Posted in Uncategorized

நள்ளிரவில் சுகாதார பிரிவினர் அதிரடி நடவடிக்கை!

நள்ளிரவில் சுகாதார பிரிவினர் அதிரடி நடவடிக்கை!

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார பிரிவினர் பாரிய

இன்னல்களை எதிர்நோக்கி இரவு, பகல் பராது செயற்பட்டு கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் நள்ளிரவு 12 மணி தொடக்கம் அதிகாலை 5.30 மணி வரையிலான காலப்பகுதியில்

மூன்றுமுறிப்பு (வவுனியா வரவேற்பு வழைவுக்கு அருகே) பகுதியில் ஏ9 வீதியூடாக வாகனங்களில் பயணிப்போருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

டெல்டா வைரஸ் தாக்கம் நாடளாவீய ரீதியில் அதிகரித்து வருகின்றமையினை அடுத்து அதனை எமது மாவட்டத்தில் கட்டுப்படுத்துவதற்காக வியாபார நோக்கம் , அலுலக தேவை

போன்றவற்றிகாக வவுனியா மாவட்டத்தினுள் நுழையும் வாகனங்களில் பயணிப்போர் மற்றும்

வவுனியா ஊடாக ஏனைய மாகாணங்களுக்கு செல்பவர்கள் என 300 க்கு மேற்பட்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது

    Posted in Uncategorized

    கோட்டா ,மைத்திரி கட்சி திடீர் சந்திப்பு – பேச போவது என்ன ..?

    கோட்டா ,மைத்திரி கட்சி திடீர் சந்திப்பு – பேச போவது என்ன ..?

    ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (26) காலை நடைபெறவுள்ளது.

    இதனை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

    கலந்துரையாடல் காலை 11.00 மணிக்கு நடைபெறும் என்றும், கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 14

    பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடலில் கலந்து கொள்ள வாய்ப்பு கோரியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

    இந்த கலந்துரையாடலில் விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுடன் காலை 9.00 மணிக்கு கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    கட்சியின் தலைவர், சிரேஷ்ட உப தலைவர்களான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர, பொருளாளர்

    மற்றும் இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண ஆகியோருடன் தானும் இக் கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளதாக துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

      Posted in இலங்கை செய்திகள்

      தொடரும் போலீஸ் வேட்டை – 151 பேர் கைது

      தொடரும் போலீஸ் வேட்டை – 151 பேர் கைது

      இலங்கையில் நிகழ்கால விதிகளை மீறிய குற்ற சாட்டின் பேரில் 151 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

      கொரனோ தனிமை படுத்தல் விதிகளை மீறினார் என்ற குற்ற சாட்டில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

        Posted in Uncategorized

        30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் -கொவிட் தடுப்பூசி

        30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் -கொவிட் தடுப்பூசி

        எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி

        செலுத்தி முடிக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

        புளத்சிங்கள பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

        இவ்வாறு அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டதை அடுத்து நாட்டை முழுமையாக திறப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

          Posted in Uncategorized

          மகளை கொடுமை படுத்திய தந்தை , அத்தை கைது

          மகளை கொடுமை படுத்திய தந்தை , அத்தை கைது

          நுரைச்சோலை பகுதியில் உள்ள வீடொன்றில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் கொடுமைகளுக்கு

          உட்படுவதாக பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சிறுமியை பொலிஸார் காப்பற்றியுள்ளனர்.

          குறித்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை மற்றும் தந்தையின் சகோதரி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

          குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து அவர்களை எதிர்வரும் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

          Posted in Uncategorized

          ரிச்சார்ட் மனைவி உள்ளிட்ட நால்வரை விசாரிக்க உத்தரவு

          ரிச்சார்ட் மனைவி உள்ளிட்ட நால்வரை விசாரிக்க உத்தரவு

          இலங்கையின் முன்னாள் அமைச்சர் ரிச்சார்ட் பதியுதீன் மனைவி உள்ளிட்ட நால்வரை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவிட பட்டுள்ளது

          இவர்களது வீட்டில் சிறுமி ஒருத்தி வீட்டு வேலை செய்து வந்தார் ,இவர் தீயில் எரிந்த நிலையில்

          சடலமாக மீட்க பட்டார் ,இவரது இந்த கொலை தொடர்பாக விசாரிக்க இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது

          மரணம் கொலை என நிரூபிக்க பட்டால் அமைச்சர் உள்ளிட்டவர்கள் சிறை செல்லும் அபாயம் எழுந்துள்ளது குறிப்பிட தக்கது

            Posted in Uncategorized

            மகளை கற்பழிக்க முனைந்த நண்பன் – அடித்து கொன்ற தந்தை

            Ethiri.com – எதிரி இணையம்

            மகளை கற்பழிக்க முனைந்த நண்பன் – அடித்து கொன்ற தந்தை

            இலங்கை மதுக்கம பிரதேசத்தில் ஒன்பது வயது மகளின் உடலில் அங்க சேட்டை புரிந்த நண்பனை ,அவளது தந்தை அடித்து கொன்றுள்ளார்

            மேற்படி செயலை கண்ணுற்ற தந்தை கோபத்தின் உச்சத்திற்கு சென்று இந்த செயலை புரிந்துள்ளார்


            கொலை குற்ற சாட்டில் தந்தை கைது செய்ய பட்டுள்ளார் ,
            மேற்படி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

              Posted in இலங்கை செய்திகள்

              மருதங்கேணி – செம்பியன்பற்று குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

              மருதங்கேணி – செம்பியன்பற்று குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

              நீர்ப்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மருதங்கேணி – செம்பியன்பற்று நாவலடி குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

              நீர்ப்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை அபிவிருத்தி செய்யும் பணிகளின் ஓர் அங்கமாக மருதங்கேணி பிரதேச

              செயலகத்துக்குட்பட்ட, J/427 செம்பியன்பற்று தெற்கு கிராமத்தின் நாவலடி குளத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

              இதன் ஆரம்ப நிகழ்வில் பிரதமவிருந்தினராக கலந்துகொண்ட, பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன்;

              அடிக்கல் நாட்டி பணிகளை ஆரம்பித்ததுடன், திட்டத்தின் பெயர்ப்பலகையையும் திரைநீக்கம் செய்தார்.

              மேலும், அப்பகுதி விவசாயிகளின் பிரச்சனைகளை கேட்டறிந்ததோடு உடனடி நடவடிக்கைகளை

              எடுத்து அவற்றை தீர்த்துவைக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தல்களை வழங்கினார்.

              இந் நிகழ்ச்சித்திட்டமானது நீர்ப்பாசன அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படுகின்றது.

              அதன்படி, நாவலடி குளத்தின் அபிவிருத்திப்பணிகளுக்காக 3,866,000 ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


              யாழ் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இச்செயற்பாடுகள் 4 மாதங்களில் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

              இக்குளத்தை அபிவிருத்தி செய்து குளத்தின் நீர் கொள்ளளவை அதிகரிக்கச் செய்வதனூடாக, நெல் மற்றும் வெங்காயப் பயிர்ச்செய்கைகளை பெருமளவில் மேற்கொள்ளும் செம்பியன்பற்று கிராம மக்கள் நன்மையடையவுள்ளனர்.

              இக்குளத்தை அபிவிருத்தி செய்துதருமாறு குறித்த கிராம மக்கள் முன்வைத்த கோரிக்கையை கருத்தில் கொண்ட அங்கஜன் இராமநாதனுக்கு நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் தமது நன்றியை நேரில் தெரிவித்தனர்.

                Posted in Uncategorized

                போலீசார் திடீர் சுற்றிவளைப்பு -3.009 பேர் கைது

                போலீசார் திடீர் சுற்றிவளைப்பு -3.009 பேர் கைது

                இலங்கை காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் பொழுது 3,009 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                இவ்வாறு கைது செய்ய பட்டவர்களில் பல் வேறு பட்ட குற்ற செயல்களுடன் தொடர்பு பட்டவர்கள் நீதிமன்ற பிடியானையின் மூலம் கைது செய்ய பட்டுள்ளனர்

                மேலும் மது போதையில் வாகனம் செலுத்திய 580 பெரும் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                  Posted in Uncategorized

                  கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைய முற்பட்ட சீன நாட்டவர் உள்ளிட்ட ஐவர் கைது

                  கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைய முற்பட்ட சீன நாட்டவர் உள்ளிட்ட ஐவர் கைது

                  கொழும்பு துறைமுகத்திற்குள் அனுமதியின்றி நுழைய முற்பட்ட சீன நாட்டவர் உள்ளிட்ட ஐவர் கைது செய்ய பட்டுள்ளனர்

                  உள்ளே நுழைவதற்கான அனுமதி பத்திரங்கள் எதுவும் இன்றி சட்ட விரோதமாக நுழைய முற்பட்ட

                  குற்றத்திற்கு கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

                    Posted in இலங்கை செய்திகள்

                    உளவுத்துறை போல மக்களை ஏமாற்றிய நால்வர் கைது

                    உளவுத்துறை போல மக்களை ஏமாற்றிய நால்வர் கைது

                    இலங்கை குற்ற புலனாய்வு துறையினர் என தம்மை கூறி மக்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட நால்வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

                    பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது

                    ,கைதானவர்களிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                      Posted in இலங்கை செய்திகள்

                      பறக்கும் படை வேட்டையில் 164 பேர் கைது

                      பறக்கும் படை வேட்டையில் 164 பேர் கைது

                      இலங்கையில் தொடர்ந்து பரவி வரும் கொரனோ நோயின் கட்டுப்பாட்டு விதிகளை மீறி செயல்

                      பட்ட 164 பேர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்


                      இவ்விதம் கைது செய்ய பட்டவர்கள் முக கவசம் அணியாது சென்றதுடன் ,மாகாண எல்லைகளை தாண்டிய குற்ற செயல்களில் கைதாகியுள்ளனர்

                        Posted in இலங்கை செய்திகள்

                        தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் 224 பேர் கைது

                        தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் 224 பேர் கைது

                        இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் 224 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                        இவர்கள் முக கவசம் அணிய மறுத்தமை மற்றும் ,மாகாண எல்லைகளை தாண்டிய குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளனர் என தெரிவிக்க படுகிறது

                          Posted in இலங்கை செய்திகள்

                          இதுவரையில் 49,042 பேர் கைது – தொடரும் அத்துமீறல்

                          இதுவரையில் 49,042 பேர் கைது – தொடரும் அத்துமீறல்

                          மாகாண கட்டுப்பாட்டை மீறியவகையில்பயணிப்பதற்கு முயற்சித்த 205 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

                          இன்று காலை 6.00 மணியுடன்நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் சட்ட விதிகளை மீறிய 234 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

                          இதுவரையில் 49,042 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக சிரேஷ்டபிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்

                            Posted in இலங்கை செய்திகள்

                            பாயும் படை வேட்டை – 234 பேர் கைது

                            பாயும் படை வேட்டை – 234 பேர் கைது

                            தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 234 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                            பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டிருக்கின்ற போதிலும் மக்கள் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு

                            உட்பட்டிருக்க வேண்டும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்

                            Posted in இலங்கை செய்திகள்

                            தொடரும் காவல்துறை வேட்டை – 266 பேர் கைது

                            தொடரும் காவல்துறை வேட்டை – 266 பேர் கைது

                            நாட்டில் நிலவி வரும் கொரனோ பாதிப்பை அடுத்து தனிமை படுத்தல் விதிகள் அறிவிக்க பட்டன

                            ,மேற்படி விதிகளை மீறி செயல்பட்ட குற்ற சாட்டின் பேரில் 266 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                            இவ்வாறு கைது செய்ய பட்டவர்களில் முகக்கவசம் இன்றி உலாவியமை மற்றும் ,மாகாண எல்லைகளை தாண்டிய குற்ற சாட்டு சுமத்த பட்டுள்ளது

                              Posted in இலங்கை செய்திகள்

                              ஜே.வி.பியினர் ஆர்ப்பாட்டம் – நால்வர் கைது

                              ஜே.வி.பியினர் ஆர்ப்பாட்டம் – நால்வர் கைது

                              சேர் ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தை உடன் மீள

                              பெறுமாறு வலியுறுத்தி அட்டன் மணிக்கூட்டு கோபுரச்சந்திக்கு முன்பாக ஜே.வி.பியினர் இன்று (08) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

                              இதன்போது அக்கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர்கள் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

                              கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அரச தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

                              இந்நிலையில் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்த பொலிஸார், இவ்விடயத்தை சுட்டிக்காட்டி அதனை நிறுத்துமாறு வலியுறுத்தினர்.

                              எனினும், போராட்டக்காரர்களால் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது. இதனால் பொலிஸாருக்கும், அரசியல் செயற்பாட்டாளர்களுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

                              இதனையடுத்து நால்வர் அட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நால்வரையும் ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

                              Posted in Uncategorized

                              சிறுமி துஷ்பிரயோகம் – விசேட வைத்தியர் கைது

                              சிறுமி துஷ்பிரயோகம் – விசேட வைத்தியர் கைது

                              15 வயது சிறுமி ஒருவரை இணையத்தினூடாக பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                              33 வயதுடைய நபர் ஒருவரும் விசேட வைத்தியர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                              கொழும்பிற்கு அருகில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் குறித்த வைத்தியர் பண்டாரகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

                              இணையத்தின் ஊடாக குறித்த சிறுமியை பெற்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக குறித்த நபருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

                              குறித்த இருவருடன் இதுவரையில் இந்த சம்பவம் தொடர்பில் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

                                Posted in இலங்கை செய்திகள்

                                பறக்கும் படை வேட்டை – 563 பேர் கைது

                                பறக்கும் படை வேட்டை – 563 பேர் கைது

                                இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ தாக்குதலை அடுத்து தற்பொழுது

                                விதிக்க பட்டுள்ள விதிகளை மீறி செயல் பட்டனர் என்ற குற்ற சாட்டில் 563 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                                இவ்வாறு கைதானவர்கள் அனைவரும் முக கவசம் அணியாது உலவியமை மற்றும் மாகாண எல்லைகளை கடந்த குற்ற சாட்டு சுமத்த பட்டுள்ளது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 433 பேர் கைது

                                  தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 433 பேர் கைது

                                  இலங்கையில் நிகழ்கால கொரனோ தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்றச் சாட்டில் 433 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                                  இவ்விதம் கைதானவர்கள் முக கவசம் அணிய மறுத்தமை, மற்றும் மாகாண எல்லைகளை

                                  தாண்டிய குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது