இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 92,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 92,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
Spread the love

இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 92,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 92,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் ,அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) படி, ஜனவரி 13 முதல் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 27,751 குடும்பங்களைச் சேர்ந்த 92,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் மழை காரணமாக அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 17,952 குடும்பங்களைச் சேர்ந்த 56,878 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கிழக்கு மாகாணம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் 7,970 குடும்பங்களைச் சேர்ந்த 29,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவையில் 1,369 குடும்பங்களைச் சேர்ந்த 4,599 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சீரற்ற காலநிலை காரணமாக 319 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

ஜனவரி 26 வரை, பல மாகாணங்களில் உள்ள 142 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 438 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று DMC தெரிவித்துள்ளது.