மேம்பாலம் அடியில் சிக்கிய விமானம்
மேம்பாலம் அடியில் சிக்கிய விமானம்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து அசாமிற்கு கொண்டு செல்லப்பட்ட விமானம் ஒன்று பீகாரில் உள்ள மேம்பாலம் அடியில் வௌ்ளிக்கிழமை (29) சிக்கிக் கொண்டுள்ளது.
ஏற்கனவே விபத்து ஒன்றில் சிக்கி சேதமான இந்த விமானம் அசாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, பீகார் மாநிலம் மோத்திஹரி பகுதியில் உள்ள பிப்ரகோதி என்கிற மேம்பாலத்தின் அடியில் விமானம் சிக்கிக் கொண்டது.
இதனால், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிறகு, லொறி ஓட்டுனர்கள் மற்றும் பொது மக்களின் உதவியுடன் பெரும் போராட்டத்திற்கு பிறகு விமானம் வெளியில் எடுக்கப்பட்டது.
கப்பல்களை துரத்தி தாக்கிய ஹவுதிகள்|செங்கடலில் அமெரிக்கா ஹவுதி மோதல்
கப்பல்களை துரத்தி தாக்கிய ஹவுதிகள்|செங்கடலில் அமெரிக்கா ஹவுதி மோதல்
கப்பல்களை துரத்தி தாக்கிய ஹவுதிகள்,
செங்கடலில் அமெரிக்கா ஹவுதி படைகளுக்கு இடையில் வெடித்த மோதல் ,
முடக்க படும் போக்குவரத்து , நெருக்கடியில் சிக்கியுள்ள இஸ்ரேல்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
இஸ்ரேல் இரு தளபதிகள் அவுட் |ஈரான் களத்தில் இறக்கிய புதிய விமானம்
இஸ்ரேல் இரு தளபதிகள் அவுட் |ஈரான் களத்தில் இறக்கிய புதிய விமானம்
இஸ்ரேல் இரு தளபதிகள் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் அவுட் |
தொடரும் கடும் சமரில் பல தளபதிகள் வீழ்ச்சி,
பெரும் இழப்பு ஈரான் களத்தில் இறக்கிய புதிய விமானம் ,
தாக்குதல் நடத்த ஈரான் ,திட்டம்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி பலி
துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி பலி
மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சோதனை நடவடிக்கையின் போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
வெலிகம – பெலேன பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று (31) அதிகாலை துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், துப்பாக்கிச் சூடு நடத்திய வேனை வெலிகம பொலிஸார் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதன்போது இடம்பெற்ற பதில் துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன
- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்
கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
கொழும்பில் இன்று (31) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு இன்று கொழும்பு நகரில் ஏற்படக்கூடிய வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாலை 5 மணி
முதல் இந்த போக்குவரத்து திட்டம் காலிமுகத்திடல் உள்ளிட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன
- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்
செங்கடலை விட்டு 2 அமெரிக்கா போர் கப்பல்கள் ஓட்டம்|ஹமாஸ் இஸ்ரேல் கடும் மோதல்
செங்கடலை விட்டு 2 அமெரிக்கா போர் கப்பல்கள் ஓட்டம்|ஹமாஸ் இஸ்ரேல் கடும் மோதல்
செங்கடலை விட்டு 2 அமெரிக்கா போர் கப்பல்கள் தப்பி ஓட்டம் ,தம்பியை கைவிட்டு அண்ணன் ஓடியது .எதற்கு .?
ஹமாஸ் இஸ்ரேல்
இராணுவம் வடக்கு காசா பகுதியில் கடும் மோதல் ,உக்கிர மோதல் ,
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
காசாவில் 300 க்கு மேற்பட்ட மக்கள் இல்லாது அழிப்பு
காசாவில் 300 க்கு மேற்பட்ட மக்கள் இல்லாது அழிப்பு
காசாவில் கடந்த 48 மணித்தியாலத்தில் இடம்பெற்ற இஸ்ரேல் இராணுவ தாக்குதலில் சிக்கி 300 பேர் பலியாகியுள்ளனர் .
கடுமையான இஸ்ரேலிய டாங்கி மற்றும் வான்வழி குண்டுவீச்சு அகோரமாக
காசா பகுதியின் கான் யூனிஸ் மீது நடத்த பட்டத்து .
காசாவில் 300 க்கு மேற்பட்ட மக்கள் இல்லாது அழிப்பு
இதன் போதே அப்பாவி பொதுக்கள் 300 பேர் 48 மணித்தியால இடைவெளியில் பலியாகியுள்ளனர்
இந்த தாக்குதலை அடுத்து சீற்றம் கொண்ட ஹமாஸ் போராட்ட
காரர்களும் பதிலடி தாக்குதல்களை ஆரம்பித்தனர் .
இந்த எதிர் தாக்குதலில் இஸ்ரேலிய படைகளுக்கு பலத்த இழப்பு
ஏற்படுத்த பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது .
கோர விபத்தில் 9 பேர் படுகாயம்
கோர விபத்தில் 9 பேர் படுகாயம்
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தல் பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 09 பேர் காயமடைந்துள்ளனர்.
புத்தளம் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற காரும், நீர்கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கிப் பயணம் செய்த மற்றுமொரு காரும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் இரு கார்களிலும் பயணித்த மூன்று சிறுவர்கள் உட்பட 09 பேர் காயமடைந்த நிலையில் முந்தல் மாவட்ட வைத்தியசாலையில்
கோர விபத்தில் 9 பேர் படுகாயம்
அனுமதிக்கப்பட்டதுடன், அதில் எட்டு பேர் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன
- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்
நீயே உனக்கு துணை
நீயே உனக்கு துணை
உள்ளம் வலிக்கும் போதினில
உன்னை செதுக்கி விடு
உதாசீனம் செய்யும் போதினில
ஊமையாய் இருந்து விடு
காலம் மலரும் போதினில
கபடங்கள் உடைத்து விடு
கபடம் இல்லா கண்ணியத்தை
கரை ஏற்றி வைத்து விடு
தோல்விகள் சூடும் வேளையில
சோரா இருந்து விடு
தவறை திருத்தி எழுந்திடும்
தகைமைகள் வளர்த்து விடு
பக்குவம் தேறும் பண்பயிலை
பகைமையிலும் காட்டி விடு
கடின மொழியை எறிந்தே
காதலை வளர்த்து விடு
உன்னை மட்டும் நம்பியே
உலகை பார்த்து விடு
உயிர் உள்ளவரை உனக்கு நீயே
உரிமம் புரிந்து விடு
வலிகள் தாங்கி எழுந்தால் தான்
வாழ்வு சீராகும்
வையம் ஆண்டிட இந்த
வலிகளே துணையாகும் .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-12-2023
இந்திய உயர்ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு
இந்திய உயர்ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு
பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றது.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் உத்தேச கூட்டுத் திட்டங்களை விரைவுப்படுத்துவதற்கான வழி வகைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் சூரியசக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் உள்ளிட்ட எரிசக்தி துறையில் இந்திய முதலீடுகளை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள், திருகோணமலை எண்ணெய் தாங்கிகள், துறைமுகம், ரயில் பாதைகள்
தொடர்பான கூட்டுத் திட்டங்கள் மற்றும் விவசாயம் மற்றும் கடற்றொழில் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பிலும் அதிகம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன
- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்
போலி மின்சாரசபை ஊழியர்களால் பதற்றம்
போலி மின்சாரசபை ஊழியர்களால் பதற்றம்
முல்லைத்தீவு – உடுப்புக்குளம் தூண்டாய் கிராமத்தில் மின்சார சபையின் மின் இணைப்பை துண்டிப்பவர்கள் என தங்களை அறிமுகம் செய்த நபர்கள் பல மக்களின் வீடுகளுக்கு சென்று மின்சாரத்தினை துண்டிக்கப்போவதாக தெரிவித்து ஒருதொகை பணத்தினை அபகரித்துச் சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த கிராமத்திற்கு கடந்த 27ஆம் திகதி சென்ற இருவர் மின்சார கட்டணம் செலுத்தாத மக்களின் வீடுகளுக்கு சென்று மின்சாரத்தினை துண்டிக்கப்போவதாக கூறியுள்ளார்கள் இந்த நிலையில் வீட்டில் இருந்த பெண்கள் மின்சாரத்தினை வெட்டாதேங்கோ என்று சொல்லியுள்ளார்கள்.
இல்லாவிடின் கட்டும் பணத்தில் ஒருதொகுதியினை தாருங்கள் நாங்கள் செல்கின்றோம் என கேட்டுள்ளார்கள்.
இந்த நிலையில் பல குடும்பங்கள் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பணத்தினை கொடுத்துள்ளார்கள்
போலி மின்சாரசபை ஊழியர்களால் பதற்றம்
இதையடுத்து, 28ஆம் திகதி மின்சார பட்டியல் கொடுக்கும் நபர் வீடுகளுக்கு வந்து மின்சார பட்டியலை கொடுத்துள்ளார். இதன் போது சம்பவத்தினை மக்கள் தெரியப்படுத்தியுள்ளார்கள்.
இதையடுத்து தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாக உணர்ந்த மக்கள் முல்லைத்தீவில் உள்ள மின்சார சபையிடம் வந்து முறையிட்டுள்ளார்கள். அவர்கள் ஒன்றும்
செய்யமுடியாது என்று தெரிவித்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பெயர் விபரங்கள், மின்கட்டண விபரங்கள் எல்லாம் எவ்வாறு அவர்களுக்கு தெரியும் என்ற கேள்வியினை எழுப்பியுள்ளார்கள்.
மின்சார சபை நடவடிக்கை எடுக்கமுடியாத நிலையில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளார்கள்.
இந்த சம்பவம் தொடர்பில் மின்சார பட்டியல் வழங்குபவர் ஒருவரை கேட்டபோது தற்போது மின்சாரம் துண்டிப்பு என்பது நிறுத்தப்பட்டுள்ளது.
உயர்தர பரீட்சை காரணமாக மின்சார நிலுவையினை செலுத்தாவர்களின் வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தூண்டாய் கிராமத்தில் சுமார் பத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன
- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்
இஸ்ரேலுக்கு பீரங்கி குண்டுகளை வழங்கும் அமெரிக்கா
இஸ்ரேலுக்கு பீரங்கி குண்டுகளை வழங்கும் அமெரிக்கா
இஸ்ரேல் கசாமீது தாக்குதல் நடத்துவதற்கு தற்போது M107 155mm பீரங்கி குண்டுகளை அவசரமாக வழங்கும் படி கோரிக்கை விடுக்க பட்டுள்ளது .
இதற்கான கோரிக்கையினை அமெரிக்கா வெளியுறவு மந்திரி வேண்டுதல் விடுத்துள்ளார் .
இவரே தற்போது தரகர் வேல பார்த்து வரும் நபராக விளங்குகிறார் .
அப்பாவி காசா மக்கள் மீது குண்டுகளை வீசி அந்த மக்களை கொலை செய்திட ஆயுதங்கள் வழங்குவது தற்போது அமெரிக்கா என்பது மீளவும் உறுதியாகி விட்டது .
ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் 30 பேர் பலி 160 பேர் காயம்
ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் 30 பேர் பலி 160 பேர் காயம்
ரஷ்யா உக்ரைன் மீது நடத்திய தாக்குதலில் 30 பேர் பலியாகியும் 160 பேர் காயமடைந்தனர் .
காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
ரஸ்யாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி இரு கப்பல்கள் மற்றும் ,அறுபது தற்கொலை தாக்குதல் விமானங்கள் மூலம் தாக்குத்லை நடத்தியதை அடுத்து இந்த பதிலடி தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது குறிப்பிட தக்கது .
மெஸ்சிகோஸில் தாக்குதல் 6 பேர் பலி 26 பேர் காயம்
மெஸ்சிகோஸில் தாக்குதல் 6 பேர் பலி 26 பேர் காயம்
மெஸ்சிகோஸில் ஆயுத குழு ஒன்று நிகள்வு மண்டபம் ஒன்றுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 6 பேர் பலியாகியும் 26 பேர் காயமடைந்துள்ளனர் .
இந்த சம்பவமானது மெஸ்சிக்கோ Sonora,பகுதியில் இடம்பெற்றுள்ளது .
காயமடைந்தவர்கள் மடக்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
இவர்களில் 13 பேர் வீடுகளுக்கு சென்றுள்ளனர் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
தாக்குதலை நடத்திய ஆயுத குழுவை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இஸ்ரேலுக்குள் ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேலுக்குள் ஏவுகணை தாக்குதல்
லெபனான் எல்லையோர கலிலி பகுதியை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா அமைப்பினர் கடும் ஏவுகணை தாக்குதலை நடத்தினர் .
இந்த தாக்குதலில் அந்த பகுதியில் உள்ள இஸ்ரேலிய இராணுவ முகாம்கள் மற்றும் ஆக்கிரமிப்பு மக்கள் குடியேற்றங்கள் என்பன பலத்த இழப்பை சந்தித்துள்ளதாக தாக்குதலை நடத்தியவர்கள் தெரிவித்துள்ளனர் .
எனினும் இஸ்ரேல் இராணுவ தரப்பில் இருந்து தமது இழப்பு தொடர்பாக தெரிவிக்க படவில்லை .
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் 11 தளபதிகள் பலி அமெரிக்கா கப்பல் மீது தாக்குதல்
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் 11 தளபதிகள் பலி அமெரிக்கா கப்பல் மீது தாக்குதல்
இஸ்ரேல் விமான தாக்குதலில் 11 ஈரான் இராணுவ
தளபதிகள் பலி ,மொசாட் நடத்திய அகோர தாக்குதல் .
அமெரிக்கா போர் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
வடக்கு சுமத்ரா தீவுகளை அண்மித்து பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலநடுக்கம் 6.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
எனினும், நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு பாதிப்பு இல்லை என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவிக்கின்றது.
இதேவேளை, நேற்றைய தினமும் இந்திய பெருங்கடலில் இரண்டு தடவைகள் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலுக்கு மரண அடி எரியும் இஸ்ரேல் டாங்கிகள்|ICC நீதிமன்றில் இஸ்ரேல்
இஸ்ரேலுக்கு மரண அடி எரியும் இஸ்ரேல் டாங்கிகள்|ICC நீதிமன்றில் இஸ்ரேல்
இஸ்ரேலுக்கு மரண அடி எரியும் இஸ்ரேல் டாங்கிகள்,
உள்ளே விட்டு தாக்கிய ஹமாஸ் படைகள் ,
ICC சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல் ஆப்ரிக்கா அதிரடி நடவடிக்கை
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
பதில் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக 4 மனுக்கள்
பதில் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக 4 மனுக்கள்
தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக செயற்படுவதைத் தடுத்தும், அவர் பொலிஸ் மா அதிபராகப் பதவியேற்பதைத் தடுக்கும் உத்தரவைக் கோரியும் 04 அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித், உண்மை மற்றும் நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பு, ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மூவர் மற்றும் போராட்டக்காரர் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், அரசியலமைப்புச் சபை மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் போது மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த தேசபந்து தென்னகோன் தனது கடமைகளை மீறியிருந்ததாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பதில் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக 4 மனுக்கள்
அத்துடன், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் செயற்பட்ட காலத்தில், காலி முகத்திடலில் தங்கியிருந்த போராட்டக்காரர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதையும் இந்த மனுக்கள் சுட்டிக் காட்டுகின்றன.
இதனால், நாட்டின் சட்டத்தை அமல்படுத்தும் நாட்டின் முக்கிய துறையை கையாளும் பொறுப்பு, மனித நேயமுள்ள ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்கு முரணாக செயற்பட்ட ஒருவருக்கு இந்த பொறுப்பை வழங்குவது தமது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன
- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்
முகநூல் ஊடாக மோசடி இருவர் கைது
முகநூல் ஊடாக மோசடி இருவர் கைது
முகநூலில் பெண் போல பேசி ஏமாற்றி நபரொருவரிடம் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் நெல்லியடி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் யாழ்ப்பாணம் – நெல்லியடியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
திருகோணமலையைச் சேர்ந்த ஒருவருக்கு நெல்லியடியைச் சேர்ந்த ஒருவர் பெண் போல பழகி காதல் வலையில் வீழ்த்தி நெல்லியடிக்கு வரவழைத்துள்ளார்.
இதனை நம்பி நெல்லியடிக்கு வந்த திருகோணமலை வாசியை கத்தி முனையில் அச்சுறுத்தி பணம் உடைமைகள் என்பன இருவரால் கொள்ளையடிக்கப்பட்டது.
முகநூல் ஊடாக மோசடி இருவர் கைது
சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்தார்.
விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் இருவரை கைது செய்ததுடன் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட பணம் உடமைகளையும் மீட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்ற நிலையில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன
- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்






























































