Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

அழுகுரல் கேட்கிறதா

அழுகுரல் கேட்கிறதா

அந்தி பொழுதில் நந்தி கடலில்
அழுகுரல் கேட்கிறதா?
அவல சாவின் ஆவிகளின்
ஆத்மா துடிக்கிறதா

ஓடிவந்தவர் கூடி நின்றவர்
ஒரு நொடி வீழ்ந்தனரே
ஓடி வந்த கந்தக கூண்டில்
ஓர் நூறாய் கிழிந்தனரே

பகைவர் விட்டு பாவிகள் கொன்றீர்
இது தான் படையெடுப்போ ..?
பகலும் இரவும் மாறி வரும்
பகைமை உணர்வீரா

ஒரு நொடி எங்கள் தமிழர் விழித்தல்
ஓடிடும் பகைமைகளே
ஒரு நாள் எங்கள் அவலம் தரிப்பீர்
ஓடி அழுவீரே

விதைத்தவன் வினையை
விரைவில் அறுப்பான்
விளைச்சல் இது தானே – இந்த
விபரம் தெரிவானே

எங்கள் மண்ணிலே எம்மை அழித்தவன்
எப்படி வாழ்ந்திடுவான்..?
ஏதடா மனிதா நீயெல்லாம் தமிழனா
எப்போ வெடித்திடுவாய்..?

வன்னி மைந்தன்
ஆக்கம் 10-10-2021

வன்னி மைந்தன் கவிதைகள்

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    இதை சொல்ல உன்னால் முடியுமா

    இதை சொல்ல உன்னால் முடியுமா

    இன்றே உலகம் படித்து விட
    இணையம் வந்திடவா
    எதிரி அந்த பகைவன் கொலையை
    எழுதி வைத்திடவா

    அதிர்வில் ஓடி அந்தபுரத்தை
    அலசி வந்திடவா
    சூரியன் ஓடி வாசல் வந்திட -சத்தி
    சுழற்றி கூட்டிடவா

    விண்ணில் ஏறிய தமிழ் விண்ணின்
    விடு கதை சொல்லிடவா
    அத்தனை கொள்ளையர் ஒன்றாய் கூடிய
    ஐ பீ சி கொழுத்திடவா

    ஆதவன் அன்றே ஆடி நின்றார்
    ஆயுள் முடிந்ததுவோ ..?-அட டா
    நெருப்பில் வீழ்ந்து நெறியை கொன்ற
    நேர்த்தி இவர் அல்லவா

    காலை கதிரில் மாலை மலரில்
    கண்ணீர் கதையல்லவா – நீ
    வடையுடன் கேசரி வாயில் அவிக்கும்
    வீர கேசரியா

    இதை சொல்ல உன்னால் முடியுமா

    மனிதம் இல்லா மனிதன் அறிவில்
    மறதி முதல் அல்லவா
    பதிவு செய்தி பதியா மருவும்
    பகலவன் இவர் அல்லவா

    லங்காசிறியின் லட்சிய நெருப்பில்
    லட்சங்கள் பார்த்துவிடு
    இறந்தவர் நாளில் பணத்தை அள்ளும்
    இழிநிலை செப்பிவிடு

    புதின பலகையில் சங்கதி ஏறி
    புதினம் தந்திடுமா ..?
    தேனியில் ஏறி கூடு கட்டி
    தேன் வலம்புரி வந்திடுமா ..?

    யாழில் ஏறி அதிரடி ஓட -புது
    யாழ் பிறந்திடுமா ..?
    உதயனில் ஓடி தினக்குரல் பாட
    உதயம் பொங்கிடுமா ..?

    இதுவரை படித்ததில் எத்தனை இணையம்
    இன்றே எண்ணிவிடு
    இந்த துணிவு எவருக்கு வரும்
    இருந்தால் சொல்லி விடு …!

    வன்னி மைந்தன்
    ஆக்கம் 09-10-2021

    வன்னி மைந்தன் கவிதைகள்

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      ஓடும் அந்த அருவி பக்கம்

      ஓடும் அந்த அருவி பக்கம்

      ஓடம் காத்திருந்தேன்
      நீ வருவாயென பார்த்திருந்து
      நிமிடங்கள் தொலைத்து நின்றேன்
      அருவி பாடிய ஓசையில – உன்

      ஆடல் கேட்கவில்லை
      அந்த வேளையில் கண்ணுறக்கம்
      அன்பே தெளியவில்லை
      மூணு நாளா எடுத்து வைத்த

      முன்னோட்டம் கரைந்திருச்சு
      ஆள் மனதில் முளத்த ஆசை
      ஆற்று மண்ணா கரைந்திருச்சு
      உன் மீது குற்றமிட

      உண்மையில் முடியவில்லை
      உள்ள வேதனை மறைத்துவிட
      உருளும் விழிக்கு தெரியவில்லை
      நான் வரைந்த ஓவியத்தின்

      நனையும் மையா நீயிருந்தாய்
      உனை வரைய எனை வைத்து- நீ
      ஊமையாகி ஏன் போனாய் …?

      வன்னி மைந்தன்
      ஆக்கம் 08-10-2021

      வன்னி மைந்தன் கவிதைகள்

        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        எப்படி வாழ்வில் உயர்வாய்

        எப்படி வாழ்வில் உயர்வாய்

        மெல்லிய அலைகள் ஓடி விழ- வயலில்
        மெலிந்த கடலலை ஆடி எழ
        இரட்டை எருதுகள் கால் விழ
        இங்கொரு துயர் முளை எழ

        உழவு செய்வான் விவசாயி – இந்த
        உயர் வதை செய்வான் அவன் பாவி
        எருதை வதைத்தால் உயர்ந்திடுமா – உன்
        வாழ்வில் ஏற்றம் வந்து பிறந்திடுமா ..?

        முக்கி வதங்கி மூச்சடக்கி
        முக்கால் வயிறு பசியடக்கி
        முன்னே வாயால் நுரை தள்ள
        முன்னே தன் பலம் அது தள்ள

        அரை ஏக்கர் உளவு
        அன்றைய தினம் பிளவு
        ஓய்வு என்பது ஒரு மணிதான்
        ஓல வாழ்வு அனுதினம் தான்

        மதத்தில் சைவம் என்பானே
        மாதா மாட்டை மிதிப்பானே
        இப்படி வதைகள் இவர் விதைத்தால்
        எப்படி வாழ்வில் உயர்வு வரும் …!

        வன்னி மைந்தன்
        ஆக்கம் 07-10-2021

        வன்னி மைந்தன் கவிதைகள்

          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

          நீ தமிழனா

          நீ தமிழனா

          தென் திசை பகைவர் வந்தார் – பெரும்
          செந்தமிழ் திசை எங்கும் கொன்றார்
          வண்டமிழ் எழுச்சியில் தீங்கார் – கூடி
          வழியில் பெரும் சதி செய்தார்

          விண்ணிலே ஏறி ஆடி – தமிழ்
          வீரம் உலகில் சொன்னார்
          வேள்வியை இடையிலே கொய்தார் – இந்த
          வேளையில் தமிழர் கொதித்தார்

          போரிலே வென்றிட வேண்டும்
          பெரும் பலம் ஆளணி என்றார்
          வரும் பகை வழியில் எய்தே
          வாழ்வோம் நலமுடன் என்றார்

          நீ தமிழனா

          செய் நெறி வாய்மை கேளார்
          செந்தணலாகி கொதித்தார்
          வந்தனர் பகைவர் வாயில் – இன்றோ
          வாளை சுருட்டி கொண்டார்

          எம் தமிழ் வாயே எங்கோ – இன்றே
          ஏறி பறையடி அங்கே
          வந்தனர் பகைவர் வாயில் -கை
          வாழ்த்தியே தொழுதாய் நன்றோ ..?

          முன் தினம் வீரம் எங்கே
          முரசொலி தமிழ் எங்கே
          விண் புகழ் ஏறிய வீரம்
          வீரரை கொய்தாய் நன்றோ ..?

          எம் தமிழ் மானம் இன்றோ
          எமனவன் காலில் நன்றோ
          இது தான் தமிழ் நில பண்போ
          ஏதடா நீயெல்லாம் தமிழோ ..?

          வன்னி மைந்தன்
          ஆக்கம் 06-10-2021

          வன்னி மைந்தன் கவிதைகள்

            Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

            உண்மை சொல்

            உண்மை சொல்

            மூச்சு முட்ட மூச்சு முட்ட
            முன்னே வந்து நிற்கிறாய்
            முத்தத்தாலே உன்னை தைக்க
            முன்னே ஏனோ ஊந்துறாய் ..?

            ஆலயத்தின் சாமிகளாய்
            ஆடை இன்றி நிற்பதா ..?
            இயற்கை தந்த பேரழகை
            இயமனுக்கே விற்பதா ..?

            ஆசைகளை தூண்டி விட்டு
            அருகில் வந்து இரசிக்கிறாய்
            அந்தரத்தில் தவிக்க விட்டு – ஏன்
            ஆராத்தி எடுக்கிறாய் ..?

            கலைந்து போன கூந்தலில்
            கை வைத்து போனது யார்
            கட்டி வைத்த பேரழகை
            கடத்தி இன்று விற்றது யார் ..?

            விற்பனைக்கு சந்தையில
            விண்ணிலவை வைத்தது யார் ..?
            விவரமாக சொல்லி விடு
            விசாரணைக்கு வருகிறேன் …!

            வன்னி மைந்தன்
            ஆக்கம் 05-10-2021

            வன்னி மைந்தன் கவிதைகள்

              Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

              தமிழர் வாழ இவர்கள் வருவார்களா

              தமிழர் வாழ இவர்கள் வருவார்களா

              சோழ பரம்பரை ஆண்ட கடலினுள்
              வேங்கை படை இல்லையா ?
              கரிகாலன் ஆண்ட பூமியில்
              காக்கை வன்னியரா

              கொல்லி வைத்தவன் குடிமனை புகுந்து
              கொள்கை சொல்லிடவோ
              அள்ளி வைத்தவர் ஆக்கினை புரிந்தவர்
              அரியணை ஆண்டிடவோ

              செந்தமிழ் பாடியே ஆடிய புலவர்
              செம்மண் மிதிபடவோ
              வந்தேறி ஆரியர் வழங்களை சுரண்டி – தமிழ்
              வம்சம் அழிப்பதுவோ

              கந்தக தீயில் வெந்திட இலங்கா
              கலகம் பிறந்திடுமா
              கொன்றவன் வாயிலில் கொலைகள் வீழ்ந்திட
              கொடும் பகை தகர்ந்திடுமா

              வான் படை காவியே வானில் ஏறிய
              வரி புலி வந்திடுமா ?
              வரும் தளிர் செழித்திட மொழியும் விழித்திட
              வாயில் வந்திடுமா ..?

              வன்னி மைந்தன்
              ஆக்கம் 24-09-2021

              வன்னி மைந்தன் கவிதைகள்

                Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                ஆண்கள் பெறுமை இழந்தால் -இது நடக்கும்

                ஆண்கள் பெறுமை இழந்தால் -இது நடக்கும்

                கற்புக்கு பெண் என்று சொல்லாதே
                காசிற்கு விற்கிறார் மறக்காதே
                உவமைக்கும் இவரை காட்டாதே -இந்த
                ஊத்தையில் கண்ணை வைக்காதே

                பேருக்கு ஆனாய் இருக்காதே – இந்த
                பேரிடரை பெண்ணுக்கு வழங்காதே
                தன் பசி போக்க என் செய்வாள்
                தன்னிடம் உள்ளதை விற்கிறாள்

                கற்பிற்கு விலை வைக்கும் கறையானே
                கண்ணீரை உறிஞ்சும் உதையோனே
                வெப்பத்தை தூவி போகாதே – இந்த
                வேட்கையில் பெண்ணை நீ கொல்லாதே

                பூலன் தேவியாய் ஆக்காதே – இவள்
                புலியாகி எழுவாள் மறக்காதே
                எதை வந்து சொன்னாலும் ஏற்கேனே
                ஏளன பெண்ணை மிதிப்பேனே

                சிந்திக்கும் ஆற்றலை இழந்தாளை
                சிந்தைக்குள் வைக்க முனையாதே
                பானைக்குள் புகுந்த அகப்பைகள்
                பாதியில் முறியும் மறவாதே

                ஆண்கள் பெறுமை இழந்தால் -இது நடக்கும்

                தோன்றுதல் பிறந்திட வேண்டும் என்றால்
                தோலுக்குள் புகுந்திட வேண்டும்
                அணைத்து பால் மலர்ந்திட வேண்டும் என்றால் – இந்த
                ஆகமம் நடந்திட வேண்டும்

                எதை வந்து சொன்னாலும் எற்கேனே
                இந்த இழிசாதி பெண்ணை நம்பேனே
                ஆணை கொல்லும் எமன் என்பேன்
                ஆக்கினை இந்த பெண் என்பேன்

                நூற்றுக்கு 90நூறு இழிவென்பேன்
                நுண்ணறிவில்லா மலடென்பென்
                ஆண்கள் பெறுமை இழந்துவிடின்
                அத்தனை குடும்பமும் இரண்டென்பேன் ..!

                வன்னி மைந்தன்
                ஆக்கம் 19-09-2021

                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                  எங்கள் தலைவிதி

                  எங்கள் தலைவிதி

                  இளம் காற்று பாடும் ஈழ கரையோரம்
                  இதயங்கள் நொறுங்கும் சோக துயரம்
                  எவர் செய்த சதியோ இத்துயர் கோலம்
                  எங்களின் வாழ்வில் ஏனோ இப் பாரம்

                  கரும்புகை ஏறி வானை மறைக்கும்
                  கந்த துகளில் மூச்சு உறையும்
                  வெடியோசை மண் கிளற வீழ்ந்தே இறந்தோம்
                  உடன் இருந்தார் விட்டே ஊர் ஏறி கடந்தோம்

                  வலியில் நெஞ்சு வாடி தவிக்க
                  வழி தெரியா நின்றோம்
                  உரிமை போரும் முடிவில் தவிக்க
                  உதவுவார் இன்றி ஏங்கி தவித்தோம்

                  தரணியில் நாங்கள் பிறந்தது கேடா
                  தமிழனாய் இங்கு வாழ்தல் பிழையா
                  சுதந்திரம் கேட்டோல் சூடு காடா
                  சுதந்திர தேசமே நீதி இல்லையா

                  மொத்த தமிழன் அழித்தான் உலகில் நடக்கிறான்
                  ஒட்டு துணி இல்லா தமிழன் தவிக்கிறான்
                  இத்துயரில் தினமும் எங்களின் தேசம்
                  இதயம் இல்லா நடக்கும் உலகம்..!

                  வன்னி மைந்தன்
                  ஆக்கம் 25-03-2021