Tag: சடலம் மீட்பு
வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு
வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு
வெட்டுக்காயங்களுடன் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில், கரம்பகம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவரின் சடலம் மிருசுவில் கரம்பகத்தில் இன்று காலை தோட்டக் குடிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கரம்பகத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் (வயது 43) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக குடும்பத்தை பிரிந்து வாழும் இவர் தோட்டத்தில் தங்குவதை வழமையாக கொண்டுள்ளார்.
இந்த நிலையிலேயே இன்று காலை கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொடிகாமம் பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Featured
வெட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு
வெட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு
வவுனியா பூவரசங்குளம் மணியர்குளம் பகுதியில் நேற்று (09) இரவு வெட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
மணியர்குளத்தின் அணைக்கட்டினை அண்மித்த பகுதியில் கழுத்து பகுதியில் வெட்டுக்காயங்களுடன் சடலம் காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பூவரசங்குளம் பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் நித்தியநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய சக்திவேல் யசோதரன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மரண விசாரணை அதிகாரியின் வருகைக்காக சடலம் தற்போதும் அதே இடத்தில் காணப்படுகின்றது
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மர்மமான முறையில் மரணங்கள் அதிகரித்து செல்வதுடன் மூன்று நாட்களுக்கு முன்னர் வவுனியா கற்குழி பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த நால்வர் உயிரிழந்த முறையில் சடலமாக மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது
தோட்டப் பகுதியில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு | இலங்கை செய்திகள்
தோட்டப் பகுதியில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்| தாலிக் கயிற்றினால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 25 வயதுடைய ஓர் இளம் பெண்ணின் சடலத்தை புஸல்லாவ சோகமா தோட்ட மேல் பிரிவிலிருந்து மீட்டுள்ளதாக புஸல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் எல்பொட தோட்ட கட்டுகித்துல ஜன உதான கிராமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய எஸ். நிரஞ்சலா தேவி என்பவர் ஆவார்.
அந்தப் பெண் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரே தனது முதல் கணவரை பிரிந்து, வேறொரு நபரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
அதன் பின்னர் இருவரும் கொழும்பில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர் என கூறப்படுகிறது.
தோட்டப் பகுதியில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு | இலங்கை செய்திகள்
இந்நிலையில் எல்பொட கட்டுகித்துலையில் உள்ள பெண்ணின் தாய்வீட்டுக்கு செல்வதற்காக கொழும்பிலிருந்து இருவரும் புஸல்லாவ நகருக்கு வந்துள்ளபோதும், வீட்டுக்குச் செல்லவில்லை என்பது ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் தேயிலை கொழுந்து பறிக்கச் சென்ற இரு பெண்கள் சடலத்தை குறித்த இடத்தில் கண்டு, புஸல்லாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர்.
அத்துடன் உயிரிழந்த பெண்ணின் இரண்டாவது கணவர் தலைமறைவாகியுள்ளதாக கூறும் பொலிஸார், பெண் வேறோர் இடத்தில் கொலை செய்யப்பட்டு, குறித்த இடத்தில் கொண்டுவந்து போடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான ஸ்தல விசாரணைகளை கம்பளை மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதவான் மேற்கொண்டதோடு, சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸல்லாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ஆணின் சடலம் மீட்பு | இலங்கை செய்திகள்
ஆணின் சடலம் மீட்பு | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவில் மாவில்மடு பிரதேசத்தில் மகாவலி கங்கையில் இருந்து ஆணின் சடலம் நேற்று (01) மீட்கப்பட்டுள்ளது.
கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
45 – 55 வயதுக்கு இடைப்பட்ட நபரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,
மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பேருந்துக்கு அடியில் இருந்து நபரொருவரின் சடலம் மீட்பு| இலங்கை செய்திகள்
பேருந்துக்கு அடியில் இருந்து நபரொருவரின் சடலம் மீட்பு| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |நோர்டன்பிரிட்ஜ் தியகல வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தின் பின்னர் பஸ்ஸுக்கு அடியில் புதையுண்டிருந்த இளைஞனின் சடலம் லக்ஷபான இராணுவ முகாம் படையினர் மற்றும் நோர்டன்பிரிட்ஜ் பொலிஸ் அதிகாரிகளால் இன்று (20) காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஹிக்கடுவ களுபே பகுதியைச் சேர்ந்த டிலான் கௌசல்யா என்ற 33 வயதுடைய நபரின் சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று (19) இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில், 26 பேர் காயமடைந்து , இரண்டு யுவதிகள் உயிரிழந்திருந்த நிலையில், பேருந்தில் வந்த ஒருவர் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து
பேருந்தை சோதனையிட்ட போது காணாமல் போன இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் இருந்து வாலிபன் சடலம் மீட்பு | இலங்கை செய்திகள்
ஆற்றில் இருந்து வாலிபன் சடலம் மீட்பு | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் | மட்டக்களப்பு ஆற்றில் இருந்து வாலிபன் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
கடந்த மூன்று நாடுகளுக்கு முன்னர் காணாமல் போன வாலிபனே
ஆற்றில் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இந்த வாலிபன் மரணம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இலங்கையில் நாள் தோறும் நீர் நிலைகள் ,
காடுகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு
உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு
மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் தளவாய் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று இன்று மாலை மீட்கப்பட்டது.
தளவாய் பனந்தோப்பு பகுதியில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், சுமார் 15 நாட்களுக்கு முன் குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மரம் ஒன்றில் கயிற்றில் தூக்கிட்டவாறு இருந்த சடலத்தை அவதானித்த கிராமத்தவர் பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து.
உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு
இன்று மாலை சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த மட்டக்களப்பு தடயவியல் பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி நசீர் உள்ளிட்டோர் சடலதத்தை பார்வையிட்டதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய தம்பிலெப்பை றம்ளான் என்பவரே இவ்வாறு சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
உருக்குலைந்த நிலையிலிருந்த சடலத்தின் அடையாளங்களை அவரது குடும்பத்தார் உறுதிப்படுத்தியிருந்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரனைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
யாழில் குளத்தில் இருந்து சடலம் மீட்பு
யாழில் குளத்தில் இருந்து சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் வரணி குடம்பியன் பகுதியில் உள்ள குளம் ஒன்றுக்குள் இருந்து 37 வயதுடைய நபரது சடலம் மீட்க பட்டுள்ளது .
இந்த குளத்தில் குளிக்க சென்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இலங்கையில் நாள் தோறும் நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளது .
இந்த மர்ம கொலைகளின் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்க படவில்லை .
Featured
வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
வவவுனியா கந்தன் குள காட்டு பகுதியில் இருந்து 48 வயதுடைய ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
வீடொன்றை பராமரிக்க வவுனியாவில் தங்கி இருந்து வீட்டு வேலைகளை கண்காணித்து வந்த ,யாழ்பாணத்தை சேர்ந்தவரே கந்தன் குள பகுதியில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இலங்கையில் தொடர்ந்து இவ்விதம் காடுகளில் சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை ,மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
Featured
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் சடலம் மீட்பு
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் சடலம் மீட்பு
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
வவுனியா தாண்டிக்குளம் ரயில்வே நிலைய தாண்டவாளம் பகுதி அருகில் இந்த மனித சடலம் கண்டு பிடிக்க பட்டுள்ளது.
இவ்வாறு வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ,சடலமாக கண்டு பிடிக்க பட்டவர் 45 வயதுடைய ஆண் என அடையாள காணப் பட்டுள்ளார் .
குறித்த ஆணின் சடலம் மீட்க பட்டு உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது .
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் சடலம் மீட்பு
இவரது சடலத்தின் அருகில் ஊந்துருளி ஒன்றும் இருந்து மீட்க பட்டுள்ளது .
இது கொலையா தற்கொலையா என்பது தொடர்பில் தெரியவரவில்லை விசாரணைகள் தொடர்கின்றன .
வெள்ளவத்தை கடல் கரையில் ஆணின் சடலம் மீட்பு
வெள்ளவத்தை கடல் கரையில் ஆணின் சடலம் மீட்பு
இலங்கை ,கொழும்பு ; இலங்கை வெள்ளவத்தை கடல் கரை பகுதியில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார்
சடலத்தை மீட்ட காவல்துறையினர் உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த மருத்துவ மனையில் வைக்க பட்டுள்ளது.
இவர் கொலை செய்யப் பட்டாரா அல்லது இயற்கையாக இறந்தாரா என்பது தொடர்பில் தெரியவரவில்லை .
வெள்ளைவத்தை கடல் கரையில் மீட்க பட்ட சடலத்தை அடையாளம் காணும் முயற்சியில் மக்கள் உதவி கோரப்பட்டுள்ளது .
கடல் கரையில் சடலமாக மீட்க பட்டவர் நாற்பது வயதுக்கு உள்ளிட்ட ஆண் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோட்டபாய ஆட்சியில் நீர் நிலைகளில் இவ்விதமான சடலங்கள் தொடர்ச்சியாக மீட்க பட்ட வண்ணம் உள்ளது.
இந்த மரணங்களின் பின்புலத்தில் மர்ம கும்பல் ஒன்று இயங்குவதாக சந்தேகிக்க படுகிறது.
கணேசபுரம் காட்டுப்பகுதியில் 16 வயது பெண் சடலம் மீட்பு
கணேசபுரம் காட்டுப்பகுதியில் 16 வயது பெண் சடலம் மீட்பு
நேற்று மாலை, குறித்த சிறுமி காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து சிறுமியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் சிறுமியின் வீட்டுக்கு அண்மித்த பாதை ஒன்றில் அவரது காலணி மற்று புத்தகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
குறித்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டதுடன், அந்தப் பகுதியில்
இருந்த கிணறு ஒன்றில் இருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
கிளிநொச்சியில் ஆலயத்தில் சடலம் மீட்பு
கிளிநொச்சியில் ஆலயத்தில் சடலம் மீட்பு
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வாநகர் ஐயப்பன் கோவில் மண்டபத்தில்
ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கிளிநொச்சியை சேர்ந்த 43 வயதுடைய லாலசிங்கம் சங்கர் என்ற 2
பிள்ளைகளின் தந்தையான வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த மரணம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் பல்வேறு கோணங்களில்
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டுக்குள் இருந்து இறந்த நிலையில் 5 பேரது சடலம் மீட்பு
வீட்டுக்குள் இருந்து இறந்த நிலையில் 5 பேரது சடலம் மீட்பு
அமெரிக்கா suburban Denver பகுதியில் உள்ள அடுக்குமாடி தொடரில் உள்ள கட்டடம்
ஒன்றுக்குள் இருந்து இறந்த நிலையில் ஐந்து பேரது சடலம் மீட்க பட்டுள்ளது
இந்த அப்பார்ட்மெண்ட் பகுதியில் வசித்து வந்த இவர்கள் போதைவஸ்துக்கு
அடிமையானவர்கள் என தெருவிக்க பட்டுள்ளது ,தொடர்ந்து குறித்த மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
சாக்கில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு
சாக்கில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு
இலங்கையில் முஸ்லீம் குடும்ப பெண் ஒருவர் கோரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் குப்பைகள் கொட்டும் பகுதியில் சாக்கு மூடையில் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் Fathima Mumtaz என்கின்ற ம் 44 வயதுடைய பெண்ணாகும் .
சாக்கில் இருந்து மீட்க பட்ட பெண்ணின் கணவர் இவர் தனது மனைவி என பெண்ணின் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளார்.
கடலில் மிதந்த பெண்ணின் சடலம் வாலிபன் மாயம்
குறித்த பெண்ணின் கோர கொலை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
சூட்கேசில் பெண்ணின் சடலம் கொழும்பில் நடந்தேறிய பயங்கரம்
சாக்கு மூட்டையில் பெண் சடலமாக குப்பை மேட்டில் இருந்து மீட்க பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இந்த பெண் ஏன் இவ்வாறு கோரமாக கொலை செய்யப்பட்டார் என்கின்ற விடயம் உடனடியாக தெரியவரவிலை .
கோட்டா ஆட்சியில் வீதிகளில் மிதக்கும் மனித சடலங்கள் – பீதியில் தமிழர்கள்
கோட்டா ஆட்சியில் வீதிகளில் மிதக்கும் மனித சடலங்கள் – பீதியில் தமிழர்கள்
இலங்கை அம்பாறை மாவடிப்பள்ளி பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றுக்குள் இருந்து ஆண் ஒருவரது சடலம் அழுகிய நிலையில் கண்டு பிடிக்க பட்டுள்ளது
அவ்வழியால் சென்றவர்கள் தூர் நாற்றம் வீசுவதை கண்டு பொலிசாருக்கு தெரிவித்த நிலையில் சடலம்
மீட்க பட்டுள்ளது
இவ்வாறு சடலமாக மீட்க பட்டவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
,கோட்டா ஆட்சியில் தொடராக மர்ம கொலைகள் இடம்பெற்று வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது



























