Posted in இலங்கை செய்திகள்

தாய் கள்ள காதல் ,பொலிஸ் சிப்பாயை கொன்று வீசிய மகன்

தாய் கள்ள காதல் ,பொலிஸ் சிப்பாயை கொன்று வீசிய மகன்

காணாமல்போன பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை செய்யப்பட்டதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, 3

பொலிஸ் குழுக்கள் கடந்த 18 ஆம் திகதி முதல் குளியாபிட்டிய, கங்கனிமுல்ல காட்டில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது காட்டில் பல இடங்களில் இரத்தம் காணப்பட்டதாகவும் ஆனால் சடலம்

எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் வீரகெட்டிய பகுதியை வசிப்பிடமாக கொண்ட 37 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த 16 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடவத்த பகுதியில் உள்ள பெண் ஒருவருடன் கள்ள உறவில்

இருந்ததாகவும், அந்த பெண்ணின் மகன் இந்த கொலையை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாய் கள்ள காதல் பொலிஸ்
https://www.youtube.com/watch?v=V2x2bofkbpY
Posted in இலங்கை செய்திகள்

காவல்துறையை ஊழியரை கொன்று வீசிய பேரூந்து

காவல்துறையை ஊழியரை கொன்று வீசிய பேரூந்து

மஸ்கெலியாவில் இருந்து நல்லதன்னி நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர்

ஒருவர் மவுசாகலை சோதனை சாவடியில் வைத்து பேருந்தின் பின் டயர் பகுதியில் சிக்குண்டு உயிரிழந்து உள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (20) இரவு 7 மணி அளவில் இடம்பெற்றதாகவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸ் திணைக்களத்தின் வாழ்க்கை பாதுகாப்பு பிரிவில் பணியாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

40 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான கெப்படிபொல பகுதியை சேர்ந்த அஜித்வீரசூரிய என்ற

பொலிஸ் உத்தியோக்தரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவி ஏற்பு

இலங்கை -யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவி ஏற்பு

யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கபில கடுவத்த பதவியேற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் அவர் தனது கடமைகளை இன்று (03) காலை 7.05 மணிக்கு பொறுப்பேற்றார்.

மூத்த பொலிஸ் அத்தியட்சகராக நீர்கொழும்பில் கடமையாற்றிய அவர், அண்மையில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டார்.

பதவி உயர்வுடன் முதன் முறையாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அவருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.