Tag: படுகொலை
இஸ்ரேல் காசா படுகொலைக்கு எதிராக கொலண்ட் Amsterdam இல் போராட்டம்
இஸ்ரேல் காசா படுகொலைக்கு எதிராக கொலண்ட் Amsterdam இல் போராட்டம்
இஸ்ரேல் காசா படுகொலைக்கு எதிராக கொலண்ட் மத்திய Amsterdam இல் பகுதியில் மக்கள் பெரும் போராட்டம் நடத்தியுள்ளனர்
இஸ்ரேல் அரச இராணுவத்தால் பாலஸ்தீனம் காசா மக்கள் மீது நடத்த படும் கொடிய இனப்படுகொலைக்கு எதிராக ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு இந்த போரினை நடத்தியுள்ளனர் .
காசா மீது இஸ்ரேல் புரிந்து வரும் கொடிய தாக்குதலுக்கு எதிராக சர்வதேச அளவில் மக்கள் பெரும் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
ஹாலண்டில் தமிழ் பெண் படுகொலை நகைகள் கொள்ளை
ஹாலண்டில் தமிழ் பெண் படுகொலை நகைகள் கொள்ளை
ஹாலண்டில் தமிழ் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் ,இவரது வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் நகைகள் என்பனவற்றை கொள்ளை அடித்து தமிழ் பெண்ணை படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
ஹொலண்ட் பேபார்வைக் பகுதியில் தனிமையில் வசித்து வந்த இலங்கை தமிழ் பெண் ஒருவரே இவ்விதம் படுகொலை செய்ய பட்டுள்ளார் .
இந்த படுகொலைகளின் காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,தொடர்ந்து போலீஸ் குற்ற தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
மேற்படி சம்பவம் ஹொலண்ட் தமிழர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
- காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் 3000க்கும் மேற்பட்ட முறை மீறியுள்ளது

- ஒரு லட்சம் ரூபாவுக்கு விற்க பட்ட சிசு

- பாதுகாப்புச் செயலாளர் ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்தார்

- வாகனப் பதிவுத் தகடுகள் மீது சட்ட நடவடிக்கை இல்லை

- மத்திய வங்கி இந்த ஆண்டு 6 பில்லியன் ரூபாய் மதிப்பிலான பணத்தை அச்சிட்டுள்ளது

- மாணவியைக் காப்பாற்ற முயன்றபோது ஆசிரியர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

- நவம்பர் வரை சீரான எரிபொருள் விநியோகம்

- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

தேரர் படுகொலை சந்தேகநபர் சுட்டுக் கொலை
தேரர் படுகொலை சந்தேகநபர் சுட்டுக் கொலை
கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய விகாரை ஒன்றில் தேரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
அத்தனகல்ல யடவக்க பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத்தை மீட்க சந்தேகநபரை அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேக நபர் தப்பிச் செல்ல முற்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.
கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய, கஹடான ஸ்ரீ ஞானராம விகாரையின் தேரர் ஒருவர் கடந்த ஜனவரி 23 ஆம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேகநபர் மொனராகலை ஹம்பேகமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் இருப்பதாக ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதான சந்தேக நபர் அரலகங்வில பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
கனடா ஒட்டாவாபடுகொலை குடும்பத்தவர்களின் விருப்பப்படி இறுதிக் கிரியைகள்
கனடா ஒட்டாவாபடுகொலை குடும்பத்தவர்களின் விருப்பப்படி இறுதிக் கிரியைகள்
கனடா ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட ஆறு இலங்கையர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும், அவர்களின் கோரிக்கைகளை கனேடிய அதிகாரிகளுடன் இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தொடர்புகொள்வதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் திகதி ஒட்டாவாவில் உள்ள Barrhaven இல் உள்ள ஒரு இல்லத்தில் தாய், நான்கு பிள்ளைகள் மற்றும் ஒரு குடும்பத்தில் அறிமுகமானவர் உட்பட ஆறு இலங்கையர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து ஒட்டாவாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினால் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டதாக அமைச்சகம் அறிக்கையினூடாக தெரிவித்துள்ளது.
“பாதிக்கப்பட்டவர்களின் கணவர் மற்றும் குறித்த சிறுவர்களின் தந்தையுமாகிய நபர் சம்பவ இடத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அங்கு அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
கொலைச் சம்பவம் தொடர்பாக 19 வயதுடைய இலங்கையர் ஒருவரை சட்ட அமலாக்க அதிகாரம் கைது செய்துள்ளது. அவர் தற்போது பொலிஸ் காவலில் உள்ளார்” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சடலங்கள் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் விருப்பத்தின்படி இறுதிச் சடங்குகள் உரிய நேரத்தில் நடத்தப்படும்.
கனடா ஒட்டாவாபடுகொலை குடும்பத்தவர்களின் விருப்பப்படி இறுதிக் கிரியைகள்
வெளியுறவு அமைச்சகத்தின் தூதரக விவகாரப் பிரிவு, ஒட்டாவாவில் உள்ள உயர் ஸ்தானிகராலயத்துடன் நெருக்கமாக தொடர்பு கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தேவையான சம்பிரதாயங்களை நிறைவேற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள்” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குற்றம் நடந்த இடத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக ஒரு விழிப்புணர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மார்ச் 9, 2024 சனிக்கிழமையன்று நகர ஆளுநர் ஒரு சிறப்பு விழிப்புணர்வைத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களின் தந்தையை (கணவரை) மருத்துவமனையில் பார்வையிட்டுள்ளனர்.
அமைச்சு இலங்கையில் உள்ள குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு, அவர்களின் கோரிக்கைகளை இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஊடாக சம்பந்தப்பட்ட கனேடிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளது ” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் தலைநகர் ஒட்டாவாபடுகொலை சம்பவம் மேலும் பல தகவல்கள்
கனடாவின் தலைநகர் ஒட்டாவாபடுகொலை சம்பவம் மேலும் பல தகவல்கள்
கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட நான்கு பிள்ளைகளின் தாயார் இந்நாட்டின் பொல்கஹவெல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என தெரியவந்துள்ளது.
35 வயதான தர்ஷனி டிலந்திகா ஏகநாயக்கவின் தாயார் கண்ணீர் மல்க தெரணவிடம் இன்று தெரிவித்தார்.
கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பெர்ஹெவன் இல் இலங்கை குடும்பம் ஒன்று வாழ்ந்த வீட்டில் இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது.
கடந்த புதன்கிழமை கனடா நேரப்படி இரவு 11 மணிக்கு சற்று முன்னர் இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றிருந்தது.
சம்பவத்தின் போது 35 வயதுடைய தாய், அவரது நான்கு பிள்ளைகள் மற்றும் அவர்களுடன் வசித்த மேலும் இரு இலங்கையர்களும் வீட்டில் இருந்துள்ளனர்.
அப்போது குழந்தைகளின் தந்தையான 38 வயதுடைய தனுஷ்க விக்கிரமசிங்க வீட்டுக்கு வந்தபோது, வீட்டில் விளக்குகள் வழமைபோல் எரியவில்லை.
அவர் வீட்டுக்குள் நுழைந்தவுடனேயே யாரோ அவரைத் தாக்கியதால், இருள் சூழ்ந்திருந்ததால், அப்போது தாக்கிய நபரை அடையாளம் காண முடியவில்லை.
எவ்வாறாயினும், தம்மைத் தாக்கிய இலங்கையைச் சேர்ந்த ஃபேப்ரியோ டி சொய்சா என அடையாளம் கண்ட தனுஷ்க, அவரது குடும்ப உறுப்பினர்கள் குறித்து கேட்டுள்ளார்.
சிறிது நேரம் கழித்துதான் தனுஷ்கவின் கைகள் இரத்த வெள்ளத்தில் கிடந்ததையும், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதையும் உணர்ந்தார்.
அப்போது, தனுஷ்க ஃபேப்ரியோவின் கையில் இருந்த கத்தியை பறித்துக் கொண்டு, தனக்கு உதவுமாறு கூச்சலிட்டவாறு வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார்.
கனடாவின் தலைநகர் ஒட்டாவாபடுகொலை சம்பவம் மேலும் பல தகவல்கள்
911 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்கு இரவு 10:52 மணிக்கு அவசர நிலை குறித்து அழைப்பொன்று வந்ததாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்தனர்.
அழைப்பினை ஏற்படுத்திய நபர் 911 என்ற இலக்கத்திற்கு அழைத்து உதவி கோருமாறு கத்தியபடி உள்ளதாக தெரிவித்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாந்தி ரமேஷ் (அயல் வீட்டுப் பெண்)
“வீட்டுக்கு வரும் வழியில் ஒருவர் தரையில் அமர்ந்து அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தேன்.
அவரை இரண்டு பொலிஸ்காரர்கள் அழைத்துச் சென்று பொலிஸ் காரில் ஏற்றினார்கள்.
அப்போது இப்படியொரு சோகம் நடந்ததாகத் தெரியவில்லை. இது மிகவும் சோகமானதும், துயரமானதும் சம்பவம். “
கொலைச் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த ஒட்டாவா பொலிஸார் முதலில் காயமடைந்த தனுஷ்கவை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதன்பிறகு, அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்ப நண்பர் ஒருவர் வீட்டில் கொல்லப்பட்டதை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
பொலிஸ் பிரதானி – எரிக் ஸ்டப்ஸ்,
“எங்கள் குழு உடனடியாக அனுப்பப்பட்டது. அதிகாரிகள் சந்தேக நபரை அடையாளம் கண்டு உடனடியாக கைது செய்தனர். அதிகாரிகள் வீட்டிற்குள் நுழைந்து சோதனை செய்தனர். அப்போதுதான் இந்த சம்பவத்தில் இறந்த 6 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இந்த குடும்பங்கள் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள். அவர்கள் இலங்கையில் இருந்து வந்தவர்கள். உயிரிழந்த பெண்ணின் கணவர் படுகாயமடைந்துள்ளார்..
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது, ஆனால் தற்போது அவரது உடல்நிலை சீராகி உள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு கூரிய ஆயுதம் பயன்படுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.”
கனடாவின் ஒட்டாவாவில் இலங்கை ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படுகொலை
கனடாவின் ஒட்டாவாவில் இலங்கை ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படுகொலை
கனடாவின் ஒட்டாவாவில் உள்ள வீடொன்றில் வைத்து இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வௌியாகியுள்ளன.
சம்பவத்தில் தாய் மற்றும் அவரது நான்கு பிள்ளைகள் மற்றும் வீட்டில் வசித்து வந்த 40 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
குழந்தைகளின் தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நான்கு குழந்தைகளும் ஏழு வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கனடாவில் கல்வி கற்கும் 19 வயதுடைய ஃபேப்ரியோ டி சொய்சா என்ற இலங்கையர் என ஒட்டாவா பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
இந்தச் சம்பவம் முதலில் துப்பாக்கிச் சூடு என அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் ஆயுதமொன்றால் கொலைகள் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
சுமார் மூன்று தசாப்தங்களில் ஒட்டாவாவில் இவ்வாறான ஒரு கொலை இடம்பெற்றது இதுவே முதல் தடவை என மேயர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் வருமாறு:
தாய் – தர்ஷனி பண்டாரநாயக்க – 35 வயது
இனுக விக்கிரமசிங்க – 07 வயது
அஸ்வினி விக்கிரமசிங்க – 04 வயது
றின்யானா விக்கிரமசிங்க – 02 வயது
கெலீ விக்கிரமசிங்க – 02 மாதங்கள்
காமினி அமரகோன் என்ற 40 வயதுடைய நபரே கொல்லப்பட்ட மற்றைய நபராவார்.
இந்த சம்பவத்தில் பிள்ளைகளின் தந்தை படுகாயமடைந்துள்ளதுடன் அவரது பெயர் தனுஷ்க விக்ரமசிங்க எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன் திடீர் மரணம்
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன் திடீர் மரணம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சாந்தன் மரணமடைந்துவிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வந்த போதும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
கோமா நிலைக்கு சென்ற சாந்தனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சாந்தன் மரணம் அடைந்தார்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன் திடீர் மரணம்
சாந்தன் இலங்கை தமிழர் என்பதால், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் தங்க வைக்கப்பட்டார்.
தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் எனக் கோரி வந்தார் சாந்தன். சாந்தனை இலங்கை அனுப்பி வைக்க மத்திய அரசும் அனுமதி வழங்கியது.
எனினும், சாந்தனுக்கு கடந்த ஜனவரி மாதம் 24-ம் திகதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்
படுகொலை தொடர்பில் 35 வருடங்களாக தேடப்பட்டு வந்த பெண் சிக்கினார்
படுகொலை தொடர்பில் 35 வருடங்களாக தேடப்பட்டு வந்த பெண் சிக்கினார்
கொலையொன்றைச் செய்து மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35 வருடங்களாக தலைமறைவாக இருந்த பெண்ணொருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
1989 ஆம் ஆண்டு அத்துருகிரிய வெல்லவ பிரதேசத்தில் இலங்கை மின்சார சபை தர பரிசோதகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
கொலை செய்யப்பட்ட நபரின் மனைவி செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன்படி அத்துருகிரிய வெல்லவ பிரதேசத்தில் வசிக்கும் கணவன் மனைவியை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
அப்போது கைது செய்யப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க பெண் மின்சார சபையில் ஆங்கில தட்டச்சராக பணியாற்றி வந்ததும், கொலை செய்யப்பட்ட நபருடன் தவறான தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்தது.
படுகொலை தொடர்பில் 35 வருடங்களாக தேடப்பட்டு வந்த பெண் சிக்கினார்
1989 ஆம் ஆண்டு ஒரு குறிப்பிட்ட நாளில், இது தொடர்பான உறவு தனது கணவருக்குத் தெரியவந்ததையடுத்து, அந்த பெண் தனது கள்ளக்காதலரை அத்துருகிரிய, வெல்லவயில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அங்கு கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலரை துண்டு துண்டுகளாக வெட்டி கொலை செய்து பீப்பாயிலிட்டு கிணற்றில் போட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, கணவன்-மனைவி இருவரும் 6 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட தம்பதியினர் பின்னர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, அவர்கள் இல்லாமல் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு, தம்பதியருக்கு 2019 இல் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், கொலையைச் செய்த தம்பதியை எந்த பொலிஸாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில், கொலையைச் செய்த பெண், பண்டாரகம பமுனுகம பிரதேசத்தில் வாடகை வீட்டில் பதுங்கி இருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்குத் தகவல் கிடைத்திருந்தது.
அதன்படி விசாரணை அதிகாரிகள் நேற்று (09) அவரை கைது செய்தனர்.
தற்போது, ஒரு குழந்தைக்கு தாயான குறித்த பெண்ணுக்கு 64 வயதாகும்.
படுகொலை தொடர்பில் 35 வருடங்களாக தேடப்பட்டு வந்த பெண் சிக்கினார்
பிணை வழங்கப்பட்ட பின்னர் கடந்த 35 வருடங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள உறவினர்களின் வீடுகளில் தம்பதியினர் தலைமறைவாகி வாழ்ந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரிடம் சிக்கிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் தாமும் கணவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருவதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
எனினும் அவரது கணவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.
சந்தேகநபரான பெண் இன்று (10) ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முல்லேரியாவில் ஒருவர் கழுத்தறுத்து கொலை
முல்லேரியாவில் ஒருவர் கழுத்தறுத்து கொலை
முல்லேரியா, வெகந்த பிரதேசத்தில் 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கொலையாளி யார் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரின் வீட்டில் நேற்று (09) இரவு மதுபான விருந்து ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் 3000க்கும் மேற்பட்ட முறை மீறியுள்ளது
- ஒரு லட்சம் ரூபாவுக்கு விற்க பட்ட சிசு
- பாதுகாப்புச் செயலாளர் ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்தார்
- வாகனப் பதிவுத் தகடுகள் மீது சட்ட நடவடிக்கை இல்லை
- மத்திய வங்கி இந்த ஆண்டு 6 பில்லியன் ரூபாய் மதிப்பிலான பணத்தை அச்சிட்டுள்ளது
மத்துகமையை உலுக்கிய படுகொலை
மத்துகமையை உலுக்கிய படுகொலை
கூரிய ஆயுதங்களால் வெட்டி ஒருவர் இன்று (03) அதிகாலை கொல்லப்பட்டுள்ளதாக மத்துகமை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொல்லப்பட்டவர் மத்துகம ஓவிட்டிகல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று அதிகாலை இனந்தெரியாத சிலர் இவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், பலத்த காயமடைந்த அவர் களுத்துறை – நாகொடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் மத்துகமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐவர் படுகொலை – இரண்டு பெண்கள் கைது
ஐவர் படுகொலை – இரண்டு பெண்கள் கைது
பெலியத்த பொலிஸ் பிரிவில் தெற்கு அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (29) காலை ரத்கம பிரதேசத்தில் ஹக்மன பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது குறித்த இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐவர் படுகொலை – இரண்டு பெண்கள் கைது
கைது செய்யப்பட்டவர்கள் புஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 23 மற்றும் 33 வயதுடையவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு துப்பாக்கிகளும் குறித்த இரு பெண்களில் ஒருவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் கராப்பிட்டிய பிரதேசத்தில் இருந்து புஸ்ஸ பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
ஹக்மன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இஸ்ரேல் இராணுவத்தால் பலஸ்தீன ஊடக நபர்கள் 120 பேர் படுகொலை
இஸ்ரேல் இராணுவத்தால் பலஸ்தீன ஊடக நபர்கள் 120 பேர் படுகொலை
இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீன ஊடக நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் .
இஸ்ரேல் பாலஸ்தீன , இஸ்ரேல் இராணுவ தாக்குதலில் 120 பலஸ்தீன ஊடக நபர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் .
கடந்த தினம் இஸ்ரேல் தாக்குதலில் பலியானவர் Iyad Ahmed al-Rawag என பாலஸ்தீன அரசு அறிவித்துள்ளது .
ஈராக்கிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை
காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் 3000க்கும் மேற்பட்ட முறை மீறியுள்ளது
இஸ்ரேல் முழுவதும் அமெரிக்கா போர் விமானங்கள் தயார் நிலையில்
ஈரானை சிக்க வைக்க டிரம்ப் சதுரங்க ஆட்டம்
ஒரு லட்சம் ரூபாவுக்கு விற்க பட்ட சிசு
பாதுகாப்புச் செயலாளர் ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்தார்
வீடு ஒன்றிற்குள் கை கால்களை கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் படுகொலை
வீடு ஒன்றிற்குள் கை கால்களை கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் படுகொலை
கம்பஹா, பாண்டியமுல்ல பிரதேசத்தில் வீடு ஒன்றிற்குள் கை கால்களை கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அந்த வீட்டில் வசித்து வந்த 81 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று (05) பிற்பகல் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் நேற்று காலை வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு பூஜை செய்து விட்டு வீடு திரும்பியது தெரியவந்துள்ளது.
வீட்டில் உள்ள பொருட்களை திருட வந்த நபர் அல்லது குழுவால் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
வீடு ஒன்றிற்குள் கை கால்களை கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் படுகொலை
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, அம்பலாந்தோட்டை 100 அடி வீதியில் பல்லகஸ்வெவ சந்திக்கு அருகாமையில் நேற்று படுகொலை செய்யப்பட்ட நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் பாரகம, அம்பலாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 4 ஆம் திகதி பிற்பகல் முதல் காணாமல் போயுள்ளதாக ஹம்பாந்தோட்டை பொலிஸில் இவரின் சகோதரர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
பின்னர், அப்பகுதி மக்களுடன் சேர்ந்து காணாமல் போனவரை தேடியபோது, அந்த இடத்தில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் 3000க்கும் மேற்பட்ட முறை மீறியுள்ளது
- ஒரு லட்சம் ரூபாவுக்கு விற்க பட்ட சிசு
- பாதுகாப்புச் செயலாளர் ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்தார்
- வாகனப் பதிவுத் தகடுகள் மீது சட்ட நடவடிக்கை இல்லை
- மத்திய வங்கி இந்த ஆண்டு 6 பில்லியன் ரூபாய் மதிப்பிலான பணத்தை அச்சிட்டுள்ளது
இஸ்ரேலினால் ஈரான் இராணுவ தளபதி படுகொலை
இஸ்ரேலினால் ஈரான் இராணுவ தளபதி படுகொலை
இஸ்ரேலினால் ஈரானின் அது முக்கிய பிரிகேடியர் ஜெனரல் ராஸி மௌசவி படுகொலை செய்ய பட்டுள்ளார் .
இவர் சிரியாவில் தங்கி இருந்து இரகசிய நவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டிருந்தார் .
ஈரானுக்கு வெளியே இடம்பெறும் பல நடவடிக்கைகளை முன்னின்று நெறிப்படுத்தி ,தமது ஆதரவு குழுக்களுடன் தொடர்புகளை பேணி மேற்கொண்டு வந்தார்
அவ்வாறேன் முக்கிய தளபதியே படுகொலை செய்ய பட்டுள்ளார் ,
- ஈராக்கிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை
- இஸ்ரேல் முழுவதும் அமெரிக்கா போர் விமானங்கள் தயார் நிலையில்
- ஈரானை சிக்க வைக்க டிரம்ப் சதுரங்க ஆட்டம்
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்
- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது
- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு
- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்
- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்
- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு
இஸ்ரேல் வெறியாட்டம் 90 மக்கள் படுகொலை
இஸ்ரேல் வெறியாட்டம் 90 மக்கள் படுகொலை
இஸ்ரேல் இராணுவத்தினர் ஜபலியாக அகதிமுகாம் மீது வெறியாட்டம் 90 மக்கள் படுகொலை .
கடந்த தினம் காசா வடக்கு பகுதியில் அமைய பெற்றுள்ள ஜபலியா அகதி முகாம் மீது குண்டு தாக்குதல் நடத்த பட்டது .
இஸ்ரேல் இராணுவம் நடத்திய இந்த தாக்குதலில் 90 அப்பாவி பொது மக்கள் பலியாகியுள்ளனர் ,மேலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .
தொடரும் இஸ்ரேல் இராணுவத்தின் மனித படுகொலையை உலக நாடுகள் கை கட்டி வேடிக்கை பார்ப்பதை இதன் ஊடாக காணமுடிகிறது .
இஸ்ரேல் இராணுவ படுகொலை|பல்லாயிரம் வீடுகள் உடைப்பு|isreal hamas attack|
இஸ்ரேல் இராணுவ படுகொலை|பல்லாயிரம் வீடுகள் உடைப்பு|isreal hamas attack|
இஸ்ரேல் இராணுவதின் பயங்கரம் மக்களை மிரள வைத்துள்ள புள்ளி விபரம் |பல்லாயிரம் வீடுகள் உடைப்பு
காசா கமாஸ் இராணுவ பலம் ,தோற்க போவது யார் தெரியுமா ..?|isreal hamas attack|
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
மில்லெனிய பகுதியை உலுக்கிய படுகொலை சந்தேகநபர்கள் கைது
மில்லெனிய பகுதியை உலுக்கிய படுகொலை சந்தேகநபர்கள் கைது
மில்லனிய, கிம்மன்துடாவ பகுதியில் நபர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (02) இரவு கைது செய்யப்பட்டதாக மில்லனிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மில்லனியா கிம்மன்துடாவ பிரதேசத்தில் வசித்து வந்த 29 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான திஷான் சங்கீத் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மில்லெனிய பகுதியை உலுக்கிய படுகொலை சந்தேகநபர்கள் கைது
உயிரிழந்தவரின் மனைவியின் சகோதரியின் கணவன் தனது மோட்டார் சைக்கிளை நிதி நிறுவனமொன்றில் அடகு வைத்து உயிரிழந்த நபருக்கு 120,000
ரூபாவை வழங்கியுள்ள நிலையில், அதனை உரிய வகையில் செலுத்ததாத காரணத்தால் ஏற்பட்ட தகராறு நீண்டதில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலைசெய்யப்பட்டவரின் வீட்டிற்கு தனது சகோதரனுடன் வந்த மைத்துனரான குறித்த நபர், வாய்த்தர்க்கம் நீண்டதில் தான் மறைத்து
வைத்திருந்த கத்தியால் உயிரிழந்த நபரின் தலை, முதுகு மற்றும் மார்புப் பகுதிகளில் குத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
காயமடைந்த நபர் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (03) ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
மில்லனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் 3000க்கும் மேற்பட்ட முறை மீறியுள்ளது
- ஒரு லட்சம் ரூபாவுக்கு விற்க பட்ட சிசு
- பாதுகாப்புச் செயலாளர் ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்தார்
- வாகனப் பதிவுத் தகடுகள் மீது சட்ட நடவடிக்கை இல்லை
- மத்திய வங்கி இந்த ஆண்டு 6 பில்லியன் ரூபாய் மதிப்பிலான பணத்தை அச்சிட்டுள்ளது
துண்டுகளாக வெட்டி வீச பட்ட பெண் அதிரவைத்த படுகொலை
துண்டுகளாக வெட்டி வீச பட்ட பெண் அதிரவைத்த படுகொலை
இலங்கையில் காணாமல் போன 51 வயது பெண் ஒருவர் பல துண்டுகளாக வெட்ட பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுளள சம்பம் இலங்கையை அதிரவைத்த படுகொலையாக மாற்றம் பெற்றுள்ளது .
இவ்வாறு காணாமல் போனவர் ஆட்டோ ஒன்றில் பயணிக்கிறார் ,பின்னர் அதில் இருந்து கார் ஒன்றில் பயணித்து கடை ஒன்றில் உணவு அருந்தி விட்டு செல்கின்றார் .அன்றில் இருந்து அவர் காணாமல் போயுள்ளார் .
குறித்த பிரதீபா என்ற 51 வயதுக்கு பெண்ணுக்கும் வர்த்தகர் ஒருவருக்கும் இடையில் பல்லாண்டுகளாக உறவு ஏற்பட்டுள்ளது .
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பணத்தகராறு காரணமாக மன கசப்பு ஏற்பட்டுள்ளது .
துண்டுகளாக வெட்டி வீச பட்ட பெண் அதிரவைத்த படுகொலை
இதனை அடுத்து பாழடைந்த வீடு ஒன்றில் இருந்து பெண்ணின் எரிந்த ஆடைகள் மற்றும் சடலத்தின் சில பகுதிகள் மீட்க பட்டன ,
மேலும் அருவி ஒன்றுக்கு அருகில் இருந்து கால் தலை என்பனவும் மீட்க பட்டுள்ளது .
இதனை அடுத்து சந்தேகம் அடைந்த வர்த்தகர் ,தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகிறார் .இவர் நாட்டை விட்டு தப்பி செல்லா வண்ணம் தடை விதிக்க பட்டுள்ளது .
இலங்கையில் இவ்வாறு காணாமல் போகும் பலர் இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்ட வண்ணம் உள்ளனர் .
இலங்கை ஒரு படுகொலைகளின் தேசமாக மாற்றம் பெற்று வருவதும் ,இவ்வாறான கொலைகளை சாதரண நிகழ்வு ஒன்றாக கருதி மக்கள் அதனை மறந்து விட்டு செல்லும், மனோநிலைக்கு உள்ளாகியுள்ளதாக குற்ற சாட்டுக்கள் முன் வைக்க பட்டு வருகிறது .
- காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் 3000க்கும் மேற்பட்ட முறை மீறியுள்ளதுby நிருபர் காவலன்
- ஒரு லட்சம் ரூபாவுக்கு விற்க பட்ட சிசுby நிருபர் காவலன்
- பாதுகாப்புச் செயலாளர் ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்தார்by நிருபர் காவலன்
- வாகனப் பதிவுத் தகடுகள் மீது சட்ட நடவடிக்கை இல்லைby நிருபர் காவலன்
- மத்திய வங்கி இந்த ஆண்டு 6 பில்லியன் ரூபாய் மதிப்பிலான பணத்தை அச்சிட்டுள்ளதுby நிருபர் காவலன்
கடற்படை தளம் அழிப்பு 34 தளபதிகள் படுகொலை|விமானங்கள் ஊடுருவல்|
கடற்படை தளம் அழிப்பு 34 தளபதிகள் படுகொலை|விமானங்கள் ஊடுருவல்|
கருங்கடல் பகுதியி அமைந்துள்ள ரஷ்ய கடல்படை தளம் தாக்கி அழிக்க பட்டுள்ளது .
இந்த தாக்குதலில் அந்த கடற்படை தளத்தின் முக்கிய தாக்குதல் தளபதி உள்ளிட்ட 34 தளபதிகள் மரணம்.
நூற்றுக்கு மேற்பட்ட படைகள் காயம் , ஊடுருவியா விமானங்கள் துரதியடிப்பு
- காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் 3000க்கும் மேற்பட்ட முறை மீறியுள்ளது

- ஒரு லட்சம் ரூபாவுக்கு விற்க பட்ட சிசு

- பாதுகாப்புச் செயலாளர் ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்தார்

- வாகனப் பதிவுத் தகடுகள் மீது சட்ட நடவடிக்கை இல்லை

- மத்திய வங்கி இந்த ஆண்டு 6 பில்லியன் ரூபாய் மதிப்பிலான பணத்தை அச்சிட்டுள்ளது

இஸ்ரேலில் வெடித்த போர்|மலேசியாவில் தமிழர்கள் படுகொலை|உக்ரைன் ரஷ்யா மோதல்
இஸ்ரேலில் வெடித்த போர்|மலேசியாவில் தமிழர்கள் படுகொலை|உக்ரைன் ரஷ்யா மோதல்
இஸ்ரேலில் வெடித்த போர் ,திணறும் அரசு ,
மலேசியாவில் மூன்று தமிழர்கள் படுகொலை ,
உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் ,
- ஈராக்கிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை
by நிருபர் காவலன் - இஸ்ரேல் முழுவதும் அமெரிக்கா போர் விமானங்கள் தயார் நிலையில்
by நிருபர் காவலன் - ஈரானை சிக்க வைக்க டிரம்ப் சதுரங்க ஆட்டம்
by நிருபர் காவலன் - போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்
by நிருபர் காவலன் - ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது
by நிருபர் காவலன் - ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு
by நிருபர் காவலன் - லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்
by நிருபர் காவலன் - இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்
by நிருபர் காவலன் - இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்
by நிருபர் காவலன் - லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு
by நிருபர் காவலன்








































