கழிவறைக்கு சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

கழிவறைக்கு சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

கழிவறைக்கு சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

பாடசாலை மைதானத்தில் இருந்த கொங்கிரீட் அமைப்பு ஒன்று விழுந்ததில் பலத்த காயமடைந்த பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மஸ்கெலிய காட்மோர் தோட்டத்தில் வசிக்கும் அந்தப் பாடசாலையில் 6 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் எஸ். அனிஷான் என்ற 11 வயது மாணவனே இந்த அசம்பாவிதத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பாடசாலை மாணவன் தனது நண்பர்கள் இருவருடன் இன்று (04) பிற்பகல் 1.30 மணி அளவில் கழிவறைக்குச் செல்ல வந்த போதே இவ்விபத்தில் சிக்கியுள்ளார்.

பாடசாலை மைதானத்தில் இருந்த கொங்கிரீட் அமைப்பு மாணவனின் உடல் மீது உருண்டுவந்து விழுந்ததில் மாணவன் கழிவறை சுவரில் சிக்கி பலத்த காயம் அடைந்தார்.

பின்னர் பாடசாலையின் ஆசிரியர்களும் அயலவர்களும் ஒன்றிணைந்து காயமடைந்த மாணவனை அம்புலன்ஸ் மூலம் மஸ்கெலிய பிராந்திய வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

சம்பவம் தொடர்பில் மஸ்கெலிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தேயிலை தோட்டம் ஒன்றின் அபிவிருத்தி நோக்கத்திற்காக குறித்த கொங்கிரீட் அமைப்பு கொண்டுவரப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

STF உடன் இடம்பெற்ற மோதலில் இராணுவ வீரர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

STF உடன் இடம்பெற்ற மோதலில் இராணுவ வீரர் உயிரிழப்பு

STF உடன் இடம்பெற்ற மோதலில் இராணுவ வீரர் உயிரிழப்பு

மஹாபாகே பகுதியில் இறைச்சிக் கடை உரிமையாளரின் கொலை மற்றும் பல குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த முன்னாள் இராணுவ வீரர் சூரியவெவ பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி காலை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ஜா-எல வடக்கு படகம பகுதியைச் சேர்ந்த இறைச்சிக் கடை உரிமையாளரான 42 வயதான டொன் சுஜித் என்ற உக்குவா என்பவர் உயிரிழந்தார்.

STF உடன் இடம்பெற்ற மோதலில் இராணுவ வீரர் உயிரிழப்பு

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த நபர், இது தொடர்பான கொலைக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுநராக செயற்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட உக்குவா வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ‘வெல்லே சாரங்கா’ என்ற குற்றவாளியின் சகோதரியின் கணவர் என்பது பின்னர் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.

பாதாள உலக தலைவர் உட்பட இருவர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

பாதாள உலக தலைவர் உட்பட இருவர் உயிரிழப்பு

பாதாள உலக தலைவர் உட்பட இருவர் உயிரிழப்பு


பாதுக்க, துன்தான பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பாதாள உலகக் குழு உறுப்பினர் மன்னா ரொஷான் மற்றும் அவரது சகா ஒருவரும் இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் குறித்த இருவரும் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

வீடியோ

இஸ்ரேல் இரு அதிகாரிகள் பலி எகிறிய உயிரிழப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இரு அதிகாரிகள் பலி எகிறிய உயிரிழப்பு


இஸ்ரேல் இரு அதிகாரிகள் பலி எகிறிய உயிரிழப்பு

இஸ்ரேல் ஹமாஸ் படைகளுக்கு இடையில் இடம்பெற்ற
மோதலில் சிக்கி இரு இஸ்ரேல் இராணுவ அதிகாரிகள் பலியாகியுள்ளனர் .


தொடரும் எதிரியின் தாக்குதலினால் தற்போது உயிரிழப்பு எகிறியுள்ளது .

வீடியோ

கார்த்திகை கிழங்கை சாப்பிட்டவர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

கார்த்திகை கிழங்கை சாப்பிட்டவர் உயிரிழப்பு

கார்த்திகை கிழங்கை சாப்பிட்டவர் உயிரிழப்பு

கார்த்திகை கிழங்கை உட்கொண்ட இளம் குடும்பஸ்தர் நோய்வாய்ப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (16) உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பகுதியை சேர்ந்த மாரிமுத்து சுப்பிரமணியம் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் கார்த்திகை பூ செடியின் கிழங்கை உட்கொண்ட நிலையில் , சுகவீனம் அடைந்துள்ளார், அதனையடுத்து அவரை வீட்டார்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வீடியோ

கனமழை காரணமாக 8 பேர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

கனமழை காரணமாக 8 பேர் உயிரிழப்பு

கனமழை காரணமாக 8 பேர் உயிரிழப்பு

மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்ததால் நகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது.

திங்கட்கிழமை (04) முழுவதும் பெய்த மழை, தற்போது ஓய்ந்துள்ளது.

இதனால் மாநகரில் ஒருசில இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது.

கனமழை காரணமாக 8 பேர் உயிரிழப்பு

இந் நிலையில், சென்னையில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், கனமழையால் சென்னையில் தற்போது 7 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.

மாநகரில் 58 சாலைகளில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.

வீடியோ

நீர்க்குழாய்களுக்கு தீயிட்ட 6 மாணவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

தீ விபத்தில் வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு

தீ விபத்தில் வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு

தலங்கம பகுதியில் அமைந்துள்ள ஜெயந்தி புர இரண்டு மாடி கட்டிடத்தின் குளியலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குளிரூட்டியில் ஏற்பட்ட தீப் பரவலினால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கோட்டை மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்

வீடியோ

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழில் பிரபல வர்த்தகரின் மகன் மர்மமான முறையில் உயிரிழப்பு

யாழில் பிரபல வர்த்தகரின் மகன் மர்மமான முறையில் உயிரிழப்பு

யாழின் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

32 வயது மதிக்கதக்க இளைஞனே கொட்டடியில் உள்ள அவரது வீட்டில் நேற்று (21) மாலை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் ஐஸ் போதைப் பொருளை அதிகளவில் பாவித்த நிலையில் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் பிரபல வர்த்தகரின் மகன் மர்மமான முறையில் உயிரிழப்பு

மீட்கப்பட்ட சடலம் யாழ் போதான வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. அதன் பின்னரே உயிரிழப்புக்கான உறுதியான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

முன்பள்ளியில் கத்திக்குத்து; 6 பேர் உயிரிழப்பு

முன்பள்ளியில் கத்திக்குத்து; 6 பேர் உயிரிழப்பு

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள முன்பள்ளியில் இன்று (10) காலை இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

அத்துடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

25 வயது இளைஞனே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.

லியான்ஜியாங் மாவட்டத்தில் நடந்த இந்த தாக்குதலின் லியான்ஜியாங்கைச் சேர்ந்த சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயில் எரிந்த பேருந்து 25 பேர் உயிரிழப்பு
Posted in உலக செய்திகள்

தீயில் எரிந்த பேருந்து 25 பேர் உயிரிழப்பு

தீயில் எரிந்த பேருந்து 25 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் ஒரு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று தீப்பிடித்ததில்,
25 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 8 பேர் காயமடைந்தனர்.

பேருந்து புனே நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​நள்ளிரவுக்குப் வேளை ,
மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்து.
அதன் போது டீசல் டேங்க் தீப்பிடித்து பேரூந்து எரிந்து கருகியது

பேருந்தில் சுமார் 30-35 பேர் இருந்தனர். இருபத்தைந்து பேர் இறந்துள்ளனர் ,
மற்றும் எட்டு பேர் காயமடைந்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர் .

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ள ..

இந்தியா மணிப்பூரில் கலவரம் 9 பேர் உயிரிழப்பு
Posted in உலக செய்திகள்

இந்தியா மணிப்பூரில் கலவரம் 9 பேர் உயிரிழப்பு

இந்தியா மணிப்பூரில் கலவரம் 9 பேர் உயிரிழப்பு

இந்தியா மணிப்பூர் பகுதியில் இன குழுக்களுக்கு இடையில்,
இடம்பெற்று வரும் தொடர் கலவரத்தில்
ஒன்பது பேர் பலியாகியுள்ளனர் .

ஒரு மாதமாக தொடரும் வன் முறையில் சிக்கி எண்பது பேர்,
பலியாகியும் நாற்பதாயிரம் பேர்
அகதிகளாக இடம்பெயரந்துள்ளனர் .

நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .
பெரும் சொத்தழிவும் ஏற்பட்டுள்ளது .

மக்கள் கலவரத்தை தடுக்க மறந்து அரசியல்வாதிகள் ,
உறக்கத்தில் உள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர் .

No posts found.
திபெத்தில் பனிச்சரிவில் சிக்கி 28 பேர் உயிரிழப்பு
Posted in உலக செய்திகள்

திபெத்தில் பனிச்சரிவில் சிக்கி 28 பேர் உயிரிழப்பு

திபெத்தில் பனிச்சரிவில் சிக்கி 28 பேர் உயிரிழப்பு

திபெத்தில் பனிச்சரிவில் சிக்கி ,
28 பேர் உயிரிழந்தனர் .

உயிர் பிழைத்தவர்களை தேடும் பணி வெள்ளிக்கிழமை ,
தாமதமாக முடிவுக்கு வந்ததாக உள்ளூர் மீட்பு அதிகாரிககள்
தெரிவித்துள்ளனர் .

திபெத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ,
நிங்சி நகரில் ஏற்பட்ட இந்த அனர்த்தம் ,
தற்போது நிறுத்த பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

இதே போன்று ஆப்கானிஸ்தானில் அதிக சினோ காரணமாக,
குளிரில் விறைத்து 78 பேர் உயிர் பிரிந்தமை இங்கே குறிப்பிட தக்கது .

லண்டனில் நாய் கடித்து ஒருவர் உயிரிழப்பு
Posted in உலக செய்திகள்

லண்டனில் நாய் கடித்து ஒருவர் உயிரிழப்பு

லண்டனில் நாய் கடித்து ஒருவர் உயிரிழப்பு

லண்டன் சரே பகுதியில் நாய் கடித்து நபர் ஒருவர் உயிர் பிரிந்துள்ளார் .
இவ்வாறு உயிர் பிரிந்தவர் 28 வயதுடையவர என அடையாளம் காணப்பட்டுள்ளார் .

இந்த சம்பவம் தொடர்ப்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

இவ்வாறான சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .