கபில சந்திரசேனவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
கபில சந்திரசேனவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு ,ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (7) உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கபில சந்திரசேனவின் பிணையை ரத்து செய்து, வழக்கு விசாரணை முடியும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு
ஆணைக்குழு மோஷன் (Motion) ஒன்றின் மூலம் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார்
குற்றச்சாட்டின் கீழ்
என்ற குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவுக்கு நேற்று முன்தினம் பிணை வழங்கப்பட்டது.
இருப்பினும், அவர் பிணை நிபந்தனைகளை மீறி நீதிமன்றத்தின் நம்பிக்கையை சிதைத்துள்ளதாகக் குறிப்பிட்ட இலஞ்ச ஊழல் ஒழிப்பு
ஆணைக்குழு, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான பிடியாணை உத்தரவை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரியது.
- சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்புப் படை பல நகரங்களில் அவசரகால எச்சரிக்கை

- ஏமன் சண்டையில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்பு

- ஈரான் போர் கப்பல் போக்குவரத்துக்கு பாதிப்பு

- எதிரி விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

- இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் MSF ஊழியர் காயம், வாகனம் சேதம்

- ஈரான் மீதான போர் அமெரிக்காவின் வெடிமருந்துகளில் பற்றாக்குறை

- இருவர் வெட்டி படுகொலை

- லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சபாநாயகர் மீது விசாரணை

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நடந்த ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் விசாரணை

- கலு கங்கையின் தாழ்வான பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு

- மூன்று மாவட்டங்களுக்கு நிலச்சரிவு முன்னறிவிப்பு எச்சரிக்கை









