காலி கடற்பரப்பில் ஈரானிய கப்பலில் இருந்து 35 பேர் மீட்கப்பட்டனர்
Posted in இலங்கை செய்திகள்

காலி கடற்பரப்பில் ஈரானிய கப்பலில் இருந்து 35 பேர் மீட்கப்பட்டனர்

காலி கடற்பரப்பில் ஈரானிய கப்பலில் இருந்து 35 பேர் மீட்கப்பட்டனர்

காலி கடற்பரப்பில் ஈரானிய கப்பலில் இருந்து 35 பேர் மீட்கப்பட்டனர் ,இலங்கையின் தெற்கு கடல் பகுதியில் பாதிக்கப்பட்ட ஈரானிய கப்பலில் இருந்து சுமார் 35 பேர் மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களை காலி தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு

வண்டி ஓட பெற்றோல் இல்ல மீண்டும் வரிசையில் மக்கள் 576 VANNI MAINTHAN Song
வண்டி ஓட பெற்றோல் இல்ல மீண்டும் வரிசையில் மக்கள் 576 VANNI MAINTHAN Songவண்டி ஓட பெற்றோல் இல்ல மீண்டும் வரிசையில் மக்கள் 576 VANNI MAINTHAN Song

பாதிக்கப்பட்டவர்களை காலி தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கூடுதலாக, தேடுதல் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக இலங்கை விமானப்படை சம்பவம் நடந்த பகுதிக்கு ஒரு விமானத்தை அனுப்பியுள்ளது.

இதற்கிடையில், இன்று (04) நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், விபத்து நடந்தபோது கப்பல் இலங்கை கடல் பகுதியில் இல்லை என்று குறிப்பிட்டார்.

கப்பல் மூழ்குவதாக கடற்படைக்கு கிடைத்த பேரிடர்

அதிகாலை 5:08 மணியளவில் கப்பல் மூழ்குவதாக கடற்படைக்கு கிடைத்த பேரிடர் அழைப்பின் அடிப்படையில்,

மீட்பு நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்பட்டதாகவும் அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

இலங்கையின் தெற்கு கடல் பகுதியில் பாதிக்கப்பட்ட ஈரானிய கப்பலில் இருந்து குறைந்தது 30 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த கப்பல் ஈரானிய கடற்படைக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.

முன்னதாக, காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் ஈரானிய கப்பலில் இருந்து ஒரு பேரிடர் அழைப்பு வந்ததை அடுத்து, இலங்கை கடற்படையால் மீட்புப் பணி தொடங்கப்பட்டது.

படகில் இருந்தவர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படை கப்பல்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது

காலியில் உள்ள ஸ்க்ராப் மெட்டல் கடையில் தீ விபத்து
Posted in இலங்கை செய்திகள்

காலியில் உள்ள ஸ்க்ராப் மெட்டல் கடையில் தீ விபத்து

காலியில் உள்ள ஸ்க்ராப் மெட்டல் கடையில் தீ விபத்து

காலி, தெவட சந்திக்கு அருகிலுள்ள ஸ்க்ராப் மெட்டல் சேகரிப்பு கடையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

தீயை கட்டுப்படுத்த

தீயை கட்டுப்படுத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தீயணைப்பு வீரர்கள் தற்போது நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காலி-மாத்தறை பிரதான சாலை

இந்த சம்பவத்தால் காலி-மாத்தறை பிரதான சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது,

வாகன ஓட்டிகள் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காலிக்கு சென்ற பஸ் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

காலிக்கு சென்ற பஸ் விபத்து

காலிக்கு சென்ற பஸ் விபத்து

மட்டக்களப்பிலிருந்து காலிக்கு சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் பலி ஆகியுள்ளார்.

கொழும்பு – வெல்லவாய வீதியில் சனிக்கிழமை (24) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், முன்னால் சென்ற லொறியின் பின்புறத்தில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தங்காலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான பஸ்ஸில் பயணித்த சாரதி உட்பட 13 பேர் காயமடைந்து தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், படுகாயமடைந்த பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அடையாளம் காணப்படவில்லையென்பதுடன் சடலம் தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து சம்பவம் குறித்து தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மை நாட்களாக வீதி விபத்துக்களும் அதனால் பல உயிரிழப்புக்களும் நடைபெற்றதை அடுத்து, போக்குவரத்து அமைச்சு என்ன நடவடிக்கையில் ஈடுபட்டதென தெரியவில்லை.

இருப்பினும், பஸ்கள் சரியான நிலையில் இருக்கின்றதா என பரிசோதனை செய்த அரசு, அதனை ஓட்டும் சாரதிகள் என்ன நிலைமையில் இருக்கிறார்கள் என பார்க்க தவறி விடுகின்றனர்.

இதனாலேயே இவ்வாறான விபத்துக்கள் நேரிடுகின்றது எனவும் அப்பாவிப் பொதுமக்கள் இறக்கின்றனர் ர்னவும் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலமை எங்க போய் முடியுமோ

காலியில் துப்பாக்கிச் சூடு மூவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

காலியில் துப்பாக்கிச் சூடு மூவர் பலி

காலியில் துப்பாக்கிச் சூடு மூவர் பலி

காலியில் துப்பாக்கிச் சூடு மூவர் பலி ,காலி, ஹினிதும, பனங்கல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி மேற்படி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், குறித்த மூவரும் மதுபானம் அருந்திக்கொண்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது​.

உயிரிழந்தவர்களில் இருவர் 29 மற்றும் 54 வயதுடையவர்கள் என்பதோடு, மற்றையவரின் வயது உறுதிப்படுத்தப்படவில்லை.

சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை ஹினிதும பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

காலி சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே மோதல்
Posted in இலங்கை செய்திகள்

காலி சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே மோதல்

காலி சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே மோதல்

காலி சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஒருவர் அடங்கிய குழு அனுப்பப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து இன்று (27) நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிப்பதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான காமினி பி. திசாநாயக்க தெரிவித்தார்.

காலி சிறைச்சாலையில் நேற்று (26) பிற்பகல் இரு கைதிகள் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது.

இதில் நான்கு கைதிகள் காயமடைந்துள்ளதாகவும், இருவர் காலி – கராபிட்டிய தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மோதலில் காயமடைந்த ஏனைய இரண்டு கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அஹுங்கல்ல ‘லொக்கு பெட்டி’ மற்றும் ‘கரந்தெனிய சுத்தா’ ஆகிய பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரு குழுக்களின் உறுப்பினர்களுக்கு இடையே இந்த மோதல் ஏற்பட்டதாக சிறைச்சாலை உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காலி துறைமுகத்தில் நீரில் மூழ்கிய படகு
Posted in இலங்கை செய்திகள்

காலி துறைமுகத்தில் நீரில் மூழ்கிய படகு

காலி துறைமுகத்தில் நீரில் மூழ்கிய படகு

காலி துறைமுகத்தில் நீரில் மூழ்கிய படகு காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த படகு ஒன்று இன்று (19) காலை நீர் கசிவு காரணமாக நீரில் மூழ்கியுள்ளது.

குறித்த படகு வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட கடல் நடுவில் கைவிடப்பட்டுச் சென்றிருந்த நிலையில், பின்னர் காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்க அமைவாக நடத்தப்பட்ட பொது ஏலத்தில் ஒரு நிறுவனத்தால் இந்தப் படகு வாங்கப்பட்டது, மேலும் அது பழுதுபார்க்கப்பட்டு வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும், படகு மூழ்கும் போது அதில் குறிப்பிட்ட அளவு எரிபொருள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நாளில் வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள்
Posted in இலங்கை செய்திகள்

முள்ளிவாய்க்கால் நாளில் வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள்

முள்ளிவாய்க்கால் நாளில் வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள்

முள்ளிவாய்க்கால் இறுதி போரின் பின்னர் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் பெரும்

வெள்ள பெருக்கு ஏற்பட்டு சிங்கள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிய வண்ணம் உள்ளன

தமிழர் கண்ணீர் சாபங்கள் விளைவாக இயற்கையே இனவாத சிங்கள மக்களை இவ்விதம் தண்டித்து வருகிறது

அதே இனப் படு கொலையை புரிந்த மகிந்த குடும்பம் பதவி இழந்தது நாட்டை விட்டு தப்பி செல்லும் நிலைக்கு முள்ளிவாய்க்கால் மாதம் தள்ளி விட்டுள்ளது

காலி மற்றும் மேல் மாகாணத்தில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்க பட்டுள்ளனர்

மேலும் பல நூறு வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.