Posted in சினிமா

மாலத்தீவில் கவர்ச்சி.. வைரலாகும் வரலட்சுமி

மாலத்தீவில் கவர்ச்சி.. வைரலாகும் வரலட்சுமி

தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை வரலட்சுமி சரத்குமாரின் கவர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.

மாலத்தீவில் கவர்ச்சி.. வைரலாகும் வரலட்சுமி வீடியோ
வரலட்சுமி சரத்குமார்


‘போடா போடி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. இப்படத்தில் துறுதுறுவான நடிப்பால் இளைஞர்களை கவர்ந்தார். பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரைதப்பட்டை’ படம் இவருக்கு நல்ல அடையாளத்தை தந்தது. அதன்பின் வரலட்சுமி

சரத்குமார், ’விக்ரம் வேதா’, ‘மாரி-2’, ‘கன்னிராசி’, ‘பாம்பன்’, ‘ நீயா-2’, ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘மிஸ்டர் சந்திரமௌலி’, ‘ சண்டக்கோழி-2’, ,சர்க்கார்’

உள்ளிட்ட படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

வரலட்சுமி சரத்குமார்

இந்நிலையில், வரலட்சுமி மாலத்தீவிற்கு சென்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அதனை பதிவி செய்யும் வகையில் அங்கு எடுத்துக்கொண்ட

கவர்ச்சி புகைப்படங்கள் அடங்கிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    Posted in சினிமா

    சென்னை மேயருடன் நயன்தாரா-அவருடைய காதலர் விக்னேஷ்

    சென்னை மேயருடன் நயன்தாரா-அவருடைய காதலர் விக்னேஷ்

    நடிகை நயன்தாராவும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் சென்னை மேயருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.

    சென்னை மேயருடன் நயன்தாரா.. வைரலாகும் புகைப்படம்
    நயன்தாரா


    நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது,

    நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

    பிரியா ராஜன் – நயன்தாரா – விக்னேஷ் சிவன்
    பிரியா ராஜன் – நயன்தாரா – விக்னேஷ் சிவன்

    இந்நிலையில், நடிகை நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்னை தம்புச்செட்டி தெருவில் உள்ள காளியம்மாள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய

    செறுள்ளனர். அப்போது அங்கு வந்த சென்னை மாநகராட்சியின் புதிய பெண் மேயர் பிரியா ராஜனை சந்தித்து பேசி, இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது

      Posted in சினிமா

      ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் சிம்பு

      ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் சிம்பு

      தனுஷின் பிரிவிற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவிருக்கும் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

      ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் சிம்பு?
      ஐஸ்வர்யா ரஜினிகாந்த்


      சமீபத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா இவர்களின் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்திருந்தனர். பலர் இவர்களுக்கு ஆறுதலும் மனதைரியமும் அளித்து வந்தனர். இந்த பிரிவு அவருடைய ரசிகர்களையும் திரைதுறையினரையும்

      அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை வைத்து 3 என்ற திரைப்படத்தையும், கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற

      திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். சினிமா சண்டைக் கலைஞர்கள் குறித்த ஆவணப்படம் ஒன்றையும் அவர் எடுத்துள்ளார்.

      ஐஸ்வர்யா-தனுஷ் திருமணம் உறவு முறிந்த பிறகு, ஐஸ்வர்யா தனது இயக்குனர் வேலையில் ஆர்வம் காட்டுவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. அதன்படி

      ஐஸ்வர்யா தனது முசாபிர் மியூஸிக் ஆல்பம் வீடியோ வேளைகளை ஆரம்பித்து அது குறித்த அறிவிப்புகளை தொடர்ச்சியாக அறிவித்து வந்தார்.

      இந்நிலையில் ஐஸ்வர்யா அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்க தயாராகி வருவதாகவும், அதில் நடிகர் சிம்பு நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. சினிமா

      துறையில் தனுஷுக்கு நேர்எதிர் போட்டியாளராக கருதப்படும் சிம்புவை வைத்து ஐஸ்வர்யா படம் இயக்கப்போவதாக வரும் தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

        Posted in சினிமா

        விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை


        பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் தளபதி 66 படத்தில் பிரபல நடிகை நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


        விஜய் நடிப்பில் தற்போது உருவாகிவரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார்

        இயக்கிவருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விறுவிறுப்பாக

        இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

        இப்படத்தை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார். ‘தளபதி 66’ என்று பெயரிடப்பட்டுள்ள

        இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இதில் நடிக்கவுள்ள நடிகை குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது.

        விஜய், ராஷ்மிகா மந்தனா
        ராஷ்மிகா மந்தனா

        இந்நிலையில் ‘தளபதி 66’ படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா ‘தளபதி 66’

        படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இவர் நடித்த புஷ்பா திரைப்படம் அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது

        Posted in சினிமா

        சிவகார்த்திகேயனை பாராட்டிய விஜய்

        .சிவகார்த்திகேயனை பாராட்டிய விஜய்

        நடிகர் சிவகார்த்திகேயனை அரபிக் குத்து பாடலுக்காக விஜய் பாராட்டியதாக சமீபத்திய நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.

        சிவகார்த்திகேயனை பாராட்டிய விஜய்
        விஜய் – சிவகார்த்திகேயன்


        விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து செல்வராகவன், பூஜா ஹெக்டே, யோகி பாபு, கிங்ஸ்லி உள்ளிட்ட பலர்

        நடித்து வருகின்றனர். படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பீஸ்ட் படம் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகவுள்ளது.

        பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ‘அரபிக்குத்து’ பாடல் அனைவரையும் கவர்ந்து பல சாதனைகளை முறியடித்தது. வித்யாசமான வரிகள் இடம்பெற்ற இந்த பாடலை நடிகர்

        சிவகார்த்திகேயன் எழுத்தியுள்ளார். இப்பாடலுக்கு திரைதுறையினர், ரசிகர்கள் என பலரும் நடனமாடி பதிவிட்டு வருகின்றனர்.

        இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் இப்பாடல் குறித்தும் விஜய் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். இப்பாடலை கேட்டு விஜய் சார் உங்களிடம் என்ன சொன்னார் என்ற கேள்விக்கு, இந்த பாடலை

        முன்பே படமாக்கிவிட்டார்கள். அதனால் விஜய் சார் இந்த பாடல் குறித்து என்ன நினைத்தார் என்று தெரியவில்லை, சமீபத்தில் தான் இதன் புரோமோ வீடியோ ஷுட்

        செய்தோம். அப்போது தான் விஜய் சார் தொலைபேசியில் “சூப்பர் பா. எழுதிக் கொடுத்ததிற்கு ரொம்ப தேங்க்ஸ் பா. அரபிக் எல்லாம் பயங்கரமா எழுதுறியே” என்று கூறினார்

          Posted in சினிமா

          பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா

          .பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா

          தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, மீண்டும் பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

          மீண்டும் பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா
          நயன்தாரா


          தமிழ் திரைத்துறையில் பொருத்தமான ஜோடியாக நயன்தாரா – ஜெயம் ரவி இருவருக்கும் ஒரு பெயர் உண்டு. இவர்கள் சேர்ந்து நடித்த தனி ஒருவன் படம் பெரிய

          வெற்றி பெற்றது. அதன் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. பெரிய இடைவெளிக்குப் பிறகு ஜெயம் ரவியும், நயன்தாராவும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள்.


            திவ்யா சத்யராஜ்
            Posted in சினிமா

            25 நடிகைகளை கல்யாணாம் செய்துள்ளேன் சத்யராஜ்

            25 நடிகைகளை கல்யாணாம் செய்துள்ளேன் சத்யராஜ்

            கதாநாயகனாக நடித்து தற்போது பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் சத்யராஜ், ராதே ஷ்யாம் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு பேசினார்.

            25 ஹீரோயினை கல்யாணம் செய்திருக்கிறேன் – சத்யராஜ்
            த்யராஜ்


            யுவி கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ராதே ஷ்யாம்’. இப்படத்தில் பிரபாஸ்

            நாயகனாகவும், பூஜா ஹெக்டே நாயகியாகவும் நடித்துள்ளனர். மார்ச் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

            இவ்விழாவினில் நடிகர் சத்யராஜ், சிபிராஜ், உதயநிதி, தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி, உட்பட்ட தமிழ் பிரபலங்களுடன், ராதே ஷியாம் படக்குழுவினர் பிரபாஸ், பூஜா

            ஹெக்டே, இயக்குனர் ராதா கிருஷ்ண குமார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, பாடலாசிரியர் மதன் கார்கி தயாரிப்பாளர் பிரமோத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

            இதில் சத்யராஜ் பேசும்போது, பிரபாஸை நாங்கள் டார்லிங் என சொல்வோம், டார்லிங்கின் டார்லிங் பூஜா. கடவுள் நம்பிக்கை இல்லாமல் கைரேகை நிபுணராக

            நடித்திருக்கிறேன் என கேட்கிறார்கள், பெரியார் படத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன், ஜெர்ஸி படத்தில் கிரிக்கெட் கோச்சாக நடித்திருக்கிறேன் அப்படிதான் எடுத்து கொள்ள வேண்டும்.

            நான் ஹீரோவாக நடிக்கும் போது 25 ஹீரோயினை கல்யாணம் செய்திருக்கிறேன், அதை என்ன சொல்வது. நடிப்பை நடிப்பாக மட்டும் எடுத்துகொள்ள வேண்டும்.

            இந்தப்படம் மிக அழுத்தமான காதல் கதை, பிரபாஸ் பறந்து சண்டை போடுவார் என்றால், இதில் கப்பலே பறக்கிறது. இங்கு ஜேம்ஸ் கேமரூன் தான் வந்திருக்க வேண்டும். அவ்வளவு பிரமாண்டமாக இருக்கிறது.

            பிரபாஸின் அழகுக்காகவே எடுக்கப்பட்ட படம் இது. ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு அழகாக இருக்கிறது. பாகுபலிக்கு பிறகு பிரபாஸுக்கு முக்கியமான பொறுப்பு

            வந்துள்ளது. பான் இந்தியா என்று எல்லா ஸ்டேட்டிலிருந்து ஒரு நடிகரை போட்டு எடுக்கிறார்கள், ஆனால் இந்தப்படம் உண்மையில் பான் இன்டர்னேஷனல் படம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி’ என்றார்

              Posted in சினிமா

              சேலையில் கவர்ச்சி காட்டும் திவ்ய பாரதி

              சேலையில் கவர்ச்சி காட்டும் திவ்ய பாரதி

              பேச்சுலர் படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்ட திவ்ய பாரதி சேலையில் கவர்ச்சி காட்டும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

              சேலையில் கவர்ச்சி காட்டும் திவ்ய பாரதி
              திவ்ய பாரதி


              இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பேச்சிலர்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு பிரபலமானவர் திவ்ய பாரதி.

              இப்படத்தில் இவரின் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். இவர் தற்போது பிக்பாஸில் பிரபலமான முகின் ராவ்வுக்கு ஜோடியாக ”மதில் மேல் காதல்” என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

              அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் திவ்ய பாரதி, தற்போது மெல்லிய புடவையில் கவர்ச்சி காட்டும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

                Posted in சினிமா

                சுந்தர்.சி அடித்து விட்டாரா குஷ்பு

                சுந்தர்.சி அடித்து விட்டாராகுஷ்பு

                தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்பு பதிவிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.

                சுந்தர்.சி அடித்து விட்டாரா?.. குஷ்பு வெளியிட்ட புகைப்படத்தால் பரபரப்பு
                குஷ்பு


                நடிகை குஷ்பு 90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். இவர் பெயரில் கோவில் கட்டும் அளவிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்ததை போல தற்போது

                அரசியலிலும் படு பிசியாக செயல்பட்டு வருகிறார் குஷ்பு. சமீபத்தில் இவர் உடல் இடையை குறைத்து கதாநாயகிகளுக்கு சவால் விடும் அளவிற்கு இளமையான தோற்றத்திற்கு மாறியிருந்தார்.

                இந்நிலையில் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குஷ்பு பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் சில ஹாஷ்டேக்குகளை பதிவிட்டு ஒரு

                புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். கண்ணத்தில் யாரோ அடித்தது போன்று வீரிய கோவத்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சுந்தர்.சி அடித்து விட்டாரா? என்று கேள்வி எழுப்பி பதிவிட்டு வருகின்றனர்.

                ஒரு வேளை இந்த புகைப்படம் பெண்களுக்கு எதிராக நடக்கின்ற வன்கொடுமைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த பதிவிட்டிருக்களாம் என சில பதிவிட்டு வருகின்றனர்

                . இந்த பதிவிற்கான விளக்கத்தை விரைவில் குஷ்பு அறிவிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

                  Posted in சினிமா

                  அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை

                  அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை

                  அமெரிக்க இராணுவத்தில்திரைத்துறை உள்ளிட்ட கலைத்துறையில் ஈடுபடுவதையே பலர் சாதனையாக கருதும் நிலையில், தமிழ் நடிகை ஒருவர் ராணுவத்தில் இணைந்து சாதித்திருக்கிறார்.

                  குடும்பத்தினருடன் அகிலா நாராயணன்
                  கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’காதம்பரி’. சமூக கருத்தை வலியுறுத்தி உருவான திகில் திரைப்படமான இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானர் அகிலா நாராயணன். அமெரிக்கா வாழ் தமிழ் பெண்ணான இவர் கலை மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக தனது தனிப்பட்ட முயற்சியால் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். நடிப்போடு பிரபல பாடகியாகவும் வலம் வந்த அகிலா நாராயணன், கலைத்துறையோடு தனது சாதனை பயணத்தை நிறுத்திக்கொள்ளாமல், ராணுவத்தில் இணைய வேண்டும் என்று முடிவு செய்தார்.

                  மிக கடினமான பயிற்சிகளை கொண்ட அமெரிக்க ராணுவத்தில் பட்டம் பெறுவது என்பது மிக சவாலானது என்றாலும், தனது மகளின் விருப்பத்துக்கு அகிலாவின் குடும்பத்தாரும் சம்மதம் தெரிவிக்க, கடுமையான பல மாத பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து பட்டம் பெற்ற அகிலா நாராயணன், அமெரிக்க ராணுவத்தில் வழக்கறிஞராக இணைந்துள்ளார்.
                  இதன் மூலம் அமெரிக்க ராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை பெற்றிருக்கும் அகிலா நாராயணன், அமெரிக்க ராணுவத்தின்

                  பலவிதமான கடின பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து வீரமும், விவேகமும், பலமும் கொண்ட பெண்மணியாக தன்னை நிரூபித்துள்ளார்.
                  அகிலா நாராயணன்


                  அமெரிக்க ராணுவ வீரர்களுக்கான சட்ட ஆலோசகராக செயலாற்ற இருக்கும் அகிலா நாராயணன், தான் வாழும் நாட்டுக்காக சேவை செய்வதற்காகவே இத்துறையில்

                  இணைந்துள்ளார். அவரது இத்தகைய சேவை மனப்பான்மைக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருவதோடு, அவரது குடும்பத்தாரையும் வாழ்த்தி வருகிறார்கள்

                    Posted in சினிமா

                    வடிவேலு படத்தில் பிக்பாஸ் நடிகை

                    வடிவேலு படத்தில் பிக்பாஸ் நடிகை


                    நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கும் வடிவேலு படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடித்திருக்கிறார்.

                    வடிவேலு படத்தில் நடித்த பிக்பாஸ் நடிகை
                    வடிவேலு
                    தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுவுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர்.

                    இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

                    வடிவேலு – ஷிவானி

                    சுராஜ் இயக்கி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில்

                    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ஷிவானி நாராயணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக அவரே அறிவித்திருக்கிறார்.

                    மேலும் வடிவேலுடன் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்தது மிகவும் சந்தோஷம் என்று ஷிவானி பதிவு செய்திருக்கிறார்

                      Posted in சினிமா

                      சேலைகட்டி குத்தாட்டம் போட்ட சாக்‌ஷி அகர்வால்

                      சேலைகட்டி குத்தாட்டம் போட்ட சாக்‌ஷி அகர்வால்


                      தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வரும் சாக்‌ஷி அகர்வால், சேலைகட்டி குத்தாட்டம் ஆடிய வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

                      சேலைகட்டி குத்தாட்டம் போட்ட சாக்‌ஷி அகர்வால்
                      சாக்‌ஷி அகர்வால்


                      தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து

                      பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

                      இவரது நடிப்பில் அரண்மனை 3, சிண்ட்ரெல்லா உள்ளிட்ட படங்கள் வெளியானது. மேலும் நான் கடவுள் இல்லை, தி நைட் உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.

                      சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை சாக்‌ஷி அகர்வால், அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.

                      இந்நிலையில், தற்போது சேலை அணிந்து குத்தாட்டம் ஆடியிருக்கிறார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார்கள்.

                        Posted in சினிமா

                        படு கவர்ச்சி படத்தை வெளியிட்ட நடிகை

                        படு கவர்ச்சி படத்தை வெளியிட்ட நடிகை

                        காளை, பரதேசி உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்த நடிகை வேதிகா, பிகினி உடை அணிந்து பதிவிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                        மாலதீவில் படு கவர்ச்சி.. பிகினி புகைப்படங்களை வெளியிட்ட வேதிகா
                        வேதிகா


                        ராகவா லாரன்ஸ் இயக்கிய “முனி” படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை வேதிகா. அதன்பின் காளை, பரதேசி, காவிய தலைவன் உள்ளிட்ட பல்வேறு தமிழ்

                        படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். வேதிகா சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

                        இந்நிலையில், நடிகை மாலவிகா மாலதீவில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக

                        வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். பிகினி உடை அணிந்துள்ள படுகவர்ச்சியான அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது

                          Posted in சினிமா

                          சாதனைகளை படைக்கும் அரபிக் குத்து பாடல்

                          சாதனைகளை படைக்கும் அரபிக் குத்து பாடல்

                          ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் கொண்டாடி வந்த பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் புதிய இலக்கை கடந்து சாதனை படைத்துள்ளது.

                          தொடர் சாதனைகளை படைக்கும் அரபிக் குத்து பாடல்
                          விஜய்


                          நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் படத்தின் புதிய அப்டேட்டுகள் தொடர்ந்து

                          வெளியாகின்றன. சமீபத்தில் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரமோவை படக்குழு வெளியிட்டிருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

                          பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரமோவை தொடர்ந்து முதல் பாடலான அரபிக் குத்து பாடல் சமீபத்தில் வெளியானது. அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதியிருந்த

                          இந்த பாடலை அனிருத், ஜோனிட்டா காந்தி இருவரும் பாடியுள்ளனர். இந்நிலையில் அந்த பாடல் வெளியான

                          12 நாட்களிலேயே, யூடியூபில் 10 கோடி பார்வையாளர்களை அசத்தியுள்ளது. இதனை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

                            Posted in சினிமா

                            வலிமை படத்தின் வசூலை பதிவிட்ட ஹூமா குரேஷி

                            வலிமை படத்தின் வசூலை பதிவிட்ட ஹூமா குரேஷி

                            திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அஜித்தின் வலிமை திரைப்படத்தின் வசூல் விவரத்தை பகிர்ந்த ஹூமா குரேஷி.

                            வலிமை படத்தின் வசூலை பதிவிட்ட ஹூமா குரேஷி..
                            ஹூமா குரேஷி


                            அஜித் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘வலிமை’. எச்.வினோத் இயக்கிய இப்படத்தை போனி கபூர் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக

                            தயாரித்திருக்கிறார். இப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி உலகமுழுவதும் வெளியானது. பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் வெளியாகி கலவையான

                            விமர்சனங்களை பெற்றது. சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது இப்படத்தின் வசூலை பற்றி ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர்.

                            இந்நிலையில் அப்படத்தில் நடித்த நடிகை ஹூமா குரேஷி வலிமை படத்தின் வசூல் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதன்படி வலிமை மொத்தமாக 100

                            கோடி வசூலை அள்ளியதாக இவர் பதிவிட்டிருக்கிறார். இந்த பதிவு அஜித் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது.

                              Posted in சினிமா

                              ரஷ்யா போரை நிறுத்திவிட வேண்டும்.. வைரமுத்து

                              ரஷ்யா போரை நிறுத்திவிட வேண்டும்.. வைரமுத்து

                              இரண்டாவது நாளாக ரஷிய படைகள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருவதை குறித்து வைரமுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

                              ரஷ்யா போரை நிறுத்திவிட வேண்டும்.. வைரமுத்து பதிவு
                              வைரமுத்து


                              இரண்டாவது நாளாக ரஷிய படைகள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கிவ்வை குறிவைத்து தாக்கும் ரஷ்ய படைகள் கிவ் மீது 36

                              பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷ்ய படைகள் ஏவி தாக்கியதாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை 4.20 மணிக்கு கிவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டது.

                              உக்ரைனின் கேர்சன் என்ற பகுதியை கைப்பற்றிய ரஷிய ராணுவம் கேர்சன் பகுதியில் உள்ள அரசு கட்டடத்தில் ரஷிய தேசிய கொடியை ஏற்றினர். முதல்நாள் போரில்

                              ரஷியாவின் 800 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய படைகள் என் மீது குறிவைத்து உக்ரைன் தலைநகரில்

                              நுழைந்துள்ளது எனவும், என்னை அழித்தால் உக்ரைனை அழித்து விடலாம் என ரஷ்யா நினைக்கிறது என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

                              இந்தநிலையில் இந்த போர் குறித்து கவிஞர் வைரமுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், நான் போரை வெறுக்கிறேன். அது உலகத்தின் விலா

                              எலும்புகளையும் பாதிக்கும். கீவ் நகரத்தில் விழுந்த குண்டு கீரிப்பட்டியின் கீரைக்காரி கூடை உடைக்கும். ரஷ்யா போரை நிறுத்திவிட வேண்டும். ரஷ்யா மீது ஜி7 நாடுகளின்

                              பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டும். நான் போரை வெறுக்கிறேன் என பதிவிட்டுள்ளார். இவரின் பதிவு வைரலாகி வருகிறது.

                              நான்
                              போரை வெறுக்கிறேன்

                              அது உலகத்தின்
                              விலா எலும்புகளையும் பாதிக்கும்

                              கீவ் நகரத்தில் விழுந்த குண்டு
                              கீரிப்பட்டியின்
                              கீரைக்காரி கூடை உடைக்கும்

                              ரஷ்யா
                              போரை நிறுத்திவிட
                              வேண்டும்

                              ரஷ்யா மீது
                              ஜி7 நாடுகளின்
                              பொருளாதாரத் தடைகள்
                              நீக்கப்பட வேண்டும்

                              நான்
                              போரை வெறுக்கிறேன்

                                Posted in சினிமா

                                சுருதிஹாசன் திருமணம்- அதிர்ச்சியில் ரசிகர்

                                சுருதிஹாசன் திருமணம்- அதிர்ச்சியில் ரசிகர்

                                நடிகை சுருதிஹாசன் திருமணம் குறித்த கேள்விக்கு சாந்தனு ஹசாரிகா சுவாரசியமான பதிலை அளித்திருக்கிறார்.

                                சுருதிஹாசன் திருமணம்?.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
                                சுருதிஹாசன்


                                நடிகை சுருதிஹாசன் பல வருடங்களாக சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்ற

                                தகவல் கொஞ்ச நாட்களாகவே உலவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருமணம் குறித்த கேள்விக்கு சாந்தனு சுவாரசியமான பதிலை அளித்திருக்கிறார்.

                                தனது வாழ்க்கையை திறந்த புத்தகமாக வைத்திருப்பவர் சுருதிஹாசன். மதுவுக்கு அடிமையாக இருந்ததையும் வெளிப்படையாக அவர் கூறியிருக்கிறார். தற்போது

                                அதிலிருந்து மீண்டு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் பிரபாஸின் சாலார் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. பாலகிருஷ்ணாவின்

                                புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இதுதவிர இந்தியில் சில படங்களில் நடிக்கிறார்.

                                இந்நிலையில் திருமணம் குறித்து அவரது காதலர் சாந்தனு ஹசாரிகாவிடம் கேட்டதற்கு, நாங்க இப்போ தான் டேட்டிங் செய்ய ஆரம்பித்திருக்கிறோம். சுருதி நடிகை என்பதை விட அவர் ஒரு இசைக்கலைஞர். இசைதான் எங்களை ஒன்றிணைத்தது.

                                இசையுடன், ஆடை வடிவமைப்பில் ஈடுபட்டு வருகிறோம், இந்த இரண்டும் எங்களது ஆக்கபூர்வமான பயணம். எங்களுடைய படைப்புகள் குறித்து விவாதிக்கிறோம். அது

                                எங்களை ஊக்கப்படுத்துகிறது. இதுதான் தற்போது எங்களுக்கு இடையே இருக்கும் உறவு நிலை. திருமணத்தை விட இதில் தான் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறோம் என அவர் கூறியுள்ளார்.

                                ஆக, திருமணம் குறித்து சுருதியும் சரி அவரது காதலரும் சரி யோசிக்கவே இல்லை என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

                                  Posted in சினிமா

                                  கவர்ச்சி உடையில் ராய் லட்சுமி

                                  கவர்ச்சி உடையில் ராய் லட்சுமி

                                  நடிகை ராய் லட்சுமி சிவப்பு நிற கவர்ச்சி உடையில் கலக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                                  சிவப்பு நிற கவர்ச்சி உடையில் ராய் லட்சுமி.. இணையத்தை கலக்கும் புகைப்படம்
                                  ராய் லட்சுமி


                                  தமிழில் ‘கற்க கசடற’ படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான ராய்லட்சுமி, ஜெயம் ரவியின் ‘தாம் தூம்’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

                                  அதன்பிறகு ‘கற்க கசடற’, ‘குண்டக்க மண்டக்க’, ‘தர்மபுரி’, ‘வெள்ளித்திரை’, ‘மங்காத்த’, ‘காஞ்சனா’, ‘அரண்மனை’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தை பெற்றார்.

                                  படவாய்ப்பு குறைந்ததை அடுத்து இந்தி சினிமாவுக்கு தாவினார். இந்தியில் ராய் லட்சுமி முதன்முதலில் நடித்த ‘ஜூலி 2’ திரைப்படம் தோல்வியை சந்தித்திருந்தது. இவர்

                                  நடிப்பில் கடைசியாக தமிழில் சிண்ட்ரெல்லா திரைப்படம் வெளியானது. அவ்வப்போது பல போட்டோஷூட்டுகளை எடுத்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

                                  தற்போது சிவப்பு நிற கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது

                                    Posted in சினிமா

                                    ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய ஷகிலா

                                    .ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய ஷகிலா

                                    தமிழ் சினிமாவில் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ஷகிலா, தனியார் நிகழ்ச்சியில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்டார்.

                                    ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய ஷகிலா
                                    ஷகிலா


                                    தமிழ், மலையாளம், தெலுங்கில் 1980 மற்றும் 90-களில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா. கேரளாவில் இவரது

                                    படங்கள் வசூலில் முன்னணி நடிகர்கள் படங்களை முறியடித்த சம்பவங்களும் நடந்துள்ளன. இவருக்கு பெரிய ரசிகர்கள் வட்டாரம் உள்ளது. ஷகிலாவின் வாழ்க்கை

                                    கதை சினிமா படமாகவும் வந்துள்ளது. தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

                                    ஷகிலா

                                    இந்த நிலையில் ஷகிலாவை திருப்பத்தூரில் நடந்த தனியார் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க அழைத்து இருந்தனர். அப்போது அவரை காண அங்கு ஏராளமான ரசிகர்கள்

                                    திரண்டு நின்றனர். விழா முடிந்து வெளியே வந்த ஷகிலாவை பார்த்ததும் அவரோடு செல்பி எடுக்கவும், கைகுலுக்கவும் ரசிகர்கள் முண்டியடித்தனர். இதனால் ஷகிலா

                                    ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கினார். அவர்களிடம் இருந்து ஷகிலாவை பாதுகாவலர்கள் கஷ்டப்பட்டு மீட்டு அழைத்துச் சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய வீடியோவை ஷகிலா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்

                                      Posted in சினிமா

                                      கலாய்த்த நெட்டிசன்கள்.. நெத்தியடி கொடுத்த விஜய்

                                      கலாய்த்த நெட்டிசன்கள்.. நெத்தியடி கொடுத்த விஜய்

                                      நடிகர் விஜய் வாக்களிக்க வந்த சிவப்பு நிற காருக்கு இன்சூரன்ஸ் இல்லை என்று கலாய்த்த நெட்டிசன்களுக்கு நெத்தியடி கொடுக்கும் படி பதிலளிக்கப்பட்டுள்ளது.

                                      கலாய்த்த நெட்டிசன்கள்.. நெத்தியடி கொடுத்த விஜய்
                                      விஜய்


                                      தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பிரபலங்கள் பலரும் வாக்களித்தனர்.

                                      அந்த வகையில் நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க சிவப்பு நிற காரில் வந்தார். அவரது இல்லத்தில் இருந்தே ரசிகர்கள் புடை

                                      சூழ வந்த விஜய், நீலாங்கரை வேல்ஸ் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

                                      இன்சூரன்ஸ்

                                      அவர் பயணித்து வந்த சிவப்பு நிற காருக்கு இன்சூரன்ஸ் செலுத்தவில்லை அதில் தான் விஜய் வாக்களிக்க வந்தார் என்று நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வந்தனர். இதற்கு

                                      பதிலளிக்கும் வகையில் விஜய் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. விஜய் வந்த காருக்கு வருகிற மே 28, 2022 ஆண்டு வரை இன்சூரன்ஸ் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது