உன்னை பார்க்கையில
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னை பார்க்கையில

உன்னை பார்க்கையில

உன்னை நானும் பார்க்கையில
உள்ளம் மெல்ல துள்ளுதடி
கள்ளம் இல்லா பேரழகை
கட்டி அணைக்க துடிக்குதடி

கொஞ்சி பேசும் மொழியழகில்
கொள்ளை பிரியம் வைக்குதடி
அச்சம் இல்லா பேசிடவே
அல்லும் பகலும் துடிக்குதடி

இடையின் அளவை அளக்கையில
இதயம் மெல்ல வெட்குதடி
தாளம் போடும் தாமரையை
தழுவ மோகம் துடிக்குதடி

துடையின் மேலே புருவமது
துரத்தி மெல்ல முறைக்கையில
மெல்ல வாலிபம் துடிக்கிறதே
மெழுகாய் உருகி அழுகிறதே

சொல்ல முடியா சுகமதனை
சொர்க்கமே நீ தருவாயா
அள்ளி பருகிட நாளுமே
அன்பே என்னை விடுவாயா …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 24-05-2024

மறக்க முடியா நட்பு காலம்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

மறக்க முடியா நட்பு காலம்

மறக்க முடியா நட்பு காலம்

திருவுடன் காந்தன் ரமேசுடன்
திருப்பங்கள் தந்திட்ட முரளியுடன்
அன்று பழகிய அக்காலம்
அடடா நினைவில் இனிக்கிறது

அன்பு செல்லா கண்ணனுடன்
அன்று அடித்த அரட்டையது
இன்றும் நினைவில் சிரிக்கிறது
இளமை காலம் இனிக்கிறது

பிரிக்கண்டல் பிரித் உண்பதற்கு
பிள்ளைகள் எங்கள் சண்டைக்கு
பஞ்சம் என்றும் இருந்ததில்லை
பழகிய நட்பில் பேதமில்லை

காதலில் திகழ்ந்த அக்காலம்
கனியா வயது முக்காலம்
எங்கள் நட்பில் உறவிருக்கும்
என்றும் வாயில் சிரிப்பிருக்கும்

முதலாளி சொன் கல கலப்பும்
முத்துலிங்கண்ணை பர பரப்பும்
கனகண்ணை தெளிக்கும் கடிகளுக்கும்
காதுக்கு என்றும் பஞ்சம் இல்லை

அன்றந்த தோட்டத்து வாழ்விருக்கே
அதுபோல் சுகம் எங்கிருக்கோ
விரைவில் யாவரும் ஒன்றிணைவோம்
விடுகதை பேசி மகிழ்ந்திடுவோம் ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 07-04-2024

ஹொலண்ட்ல தோட்டத்தில் வேலை புரிந்த நம் தோழர் நினைவுகளை எண்ணிய பொழுது

ஹொலண்ட் மொழியில்
பிரிக்கண்டல் – சோசஸ்
பிரித்- சிப்ஸ் ,உருளை கிழங்கு பொரியல்

சீமான்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

சீமான்

சீமான்

நட மாடும் ஊடகமே
நான் கண்ட நூலகமே
புல்லரிக்கும் உன் பேச்சால்
புலி கூட புல் உண்ணும்

சொல் அடுக்கு உன் மொழிகள்
செல் அடிகள் போலிருக்கும்
மறவாது நினைவிருத்தும்
மாசற்ற பேச்சு இருக்கும்

மறந்த தமிழ் வரலாற்றை
மணி கணக்காய் கற்பிக்கும்
செயல் நெறி வித்தகனே
செந்தமிழன் நீ தானே

இக்கால அரசியலில்
இடி முழக்கம் நீ தானே
இரத்தத்தை சூடேற்றும்
இயந்திரம் நீ தானே

வீர பிறப்பெடுத்த
வீர புலி மகனே
கோட்டை பல நடுங்குதடா – உன்
கொள்கையாலே எரியுதடா

ஆர்ப்பரித்த கூட்டத்தில்
ஆர தழுவுகின்ற
நேசத்தின் முதல் மகனே – எம்
நெஞ்சம் எல்லாம் நீதானே…!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 27-03-2024

கிழவருக்கு ஒரு மடல்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

கிழவருக்கு ஒரு மடல்

கிழவருக்கு ஒரு மடல்

மண்டையில முடி விழுந்தும்
மாண்பு இன்னும் தெரியவில்லை
மக்களது அரசியலை
மன்றில் பேச தெரியவில்லை

நரை விழுந்த கிழவருக்கு
நாற்காலி இன்றெதுக்கு
பாப்பா பாட்டு பாடுகின்ற
பர தேசிக்கு வாழ்வெதற்கு

உயிரெழுத்தில் பெயர் வைத்து
உலவுகின்ற கிழவருக்கு
அலரிக்கா மாளிகையில்
அடி கழுவி திரிந்தாருக்கு

பேச்சு மேசைக்கு
பெரும் இடரை கொடுத்தார்க்கு
வால் பிடிக்கும் கூட்டங்களே
வையத்தில் தொல்லைகளே

இல்லாத அவர் காலம்
இருக்கின்றாய் நீ இக் காலம்
என் செய்தாய் தமிழுக்கு
ஏ தொன்று சொல் எனக்கு

மளிகை வீடு கட்டி
மல்லாக்காய் படுத்திருந்து
கொறட்டை தினம் விட்டால்
கொடை வள்ளல் நீ ஆகாய்

இக் கலாம் வாழ்கின்ற
இடர் செய்த பெரு மகனே
உன் வாழ்வே வீனாகும்
உன் இறப்பே தப்பாகும்

கோபத்தில் உனை வரைந்து
கொழுத்தி விட வரவில்லை
ஏக்கத்தில் மனம் தவிக்க
எழுதி வைத்து நீட்டுகிறேன் ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 26-03-2024

ஏன் வர மறுக்கிறாய்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

ஏன் வர மறுக்கிறாய்

ஏன் வர மறுக்கிறாய்

காலை வந்து எனை எழுப்பும்
கதிரவன் போல் நீ இருந்தால்
நெஞ்சம் எல்லாம் உன்னை சுமக்கும் – உன்
நினைவுடனே மனம் வாழும்

மெல்ல வந்து தாலாட்டும்
மெல்லிசை தென்றல் போல
எனை வந்து நீயணைத்தால்
என் ஏக்கம் தீர்ந்து போகும்

சின்ன மீசை மெல்ல வந்து
சீக்கிரமே குற்றும் என
எண்ணியிருக்கும் இக் காலம்
ஏக்கமின்றி தீர்ந்து போகும்

மஞ்சம் மட்டும் உன்னை எண்ணி
மணி கணக்காய் காத்திருக்க
நெஞ்சே வர மறுப்பதென்ன – என்
நியம் காண தவிர்ப்பதென்ன ..?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 24-03-2024

இரக்கம் காட்டு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

இரக்கம் காட்டு

இரக்கம் காட்டு

பறவைகளே பறவைகளே
பார் தேசம் போனீரா
பகை வனவன் போர் தொடுக்க
மண் விட்டு பறந்தீரா

சொந்த மண்ணின் துயர் அறிந்து
சோகமுடன் வாழ்கிறீரா
பந்தம் அது இழந்து
பார் தேசம் வாழ்கிறீரா

எங்களவன் தேசமதை
எவன் வந்து ஆழ்வதுவோ
ஏக்கத்தில மனம் தவிக்க
ஏங்கி தினம் தவிப்பதுவோ

ஒன்று பட்டு வாழ்ந்திடுவோம்
ஓர்மமதை விட்டுடுவீர்
எங்களுக்கும் உம் உரிமை
எடுத்து கொஞ்சம் தந்திடுவீர்

பார் புகழும் நாடாக – இலங்கை
பாரினில காட்டிடுவோம்
பாசமதை காட்டி விடு
பல தடை உடைந்தோடும் ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 14-02-2024