ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் மைத்திரிபால சிறிசேன
Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் ஜனாதிபதியின் சகோதரரின் வீட்டில் திருட்டு

முன்னாள் ஜனாதிபதியின் சகோதரரின் வீட்டில் திருட்டு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான சமிந்த சிறிசேனவின் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் பெறுமதியுடைய, சுமார் 6 பவுன் தங்க மோதிரம், ஐம்பது அமெரிக்க டொலர் மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப்பணம் திருடப்பட்டுள்ளதாக பொலன்னறுவை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொலன்னறுவை, அதுமல்பிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மேற்குறிப்பிட்ட நீலக்கல் மோதிரம் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக அவர் தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலன்னறுவை பொலிஸார், மோதிரம் மற்றும் பணத்தை திருடியவர்கள் யார் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கின்றனர்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் மைத்திரிபால சிறிசேன
Posted in இலங்கை செய்திகள்

மைத்திரியின் மனு தொடர்பான நீதிமன்றத்தின் உத்தரவு

மைத்திரியின் மனு தொடர்பான நீதிமன்றத்தின் உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாட்டை வலுவிழக்கச் செய்யக் கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட்

மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 31ஆம் திகதி ஐவரடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி, ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 9 ஆகிய திகதிகளில் இந்த மனு மீதான விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மைத்திரியின் மனு தொடர்பான நீதிமன்றத்தின் உத்தரவு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என அருட்தந்தை சிறில் காமினி மற்றும் தாக்குதலுக்கு ஆளான ஒருவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்த தனிப்பட்ட முறைப்பாடை தாக்கல் செய்திருந்தனர்.

முறைப்பாட்டை பரிசீலித்த கோட்டை நீதவான், முறைப்பாட்டில் சந்தேக நபராக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்திருந்தார்.

கோட்டை நீதவான் விடுத்த அழைப்பாணை சட்டத்திற்கு முரணானது எனவும், தம்மை நீதிமன்றில் ஆஜராகுமாறு தெரிவித்து விடுக்கப்பட்ட அழைப்பாணை செல்லுபடியாகாது என உத்தரவு பிறப்பிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மனுவில் கோரியிருந்தார்.

No posts found.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் மைத்திரிபால சிறிசேன
Posted in இலங்கை செய்திகள்

மைத்திரியின் மனு நிராகரிக்கப்பட்டது | இலங்கை செய்திகள்

மைத்திரியின் மனு நிராகரிக்கப்பட்டது | இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளில் இருந்து தன்னை விடுவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை 21,000 ரூபாயட கட்டணத்துக்கு உட்பட்டு நிராகரிக்குமாறு மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க போதிய புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்காததற்காக முன்னாள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் 108 வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No posts found.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் மைத்திரிபால சிறிசேன
Posted in இலங்கை செய்திகள்

மைத்திரி மன்னிப்பை ஏற்று கொள்ள முடியாதது கத்தோலிக்க சபைகள்

மைத்திரி மன்னிப்பை ஏற்று கொள்ள முடியாதது கத்தோலிக்க சபைகள்


இலங்கையில் தேவலாயங்கள் மீது நடத்த பட்ட குண்டு தாக்குதல் சம்பவத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மன்னிப்பு கோரினார் .

ஆனால் மைத்திரிபால சிறிசேனாவின் அந்த மன்னிப்பை
ஏற்று கொள்ள முடியாது என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது .

No posts found.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் மைத்திரிபால சிறிசேன
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் மைத்திரிபால சிறிசேன

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிட்டு வெற்றிபெற முடியும் என தான் நம்புவதாக தெரிவித்தார்.

No posts found.
கொழும்பு குண்டு வெடிப்பு மைத்திரி உள்ளிட்டவர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

மைத்திரிபால சிறிசேனவிற்கு எச்சரிக்கை

மைத்திரிபால சிறிசேனவிற்கு எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று (27) கோட்டை நீதவான் திலின கமகே எச்சரித்துள்ளார்.

திறந்த நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்ட மைத்திரிபால சிறிசேன ​​நீதிமன்றில் ஆஜராகாததால் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்படும் என்ற புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் என்ற ரீதியிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற ரீதியிலும்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த தாக்குதல்களை தடுக்க தவறியதை சவாலுக்கு உட்படுத்தி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பின்னர் மார்ச் 17 ஆம் திகதி மீண்டும் விசாரணை நடத்த நீதவான் உத்தரவிட்டார்.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில்
ஒரு காலை இழந்தவர் மற்றும் வணக்கத்திற்குரிய சிறில் காமினி ஆகியோரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

No posts found.
கொழும்பு குண்டு வெடிப்பு மைத்திரி உள்ளிட்டவர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

சிறைக்கு செல்லும் பீதியில் மைத்திரி

சிறைக்கு செல்லும் பீதியில் மைத்திரி

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 10 கோடி ரூபா இழப்பீட்டை செலுத்த தவறினால் நான் சிறைக்கு செல்ல நேரிடும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதனால், தமக்கு நெருக்கமான மக்கள் மற்றும் அன்புக்குரியவர்களிடமிருந்து பணத்தை திரட்டுவதற்கு நிதியமொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சிறைக்கு செல்லும் பீதியில் மைத்திரி

இவ்வளவு பாரிய தொகையை நட்டஈடாக செலுத்தும் திறன் தன்னிடம் இல்லாததால், மக்களிடம் பணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

என்னிடம் சொந்தமாக உந்துருளி கூட இல்லை. நிதியத்தை நிறுவுவதற்காக குழுவொன்றை அமைப்பேன். நாடு முழுவதிலும் இருந்து பணம் சேகரிக்க வேண்டும்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கத் தவறினால், நான் சிறைக்கு செல்ல நேரிடும்” என்று அவர் கூறினார்.

மூன்று ஏக்கர் நிலத்தில் மாம்பழம் பயிரிட்டேன். எனக்கு மாம்பழ செய்கையை தவிர வேறு வருமான வழியில்லை என்றார்.

கொழும்பு குண்டு வெடிப்பு மைத்திரி உள்ளிட்டவர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

இழப்பீடு செலுத்த பணம் இல்ல மைத்திரி அறிவிப்பு

இழப்பீடு செலுத்த பணம் இல்ல மைத்திரி அறிவிப்பு

இலங்கையில் இடம்பெற்ற தேவாலய குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் ,அவ்வேளை நாட்டின் ஜனாதிபதியாக விளங்கிய மைத்திரிக்கு இழப்பீடு வழங்கு படி நீதிமன்றம் அறிவித்தது .

நீதிமன்றம் அறிவித்த 10கோடி இழப்பீட்டு தொகை தம்மால் செலுத்த முடியாது எனவும் ,அவ்விதமான தொகையில் என்னிடம் சொத்து ஏதும் இல்லை என மைத்திரி அறிவித்துள்ளார் .

இவரது கூற்றின் பிரகாரம் நான் இழப்பீட்டை செலுத்த மாட்டேன் என்பது இவரது கூற்றாக உள்ளது .

No posts found.
ரணில் மைத்திரி
Posted in இலங்கை செய்திகள்

கோட்டா நாடுகளை பகைத்தமையால் இலங்கை பின் தள்ளப்பட்டது – மைத்திரி

கோட்டா நாடுகளை பகைத்தமையால் இலங்கை பின் தள்ளப்பட்டது – மைத்திரி

இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவுக்கு ,கடந்த ஆட்சியின் வெளியுறவு கொள்கையில் ஏற்பட்ட இறுக்கம் காரணம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் .

பொலனறுவையில் கூட்டம் ஒன்றில் பேசும் பொழுது இந்த விடயத்தை தெரிவித்துள்ளார் .

ரணில் மூலம் இலங்கையில் ஜனாதிபதியாகி பின்னர் ரணில் முதுகில் குற்றியவரே இந்த மைத்திரி பால சிறிசேன என்பது இங்கே குறிப்பிட தக்கது .

ரணில் மைத்திரி
Posted in இலங்கை செய்திகள்

மைத்திரி பாலஸ்ரீசேன மீதான வழக்கு ஒத்திவைப்பு

மைத்திரி பாலஸ்ரீசேன மீதான வழக்கு ஒத்திவைப்பு

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பாலஸ்ரீசேன மீதான வழக்கு ஒத்திவைக்க பட்டுள்ளது .

இன்று வழக்கு விசாரணைக்கு வரப்பட்ட பொழுது 12 வாரங்களுக்கு இந்த வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைக்குமாறு, உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது .

இதனால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பாலஸ்ரீசேன ,இந்த வழக்கில் இருந்து தற்காலிகமாக விடுவிக்க பட்டுள்ளார் .

ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவினால் ,மைத்திரி பாலஸ்ரீசேன பழிவாங்க படுவதாக குற்ற சாட்டுக்கள் ,முன் வைக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .

Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு குண்டு ஏப்ரல் தாக்குதல்: சந்தேக நபராக மைத்திரிபால

கொழும்பு குண்டு ஏப்ரல் தாக்குதல்: சந்தேக நபராக மைத்திரிபால

ஏப்ரல் தாக்குதல் தொடர்பான தனிப்பட்ட மனு தொடர்பில் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

சிறிசேனவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அத்துடன், குறித்த தனியார் மனுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தேக நபராக பெயரிட நீதவான் திலின கமகே தீர்மானித்துள்ளார்.

அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ மற்றும் ஜேசுராஜ் கணேசன் ஆகியோர் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக, குற்றவியல் சட்டத்தின்


298 பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி தனிப்பட்ட மனுவினை தாக்கல் செய்துள்ளனர்.

    Posted in இலங்கை செய்திகள்

    மைத்திரியிடம் விசாரணை ஆட்டத்தை ஆரம்பித்த ரணில்

    மைத்திரியிடம் விசாரணை ஆட்டத்தை ஆரம்பித்த ரணில்

    இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி, மைத்திரி பால சிறிசேனவிடம் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

    முன்னாள் ஜனாதிபதியாக விளங்கிய காலப் பகுதியில் ,மைத்திரியினால் , பொது மன்னிப்பு வழங்க பட்டு ,ஜூட் ஜயமஹா என்பவர் விடுதலை செய்ய பட்டுள்ளார்.

    அது தொடர்பிலேயே. ஐந்து மணி நேரம் கடும் விசாரணைகள் இடம்பெற்றுள்ளது .


    இது ஆளும் ரணில் விக்கிரமசிங்காவினால் வழங்க பட்ட உத்தரவுக்கு அமைய ,மைத்திரியை மிரட்டும் , செயல் பாட்டு விசாரணையாக பார்க்க படுகிறது .

      Posted in இலங்கை செய்திகள்

      எங்கள் ஆதரவு ரணிலுக்கு மைத்திரி – குத்துக் கரணம்

      எங்கள் ஆதரவு ரணிலுக்கு மைத்திரி – குத்துக் கரணம்

      இலங்கையில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கா நியமிக்க பட்டதை அடுத்து

      அவருக்கு நாம் ஆதரவு வழங்க மாட்டோம் என மைத்திரி அணி தெரிவித்து வந்தது

      தற்போது நாட்டின் தேவை கருதி தாம் ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாக மைத்திரி அறிவித்துள்ளார்

      Posted in Uncategorized

      மைத்திரி கட்சியில் விலைபோனவர் அமைச்சரானார்

      மைத்திரி கட்சியில் விலைபோனவர் அமைச்சரானார்

      மைத்திரி கட்சியில் அங்கம் வகித்த சாந்த பண்டார கோட்டாவின் கட்சியில் இணைந்து

      விவசாய அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்

      இவருக்கு பேச ப்பட்ட டீலில் அதிக தொகையை பெற்றுக்கொண்டு கட்சி

      தாவியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

      சீற்றம் கொண்ட மைத்திரி அவரை தமது கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்

        Posted in இலங்கை செய்திகள்

        தமிழர்களுக்கு நன்றிக்கடன் பட்டவன்”; யாழில் மைத்திரி

        தமிழர்களுக்கு நன்றிக்கடன் பட்டவன்”; யாழில் மைத்திரி

        வடக்கு மாகாணத் தமிழ் மக்களுக்கு எனது நன்றிக் கடன் என்றும் இருக்கும் என்றும்,

        அவர்களை ஒருபோதும் மறக்கமாட்டேன் என்றும் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

        யாழ்., வடமராட்சி, உடுப்பிட்டியில் நேற்று (20) மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்

        கட்சியின் யாழ். மாவட்ட மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

        அவர் மேலும் தெரிவிக்கையில்,

        “இந்த மாநாட்டில் வைத்து ஒன்றைக் கூறிவைக்க விரும்புகின்றேன். 2015 ஜனாதிபதித் தேர்தலில் என்னை வெல்ல வைப்பதற்கு வடக்கு மாகாண மக்கள் அனைவரும்

        வாக்களித்தார்கள். அந்த நன்றிக் கடனுக்காகவே நான் எனது ஆட்சிக் காலத்தில்

        யாழ்ப்பாணம் மற்றும் வட பகுதிக்கு அதிக தடவைகள் வருகை தந்து பல்வேறுபட்ட அபிவிருத்தி செயற்றிட்டங்களை முன்னெடுத்திருந்தேன்.

        அந்த நன்றிக் கடனை நான் என்றும் மறக்கமாட்டேன். வடக்கு மாகாணத் தமிழ் மக்களுக்கு எனது நன்றிக் கடன் என்றும் இருக்கும். அவர்களை ஒருபோதும் மறக்கமாட்டேன்.

        எமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனைப் பலப்படுத்துவதன் மூலம் இந்த மாவட்டத்தில் நல்லிணக்கம்,

        சமாதான நிலைமையை முன்னெடுத்து முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும்” – என்றார்

          Posted in இலங்கை செய்திகள்

          மக்கள் பக்கமே நிற்போம்! – மைத்திரி

          மக்கள் பக்கமே நிற்போம்! – மைத்திரி

          நாங்கள் ஆட்சியில் இருக்கின்ற கட்சியாக இருக்கின்றோம். தற்போது உள்ள ஆட்சியாளர்களுக்கு எந்தக் கஷ்டத்தையும் கொடுக்க மாட்டோம். நாங்கள் மக்களது பிரச்சினையைக் கதைப்போம். மக்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டால் அதனைப் பேச முன்னிற்போம்.”

          -இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

          ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியின் வன்னி மாவட்ட மாநாடு வவுனியா நகர சபை மண்டபத்தில் இன்று (19) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறினார்.

          அவர் மேலும் தெரிவிக்கையில்,

          “வன்னி மாவட்டத்துடன் நான் சம்மந்தமுள்ளவானாக இருக்கின்றேன். இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. நான் ஜனாதிபதியாக முன் பல அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்தேன். சுகாதாரம், நீர்ப்பாசனம், விவசாயம் எனப் பல பொறுப்புக்களில் இருந்தேன். அதன்போது வன்னிப் பிரதேசத்துக்கு வந்து பல சேவைகளைச் செய்துள்ளேன். 2015ஆம் ஆண்டு என்னை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய அதிக வாக்குகளை நீங்கள் வழங்கினார்கள். நான் ஜனாதிபதியாக இருந்தபோதும் பல சந்தர்ப்பங்களில் வன்னிக்கு வந்தேன்.

          ஜனாதிபதியாக இருந்தபோது இந்த மாவட்டத்தில் பல அபிவிருத்திகளைச் செய்துள்ளேன். வடக்கு, கிழக்குக்கு என ஒரு அமைப்பை நான் நிறுவினேன். யுத்தம் நடந்த பகுதிகளில் அபிவிருத்திகளைத் துரிதப்படுத்துவதற்கு அந்த அமைப்பை நிறுவினேன். என்னால் பல அபிவிருத்திகளைச் செய்ய முடிந்தது. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர்கள் என்ற வேறுபாடு என்னிடம் இல்லை. வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற எந்த வேறுபாடும் இல்லை. அனைவரையும் இந்த நாட்டு மக்கள் என்றுதான் பார்க்கின்றேன். எனது நெஞ்சிலே இருந்து சொல்கின்றேன். நிரந்தர சமாதானத்தை உருவாக்க வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கின்றேன்.

          சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் திட்டத்தை ஆரம்பித்து வைத்தேன். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் மூலம் நிதி வழங்கினேன். சீனாவில் இருந்து அதற்கு உதவிகளைப் பெற்று பொலனறுவையில் சிறுநீரக வைத்தியசாலையை நிறுவினேன்.

          எனது ஆட்சிக்காலம் ஏழை மக்களுக்குச் சுபீட்சமுள்ள ஒரு காலமாக இருந்தது. அன்றாட தேவைக்களுக்கான பொருட்களின் விலை அதிகரிக்கவில்லை. விவசாயத்துக்குத் தேவையான பெருட்களுக்குத் தட்டுபாடு இருக்கவில்லை. வவுனியா போன்றே மற்றைய பிரதேசங்களிலும் விவசாயம் செய்யக் கூடிய மக்கள் இருக்கின்றார்கள். விவசாயிகளுக்காகப் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளேன். உங்களிடத்தில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. விலைவாசி அதிகரிப்பு பிரச்சினை இருக்கின்றது. மின்சாரத் தடை ஏற்படுகின்றது. பெற்றோலுக்கு நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளன.

          ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வளர்த்து மக்களுக்குச் சிறந்த ஆட்சியை ஏற்படுத்த மாவட்டம் மாவட்டமாகச் செல்கின்றோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்துங்கள். உங்களுடன் சகோதரமாக வேலை செய்ய இன்னும் பல சகோதரக் கட்சிகளை இணைத்துக்கொண்டு உங்களிடத்தில் வர இருக்கின்றோம். வருகின்ற தேர்தலுக்காக இவ்வாறு செயற்படுகின்றோம்.

          நாங்கள் ஆட்சியில் இருக்கின்ற கட்சியாக இருக்கின்றோம். தற்போது உள்ள ஆட்சியாளர்களுக்கு எந்தக் கஷ்டத்தையும் கொடுக்கமாட்டோம். நாங்கள் மக்களது பிரச்சினையைக் கதைப்போம். மக்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டால் அதனைப் பேச முன்னிற்போம். நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் இதையே பேசுகின்றோம்.

          எமது கட்சியின் அங்கத்தர்வாகள் ஒன்றுசேர்ந்து ஒரு தீர்மானத்தை எடுத்து ஆட்சியாளர்களுக்குக் கொடுத்துள்ளோம். இந்த அரசின் நல்ல விடயங்களுக்கு மாத்திரம் ஆதரவு கொடுக்கின்றோம். மக்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டால் அதனைத் தட்டிக் கேட்கப் பின்னிற்கமாட்டோம்.

          உங்களுக்கு உள்ள சகல பிரச்சினைகளையும் தீர்க்க எமது கட்சியுடன் இணையுங்கள். இந்த மக்கள் சந்தோஷமாக இல்லை. அவர்கள் சந்தோஷமாக இருந்தால்தான் கட்சி, அரசு என்ற வகையில் நாங்கள் சந்தோஷமடைய முடியும். மக்களுடன் பேசும்போது அவர்கள் பல கவலைகளைக் கூறுகின்றார்கள். நாட்டில் இறையாண்மை பிரச்சினையாக இருக்கின்றது. கஷ்டம் அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்புப் பிரச்சினை உள்ளது. வேலை இல்லாமையால் பலர் நாட்டை விட்டு வெளிநாடு செல்கின்றார்கள். நாட்டை அபிவிருத்தி செய்து இந்த நாட்டில் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எமது ஆசை” – என்றார்.

          இந்த நிகழ்வில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, துமிந்த சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள், கட்சி அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்

          Posted in இலங்கை செய்திகள்

          கொரியா பறந்த மைத்திரி

          கொரியா பறந்த மைத்திரி

          முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டு இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார்.

          தென் கொரியாவில் நடைபெறும் மாநாட்டு ஒன்றில் கலந்து கொள்வதற்காகவே அவர் சென்றார்.

          முன்னாள் ஜனாதிபதியுடன் மேலும் இருவர் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்..

            Posted in இலங்கை செய்திகள்

            மைத்திரியின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்

            மைத்திரியின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்

            முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்

            பாராளுமன்ற உறுப்பினர் விடுத்த கோரிக்கையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

            2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள

            குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்குமாறே மைத்திரி கோரிநின்றார்.

              Posted in இலங்கை செய்திகள்

              பேய்’ கதை- மைத்திரி காட்டம்

              பேய்’ கதை- மைத்திரி காட்டம்

              மதுபானசாலைகளை திறக்குமாறு அரசாங்கம் உத்தி​யோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் கலால் வரி திணைக்களமே தன்னிச்சையாக தீர்மானம் எடுத்துள்ளதாக அரசாங்கத் தரப்பினரால் பதிலளிக்கப்பட்டு வருகின்றது.

              இந்நிலையில், அரசாங்கத்தின் பிரதான பங்காளி கட்சிகளில் ஒன்றான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறி​சேன எம்.பி, புதுக்
              கதையொன்றை கூறியுள்ளார்.

              மதுபான நிலையங்களை திறப்பதற்கு உத்தரவு வழங்கியது யார் எனக் கேள்வியெழுப்பிய அவர், பேயாக இருக்கலாம் என கிண்டல் செய்தார். மதுபான நிலையங்களை திறப்பதற்கு உத்தரவிட்டது யார் என்றக்கேள்விக்கு சரியான பதில் தெரியாவிட்டால் இதுவே
              பதிலாகும் என்றார்.

              நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கத்திற்கு பணம் இல்லையெனவும் அதனாலேயே மதுபான நிலையங்கள் திறக்கப்பட்டதாகவும் தெரிவித்த அவர், எனவே மதுபான நிலையங்கள்
              திறக்கப்பட்டமையானது ஒரு அருவருப்பான செயல் என்றார்.

              Posted in Uncategorized

              கோட்டா ,மைத்திரி கட்சி திடீர் சந்திப்பு – பேச போவது என்ன ..?

              கோட்டா ,மைத்திரி கட்சி திடீர் சந்திப்பு – பேச போவது என்ன ..?

              ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (26) காலை நடைபெறவுள்ளது.

              இதனை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

              கலந்துரையாடல் காலை 11.00 மணிக்கு நடைபெறும் என்றும், கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 14

              பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடலில் கலந்து கொள்ள வாய்ப்பு கோரியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

              இந்த கலந்துரையாடலில் விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுடன் காலை 9.00 மணிக்கு கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

              கட்சியின் தலைவர், சிரேஷ்ட உப தலைவர்களான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர, பொருளாளர்

              மற்றும் இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண ஆகியோருடன் தானும் இக் கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளதாக துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.