Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

நீ வேண்டும் எனக்கு

நீ வேண்டும் எனக்கு

தேம்ஸ் நதியின் ஓரத்திலே
தெரு விளக்காய் எரிபவளே
நயாகரா அருவியாக
நான் ஓடி வந்திடவா ..?

கூலி இன்றி ஆறு வெட்டி
குரல் எழுப்பி ஆடி வரும்
அழகான நதி போல
அன்பே நான் வந்திட வா …?

உள்ளிருந்து துள்ளி வரும்
உருவத்தில் சிறிதான
மீன் போல நான் வரவா
மின்னல் போல் ஒளி தரவா ..?

குமரியில பூவெய்தி
குலை குலையாய் காய் காய்த்து
பழமாய் உதிர்கின்ற
பருவத்தில் வந்திட வா …?

எதுவாக நான் வரவோ
என் அன்பே பதில் தர வா
ஏங்கும் மனதொன்றின்
ஏக்கத்தை தனித்திட வா …..!

வன்னி மைந்தன்
ஆக்கம் 11-08-2021

உலக புகழ் பெற்ற
தேம்ஸ் நதி (லண்டன்
நயாகரா ( கனடா )
http://ethirinews.com/

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    எங்கள் தலைவிதி

    எங்கள் தலைவிதி

    இளம் காற்று பாடும் ஈழ கரையோரம்
    இதயங்கள் நொறுங்கும் சோக துயரம்
    எவர் செய்த சதியோ இத்துயர் கோலம்
    எங்களின் வாழ்வில் ஏனோ இப் பாரம்

    கரும்புகை ஏறி வானை மறைக்கும்
    கந்த துகளில் மூச்சு உறையும்
    வெடியோசை மண் கிளற வீழ்ந்தே இறந்தோம்
    உடன் இருந்தார் விட்டே ஊர் ஏறி கடந்தோம்

    வலியில் நெஞ்சு வாடி தவிக்க
    வழி தெரியா நின்றோம்
    உரிமை போரும் முடிவில் தவிக்க
    உதவுவார் இன்றி ஏங்கி தவித்தோம்

    தரணியில் நாங்கள் பிறந்தது கேடா
    தமிழனாய் இங்கு வாழ்தல் பிழையா
    சுதந்திரம் கேட்டோல் சூடு காடா
    சுதந்திர தேசமே நீதி இல்லையா

    மொத்த தமிழன் அழித்தான் உலகில் நடக்கிறான்
    ஒட்டு துணி இல்லா தமிழன் தவிக்கிறான்
    இத்துயரில் தினமும் எங்களின் தேசம்
    இதயம் இல்லா நடக்கும் உலகம்..!

    வன்னி மைந்தன்
    ஆக்கம் 25-03-2021

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      இறந்தால் உன்னை மறப்பேன் …!

      இறந்தால் உன்னை மறப்பேன் …!

      நினைத்து நினைத்து உருகிடத்தான்
      நீ வந்து போகிறாய்- உன்
      நினைவுகளை தந்து விட்டு
      நிதம் ஏனோ மறைகின்றாய்..?

      ஆழ் மனதில் நீயிருக்க
      அன்பே உனை மறப்பேனா
      அடியே உனை மறந்தால்
      ஆவி உடல் தங்குமா ?

      நீயெடுத்த முடிவொன்றால்
      நிகழ் காலம் இதுவாச்சு
      ஏதெடுத்து உனை மொழிவேன்
      எப்படி உனை உமிழ்வேன்

      காதோரம் செய்திகளை
      காதலியே சொல்லிட வா— நான்
      காணாமல் போகு முன்னே
      கதை ஒண்ணு சொல்லிட வா

      உருமாறும் அகவையில
      உள்ளத்தை மாற்றிட வா
      உனக்காக நான் வாழ்ந்தேன்- இந்த
      உண்மையை ஏற்றிடவா

      எதை உரைத்தும் இன்றென்ன
      எனக்கில்லை நீதானே
      எதை விதைத்தும் இன்றென்ன
      எல்லாமே வீன்தானே

      இருவருக்கும் இடையிலின்று
      இடையே ஒர் வேலியிட்டாய்
      இரு வேறாய் பிரிவதற்கா
      இடையில் ஒரு பதி வைத்தாய்?

      இதயத்தை சலவை செய்ய
      இன்றென்னால் முடியாது
      இறந்தால் உனை தொடரேன்
      இதயமே வருந்தாதே …!

      வன்னி மைந்தன்
      ஆக்கம் -10-03-2021

        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை …!

        நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை …!

        ஒத்தையில நீ தனித்து
        ஒடிந்துருகி போனவளே
        நித்தம் பல கோயில் ஏறி
        நின்று வரம் பெற்றவளே

        மூச்சடக்கி வீழ்ந்த துயர் – நீர்
        மூழ்கி விழி போனதடி
        அல்லும் பகல் வாயில் வந்து
        அறம் பேசி நிற்பவளே

        உந்தன் துயர் பாடும் நிலை
        உயிர் விட்டு தந்ததென்ன
        நெஞ்சுருகி நாம் கதறும்
        நிலை இன்று வைத்த தென்ன

        ஒத்த பிள்ளை பெற்றவளே
        ஒத்தி ஒத்தி வளர்த்தவளே
        பெற்றவளே உனையிழந்து
        பேரன்பு கதறுதடி

        அன்புருகி பேசி நிதம்
        ஆறுதல் சொல்பவளே
        நெஞ்சிளகி நாம் வாழ
        நீ வந்து பேசாயோ ..?

        முன் தினத்தில் கோழிக்கறி
        முழு சமையல் செய்தவளே
        அன்புருகும் பிள்ளாய்க்கு
        ஆக்கி நன்றே தந்தவளே

        இன்று அதை எண்ணி எண்ணி
        இதயமுடைந்து அழுகிறானே
        பெற்றவளே உனையிழந்து
        பெரும் துயரில் தவிக்கிறானே

        சோதனைகள் ஆயிரமாம்
        சோடனையாய் தூவையிலும்
        அவை எல்லாம் நெஞ்சடக்கி
        அமைதியாய் நடந்தவளே

        நீ வீழ்ந்த செய்தி இன்று
        நெஞ்சில் துயர் தந்ததம்மா
        இன்று வரை உன் இறப்பை
        நெஞ்சு நம்ப மறுக்குதம்மா …!

        மாரடைப்பால் -இன்று மல்லிகா அக்கா வீழ்ந்த ஆறா துயரில்…..

        -வன்னி மைந்தன்-(ஜெகன் )

        ஆக்கம் -03-03-2021

        நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை
        நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை