வவுனியாவில் பொலிசாரை மோதி தள்ளிய வண்டி
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் பொலிசாரை மோதி தள்ளிய வண்டி

வவுனியாவில் பொலிசாரை மோதி தள்ளிய வண்டி

வவுனியாவில் பொலிசாரை மோதி தள்ளிய வண்டி செயல்பாடு மிக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

மோட்டார் சைக்கிளில்

மோட்டார் சைக்கிளில் இரு போலீசாரை வீதி போக்குவரத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் .


அப்பொழுது சிறிய ரக லொறி ஒன்று அந்த இரு காவல்துறையினரை வண்டியால் மோதி தள்ளியது .

இதன் பொழுது அவர்களது மோட்டார் சைக்கிள் சேதமானது ,மேலும் அவர்கள் வீதி அருகில் விழுந்தனர் .

காயங்கள் ஏற்பட்டு இருக்க கூடும் என்பதை காணொளியை பார்க்கும் பொழுது தெரிகிறது .

இலங்கையில் வாகன சாரதிகள் இவ்விதம் கொலை வெறியில் ஈடுபட்டுள்ளது மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கை காவல்துறை

லஞ்சம் பெற்று ஊறி போன இலங்கை காவல்துறையின் செயல்பாடுகள் காரணமாக வாகன சாரதி கோபம் அடைந்து இவ்விதம் செய்திருக்க கூடும் என சந்தேகிக்க படுகிறது .

குறித்த வானில் பயணித்த பெண்கள் சத்தம் இடுவதையும் ,அதை பதிவு சையது வெளியிட்டுள்ளனர்

வவுனியாவில் பொலிசாரை மோதி தள்ளிய வண்டி
வவுனியாவில் பொலிசாரை மோதி தள்ளிய வண்டி

காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்

ரயிலில் மோதி உயிரிழந்த ஆணின் பாகங்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

ரயிலில் மோதி உயிரிழந்த ஆணின் பாகங்கள் மீட்பு

ரயிலில் மோதி உயிரிழந்த ஆணின் பாகங்கள் மீட்பு

ரயிலில் மோதி உயிரிழந்த ஆணின் பாகங்கள் மீட்பு ,தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி உடல் அவயவயங்கள் துண்டாடப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை (28) அன்று காலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட நபர்

சடலமாக மீட்கப்பட்ட நபர், நீர்கொழும்பைச் சேர்ந்த W.M.A. சரத் அந்தோனி (வயது-60) என தெரியவந்துள்ளது.

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி ஞாயிற்றுக்கிழமை (28) அன்று காலை பயணித்த குறித்த புகையிரதம், சௌத் பார் புகையிரத நிலையத்தில்

தரித்து நின்று மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கி பயணித்துள்ளது.

சௌத்பார் -தள்ளாடி புகையிரத வீதி, இரட்டை கண் பாலத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதி உடல் பாகங்கள் சிதறிய நிலையில் குறித்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த திடீர் மரண விசாரணை அதிகாரி பி.பிரபா நந்தன் சடலத்தை பார்வையிட்டார்.

இதன் போது அவரது உடமையில் இருந்து மீட்கப்பட்ட தேசிய அடையாள அட்டை,சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியவற்றை வைத்து குறித்த நபர் W.M.A.

சரத் அந்தோனி (வயது-60) எனவும் நீர்கொழும்பைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டது .

ஒரு தொகை பணம்

அவரது உடமையில் இருந்து ஒரு தொகை பணம் மற்றும் தலைமன்னாருக்கு சனிக்கிழமை (27) அன்று பயணிப்பதற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட 205 ரூபாயாக்கான புகையிரத டிக்கெட் ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் மன்னார் பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை மன்னார் வைத்தியசாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மரத்துடன் மோதிய பேருந்து
Posted in இலங்கை செய்திகள்

மரத்துடன் மோதிய பேருந்து

மரத்துடன் மோதிய பேருந்து

மரத்துடன் மோதிய பேருந்து பலர் காயம் .மொரட்டுவ பகுதியில் பேருந்து ஒன்று மரத்துடன் மோதியதில் பலர் காயமடைந்துள்ள்ளனர் .Bus collides with tree

மரம் ஒன்று மீது மோதி Crashed into a tree.

பஸ் ஆனது மரம் ஒன்று மீது மோதி பின்னர் வீதியின் இடப்பக்கம் திரும்பி முன்னால் இருந்த கம்பியுடன் மோதி சிதறியது .

இதன்போது பாரியளவு காயங்கள் ஏற்படாத போதும் சிறிய உரசல் காயங்களுடன் மக்கள் தப்பித்துக் கொண்டனர்.

நாள்தோறும் இலங்கையில் இடம்பெற்று வருகிற பேரூந்து விபத்து பயணிகள் மத்தியில் அச்சத்தை மீளவும் ஏற்படுத்தியுள்ளது.

சாரதிகள் கவனக்குறைவு Driver inattention

சாரதிகள் கவனக்குறைவு மற்றும் போதையில் பேருந்துகளை ஓட்டுகிற காரணத்தினால், இந்த விபத்து ஏற்படுவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

நாளொன்றுக்கு விபத்தில் ஏழு பேர் பலியாகியும் 100க்கும் மேற்பட்டவர்கள் காயவமடைந்து வருகின்றார்கள்.

அவ்வாறான வேளையில் தற்பொழுது இந்த பேருந்து விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலத்துடன் மோதிய கடற்படை கப்பல்
Posted in உலக செய்திகள்

பாலத்துடன் மோதிய கடற்படை கப்பல்

பாலத்துடன் மோதிய கடற்படை கப்பல்

பாலத்துடன் மோதிய கடற்படை கப்பல் ,பாலத்துடன் மோதிய கடைபடை கப்பல் ஒன்றினால் அமெரிக்க நீ யோக் சிட்டி பாலம் பலத்தமான சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோ நாட்டுக்கு சொந்தமான கடற்படை கப்பல் ஒன்று அமெரிக்கா யுனிவர்சிட்டி பாலத்துக்கு கீழ் பயணித்த பொழுது அந்தக் கப்பல் அந்த பாலத்தில் மோதி சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னரும் ஒரு கப்பல் ஒன்று மோதியதில் பல மில்லியன் இழப்பு அந்த பாலத்துக்கு ஏற்பட்டிருந்தது.

அதனை அடுத்து தற்பொழுது இந்த கப்பலும் இந்த பாலத்தின் வழியாக சென்றதால் பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேவி கப்பலோடு இவ்வாறான வழி ஊடாக பயணிக்கின்ற பொழுது பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதானது ,அது பாதுகாப்பு கருவி அமைக்கப்பட்டுள்ளதா? அல்லது

திட்டமிடப்பட்டு இவ்வாறான கப்பல்களை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான சந்தேகத்தை இது மீளவும் எழுப்பியுள்ளது.

இன்னொரு தடவை இதே காலத்தில் இவ்விதமான சம்பவம் இடம்பெற்ற பொழுது மீளவும் அதை திருத்தி அமைக்கின்ற பொழுது அதை உயரத்தில் அமைத்தது ஏன் என்ற கேள்வியை இது எழுப்பி நிற்கிறது.

குறித்த கப்பல் பாலத்தில் மோதியது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் காயம்

2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் காயம்

2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் காயம் ,பெலியத்த, ஹெட்டியாராச்சி வளைவுக்கு அருகில் இன்று அதிகாலை இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, டிக்வெல்லவிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, எதிர் திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேருந்துடன் மோதியது.

விபத்தில் காயமடைந்த பேருந்துகளில் இருந்த பயணிகள் தங்காலை மற்றும் பெலியத்த வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெலியத்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போர் விமானம் மோதி விபத்துக்குள்ளானது
Posted in உலக செய்திகள்

போர் விமானம் மோதி விபத்துக்குள்ளானது

போர் விமானம் மோதி விபத்துக்குள்ளானது

போர் விமானம் மோதி விபத்துக்குள்ளானது ,சான் டியாகோ துறைமுகத்தில் போர் விமானம் மோதி விபத்துக்குள்ளானது, 2 விமானிகள் மீட்பு: தீயணைப்பு அதிகாரிகள்


இரண்டு விமானிகளும் நல்ல நிலையில் இருந்தனர் மற்றும் 24 மணி நேர மருத்துவ கண்காணிப்பில் இருந்தனர்.

புதனன்று சான் டியாகோ துறைமுகத்தில் ஒரு போர் விமானம் மோதியது, அதில் இருந்த இரண்டு விமானிகளும் கடலோரக் காவல்படையினரால் மீட்கப்படுவதற்கு முன்பு வெளியேற்றப்பட்டனர் என்று சான் டியாகோ தீயணைப்பு மீட்புக் குழு தெரிவித்துள்ளது.

இரண்டு விமானிகளும் நல்ல நிலையில் இருப்பதாகவும், மிகுந்த எச்சரிக்கையுடன் 24 மணி நேர மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் கடற்படை புதன்கிழமை மாலை செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

இரண்டு இருக்கைகள் கொண்ட EA-18 க்ரோலர் உள்ளூர் நேரப்படி காலை 10:15 மணியளவில் கீழே விழுந்ததாக கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சுமார் ஒரு நிமிடம் தண்ணீரில் இருந்த விமானிகள் மீன்பிடி கப்பல் மூலம் மீட்கப்பட்டதாக கடலோர காவல்படையினர் தெரிவித்தனர்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

விமானிகள் விமானம் தரையிறங்கியது மற்றும் மீண்டும் புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தது என்று கடற்படை அதிகாரியின் கூற்றுப்படி, சுற்றிச் செல்லும் சூழ்ச்சி என்று அழைக்கப்படும் போது விமானிகள் வெளியேற்றப்பட்டனர்.

விபத்து நடந்த இடம் அடையாளம் காணப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. பொதுமக்களால் காணப்பட்ட எந்தவொரு குப்பைகளையும் கடற்படைக்கு தெரிவிக்க முடியும், எனவே அவற்றை மீட்டெடுக்க முடியும்.

மூங்கில் கழுகு ஒருங்கிணைந்த பயிற்சியின் ஒரு பகுதியாக இந்த விமானம் சான் டியாகோவில் இருந்தது மற்றும் வடக்கு தீவில் இருந்து இயக்கப்பட்டது என்று கடற்படை அதிகாரி தெரிவித்தார்.

விபத்தைத் தொடர்ந்து விமானநிலையம் மூடப்பட்டது, ஆனால் பயிற்சியின் ஒரு பகுதியாக அதிக விமானங்களை அனுமதிக்க மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதசாரி மீது மோதிய லொறி
Posted in இலங்கை செய்திகள்

பாதசாரி மீது மோதிய லொறி

பாதசாரி மீது மோதிய லொறி

பாதசாரி மீது மோதிய லொறி ,இங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்தினபுரி – பானந்துறை வீதியின் திவுல்பத பிரதேசத்தில் இரத்தினபுரி திசையிலிருந்து இங்கிரிய நோக்கி பயணித்த லொறியொன்று வீதியின் குறுக்காக பயணித்த பாதசாரி மீது மோதியுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி இங்கிரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் இங்கிரிய – அக்கர 20 பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் ஹொரணை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பயணிகள் பேருந்துகள் இரண்டு மோதி விபத்து
Posted in இலங்கை செய்திகள்

பயணிகள் பேருந்துகள் இரண்டு மோதி விபத்து

பயணிகள் பேருந்துகள் இரண்டு மோதி விபத்து

பயணிகள் பேருந்துகள் இரண்டு மோதி விபத்து ,இன்று (11) காலை இரண்டு பயணிகள் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

கொழும்பு கண்டி பிரதான வீதியின் உதுவன்கந்த வலகடயாவ பிரதேசத்தில் இன்று காலை 8:15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகளே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான.

விபத்தில் காயமடைந்த சுமார் 18 பேர் கேகாலை மற்றும் மாவனெல்ல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்து ஒன்று, கேகாலையில் இருந்து மாவனல்லை நோக்கி பயணித்த பேருந்தின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

பாணந்துறையில் இருந்து வந்த பேருந்தில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக சாரதிக்கு பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ரயில் மோதி ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

ரயில் மோதி ஒருவர் பலி

ரயில் மோதி ஒருவர் பலி

ரயில் மோதி ஒருவர் பலி ,கொழும்பிலிருந்து பதிலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த 35 வயதுடைய வாலிபர் ஒருவர் ரயிலில் மோதி பலியாகியுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

கடவையில் இடம்பெற்ற இடைச் சம்பவத்தில் ரயிலில் மோதி பலியான வாலிபர் சங்கம் மீட்கப்பட்டு தற்பொழுது மருத்துவ பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர் யார் என்பதை அடையாளம் காணும் நடவடிக்கையில் தற்பொழுது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் அடையாளம் காண்பதற்கு மக்கள் உதவியை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான ரயில் தடுப்புகளை கடந்து செல்கின்ற பொழுது இவ்வாறான விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக மக்கள் கூட்டம் சுமத்தி வருகின்றனர்.

இந்த கடவுள் மேல் அதிக காவலர்களின் நியமித்து அதனுடைய பாதுகாப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையில் அரசு மெத்தனமற்ற திறமான போக்கை கடைபிடித்ததாக மக்கள் கூட்டம் சுமத்தி வருகின்றனர்.

இலங்கையில் இடம்பெற்று வருகின்ற இவ்வாறான ரயில் விபத்துகளில் பல மக்கள் ஆண்டுதோறும் பலியாகி வருகின்றதும் ஆபத்தான ரயில்வே கடைகளில் பாதுகாப்பை கருதி,

அதற்குரிய செயல் உருவாக்கத்தை கொடுப்பதற்கு ஆளுமரசுகள் தவறி வருவதாக மக்கள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றமை இங்கே கவனிக்கத்தக்கது.

மின்கம்பத்துடன் லொறி மோதியதால் மின்சார சேவைகள் பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மின்கம்பத்துடன் லொறி மோதியதால் மின்சார சேவைகள் பாதிப்பு

கோர விபத்து லொறி சேதம்

மின்கம்பத்துடன் லொறி மோதியதால் மின்சார சேவைகள் பாதிப்பு

மின்கம்பத்துடன் லொரி என்று மோதியதால் மின்சார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி செய்திகள் தெரிவிக்கின்ற மட்டக்களப்பு கல்பனை பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த

திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்தில் சிக்கியது இதன் பொழுது நுரையின் முன்னரங்க பகுதிகள் கடும் சேதம் அடைந்துள்ளனர்

விழுந்த நிலையில் காணப்படுகின்றது இதனால் அந்த பகுதி மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்ட நிலையில் தற்போது மின்சார சீர்திருத்த பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

எரிபொருளை ஏற்றுச்சென்ற ஒரு பவுசரை இந்த மின்கம்பத்துடன் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

எனினும் தேவாதிகமாக டவுசர் தீ பிடித்து சிதறாத காரணத்தினால் இழப்புகள் உயிரிழப்புக்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்று வருகின்ற அதிக விபத்தின் காரணமாக நாள்தோறும் மூன்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி வருகின்றனர்

சாரதிகளின் அலட்சியப் போக்கும் வீதி விதிமுறைகளை பின்பற்றாமல் காரணமாகவே இந்த விபத்துக்கள் நாள்தோறும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை முழுசா தேர்வு தோழர்

அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை தடுப்பது எப்படி அதில் இருந்து மக்களை பாதுகாப்பது எப்படி என்பது தொடர்பில் காவல்துறையினர் உரிய விழிப்புணர்வு நடவடிக்கை பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்ற பொழுதும்

இலங்கையில் இவ்வாறான வீதி விபத்துக்கள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது மக்கள் மத்தியில் ஒரு வித துயரையும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றது.

அரச பேரூந்து மோதி விபத்து
Posted in இலங்கை செய்திகள்

அரச பேரூந்து மோதி விபத்து

அரச பேரூந்து மோதி விபத்து

அரச பேரூந்து மோதி விபத்து கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தாய் பகுதியில் முன்னால் சென்ற தனியார் பேரூந்தை பின்னால் வந்த அரச பேரூந்து மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்து இன்று (06) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியிலிருந்து யாழ்.

நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேரூந்து பயணிகளை ஏற்றுவதற்காக பேரூந்து தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த போது பின்னால் பயணித்த அரச பேரூந்து மோதியுள்ளது.

கிளிநொச்சியில் இருந்து யாழ். நோக்கி அரச பேரூந்தும் தனியார் பேரூந்தும் ஒரு சில நிமிட வித்தியாசத்தில் பயணிப்பதால்,

இருதரப்புக்கும் இடையில் அடிக்கடி முறுகல் நிலை ஏற்படுவதாகவும், இதனால் வீதியில் போட்டியிட்டு செல்வதாகவும் பொதுமக்களால் குற்றஞ்சாட்டப்படுகிறது.

குறித்த போட்டியின் காரணமாகவே திட்டமிட்டு பின்னால் வந்து தனியார் பேரூந்தை அரச பேரூந்து மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்தவர்கள் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Featured

Loading...
Posted in Uncategorized

அலிசப்ரி வாகனத்தில் மோதுண்டு ஒருவர் மரணம்

அலிசப்ரி வாகனத்தில் மோதுண்டு ஒருவர் மரணம்

அலிசப்ரி எம்பியின் வாகனத்தில் மோதுண்டு ஒருவர் பலியாகியுள்ளார்

இந்த விபத்து கடந்த இரவு இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன