Tag: கைது
சிறுவனுக்கு மதுபானம் கொடுத்த நபர் ஒருவர் கைது
சிறுவனுக்கு மதுபானம் கொடுத்த நபர் ஒருவர் கைது
யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி பகுதியில், 10 வயதுச் சிறுவனொருவனுக்கு மதுபானத்தை அருந்த கொடுத்த ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த சந்தேகநபர் நேற்று (27) சிறுவனுக்கு முச்சக்கர வண்டியினுள் வைத்து மதுபானத்தை அருந்தக் கொடுத்துள்ளார்.
சிறுவனுக்கு மதுபானம் கொடுத்த நபர் ஒருவர் கைது
இது குறித்து சிறுவனின் தாயார் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் 35 வயதான குறித்த சந்தேகநபர் நேற்றிரவு சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்றையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
சிறுவனின் தந்தை வேலை நிமித்தமாக வெளிநாட்டில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
நிர்வாணப் படங்களை பகிர்ந்தவர் கைது
நிர்வாணப் படங்களை பகிர்ந்தவர் கைது
தனது பொறுப்பிலிருந்த பெண் ஒருவரின் நிர்வாணப் புகைப்படங்களை பரப்பிய குற்றச்சாட்டில் சுகாதார உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
34 வயதுடைய பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணிணி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் ஒக்டோபர் 24ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது புகைப்படங்களைக் குறித்த நபர் பரப்புவதாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
- கனமழைக்கு மத்தியில் ஹட்டன்–போகவந்தலாவ சாலையில் நிலச்சரிவு
- தித்வா புயலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ரூ. 2.27 பில்லியனுக்கும் அதிகமான சேதம்
- விசா மோசடி குற்றச்சாட்டின் பேரில் 48 கடவுச்சீட்டுகளுடன் முன்னாள் குடிவரவுத் திணைக்கள ஊழியர் கைது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடலுக்காக ஆரஞ்சு எச்சரிக்கை
- ரியாத் மீது ஹூதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம்
- கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியாவில் உள்ள பல பகுதிகளுக்கு சிவப்பு நிலச்சரிவு எச்சரிக்கை
- 48 மணி நேர ரயில்வே வேலைநிறுத்தம் நிறைவுற்றது
- டெலிகிராம் வழியாக இணையவழி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது
- கடும் மின்னல் குறித்து எச்சரிக்கை
- ஒருவர் அடித்து கொலை
இறைச்சியுடன் உயர் அதிகாரியொருவர் கைது
இறைச்சியுடன் உயர் அதிகாரியொருவர் கைது
வனவிலங்கு அதிகாரிகளின் கண்களில் மண்ணைத்தூவி மிக நீண்ட நாட்களாக மாடுகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை பொதியாக்கி தனது மனைவியின் வீட்டிலுள்ள குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விற்பனை
செய்து வந்த தெஹியத்தக்கண்டிய சிவில் பாதுகாப்பு திணைக்கள பாதுகாப்பு உத்தியோஸ்தர் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளினால் செவ்வாய்க்கிழமை (24) திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
வன விலங்கு பாதுகாப்பு திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குளிர்சாதனப் பெட்டியில் தனித்தனியாக ஒவ்வொரு
கிலோவாக பொதி செய்யப்பட்டிருந்த 7 கிலோகிராம் இறைச்சியை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
இலங்கை கடற்றொழிலாளர்கள் கைது
இலங்கை கடற்றொழிலாளர்கள் கைது
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் 8 இலங்கை கடற்தொழிலாளர்களை இந்திய கடலோர காவல் படையினர் இன்றைய தினம் (24) அதிகாலை கைது செய்துள்ளனர்.
அத்துடன் கடற்தொழிலாளர்கள் பயணித்த நான்கு படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
கைதானவர்கள், படகுகளுடன் மண்டபம் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு மண்டபம் கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. .
இலங்கை கடற்றொழிலாளர்கள் கைது
இந்திய கடலோர காவல் படை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் இணைந்து சர்வதேச கடல் எல்லையில் மேற்கொண்ட நடவடிக்கையில் இலங்கைக்கு கடல்
அட்டை மற்றும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மஞ்சள் ஆகியவற்றை கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் மண்டபம் பகுதியை சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டன
- கனமழைக்கு மத்தியில் ஹட்டன்–போகவந்தலாவ சாலையில் நிலச்சரிவு
- தித்வா புயலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ரூ. 2.27 பில்லியனுக்கும் அதிகமான சேதம்
- விசா மோசடி குற்றச்சாட்டின் பேரில் 48 கடவுச்சீட்டுகளுடன் முன்னாள் குடிவரவுத் திணைக்கள ஊழியர் கைது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடலுக்காக ஆரஞ்சு எச்சரிக்கை
- ரியாத் மீது ஹூதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம்
- கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியாவில் உள்ள பல பகுதிகளுக்கு சிவப்பு நிலச்சரிவு எச்சரிக்கை
- 48 மணி நேர ரயில்வே வேலைநிறுத்தம் நிறைவுற்றது
- டெலிகிராம் வழியாக இணையவழி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது
- கடும் மின்னல் குறித்து எச்சரிக்கை
- ஒருவர் அடித்து கொலை
தப்பிச் சென்ற பெண் மீண்டும் கைது
தப்பிச் சென்ற பெண் மீண்டும் கைது
குருநாகல் பொலிஸ் பாதுகாப்பில் இருந்து தப்பிச் சென்ற இளம் பெண்ணொருவர் மோதர பகுதியில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் வேவ்கல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளம் பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பிச் சென்ற பெண் மீண்டும் கைது
ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட குறித்த இளம் பெண் சந்தேகநபர் ஒருவர், குருநாகல் பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்று மோதரை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்ததாக குருநாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர் குருநாகல் பொலிஸாரால் சுமார் 7 கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த போது பொலிஸ் பிடியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்தேகநபர் மோதர பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என குருநாகல் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
- கனமழைக்கு மத்தியில் ஹட்டன்–போகவந்தலாவ சாலையில் நிலச்சரிவு
- தித்வா புயலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ரூ. 2.27 பில்லியனுக்கும் அதிகமான சேதம்
- விசா மோசடி குற்றச்சாட்டின் பேரில் 48 கடவுச்சீட்டுகளுடன் முன்னாள் குடிவரவுத் திணைக்கள ஊழியர் கைது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடலுக்காக ஆரஞ்சு எச்சரிக்கை
- ரியாத் மீது ஹூதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம்
- கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியாவில் உள்ள பல பகுதிகளுக்கு சிவப்பு நிலச்சரிவு எச்சரிக்கை
- 48 மணி நேர ரயில்வே வேலைநிறுத்தம் நிறைவுற்றது
- டெலிகிராம் வழியாக இணையவழி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது
- கடும் மின்னல் குறித்து எச்சரிக்கை
- ஒருவர் அடித்து கொலை
ஓட்டோக்களை திருடி பெண்களை விழுங்கியவர் கைது
ஓட்டோக்களை திருடி பெண்களை விழுங்கியவர் கைது
ஓட்டோக்களை திருடி, அதனை துண்டு துண்டுகளாக கழற்றி, அதனை குறைந்த விலையில் விற்று, கிடைக்கும் பணத்தில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிகளையே இவர் திருடியுள்ளார். அவ்வாறு திருடிய ஓட்டோக்களை குறைந்த விலைக்கு முகப்புத்தம் ஊடாக விற்றுள்ளார்.
அதில் கிடைக்கும் பணத்தில் பெண்களுடன் பழகி, பணத்தை செலவழித்துள்ளார் என தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டோக்களை திருடி பெண்களை விழுங்கியவர் கைது
சந்தேகநபர் 8 மாதங்களில் 21 ஓட்டோக்களை திருடியுள்ளதாகவும் அவற்றின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
6 ஓட்டோக்களையும், ஓட்டோக்களின் மீதமுள்ள பாகங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கிரிபத்கொடையில், குறைந்த விலைக்கு ஓட்டோவை விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவர் தொடர்பில் தெமட்டகொடை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில பண்டாரவிற்கு தகவல் கிடைத்துள்ளது.
அவர் வழங்கிய தகவலுக்கமைய, சந்தேகநபரை கைது செய்து விசாரணைக்குட்படுத்திய போதே இந்த திருட்டுச் சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
- கனமழைக்கு மத்தியில் ஹட்டன்–போகவந்தலாவ சாலையில் நிலச்சரிவு
- தித்வா புயலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ரூ. 2.27 பில்லியனுக்கும் அதிகமான சேதம்
- விசா மோசடி குற்றச்சாட்டின் பேரில் 48 கடவுச்சீட்டுகளுடன் முன்னாள் குடிவரவுத் திணைக்கள ஊழியர் கைது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடலுக்காக ஆரஞ்சு எச்சரிக்கை
- ரியாத் மீது ஹூதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம்
- கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியாவில் உள்ள பல பகுதிகளுக்கு சிவப்பு நிலச்சரிவு எச்சரிக்கை
- 48 மணி நேர ரயில்வே வேலைநிறுத்தம் நிறைவுற்றது
- டெலிகிராம் வழியாக இணையவழி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது
- கடும் மின்னல் குறித்து எச்சரிக்கை
- ஒருவர் அடித்து கொலை
கொலைச் செய்ய சென்ற இருவர் கைது
கொலைச் செய்ய சென்ற இருவர் கைது
கொலைச் செய்வதற்காக சென்ற 2 சந்தேகநபர்களை களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களனிப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (17) மாலை கடவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராகம வீதிக்குத் திரும்பும் சந்திக்கு அருகில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்ட போது சாரதியிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றும், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட
ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்றும், தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் சிலவும் பறிமுதல் செய்யப்பட்டு பேலியகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.
கொலைச் செய்ய சென்ற இருவர் கைது
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24 மற்றும் 29 வயதுடைய மீகஹவத்த மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், கடவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுதொழில் ஒன்றின் உரிமையாளர் மற்றும் முகாமையாளரை சுட்டுக்கொலை செய்ய வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
பேலியகொட பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- கனமழைக்கு மத்தியில் ஹட்டன்–போகவந்தலாவ சாலையில் நிலச்சரிவு
- தித்வா புயலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ரூ. 2.27 பில்லியனுக்கும் அதிகமான சேதம்
- விசா மோசடி குற்றச்சாட்டின் பேரில் 48 கடவுச்சீட்டுகளுடன் முன்னாள் குடிவரவுத் திணைக்கள ஊழியர் கைது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடலுக்காக ஆரஞ்சு எச்சரிக்கை
- ரியாத் மீது ஹூதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம்
- கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியாவில் உள்ள பல பகுதிகளுக்கு சிவப்பு நிலச்சரிவு எச்சரிக்கை
- 48 மணி நேர ரயில்வே வேலைநிறுத்தம் நிறைவுற்றது
- டெலிகிராம் வழியாக இணையவழி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது
- கடும் மின்னல் குறித்து எச்சரிக்கை
- ஒருவர் அடித்து கொலை
ATM இல் கொள்ளை மூவர் கைது
ATM இல் கொள்ளை மூவர் கைது
மதுரங்குளிய, 10 ஆம் கட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தில் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி சந்தேகநபர்கள் ATM இயந்திரத்தில் இருந்த 10 லட்சத்து 54 ஆயிரத்து 490 ரூபா பணத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கமைய மதுரங்குளிய பொலிஸார் மற்றும் புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதன்படி நேற்று (17) காலை அனுராதபுரம் பொலிஸ் பிரிவில், புத்தளம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சந்தேக நபர்களை கைது செய்ததுடன், சந்தேகநபர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட 9 லட்சத்து 277 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ATM இல் கொள்ளை மூவர் கைது
கல்கமுவ, வரெல்லாகம மற்றும் அனுராதபுரத்தைச் சேர்ந்த 28, 32 மற்றும் 35 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய ஆடைகள், தலைக்கவசம் மற்றும் பாதுகாப்பு கேமராவுக்கு தெளிக்கும் ஸ்பிரே ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மதுரங்குளிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்
- கனமழைக்கு மத்தியில் ஹட்டன்–போகவந்தலாவ சாலையில் நிலச்சரிவு

- தித்வா புயலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ரூ. 2.27 பில்லியனுக்கும் அதிகமான சேதம்

- விசா மோசடி குற்றச்சாட்டின் பேரில் 48 கடவுச்சீட்டுகளுடன் முன்னாள் குடிவரவுத் திணைக்கள ஊழியர் கைது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடலுக்காக ஆரஞ்சு எச்சரிக்கை

- ரியாத் மீது ஹூதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம்

- கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியாவில் உள்ள பல பகுதிகளுக்கு சிவப்பு நிலச்சரிவு எச்சரிக்கை

- 48 மணி நேர ரயில்வே வேலைநிறுத்தம் நிறைவுற்றது

- டெலிகிராம் வழியாக இணையவழி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

- கடும் மின்னல் குறித்து எச்சரிக்கை

- ஒருவர் அடித்து கொலை

100 இற்கும் மேற்பட்டவர்களை கைது செய்ய உத்தரவு
100 இற்கும் மேற்பட்டவர்களை கைது செய்ய உத்தரவு
யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக பிறந்தநாள் கொண்டாடிய கும்பலை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு யாழ். நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு 50 இற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த 150 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் அண்மையில் ஒன்று கூடி தங்களில் ஒருவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
அதனை டிக்டொக் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் உள்ளனர்.
பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களின் செயற்பாடானது வீதியில் சென்ற மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்ததாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு தொலைபேசி ஊடாக அறிவிக்கப்பட்ட போதிலும் பொலிஸார் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை.
100 இற்கும் மேற்பட்டவர்களை கைது செய்ய உத்தரவு
யாழ். நகர் மத்தியில் சன நெருக்கடியான நேரத்தில் சட்டவிரோதமான முறையில் ஒன்று கூடி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்கள் அது தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்காதமை தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்து இருந்தனர்.
அதனை அடுத்து சட்டவிரோதமான முறையில் கூட்டம் கூடி பிறந்தநாள் கொண்டாடி, மக்களின் இயல்வு வாழ்வுக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்க்ளை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இருவரை கைது செய்து 14 ஆம் திகதி சனிக்கிழமை நீதவான் முன்னிலையில் முற்படுத்தி இருந்தனர்.
அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான், சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து முற்படுத்த வேண்டும் என பொலிஸாருக்கு பணித்துள்ளார்.
அதனை அடுத்து பொலிஸார் அனைவரையும் கைது செய்வதற்க்கு தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
- கனமழைக்கு மத்தியில் ஹட்டன்–போகவந்தலாவ சாலையில் நிலச்சரிவு
- தித்வா புயலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ரூ. 2.27 பில்லியனுக்கும் அதிகமான சேதம்
- விசா மோசடி குற்றச்சாட்டின் பேரில் 48 கடவுச்சீட்டுகளுடன் முன்னாள் குடிவரவுத் திணைக்கள ஊழியர் கைது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடலுக்காக ஆரஞ்சு எச்சரிக்கை
- ரியாத் மீது ஹூதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம்
- கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியாவில் உள்ள பல பகுதிகளுக்கு சிவப்பு நிலச்சரிவு எச்சரிக்கை
- 48 மணி நேர ரயில்வே வேலைநிறுத்தம் நிறைவுற்றது
- டெலிகிராம் வழியாக இணையவழி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது
- கடும் மின்னல் குறித்து எச்சரிக்கை
- ஒருவர் அடித்து கொலை
இந்திய மீனவர்கள் 13 பேர் கைது
இந்திய மீனவர்கள் 13 பேர் கைது
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் சனிக்கிழமை (14) திகதி மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 13 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதோடு 3 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன் குறித்த மீனவர்கள், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
- கனமழைக்கு மத்தியில் ஹட்டன்–போகவந்தலாவ சாலையில் நிலச்சரிவு
- தித்வா புயலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ரூ. 2.27 பில்லியனுக்கும் அதிகமான சேதம்
- விசா மோசடி குற்றச்சாட்டின் பேரில் 48 கடவுச்சீட்டுகளுடன் முன்னாள் குடிவரவுத் திணைக்கள ஊழியர் கைது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடலுக்காக ஆரஞ்சு எச்சரிக்கை
- ரியாத் மீது ஹூதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம்
- கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியாவில் உள்ள பல பகுதிகளுக்கு சிவப்பு நிலச்சரிவு எச்சரிக்கை
- 48 மணி நேர ரயில்வே வேலைநிறுத்தம் நிறைவுற்றது
- டெலிகிராம் வழியாக இணையவழி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது
- கடும் மின்னல் குறித்து எச்சரிக்கை
- ஒருவர் அடித்து கொலை
மன்னாரில் 17 வயது சிறுமி துஸ்பிரயோகம் – மூவர் கைது
மன்னாரில் 17 வயது சிறுமி துஸ்பிரயோகம் – மூவர் கைது
மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள கிராமம் ஒன்றில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் மூன்று நபர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட
நிலையில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த மூவர் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் – பெரிய கமம் பகுதியை சேர்ந்த 23,18,17 வயதுடைய இளைஞர்கள் மூவர் மேற்படி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூன்று நபர்களும் சிறுமியின் நிர்வாண புகைப்படத்தை வைத்திருந்ததோடு அப் புகைப்படத்தை நண்பர்களிடமும் பரிமாறி கொண்டுள்ளனர்.
மன்னாரில் 17 வயது சிறுமி துஸ்பிரயோகம் – மூவர் கைது
அப்புகைப்படங்களை வைத்து சிறுமியை மிரட்டி துஷ்பிரயோக சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதே நேரம் சம்பவத்தின் பிரதான குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் வாகன திருத்தகம் ஒன்றில் பணிபுரியும் 23 வயதுடைய நபர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததுடன் அவரிடம் இருந்து 2,000 ரூபாய் பணத்தையும் வலுக்ககட்டாயமாக அபகரித்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரின் தாயார் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மன்னார் பொலிஸார் குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்து
விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த மூவரும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
- கனமழைக்கு மத்தியில் ஹட்டன்–போகவந்தலாவ சாலையில் நிலச்சரிவு
- தித்வா புயலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ரூ. 2.27 பில்லியனுக்கும் அதிகமான சேதம்
- விசா மோசடி குற்றச்சாட்டின் பேரில் 48 கடவுச்சீட்டுகளுடன் முன்னாள் குடிவரவுத் திணைக்கள ஊழியர் கைது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடலுக்காக ஆரஞ்சு எச்சரிக்கை
- ரியாத் மீது ஹூதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம்
- கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியாவில் உள்ள பல பகுதிகளுக்கு சிவப்பு நிலச்சரிவு எச்சரிக்கை
- 48 மணி நேர ரயில்வே வேலைநிறுத்தம் நிறைவுற்றது
- டெலிகிராம் வழியாக இணையவழி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது
- கடும் மின்னல் குறித்து எச்சரிக்கை
- ஒருவர் அடித்து கொலை
ஒன்லைன் வேலை வாய்ப்பு 1 கோடி மோசடி நபர் கைது
ஒன்லைன் வேலை வாய்ப்பு 1 கோடி மோசடி நபர் கைது
ஒன்லைன் மூலம் வேலை வாய்ப்பு தருவதாக கூறி சுமார் 1 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் 94 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் 3 வங்கிக் கணக்குகளில் 72 இலட்சம் ரூபா பணம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒன்லைன் வேலை வாய்ப்பு 1 கோடி மோசடி நபர் கைது
கரந்தெனிய, தெனகொட பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- கனமழைக்கு மத்தியில் ஹட்டன்–போகவந்தலாவ சாலையில் நிலச்சரிவு
- தித்வா புயலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ரூ. 2.27 பில்லியனுக்கும் அதிகமான சேதம்
- விசா மோசடி குற்றச்சாட்டின் பேரில் 48 கடவுச்சீட்டுகளுடன் முன்னாள் குடிவரவுத் திணைக்கள ஊழியர் கைது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடலுக்காக ஆரஞ்சு எச்சரிக்கை
- ரியாத் மீது ஹூதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம்
- கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியாவில் உள்ள பல பகுதிகளுக்கு சிவப்பு நிலச்சரிவு எச்சரிக்கை
- 48 மணி நேர ரயில்வே வேலைநிறுத்தம் நிறைவுற்றது
- டெலிகிராம் வழியாக இணையவழி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது
- கடும் மின்னல் குறித்து எச்சரிக்கை
- ஒருவர் அடித்து கொலை
பருத்தித்துறையில் கஞ்சாவுடன் இளைஞன் கைது
பருத்தித்துறையில் கஞ்சாவுடன் இளைஞன் கைது
பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொற்றாவத்தை பகுதியில் 28 கிராம் 100 மில்லிகிராம் கஞ்சாவுடன் 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறை மாவட்ட பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த கைது முன்னெடுக்கப்பட்டது.
பருத்தித்துறையில் கஞ்சாவுடன் இளைஞன் கைது
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
தாக்குதல் நடத்தியவர்கள் கைது| இஸ்ரேல் இராணுவம்|isreal army|Israel-Hamas war|
தாக்குதல் நடத்தியவர்கள் கைது| இஸ்ரேல் இராணுவம்|isreal army|Israel-Hamas war|
இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்திய கமாஸ் அமைப்பே சேர்ந்த உறுப்பினர்கள் ,இஸ்ரேல் இராணுவத்தால் சுற்றிவளைக்க பட்டு கைது .
அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆடைகள் அகற்ற பட்டு ,மரண தணடனை வழங்க பட்டுள்ளது .
உள்ளே ஊடுருவி நின்று பாரிய தாக்குதலை நடத்தி, இஸ்ரேல் இராணுவத்தை முடக்கி, நாட்டையே பதற வைத்த ஆயுத தாரிகள் .
அவ்வாறான அந்த கொடியவர்களை நாம் கைது செய்து ,தண்டனை வழங்கி உள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .
தமது உளவுத்துறை தோல்வியின் ஊடாகவே இந்த துயர நிகழ்வு இடம்பெற்றுள்ளதை இஸ்ரேல் இராணுவம் ஏற்றுள்ளது .
இஸ்ரேலுக்கு நடந்த இந்த சம்பவம் ,வரலாற்று வெற்றியாக ,இதனை அரபு நாடுகள் ,மற்றும் ஈரான் பலஸ்தீனம் கொண்டாடி வருகிறது .
காசா பகுதியில் மக்களை பட்டினி போட்டு இஸ்ரேல் இராணுவம் படுகொலை செய்து வருகிறது .
அரபு நாடுகள் ஒன்றிணைந்து பொருட்களை அனுப்பிட நடவடிக்கை .இவ்வாறான காணொளிகள் பார்வைஇட இந்த இணையத்தை பார்வையிடுங்கள் .
விரைவில் பல காட்சிகள் இணைக்க படும்
#israel #hamas
வாட்ஸாப் குழுவில் இணைய கீழ் உள்ள இணைப்பில் அழுத்துங்கள்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
காதலியின் நிர்வாண சுவரொட்டி இளைஞன் கைது
காதலியின் நிர்வாண சுவரொட்டி இளைஞன் கைது
அதிருப்தியடைந்த காதலியின் நிர்வாணப் புகைப்படங்களை பெரிதாக்கி அவரது வீட்டின் முன் வாயிலில் ஒட்டிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரிடம் இருந்து சிறுமியின் மேலும் 4 நிர்வாண புகைப்படங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அவை பெரிதாக்கப்பட்டு
திருத்தப்பட்டுள்ளன. மேலும் நிர்வாண புகைப்படங்கள் அடங்கிய மடிகணினியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
காதலியின் நிர்வாண சுவரொட்டி இளைஞன் கைது
23 வயதுடைய முறைப்பாட்டாளரும் சந்தேகநபரும் மஹரகமவில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்ததாகவும், பாடசாலை நண்பரான சந்தேக நபருடன் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தொடர்பு வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கெஸ்பேவ பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சன சமரசிங்கவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
- கனமழைக்கு மத்தியில் ஹட்டன்–போகவந்தலாவ சாலையில் நிலச்சரிவு
- தித்வா புயலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ரூ. 2.27 பில்லியனுக்கும் அதிகமான சேதம்
- விசா மோசடி குற்றச்சாட்டின் பேரில் 48 கடவுச்சீட்டுகளுடன் முன்னாள் குடிவரவுத் திணைக்கள ஊழியர் கைது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடலுக்காக ஆரஞ்சு எச்சரிக்கை
- ரியாத் மீது ஹூதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம்
மாளிகாகந்த விவகாரம் மூவர் கைது
மாளிகாகந்த விவகாரம் மூவர் கைது
கடந்த மாதம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் 06 வயது சிறுமி கொல்லப்பட்டு அவரது தந்தை படுகாயமடைந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் துப்பாக்கிதாரி உட்பட மூன்று சந்தேகநபர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, சேதவத்தை பகுதியிலிருந்து காரில் பயணித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இராஜகிரிய ஒபேசேகரபுர பகுதியில் உள்ள வீட்டுத் தொகுதியில் கைவிடப்பட்ட காரை விசே் அதிரடிப்படையினர் மீட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூடு நடத்தியவர், துப்பாக்கிப் பிரயோகத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் மற்றும் அவர்களுக்கு உதவிய மற்றுமொரு சந்தேக நபர் என மூவரைக் கைது செய்துள்ளனர்.
மாளிகாகந்த விவகாரம் மூவர் கைது
செப்டெம்பர் 17ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிறுமி ஒருவர் உயிரிழந்ததுடன் அவரது தந்தை படுகாயமடைந்தார். வழக்கு ஒன்று தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொண்டதைத் தொடர்ந்து மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறும் போது அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
உயிரிழந்த சிறுமியின் தந்தைக்கே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கு வைக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான 36 மற்றும் 65 வயதுடைய ஆதம் லெப்பை, மொஹமட் மின்ஹாஜ் மற்றும் செய்யது இஷாக் மன்சூர் ஆகியோர் மேலதிக விசாரணைகளுக்காக வெலிக்கடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
விசேட அதிரடிப்படை தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் CI நதீக்க சில்வாவினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
- கனமழைக்கு மத்தியில் ஹட்டன்–போகவந்தலாவ சாலையில் நிலச்சரிவு
- தித்வா புயலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ரூ. 2.27 பில்லியனுக்கும் அதிகமான சேதம்
- விசா மோசடி குற்றச்சாட்டின் பேரில் 48 கடவுச்சீட்டுகளுடன் முன்னாள் குடிவரவுத் திணைக்கள ஊழியர் கைது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடலுக்காக ஆரஞ்சு எச்சரிக்கை
- ரியாத் மீது ஹூதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம்
- கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியாவில் உள்ள பல பகுதிகளுக்கு சிவப்பு நிலச்சரிவு எச்சரிக்கை
- 48 மணி நேர ரயில்வே வேலைநிறுத்தம் நிறைவுற்றது
- டெலிகிராம் வழியாக இணையவழி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது
- கடும் மின்னல் குறித்து எச்சரிக்கை
- ஒருவர் அடித்து கொலை
வெடித்து சிதறிய இராணுவம் முகாம்|தப்பி ஓடியா 2000 பேர் கைது|russia ukrain war news|
வெடித்து சிதறிய இராணுவம் முகாம்|தப்பி ஓடியா 2000 பேர் கைது|russia ukrain war news|
வெடித்து சிதறிய இராணுவம் முகாம் நடத்தி விட்டு தப்பி தப்பி ஓட முனையின்ர 2000 பேர் கைது ,இந்தியர்களுக்கு நடக்கும் கொடுமைகள் கதறும் மக்கள் .
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
போதை வஸ்துடன் பெண் கைது .
போதை வஸ்துடன் பெண் கைது .
இலங்கை மன்னார் பேசலை கடல் பகுதியில் மூன்றுக்கு மேற்பட்ட கிலோகிராம் எடையுடய போதைவஸ்துடன் பெண் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் .
பெண் மீது சநதேகம் கொண்டவர்கள் போலீசாருக்கு அழைத்து தெரிவித்த நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது .
44 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் ,கைதான பெண்ணிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
- கனமழைக்கு மத்தியில் ஹட்டன்–போகவந்தலாவ சாலையில் நிலச்சரிவு
- தித்வா புயலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ரூ. 2.27 பில்லியனுக்கும் அதிகமான சேதம்
- விசா மோசடி குற்றச்சாட்டின் பேரில் 48 கடவுச்சீட்டுகளுடன் முன்னாள் குடிவரவுத் திணைக்கள ஊழியர் கைது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடலுக்காக ஆரஞ்சு எச்சரிக்கை
- ரியாத் மீது ஹூதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம்
விமானத்தில் அமர்ந்திருந்தவர் கைது
விமானத்தில் அமர்ந்திருந்தவர் கைது
புறப்படுவதற்கு தயாரா இருந்த விமானத்தில் அமர்ந்திருந்த வத்தளை-ஹெந்தல பிரதேசத்தைச் சே்ந்த எச்.பீ.சுதாகர் இந்திரஜித் என்பவர் கைது
செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, எதிர்வரும் 6ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் துரிதமாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக சில்வா கட்டளையிட்டுள்ளார்.
விமானத்தில் அமர்ந்திருந்தவர் கைது
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்குள் இரகசியமாக உள்நுழைந்த நபர், ஜப்பானை நோக்கி பயணிக்க விருந்த விமானத்துக்குள் ஏறியே இவ்வாறு பயணிக்க விருந்தார் என்பது விசாரணைகளின் ஊடாக அறியமுடிகின்றது.
சந்தேகநபர் ஜப்பானில் தொழில்புரிந்து வந்துள்ளார். பின்னர் திருமணம் செய்துகொள்வதற்காக இலங்கைக்குத் திரும்பியுள்ளார். ஜப்பானுக்கு மீண்டும் செல்வதாக தனது மனைவியிடம் தெரிவித்துவிட்டு, செப்டெம்பர் 30ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
எனினும், ஜப்பானுக்குச் செல்வதற்கான எந்தவோர் ஆவணமும் சந்தேகநபரிடம் இல்லையென நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
- கனமழைக்கு மத்தியில் ஹட்டன்–போகவந்தலாவ சாலையில் நிலச்சரிவு
- தித்வா புயலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ரூ. 2.27 பில்லியனுக்கும் அதிகமான சேதம்
- விசா மோசடி குற்றச்சாட்டின் பேரில் 48 கடவுச்சீட்டுகளுடன் முன்னாள் குடிவரவுத் திணைக்கள ஊழியர் கைது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடலுக்காக ஆரஞ்சு எச்சரிக்கை
- ரியாத் மீது ஹூதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம்
இண்டர்போல் உதவியுடன் நீதிபதியை கைது செய்ய நடவடிக்கை
இண்டர்போல் உதவியுடன் நீதிபதியை கைது செய்ய நடவடிக்கை
இலங்கை முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக விளங்கிய சரவணராஜா,
நாட்டை விட்டு தப்பி சென்றார் .இவ்வாறு சென்றவரை இண்டர்போல் பிடியாணை மூலம் ,கைது செய்ய நடவடிக்கை .மேற்கொள்ள படுகிறது .
நீதி வழங்கிய நீதிபதி ஒருவரை கேவல படுத்தும் முகமாக ,இலங்கை நீதித்துறையின் கருத்துக்கள் காணப்படுகின்றன .
குற்றாவளி போன்று சித்தரிக்க பட்டு ,நீதிக்கு புறம்பாக ,துரோகம் செய்தார் ,
என்ற வகையில் ,சிங்கள பெரும்பான்மை இனம் கருத்துக்களை பகிர்ந்து வருகிறது .
சமாதான நாயகனாக தன்னை காண்பித்து வந்த,
குள்ள நரி ரணில் தந்திரம் இப்பொழுது அம்பலமாகியுள்ளது .
ராஜபக்ஸ குடும்பத்தின் வாரிசாக மற்றம் பெற்றுள்ள ரணில் ,
தமிழர்களினால் துரத்தியடிக்க படவேண்டியவர் தான் என்பதை ,
நீதிபதியின் நாடு விட்டு வெளிறிய செயல் எடுத்து காட்டுகிறது .
இண்டர்போல் உதவியுடன் நீதிபதியை கைது செய்ய நடவடிக்கை
மக்கள் ஆதரவை பெற்றுக்கொள்ள ரணில் நடத்த போகும் நாடகங்கள் ,
வரும் நாட்களில் அரங்கேறும்
அவை வாக்கு அரசியலாக மாற்றுவதற்கு ரணில் முயல்வார் என்பதை ,
இப்பொழுதே அடித்து கூறலாம் .
தமிழ் நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் உள்ளதும் ,அவர்கள் எமது அடிமைகள் தான் என்பதை ,சிங்கள தேசம் சொல்லி கொள்கிறது என்பதே ,நீதிபதி சராவணராஜா ,உயிர் அச்சுறுத்தல் ,விரட்டியடிப்பு கற்பிக்கிறது எனலாம் .
- கனமழைக்கு மத்தியில் ஹட்டன்–போகவந்தலாவ சாலையில் நிலச்சரிவு

- தித்வா புயலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ரூ. 2.27 பில்லியனுக்கும் அதிகமான சேதம்

- விசா மோசடி குற்றச்சாட்டின் பேரில் 48 கடவுச்சீட்டுகளுடன் முன்னாள் குடிவரவுத் திணைக்கள ஊழியர் கைது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடலுக்காக ஆரஞ்சு எச்சரிக்கை

- ரியாத் மீது ஹூதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம்

- கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியாவில் உள்ள பல பகுதிகளுக்கு சிவப்பு நிலச்சரிவு எச்சரிக்கை

- 48 மணி நேர ரயில்வே வேலைநிறுத்தம் நிறைவுற்றது

- டெலிகிராம் வழியாக இணையவழி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

- கடும் மின்னல் குறித்து எச்சரிக்கை

- ஒருவர் அடித்து கொலை

































