பாலஸ்தீன தனிநாடே தீர்வு அதிர்ந்த சர்வதேச நீதிமன்றம்
பாலஸ்தீன தனிநாடே தீர்வு அதிர்ந்த சர்வதேச நீதிமன்றம் ,
நீதிமன்றம் தனி நாட்டை வழங்கும் என எதிர் படுவதால் பரபரப்பு நிலவுகிறது
ஹிஸ்புல்லாவிடம் ஆயிரக்கணக்கான ஆபத்தான விமானங்கள் இஸ்ரேல்
ஹிஸ்புல்லாவிடம் ஆயிரக்கணக்கான ஆபத்தான விமானங்கள் இஸ்ரேல்
ஹிஸ்புல்லாவிடம் ஆயிரக்கணக்கான ஆபத்தான விமானங்கள் உள்ளதாக இஸ்ரேல்
முக்கிய மிபுணர்கள் கருது தெரிவித்துள்ளனர் .
பெரும் போர் ஆம்பிக்க பட்டால் இஸ்ரேலுக்கு விளைவுகள் அதிகம் என்பதாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன இராஜினாமா
பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன இராஜினாமா
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை உறுதிப்படுத்தினார்
வேரஹெர பகுதியில் இடம்பெற்ற பயங்கர விபத்து
வேரஹெர பகுதியில் இடம்பெற்ற பயங்கர விபத்து
வேரஹெர, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் அண்மையில் இடம்பெற்ற பயங்கர விபத்து சிசிடிவி கெமராவில் பதிவாகி இருந்தது.
தேசிய போக்குவரத்து மருத்துவ நிலையத்தில் சேவைகளை பெற்றுக்கொள்ள வந்த பலர் சம்பந்தப்பட்ட மண்டபத்தில் அமர்ந்திருந்த போது திடீரென அவர்கள் அமர்ந்திருந்த மண்டபத்தின் மீது கார் மோதி விபத்துக்கு உள்ளானது.
சாரதி பயிற்சி நிறுவனத்திற்குச் சொந்தமான குறித்த காரை, அன்றைய தினம் சாரதி பயிற்சிக்கு வந்திருந்த ஒருவர் செலுத்தி வந்தது பின்னர் தெரியவந்துள்ளது.
குறித்த நபருடன் பயிற்சியாளரும் காரில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
வெள்ளவத்தையில் துப்பாக்கிச் சூடு
வெள்ளவத்தையில் துப்பாக்கிச் சூடு
வெள்ளவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து டி-56 ரக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது
உயர் நீதிமன்றத்தில் புதிய பொலிஸ்மா அதிபர்
உயர் நீதிமன்றத்தில் புதிய பொலிஸ்மா அதிபர்
பொலிஸ்மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தற்போது கொழும்பு உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வந்துள்ளார்.
விசாரணை ஒன்றிற்காகவே இவர் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொலிஸ்மா அதிபர் வருகையையொட்டி உயர் நீதிமன்ற வளாகத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
தங்கம் தேடும் பணி நிறுத்தம்
தங்கம் தேடும் பணி நிறுத்தம்
இலங்கையில் இருந்து வேதாளை கடற்கரை பகுதிக்கு கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகளை கடந்த 5 நாட்களாக தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வுதுறை மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் கடலுக்கு அடியில் தேடி வந்த நிலையில் தங்க கட்டிகள் கிடைக்காததால் தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் – ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை சிங்கி வளைகுச்சி கடற்கரைக்கு இலங்கையில் இருந்து நாட்டுப்படகு மூலம் தங்க கட்டிகள் கடத்தி வருவதாக தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் மண்டபம் இந்திய கடலோர காவல் படை வீரர்களுடன் இணைந்து வேதாளை கடலில் ரோந்து படகில் மறைந்திருந்தனர்.
அப்போது இலங்கையில் இருந்து நாட்டுப்படகில் தங்கக்கட்டிகளை கடத்தி வந்ததாக சொல்லப்படும் நாட்டுப்படகு வேதாளை நோக்கி வந்து கொண்டிருந்த போது கடலில் மறைந்திருந்த மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் நாட்டு படகை மடக்கி பிடிக்க முயன்ற போது நாட்டு படகில் இருந்த மூவரில் ஒருவர் கடலில் குதித்து தப்பினர்.
தங்கம் தேடும் பணி நிறுத்தம்
மேலும் படகில் இருந்த இருவரை படகுடன் மடக்கி பிடித்த அதிகாரிகள் அவர்களை மண்டபம் கடலோர காவல் படை முகாமுக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தியதில் நாட்டுப்படகு வேதாளையை சேர்ந்தது என்பதும் படகில் இருந்த இருவரும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் இலங்கையில் இருந்து சுமார் 10 கிலோ தங்கத்தை கடத்தி வந்த போது அதிகாரிகளை கண்டதால், தங்க கட்டிகள் அடங்கிய பார்சலை கடலில் வீசியதையும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாட்களாக தொடர்ந்து ஸ்கூபா வீரர்கள் மற்றும் தூத்துக்குடி சேர்ந்த மீனவர்களை கொண்டு சிங்கி வலை குச்சி கடற்கரையில் தொடர்ந்து தங்கத்தை கடலுக்கு அடியில் தீவிரமாக தேடி வந்தனர்.
தங்கம் கிடைக்காததால் கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்ட கடலுக்கு அடியில் கிடக்கும் பொருட்களை ஸ்கேன் செய்யும் அதிநவீன கருவிகளை பயன்படுத்தி அதிகாலை 6 மணி முதல் தொடர்ந்து நாட்டுப்படகு மீனவர்களின் உதவியுடன் சிங்கி வலை குச்சி மற்றும் சூடை வலைக்குச்சி கடல் பகுதிகளில் தொடர்ந்து மாலை 6 மணி வரை தேடினர்.
இருப்பினும் தங்கம் குறித்து எந்தவிதமான தகவல் கிடைக்காததால் தேடும் பணியை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் ஐந்து நாட்களுக்குப் பின்பு இன்று மாலை கைவிட்டனர்.
மேலும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பிடித்து வைத்திருந்த இருவரிடமும் எழுத்துபூர்வமாக எழுதி வாங்கி கொண்டு படகுடன் திருப்பி அனுப்பினர்.
வேதாளை மரைக்காயர்பட்டிணம் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய வருவாய் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், நாட்டுப்படகு மீனவர்கள் சட்டவிரோத கடத்தல் சம்பவங்களால் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இஸ்ரேல் கட்டளை முகாமை அடித்து நொறுக்கிய ஹிஸ்புல்லா
இஸ்ரேல் கட்டளை முகாமை அடித்து நொறுக்கிய ஹிஸ்புல்லா
இஸ்ரேல் இராணுவத்தின் கோலன் குன்று கட்டளை முகாமை அடித்து நொறுக்கிய ஹிஸ்புல்லா ஏவுகணைகள் .
அதிர்ச்சியில் உறைந்து இஸ்ரேல் தலைமைகள் ,பாலஸ்தீன அதிபர் திடீர் ராஜினாமா ,காரணம் அமெரிக்கா
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

இஸ்ரேல் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹிஸ்புல்லா
இஸ்ரேல் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹிஸ்புல்லா
இஸ்ரேல் இராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹிஸ்புல்லா ,
லெபனானுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்த முற்பட்ட இஸ்ரேல் அதி உயர் தாக்குதல் விமானம் ஒன்றை ஹிஸ்புல்லா அமைப்பு சுட்டு வீழ்த்தி சாட்டை அடியை வழங்கியுள்ளது .
தொடரும் இஸ்ரேல் பாலஸ்தீன போர் அரங்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

பிரிட்டன் தென்மேற்கு மக்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
பிரிட்டன் தென்மேற்கு மக்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
பிரிட்டன் தென்மேற்கு மக்களுக்கு பிரிட்டன் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது ,கனமழை ,அதனால் வெள்ளம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
தற்போது பொழிந்து வரும் மழை காரணமாக பல ஆறுகள் நிரம்பி பாய்கின்றன ,அதனால் வீடுகள் பள்ளத்தாக்கு பகுதிகளில் வெள்ளம் ஆபத்து உள்ளதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளதுடான் ,விழிப்பாக இருக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
புயல் காற்றுடன் கூடிய மழை வரும் மணித்தியாலங்களில் தொடரும் என அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது
- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

- சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்புப் படை பல நகரங்களில் அவசரகால எச்சரிக்கை

- ஏமன் சண்டையில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்பு

லிந்துலையில் துயரச் சம்பவம்
லிந்துலையில் துயரச் சம்பவம்
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேன பிரதேசத்தில் ஆக்ரா ஓயாவில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
நேற்று (25) இந்த சிறுவன் மேலும் 5 சிறுவர்களுடன் நீராடச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த மாணவன், ஓடையில் ஆழமான பள்ளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நுவரெலியாவைச் சேர்ந்த தினுக கமகே என்ற 16 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்தார்.
லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2000 விற்பனை செய்யப்படும் இளநீர்
2000 விற்பனை செய்யப்படும் இளநீர்
ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு, இரண்டாவது இளநீர் செய்கை கிராமம் முருதவெல ரலுவ கிராமத்திற்கு அருகாமையில் நிறுவப்பட்டுள்ளது.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் நேற்று (25) இந்த வேலைத்திட்டம் இடம்பெற்றது.
ஏற்றுமதிக்கு இளநீர் பயிரிடும் முதல் கிராமம் கடந்த ஆண்டு கீழ் முருதவெலியில் ஆரம்பிக்கப்பட்டதுடன் இவ்விரு கிராமங்களிலும் 10,000 இளநீர் மரக்கன்றுகள் நடப்படவுள்ளன.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கையின் இளநீருக்கு அதிக கேள்வி காணப்படுவதாகவும், மேலும் பல நாடுகளில் இருந்து எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இளநீருக்கு அதிக கேள்வி இருப்பதாகவும் விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
வாரத்திற்கு சுமார் 252,000 இளநீர்கள் நாட்டிலிருந்து ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
2022 ஆம் ஆண்டில் இளநீர் ஏற்றுமதி மூலம் இரண்டு பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதுடன், கடந்த வருடம் (2023) எதிர்பார்த்த வருமானம் ஆறு பில்லியன் ரூபாவாகும்.
2000 விற்பனை செய்யப்படும் இளநீர்
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இளநீர் ஒன்றின் விலை இலங்கை ரூபாவின் பெறுமதிக்கு அமைய 2000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இளநீர் இலங்கையின் பூர்வீகப் பயிராகும், பல நாடுகள் இளநீர் பயிரிட முயன்றாலும், இலங்கையில் இளநீர் போன்று அதிக சுவை இல்லாததால் அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன.
இதன் காரணமாக, உள்நாட்டு இளநீருக்கு உலகச் சந்தையில் இலங்கையின் ஏகபோக உரிமை இன்னும் உள்ளது.
இந்த சூழ்நிலையில் இருந்து அதிகபட்ச இளநீரை அறுவடை செய்வதற்காக, குறிப்பாக முருதவெல பிரதேசத்தில் உள்ள பல கிராமங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, இரண்டாவது இளநீர் செய்கை மாதிரி கிராமமாக ரலுவ கிராமம் நிறுவப்பட்டுள்ளதுடன் அங்குள்ள விவசாயிகளுக்கு 1,600 இளநீர் கன்றுகளை நேற்று விவசாய அமைச்சர் வழங்கி வைத்தார்.
காணி உரிமையைப் பெறுவதற்கான Hotline இலக்கம்
காணி உரிமையைப் பெறுவதற்கான Hotline இலக்கம்
உறுமய’ தேசிய வேலைத் திட்டத்தின் அபிலாஷைகளை நனவாக்கி, மக்கள் தமது காணியின் முழுமையான உரிமையை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும் நோக்கில் அதற்காக விண்ணப்பிப்பதற்கு அவசரத் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தினமும் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஜனாதிபதி அலுவலகம், உறுமய தேசிய செயற்பாட்டு அலுவலகம், 1908 என்ற அவசரத் தொலைபேசி இலக்கம் மற்றும் 0114 354600 / 0114 354601 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தமது கோரிக்கைகளைப் பதிவு செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
www.tinyurl.com/urumaya (டிஜிட்டல் விண்ணப்பப் படிவம்) படிவத்தைப் பூர்த்தி செய்தும் இதற்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காணி உரிமையைப் பெறுவதற்கான Hotline இலக்கம்
1935 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க நில மேம்பாட்டுக் கட்டளைச் சட்டத்தின் மூலம் விவசாயிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதிப் பத்திரங்கள் / கொடுப்பனவுப்
பத்திரங்கள் உள்ள அரசாங்கக் காணிகளை நிபந்தனைகளின்றி முழுமையான உரிமையை மக்களுக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 2024 வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஒரு தனித்துவமான முன்மொழிவாகும்.
இந்த ‘உறுமய’ நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக முழுமையான உரிமையுடைய காணி உறுதிப்பத்திரங்களைப் பெறுவதன் மூலம், குறித்த காணிக்கு புதிய
பெறுமதி கிடைப்பதுடன், அவர்களின் உரிமையைப் பாதுகாத்து அவர்களின் குடும்பத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் வாய்ப்பு உருவாகும்.
தென்னிலங்கையில் மற்றொரு துப்பாக்கிச் சூடு
தென்னிலங்கையில் மற்றொரு துப்பாக்கிச் சூடு
எல்பிட்டிய, பத்திராஜ வத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இன்று (26) காலை 07.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
கரந்தெனிய பிரதேச பொது சுகாதார பரிசோதகராக பணியாற்றி வந்த 51 வயதுடைய ரொஷான் குமார விதானகே என்ற நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு தொடர்பில் இருவர் கைது
துப்பாக்கிச் சூடு தொடர்பில் இருவர் கைது
நீர்கொழும்பு, பமுனுகம வீதியில் லெல்லம அருகில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவத்திற்கு உதவிய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்லவும் மறைத்துவைக்கவும் உதவியதற்காக சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் பதுவத்தை மற்றும் அம்பலயாய ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கு அமைய குற்றவாளிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் நீர்கொழும்பு பிரதேச குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்
வவுனியாவில் மோட்டர் சைக்கிள் திருட்டு
வவுனியாவில் மோட்டர் சைக்கிள் திருட்டு
வவுனியா, புதிய பேரூந்து நிலையம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர்.
வவுனியா, புதிய பேரூந்து நிலையம் அருகில் மோட்டர் சைக்கிள் ஒன்றை இரவு நிறுத்திவிட்டு கொழும்பு பயணித்த ஒருவர் மறுநாள் பகல் வந்து பார்த்த போது அவரது மோட்டர் சைக்கிள் விட்ட இடத்தில் காணப்படவில்லை.
அப் பகுதியில் தேடிய போதும் மோட்டர் சைக்கிள் கிடைக்காத நிலையில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, மோட்டர் சைக்கிள்களை பொது இடங்களில், வீதியோரங்களில் நிறுத்தி விட்டு தூர பயணங்களை மேற்கொள்ளாது அதனை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி விட்டு செல்லுமாறு வவுனியா பொலிசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
ரஷ்யா உக்ரைன் போரில் 31 000 உக்ரைன் இராணுவம் மரணம்
ரஷ்யா உக்ரைன் போரில் 31 000 உக்ரைன் இராணுவம் மரணம்
ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையில் இடம்பெற்ற போரில் ,
31 000 உக்ரைன் இராணுவம் மரணம் என உக்ரைன் அதிபர் ஜெலான்சி தெரிவித்துள்ளார்
உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் இரண்டு ஆண்டுகளாக இடம்பெற்று வரும் இரு தரப்பு போரில் சிக்கி
உக்ரைன் இராணுவத்தினர் பெரும் தொகையில் மரணமாகியுள்ளதாக ஜெலன்ஸி தெரிவித்துள்ளார்
எமது தாயக நிலப் பரப்பை ஆக்கிரமிக்கும் நோக்குடன் போரினை தொடுத்து ,உக்ரைனை அபகரிக்க போரை நடந்து ரஷ்ய எதிரியுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த இராணுவத்தினர் தியாகத்தை ,மக்கள் மறக்க முடியாது என முழங்கினார் .
ரஷ்யா உக்ரைன் போரில் 31 000 உக்ரைன் இராணுவம் மரணம்
அமெரிக்காவுக்கு ஆதரவாக உக்ரைன் செயலாற்றி ரஸ்யாவுக்கு எதிரான சதிகளில் உக்ரைன் ஈடுபட்டு வந்ததை அடுத்தே புட்டீன் போரினை தொடுத்தார் .
புட்டீன் கூறியது போன்று இதுவரை உக்ரனுக்கு பெருமளவு ஆயுதங்களை வழங்கி தொடர்ந்து போருக்குள் தள்ளி வருவது அதே மேற்குலக நாடுகள் இப்பொழுது அம்பலமாகியுள்ளது
உக்ரைன் உள்கட்டமைப்பு முற்றாக செயல் முடக்க பட்ட நிலையில் ,மின்சாரம் ,தொலை தொடர்புகள் தூண்டிக்க பட்ட நிலையில் பல்லாயிரம் மக்கள் வசித்து வருகின்றனர் .
அவர்களை கருத்தில் கொள்ளாது ஜலான்சி தொடர்ந்து போரை நடத்தி செல்கின்றமை இங்கே குறிப்பிட தக்கது .
- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

- சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்புப் படை பல நகரங்களில் அவசரகால எச்சரிக்கை

- ஏமன் சண்டையில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்பு

ஏமன் ஹவுதிகள் ஏவுகணைகள் விமான சுரங்கங்கள் அழிப்பு அமெரிக்கா
ஏமன் ஹவுதிகள் ஏவுகணைகள் விமான சுரங்கங்கள் அழிப்பு அமெரிக்கா
ஏமன் ஹவுதி இராணுவத்தின் ஏவுகணைகள் விமான சுரங்கங்கள் அழிப்பு என அமெரிக்கா அறிவிப்பு .
ஹவுதி இராணுவம் செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
ஹவுதிகள் நடத்தும் தாக்குதலினால் செங்கடல் கப்பல் போக்குவரத்து தடை பட்டுள்ளது .
, இஸ்ரேல் ,அமெரிக்கா ,பிரிட்டன் கப்பல்கள் மீது தொடர் தாக்குதல் நடத்த பட்ட வண்ணம் உள்ளன .
இதனை அடுத்து தற்போது அந்த தாக்குதல்களுக்கு பயன்படுத்த படும் விமானங்கள் ,ஏவுகணைகள் என்பனவற்றை தேடி அழிக்கும் ,தாக்குதல்களை அமெரிக்கா ,பிரிட்டன் மேற்கொண்டு வருகிறது .
கடந்த தினம் ஏமன் ஹவுதிகள் 18 இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதில் அவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது .
- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

- சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்புப் படை பல நகரங்களில் அவசரகால எச்சரிக்கை

- ஏமன் சண்டையில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்பு

ரஷ்யா விமானங்கள் 18 உக்ரைன் படைகளினால் சுட்டு வீழ்த்தல்
ரஷ்யா விமானங்கள் 18 உக்ரைன் படைகளினால் சுட்டு வீழ்த்தல்
ரஷ்யா விமானங்கள் 18 உக்ரைன் படைகளினால் சுட்டு வீழ்த்தல் ,உக்ரைனுக்குள் பறந்து வந்த ரஷ்யா தற்கொலை விமானங்களே சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .
உக்ரைன் இராணுவம் ரஷ்யா உள்ளே நுழைந்து தாக்குதலை நடத்தி வந்த நிலையில் ,தற்போது அதற்கு பதிலடி தாக்குதல்களை ரஷ்யா நடத்திய வண்ணம் உள்ளது .
இந்த ரஷ்யா விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டதால் ,ரஷ்யா படைகளின் தாக்குதல் தோற்கடிக்க பட்டு இழப்பு தடுக்க பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது .
- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

- சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்புப் படை பல நகரங்களில் அவசரகால எச்சரிக்கை

- ஏமன் சண்டையில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்பு

ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் இராணுவ அதிகாரி அவுட்
ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் இராணுவ அதிகாரி அவுட்
ஹமாஸ் படைகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் இராணுவ முக்கிய படைத்துறை அதிகாரி பலியாகியுள்ளார் ,காசாவில் நடந்த உக்கிர போர்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி



























