Tag: பாடசாலை
கொரனோ அதிகரிப்பு -யாழில் பாடசாலைகள் அடித்து பூட்டு
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம், யாழ். மாவட்டத்தில் மிக வேகமாக அதிகரித்து
வருவதால், யாழ். கல்வி வலையத்திலுள்ள சகல பாடசாலைகளும் ஒரு வாரத்துக்குத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இன்று (29) முதல் ஒரு வாரத்துக்கு, பாடசாலைகள் மூடப்படும். அதுதொடர்பிலான தீர்மானம் நேற்று (28) மாலை எட்டப்பட்டுள்ளது .
.வடமாகாண ஆளுநர், வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, மேல் மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் முதலாம் தரத்தைத் தவிர, ஏனைய அனைத்துத் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று (29) ஆரம்பமாகுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்களை குழுக்களாகப் பிரித்து கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதனூடாக கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கலாம்
என அறிவுறுத்தி, கல்வி அமைச்சின் செயலாளரால், ஒழுங்கு விதிகள் அடங்கிய சுற்றறிக்கையும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாணவிக்கு கொரனோ -பாடசாலைக்கு பூட்டு
மாணவிக்கு கொரனோ -பாடசாலைக்கு பூட்டு
இலங்கை கண்டி நோர்வுட் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு கொரனோ நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்ட நிலையில் அந்த பாடசாலை அடித்து பூட்ட பட்டுள்ளது
மறு அறிவித்தல் வரை குறித்த பாடசாலை திறக்கப்பட மாட்டாது என தெரிவிக்க பட்டுள்ளது
தற்போது கிருமி நாசினிகளைக் கொண்டு கழுவும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது
பிரிட்டனில் இன்று பாடசாலைகள் திறப்பு – கொதிக்கும் பெற்றோர்கள்
பிரிட்டனில் இன்று பாடசாலைகள் திறப்பு – கொதிக்கும் பெற்றோர்கள்
பிரிட்டனில் கொரனோ நோயின் தாக்குதலினால் பலநூறு மக்கள் நாள் தோறும் பலியாகிய வண்ணம் உள்ளனர் ,
.இவ்வேளை இன்று எட்டாம் திகதி பாடசாலைகள் மீள திறக்க படுகின்றன
அரசின் இந்த அறிவிப்பினால் பெற்றோர்கள் பெரிதும் பீதியில் உறைந்துள்ளனர் ,
முடங்கி போன பொருளாதர மீள் சீர் தூக்கும் நிலையில் இந்த விடயங்கள் இடம்பெறுவதான குற்றச்சாட்டுக்கள்
சமூக வலைத்தளங்களில் முன் வைக்க பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
பாடசாலை அதிபருக்கு தர்ம அடி
பாடசாலை அதிபருக்கு தர்ம அடி
இலங்கை பொகவந்தலாவ, டின்சின் தமிழ் மகா வித்தியாலய அதிபர் மீது மர்ம நபர்கள் குழு ஒன்று இடீர் தாக்குதலை நடத்தியது
இதில் பலத்த காயமடைந்த நிலையில் அவர் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
இந்த தாக்குதலுக்குரிய காரணம் தெரியவரவில்லை போலீசார் தொடர்ந்து புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
டீச்சருக்கு கொரனோ – பாடசாலை அடித்து பூட்டு
இலங்கை ,கண்டி காட்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்கை நெறி போதித்து வந்த டீச்சர் ஒருவருக்கு கொரனோ
நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்ட நிலையில் தற்போது அந்த பாடசாலை அடித்து பூட்ட பட்டுள்ளது
மறு அறிவித்தல் வரும் வரை திறக்க பட மாட்ட்து என தெரிவிக்க பட்டுள்ளது ,சுகாதார முறைமைக்கு உட்படுத்த பட்டு கிருமி
நாசினிகள் கொண்டு பாடசாலை முழுவதுதுமாக சுத்தம் செய்ய பட்டுள்ளது
,மேலும் இங்கு கல்வி பயின்ற மாணவர்கள் அனைவருக்கும் சோதனை மேற்கொள்ள பட்டு வருகிறது
இதுவரை இலங்கையில் நானூருக்கு மேற்பட்டவர்கள் கொரனோ நோயினால் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது
ஆசிரியர்உள்ளிட்ட 15 மாணவர்களுக்கு கொரனோ – பாடசாலை அடித்து பூட்டு
ஆசிரியர்உள்ளிட்ட 15 மாணவர்களுக்கு கொரனோ – பாடசாலை அடித்து பூட்டு
இலங்கை நாவலப்பிட்டி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும்
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நடத்த பட்ட கொரனோ சோதனையின்
ஒரு ஆசிரியர் உள்ளிட்ட பதின் ஐந்து மாணவர்கள் குறித்த நோயின் தாக்குதலினால் பாதிக்க பட்டுள்ளது கண்டறிய பட்டுள்ளது
இதனை அடுத்து அனைவரும் தனிமை படுத்த பட்டு சிகிச்சை
பெற்று வருகின்றனர் ,பாடசாலை மறு அறிவித்தல் வரை அடித்து பூட்ட பட்டுள்ளது
லண்டனில் பங்குனி இறுதியில் பாடசாலைகள் திறக்க நடவடிக்கை
லண்டனில் பங்குனி இறுதியில் பாடசாலைகள் திறக்க நடவடிக்கை
பிருத்தானில் பரவி வரும் நோயின் தாக்குதல் அதிகரிப்பால் பாடசாலைகள்
மேலே அடித்து பூட்ட பட்டுள்ளது ,தற்பொழுது மீளவும் பங்குனி மாத இறுதியில்
சித்திரை ஆரம்பத்தில் திறக்க நடவடிக்கை மேற்கொள்ள படலாம் என தெரிவிக்க படுகிது
இது தொடர்பான விசேட அறிவித்தலை ஆளும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்
,மீள வேகமாக பாடசாலைகள் ஆரம்பிக்க படுவது மக்கள் மத்தியில்
பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
பிரிட்டனில் பாடசாலைகள் 13 ம் திகதி வரை அடித்து பூட்டு
பிரிட்டனில் பாடசாலைகள் 13 ம் திகதி வரை அடித்து பூட்டு
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதல்
காரணமாக பாடசாலைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன
இவை எதிர்வரும் 13 ம் திகதியே திறக்க படும் என பல பாடசலைகள்
மாணவர்களுக்கு செய்திகள் அனுப்பியுள்ளன
பரவி வரும் நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து மேற்படி விடயம் தெரிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது
பாடசாலைகள் ஆரம்பிக்கும் தினம் தொடர்பான விஷேட அறிவிப்பு
பாடசாலைகள் ஆரம்பிக்கும் தினம் தொடர்பான விஷேட அறிவிப்பு
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர்ந்த ஏனைய அனைத்து பகுதிகளிலும் உள்ள பாடசாலைகள்
2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பாலர் பாடசாலைகள் மற்றும் 1 முதல் 5 தரம் வரையான வகுப்புக்கள்
தவிர்ந்த ஏனைய வகுப்புகளுக்காகவே இவ்வாறு பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
யாழில் பாடசாலைகள் அனைத்தும் பூட்டு
யாழில் பாடசாலைகள் அனைத்தும் பூட்டு
கொவிட் 19 அவதான நிலை காரணமாக யாழ்ப்பாணம் உடுவில் மற்றும் தெல்லிப்பளை கல்வி வலயங்களைச் சேர்ந்த சகல
பாடசாலைகளுக்கும் இன்று(14) முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
உடுவில் கல்வி வலயத்தில் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து அப்பகுதியை தனிமைப்படுத்த
நடவடிக்கை எடுத்துள்ளமையால் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளும் நாளை முதல் பூட்டு
பாடசாலைகளும் நாளை முதல் பூட்டு
வடக்கு மாகாணத்தில் 4 மாவட்டங்களில் நாளை வியாழக்கிழமையும் மறுநாள் வெள்ளிக்கிழமையும் பாடசாலைகள்
மூடப்படும் என்று மாகாண ஆளுநர், பி.எம்.எஸ். சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மற்றும்
மன்னார் மாவட்டப் பாடசாலைகளுக்கு இரண்டு நாள்கள் விடுமுறை நாளை தொடக்கம் விடப்படுகிறது.
மாவட்டச் செயலாளர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக வடக்கு மாகாண ஆளுநரால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஒரு மாணவன் மாத்திரம் கல்வி கற்கும் பாடசாலை
இலங்கையில் ஒரு மாணவன் மாத்திரம் கல்வி கற்கும் பாடசாலை
ஒரு மாணவன் மாத்திரம் கல்வி கற்கும் பாடசாலை உண்டு.
.இரண்டு மாணவர்களைக்கொண்ட பாடசாலையும் உண்டு. 5 மாணர்களைக்கொண்ட பாடசாலையும் இந்த பாசாலைகள் அனைத்திற்கும் ஆசிரியர்கள் இருக்கின்றனர்.இவ்வாறான
அனைத்து பாடசாலைகளில் விசேட வசதிகளை மேற்கொள்வதற்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பாடசாலைகளுக்கு போதுமான நிதி
வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் செயவாளர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் உள்ள 10 ஆயிரத்து 165 பாடசாலைகளுக்கு 480 மில்லியன் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மாறுபட்ட உலகில் மாறுபட்ட வகையில் இன்று செயல்படவேண்டியிருப்பதாக தெரிவித்த கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, பாடசாலைகளை
ஆரம்பிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆரம் ஏற்பாடுகள் இங்கு குறிப்பிட்ட அவர் கல்வி அமைச்சும் சுகாதார அமைச்சும் ஒன்றிணைந்து பாடசாலைகளுக்கான 15 2020 என்ற சுற்றறிக்கை
அன்று தயாரிக்கப்பட்டது.இது தற்போது சட்டமாக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்றை தடுத்தல் மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளை தயார்படுத்துவதற்கான
இந்த சுற்றறிக்கைக்கு அமைவாக இதன் உத்தியோகபூர்வ குழு 15 – 2020யின் படி மாகாண மட்டத்தில் பாடசாலைகளுக்கான சுகாதார
குழுவை நடைமுறையில் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதில் உள்ளடக்கப்பட வேண்டியவர்கள் மற்றும் மாணவர்களின் போக்குவரத்து குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை 2020.05.11ஆம்திகதி அதாவது முதலாவது கொவிட் 19 அலை ஆரம்பமானபோது விடுக்கப்ட்டதாகும்.
இதில் 19 பக்கத்தில் பாடசாலைகள் எவ்வாறு கல்வி நடவடிக்கைகளுக்காக தயார் செய்யப்ட வேண்டும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அப்போது கல்வி அமைச்சில் இருந்து
இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. நாம் கண்ட அனுபவங்களின் அடிப்படையில் பாடசாலைகளை கேந்திரமாகக்கொண்டு அதாவது மாணவர்களை – மாணவர்கள் என்பவர்களை நாம் நாட்டின் இரத்தினங்களாகவே கருதி தீர்மானத்தை மேற்கொண்டோம்.
அவர்களது உரிமை என்பது அவர்களுக்கான கல்வியாகும். இதேபோன்று இரத்தினமான மதிக்கப்படும் மாணவர்களை
பாதுகாப்பவர்கள் பெற்றோர். இதனால் தான் கல்வி அமைச்சர் இந்த பாடசாலைகள் தொடர்பில் சுதந்திரமான தீர்மானத்தை மேற்கொள்வதற்கான உரிமையை வழங்குமாறு ஆலோசனை வழங்கினார்.
இதற்கு பொறுத்தமானவர்கள் பெற்றோர் பழைய மாணவர்சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், அதிபர் ,ஆசிரியர், கிராம
உத்தியோகத்தர் பாடசாலையை கேந்திரமாகக்கொண்ட சுகாதார அதிகாரி போக்குவரத்து பிரிவினர் ஆகியோரை உதவுமாறு கூறினோம்.
இதற்கமைவாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள பாடசாலைகளை ஆரம்பிப்பதில்லையென நேற்று தீர்மானங்களை மேற்கொண்டனர். இந்த நடைமுறையின் கீழ் இதற்கு கிடைத்த
பயன். இதேபோன்று தமது பிள்ளைகளின் கல்விக்காக காத்திருந்த பெற்றோர் தமது பிள்ளைகளை ஆர்வமாக நேற்றைய தினம்
காடசாலைகளுக்கு அனுப்ப முடிந்தமை அந்த பெற்றோருக்கு கிடைத்த பலன்களாகும்.
குறைகாடுகள் தொடர்பில் காத்திரமான விமர்சனங்களை வரவேற்கிறோம்.அவற்கு தீர்வை வழங்கவும் நாம் தயாராகவுள்ளோம் என்றும் தெரிவித்தார்.
ஓகஸ்ட் மாதத்திலிருந்து சில பாடசாலைகளுக்கு தலா 110,000 வரை வழங்கியுள்ளோம். ஒரு சில பாடசாலைகள் சுகாதார அதிகாரி ஒப்புதல் அளிக்கும் வரை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது.
தற்போது முடக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் பாடசாலைகளை மீண்டும் திறக்கும்போது கடுமையான நெறிமுறைகள்
பின்பற்றப்படும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேலும் தெரிவித்தார்
பாடசாலைகள் ஆரம்பம் தொடர்பான விஷேட அறிவிப்பு
பாடசாலைகள் ஆரம்பம் தொடர்பான விஷேட அறிவிப்பு
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகளை தவிர்ந்த ஏனைய
பகுதிகளில் உள்ள பாடசாலைகளை இம்மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
6 ஆம் தரம் முதல் 13 ஆம் தரம் வரையான வகுப்புகளுக்கே இவ்வாறு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டியில் 400 மில்லியன் செலவில் 04 தேசிய பாடசாலைகள்
கண்டியில் 400 மில்லியன் செலவில் 04 தேசிய பாடசாலைகள்
கண்டியில் தலா 100 மில்லியன் ரூபா வீதம் 400 மில்லியன் செலவில் 04 தேசிய பாடசாலைகள்….
• கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தலா 2000 ரூபா வீதம் போசாக்கு பொதி….
• ஆயுர்வேதம் என்ற பெயரில் இயங்கும் போலி மசாஜ் பார்லர்கள் மீது சோதனை நடத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை….
• மத்திய மாகாணத்தில் பிளாஸ்ரிக், பொலித்தீன் சேகரித்து மீள்சுழற்சி வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படும்….
கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்தின்’ அபிவிருத்தி
நடவடிக்கைகளின் கீழ் கண்டி மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டம் முழுவதும் கிராம மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்
கொடுப்பதற்கும், செயற்படுத்த வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டமொன்று தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ‘சமூக
உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக் குழு’ நேற்று (2020.11.14) கண்டி மாவட்ட செலயக காரியாலயத்தில் கூடியது.
புதிய அரசாங்கம் பௌதீக வளங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் போன்று மனித வள அபிவிருத்தி என்பவற்றை நோக்காக கொண்டு இந்த அபிவிருத்தி
செயற்திட்டத்தை ஆரம்பித்து செயற்படுத்துவதுடன், இன்று நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் அந்தந்த அமைச்சுக்களின்
சார்பில் கண்டி மாவட்டத்தில் செயற்படுத்தப்படவுள்ள பல வேலைத்திட்டங்கள் தொடர்பில் கீழ்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
கல்வி
•கண்டி மாவட்டத்தில் தலா 100 மில்லியன் ரூபாய் வீதம் 400 மில்லியன் செலவில் 04 தேசிய பாடசாலைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
•வளல ஏ.ரத்நாயக்க விளையாட்டு பாடசாலையை மேம்படுத்தி அடுத்த ஆண்டில் காடசாலைக்குள் தங்குமிட வசதிகளுடன் தரம் 8 இற்காக டெலண்ட் ஐடின்டிஃபிகேஷன் வேலைத்திட்டமொன்றின்
கீழ் விளையாட்டில் திறமைவாய்ந்த 35 பிள்ளைகளை இணைத்து கொள்வதுடன், ஒரு பிள்ளைக்கு தலா 10,000 ரூபாய் வீதம் ஒதுக்கீடு செய்து அவர்கள் விளையாட்டுத்துறையில் தேசிய மட்டத்திலிருந்து
சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த ஆண்டில் அப்பாடசாலையில் 130 மீட்டர் செயற்கை ஓடும் பாதையை நிறுவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
•அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களினால் பல்வேறு திட்டங்கள் ஊடாக ஒரு பில்லியன் ரூபாய் முதலீட்டை வளல ஏ.ரத்நாயக்க விளையாட்டு
பாடசாலைக்கு ஈடுபடுத்துவதற்கு தயாராக இருப்பதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். மாவட்டத்தில் ஆசிரியர் இருப்பு
மிகவும் திறனற்றதாக இருப்பதால் தேசிய அளவில் ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை வகுக்க முன்மொழியப்பட்டது.
•கண்டியில் உள்ள பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்ப்பதில் காணப்படும் நெருக்கடியை தீர்ப்பதற்கு வெளி மாவட்டங்களில்
தெரிவுசெய்யப்பட்ட ஐந்து பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
•கஷ்டப்பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு அனுப்பப்படும் ஆசிரியர்கள் அங்கு நீடித்திருக்காமைக்கு முக்கிய காரணம்
அவர்களுக்கு தங்குவதற்கு பொருத்தமான இடம் இல்லாமையாகும். இப்பிரச்சினைக்கு தீர்வாக தேவையுள்ள பாடசாலைகளை அடையாளங்கண்டு ஆசிரியர் தங்குமிடங்களை நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டது.
மகளிர் மற்றும் குழந்தைகள்
•கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தலா 2000 ரூபாய் ஊட்டச்சத்து பொதியை 10 மாதங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.
•குழந்தை பருவ வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்தி கண்டி மாவட்டம் முழுவதும் தேசிய கொள்கையுடன் பல திட்டங்களை செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
•அரசு மற்றும் தனியார் துறை இணைந்து மகளிர் மற்றும் குழந்தை பராமரிப்பு திட்டங்கள் கண்டி மாவட்டத்தில் செயற்படுத்தப்படுவதுடன், 1938 மகளிர் உதவி மற்றும் ஆலோசனை சேவைகள் அவசர பிரிவு 24 மணி நேரமும் இயங்குகிறது.
கல்வி சேவைகள்
•கண்டி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் ஒரு முன்பள்ளி மற்றும் ஒரு பகல்நேர பராமரிப்பு
மையத்தை வழங்க ஏற்பாடுகள் செய்வதுடன், வெளிப்புற குழந்தைகள் பூங்காவும் இதில் உள்ளடங்கும்.
•கழிப்பறைகள், கழிவறைகள் மற்றும் தண்ணீர் வசதி இல்லாத அனைத்து பாடசாலைகளுக்கும் அவ்வசதிகளை இவ்வாண்டு
பெற்றுக் கொடுக்கப்படுவதுடன், அதன்படி 2021 முதல் இலங்கையில் ஒவ்வொரு பாடசாலையிலும் மேற்கண்ட வசதிகள் பூர்த்தி செய்யப்படும்.
•டிசம்பர் 25 க்கு முன்னர் பாடசாலை பிள்ளைகளுக்கு புத்தகங்கள், சீருடைகள் மற்றும் காலணிகளை வழங்குதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்.
சுகாதாரம்
•தோட்ட மருத்துவமனைகளை அரசிற்கு கையகப்படுத்துவதில் கண்டி மாவட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கவும், 2021 ஏப்ரல் மாதம்
கண்டி மாவட்டத்தில் தாதியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
•தெல்தெனிய வைத்தியசாலையை கொவிட் சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதால், பொதுவான நோய்களுக்கு சிகிச்சை பெறும்
மக்களுக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பிரிவுகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
•கண்டி மருத்துவமனையில் தற்போது இரண்டு பி.சி.ஆர் இயந்திரங்களால் கொவிட் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு
வருவதாகவும், அடுத்த வாரத்திற்குள் புதிய பி.சி.ஆர் இயந்திரம் கிடைக்கும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
சுதேச வைத்திய பிரிவு
•உள்நாட்டு மருந்துகள் நாட்டில் பயிரிடப்பட்டு கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன்,
இந்த அளவிற்கு இலங்கையை பாதித்த கொவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உள்ளூர் நோய்த்தடுப்பு மருந்துகளே காரணம் என்று மக்கள் நம்புகிறார்கள் என்று கூறப்பட்டது.
•சுதேச வைத்திய பயிற்சி நிறுவனத்தை மேம்படுத்தவும், எதிர்காலத்தில் இந்த நோக்கத்திற்காக அதிக மாணவர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
•கண்டி நகரத்திலும் அதற்கு அப்பாலும் மசாஜ் பார்லர்கள் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து இந்த விவாதம் கவனம் செலுத்தியது, மேலும் அவற்றைத் தடுக்கும்
பொருட்டு, ஆயுர்வேத பெயரில் இயங்கும் போலி மசாஜ் பார்லர்கள் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து சோதனை செய்யப்படுவதுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
•மசாஜ் பார்லர்களை பதிவு செய்வதற்கான செயல்முறை கடுமையான சட்ட கட்டமைப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் என்று அபிவிருத்தி குழுவுக்கு தெரிவிக்கப்பட்டது.
உள்ளூராட்சி நிறுவனங்கள்
•மத்திய மாகாணத்தில் பிளாஸ்ரிக் பொலிதீனை சேகரித்து மீள்சுழற்சி செய்வதற்கும் மீள்சுழற்சி திட்டத்தைத் தொடங்குவதற்கும் பராமரிப்பதற்கும் திட்டமிடப்பட்டிருப்பதாக அபிவிருத்தி குழுவில் விவாதிக்கப்பட்டது.
12 வயது பாடசாலை மாணவிக்கு தொற்று
12 வயது பாடசாலை மாணவிக்கு தொற்று
மஸ்கெலியா பிரதேசத்தில், 12 வயது பாடசாலை மாணவி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
மஸ்கெலியா பொதுசுகாதார பரிசோதகர் பிரிவில், 163 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலே, மேற்படி மாணவி தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
மாணவியின் குடும்பத்தில், வேறு எவரும் தொற்றுக்கு உள்ளாகவில்லை என்றுத் தெரிவிக்கப்படுகிறது.
பேலியாகொட மீன்சந்தையில் பணிப்புரிந்த மஸ்கெலியாவைச் சேர்ந்த நபரொருவின் வீட்டில், அண்மையில் நடந்த நிகழ்வுக்கு,
மேற்படி சிறுமி உட்பட அவரது குடும்பத்தினர் சென்றுவந்துள்ளனர் என்றும் இதனூடாகவே, சிறுமி தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சிறுமி அவரது தாயாருடன் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
லண்டனில் பாடசாலைகள் அடித்து பூட்ட படுகிறது – விபரம் உள்ளே
லண்டனில் பாடசாலைகள் அடித்து பூட்ட படுகிறது – விபரம் உள்ளே
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயினை
அடுத்து மக்கள் அதிகம் பாதித்து வருகின்றனர், ஆனால் பாடசாலைகள் தொடர்ந்து நடத்த பட்ட வண்ணம் உள்ளது
இதனை அடுத்து தற்பொழுது மாணவர்களுக்கு உடல் நிலை சீரற்று நிலையில்
தாக்குதல் இருந்தால் வீட்டில் நிறுத்தி வைக்கும் படியும் அது
தொடர்பாக மருத்துவர் உதவியை நாடும் படியும் தெரிவிக்க பட்டுள்ளது
மேலும் நம்பர் ஒன்பாதம் திகதி முதல்; 13 ஆம் திகதி வரை அடித்து மூட படுகிறது என தெரிவிக்க பட்டுள்ளது
School officials are asking anyone not feeling well to stay home and seek guidance from a doctor.
All schools will be closed for in-person learning the week of Nov. 9 through Nov. 13, according to school officials.
Students must participate in full-time distance during this time. Classes will not be held on Wednesday, Nov. 11 in honor of Veteran’s Day, school officials said.
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது தாமதம் என அறிவிப்பு
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது தாமதமடையலாமெனக் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது தாமதமடையலாமெனக் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்துதெரிவிக்கையில் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் தவணை பாடசாலை விடுமுறை முடிந்து மீண்டும் எதிர்வரும் 9ஆம் திகதி பாடசாலைகளை மீள ஆரம்பிக்க
திட்டமிட்டிருப்பினும் தற்போது பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக உரிய திகதியில் பாடசாலைகளை மீள திறக்க முடியாது போகும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக சுகாதார அதிகாரிகளிடம் பரிந்துரைகளை கேட்டுள்ளதாகவும் சுகாதார
பரிந்துரைகளின் அடிப்படையில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தாமதடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து பாடசாலைகளிலும் இன்று முதல் கல்வி நடவடிக்கைககள் வழமைக்குத் திரும்பின.
அனைத்து பாடசாலைகளிலும் இன்று முதல் கல்வி நடவடிக்கைககள் வழமைக்குத் திரும்பின.
நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்ட
அனைத்து பாடசாலைகளிலும் இன்று (08) முதல் கல்வி நடவடிக்கைககள் வழமைக்குத் திரும்பியுள்ளன.
இதனடிப்படையில், காலை 7.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை வழமையான
நேரத்தில் கல்வி நடவடிக்கைகள் நடைபெறும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், பாடசாலைகளில் மாணவர்கள் சுகாதார நடைமுறைகளை
தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும் எனவும் கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக விடுமுறை வழங்கப்பட்ட அனைத்து
அரச பாடசாலைகளிலும் கடந்த 10 ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
செப்டெம்பர் 2 முதல் பாடசாலைகள் நடைபெறும் நேரங்கள் அறிவிப்பு
செப்டெம்பர் 2 முதல் பாடசாலைகள் நடைபெறும் நேரங்கள் அறிவிப்பு
உலகில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாடசாலைகள் தற்பொழுது மீண்டும் பகுதி அளவில்
ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் செப்டெம்பர் 2 ஆம் திகதி முதல் சில
வகுப்புகளுக்கான கால நேரம் வழமைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி ஆண்டு 10,11,12 மற்றும் 13 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள்
தினமும் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை 10,11,12 மற்றும் 13 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இதுவரை
காலை 7.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
11 ஆம், 12ஆம், 13ஆம் தர வகுப்புக்களுக்குரிய கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்
11 ஆம், 12ஆம், 13ஆம் தர வகுப்புக்களுக்குரிய கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்
அரச பாடசாலைகளில் தரம் 11ஆம், 12ஆம், 13ஆம்
வகுப்புக்களுக்குரிய கல்வி நடவடிக்கைகள் இன்று அரம்பமாகி
காலை 7.30 தொடக்கம் பிற்பகல் 3.30 வரை கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் பாடசாலைகளின் அதிபர்கள் நாளை முதல் (28) எதிர்வரும்
வெள்ளிக்கிழமை (31) வரை தத்தமது பாடசாலைகளில் தங்கியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்தக் காலப் பகுதியில், உதவித் தேர்தல் ஆணையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு
பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது






