தீயில் எரிந்த சந்தை – பலர் காயம்

தீயில் எரிந்த சந்தை - பலர் காயம்
Spread the love

தீயில் எரிந்த சந்தை – பலர் காயம்

ஆர்மேனியா Surmalu சந்தை பகுதியில், திடிரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, ஒருவர் பலியாகியுள்ளார் ,மேலு பலர் காயமடைந்துள்ளனர்.

அதிக மக்கள் கூடிய சந்தை பகுதியில் ,இடம் பெற்ற இந்த தீ விபத்தினால், அந்த சந்தை பகுதியில் அமைந்திருந்த கட்டடங்கள் எரிந்து அழிந்துள்ளன.

மேலும், சந்தைக்கு வருகை தந்த மக்களது ,வாகனங்கள் தீயில் சிக்கி எரிந்துள்ளன .

தற்போது சந்தை எரிந்த நிலையில் , சுடு காடாக காட்சியளிக்கிறது .

வியாபாரிகள் தமது உடமைகளை இழந்து கண்ணீரில் தவித்து வருகின்றனர் .
காயமடைந்தவர்கள் யாவரும் ,அருகில் உள்ள மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் ,தீயினை அணைத்த பொழுதும் ,அங்கு பெரும் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

    Leave a Reply