வடக்கு லண்டனில் பாரிய தீ பதறி ஓடிய மக்கள்

வடக்கு லண்டனில் பாரிய தீ பதறி ஓடிய மக்கள்
Spread the love

வடக்கு லண்டனில் பாரிய தீ பதறி ஓடிய மக்கள்

வடக்கு லண்டன் Enfield பகுதியில், பாரிய தீ பரவல் ஏற்பட்டு, அந்த பகுதியில் உள்ள காடு சார்ந்த பகுதிகள், தீயில் எரிந்து அழிந்துள்ளன .

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயினை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .

எழுபது தீயணைப்பு வீரர்கள், இந்த தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் .

தீ பரவல் காரணமாக ,இதன் அருகில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு தப்பி ஓடினர்.

இதனால் எழுந்த தீ புகை மூட்டம் ,பல கிலோ மீட்டர் தூரம் வரை ,தென்பட்டதாக தெரிவிக்க படுகிறது .

அதிக வெப்பம் காரணமாக, இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக நம்ப படுகிறது .

இவ்வாறான அதிக வெப்பம் காரணமாக ,மூன்று வாரங்களுக்கு முன்னரும் ,இவ்வாறான தீ பரவல் சம்பவங்கள் ,இடம்பெற்றமை குறிப்பிட தக்கது .

    Leave a Reply