பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

விடுதியில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு

விடுதியில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு

மஹரகம ரயில் நிலைய வீதியிலுள்ள விடுதி ஒன்றில் விஷம் அருந்தி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞன் ஒருவரின் சடலம் இன்று (03) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 34 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நபர் நேற்று (02) மதியம் 1.30 மணியளவில் இந்த விடுதிக்கு வந்து, மாலை 6 மணியளவில் அந்த இடத்தை விட்டு வெளியேறுவதாக விடுதி நிர்வாகத்துக்கு தெரிவித்துள்ளார்.

ஆனால், அவர் வெளியே வராததால் சந்தேகம் ஏற்பட்டு அறையை ஆய்வு செய்தபோது, ​​சம்பந்தப்பட்ட இளைஞன் படுக்கையில் கிடப்பதைப் பார்த்து ஊழியர் ஒருவர் இது குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

விடுதியில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு

அதன்படி, மஹரகம பொலிஸ் மற்றும் நுகேகொட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் வந்து சோதனையிட்ட போது, ​​ஹோமாகம பகுதியில் விஷம் அருந்தி உயிரிழந்த நபரின் இறுதிச் சடங்குக்கு இந்த நபர் வந்திருந்தமை தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இளைஞன் மேற்கூறிய நபரை பின்பற்றுபவர் என்பதும் அவரது பிரசங்கங்களில் கலந்து கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இறந்த இடத்தில் விஷம் அடங்கிய பை, தண்ணீர் போத்தல் மற்றும் இரண்டு அலைபேசிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மஹரகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

தொலைக்காட்சி சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

தொலைக்காட்சி சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு

தொலைக்காட்சி சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு

VAT வரி அதிகரிப்புடன், தொலைபேசி, இணையம் மற்றும் தொலைக்காட்சி சேவைக் கட்டணங்கள் 3% அதிகரித்துள்ளது.

அதன்படி, 38.4% ஆக இருந்த தொலைபேசி சேவைகளின் மொத்த வரி சதவீதம் 42% ஆக இருக்கும் என்று தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் கூறுகின்றனர். இணைய சேவைக் கட்டணங்களுக்கான புதிய VAT

திருத்தத்திற்குப் பிறகு 20.3 முதல் 23.5 வரை இருக்கும் என்றும், இந்த வரிகளில் ஓய்வு வரி மற்றும் சமூகப் பாதுகாப்பு வரி ஆகியவை அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

VAT அதிகரிப்பால் உயிரிழப்புகள் ஏற்படலாம் எதிர்க்கட்சித் தலைவர்

VAT அதிகரிப்பால் உயிரிழப்புகள் ஏற்படலாம் எதிர்க்கட்சித் தலைவர்

புதிதாக அமுல்படுத்தப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி (VAT) மக்களின் துயரத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்றும், இதனால் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாததன் காரணமாக குடும்பங்களில் தற்கொலை சம்பவங்கள் பதிவாகி வருவதாக பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசாங்கம் மக்களின் அவலத்தை மேலும் கூட்டி வருவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய VAT வரியை அமுல்படுத்துவது அத்தகைய நடவடிக்கையாகும் என்றார்.

VAT அதிகரிப்பால் உயிரிழப்புகள் ஏற்படலாம் எதிர்க்கட்சித் தலைவர்

அரசாங்க வருமானத்தை அதிகரிப்பது என்பது VAT வரியை அதிகரிப்பது மாத்திரம் அல்ல என சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாச, நாட்டிலிருந்து திருடப்பட்ட பணத்தை மீளப்பெறும் கட்டமைப்பை ஏற்படுத்துவதே மற்றுமொரு வழியாகும் எனவும் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் திருடர்களை நம்பி ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை பெற்றுக் கொண்டமையினால் இதனைச் செய்ய முடியாதுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

திருடர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக அவர்களைப் பாதுகாப்பதற்காகவே தற்போதைய அரசாங்கம் செயற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

கம்பஹாவிலுள்ள பாடசாலையொன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை 02) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார்.

வீடியோ

ஹிஸ்புல்லா ஹமாஸ் தாக்குதல் அச்சம் பதட்டத்தில் இஸ்ரேல்
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் ,ஹிஸ்புல்லா ஹமாஸ் தாக்குதல் அச்சம் காரணமாக பதட்டத்தில் இஸ்ரேல் இராணுவம் உறைவு .


உறைவு ,இஸ்ரேலில் எந்த குறிவைக்க படுகிறது .
ஏவுகணைகளை தடுத்து பேரழிவை தடுக்குமா இஸ்ரேல் .

வீடியோ

யானை தாக்கி ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

யானை தாக்கி ஒருவர் படுகாயம்

யானை தாக்கி ஒருவர் படுகாயம்

வாகனேரி பகுதியில் வைத்து புதன்கிழமை (03) யானை தாக்கியதில் நபரொருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓட்டமாவடி – மீராவோடை நூராணியா வீதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஆப்தீன் எனும் மீன் வியாபாரி வியாபாரத்துக்கு செல்லும் போதே இவ்வாறு யானை தாக்கி படுகாயமடைந்துள்ளார்.

யானை தாக்குதலுக்குள்ளான நபர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

வீடியோ

ஹமாஸ் அரசியல் தளபதி மரணம் |எரியும் இஸ்ரேல் டாங்கிகள் படைகள் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் அரசியல் தளபதி மரணம் |எரியும் இஸ்ரேல் டாங்கிகள் படைகள் காயம்


ஹமாஸ் அரசியல் தளபதி மரணம் |எரியும் இஸ்ரேல் டாங்கிகள் படைகள் காயம்

ஹமாஸ் அரசியல் துணை தளபதி இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில்
சக தளபதிகளுடன் மரணம்.


பதட்டத்தில் உலகம் ,எரியும் இஸ்ரேல் இராணுவத்தின் டாங்கிகள்,பல படைகள் காயம்

இஸ்ரேல் விமானத்தை கைப்பற்றிய ஹமாஸ்|71 போர் வாகனங்கள் அழிப்பு|33 மொசாட் கைது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமானத்தை கைப்பற்றிய ஹமாஸ்|71 போர் வாகனங்கள் அழிப்பு|33 மொசாட் கைது

இஸ்ரேல் விமானத்தை கைப்பற்றிய ஹமாஸ்|71 போர் வாகனங்கள் அழிப்பு|33 மொசாட் கைது

இஸ்ரேல் விமானத்தை கைப்பற்றிய ஹமாஸ் அமைப்பினர் ,
போர்க்களத்தில் நடந்த திடீர் திருப்பம் .

71 இஸ்ரேலிய போர் வாகனங்கள் அழிப்பு,
பெரும் தாக்குதல் நடத்த முற்பட்ட 33 மொசாட் கைது.

video

காசாவை விட்டு இஸ்ரேல் ஆமி ஓட்டம்|ஓட அடிக்கும் ஹமாஸ்|இஸ்ரேலை கைவிட்ட அமெரிக்கா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

காசாவை விட்டு இஸ்ரேல் ஆமி ஓட்டம்|ஓட அடிக்கும் ஹமாஸ்|இஸ்ரேலை கைவிட்ட அமெரிக்கா


காசாவை விட்டு இஸ்ரேல் ஆமி ஓட்டம்|ஓட அடிக்கும் ஹமாஸ்|இஸ்ரேலை கைவிட்ட அமெரிக்கா

காசாவை விட்டு இஸ்ரேல் ஆமி ஓட்டம்,
ஓட ஓட அடிக்கும் ஹமாஸ்,இஸ்ரேலை கைவிட்ட அமெரிக்கா,தவிக்கும் தம்பி

வீடியோ

14000 வீடுகளுக்கு இலவச சூரிய ஔி மின்சாரம்
Posted in இலங்கை செய்திகள்

நடுத்தர வருமானமுள்ள மக்களுக்கு 3500 வீடுகள்

நடுத்தர வருமானமுள்ள மக்களுக்கு 3500 வீடுகள்

இந்த வருடம் 2024இல் கொழும்பை அண்மித்த பகுதிகளில் 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இவற்றில் கிட்டத்தட்ட 6,500 வீடுகள் கொழும்பில் வாழும் குறைந்த வருமானம் பெறும் மக்களை மீள்குடியேற்றுவதற்காக கட்டப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்காக 11 வீட்டுத்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் 06 வீடமைப்புத் திட்டங்கள் சீன அரசாங்கத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்காக 552 மில்லியன் சீன யுவான் (இலங்கை மதிப்பில் 22 பில்லியன் ரூபாய்) உதவியாகப் பெறப்படும்.

கட்டப்படும் வீடுகளின் எண்ணிக்கை 1996 ஆகும். இதன் நிர்மாணப் பணிகள் வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

எஞ்சிய 4,500 வீடுகள் அப்பிள் வத்த கொழம்பகே மாவத்தை, பெர்கியூசன் வீதி, ஸ்டேடியம் கம, ஒபேசேகரபுர மற்றும் மாதம்பிட்டிய ஆகிய இடங்களில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை 15,728 மில்லியன் ரூபாவாகும். இந்த திட்டம் கொழும்பு நகர மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

நடுத்தர வருமானமுள்ள மக்களுக்கு 3500 வீடுகள்

2010 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 50,000 குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட நகர மறுமலர்ச்சித் திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக இந்த உதவித் திட்டம் 2019 இல் ஆரம்பிக்கப்பட்டது.

இது ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) நிதியுதவியின் கீழ் செயல்படுகிறது. கொழும்பு நகர மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் இதுவரை நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களின் எண்ணிக்கை 23 ஆகும். வீடுகளின் எண்ணிக்கை 14,611 ஆகும். 11,269 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளன.

இதனால் கொழும்பு நகரின் 116 ஏக்கர் மீள் அபிவிருத்திக்காக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கிடைத்துள்ளது.

அதற்கான புதிய முதலீட்டு திட்டங்கள் கண்டறியப்பட்டு வருவதாக அமைச்சர் பிரசன்ன தெரிவித்தார். மேலும் 3,500 வீடுகள் நடுத்தர வருமான வீட்டுத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும்.

நடுத்தர வருமானம் பெறும் மக்களுக்காக கட்டப்படும் இந்த வீட்டுத் திட்டங்களின் எண்ணிக்கை 11 ஆகும்.

இந்த 11 வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அவற்றில் சில தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

அந்த நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் இந்த ஆண்டில் தொடங்கப்பட்டு முடிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இலங்கையில் சாராயம் சிகரெட் விலை ஏற்றம் குடி மகன்கள் அவதி
Posted in இலங்கை செய்திகள்

சாராய மதுபானங்களின் விலை அதிகரிப்பு

சாராய மதுபானங்களின் விலை அதிகரிப்பு

அதிவிசேஷ சாராயம் மற்றும் தென்னஞ் சாராயம் ஆகிய மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஒரு போத்தல் அதிவிசேஷ மற்றும் தென்னஞ் சாராயம் 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கலால் வரி மற்றும் வற் வரி அதிகரிப்பிற்கு அமைய இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக Distilleries Company of Sri Lanka PLC தெரிவித்துள்ளது.

வீடியோ

வற் வரியால் பாதிக்கப்படும் மக்கள் இவர்கள்தான்
Posted in இலங்கை செய்திகள்

வற் வரியால் பாதிக்கப்படும் மக்கள் இவர்கள்தான்

வற் வரியால் பாதிக்கப்படும் மக்கள் இவர்கள்தான்

புதிய வற் வரி திருத்தமானது கிராமப்புற மக்களை விட நகர்ப்புற மக்களையே அதிகம் பாதிக்கும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

இந்த வற் வரி திருத்தம் நகர்ப்புறங்களில் வசிக்கும் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் என அவர் தெரிவித்தார்.

“வற் வரியால், நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன.
எரிபொருள் விலை உயர்ந்துள்ளது.
அதேபோல், எரிவாயு விலையும் உயர்ந்துள்ளது.

வற் வரியால் பாதிக்கப்படும் மக்கள் இவர்கள்தான்


அதன்படி, போக்குவரத்து துறையில் விலை உயரக்கூடும்.
அதே சமயம், பேக்கரி பொருட்கள் உட்பட ஏராளமான பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயர்ந்துள்ளன என்பது தெளிவாகிறது.


இது இந்நாட்டின் கிராமப்புற மக்களை விட நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரையும் ஏழை மக்களையும் அதிகம் பாதிக்கலாம்.


நகர்ப்புறங்களில் உள்ள நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இந்த பொருட்கள் மற்றும் சேவைகளின் அதிகரிப்பை தாங்க முடியாத சூழலுக்கு வழிவகுக்கும்” என்றார்.

இதேவேளை, வற் வரி திருத்தத்துடன், இந்த ஆண்டு ஒவ்வொரு குடும்பமும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு மாதாந்தம் 32,000 ரூபா வரி செலுத்த வேண்டியுள்ளதாக முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார்.

நாட்டை கட்டியெழுப்புவதற்கு தற்போதைய முறைமை ஏற்றதல்ல என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வீடியோ

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

நாடளாவிய ரீதியில் யுக்திய பொலிஸ் நடவடிக்கை 822 பேர் கைது

நாடளாவிய ரீதியில் யுக்திய பொலிஸ் நடவடிக்கை 822 பேர் கைது

நாடளாவிய ரீதியில் ‘யுக்திய’ பொலிஸ் நடவடிக்கையின் கீழ் நேற்று (01) முதல் இன்று (02) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 822 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, ​​273 கிராம் ஹெரோயின், 111 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 426 போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் மீது கத்திகுத்து
Posted in உலக செய்திகள்

தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் மீது கத்திகுத்து

தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் மீது கத்திகுத்து

தென்கொரியாவின் எதிர்க்கட்சி தலைவரான லீ ஜே-மியுங்கை மர்ம நபர் திடீரென கழுத்தில் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயக கட்சியின் தலைவரும், தென்கொரியாவின் எதிர்க்கட்சி தலைவருமான லீ ஜே-மியுங் தெற்கு துறைமுக நகரமான புசன் சென்றுள்ளார். அங்குள்ள விமான நிலையத்தை சுற்றி பார்க்கும்போது மர்ப நபரால் தாக்கப்பட்டுள்ளார்.

மர்ப நபர் லீ ஜே – மியுங்கிடம் ஆட்டோகிராஃப் வாங்குவதுபோல் அருகில் வந்துள்ளார். அருகில் வந்ததும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லீயின் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் லீ ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.

அருகில் இருந்தவர்கள் இரத்தம் வெளியேறாமல் இருக்க தங்களது கைக்குட்டைகளால் அழுத்தி பிடித்துள்ளனர். உடனடியாக சிகிச்சைக்கான வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் மீது கத்திகுத்து

இந்த சம்பவம் தென்கொரியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட மர்ம நபர் சம்பவ இடத்திலேயே பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்கொரியால் துப்பாக்கிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றவகை ஆயுதங்களால் அரசியல் வன்முறை நிகழ்ந்து வருகின்றன.

வீடியோ

புத்தாண்டில் இஸ்ரேல் தளபதியை போட்ட ஹமாஸ் |ஒரே தடவையில் கொத்தாக பலர் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

புத்தாண்டில் இஸ்ரேல் தளபதியை போட்ட ஹமாஸ் |ஒரே தடவையில் கொத்தாக பலர் காயம்

புத்தாண்டில் இஸ்ரேல் தளபதியை போட்ட ஹமாஸ் |ஒரே தடவையில் கொத்தாக பலர் காயம்

புத்தாண்டில் இஸ்ரேல் தளபதியை போட்ட ஹமாஸ் , ஒரே தாவையில் கொத்தாக பலர் காயம் , புது வருடத்தில் இஸ்ரேல் காசா போர் அரங்கில் நடத்த நேருக்கு நேர் மோதல் ,

வீடியோ

ஹமாஸ் அடியில் பட்டாலியன் இஸ்ரேல் படை காயம்|வரலாறு காணத பேரிழப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் அடியில் பட்டாலியன் இஸ்ரேல் படை காயம்|வரலாறு காணத பேரிழப்பு


ஹமாஸ் அடியில் பட்டாலியன் இஸ்ரேல் படை காயம்|வரலாறு காணத பேரிழப்பு

ஹமாஸ் நடத்திய அடியில் இஸ்ரேலிய இராணுவத்தின்
ஒரு பட்டாலியன் படை காயம்,இஸ்ரேல் வரலாறு காணத பேரிழப்பு


பின்னடைவு ,முடக்க பட்ட பலம் வாய்ந்த இராணுவம் , அடுத்து என்ன
நடக்கும் பீதியில் படைகள்

வீடியோ

இஸ்ரேல் போர் குற்றங்களை காசா மக்களிடம் கோரும் லண்டன் பொலிஸ்
Posted in உலக செய்திகள்

காசா இஸ்ரேலின் ஒரு பகுதி இஸ்ரேல்

காசா இஸ்ரேலின் ஒரு பகுதி இஸ்ரேல்

பாலஸ்தீனம் காசா பகுதி தமது நாட்டின் ஒரு பகுதி என
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் முழங்கியுள்ளார் .

விரைவில் அந்த பகுதியில் இஸ்ரேலிய மக்கள் குடியேற்ற படுவார்கள் என தெரிவித்துள்ளார் .

இஸ்ரேல் ஆளும் அரசின் இந்த இனவெறி பேச்சு பலஸ்தீன மக்கள் மற்றும்
போராட்ட காரர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது .

இதனால் தற்போது இஸ்ரேல் தாக்குதலை நடத்திட அவர்கள்
தயாராகிவருவதை சில அசைவுகள் காண்பிக்கின்றன .

பேரழிவை சந்தித்து வரலாற்று தோல்வியில் இஸ்ரேல் உள்ள
பொழுதும் தனது இனவாதத்தை கக்கிய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

வீடியோ

லெபனான் எல்லையில் கடும் மோதல் இஸ்ரேல் குடியிருப்பு அழிப்பு
Posted in உலக செய்திகள்

லெபனான் எல்லையில் கடும் மோதல் இஸ்ரேல் குடியிருப்பு அழிப்பு

லெபனான் எல்லையில் கடும் மோதல் இஸ்ரேல் குடியிருப்பு அழிப்பு

லெபனான் எல்லையோரமாக உள்ள இஸ்ரேல் இராணுவத்தினருக்கும்
லெபனான் போராட்ட காரர்களுக்கு இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

கடந்த தின தாக்குதலில் ஆக்கிரமிக்க பட இஸ்ரேலிய
எல்லையோர பகுதிகள் பலமாக பாதிக்க பட்டுள்ளன .

லெபனான் எல்லையில் கடும் மோதல் இஸ்ரேல் குடியிருப்பு அழிப்பு

டசினுக்கு மேற்பட்ட ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்ததில் ,மக்கள் வீடுகள் அழிக்க பட்டுள்ளன .

அதே போல அவர்களது வாகனங்கள் சேதமாக்க பட்டுள்ளன .
இதனால் இஸ்ரேலிய மக்கள் ஆளும் அரசு மீது அதீத கோபத்தில் உறைந்துள்ளனர்

வீடியோ

அடித்து முடக்கிய ஹமாஸ் டாங்கிகள் இல்லா திணறும் இராணுவம் சிக்கிய படைகள்
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

அடித்து முடக்கிய ஹமாஸ் டாங்கிகள் இல்லா திணறும் இராணுவம் சிக்கிய படைகள்


அடித்து முடக்கிய ஹமாஸ் டாங்கிகள் இல்லா திணறும் இராணுவம் சிக்கிய படைகள்

அடித்து முடக்கிய ஹமாஸ் இஸ்ரேல் யுத்த டாங்கிகள் இல்லா திணறும்
இராணுவம் , மிக பெரும் சிக்கலில் சிக்கிய இஸ்ரேலிய படைகள் .


தடுக்க பட்ட தரைவழி முன்னேற்றம் ,முடக்க பட்ட காலாட் படை

வீடியோ

லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை
Posted in இலங்கை செய்திகள்

லாஃப்ஸ் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் எரிவாயு விலையும் அதிகரிப்பு

சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க லாஃப்ஸ் நிறுவனமும் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 755 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் புதிய விலை 4,740 ரூபாவாகும்.

அத்துடன், 05 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 305 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1,900 ரூபாவாகும்

வீடியோ

திருகோணமலையில் பதற்றம்
Posted in இலங்கை செய்திகள்

திருகோணமலையில் பதற்றம்

திருகோணமலையில் பதற்றம்

திருகோணமலை நகரின் துறைமுக வீதியில் இ.போ.ச பேரூந்து மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

விபத்து நடந்ததையடுத்து, அப்பகுதியில் திரண்ட அப்பகுதி மக்கள் பேரூந்தை தாக்கி சேதப்படுத்தினர்.

திருகோணமலையில் பதற்றம்

பேருந்திற்கு தீ வைக்க முயற்சித்ததையடுத்து, அங்கு வந்த பொலிஸார் குழுவை கலைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தற்போது பேருந்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வீடியோ