ஜெருசலேம் சோதனை சாவடியில் கத்தி குத்து தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஜெருசலேம் சோதனை சாவடியில் கத்தி குத்து தாக்குதல்

ஜெருசலேம் சோதனை சாவடியில் கத்தி குத்து தாக்குதல்

ஜெருசலேமுக்கு அருகிலுள்ள சோதனைச் சாவடியில் இடம்பெற்ற கத்திக்குத்து
தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஹார் ஹோமாவின் தெற்கு ஜெருசலேம் சுற்றுப்புறத்திற்கு அருகிலுள்ள
மஸ்முரியா சோதனைச் சாவடியில் 20
இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

தாக்குதலை நடத்தியவரின் கத்திக்குத்து தாக்குதலில் சிக்கி 20 வயதுடைய பெண்ணும் 25 வயது
ஆணும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ஜெருசலேம் சோதனை சாவடியில் கத்தி குத்து தாக்குதல்

இருவரும் பலமில்லா காயங்களுக்கு உள்ளானதாகவும் ,உயிர் ஆபத்து இன்றி ர் உள்ளதாகமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .

வீடியோ
தாக்குதலை நடத்தியவர் ஆயுத படைகளினால் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளார் .

காரில் வந்த நபரே இந்த திடீர் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்க படுகிறது .
போலீசாரை மீது தாக்குதலை நடத்த முயன்ற பொழுது ஒரு காவல்துறை
ஊழியர் நடத்திய சூட்டு தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானதாக தெரிவிக்க பட்டுள்ளது .

போர் ஆரம்பிக்க பட்டதன் பின்னர் இதே பகுதியில் இடம்பெற்ற ,
ஆறாவது தாக்குதலாக இது உள்ளதாக தெரிவிக்க படுகிறது குறிப்பிட தக்கது .

கில்மிஷாவை வரவேற்ற யாழ் மக்கள்- இது கில்மிசாவா
Posted in இலங்கை செய்திகள் கில்மிசா பாடல் kilmisha zee tamil

கில்மிஷாவை வரவேற்ற யாழ் மக்கள்- இது கில்மிசாவா

கில்மிஷாவை வரவேற்ற யாழ் மக்கள்- இது கில்மிசாவா

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் கில்மிஷாவை வரவேற்பதற்காக பெருமளவான மக்கள் வீதிகளில் திரண்டு ஆதரவு தெரிவித்தனர்.

தமிழ் கலாசார பாராம்பரிய நடனங்கள் ஆடப்பட்டு, முத்து சப்பரத்தில் கில்மிஷாவை ஏற்றி ஊர் மக்கள் தூக்கி சென்றனர்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திறந்த காரில் புறப்பட்ட கில்மிஷா வுக்கு வீதியெங்கும் மக்கள் மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர்.

கில்மிஷாவை வரவேற்ற யாழ் மக்கள்- இது கில்மிசாவா

அரியாலை ஶ்ரீ கலைமகள் சனசமூக நிலைய முன்றலில் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது. சாரங்கா இசைக்குழுவினரின் இசையில் கில்மிஷா சில பாடல்களையும் பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய தொலைக்காட்சி ஜீ தமிழ் நடாத்திய சரிகமப லிட்டில் சம்பியன் பாடல் போட்டி ஒன்றில் யாழ்ப்பாணத்தில் இருந்து கலந்து கொண்ட கில்மிஷா வெற்றியாளராக தெரிவாகியிருந்தார்

வீடியோ

அமெரிக்காக்காவை நம்பாது செங்கடலை விட்டு ஓட்டம் பிடிக்கும் கப்பல் நிறுவனங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

அமெரிக்காவை நம்பாது செங்கடலை விட்டு ஓட்டம் பிடிக்கும் கப்பல் நிறுவனங்கள்

அமெரிக்காவை நம்பாது செங்கடலை விட்டு ஓட்டம் பிடிக்கும் கப்பல் நிறுவனங்கள்

செங்கடல் பகுதியில் ஹவுதிகளின் தாக்குதல் அச்சுறுத்தலை அடுத்து பல முக்கிய கப்பல் நிறுவனங்கள்
செங்கடலை பயன்படுத்துவதை தவிர்த்து தப்பி ஓடியுள்ளது .

அமெரிக்கா பாதுகாப்பு தருவதாக தெரிவித்த பொழுதும் ,
அதனை நம்பாது அவர்கள் தப்பி ஓடியுள்ளனர் .

அமெரிக்காவை நம்பாது செங்கடலை விட்டு ஓட்டம் பிடிக்கும் கப்பல் நிறுவனங்கள்

இந்த வாரம், மொத்தம் 4.3 மில்லியன் கொள்கலன்கள் கொள்ளளவு
கொண்ட 299 கப்பல்கள் செங்கடலைத் தவிர்த்து பாதையை மாற்றி செல்வதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இதனால் பல மில்லியன் மேலதிக செலவு ஆவதுடன் ,
கப்பல் போக்குவரத்தில் தாமதமும் ஏற்படுகிறது .
இது ஹவுதிகளுக்கு கிடைக்க பெற்ற வெற்றியாகும் என தெரிவிக்க பட்டுள்ளது . .

வீடியோ

ஓடவிட்டு அடித்த ஹமாஸ் 501 இராணுவம் பலி|செங்கடலை முடக்கிய ஹவுதி ஓடும் கப்பல்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஓடவிட்டு அடித்த ஹமாஸ் 501 இராணுவம் பலி|செங்கடலை முடக்கிய ஹவுதி ஓடும் கப்பல்கள்


ஓடவிட்டு அடித்த ஹமாஸ் 501 இராணுவம் பலி|செங்கடலை முடக்கிய ஹவுதி ஓடும் கப்பல்கள்

இஸ்ரேல் இராணுவத்தை ஓடவிட்டு அடித்த ஹமாஸ்,
501 இராணுவம் பலியாகியுள்ளதாக அறிவிப்பு .

செங்கடலை முடக்கிய ஹவுதி ஓடும் பெரும் கப்பல் நிறுவன கப்பல்கள் ,
திணறும் அமெரிக்கா கடற்படை கலங்கள் ,

வீடியோ

முல்லைத்தீவில் 4500 துப்பாக்கி ரவைகள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் 4500 துப்பாக்கி ரவைகள் மீட்பு

முல்லைத்தீவில் 4500 துப்பாக்கி ரவைகள் மீட்பு

வலைஞர்மடம் பகுதியில் உள்ள வயல்காணி ஒன்றில் T- 56 வகை துப்பாக்கி ரவைகள் 4,500 நேற்று (27) மீட்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – வலைஞர்மடம் பகுதியில் கிறிஸ்தவ தேவாலய வீதியிலுள்ள வயல் காணி ஒன்றில் குறித்த காணி உரிமையாளர் காணியில் மண்ணை அகழ்ந்தெடுக்கும் போது துப்பாக்கி ரவை பெட்டிகள் இருந்ததனை அவதானித்துள்ளார்.

அதனையடுத்து அப்பகுதியில் உள்ள கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து முல்லைத்தீவு பொலிஸார் குறித்த சம்பவ இடத்திற்கு வருகைதந்து குறித்த துப்பாக்கி ரவைகளை மீட்டெடுத்துள்ளனர்.

T-56 வகை துப்பாக்கி ரவைகள் அடங்கிய ஆறு பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 4,500 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கி ரவைகள் முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளது.

வீடியோ

வீழ்ந்து நொறுங்கிய விமானம் விமானி பலி
Posted in உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய விமானம் விமானி பலி

வீழ்ந்து நொறுங்கிய விமானம் விமானி பலி

கிரேக்க இராணுவத்தின் பயிற்சி விமானம் ஒன்று திடீரென வீழ்ந்து நொருங்கயத்தில் அதில் பயணித்த விமானி பலியாகியுள்ளார் .

41 வயதான இவர்தான் T-2E Buckeye என்ற இரட்டை எஞ்சின் பயிற்சி ஜெட் விமானத்தை செலுத்தி சென்றார் . .

கலமாதா விமானப்படை தளத்திற்கு அருகே சென்ற பொழுது இந்த விமானம் வீழ்ந்து நொறுக்கி விபத்தில் சிக்கியது .

இந்த விமான விபத்துக்கான காரணம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன என இராணுவம் அறிவித்துள்ளது .

இயந்திர கோளாறு காணமாக விமானம் விபத்தில் சிக்கி இருக்கலாம் என தெரிவிக்க படுகிறது .

வீடியோ

இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல்|கப்பல்களை தாக்குவோம் ஹவுதி எச்சரிக்கை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல்|கப்பல்களை தாக்குவோம் ஹவுதி எச்சரிக்கை


இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல்|கப்பல்களை தாக்குவோம் ஹவுதி எச்சரிக்கை

இஸ்ரேல் விமான தளம் மீது கடும் விமான வழி ஊடான தாக்குதல்
நடத்த பட்டுள்ளது .

கப்பல்களை தாக்குவோம் என ஹவுதி அன்சர் அல்லா
அமைப்பு எச்சரிக்கை விடுப்பு .

இந்த எச்சரிக்கை காரணமாக பதட்டமாகும் போர்க்களம்

வீடியோ

ஈராக் அமெரிக்கா முகாம் மீது விமானங்கள் மூலம் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஈராக் அமெரிக்கா முகாம் மீது விமானங்கள் மூலம் தாக்குதல்

ஈராக் அமெரிக்கா முகாம் மீது விமானங்கள் மூலம் தாக்குதல்

ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் எர்பில் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள,
அமெரிக்கா இராணுவ தள்மீது விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக
ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு தெரிவித்துள்ளது .

தாம் நடத்திய இந்த தாக்குதலில் அமெரிக்கா
இராணுவ படைத்தளம் பலத்த சேதங்களுக்கு
உள்ளாகியுள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர் .

ஈராக் அமெரிக்கா முகாம் மீது விமானங்கள் மூலம் தாக்குதல்

ஈராக்கில் உள்ள அணைத்து அமெரிக்கா இராணுவ தளங்கள் மீதும்
தொடராக தாக்குதலை நடத்துவோம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது .

எமது நாட்டில் இருந்து ஆக்கிரமிப்பு அமெரிக்கா இராணுவம்
விலகும் வரை எமது தாக்குதல் தொடரும் என அந்த அமைப்பினர்
அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

ஈராக்கிய பாராளுமன்றம் அமெரிக்கா படைகளை
தமது நாட்டில் இருந்து விலகுமாறு கூறிய பின்னரும்,
அமெரிக்கா தொடர்ந்து அங்கு நிலைகொண்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

வீடியோ

துரத்தி அடித்த ஹமாஸ் வீழ்ந்த தளபதிகள்|திணறும் இஸ்ரேல் இராணுவம்|ஈரான் மிரட்டல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

துரத்தி அடித்த ஹமாஸ் வீழ்ந்த தளபதிகள்|திணறும் இஸ்ரேல் இராணுவம்|ஈரான் மிரட்டல்


துரத்தி அடித்த ஹமாஸ் வீழ்ந்த தளபதிகள்|திணறும் இஸ்ரேல் இராணுவம்|ஈரான் மிரட்டல்

துரத்தி துரத்தி அடித்த ஹமாஸ் வீழ்ந்த இஸ்ரயேல் படையணியின் முக்கிய தளபதிகள்.


கடும் சமரினால் தாக்குதலில் திணறும் இஸ்ரேல் இராணுவம்,
ஈரான் யூத அரசுக்கு கடும் மிரட்டல் ,பதிலடி வழங்க படும் என சூளுரை

வீடியோ

நெதன்யாகு ஒரு ஹிட்லர் துருக்கி அதிபர் எடகோன் முழக்கம்
Posted in உலக செய்திகள்

நெதன்யாகு ஒரு ஹிட்லர் துருக்கி அதிபர் எடகோன் முழக்கம்

நெதன்யாகு ஒரு ஹிட்லர் துருக்கி அதிபர் எடகோன் முழக்கம்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அவர்கள் ஜெர்மனியின் முன்னாள்
ஹிட்லர் என அவர் தெரிவித்துள்ளார் .

பலஸ்தீன் மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் தொடர்பாக ,
காட்டமாக பேசிய அவர் தனது கோபத்தை இவ்வாறு அங்காராவில்
வைத்து வெள்காட்டியுள்ளார் .

நெதன்யாகு ஒரு ஹிட்லர் துருக்கி அதிபர் எடகோன் முழக்கம்

மேலும் பலஸ்தீஹனத்தில் உள்ள கல்வியாளர்கள் மற்றும் முக்கிய
பிரமுகர்களை தமது நாட்டில் வந்து தங்கிட அவர்களுக்கு அடைக்கலம் வழங்கி,
பாதுகாப்பு அளிக்க தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .

போர் ஆரம்பிக்க பட்ட நாள் முதல் இஸ்ரேலுக்கு எதிராக தனது எதிர்
கருத்தை முதன்மையாக வைத்து வருகிறார் .

ஹமாஸ் தீவிரவாதிகள் அல்ல போராளிகள் அமைப்பு ,தனது மக்களுக்காக
போராடுபவர்களை அவ்வாறு பேசுதல் தவறு என கூறி இந்தமை குறிப்பிட தக்கது .

வீடியோ

யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது

யாழில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது

வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கோப்பாய் கொட்டைக்காடு பகுதியில் கசிப்புடன் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தின் மூன்று திறந்த பிடியாணைகள் விடுவிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாகி இருந்தபோது குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயல்படும் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் கோப்பாய் பொலிஸாரும் இணைந்து கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

சந்தேக நபரிடம் இருந்து 15 லீற்றர் கசிப்பும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

வீடியோ

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

அடையாளம் தெரியாத 2 ஆண்களின் சடலங்கள் மீட்பு

அடையாளம் தெரியாத 2 ஆண்களின் சடலங்கள் மீட்பு

அடையாளம் தெரியாத 2 ஆண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

எரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நியூகுண விகாரைக்கு மேலே உள்ள ஏரிக்கு அருகில் நேற்று (27) காலை சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், ஆனால் அவர் 45-50 வயது மதிக்கத்தக்க, 5 அடி 5 அங்குலம் உயரம் கொண்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அடையாளம் தெரியாத 2 ஆண்களின் சடலங்கள் மீட்பு

மேலும் அவர் மேலே ஊதா நிற சட்டையும், ஆரஞ்சு மற்றும் ஊதா கலந்த சாரமும் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்மல்பொல புகையிரத கடவைக்கு அருகில் உள்ள மா ஓயாவில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிடைத்த தகவலின் அடிப்படையில் ரம்புக்கனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வீடியோ

விஜயகாந்த் உடல் நிலை பின்னடைவு
Posted in உலக செய்திகள்

விஜயகாந்த் மரணம் ரசிகர்கள் அழுகை

விஜயகாந்த் மரணம் ரசிகர்கள் அழுகை

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 26 ஆம் திகதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வழக்கமான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஓரிரு நாளைக்குள் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.இந்த நிலையில் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. விஜயகாந்தின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

விஜயகாந்த் மரணம் ரசிகர்கள் அழுகை

மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று (28) காலமானார் என்று மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

துணை ஆணையர் தீபக் தலைமையில், 50 இற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்

வீடியோ

இஸ்ரேல் டாங்கிகள் கொத்தாக அழிப்பு |ஓட ஓட எதிரியை அடித்த ஹமாஸ் வெடித்த போர்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் டாங்கிகள் கொத்தாக அழிப்பு |ஓட ஓட எதிரியை அடித்த ஹமாஸ் வெடித்த போர்


இஸ்ரேல் டாங்கிகள் கொத்தாக அழிப்பு |ஓட ஓட எதிரியை அடித்த ஹமாஸ் வெடித்த போர்

இஸ்ரேல் வடக்கு காசா பகுதி நோக்கி நகர்ந்த டாங்கிகள் கொத்தாக அழிப்பு ,
கன்யூனிஸ் பகுதியில் ஓட ஓட எதிரியை விரட்டி அடித்த ஹமாஸ் ,
வெடித்த கடும் போர்

வீடியோ

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் குடும்பங்களின் மாத வருமானம் வீழ்ச்சி

லங்கையில் குடும்பங்களின் மாத வருமானம் வீழ்ச்சி

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக 60 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்களின் மாத வருமானம் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியின் தாக்கம் தொடர்பாக நாடளாவிய ரீதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட குடும்ப கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

கணக்கெடுப்பின் படி இலங்கையில் குடும்பங்களின் மாத வருமானம் 60.5 வீதத்தால் குறைந்துள்ளதுடன், குடும்பங்களின் மாதாந்த செலவுகள் 91 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

லங்கையில் குடும்பங்களின் மாத வருமானம் வீழ்ச்சி

தற்போது 3.4 வீதமான குடும்பங்களின் வருமானம் மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், 36.6 வீதமான குடும்பங்களின் வருமானம் மாறாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வருமானம் குறைந்த குடும்பங்கள் கடன் வாங்குதல், பொருட்களை அடமானம் வைப்பது, பிறரிடம் உணவு மற்றும் பணம் கேட்பது போன்ற உண்மைகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் 22 வீதமான குடும்பங்கள் கடனினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது

வீடியோ

சடலங்கள் மீது ஏறி ஓடும் இஸ்ரேல் வாகனங்கள்
Posted in உலக செய்திகள்

சடலங்கள் மீது ஏறி ஓடும் இஸ்ரேல் வாகனங்கள்

சடலங்கள் மீது ஏறி ஓடும் இஸ்ரேல் வாகனங்கள்

பாலஸ்தீனம் தல் அல்-ஹவா பகுதியில் கைவிட பட்ட மனித சடலங்கள் மேலே
இஸ்ரேலிய இராணுவத்தின் யுத்த வாகனங்கள் ஏறி பயணிக்கின்றன .
அந்த வண்டிகள் ஊடக அவை சிதைக்க படுவதாக மக்கள் தெரிவித்துள்ளன

அல்குட்ஸ் மருத்துவமனை அதனை அண்மித்த பகுதிகளில் இறந்தவர்கள் சடலங்கள் புதைக்க பட்டுள்ளன ,அவற்றின் மீதும் இந்த வண்டிகள் ஏறி செல்கின்றன .

சடலங்கள் மீது ஏறி ஓடும் இஸ்ரேல் வாகனங்கள்

மேலும் அதே பகுதியில் கைவிடப்பட்ட மனித சடலங்கள் அழுகிய நிலையில்
காணப்படுவதாக தெரிவிக்க படுகிறது .

சுடலைகளை இடித்து அளித்து நாசம் புரிந்த இனவாத இஸ்ரேல் இராணுவம் ,இப்பொழுது இந்த வெறியாட்டம் நடத்திய வண்னம் உள்ளது குறிப்பிட தக்கது .

தொடர்ந்து எறிகணை தாக்குதலை
இஸ்ரேல் இராணுவம் நடத்தி வருவதால் கட்டிடங்கள் உடைந்து தொங்கு கின்றன

மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளன .
இவ்வாறான காணொளி காட்சிகள் சிலது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன

வீடியோ

ஈராக் அமெரிக்கா முகாம் மீது விமானங்கள் மூலம் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஈராக் அமெரிக்கா முகாம் மீது விமானங்கள் மூலம் தாக்குதல்

ஈராக் அமெரிக்கா முகாம் மீது விமானங்கள் மூலம் தாக்குதல்

ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் எர்பில் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள,
அமெரிக்கா இராணுவ தள்மீது விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு தெரிவித்துள்ளது .

தாம் நடத்திய இந்த தாக்குதலில் அமெரிக்கா
இராணுவ படைத்தளம் பலத்த சேதங்களுக்கு
உள்ளாகியுள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர் .

ஈராக் அமெரிக்கா முகாம் மீது விமானங்கள் மூலம் தாக்குதல்

ஈராக்கில் உள்ள அணைத்து அமெரிக்கா இராணுவ தளங்கள் மீதும்
தொடராக தாக்குதலை நடத்துவோம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது .

எமது நாட்டில் இருந்து ஆக்கிரமிப்பு அமெரிக்கா இராணுவம்
விலகும் வரை எமது தாக்குதல் தொடரும் என அந்த அமைப்பினர்
அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

ஈராக்கிய பாராளுமன்றம் அமெரிக்கா படைகளை
தமது நாட்டில் இருந்து விலகுமாறு கூறிய பின்னரும்,
அமெரிக்கா தொடர்ந்து அங்கு நிலைகொண்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

வீடியோ

ஜெருசலேம் கல்லறையில் கழுதை தலைகளை தொங்க விட்ட இஸ்ரேல் குடியேற்ற வாசிகள்
Posted in உலக செய்திகள்

ஜெருசலேம் கல்லறையில் கழுதை தலைகளை தொங்க விட்ட இஸ்ரேல் குடியேற்ற வாசிகள்

ஜெருசலேம் கல்லறையில் கழுதை தலைகளை தொங்க விட்ட இஸ்ரேல் குடியேற்ற வாசிகள்

பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள ,
அல்-அக்ஸா மசூதிக்கு அருகில் உள்ள ஜெருசலேம் கல்லறையில்
கழுதைத் தலையை இஸ்ரேலிய குடியேறிகள் தொங்கவிட்டு தமது எதிர்ப்பை
காண்பித்துள்ளனர் .

கழுதைத் தலைகளைத் தொங்கும் காட்சிகள் தற்போது
சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

இஸ்ரேல் நகரங்கள் மீது நடத்த படும் ஹமாஸ் அமைப்பின்
தாக்குதல் இழப்பின் எதிரொலியாக இந்த சம்பவங்கள் காணப்படுவதாக
தெரிவிக்க பட்டுள்ளது .

ஜெருசலேம் கல்லறையில் கழுதை தலைகளை தொங்க விட்ட இஸ்ரேல் குடியேற்ற வாசிகள்

மேற்படி இஸ்ரேலிய குடியேற்ற வாசிகளின் இந்த செயலானது
மிக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .


இவ்வாறான செயல்பாட்டின் ஊடக அவர்கள் எதனை
கூற முற்படுகின்றனர் என்பது தொடர்பாக மக்கள் மத்தியில்
பலதரப்பட்ட வாறு பேச படுகிறது

இஸ்ரேல் குடியேற்றங்கள் ஏவுகணையால் அழிப்பு |ஹிஸ்புல்லா தாக்குதல் |எரிந்த வீடுகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் குடியேற்றங்கள் ஏவுகணையால் அழிப்பு |ஹிஸ்புல்லா தாக்குதல் |எரிந்த வீடுகள்


இஸ்ரேல் குடியேற்றங்கள் ஏவுகணையால் அழிப்பு |ஹிஸ்புல்லா தாக்குதல் |எரிந்த வீடுகள்

இஸ்ரேல் லெபனான் எல்லையோரமாக உள்ள இஸ்ரேல் குடியேற்றவாசிகள்
வசிக்கும் பகுதி ரோஷ் ஹனிக்ரா மற்றும் கிரியாத் ஷ்மோனா நகரங்கள் மீது ஹிஸ்புல்லாஏவுகணை தாக்குதல் .

இந்த தாக்குதலில் மக்கள் வீடுகள் வாகனங்கள் என்பன தீயில் எரிந்து அழிவு

வீடியோ

கரையொதுங்கிய மிதக்கும் ரதம்
Posted in இலங்கை செய்திகள்

கரையொதுங்கிய மிதக்கும் ரதம்

கரையொதுங்கிய மிதக்கும் ரதம்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் நேற்று படகில் அலங்கரிக்கப்பட்ட இரதம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

இது வெளிநாட்டில் சமய சம்பிரதாய நிகழ்வுகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைப்படும் இரதம் என தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் இது எவ்வாறு வந்தது, இது உண்மையிலேயே என்ன விடயத்திற்காக பயன்படுத்தப்பட்டது என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

வீடியோ