நூற்றுக்கணக்கானவர்களை அமெரிக்கா கைது செய்து நாடு கடத்துகிறது
Posted in உலக செய்திகள்

நூற்றுக்கணக்கானவர்களை அமெரிக்கா கைது செய்து நாடு கடத்துகிறது

நூற்றுக்கணக்கானவர்களை அமெரிக்கா கைது செய்து நாடு கடத்துகிறது

நூற்றுக்கணக்கானவர்களை அமெரிக்கா கைது செய்து நாடு கடத்துகிறது ,வெகுஜன நடவடிக்கையில் நூற்றுக்கணக்கானவர்களை அமெரிக்கா கைது செய்து நாடு கடத்துகிறது: டிரம்ப் பத்திரிகை அலுவலகம்

அமெரிக்க அதிகாரிகள் 538 சட்டவிரோத குடியேற்றவாசிகளை கைது செய்தனர் மற்றும் நூற்றுக்கணக்கானவர்களை ஜனாதிபதி டொனால்ட்

டிரம்பின் இரண்டாவது நிர்வாகத்தில் ஒரு வெகுஜன நடவடிக்கையில் நாடுகடத்தியுள்ளனர் என்று அவரது செய்தி செயலாளர் வியாழன் பிற்பகுதியில் தெரிவித்தார்.

“டிரம்ப் நிர்வாகம் 538 சட்டவிரோத குடியேறிய குற்றவாளிகளை கைது செய்துள்ளது” என்று கரோலின் லீவிட் சமூக தளமான X இல் ஒரு பதிவில் கூறினார்.


இராணுவ விமானங்கள் மூலம் “நூற்றுக்கணக்கானவர்கள்” நாடு கடத்தப்பட்டனர்.

ஹவுதிக்கு அமெரிக்கா தடை |அலறும் வல்லரசு நாடு
Posted in உலக செய்திகள்

ஹவுதிக்கு அமெரிக்கா தடை |அலறும் வல்லரசு நாடு

ஹவுதிக்கு அமெரிக்கா தடை |அலறும் வல்லரசு நாடு

ஹவுதிக்கு அமெரிக்கா தடை |அலறும் வல்லரசு நாடு,

வீடியோ

பெண்களை தாக்கி தொலைபேசியை கொள்ளை
Posted in இலங்கை செய்திகள்

பெண்களை தாக்கி தொலைபேசியை கொள்ளை

பெண்களை தாக்கி தொலைபேசியை கொள்ளை

பெண்களை தாக்கி தொலைபேசியை கொள்ளை ,வவுனியா – ஓமந்தை பகுதியில் நேற்று (23) முற்பகல் பெண்களை வழிமறித்து தாக்கிவிட்டு, அவர்களின் கையடக்க தொலைபேசியை பறித்துச் சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா – ஓமந்தை A9 வீதியில் நேற்று (23) முற்பகல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களை தொடர்ந்து வந்த இளைஞர் இருவர் குறித்த பெண்களை

வழிமறித்து பெண்களை தாக்கியதுடன் அவர்களிடம் இருந்த ரூபா 7 இலட்சம் பெறுமதியான கையடக்க தொலைபேசியை பறிமுதல் செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடியாக வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபரின் அவசர இலக்கமான 107 இற்கு தொடர்பு கொண்டு முறையிட்டதை அடுத்து உடனடியாக செயல்பட்ட ஓமந்தை

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க அவர்களின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த இளைஞர்களை அடையாளம் கண்டு ஓமந்தை சேமமடு பகுதியில் துரத்திப் பிடித்துள்ளனர்.

கைது செயப்பட்ட இருவரும் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 29 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்தவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸார் துப்பாக்கிச்சூடு

பொலிஸார் துப்பாக்கிச்சூடு

பொலிஸார் துப்பாக்கிச்சூடு கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் குழு நேற்று (23) கிரான்ட்பாஸ் பகுதியில் திடீர் போக்குவரத்து சோதனையை மேற்கொண்டிருந்தது.

அதற்கமைய, நேற்றிரவு பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

மேற்படி சம்பவத்தின் போது சந்தேகநபர்கள் இருவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனத்தை பின்தொடர்ந்து சென்று மாளிகாவத்தை பகுதியில் வைத்தே பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

பின்னர், வாகனத்தை சோதனையிட்டபோது அதில் சட்டவிரோத மதுபானம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் படுகொலை

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் படுகொலை

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் படுகொலை ,ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவின் சுந்தரபுரம் பகுதியில் இன்று (24) அதிகாலை கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபருக்கும் மற்றைய நபருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், தாக்குதல் சம்பவமாக மாறியதைத் தொடர்ந்து இந்தக் கொலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் சுந்தரபுரத்தைச் சேர்ந்த 31 வயதுடையவராவார்.

கொலையைச் செய்த 30 வயதுடைய சந்தேக நபர், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சஜித் பிரேமதாச உருக்கம்
Posted in இலங்கை செய்திகள்

சஜித் பிரேமதாச உருக்கம்

சஜித் பிரேமதாச உருக்கம்

சஜித் பிரேமதாச உருக்கம் ,எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (23) பாராளுமன்றத்தில் ரோஹின்யா மக்களின் உரிமைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் மேற்கொண்ட உரை பின்வருமாறு,

ரோஹின்யா சமூகம் அகதிகளாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும்போது, குறிப்பாக நாங்கள் எதிர்பார்க்கின்றோம் ரோஹின்யா மக்கள்

உட்பட அகதி சமூகத்திற்கு சர்வதேச கொள்கைகளின் மற்றும் புரிந்துணர்வுகளின் மூலம் உருவாக்கப்பட்ட சர்வதேச சட்டம் ஒன்று உள்ளது.

1951 refugee convention , 1967 protocol to the refugee convention ஆகியவற்றில் நாடு என்ற வகையில் நாம் கையெழுத்திடாவிட்டாலும், மனிதாபிமான

நிலைப்பாட்டை மையமாகக் கொண்ட நாடாக, சில அகதிக் குழுக்கள் உருவாகும் போது சர்வதேச தரநிலைகளைப் பின்பற்றி அந்த செயலை மேற்கொள்ளும் பொறுப்பு நமக்கு உள்ளது.

1969 OAU Convention , 1984 declaration on refugee european refugees, 1954 convention related of people , global impact on refugees போன்ற ஐக்கிய நாடுகள் சபையின்

பல்வேறு தீர்மானங்களைப் பார்க்கும்போது, குறிப்பாக ரோஹின்யா சமூகம் மியன்மார் ரகெக் பிராந்தியத்தை மையமாகக் கொண்ட சமூகமாகும்.

2014 ஆம் ஆண்டு மியன்மாரில் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பிலிருந்தும் நீக்கப்பட்ட கடுமையாக வறுமைக்குள்ளான சமூகப் பிரிவு. இந்த மக்கள் பிரிவு அடைந்திருக்கும் வறுமை நிலையில் அந்த

அகதிகளுக்கு மனிதாபிமான கொள்கைகள் மூலம் நமது செயல்முறைகளை மேற்கொள்வது மனிதத்தன்மை கொண்ட அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையுமாகும்.

2024 டிசம்பர் 19 ஆம் திகதி முல்லைத்தீவு கடற்கரைக்கு அருகில் முள்ளிவாய்க்கால் பிரதேசத்துக்கு 116 பேர்கள் கொண்ட அகதிகள் குழு கடல் வழியாக இலங்கைக்கு வந்த சந்தர்ப்பத்தில் அந்த அகதிகளுக்காக நாம்

மேற்கொள்ள வேண்டிய பொறுப்பை சர்வதேச சட்டத்திற்கும் சர்வதேச நடைமுறைகளுக்கும் ஏற்ப பின்பற்ற வேண்டியது அவசியம் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரோஹின்யா சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன்.

அந்த அகதிகளுக்காக நாம் நிறைவேற்ற வேண்டிய கடமையை நியாயமாக நிறைவேற்ற அரசாங்கம் தயாராகி வருகின்றது என்றும் நாம் நம்புகிறோம். மீண்டும் மியன்மாருக்கு அந்த அகதிகளை அனுப்புவது தீர்வாகப் பார்க்கவில்லை.

நாம் மனிதாபிமானத்தை முன்நிறுத்தியும் நியாயத்தை முன்நிறுத்தியும் அந்த அகதிகளுக்காக நிறைவேற்ற வேண்டிய கடமைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம்.

சர்வதேச தரநிலைகளுக்கு இணங்க, அந்த அகதி சமூகத்திற்கு ஒரு நியாயமான மனிதாபிமான மையம் கொண்ட கொள்கையொன்றை இந்த அரசாங்கம் செயற்படுத்தினால்,

அந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை வழங்க நாம் தயாராக இருக்கிறோம் என தனது உரையில் தெரிவித்தார்.

பாதசாரி மீது மோதிய லொறி
Posted in இலங்கை செய்திகள்

பாதசாரி மீது மோதிய லொறி

பாதசாரி மீது மோதிய லொறி

பாதசாரி மீது மோதிய லொறி ,இங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்தினபுரி – பானந்துறை வீதியின் திவுல்பத பிரதேசத்தில் இரத்தினபுரி திசையிலிருந்து இங்கிரிய நோக்கி பயணித்த லொறியொன்று வீதியின் குறுக்காக பயணித்த பாதசாரி மீது மோதியுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி இங்கிரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் இங்கிரிய – அக்கர 20 பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் ஹொரணை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புலமைப்பரிசில் பரீட்சையில் சாதித்த மாணவர்கள்
Posted in இலங்கை செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் சாதித்த மாணவர்கள்

புலமைப்பரிசில் பரீட்சையில் சாதித்த மாணவர்கள்

புலமைப்பரிசில் பரீட்சையில் சாதித்த மாணவர்கள் ,2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

இன்று (24) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அதன்படி, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர், 188 மதிப்பெண்களை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், 17 மாணவர்கள் 187 மற்றும் 186 என்ற மதிப்பெண்களை பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதிக மதிப்பெண் பெற்ற 18 மாணவர்களில் 11 பேர் ஆண் பிள்ளைகள் என்றும் அவர் தெரிவித்தார்.

2024 ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் 319,284 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில் அதில் 51,244 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

அதன்படி, பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் சதவீதம் 16.05% ஆகும்.

இது கடந்த ஆண்டை விட அதிகமாகும்.

2023 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 15.12% பேர் சித்தியடைந்திருந்தனர்.

மேலும், இந்த ஆண்டு பெறுபேறுகளின் படி, 77.96% மாணவர்கள் 70 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றுள்ளனர்.

இதுவும் கடந்த ஆண்டை விட சற்று அதிகமாகும்.

2023 ஆம் ஆண்டில், 77.75% மாணவர்கள் 70 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றிருந்தனர்.

மேலும், பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 37.70% பேர் 100 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றுள்ளனர்.

இருப்பினும், 2023 உடன் ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும்.

கடந்த ஆண்டு, பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 45.06% பேர் 100 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊகவியலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரனுக்கு எதிராக போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

ஊகவியலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரனுக்கு எதிராக போராட்டம்

ஊகவியலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரனுக்கு எதிராக போராட்டம்

கிளிநொச்சி மாவட்ட ஊகவியலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரனுக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளும் மாவட்ட செயலகம் முன்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியிருந்தனர்.

கமவிதானை ஒருவரை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் அவருக்கான தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த ஊடகவியலாளர் பல காலமாக விவசாயிகளுக்கு எதிராக பல நடவடிக்கைகளும் போலியான செய்திகளும் வெளியிட்டு வந்துள்ளார்.

குறித்த ஊகவியலாளர் பொலிசாரின் செல்வாக்கை பயன்படுத்தி சக ஊடகவியலாளரை போலி குற்றச்சாட்டில் கைது செய்தும் உள்ளார்.

ஊசி சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை குழு உட்பட 09 பேர் மீது விசாரணை
Posted in இலங்கை செய்திகள்

ஊசி சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை குழு உட்பட 09 பேர் மீது விசாரணை

ஊசி சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை குழு உட்பட 09 பேர் மீது விசாரணை

ஊசி சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை குழு உட்பட 09 பேர் மீது விசாரணை ,தேர்தல் கணக்கறிக்கை தொடர்பில் யாழ் மாவட்டத்தில் ஊசி சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை குழு உட்பட 09 பேர் மீது விசாரணை

தேர்தல் கணக்கறிக்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உட்பட 09 பேர் மீதான விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது போட்டியிட்ட வேட்பாளர்கள் தமது செலவீன அறிக்கைகளை தேர்தல் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ளனர்.

இந்நிலையில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அதன் அடிப்படையில், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உட்பட யாழ். தேர்தல் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட சசிகலா ரவிராஜ், அ.உமாகரன், சி.மயூரன், த.கிருஸ்ணானந், ந. கௌசல்யா, குருசாமி சுரேன் உட்பட 09 பேர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில் சசிகலா ரவிராஜிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஏனையவர்களிடமும் வாக்குமூலங்களை பெற்ற பின்னர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை யாழ். தேர்தல் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டவர்களில் இதுவரை தமது தேர்தல் செலவீன அறிக்கைகளை தேர்தல் ஆணைக்குழுவுக்கு

சமர்ப்பிக்காத 35 பேருக்கு எதிராகவும் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதயம் மாறி பிறந்த சிசு |வறுமையில் தவிக்கும் குடும்பம் |வன்னி மைந்தன் உதவி திட்டம்
Posted in வன்னி மைந்தன் உதவி

இதயம் மாறி பிறந்த சிசு |வறுமையில் தவிக்கும் குடும்பம் |வன்னி மைந்தன் உதவி திட்டம்

இதயம் மாறி பிறந்த சிசு |வறுமையில் தவிக்கும் குடும்பம் |வன்னி மைந்தன் உதவி திட்டம்

இதயம் மாறி பிறந்த சிசு |வறுமையில் தவிக்கும் குடும்பம் |வன்னி மைந்தன் உதவி திட்டம் ,வாட்டும் வறுமை .காணீரோ காட்சி .

காணொளியை பாருங்கள்

2.2 பில்லியன் டாலர் பணமோசடி
Posted in உலக செய்திகள்

2.2 பில்லியன் டாலர் பணமோசடி

2.2 பில்லியன் டாலர் பணமோசடி

2.2 பில்லியன் டாலர் பணமோசடி வழக்கில் போலி ஆவணங்களை உருவாக்க உதவியதாக சிங்கப்பூர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது

S$3 பில்லியன் ($2.24 பில்லியன்) பணமோசடி வளையத்தின் ஒரு பகுதியாக வெளிநாட்டினர் போலியான ஆவணங்களை உருவாக்கி கணக்குகளை பொய்யாக்க உதவியதாக சிங்கப்பூரர் ஒருவர் வியாழன் அன்று குற்றம் சாட்டப்பட்டார்.

42 வயதான Wang Junjie, சிங்கப்பூரின் மிகப்பெரிய பணமோசடி வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட சமீபத்திய நபர் மற்றும் 15 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். இரண்டு முன்னாள் வங்கியாளர்கள் ஆகஸ்ட், 2024 இல் குற்றம் சாட்டப்பட்டனர்.

வாங்கின் வழக்கறிஞர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

ஆகஸ்ட் 2023 இல் பணமோசடி தொடர்பாக 10 வெளிநாட்டவர்கள் ஒரே நேரத்தில் சோதனையில் கைது செய்யப்பட்டனர், இது ஆசிய நிதி மையத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அனைத்து 10 வெளிநாட்டவர்களும் 13 முதல் 17 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அனுபவித்து சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்தப்பட்டு மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொள்கை சீர்திருத்தங்களைத் தூண்டியது, இதில் அதிகாரிகள் பணமோசடி வழக்குகளை எளிதாகத் தொடரலாம்.

ஹவுதிகளை பயங்கரவாத அமைப்பாக டிரம்ப் மறுபெயரிடுகிறார்
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

ஹவுதிகளை பயங்கரவாத அமைப்பாக டிரம்ப் மறுபெயரிடுகிறார்

ஹவுதிகளை பயங்கரவாத அமைப்பாக டிரம்ப் மறுபெயரிடுகிறார்

ஹவுதிகளை பயங்கரவாத அமைப்பாக டிரம்ப் மறுபெயரிடுகிறார் ,யேமனின் ஹவுதிகளை பயங்கரவாத அமைப்பாக டிரம்ப் மறுபெயரிடுகிறார்: வெள்ளை மாளிகை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் யேமனின் ஹூதிகளை ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக (FTO) நியமித்தார், வெள்ளை மாளிகை

புதன்கிழமை ஒரு அறிக்கையில் கூறியது, டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் எடுக்கப்பட்ட முடிவை பிடன் நிர்வாகம் மாற்றியமைத்த பின்னர் இது இரண்டாவது முறையாகும்.

அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து, செங்கடலில் உள்ள அமெரிக்க இராணுவ மற்றும் வணிகக் கப்பல்கள் மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடையதாக அவர்கள் கூறிய கப்பல்கள் மீது ஹூதிகள்

தாக்குதல் நடத்தத் தொடங்கினர். தாக்குதலுக்கு இஸ்ரேலிய இராணுவத்தின் பதில் காஸாவின் பெரும்பகுதியை அழித்தது. காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுடனான ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக ஈரான் ஆதரவு ஹூதிகள் கூறியுள்ளனர்.

ஹூதிகளை FTO ஆக மறுபரிசீலனை செய்வதற்கான பரிந்துரை முன்னாள் ஜனாதிபதி ஜோ பிடனின் பதவியில் இருந்த கடைசி மாதத்தில் அவரது மேசைக்கு வந்தது. இருப்பினும், பிடென் முடிவை உள்வரும் நிர்வாகத்திற்கு விட்டுவிட விரும்பினார்.

ஹூதிகளை எஃப்.டி.ஓ.வாக மறுசீரமைப்பதற்கான முடிவை முதலில் தெரிவித்த வாஷிங்டன் ஃப்ரீ பீக்கன், டிரம்ப் கையெழுத்திடும் உத்தரவு ஹூதிகளை ஆதரிப்பதற்காக ஈரானைக் கண்டிக்கும் என்று கூறியது.

“ஹூதிகளின் திறன்கள் மற்றும் செயல்பாடுகளை ஒழிப்பதற்கான” அமெரிக்கக் கொள்கையை விதிக்கும் உத்தரவை அறிக்கை மேற்கோளிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட சீன பிரஜை
Posted in உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட சீன பிரஜை

ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட சீன பிரஜை

ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட சீன பிரஜை ,ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட சீன பிரஜைக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

புதன்கிழமை பிற்பகுதியில் அதன் டெலிகிராம் சேனலில் ஒரு இடுகையில், ஆப்கானிஸ்தானின் வடக்கு தகார் மாகாணத்தில் ஒரு சீன நாட்டவர் கொல்லப்பட்டதற்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றுள்ளது.

மாகாணத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் பொலிசார் புதன்கிழமை ஒரு சீனக் குடிமகன் கொல்லப்பட்டதாகவும், ஆரம்ப விசாரணை தொடங்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர், ஆனால் தாக்குதலுக்குப் பின்னால் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

சீனப் பிரஜையை ஏற்றிச் சென்ற வாகனத்தை குறிவைத்ததாக ஐ.எஸ்.ஐ.எஸ் கூறியது, இது அவரது மரணத்திற்கு வழிவகுத்தது மற்றும் அவரது வாகனத்தை சேதப்படுத்தியது.

தலிபான்களின் கீழ் ஆப்கானிஸ்தானுக்கு ஒரு தூதரை நியமித்த முதல் நாடு சீனா மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை அதிகரிக்க விரும்புவதாக கூறியுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட தேசத்தின் பாதுகாப்பை மீட்டெடுப்பதாக சபதம் செய்து 2021 இல் தலிபான்கள் பொறுப்பேற்றனர்.

இலஞ்சம் பெற்ற குடிவரவு அதிகாரி கைது
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் பெற்ற குடிவரவு அதிகாரி கைது

இலஞ்சம் பெற்ற குடிவரவு அதிகாரி கைது

இலஞ்சம் பெற்ற குடிவரவு அதிகாரி கைது 500,000 ரூபாயை இலஞ்சமாக கோரி பெற்றுக்கொண்ட குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரி ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், நல்லூர் வடக்குப் பகுதியை சேர்ந்த நபரொருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசா இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்ததற்காக கைது செய்யப்பட்ட முறைப்பாட்டாளர், வெலிசறை குடிவரவு மற்றும் குடியகல்வு தடுப்பு மையத்திலிருந்து விடுவிப்பதற்கு

தேவையான ஏற்பாடுகளை செய்வதற்காக சந்தேகநபர் இந்த இலஞ்சத்தை பெற்றதாகக் கூறப்படுகிறது.

சந்தேகநபர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வெலிசறை தடுப்பு மையத்தில் பணிபுரியும் குடிவரவு அதிகாரி ஆவார்.

சந்தேகநபர் 20 ஆம் திகதி மதியம் வெலிசறை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தடுப்பு மையத்தில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்டி கொழும்பு வீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள்
Posted in இலங்கை செய்திகள்

கண்டி கொழும்பு வீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள்

கண்டி கொழும்பு வீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள்

கண்டி கொழும்பு வீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் ,நிட்டம்புவ ஸ்ரீ விஜேராமய விகாரையில் வருடாந்த “துருது நத” மகா பெரஹெர ஊர்வலம் காரணமாக வீதி போக்குவரத்து மட்டுப்பாடு தொடர்பில் பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

அதன்படி, நாளை (24) இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பெரஹெர ஊர்வலம் இடம்பெறவுள்ளது.

இந்த ஊர்வலம் நிட்டம்புவ அத்தனகல்ல வீதியில் உள்ள களுவாகஸ்வில ஸ்ரீ விஜயராமய விகாரையில் இருந்து தொடங்கி, நிட்டம்புவ நகரத்தை அடைந்து, இடதுபுறம் திரும்பி

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கொழும்பை நோக்கிச் சென்று, வால்வத்த சந்தியில் வலதுபுறம் திரும்பி ஸ்ரீ போதி விகாரையை சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது.

பெரஹெர நிகழ்வைக் காண ஏராளமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கண்டி-கொழும்பு பிரதான வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, நிட்டம்புவ நகரத்திலிருந்து மல்வத்த சந்தி வரையிலான வீதியின் ஒரு வழித்தடம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு கொழும்பு-நோக்கியும், கண்டி நோக்கியும் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.

அரசுக்கு இனி ஆதரவு வழங்கமாட்டேன் அர்ச்சுனா
Posted in இலங்கை செய்திகள்

அரசுக்கு இனி ஆதரவு வழங்கமாட்டேன் அர்ச்சுனா

அரசுக்கு இனி ஆதரவு வழங்கமாட்டேன் அர்ச்சுனா

அரசுக்கு இனி ஆதரவு வழங்கமாட்டேன் அர்ச்சுனா ,அரசுக்கு இனி ஆதரவு வழங்கமாட்டேன் – அர்ச்சுனா எம்.பி அதிரடி இன்றிலிருந்து பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்ட 64 நாட்கள் கடந்துள்ள நிலையில், பாராளுமன்றில் தனது

சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக முறைப்பாடு வழங்கி 36ஆவது நாள் கடந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று (23) உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர்,

இன்றிலிருந்து மனதளவில் அரசாங்கத்திற்கு வழங்கிய அனைத்து ஆதரவை மீளப் பெற்றுக்கொள்வதாகவும், உண்மையான எதிர்க்கட்சியாக இருக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

மாபியா ஒருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

மாபியா ஒருவர் கைது

மாபியா ஒருவர் கைது

மாபியா ஒருவர் கைது வெளிநாட்டினருக்கு அதிக விலைக்கு ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டுவந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி குற்றத் தடுப்பு பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (22) மாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கண்டி சுதுஹும்பொல பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கண்டி, சுதுஹும்பொல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

ஒடிஸி ரயிலுக்காக ஒன்லைனில் வாங்கிய 21 ரயில் டிக்கெட்டுகளும், அந்த ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்வதன் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 130,670 ரூபாய் பணமும்,

இதற்கு முன்னர் ரயில் டிக்கெட் விற்பனை பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்பட்ட 130 குறிப்புகளும், கையடக்க தொலைபேசி ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

COPD நோய் குறித்து வைத்தியர்களின் அறிவுறுத்தல்
Posted in இலங்கை செய்திகள்

COPD நோய் குறித்து வைத்தியர்களின் அறிவுறுத்தல்

COPD நோய் குறித்து வைத்தியர்களின் அறிவுறுத்தல்

COPD நோய் குறித்து வைத்தியர்களின் அறிவுறுத்தல் 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10 சதவீதம் பேருக்கு COPD என்ற நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் இருப்பதாக சுவாச வைத்திய நிபுணர் சமன்மலி தல்பதாது தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நோய் குறித்து சமூகத்தில் சரியான புரிதல் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“உலகில் நிகழும் இறப்புக்களுக்கான காரணங்களில் இந்த நோய் 7வது இடத்தில் உள்ளது.”

உங்களுக்கு ஆஸ்துமா நோய் இருந்தாலும், நீங்கள் மருந்து எடுத்துக்கொள்வதில்லை.

இதனால் 20 அல்லது 30 வருடங்களில், நீங்கள் ஒரு COPD நோயாளியாக என்னிடம் வருவீர்கள். சிகரெட் புகை பயன்படுத்துகிறீர்கள்.

இதனால் உங்கள் நுரையீரல் காலப்போக்கில் சேதமடைகிறது என்பது உங்களுக்குத் தெரியாது.

உங்களுக்கு 45 வயது ஆகும்போது, ​​நீங்கள் மருத்துவர்களைத் தேடத் தொடங்குவீர்கள்.

அப்போது மூச்சு விடுவதில் சிரமம் இருப்பது போல் உணர்வீர்கள்.

மலை பங்கான பகுதியில் ஏறும் போது அது உணரப்படும்.

2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இலங்கையில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10% பேருக்கு இது உள்ளது.

“இது முதலில் கண்டுபிடிக்கப்படாததற்குக் காரணம், அதைப் பற்றிய புரிதல் இல்லாததே.” என்றார்.

இந்த நோயைக் கட்டுப்படுத்துவது குறித்து மேலும் கருத்து தெரிவித்த வைத்திய நிபுணர் சமன்மலி தல்பதாது,

“இதைத் தடுக்க வேண்டுமானால் நாம் எங்கு வேலை செய்தாலும் சரி, எங்கு வாழ்ந்தாலும் சரி, தேவையற்ற காற்று மாசுபாட்டிற்கு ஆளாகாமல் இருப்பதன் மூலமும், முகக்கவசங்களை அணிவதன் மூலமும் இந்த நோயைத் தடுக்கலாம்.”

பெற்றோருக்கு இந்த COPD நோய் இருப்பது கண்டறியப்படாமலேயே உள்ளது. நடக்கவே கஷ்டமா இருக்கும்.

பின்னர் முச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். லேசான தடிமன் ஏற்பட்டாலும் அவர்களுக்கு கடினமாக இருக்கும்.

ஒரே சிகிச்சை இன்ஹேலர் மட்டுமே. வேறொன்றுமில்லை.

COPD என்பது ஆஸ்துமாவிலிருந்து வேறுபட்ட ஒரு நாள்பட்ட நோயாகும். “அதனால்தான் இன்ஹேலரை நீண்ட காலத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.” என்றார்.

கனடா வாகன விபத்தில் பகீரதனும் அவரது 3 வயது மகளும் மரணம்
Posted in சமையல் சமையல் cook

கனடா வாகன விபத்தில் பகீரதனும் அவரது 3 வயது மகளும் மரணம்

கனடா வாகன விபத்தில் பகீரதனும் அவரது 3 வயது மகளும் மரணம்

கனடா வாகன விபத்தில் பகீரதனும் அவரது 3 வயது மகளும் மரணம் ,கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் அவரது மூன்று வயது மகளும் உயிரிழந்துள்ளனர்.

வாகனமொன்றில் மோதுண்டதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளான நிலையில் குறித்த நபர் வாகனத்தை விட்டு கீழே இறங்கி மகளை தூக்கிக் கொண்டு விதியின் மறுமுனைக்கு செல்ல முயற்சித்த போது மற்றும் ஒரு வாகனம் குறித்த இருவர் மீதும் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மோதல் காரணமாக குறித்த இருவரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பின்னர் சிகிச்சைகள் பலனின்றி இருவரும் உயிர் இழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த வாகன விபத்தில் மூன்று வாகனங்கள் தொடர்பு பட்டியிருந்ததாகவும் ஒரு வாகனத்தின் சாரதி சம்பவ இடத்தை விட்டு தப்பி சென்று விட்டதாகவும் மற்றவர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.