Tag: ஈழ கவிதை
பாதுகாப்பு வலயமென்று
பாதுகாப்பு வலயமென்று
பாதுகாப்பு வலயமென்று
பாதை தேடி நகர்ந்தோமே!
பாதகரின் ஆப்பு என்று
பாதம் வைக்க உணர்ந்தோமே!
பாதி வாழ்வை தக்கவைக்க
பாரங்களைச் சுமந்தோமே!
பாரத்தோடு பகலிரவாய்
பாவிகளாய் அலைந்தோமே!
சோறு சுகம் குறைந்தபோதும்
சோர்வு இனறி நடந்தோமே!
சேறுதண்ணியில் புதைந்தபோதும்
தேசம் என்றே கடந்தோமே!
வேறுபடை வந்தபோதும்
வேங்கையாக நிமிர்ந்தோமே!
ஆறமனம் அமைதியின்றி
அடிக்கடி இடம்பெயர்ந்தோமே!
காலம் பதில் சொல்லுமென்று
கனவோடு வாழ்கிறோமே!
காயங்களைச் சுமந்துகொண்டே
காலங்களைக் கடக்கிறோமே!
-பிறேமா(எழில்)-
- வெளியில் தெரியாத வேர்கள்.

- சேரன் குளிர்களி

- ஈழத் தமிழச்சி ஏலாத் தமிழச்சியா

- பாதுகாப்பு வலயமென்று

- செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்

- தனியாகப் போறவளே

- அப்பான்ர சைக்கிளே அந்தநாள் வாகனம்

- பாரதமே இவர்களையாவது பறக்கவிடு

- டெங்கொழிக்க எங்களின் பங்கு

- மழைக்காலத் துன்பங்கள்

- நாங்கள் மலர்ந்துவிட்டோம்.

- சினிமாவுக்குள் மூழ்கும் சீமான்களுக்கு

- ஓடிஓடி வாழ்ந்தபோதும் ஓய்ந்திடாத கல்வி

- இளைஞரில்லா இலங்கை

- தியாகத்துக்கான காவடி தமிழர்

தனியாகப் போறவளே
தனியாகப் போறவளே
தண்டவாளப் பாதையிலே
தனியாகப் போறவளே!
மண்டகுழம்பித் தவிக்கிறன்
மனமுருகிப் பாராயோ?
கொளுத்தும் வெயிலில்
கோபமாய் நடப்பவளே!
கெழுத்து மீனைப்போல
குறும்பார்வை குத்துதடி
பளையில் பிறந்தவளோ
பதுளையில் வளந்தவளோ
கலையில் சிறந்தவளோ
மழையில் நனைந்தவளோ
யுனி முடிச்சவளோ
யூனியனில் படிச்சவளோ
பனி பிடிச்சவனாய்
பரிதவித்து அலையிறனே
ஆற்ற மகளெண்டு
அறிந்த நாள்முதலாய்
மீற்றர் வண்டிபோல் மனசு
மேட்டர் ஆனதடி
அம்மாடி உன் அழகில்
பூஞ்சாடி தோற்குதடி
சிம்கார்ட்டு சிறுத்ததுபோல்
என்கார்ட்டு குறுகுதடி
கண்ணால கண்டதனால்
கனவெல்லாம் நீதான்டி
சுன்னாகம் வந்தபின்னும்
உன்னால தவிக்கிறன்டி
ஓமெண்டு நீ உரைத்தால்
ஓடியோடி நான் உழைப்பேன்
நோவெண்டு நீ மறுத்தால்
நொதேனில போய்க்கிடப்பேன்
வல்வை மண்ணெடுத்து
வடிவான பொட்டுவைப்பேன்
நல்லைக் கந்தனுக்கு
நமஸ்காரம் செய்துகொள்வேன்
வாகைப் பூப்பறித்து
தோகையே சூட்டிடுவேன்
தாகம் உனக்கெடுத்தால்
தண்ணிரூற்று காட்டிடுவேன்
மாவடிக்கு வாடிபெண்ணே
காவடிபோல் தூக்கிடுவேன்
தாவடியில் வீடுகட்டி
தாலிகட்டிக் கூட்டிப்போறன்
சும்மா நான் கத்தேல்ல
வேல இன்றி சுத்தல்ல என்ர
அம்மாமேல சத்தியம், உன்ர
அப்பா வாறார் பத்திரம்.
- பிறேமா(எழில்)-
- வெளியில் தெரியாத வேர்கள்.

- சேரன் குளிர்களி

- ஈழத் தமிழச்சி ஏலாத் தமிழச்சியா

- பாதுகாப்பு வலயமென்று

- செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்

- தனியாகப் போறவளே

- அப்பான்ர சைக்கிளே அந்தநாள் வாகனம்

- பாரதமே இவர்களையாவது பறக்கவிடு

- டெங்கொழிக்க எங்களின் பங்கு

- மழைக்காலத் துன்பங்கள்

- நாங்கள் மலர்ந்துவிட்டோம்.

- சினிமாவுக்குள் மூழ்கும் சீமான்களுக்கு

- ஓடிஓடி வாழ்ந்தபோதும் ஓய்ந்திடாத கல்வி

- இளைஞரில்லா இலங்கை

- தியாகத்துக்கான காவடி தமிழர்

அப்பான்ர சைக்கிளே அந்தநாள் வாகனம்
அப்பான்ர சைக்கிளே அந்தநாள் வாகனம்
இரவல் வாங்கி ஓடிய காலம்
இரவு பகலா இதே மோகம். அதில்
இடையால நுழைந்து ஓடிய யோகம்
இனிக்கிடைக்காது இந்தப் போகம்.
கிரவல் வீதிகளாய் கிடந்த நேரம்
கிபிர்போல் பறந்துபோன வேகம்.
பரவல் மண்ணும் உரஞ்சிய காலம்
பட்டுமாறியதே எத்தனை காயம்.
இருமல் தடிமன் வந்தபோதும்
இருந்து ஆறாமல் குதித்த காலம்.
குருமன் குஞ்சுகள் ஓடுவதைப் பார்த்து
குடும்பமே ரசித்த அழகிய காலம்.
பிளசர்கள் பல்சர்கள் பிறக்காத காலம்
பெரிதா வசதிகள் சிறக்காத காலம்.
இளசுகள் பெரிசுகள் இருந்துகதைக்க
எடுத்துக்கொண்டு மெதுவா ஓடியகாலம்.
கைப்பேசி கணனி காணாத காலம்.
கண்முன் தெரியாப் போகாத காலம்.
அப்பாச்சி அக்ரிவா அறியாத காலம்
அப்பான்ர சைக்கிளே அந்தநாள் வாகனம்.
-பிறேமா(எழில்)-
- வெளியில் தெரியாத வேர்கள்.

- சேரன் குளிர்களி

- ஈழத் தமிழச்சி ஏலாத் தமிழச்சியா

- பாதுகாப்பு வலயமென்று

- செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்

- தனியாகப் போறவளே

- அப்பான்ர சைக்கிளே அந்தநாள் வாகனம்

- பாரதமே இவர்களையாவது பறக்கவிடு

- டெங்கொழிக்க எங்களின் பங்கு

- மழைக்காலத் துன்பங்கள்

- நாங்கள் மலர்ந்துவிட்டோம்.

- சினிமாவுக்குள் மூழ்கும் சீமான்களுக்கு

- ஓடிஓடி வாழ்ந்தபோதும் ஓய்ந்திடாத கல்வி

- இளைஞரில்லா இலங்கை

- தியாகத்துக்கான காவடி தமிழர்

டெங்கொழிக்க எங்களின் பங்கு
டெங்கொழிக்க எங்களின் பங்கு
சிரட்டை பேணி கோம்பைகளை
நீர் தேங்காமல் வை!
குறட்டை விட்டுத் தூங்க வீட்டைக்
கூட்டிப் பெருக்கனும் உன் கை!
பொலித்தீன் பைகள் யோக்கற் கப்பும்
சூழலுக்கு கேடு!
பொழுது சாய்ந்து தூங்கும்போதும்
நுளம்பு வலை போடு!
அரட்டையடிச்சு அலட்சியமா யிருந்தா
அழிச்சிடும் நுளம்பு!
விரட்டியடிக்க செயற்படனு மென்று
வீட்டார்க்கு விளம்பு!
கிடைத்தற்கரிய உயரிய பிறப்பு
மானிடப் பிறப்பு!
இடத்தை தூய்மைப் படுத்தாவிட்டால்
கிடைப்பதே இறப்பு!
தேங்கும் நீர் தங்கி நின்றால்
டெங்கு ஊதும் சங்கு!
எங்கும் சுத்தம் பேணும் நலனே
எங்களின் பங்கு❗
-பிறேமா(எழில்)-
- வெளியில் தெரியாத வேர்கள்.

- சேரன் குளிர்களி

- ஈழத் தமிழச்சி ஏலாத் தமிழச்சியா

- பாதுகாப்பு வலயமென்று

- செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்

- தனியாகப் போறவளே

- அப்பான்ர சைக்கிளே அந்தநாள் வாகனம்

- பாரதமே இவர்களையாவது பறக்கவிடு

- டெங்கொழிக்க எங்களின் பங்கு

- மழைக்காலத் துன்பங்கள்

- நாங்கள் மலர்ந்துவிட்டோம்.

- சினிமாவுக்குள் மூழ்கும் சீமான்களுக்கு

- ஓடிஓடி வாழ்ந்தபோதும் ஓய்ந்திடாத கல்வி

- இளைஞரில்லா இலங்கை

- தியாகத்துக்கான காவடி தமிழர்

மழைக்காலத் துன்பங்கள்
மழைக்காலத் துன்பங்கள்
தட்டத் தட்டத் தீப்பெட்டியும்
தானா உதிர்ந்து பிய்யுது
சட்டைத் துணிகள் காயாமல்
தண்ணி தண்ணியா வடியுது
கொட்டும் பெரும்மழையால
கூரை பிஞ்சு ஒழுகுது
சட்டி பானை வைத்தாலும்
சருவம் நிரம்பி வழியுது
சொட்டு இடமும் மீதமின்றி
சேறாய் வழுக்கி விழுத்துது
குட்டி நாய்கள் ஆடுமாடு
குளிரும் கூடி அழுகுது
அட்டைப்பூச்சி மட்டைத்தேள்
அணிவகுத்து வருகுது
மட்டை ஓலை தேங்காயும்
மண்டையில விழுகுது
வெட்டி வெட்டி விட்டாலும்
வெள்ளம் வீட்டுக்க பெருகுது
விட்டு விட்டு இடுப்பு நாரி
விறைச்சுக் கால்கள் நோகுது
நட்டுவைச்ச பயிரெல்லாம்
நாசமாத் தான் புதையுது
விட்டுவிடாத இயற்கையால
வாழ்வாதாரம் சிதையுது
கஸ்ரபட்ட எங்களுக்கு
ஏன்தான் இப்படி நடக்குது
கட்டையில போகுமட்டும், இந்தக்
கட்டமாத் தானே இருக்குது !
-பிறேமா(எழில்)-
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தியது

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- லிபரல் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது கனடா பிரதமர் கார்னி

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

- போரா சமாதானமா ஈரானே முடிவெடுக்கும் வேண்டும் அமெரிக்கா

- புதிய அமெரிக்கஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை

சினிமாவுக்குள் மூழ்கும் சீமான்களுக்கு
சினிமாவுக்குள் மூழ்கும் சீமான்களுக்கு
குரங்கிலிருந்து மனிதன்
பிறந்தானென்று
கூர்ப்பு விளக்குது – திரை
அரங்கினில் நின்று
தொங்குவதைப் பார்க்க
அதுவும் விளங்குது.
வருசா வருசம்
விஜய்யும் அஜித்தும்
திரையில் வருவினம். – இங்கு
வலியோடு வாழும் ஈழத்
தமிழன் வாழ்வுக்கு
என்ன தருவினம்?
கலையை மதிப்பதும்
அதனை ரசிப்பதும்
அவரவர் உரிமைகள் – அதற்குன்
நிலையை அழிப்பதும்
நினைவை இழப்பதும்
வாழ்விலென்ன பெருமைகள்.
ரொக்கெட் செலுத்தியும்
விக்கற் வீழ்த்தியும்
பொக்கெற்றை நிரப்புறார்கள் – நீங்கள்
டிக்டொக்கை அமத்தியும்
சீக்ரட்டை பத்தியும் ஏன்
மாக்கெற்றை இழக்கிறீர்கள்.
திரிஷா பிறநடிகைகள்
பெரிதா செய்ததை யார்க்கும்
தெரிந்தால் சொல்லுங்கள் – அல்லது
ஒரிசா பாலுவையும்
தெரேசா அன்னையையும் முடிந்தால்
உசிரா வணங்குங்கள்❗
-பிறேமா(எழில்)-
- வெளியில் தெரியாத வேர்கள்.

- சேரன் குளிர்களி

- ஈழத் தமிழச்சி ஏலாத் தமிழச்சியா

- பாதுகாப்பு வலயமென்று

- செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்

- தனியாகப் போறவளே

- அப்பான்ர சைக்கிளே அந்தநாள் வாகனம்

- பாரதமே இவர்களையாவது பறக்கவிடு

- டெங்கொழிக்க எங்களின் பங்கு

- மழைக்காலத் துன்பங்கள்

- நாங்கள் மலர்ந்துவிட்டோம்.

- சினிமாவுக்குள் மூழ்கும் சீமான்களுக்கு

- ஓடிஓடி வாழ்ந்தபோதும் ஓய்ந்திடாத கல்வி

- இளைஞரில்லா இலங்கை

- தியாகத்துக்கான காவடி தமிழர்

ஓடிஓடி வாழ்ந்தபோதும் ஓய்ந்திடாத கல்வி
ஓடிஓடி வாழ்ந்தபோதும் ஓய்ந்திடாத கல்வி
குண்டு மழை நடுவிலும்
கொள்கையோடு கற்றோம் – உலகம்
கண்டு கொள்ளா நிலையிலும்
கல்வியினைப் பெற்றோம்.
மண்டை பிளக்கும் வெயிலிலும்
மரநிழலில் கற்றோம் – கொடும்
சண்டை நடந்த நேரத்திலும்
சலிக்காமல் கற்றோம்.
பராலைற் வெளிச்சத்திலும்
படிப்பினைத் தொடர்ந்தோம் – வளம்
இராத காலங்களிலும்
வல்லோராய் வந்தோம்.
உயிர்காத்து கற்பித்தோர்க்கு
உயர் மதிப்பைக் கொடுத்தோம் – அன்று
உயிர் துறக்கும் வாழ்வினிலும்
உயர் மதிப்பெண்கள் எடுத்தோம்.
தந்தை தாயின் உதவியின்றித்
தனியாகச் சென்றோம் – நல்ல
சிந்தையுள்ள குருமாரைச்
சந்தித்ததால் வென்றோம்.
அண்டை நாட்டின் சதியினாலும்
அழுதழுது கற்றோம் – என்றும்
அன்றையநாள் கல்வி வாழ்வை
எப்படித் தான் மறப்போம்❗
-பிறேமா(எழில்)-
- வெளியில் தெரியாத வேர்கள்.

- சேரன் குளிர்களி

- ஈழத் தமிழச்சி ஏலாத் தமிழச்சியா

- பாதுகாப்பு வலயமென்று

- செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்

- தனியாகப் போறவளே

- அப்பான்ர சைக்கிளே அந்தநாள் வாகனம்

- பாரதமே இவர்களையாவது பறக்கவிடு

- டெங்கொழிக்க எங்களின் பங்கு

- மழைக்காலத் துன்பங்கள்

- நாங்கள் மலர்ந்துவிட்டோம்.

- சினிமாவுக்குள் மூழ்கும் சீமான்களுக்கு

- ஓடிஓடி வாழ்ந்தபோதும் ஓய்ந்திடாத கல்வி

- இளைஞரில்லா இலங்கை

- தியாகத்துக்கான காவடி தமிழர்

தியாகத்துக்கான காவடி தமிழர்
தியாகத்துக்கான காவடி தமிழர்
தியாகத்துக்கான காவடி தமிழர்
தாயகத்தின் காவடி.
மனக்காயத்தோடு உறங்கியவனின்
மரியாதைக்கான காவடி.
கடவுளுக்கான காவடி மக்கள்
கண்ணீரின் காவடி.
நினைவுகளைச் சுமந்தை செல்லும்
நெஞ்சங்களின் காவடி.
திலீபனுக்கான காவடி தேச
வீரனுக்கான காவடி.
வலியோடு நோன்பிருந்தவனுக்காக
வரலாற்றுக் காவடி.
அகிம்சைக்கான காவடி பெரும்
அநீதிக் கெதிரான காவடி.
வம்சங்கள் செடில் குத்தியாடும்
விடுதலைக்கான காவடி.
பருக நீர்மறுத்து பலநாள்
பசி இருந்தவனுக்கான காவடி.
முருகன் வாசலில் மூச்சுவிட்ட
புதல்வனுக்கான நாளடி❗
-பிறேமா(எழில்)-
- வெளியில் தெரியாத வேர்கள்.

- சேரன் குளிர்களி

- ஈழத் தமிழச்சி ஏலாத் தமிழச்சியா

- பாதுகாப்பு வலயமென்று

- செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்

- தனியாகப் போறவளே

- அப்பான்ர சைக்கிளே அந்தநாள் வாகனம்

- பாரதமே இவர்களையாவது பறக்கவிடு

- டெங்கொழிக்க எங்களின் பங்கு

- மழைக்காலத் துன்பங்கள்

- நாங்கள் மலர்ந்துவிட்டோம்.

- சினிமாவுக்குள் மூழ்கும் சீமான்களுக்கு

- ஓடிஓடி வாழ்ந்தபோதும் ஓய்ந்திடாத கல்வி

- இளைஞரில்லா இலங்கை

- தியாகத்துக்கான காவடி தமிழர்















