நாட்டின் சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை

நாட்டின் சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை
Spread the love

நாட்டின் சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை

நாட்டின் சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது

சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும்

மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (10) பல இடங்களில்

மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் சில இடங்களில் மழை அல்லது

இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய மலைகளின் மேற்குச் சரிவுகள், வடமத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்கள் மற்றும் மொனராகலை, புத்தளம், ஹம்பாந்தோட்டை,

திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களில்

திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழையால் ஏற்படும் தற்காலிக, குறிப்பிட்ட பகுதிகளில் வீசும் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்கத்

தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது