்பட்டது.இதன்போது அப்பெண் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் கடும் தொனியில் சந்தேக நபரை எச்சரித்த
நிலையில் பிணையில் செல்ல நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
குருக்கள்மடம் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு
குருக்கள்மடம் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு
குருக்கள்மடம் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு ,மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி தொடர்பான வழக்கானது எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மனித புதைகுழி தொடர்பான வழக்கு
குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (09) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதவான் த.பிரதீபன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் உட்பட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.
கடந்த 11-09-2025அன்று நீதிமன்றில் கொழும்பு பிரதம சட்டவைத்திய அதிகாரியினால் சமர்பிக்கப்பட்டிருந்த செலவு நிதி அறிக்கை களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தின் பணிப்புரைக்கு அமைவாக மட்டக்களப்பு மேல்
நீதிமன்றம் ஊடாக நிதி அமைச்சு
நீதிமன்றம் ஊடாக நிதி அமைச்சு,நீதி அமைச்சுக்கு அனுப்புவதற்கான கட்டளை கடந்த அமர்வில் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.
குறித்த அறிக்கையின் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டதுடன் குறித்த அறிக்கையானது மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மன்றில் தெரிவிக்கப்பட்;டது.
இதனடிப்படையில் குறித்த வழக்கானது எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












































