Tag: தீ
தீ விபத்தில் வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு
தீ விபத்தில் வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு
தலங்கம பகுதியில் அமைந்துள்ள ஜெயந்தி புர இரண்டு மாடி கட்டிடத்தின் குளியலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குளிரூட்டியில் ஏற்பட்ட தீப் பரவலினால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கோட்டை மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்
- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது
- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா
- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்
- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு
- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை
- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026
- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்
பிச்சைக்காரன் மீது பெற்றோலை ஊற்றி, தீமூட்டியவர் கைது
பிச்சைக்காரன் மீது பெற்றோலை ஊற்றி, தீமூட்டியவர் கைது
உறங்கிக்கொண்டிருந்த பிச்சைக்காரன் மீது பெற்றோலை ஊற்றி, தீமூட்டி கொளுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாக ஹோமகம பொலிஸார் தெரிவித்தனர்.
ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் ஆய்வுகூடத்துக்கு முன்பாக உறங்கிக்கொண்டிருந்த பிச்சைக்காரன் மீதே, சந்தேகநபர் மேற்கண்டவாறு செய்துள்ளார்.
மரணமடைந்த அந்த பிச்சைக்காரன், அந்த ஆய்வுகூடத்துக்கு முன்பாக உறங்கிக்கொண்டிருந்த பல சந்தர்ப்பங்களில் “நீ குளிக்கமாட்டீர் இல்லையா?
பிச்சைக்காரன் மீது பெற்றோலை ஊற்றி, தீமூட்டியவர் கைது
குளிக்காவிட்டால் தீ வைப்பேன்” என பலமுறை அந்த சந்தேநபர் கூறியுள்ளார். அதேபோல, ஞாயிற்றுக்கிழமை (29) இரவு பெற்றோலை ஊற்றி கொளுத்திவிட்டார்.
விபரீதத்தை கண்ட அங்கிருந்தவர்கள், பிச்சைக்காரனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். அவ்வாறு அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தவர் திங்கட்கிழமை (30) காலை மரணமடைந்தார்.
64 வயதான தர்மதாஸ என்பவரே மரணமடைந்துள்ளார். சந்தேகத்தின் பேரில் 27 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்
- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது
- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா
- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்
- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு
- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை
- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026
- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்
மற்றுமொரு கட்டிடத்தில் திடீர் தீ விபத்து
மற்றுமொரு கட்டிடத்தில் திடீர் தீ விபத்து
பாணந்துறை நகருக்கு அருகில் உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தில் இன்று (28) காலை 7.30 மணியளவில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ள நிலையில், தீயினால் பாரியளவில் விளையாட்டுப் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.
மொரட்டுவை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், சேத விபரம் இதுவரை தெரியவரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
புறக்கோட்டையில் பாரிய தீ 17 பேருக்கு தீ காயம்
புறக்கோட்டையில் பாரிய தீ 17 பேருக்கு தீ காயம்
கொழும்பு – புறக்கோட்டை – 2ம் குறுக்கு தெருவில் உள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் பாரிய தீ பரவியுள்ளது.
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவிற்கு சொந்தமான 7 வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
புறக்கோட்டையில் பாரிய தீ 17 பேருக்கு தீ காயம்
தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
எனினும் குறித்த தீ விபத்தில் சுமார் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சவுதியில் வீட்டுப் பணிப்பெண் ஒருவருக்கு தீ வைப்பு
சவுதியில் வீட்டுப் பணிப்பெண் ஒருவருக்கு தீ வைப்பு
சவூதி அரேபியாவில் வீட்டு வேலைக்குச் சென்ற இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரை அவர் வேலை செய்த வீட்டின் உரிமையாளர் உடலில் பெற்றோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கொத்தடுவ புதிய நகரில் வசித்து வந்த 45 வயதுடைய நயனா தில்ருக்ஷி என்ற பெண்ணே இந்த அசம்பாவித சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
சுமார் 7 மாதங்களுக்கு முன்பு இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை எதிர்கொண்டதாக அவர் கூறினார்.
சவூதி அரேபியாவில் உள்ள மருத்துவமனையில் பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்ததாகவும், பின்னர் சவுதி பொலிசாரின் தலையீட்டில் தான் தடுப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கடும் சிரமங்களுக்கு மத்தியில் சுமார் ஒன்றரை மாதங்களாக தடுப்பு முகாமில் வாழ்ந்து வருவதால், தம்மை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மன்றாடியுள்ளார்.
சவுதியில் வீட்டுப் பணிப்பெண் ஒருவருக்கு தீ வைப்பு
நயனா தில்ருக்ஷி கடந்த பெப்ரவரி மாதம் மாதம் 8ஆம் திகதி குருநாகலில் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றின் ஆதரவுடன் சவூதி அரேபியாவிற்கு வெளிநாட்டு வேலைக்காக சென்றுள்ளார்.
அவர் அந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு மற்றொரு பெண் மூலம் பரிந்துரைக்கப்பட்டார்.
நயனா தில்ருக்ஷி சவுதி அரேபியாவில் 3 மாடிகள் கொண்ட வீட்டில் பணிபுரிந்துள்ளார்.
வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் அவர் செய்திருந்ததுடன், வீட்டில் உள்ள சிறு குழந்தைகளை கவனித்துக் கொள்ளுமாறும் பணிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு வேலை செய்து கொண்டிருந்த போது, கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி வீட்டு உரிமையாளரும், அவரது மனைவியும், குழந்தைக்கு சரியாகச் சாப்பாடு கொடுக்கவில்லை எனக் கூறி தாக்கியுள்ளனர்.
இதையடுத்து அந்த பெண்ணின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளனர்.
அவர் அதிலிருந்து தப்பிக்க அலறியும் பலனில்லை.
பின்னர், வீட்டின் உரிமையாளர் தீயை அணைத்து, ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
எனினும், நயனா தில்ருக்ஷியே அவரது உடலுக்கு தீ வைத்ததாக அந்த வீட்டின் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அப்படி ஒன்றும் செய்யவில்லை என்றும், அம்மாவை பராமரிக்கவும், வீடு கட்ட வேண்டும் என்பதற்காக தான் வெளிநாட்டு வேலைக்கு சென்றாகவும் அவர் கூறியுள்ளார்.
சவுதியில் வீட்டுப் பணிப்பெண் ஒருவருக்கு தீ வைப்பு
இது தொடர்பாக, நயனா தில்ருக்ஷியை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பரிந்துரைத்த சம்பந்தப்பட்ட தரகர் பெண்ணிடம் சம்பவம்
குறித்து கேட்டபோது, அந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவன பெண்களை பரிந்துரைப்பதற்கு மட்டுமே அவர் நியமிக்கப்பட்டதாகவும், அதற்கான பணம் தனக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அதன் பின்னர் குறித்த பெண்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் எனவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இது தொடர்பில் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு அறிவித்த போதும் தமக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என நயனா தில்ருக்ஷி தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் அந்நாட்டு தூதரகத்துக்குத் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவர்களிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
சில மாதங்களுக்கான சம்பளம் கூட தனக்கு கிடைக்கவில்லை என்றும் நயனா தில்ருக்ஷி குறிப்பிட்டுள்ளார்.
திருமண மண்டபத்தில் தீ 100 பேர் பலி
திருமண மண்டபத்தில் தீ 100 பேர் பலி
ஈராக்கில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த தீ விபத்தில் குறைந்தது 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 150 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈராக்கின் வடக்கில் உள்ள நினவா மாநிலத்தின் அல்-ஹம்டனியா பகுதியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
திருமண மண்டபத்தில் தீ 100 பேர் பலி
திருமண மண்டபத்தில் தீயணைப்பாளர்கள் நெருப்பை அணைக்க முயலும் படங்கள் தற்போது வௌியிடப்பட்டுள்ளன.
எதிர்பாராத விபத்தில் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான உதவிகளை வழங்க எல்லா வகையிலும் முயற்சி எடுக்கும்படி ஈராக்கியப் பிரதமர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால் சம்பவ இடத்தில் வாணவேடிக்கையால் தீ ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜிby நிருபர் காவலன்
- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்by நிருபர் காவலன்
- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்by நிருபர் காவலன்
- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைதுby நிருபர் காவலன்
- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவுby நிருபர் காவலன்
ஹோமாகம தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள்
ஹோமாகம தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள்
ஹோமாகமவில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் பல மணிநேரத்திற்கு பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
நேற்றிரவு 8.30அளவில் குறித்த தொழிற்சாலையின் இராசாயன களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீப்பரவல் இன்று அதிகாலை 3.30 அளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தீ விபத்தினால், தொழிற்சாலையின் இரண்டு கட்டடங்களும் முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹோமாகம தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள்
இதன்காரணமாக, அதனை அண்டிய பகுதிகளில் வளி மாசடந்துள்ளமையால், முகக் கசவங்களை அணியுமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் அது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவுby நிருபர் காவலன்
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடிby நிருபர் காவலன்
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜிby நிருபர் காவலன்
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்by நிருபர் காவலன்
- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்by நிருபர் காவலன்
மனைவியை வீட்டுக்குள் பூட்டிவிட்டு தீ வைப்பு
மனைவியை வீட்டுக்குள் பூட்டிவிட்டு தீ வைப்பு
மனைவியை வீட்டுக்குள் பூட்டிவிட்டு வீட்டுக்கு தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை, கமகொட, ரஜவத்த பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருவருக்கும் இடையில் சில காலமாக குடும்பத் தகராறு இருந்து வந்ததாகவும், சந்தேகநபர் ஞாயிற்றுக்கிழமை (13) மாலை மது போதையில் வந்து ரப்பர் மெத்தை, தலையணைகள் மற்றும் துணிகளை வீட்டில் வைத்து விட்டு மனைவி இருந்தமை இதுவரையிலான விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீயினால் வீட்டின் சமையலறை முழுவதும் சேதமடைந்துள்ளது, ஆனால் முறைப்பாட்டாளர் தனது ஆடைகளுடன் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவுby நிருபர் காவலன்
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடிby நிருபர் காவலன்
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜிby நிருபர் காவலன்
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்by நிருபர் காவலன்
- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்by நிருபர் காவலன்
பம்பரகலை பெரிய ராணிவத்த தோட்டத்தில் தீ பலர் நிர்க்கதி
பம்பரகலை பெரிய ராணிவத்த தோட்டத்தில் தீ பலர் நிர்க்கதி
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேன பம்பரகலை தோட்ட பிரிவான பெரிய ராணிவத்த தோட்டத்தில் நேற்று இரவு 09 மணியலவில் தீ பரவல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்ட 24 தொடர் வீடுகளை கொண்ட இலக்கம் ஒன்று தொடர் விட்டு லயம் தீ பிடிக்கப்பட்டுள்ளது என லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
அதேநேரத்தில் வீடுகளில் வசித்தவர்களுக்கு உயிர் ஆபத்துக்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவித்த பொலிஸார், இந்த பிரதேசத்தில் அதிகமாக காற்று வீசுவதால் தீயை கட்டுக்கு கொண்டுவர ஊர் மக்கள், உள்ளிட்ட பலர் போராடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பம்பரகலை பெரிய ராணிவத்த தோட்டத்தில் தீ பலர் நிர்க்கதி
மின்சார ஒழுக்கு காரணமாக இந்த தீ பரவல் சம்பவம் இடம்பெற்றதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பத்து வீடுகளுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக சொல்லப்படுகின்றது. அதேநேரத்தில் நிர்கதிக்கு உள்ளானவர்கள் உறவினர்கள் வீடுகளிலும்,தோட்டத்தின் பொது இட கட்டடங்களிலும் பாதுக்காப்பு கருதி தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவுby நிருபர் காவலன்
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடிby நிருபர் காவலன்
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்by நிருபர் காவலன்
- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைதுby நிருபர் காவலன்
- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுராby நிருபர் காவலன்
கிரியுல்ல பிரதேசத்தில் பாரிய தீ விபத்து
கிரியுல்ல பிரதேசத்தில் பாரிய தீ விபத்து
கிரியுல்ல பிரதேசத்தில் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்ட பட்டாசு கடை ஒன்றில் தீ பரவியுள்ளது.
நேற்றிரவு தீ பரவியதாகவும், கிரியுல்ல பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளின் தலையீட்டினால் தீ அணைக்கப்பட்டதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
தீ விபத்தால் கடையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்தில் இருபுறமும் உள்ள இரண்டு கடைகளின் சொத்துக்களும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிஉல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Featured
பரவிய தீ தாய் குழந்தைகள் பலி
பரவிய தீ தாய் குழந்தைகள் பலி
அநுராதபுரம் எலயாபத்துவ பகுதியிலுள்ள வீடொன்றில் பரவிய தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த தீ விபத்து நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் தாய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததுடன், குழந்தைகளின் தந்தை தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஆடை தொழிற்சாலையில் தீ
ஆடை தொழிற்சாலையில் தீ
வாத்துவ மொரந்துடுவ வீதியில் கந்தவுடவத்த பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் காட்சியறையில் தீ பரவியுள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று மாடிக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் ஏற்பட்ட தீ, மூன்றாவது மற்றும் முதல் தளங்களுக்கும் பரவியதுடன், மின்சாதனங்கள் மற்றும் ஜவுளிகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயை கட்டுப்படுத்த களுத்துறை மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தீ விபத்தில் மூன்று மாத குழந்தை பலி
தீ விபத்தில் மூன்று மாத குழந்தை பலி
முல்லேரியா அம்பத்தல பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தண்ணீர் காய்ச்சுவதற்காக ஹீட்டரை ஒன் செய்துவிட்டு தாய் வீட்டை விட்டு வெளியே சென்ற போது ஹீட்டரில் இருந்து தீ பரவியதாக பொலிஸார் கூறுகின்றனர்.
தீ விபத்தில் மூன்று மாத குழந்தை பலி
தீ விபத்து ஏற்பட்ட போது உயிரிழந்த குழந்தையின் தாயும் மூத்த சகோதரியும் வீட்டில் இருந்து வெளியில் இருந்ததாகவும், வீட்டில் இருந்து புகை வருவதைக்
கண்டு வந்த பார்த்த போது, குழந்தை படுக்கையில் எரிந்துக் கொண்டிருப்பதைக் கண்டு குழந்தையைக் மீட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் உள்ள மின்சாரம் அணைக்கப்பட்ட நிலையில், அருகில் உள்ள வீட்டில் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த மின்சாரம் மூலம் தண்ணீரை சூடாக்கும்போது தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தீயில் எரிந்த சந்தை – பலர் காயம்
தீயில் எரிந்த சந்தை – பலர் காயம்
ஆர்மேனியா Surmalu சந்தை பகுதியில், திடிரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, ஒருவர் பலியாகியுள்ளார் ,மேலு பலர் காயமடைந்துள்ளனர்.
அதிக மக்கள் கூடிய சந்தை பகுதியில் ,இடம் பெற்ற இந்த தீ விபத்தினால், அந்த சந்தை பகுதியில் அமைந்திருந்த கட்டடங்கள் எரிந்து அழிந்துள்ளன.
மேலும், சந்தைக்கு வருகை தந்த மக்களது ,வாகனங்கள் தீயில் சிக்கி எரிந்துள்ளன .
தற்போது சந்தை எரிந்த நிலையில் , சுடு காடாக காட்சியளிக்கிறது .
வியாபாரிகள் தமது உடமைகளை இழந்து கண்ணீரில் தவித்து வருகின்றனர் .
காயமடைந்தவர்கள் யாவரும் ,அருகில் உள்ள மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் ,தீயினை அணைத்த பொழுதும் ,அங்கு பெரும் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
வடக்கு லண்டனில் பாரிய தீ பதறி ஓடிய மக்கள்
வடக்கு லண்டனில் பாரிய தீ பதறி ஓடிய மக்கள்
வடக்கு லண்டன் Enfield பகுதியில், பாரிய தீ பரவல் ஏற்பட்டு, அந்த பகுதியில் உள்ள காடு சார்ந்த பகுதிகள், தீயில் எரிந்து அழிந்துள்ளன .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயினை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .
எழுபது தீயணைப்பு வீரர்கள், இந்த தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் .
தீ பரவல் காரணமாக ,இதன் அருகில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு தப்பி ஓடினர்.
இதனால் எழுந்த தீ புகை மூட்டம் ,பல கிலோ மீட்டர் தூரம் வரை ,தென்பட்டதாக தெரிவிக்க படுகிறது .
அதிக வெப்பம் காரணமாக, இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக நம்ப படுகிறது .
இவ்வாறான அதிக வெப்பம் காரணமாக ,மூன்று வாரங்களுக்கு முன்னரும் ,இவ்வாறான தீ பரவல் சம்பவங்கள் ,இடம்பெற்றமை குறிப்பிட தக்கது .
ஒயில் கூதம் மீது மின்னல் தாக்குதல் 17 பேர் மரணம் 80 பேர் காயம்
ஒயில் கூதம் மீது மின்னல் தாக்குதல் 17 பேர் மரணம் 80 பேர் காயம்
கியூபா நாட்டின் Matanzas பகுதியில் உள்ள எரிபொருள் களஞ்சிய கூதம் மீது மின்னல் தாக்கியதில் அங்கு பணியாற்றிய 17 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர் மேலும் 80 பேர் காயமடைந்துள்ளனர்.
இதுவரை இந்த மின்னல் தாக்குதலில் சிக்கி 17 பேர் காணாமல் போயுள்ளளனர் .இவ்வாறு காணாமல் போனவர்கள் இறந்திருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
இந்த எரிபொருள் களஞ்சிய மின்னல் தாக்குதல் தீ பல மைல்களுக்கு அப்பாலும் தென்பட்டது .
இங்கு இடம் இடம்பெற்ற மின்னல் தாக்குதல் உயிர் இழப்புக்கள் மேலும் அதிகரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது.
வீதியில் எரிந்த வான் தப்பி ஓடிய சாரதி
வீதியில் எரிந்த வான் தப்பி ஓடிய சாரதி
லண்டன் A2 near Dartford பகுதியில் வான் ஒன்று திடீரென தீ பற்றி கொண்டது .
இந்த தீ விபத்தில் சிக்கி அந்த வான் எரிந்து நாசமாகியுள்ளது .எனினும் இந்த தீ விபத்தில் எவருக்கும் காயங்களை ஏற்படவில்லை.
வீதியில் வானை எரிந்த நிலையில் கைவிட்டு சாரதி உயிர் தப்பிக்க தப்பி ஓடியதால் உயிரிழப்ப்பு தவிர்க்க பட்டுள்ளது .
இந்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
தீயில் எரிந்த பெண் திருகோணமலையில் சம்பவம்
தீயில் எரிந்த பெண் திருகோணமலையில் சம்பவம்
திருகோணமலை, அன்புவெளிபுரத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 47 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ) இடம்பெற்றுள்ளது.
வீட்டின் சுவாமி அறையில் காலையில் விளக்கேற்றி விட்டு வீசிய தீ குச்சியின் தீ மூலமாக, சேமித்து வைக்கப்பட்டிருந்த பெற்றோல் கொள்கலனில் தீ ஏற்பட்டதனாலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது .
தீ பிடித்து உயிரிழந்தவரின் உடல் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பதுக்கிய பெற்றோலில் தீயில் எரிந்து இறந்த பெண் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பைஷல் இஸ்மாயில் –
தீ வைத்த பெண்ணைதேடும் பொலிஸ்
இலங்கையில் தீ வைத்த பெண்ணைதேடும் பொலிஸ்
மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் போது திவுலப்பிட்டிய பிரதேசத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அலுவலகம் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட
சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதற்கமைய சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ மற்றும் புகைப்படங்களில்
இருந்து பெண்ணொருவர், எம்.பியின் அலுவலகத்தை தாக்கி தீ வைத்தமை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணைக் கைது செய்வதற்கு பொது மக்களின்
உதவியை நாடியுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர்,
எரிபொருள் விற்பனை நிலைய முதலாளி வீட்டுக்கு தீ வைத்த மக்கள்
எரிபொருள் விற்பனை நிலைய முதலாளி வீட்டுக்கு தீ வைத்த மக்கள்
இலங்கை கொக்கிராவ பகுதியில் எரி பொருள் நிலையம் வைத்து நடத்தி வந்த
உரிமையாளர் ஒருவரது வீட்டிற்கு சென்ற குழுவொன்று அவரது வீட்டிற்கு தீ வைத்துள்ளனர்
எரி பொருள் கிடைக்காத நிலையியல் சீற்றம் கொண்ட மக்களில் சிலர் இந்த தீ
வைத்தலை புரிந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்






































