துப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பிய நபர்கள்
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பிய நபர்கள்

துப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பிய நபர்கள்

துப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பிய நபர்கள் ,கொஸ்கொட பொலிஸ் பிரிவின் மஹைந்துருவ பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இன்று (30) காலை துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

119 என்ற எண்ணுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி செயல்படாததால் உயிர் சேதமோ அல்லது சொத்து சேதமோ ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த துப்பாக்கிச்சூட்டிற்கு பயன்படுத்தபட்டதாக சந்தேகிக்கப்படும் பிஸ்டல் வகை துப்பாக்கி ஒன்று வீட்டின் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அர்ச்சனாவுக்கு உயிர் ஆபத்து
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவுக்கு உயிர் ஆபத்து

அர்ச்சுனாவுக்கு உயிர் ஆபத்து

 அர்ச்சுனாவுக்கு உயிர் ஆபத்து ,சாப கச்சேரி மருத்துவமனையில் முன்னாள் பொறுப் அதிகாரியாக விளங்கிய ஐயா அர்ச்சுனா இராமநாதன் அவர்களுக்கு உயிர் அச்சத்தில் காணப்படுவதாக தெரிய வருகின்றது.

 அவரது வீட்டுக்கு சென்ற நான்கு மர்ம ஆசாமிகள் முகமூடிகளை மூடிக்கொண்டு அவரது கதவுகளை தட்டி, அவருக்கு உயிர் எஅச்சுறுத்தல் விடுத்தது சென்றுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 அரசியல் கட்சி ஒன்றினால் திட்டமிடப்பட்டு, கொலைக்கு அமர்த்தபட்டவர்களாக இவர்கள் காணப்படுவதாக ,விடயம் அறிந்த வட்டாரங்கள் செய்திகளை வெளியிடுகின்றன.

மக்களுக்காக குரல் கொடுத்த மா மனிதன்

 பாதுகாப்பு நிலையில் தன்னந்தனியாக மக்களுக்காக குரல் கொடுத்து இந்த மக்களது நெஞ்சங்களில், ஆழ ஊடுருவி உள்ள அர்ஜுனா அவர்கள் எவ்வளையும் தாக்கப்படலாம்.

 ஆதலால் மக்களுடைய விடியலுக்காகவும் மக்களுடைய எண்ண எழுச்சி களுக்காகவும் ,தன்னை அர்ப்பணித்து, இன்று மனச்சோர்வு நிலையில் உள்ளாக்கப்பட்டு தண்டிக்கப்பட காத்திருக்கின்ற ,

அரசியல் வாதிகளினால் அல்லது கூலி குழுக்களினால் இவர்கள் படுகொலை செய்யப்படலாம் என கருதப்படுகின்றது.

 இதற்கு மக்கள் தமது ஆதரவுகளை வாங்கி இவருக்கு நீங்கள் காவலாக அடிக்க வேண்டியது உங்கள் கடமையாகும் .

காலத்தின் முன்னால் வந்திருக்கக்கூடிய ஒரு கரிகாலனுக்கு நீங்கள் அவனது வாயிலிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டியது உங்களது தேவையாக இருக்கின்றது .

நீதிக்காகவும் நேர்மைக்காகவும் தன்னை நெஞ்சை நிமிர்த்தி அஞ்சாது சாகத் துணிந்து வந்திருக்கின்ற ,அந்த சாகா வீரனுக்கு உங்களது ஆதரவினை வழங்க வேண்டியது உங்களது கடமையாகும்.

 வீழ்வது ஒரு நாள் தான் ,ஆனால் விழும் போது வரலாறாகி விட வேண்டும் என்பது வாழ்வியல் தத்துவ விதியாக காணப்படுகிறது .

அந்த வகையில் அர்ஜுனா மருத்துவரை காப்பாற்ற வேண்டியதும் எம்மோடு அரவணைத்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது மக்கள் கடமையாகும்.

தயவு செய்து இதுகளை உடனடியாக பரப்பி அவர்களுக்கு நல்லவர்களே நெஞ்சோடு உள்ளவர்களே பாதுகாப்பாக நீங்கள் ,காவலுக்கு நிற்க வேண்டும் என்பது எமது வேண்டுதலாக இதில் முன்வைக்கின்றோம்.

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

உள்ளம் தா உயிர் வாழ்கிறேன் ..!

உள்ளம் தா உயிர் வாழ்கிறேன் ..!

ஊரும் கதற உறவும் கதற
உன்னை தேடுறேன் – நீ
உள்ளம் தந்தால் போதும் நானும்
உயிரே வாழுவேன்

ஆசை உன்னில் வைத்து விட்டேன்
அதனால் பாவமே – என்
ஆயூள் முடிவை நீயே சொல்வாய்
அன்பே தாங்குவேன்

நீரை போல ஓடி வரும்
நீளம் தாண்டுவேன்
நீயும் வந்தால் போதும் – இந்த
நிலவை வாங்குவேன்

காடும் மலை கடந்து வந்தால்
காட்சி காணலாம்
கடைசி வரை வாழும் வாழ்வில்
நீட்சி பேணலாம்

உன்னில் ஒன்றை மட்டும் தானே
உயிரே கேட்க்கிறேன்
உன் உள்ளம் தந்தால் போதும்
உன்னை தாங்குவேன் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 08-06-2022

வன்னி மைந்தன் கவிதைகள்

    Posted in உலக செய்திகள்

    கொரனோவில் இருந்து உயிர் தப்பிய – ஒன்பது லட்சம் மக்கள்

    கொரனோவில் இருந்து உயிர் தப்பிய – ஒன்பது லட்சம் மக்கள்

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 9 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

    கொரோனாவில் இருந்து மீண்ட 9 லட்சத்து 17 ஆயிரம் பேர்
    கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர் (கோப்பு படம்)
    ஜெனீவா:

    சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது.

        கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

        தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற

        சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.

        இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் குணமடைந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்து 17 ஆயிரத்தை

        கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 30 லட்சத்து 55 ஆயிரத்து 308 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுத்துள்ளது.

        வைரஸ் பரவியவர்களில் 19 லட்சத்து 26 ஆயிரத்து 844 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 56 ஆயிரத்து 427 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

            மருத்துவ ஊழியர்கள்

            கொரோனா பரவியவர்களில் இதுவரை 2 லட்சத்து 11 ஆயிரத்து 32 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசில் இருந்து

            உலகம் முழுவதும் 9 லட்சத்து 17 ஆயிரத்து 432 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

            வைரஸ் பாதிப்பில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளின் விவரங்கள்:-

            அமெரிக்கா – 1,37,465
            ஸ்பெயின் – 1,20,832
            இத்தாலி – 66,624
            பிரான்ஸ் – 45,513
            ஜெர்மனி – 1,14,500
            துருக்கி – 33,791
            ஈரான் – 70,933
            சீனா – 77,474
            பிரேசில் – 30,152
            கனடா – 17,916
            பெல்ஜியம் – 10,878
            சுவிட்சர்லாந்து – 21,800
            ஆஸ்திரியா – 12,362

            கொரனோவில் இருந்து உயிர்
            கொரனோவில் இருந்து உயிர்