Posted in Uncategorized

இலங்கையில் இருந்து நியுசுலாந்து செல்ல முயன்ற 63 பேர் கைது

இலங்கையில் இருந்து நியுசுலாந்து செல்ல முயன்ற 63 பேர் கைது

இலங்கை திருகோணமலையில் இருந்து கடல்வழியாக நியுசுலாந்திற்கு செல்ல முயன்ற அறுபத்தி மூன்று பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

கடல் வழியாக வெளி நாயடுகளுக்கு ஆட்களை அனுப்பி வைப்பதாக கூறி அந்த பணத்தை மகிந்த மகன் கொள்ளையடித்து வருகினார்

இவர் தான் இந்த முகவர்களின் பிரதான முகவர் என தெரியாது பலர் பல லட்சணங்களை வழங்கி மோசம் போகின்றனர்

காவல்துறையால் கைது செய்ய பட்டவர்கள் சிறையில் அடைக்க பட்டால் அவர்களை வெளியில் விடுதவதற்கும் ஈவேரா டீல் பேசி பணத்தை கொள்ளையடிக்கிறார்

இதனை தெரியாது அப்பாவி தமிழர்கள் ஏமாந்து போகின்றமை வருந்த தக்கது

    Posted in Uncategorized

    வாலிபர் வெட்டி கொலை – விசாரணையில் போலிஸ்

    வாலிபர் வெட்டி கொலை – விசாரணையில் போலிஸ்

    கலேவெல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கலவெவ பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமான ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    நபர் ஒருவர் மற்றைய நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    22 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    சம்பவம் தொடர்பில் கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

      Posted in Uncategorized

      கிளிநொச்சி கண்டாவளை கிராமத்தில் -மாமனின் கையை துண்டாக்கிய மருமகன்

      கிளிநொச்சி கண்டாவளை கிராமத்தில் -மாமனின் கையை துண்டாக்கிய மருமகன்

      கிளிநொச்சி கண்டாவளை கிராமத்தில் தனது மாமனின் கையை வெட்டி துண்டாக்கிய ஆலய பூசகரான மருமகன் தானும் நஞ்சருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

      இச்சம்பவம் இன்று (11) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

      காணி தகராறு காரணமாக தனது மாமனின் கையை மணிக் கட்டுக்கும் முழங் கைக்கும் இடையில் வெட்டித் துண்டாக்கிய பூசகர் துண்டாக்கிய கையை வாய்க்காலுக்குள் எறிந்துள்ளார்.

      கை துண்டாடப்பட்ட நிலையில் 57 வயதான முதியவர் தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

        Posted in Uncategorized

        ஐந்து வயதான மகளின் மகளின் வாயில் சூடு வைத்த தாய் கைது

        ஐந்து வயதான மகளின் மகளின் வாயில் சூடு வைத்த தாய் கைது

        பொய் சொல்லிட்டார் எனக்கூறி தன்னுடைய ஐந்து வயதான மகளின் வாயில் சூடுவைத்து, கொடுமைப்படுத்திய தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

        கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்டப்பட்ட குடியிருப்பு பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


        வாயை சுற்றியும் தொடைப்பகுதியிலும் கடுமையான சூட்டுக்காயங்களுக்கு உள்ளான அச்சிறுமி, அக்கராயன்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

        பிள்ளையின் தந்தை தொழிலுக்காகச் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென கோபமடைந்த அத்தாய், கையிலிருந்த பீங்கானை சூடாக்கி, ஐந்து வயதான மகளின் வாயைச் சுற்றியும், தொடைகளிலும் இவ்வாறு சூடு வைத்துள்ளார்.

        இது தொடர்பில் பிரதேசவாசிகள் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். அதனையடுத்தே சிறுவர் மற்றும் மகளீர் பிரிவு பொலிஸாரினால் அச்சிறுமி மீட்கப்பட்டார்.

        சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த பொலிஸார், தாயை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

          Posted in இலங்கை செய்திகள்

          விதிமுறைகளை மீறிய 85 பேர் கைது

          விதிமுறைகளை மீறிய 85 பேர் கைது

          நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

          இதனையடுத்து, இதுவரை கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,560 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

            Posted in Uncategorized

            இந்தியாவில் இருந்து கனடாவுக்கு பறந்த 64 இலங்கையர்கள் கைது

            இந்தியாவில் இருந்து கனடாவுக்கு பறந்த 64 இலங்கையர்கள் கைது

            இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம்களில் இருந்து 64 போ் படகு மூலமாக, தென்னாப்பிரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்று மாலத்தீவு அருகே சா்வதேச பொலிஸாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

            இது குறித்து தமிழக கியூ பிரிவு பொலிஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

            தென் மாவட்டங்களில் உள்ள இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம்களில் வசிக்கும் 64 போ் கடந்த செப்டம்பா் முதல் வாரத்தில் கேரளத்தில் ரூ.45 லட்சம் மதிப்பில் இந்தியப் பதிவு பெற்ற படகை

            விலைக்கு வாங்கி இலங்கைத் தமிழா் 20 பேரை ஏற்றிக் கொண்டு கனடாவில் தஞ்சம் புகத் திட்டமிட்டிருந்தனராம்.

              Posted in இலங்கை செய்திகள்

              தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 96 பேர் கைது

              தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 96 பேர் கைது

              தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று(08) காலை 6 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 96 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

              அத்துடன், கடந்த வருடம் ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 80,284 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

              இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் மேல் மாகாணத்துக்குள் நுழையும், வெளியேறும் 2,555 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

              அவர்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 325 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

              Posted in Uncategorized

              விசா அனுமதி பத்திரங்களினதும் செல்லுபடியாகும் கால எல்லை நீடிப்பு

              விசா அனுமதி பத்திரங்களினதும் செல்லுபடியாகும் கால எல்லை நீடிப்பு

              விசா அனுமதி பத்திரங்களினதும் செல்லுபடியாகும் கால எல்லை இன்று (07) முதல் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

              குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

              தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் பெற்றுக் கொண்டுள்ள சகல விதமான விசாக்களும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை செல்லுப்படியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

              இதனையடுத்து, கடந்த மே மாதம் 11 ஆம் திகதி முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் வீசாக்களுக்கு அக்காலப் பிரிவுக்கான விசா கட்டணங்கள் மாத்திரம் அறவிடப்படும்.

              அத்துடன் எந்தவித அபராதமும் அறவிடப்பட மாட்டாது என, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                Posted in Uncategorized

                கஞ்சாவுடன் 4 பிள்ளைகளின் தாய் கைது

                கஞ்சாவுடன் 4 பிள்ளைகளின் தாய் கைது

                பெரியநீலாவணை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிள்ளையாரடி சந்தியில் மேற்கொண்ட திடீர்

                சுற்றிவளைப்பில் 1,100 கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர், நேற்று (05) மாலை கைது செய்யப்பட்டார்.

                பெரியநீலாவணை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டீ.சி. ரத்நாயக்க தலைமையிலான சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜீ.எஸ்.பி.பண்டார, பொலிஸ் சார்ஜென்ட்

                குணபால மற்றும் சுபசிங்க, அபேரத்ன, நிம்ஸ் ஆகிய விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து குறித்த பகுதியை சுற்றி வளைத்தனர்.

                இதன்போது நீண்ட காலமாக மட்டக்களப்பு மாவட்ட கிராமப் பகுதிக்கு கேரளா கஞ்சாவை விற்பனை செய்து வந்த 4 பிள்ளைகளின் தாய் கைது செய்யப்பட்டார்.

                கைது செய்யப்பட்ட சந்தேகநபர், வெல்லாவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

                Posted in Uncategorized

                மோஸ்க்கோவில் 8 தீவிரவாதிகள் கைது – பெரும் முறியடிப்பு

                மோஸ்க்கோவில் 8 தீவிரவாதிகள் கைது – பெரும் முறியடிப்பு

                மோஸ்க்கோவில் பெரும் தாக்குதலை நடத்தும் முகமாக ஊடுருவி இருந்த 8 தீவிரவாதிகளை தாம் கைது செய்துள்ளதாக ரசிய உளவுத்துறை தெரிவித்துள்ளது

                நன்கு திட்டமிட்ட பெரும் தாக்குதலை நடத்திட இவர்கள் தயாராக இருந்த நிலையில் இந்த கைது வேட்டை இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

                  Posted in Uncategorized

                  பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பிரதேச சபை உறுப்பினர் கைது

                  பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பிரதேச சபை உறுப்பினர் கைது

                  பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                  ஊரெழு பகுதியில், நேற்றைய தினம் (03) இரவு, பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் ஒன்றில் இருவர் தலைக்கவசமின்றி பயணித்துள்ளனர்.

                  அவர்களை வழிமறித்த பொலிஸார், சாரதி அனுமதிப்பத்திரத்தை வாங்கி, அபராத பத்திரத்தை எழுத முற்பட்ட போது, அங்கு வந்த பிரதேச சபை உறுப்பினர், பொலிஸாருடன் முரண்பட்டார்.

                  அவரது நடவடிக்கை எல்லை மீறிச் சென்றதனால் பொலிஸ் உத்தியோகத்தர் வானத்தை நோக்கி இரண்டு தடவை சூடு நடத்தி எச்சரித்தனர்.

                  அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவரையும், தமது கடமைக்கு இடையூறு விளைவித்தனர் எனும் குற்றச்சாட்டில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

                  சம்பந்தப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் தன்னை ஈபிடிபி கட்சி என அறிமுகப்படுத்தி பல தடவைகள் பொலிஸாருடன் முரண்பட்டு, கடமைக்கு இடையூறு விளைவிப்பவர் என்றும் பொலிஸார் கூறினர்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நபர் உயிரிழப்பு

                  பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நபர் உயிரிழப்பு

                  மன்னாரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

                  மன்னார் – எருக்கலம்பிட்டி, புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் முச்சக்கரவண்டியை சோதனைக்குட்படுத்திய போது, போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் இருவரை பொலிஸார் நேற்றிரவு கைது செய்தனர்.

                  சந்தேகநபர்களில் ஒருவர் இன்று காலை திடீர் சுகயீனம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

                  இதன்போது, அந்நபர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

                  எருக்கலம்பிட்டி – தர்கா நகர் பகுதியை சேர்ந்த 29 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.

                  உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

                  மேலதிக விசாரணைகளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

                  Posted in இலங்கை செய்திகள்

                  ஆயுதங்களுடன் 5 பேர் கைது

                  ஆயுதங்களுடன் 5 பேர் கைது

                  கூரிய ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

                  குறித்த நபர்கள் நிட்டம்புவ, அத்தனகல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

                  இவர்களை கொழும்பு குற்றவியல் பிரிவினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

                  21, 22 மற்றும் 24 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                  Posted in Uncategorized

                  ஆலயத்தில் திருடியவர் கைது


                  ஆலயத்தில் திருடியவர் கைது

                  இரத்தினபுரி- மஹவலவத்த சிவன் கோவிலிலுள்ள காளிச் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவரிடம்
                  பெறப்பட்ட வாக்குமூலத்துக்கு அமைய, குறித்த நகைகள் நகை அடகு பிடிக்கும்
                  நிலையமொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

                  கோவிலிலுள்ள காளி சிலையிலிருந்து நகைகள் காணாமல் போயுள்ளதாக இந்த மாதம் 17ஆம்
                  திகதி இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதற்கமைய, சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்த கைரேகைகள் மற்றும் ஏனைய சாட்சிகளைக் கொண்டு 3 பிரிவுகளாகப் பிரிந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

                  இந்த நிலையில், இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திகன பிரதேசத்தைச் சேர்ந்த நபர்
                  ஒருவர், நிவித்திகல நகரிலுள்ள அடகு நிலையத்தில் சில தங்க ஆபரணங்களை அடகு
                  வைத்துள்ளார் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, இரண்டு பிள்ளைகளின்
                  தந்தையான 39 வயதுடைய முடி திருத்துனராக தொழில் செய்யும் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

                  கொரோனா தொற்றால் தமக்கு தொழில் இழக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தான்
                  தொடர்ச்சியாக நிவித்திகல பிரதேசத்திலுள்ள 7 கோவில்களிலுள்ள சிலைகளின் தங்க
                  ஆபரணங்களை திருடியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் குறித்த முடி திருத்துனர்
                  தெரிவித்துள்ளார்.

                  இதனையடுத்து சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட நகைகளை நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

                    Posted in Uncategorized

                    அமைச்சரின் கால்களை நக்க வைத்து தமிழ் கைதிகள் வதை

                    அமைச்சரின் கால்களை நக்க வைத்து தமிழ் கைதிகள் வதை

                    இலங்கையின் சிறைச்சாலை அமைச்சர் ரோகன் ரத்வத்த அனுராதபுரம் சிறை சாலைக்கு சென்ற

                    பொழுது அங்கு தடுத்து வைக்க பட்டுள்ள தமிழ் கைதிகள் மூலம் அவரது கால் சப்பாத்து நக்கி சுத்த படுத்த பட்டது

                    இவ்வாறான கீழ்த்தரமான செயலில் செயல் பட்ட அவருக்கு எதிராக மக்கள் ,மற்றும் தமிழ் எம்பிக்கள் சிலர் கடும் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர்

                    மேற்படி சம்பவம் சர்வதேச அரங்கிற்கும் எடுத்து செல்ல பட்டுள்ளது

                      Posted in Uncategorized

                      இளம் மனைவியை சுட்டு கொன்ற கணவர்

                      இளம் மனைவியை சுட்டு கொன்ற கணவர்

                      இலங்கை எம்பிலிபிட்டிய பகுதியில் 35 வயதுடைய இளம் மனைவியை கணவர் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

                      இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் ,கொலையில் முடிவடைந்துள்ளது ,கணவர் கொலை

                      குற்ற சாட்டில் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளார்

                        Posted in Uncategorized

                        இலங்கை வரும் ஐரோப்பிய குழு – ஜிஎஸ்பி+ நிறுத்த படும் வாய்ப்பு

                        இலங்கை வரும் ஐரோப்பிய குழு – ஜிஎஸ்பி+ நிறுத்த படும் வாய்ப்பு

                        இலங்கையில் ஆளும் அரசு தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் நிலையில்

                        ஆண்டு தோறும் இலங்கைக்கு வழங்க படும் ஜிஎஸ்பி+ வரி சலுகை நிறுத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                        நாளை இலங்கை வரும் ஐரோப்பிய தூது குழுவினர் இது தொடர்பாக ஆராயவுள்ளனர்

                        இவர்கள் மேற்கொள்ளும் இந்த ஆய்வு நடவடிக்கையின் பின்னரே இலங்கைக்கு ஆப்பு வைக்க படும் ஆட்டம் ஆரம்பிக்க படுமா என்பதை அறிய முடியும் ,இதில் இலங்கைக்கு கடிவாளம் வழங்க

                        பட்டால் ,போர் குற்ற விசாரணைகள் துரித படுத்த படும் நிலை ஏற்படும் என்பதை அடித்து கூறலாம்

                          Posted in Uncategorized

                          ஆற்றில் மிதந்த மனித சடலம் – நடந்தது என்ன ..?

                          ஆற்றில் மிதந்த மனித சடலம் – நடந்தது என்ன ..?

                          மட்டக்களப்பட்டு ஏறாவூர் பகுதியில் உள்ள வாவி ஒன்றில் இருந்து ஆணின் சடலம் மீட்க பட்டுள்ளது

                          இவர் படுகொலை செய்ய பட்டு ஆற்றுக்குள் வீச பட்டு இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது

                          சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

                          இலங்கையில் சமீப காலங்களாக நீர் நிலைகளில் மனித சடலங்கள் மிதந்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                            Posted in Uncategorized

                            கிளிநொச்சியில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 34ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு!

                            கிளிநொச்சியில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 34ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு!

                            தியாக தீபம் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாளான இன்றைய

                            தினம் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் தியாகி திலீபன் அவர்கள் வீரச்சாவடைந்த நேரமான 10.48 மணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

                            தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் ஈகச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

                            எமது உணர்வு! எமது உரிமை!

                            திலீபனின்
                            திலீபனின்
                              Posted in Uncategorized

                              திலீபன் நினைவை நடத்த முல்லையில் தடை

                              திலீபன் நினைவை நடத்த முல்லையில் தடை

                              இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளின் மண் மீட்பு போரில் தண்னி ஈகம் செய்த தியாக தீபம்

                              திலீபனின் 34 ஆம் ஆண்டு நினைவு நாளை நினைவு கூற முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது

                              சட்டம் ஒழுங்கு கெட்டுவிட கூடாது என்பதற்காக இந்த தடை உத்தரவை பிறப்பிக்க பட்டுள்ளதாம்