மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள்
Posted in இலங்கை செய்திகள்

மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள்

மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள்

மட்டக்களப்பு – செங்கலடி சுகாதார பிரிவின் கீழ் உள்ள உணவகங்களில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற முறையில் உணவை களஞ்சியப்படுத்தி

விற்பனை செய்த 4 உணவக உரிமையாளர்களுக்கு எதிராக ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை (22) வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்களை கடுமையாக எச்சரித்து தலா ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா தண்டமாக செலுத்துமாறும் உத்தரவிட்டதுடன் கைப்பற்றப்பட்ட உணவு பொருட்களை அழிக்குமாறு நீதவான் கட்டளையிட்டார்.

இதேவேளை இந்த திடீர் சோதனை நடவடிக்கையில் மேலும் கண்டுபிடிக்கப்பட்ட சுகாதாரமற்ற முறையில் உணவுகளை விற்பனை செய்து

வந்த உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக எதிர்வரும் 26ம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பரமானந்தராசா தெரிவித்தார்

ரமழான் உணவு விழாவுக்கு எதிர்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

ரமழான் உணவு விழாவுக்கு எதிர்ப்பு

ரமழான் உணவு விழாவுக்கு எதிர்ப்பு

இந்த ஆண்டு மார்ச் 12-ம் திகதி ரமழான் நோன்பு காலம் தொடங்குவதால், பெங்களூருவில் உணவுத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த உணவுத் திருவிழாவுக்கு பிரேசர் டவுன் குடியிருப்போர்

நலச் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சங்கத்தின் சார்பில் 3,500 பேர் கையெழுத்திட்டு, புலிகேசிநகர் காங்கிரஸ் எம்எல்ஏ ஏ.சி. சீனிவாசாவிடம் மனு அளித் துள்ளனர்.

அவர்கள் தங்கள் மனுவில் கூறியிருப்பதாவது: “ரமழான் உணவுத் திருவிழா காரணமாக பிரேசர் டவுனில் 40 நாட்களுக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பணிக்குச் செல்வோர் கடும் பாதிப்புக்கு

ரமழான் உணவு விழாவுக்கு எதிர்ப்பு

ஆளாகின்றனர். கடந்த ஆண்டு உணவுத் திருவிழாவில் ஒரு கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் காயம் அடைந்தவர்களை மீட்க நோயாளர் காவு வண்டி (ஆம்புலன்ஸ்) வர முடியாத நிலை ஏற்பட்டது.

ரம்ழான் உணவுத் திருவிழாவினால் குப்பை, புகை, கழிவு நீர்போன்ற சுகாதார கேடுகள் ஏற்படுகின்றன. இங்கு இறைச்சி உணவு வகைகள் தூய்மையற்ற

முறையில் சமைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் அதனை உண்ணும் மக்கள் உடல் நலக்குறைவுக்கு ஆளாகின்றனர். எனவே ரமழான் உணவுத் திருவிழாவை பிரேசர் டவுனில் நடத்தக்கூடாது.” என தெரிவித்துள்ளனர்

உணவுப்பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

உணவுப்பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு

உணவுப்பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு

நள்ளிரவு முதல் பல வகையான உணவு வகைகளின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது, சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உணவுப்பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு

சீனியின் விலை அதிகரிப்பு காரணமாக பிளேன் டீ விலை 5 ரூபாவினாலும் பால் தேனீர் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, அரிசி, மரக்கறிகள், கோழி இறைச்சி மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக சாப்பாட்டு பொதி ஒன்றின் விலை 20 ரூபாவினாலும், கொத்து மற்றும் ஃப்ரைட் ரைஸ் விலை 20 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உணவு வண்டிகளை தாக்குவோம் இஸ்ரேல்|கமாஸ் சுரங்கங்கள் அழிப்பு|israel palestine war|isreal news
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

உணவு வண்டிகளை தாக்குவோம் இஸ்ரேல்|கமாஸ் சுரங்கங்கள் அழிப்பு|israel palestine war|isreal news


உணவு வண்டிகளை தாக்குவோம் இஸ்ரேல்|கமாஸ் சுரங்கங்கள் அழிப்பு|israel palestine war|isreal news

பலஸ்தீன மக்களுக்கு எகிப்தில் இருந்து எடுத்துவர படும் உணவு வண்டிகள் அழிக்க படும் என இஸ்ரேல் மிரட்டல் .

கமாஸ் சுரங்கங்கள் தேடி அழிப்பு ,
ஐரோப்பியர்களே பயங்கரவாதிகள் அமைச்சர் தாக்கு .

உள்ளூர் மூலிகைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் உணவுப் பொருள்
Posted in இலங்கை செய்திகள்

59% குடும்பங்கள் உணவின்றி தவிப்பு அறிக்கை

59% குடும்பங்கள் உணவின்றி தவிப்பு அறிக்கை

2022 ஆம் ஆண்டில் குறைந்து வரும் உணவு உற்பத்தி மற்றும் பணவீக்கம் காரணமாக இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐம்பத்தொன்பது (59) வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அத்துடன், “இலங்கையில் 28 சதவீதம் அல்லது 6.3 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளனர்” என்று தெரியவந்துள்ளது.

விவசாய உற்பத்தியை அதிகரிப்பது, பூச்சிகளால் ஏற்படும் பயிர் அழிவை குறைந்தபட்சமாக குறைப்பது, அறுவடைக்குப் பிந்தைய பயிர் அழிவைத் தடுப்பது மற்றும் விவசாயத் துறையில் புதுமையான முறைகளை அறிமுகப்படுத்துவது மற்றும் உணவைப் பெறுவதற்கான நம்பகத்தன்மையை அதிகரிப்பது ஆகியவை மாற்று வழிகளாக எடுத்துக்காட்டப்பட்டன.

No posts found.
Posted in இலங்கை செய்திகள்

உணவுக்குள் பூனை மலம் அதிர்ச்சியில் அதிகாரிகள்

உணவுக்குள் பூனை மலம் அதிர்ச்சியில் அதிகாரிகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் பிரிவிற்குட்பட்ட உணவகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்

போது, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவகங்களை நடத்திய 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

கடந்த 28ஆம் திகதி சுமார் 30 உணவகங்களில் பேரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தன.

உணவுக்குள் பூனை மலம் அதிர்ச்சியில் அதிகாரிகள்

இதன்போது, இராஜகிரியவில் உள்ள பிரபல உணவகத்தின் சமையல் அறையில் பூனை மலத்தை கண்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் அந்த உணவகம் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் இந்தச் சுற்றிவளைப்பில் குற்றம் சாட்டப்பட்ட எட்டு சந்தேகநபர்களும் கொழும்பு, அளுத்கடை மற்றும் கங்கொடவில நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பரிசோதனையின் போது, ​​சில கடைகளில் சமைத்த உணவுகளுடன் இறைச்சி மற்றும் மீன்


குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதை சுகாதார அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.

    இந்தியா இலங்கைக்கு வாழங்கிய பால்மா காலவாதி
    Posted in இலங்கை செய்திகள்

    இந்தியா இலங்கைக்கு வாழங்கிய பால்மா காலவாதி

    இந்தியா இலங்கைக்கு வாழங்கிய பால்மா காலவாதி

    இலங்கைக்கு தமிழக அரசு அனுப்பி வைத்த ,உணவு பொருட்களில் ,பால்மா பைகள் காலாவதியான நிலையில் உள்ளதாக, கணடறிய பட்டுள்ளது.

    குறித்த பால்மா பைகளில் ,அதன் முடியும் திகதி காணப்படவில்லை ,இதனால் அந்த பால்மா பாக்கட் காலாவதியானதாக இருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.

    எனினும் இது தொடர்பான சோதனைகள் இடம்பெற்றுள்ளது .

    அவ்வாறு காலாவதி என ஏதும் கண்டறியப்படவில்லை என்றும், இதில் திகதி பதிவிடப்படாது உள்ளமையால், பலத்த சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக ,உணவு பாதுகாப்பு ஆணையர் தெரிவித்தார் .

    மேற்படி சம்பவம் ,தமிழக அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது.

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் ஒருலட்சம் மக்கள் உணவு இன்றி தவிப்பு

      இலங்கையில் ஒருலட்சம் மக்கள் உணவு இன்றி தவிப்பு

      இலங்கையில் ஒரு இலட்சம் குடும்பங்கள் தினமும் உணவு கிடைக்காமல்

      பட்டினியில் வாடுவதாக உணவு பாதுகாப்பு குழுவின் தலைவர் கலாநிதி சுரேன் படகொட தெரிவித்துள்ளார்.

      மேலும், 75,000 குடும்பங்கள் தினசரி என்ன சாப்பிடுவது என்று தெரியாமல், உணவு நிச்சயமற்ற நிலையில் இருப்பதாகவும்,

      40,000 பேர் ‘சேலைன் ‘ மூலம் போஷாக்கை பெறுவதாகவும் அவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

      தற்போது நிலவும் நெருக்கடிக்கு உரிய தீர்வுகள் உடனடியாக வழங்கப்படாவிட்டால்


      இந்த நிலைமை மிகவும் மோசமானதாக அமையும் எனவும் படகொட மேலும் தெரிவித்துள்ளார்

        Posted in இலங்கை செய்திகள்

        உணவில் நச்சுத்தன்மை உட்கொண்ட 11 பேர் மருத்துவமனையில் அனுமதி

        உணவில் நச்சுத்தன்மை உட்கொண்ட 11 பேர் மருத்துவமனையில் அனுமதி

        இலங்கை திருகோணமலை பாலையூற்று பகுதியில் உணவை உட்கொண்ட 11 சிறார்கள் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.

        இவர்களுக்கு வழங்க பட்ட உணவில் நச்சுத்தன்மை காணப்படத்தினால் உணவு ஒவ்வாமை காரணமாக வாந்தி ,சத்தி தலைசுற்று என்பனவற்றுக்கு ஆளான நிலையில் 11 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.

        குறித்த உணவை தயாரித்தவர்கள மீது பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

        உணவில் நச்சு தண்மை ஏற்பட காலாவதியான உணவுகளை சமையல் செய்து இருக்கலாம் என நம்ப படுகிறது.


        சமைத்த உணவில் ஏற்பட்ட நச்சு தன்மையால் அதனை உட்கொண்ட சிறார்கள் சுகவீனமுற்றது தொடர்ப்பிலான பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்து ஆரம்பிக்க பட்டுள்ளன.

          Posted in மருத்துவம்

          உப்பை உணவில் அதிகம் சேர்த்தால் ஆயூள் குறைகிறது

          உப்பை உணவில் அதிகம் சேர்த்தால் ஆயூள் குறைகிறது

          உலகளாவிய ரீதியில் மக்கள் அதிகம் உப்பை உணவில் சுவைக்காக சேர்த்து வருகின்றனர் .


          இந்த உப்பை உணவில் அதிகம் சேர்ப்பதால் அதிக இரத்த அழுத்தம் ஏற்படுகிறது .

          இதுவே இதயத்தை பாதிக்கிறது .இதனால் உடல் நிலை கெட்டுப்போகிறது .

          உணவில் அதிக உப்பை சேர்ப்பதால் வாயுக்கு சுவையாக உணவுகள் கிடைக்கலாம் .

          ஆனால் நமது வாழ்வின் வாழும் ஆண்டு சுருங்கி விடுகிறது என்ற அபாயகர ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.

          ஐந்து லட்சம் மக்கள் மத்தியில் நடத்த பட்ட ஆய்வில் அதிகம் உப்பை உணவில் சேர்த்து கொள்ளும் ஆண் பெண்களில் பெண்கள் ஒன்றரை வருடம் ஆயுளை குறைத்து கொள்கின்றனர் .


          அதுவே ஆண்கள் இரண்டரை வருட ஆயூளை குறைத்து கொள்ளும் நிலை கண்டு பிடிக்க பட்டுள்ளது.

          மேலும் உப்பை அதிகம் உண்கின்ற மக்கள் அகால மரணத்தை அதிகம் சம்பாதித்து கொள்கின்றனர்.

          இதயத்தின் அளவு அதிகம் வழமைக்கு மீறி துடித்து விடுகிறது .இதனால் இரத்த அழுத்தம் ஏற்பட்டு இந்த உயிராபத்து உப்பால் இடம்பெறுகிறது.

          இரத்த அழுத்தம் ஏற்பட்டால் அவை மாரடைப்பை ஏற்படுத்தும் .ஆக உப்பை சுவைக்கு அதிகம் சேர்ப்பதால் உங்கள் உடல் நிலைக்கு நீங்களே கேடு விளைவித்து கொள்கின்றீர்கள் .

          அதனால் உணவில் உப்பை குறைப்போம் உடலை ஆரோக்கியமாக பாதுகாப்பபோம் .

          Error: View 6f7d65ec2l may not exist
          Posted in மருத்துவம்

          உணவு ஒவ்வாமை FOOD ALLERGY எவ்வாறு தடுப்பது

          உணவு ஒவ்வாமை FOOD ALLERGY எவ்வாறு தடுப்பது

          மக்கள் நாள் தோறும் உண்ணும் உணவுகளில் உணவு ஒவ்வாமை தன்மை காணப்படுகிறது .


          இந்த உணவு ஒவ்வாமை என்பதை எவ்வாறு தடுக்கலாம் என்பதை இங்கே கவனியுங்கள்.

          மக்களுக்கு அழற்சி ஓவ்வாமை ஏற்பட காரணம் என்ன ..? அதனை எவ்வாறு தடுக்கலாம் அல்லது தவிர்க்கலாம் என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்.

          உணவு ஒவ்வாமை FOOD ALLERGY எவ்வாறு தடுப்பது

          இந்த ஒவ்வாமை என்பது தோள்கள் மூலமே வெளிப்படும் ,அது எவ்வாறு தென்படுகிறது என்பதை பார்க்கலாம் .

          உணவு ஒவ்வாமை என்பது சக்தி ,வயிற்றோட்டம் மற்றும் தோல்களில் ஏற்படும் மாற்றங்கள் ஊடாக அவதானிக்க முடியும்.

          எந்த உணவுகளை நாம் உண்னக் கூடாது என்கிறார்கள் என்றால் ,நண்டு றால கச்சான் ,பால் முட்டை அண்ணாசி பழம் போன்றவற்றுக்கு அதிகமாக காணப்படும் .


          அப்படி என்றால் இதனை எவ்வாறு தடுக்கலாம் என்பதை நீங்கள் புரிந்து இருப்பீர்கள்.

          சரி வாருங்கள் நம்மவர் கூடும் இந்த மருத்துவ குறிப்பை காதில் போட்டு கொள்வோம் வாருங்கள்.

          Posted in இலங்கை செய்திகள்

          சாப்பாட்டு விலைகள் அதிகரிப்பு

          சாப்பாட்டு விலைகள் அதிகரிப்பு

          இலங்கையில் சாப்பாட்டு விலைகள் அதிகரிக்க படவுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .


          தொடர்ந்து இலங்கையில் உணவு பொருட்களின் விலை அதிகரித்து

          செல்வதால் மக்கள் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்

          மக்கள் வருமானம் இன்றி வாடும் நிலையில் உணவு பொருட்கள் விலை

          மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை


          அதிகரிக்க பட்டுள்ள செயல் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

            Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

            உணவு பஞ்சம் ஏற்படும் ஐநா ஏச்சரிக்கை

            உணவு பஞ்சம் ஏற்படும் ஐநா ஏச்சரிக்கை

            உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள போரினால் உலகில் உணவு பஞ்சம் ஏற்படும் என ஐநா எச்சரிக்கை வெளியிட்டுள்ளது


            உக்கிரேனில் இருந்து அதிக உணவு மற்றும் ஒயில் வகைகள் ரசியாவிடம் இருந்து தானிய வகைகளும் ஐரோப்பா முதல் உலக எங்கும் இறக்குமதி செய்ய படுகின்றன

            இந்த ஒயில் உக்கிரேன் துறைமுகத்தில் தேங்கி கிடக்கிறது எனவும் அதனை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திட முடியா நிலையில் ரசியா போரினை தொடுத்து வருவதால் உணவு பஞ்சம் ஏற்படும் ஐநா கவலை வெளியிட்டுள்ளது

            ஒயில் உணவு இறக்குமதி தடை பட்டால் ஐரோப்பாவில் உள்ள பல உணவகங்கள் அடித்து பூட்டும் நிலை ஏற்பட போவதாக இவர்கள் மத்தியில் அச்சம் காணப்படுகிறது

            உக்கிரேன் மீதான போர்நிறுத்த படாவிட்டால் உலகலாவிய ரீதியில் பெரும் உணவு பஞ்சம் ஏற்பட்டு அதுவே பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது ஐநா வாதமாக உள்ளது


            முடிவில்லா மேலும் போர் நீண்டு தொடர்ந்தால் எதிர் வரும் மூன்று மாதத்திற்குள் உணவு பஞ்சம் ஏற்படும் என அவர்கள் வெளியிட்ட கவலை மெய்ப்பிக்கும் நிலை ஏற்பட்டு விடும்


            உக்கிரேன் மீதான போரினை முடிவுக்கு கொண்டுவர ரசியாவின் நேச நாடுகல் ஐநா உள்ளிட்ட, அமெரிக்காவும் அழுத்தம் கொடுத்து வருகின்றன

            உணவு பஞ்சம் ஏற்படும் ஐநா ஏச்சரிக்கை

            ஆனால் ரசியா ஜனாதிபதி பிளாடீர் மீர் புட்டீனோ உகிரேனை ஆக்கிரமிக்காமல் விடுவதில்லை என்ற நிலையோடு கட்டளைகளை பிறப்பித்த வண்ணம் உள்ளார்

            உலகளவில் உணவின் விலை உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது, ஐநா விடுத்துள்ள உணவு பஞ்ச அபாய எச்சரிக்கையின் பின்னர் உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது

            உலக மக்கள் உணவின்றி பட்டினியால் மரணிக்கும் நிலை ஏற்பட்டால், உலக நாடுகள் ஒன்றிணைந்து போரை தொடுக்க வேண்டிய கடினமான காலம் ஒன்று உருவாகும் என்பதாக கணிக்க பெறுகிறது

            அவ்வாறு இடம்பெற்றால் அதுவே மூன்றாம் உலக யுத்தமாக மாற்றம் பெற்றுவிடும் அபாயம் எழுந்துள்ளது

            உணவு பஞ்சம்
            இலங்கையில் உணவு பஞ்சம் தற்போது ஆரம்பிக்க பட்டுள்ளது, அதுபோலவே ஐரோப்பாவிலும் எரிவாயு மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டால், மக்கள் குளிரில் நடுங்கி இறக்கும் நிலை ஏற்பட்டு விடும் என்பதை களநிலவரமாக உள்ளது

            குளிர்வலய நாடுகளில் வசிக்கும் மக்களே பெரிதும் பாதிக்க படும் நிலை ஏற்படும் என்பதே ஆய்வாளர்களின் அச்சமாக உள்ளது

            உணவு உற்பத்தியில் முன்னிலை வகித்து அதிக ஏற்றுமதியை தன்னகத்தே வைத்திருக்கும் உக்கிரேன் ரசியா மோதல் உலக நாடுகள் வரை பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது


            விரைந்து ரசியா உக்கிரேன் போரை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் எனின் ரசிய கூறும் ஆயுத விநியோகிப்பை பிரிட்டன் அமெரிக்கா நாடுகள் உடன் நிறுத்த வேண்டும்

            அதற்கு அமெரிக்கா பிரிட்டன் சம்மதிக்குமா ..? உணவா போரா அமெரிக்கா பிரிட்டன் காலில் பந்தை அடித்து விட்டுள்ளது ரசியா ,இது தான் மக்களே கள யதார்த்த நிலை .

            • வன்னி மைந்தன் –
            Posted in மருத்துவம்

            விரைவில் கர்ப்பமாவதற்கு உதவும் காய்கறிகள், பழங்கள்

            விரைவில் கர்ப்பமாவதற்கு உதவும் காய்கறிகள், பழங்கள்

            பெண்கள் கர்ப்பமாவதற்கு ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து வளமையாக உள்ள பச்சை இலை காய்கறிகள், பழங்கள் சிறந்த உணவாக விளங்கும்.

            முட்டைக்கோஸ் மலட்டுத்தன்மை பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக உதவிடும். அதற்கு காரணம் அதிலுள்ள டி-இண்டோல் மீதேன் என்ற ரசாயனம். இது ஈஸ்ட்ரோஜன்

            மெட்டபாலிசத்தில் முக்கிய பங்கை வகிப்பதால், நார்த்திசுக்கட்டிகள் மற்றும் இடமகல் கருப்பை அகப்படலம் போன்றவைகள் உருவாகாமல் தடுக்கப்படும்.

            ப்ராக்கோலி

            கர்ப்பமாக திட்டமிடும் பெண்களுக்கு அருமையான உணவாக விளங்குகிறது. அதிலுள்ள ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து மற்றும் இதர அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களும் அதனை ஒரு முழுமையான உணவாக மாற்றுகிறது.

            கருமுட்டையை முதிர்ச்சியடைய செய்யவும், கருமுட்டை வெளிப்படுதல் செயல்முறைக்கும், கருப்பைகளுக்கு தேவையான வைட்டமின் சி-யும் இதில் அளவுக்கு அதிகமாக உள்ளது.

            உருளைக்கிழங்கு

            உருளைக்கிழங்கு கர்ப்பமாக திட்டமிடும் ஒவ்வொரு பெண்ணும் அவித்த உருளைக்கிழங்கை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

            உருளைக்கிழங்கில் உள்ள வைட்டமின் பி மற்றும் ஈ, அணுக்கள் பிரிவை அதிகரிக்க உதவும். இதனால் பெண் கருவில் உருவாகும் சினை முட்டை ஆரோக்கியமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

            மாதுளை

            மாதுளையில் உள்ள பல வித உடல் நல பயன்களை தவிர, இரண்டு பாலினருக்கும் லிபிடோவை ஊக்கப்படுத்தவும் உதவுகிறது.

            வாழைப்பழம்

            சீரான மாதவிடாய் சுழற்சியில் உள்ள பெண்களுக்கு மலட்டுத்தன்மை இடர்பாடும் கர்ப்ப சிக்கல்களும் குறைவாகவே இருக்கும். அதனால் கர்ப்பமாக திட்டமிடும்

            விரைவில் கர்ப்பமாவதற்கு உதவும் காய்கறிகள், பழங்கள்

            பெண்கள் வாழைப்பழங்கள் உண்ண வேண்டும். அதற்கு காரணம் அதிலுள்ள அளவுக்கு அதிகமான வைட்டமின் பி6. சீரான மாதவிடாய் சுழற்சிக்கு இந்த வைட்டமின் அதிமுக்கிய ஒன்றாகும். இதனால் கருவுறும் தன்மையும் மேம்படும்.

            அன்னாசிப்பழம்

            அன்னாசிப்பழத்தில் அளவுக்கு அதிகமான மாங்கனீசு உள்ளது. பல வித இனப்பெருக்க ஹார்மோன்கள் சுரப்பதற்கு இந்த கனிமம் முக்கிய பங்கை வகிக்கிறது. கூடுதலாக,

            உடலில் மாங்கனீசு அளவுகள் குறைவாக இருப்பதற்கும் மலட்டுத்தன்மைக்கும் தொடர்பு உள்ளது.

            முட்டை

            முட்டைகள் கருவுறும் தன்மைக்கு சந்தேகமே இல்லாமல் சிறந்த உணவாக விளங்குகிறது. முட்டையில் கோலின், ஃபோலிக், ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் மற்றும்

            வைட்டமின் டி வளமையாக உள்ளதால், கர்ப்பமாக திட்டமிடும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இது முழுமையான உணவாக விளங்கும்.

            மஞ்சள்

            சமைக்கும் போதெல்லாம் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்ளுங்கள். இது சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, ஆரோக்கியமான கர்ப்பத்தையும் மேம்படுத்தும்.

            இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளதால், கருவுறும் தன்மையை
            ஊக்குவிக்கும் சக்தி இந்த அதிசய மசாலாவிற்கு இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது.

              Posted in மருத்துவம்

              தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

              தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

              நிலத்தில் அமர்ந்து சாப்பிட்டு, எந்த ஒரு உதவியும் இல்லாமல் எழுந்து நிற்பவர்களுக்கு ஆயுள் அதிகமாவதை ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

              தரையில் அமர்ந்து சாப்பிடுவது, சாதாரண விஷயமாக இருந்தாலும் அதில் பல நன்மைகள் அடங்கியுள்ளன. இரண்டு கால்களையும் மடக்கி, தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் எத்தகைய பலன்களை பெற முடியும் என்று இங்கே காணலாம்:

              1) வழக்கமாக தரையில் அமரும்போது இரண்டு கால்களையும் மடக்கி அமர்வது ‘சுகாசனம்’ எனப்படும் யோகப் பயிற்சியாகும். இந்த நிலை செரிமானத்திற்கு

              உதவுகிறது. தரையில் அமர்ந்து சாப்பிடும்போது உணவு எடுப்பதற்கு நாம் முன்னால் செல்லுவோம். உணவு எடுத்த பிறகு பின்னால் வருவோம். இந்த செயல்பாட்டால் வயிற்றில் உள்ள தசைகள் செயல்பட்டு எளிமையான செரிமானத்திற்கு வழிவகுக்கிறது.

              2) தரையில் அமர்ந்து சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. டேபிளில் அமர்வதை விட, தரையில் அமரும்போது, வேகஸ் எனும் நரம்பு (மூளைக்கு தகவல்

              அனுப்பும் நரம்பு) சுறுசுறுப்பாக செயல்படுகிறது. இதனால் வயிறு நிறைந்தவுடன் உடனடியாக தகவலை மூளைக்கு அனுப்புகிறது. அதிகமாக சாப்பிடுவது தவிர்க்கப்பட்டு உடல் எடை சீராகிறது.

              தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

              3) தரையில் அமர்வது இன்னொரு ஆசனமான பத்மாசனத்துடன் தொடர்புடையது. இதன் மூலம் வயிற்றுப் பகுதியைச் சுற்றியுள்ள தசைகள் அனைத்தும் விரிவடைந்து

              உடம்பில் உள்ள வலிகளை குறைக்கிறது. தரையில் அமர்ந்து உணவு சாப்பிடும் பொழுது உடல் தசைகள் நன்றாக செயல்பட்டு நெகிழ்வுத்தன்மையை கொடுக்கிறது.

              4) அமைதியான மனநிலையும், செய்யும் காரியத்தில் கவனத்தைச் செலுத்தவும், சிறந்த முடிவுகளை எடுக்கவும், உணவின் சுவை, நறுமணம் முதலிய அனைத்தையும் கவனிக்க உதவுகிறது. இதனால் மறைமுகமாக நினைவாற்றலையும் அதிகரிக்கிறது.

              5) பரபரப்பான வாழ்க்கை முறையில் குடும்பத்துக்காக நேரம் ஒதுக்குவது சாப்பிடும்போது மட்டும்தான். குடும்பத்துடன் ஒன்றாக தரையில் அமர்ந்து சாப்பிடும் போது, மன நிம்மதி ஏற்பட்டு உறவை மேம்படுத்த முடியும்.

              6) ஆரோக்கியமான வாழ்விற்கு தோரணை மிகவும் முக்கியமானதாகும். தரையில் அமரும்போது நமது முதுகுத்தண்டு நேராக இருந்து கம்பீரமான தோரணையை

              ஏற்படுத்துகிறது. இதனால் தோள் பட்டையில் உள்ள வலிகள் குறைந்து, தசைகள் வலுவடைவதற்கு உந்து சக்தியாகவும், நரம்பு மண்டலத்தை சீரமைக்கவும் உதவுகிறது.

              7) தரையில் அமர்ந்து சாப்பிட்டு, எந்த ஒரு உதவியும் இல்லாமல் எழுந்து நிற்பவர்களுக்கு ஆயுள் அதிகமாவதை ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

              ஆகவே, ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும், நமது ஆயுள் அதிகரிப்பதற்கும் தரையில் அமர்ந்து சாப்பிடுவது ஒரு எளிய பயிற்சியாகும்.

              8) தொடர்ச்சியாக முட்டிகளை மடக்கி அமர்வதனால் மூட்டுகளுக்கும், இடுப்பு பகுதியில் உள்ள எலும்புகளுக்கும் உறுதி கிடைக்கிறது. மேல்வாதம் மற்றும் கீழ்வாதம்

              முதலியவற்றை தடுக்கிறது. தரையில் அமர்ந்து சாப்பிடுவதனால் இது மூட்டுகளை எளிதாக இயங்கச் செய்கிறது.


              தரையில் அமர்ந்து சாப்பிடுவது ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் ஒரு எளிய பயிற்சியே.

                Posted in இலங்கை செய்திகள்

                மூன்று மாதத்தில் இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் – அபாய எச்சரிக்கை

                மூன்று மாதத்தில் இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் – அபாய எச்சரிக்கை

                இலங்கையில் எதிர் வரும் மூன்று மாதத்திற்குள் நாடெங்கும் . உணவு பற்றாக்குறை

                ஏற்பட்டு ,உணவு பஞ்சம் ஏற்படும் எனவும் ,இதனால் பல ஆயிரம் மக்கள் பட்டியணியால் தவிக்கும் நிலை ஏற்பட போகிறது என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

                மத்திய வங்கியின் கயானாவை காலி செய்த, பசில் தலைமையிலான குழுவினரின்

                செயல் பாட்டினால் இவ்விம்மன நெருக்கடிக்குள் இலங்கை சிக்கியுள்ளது

                தற்கால நெருக்கடி நிலை தொடர்ந்து பயணித்தால் ,இலங்கை சோமாலிய போன்ற நாடாக மாற்றம் பெறும்
                என எதிர் பார்க்க படுகிறது

                  Posted in இலங்கை செய்திகள்

                  இலங்கைத் தமிழர்களுக்குத் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு

                  இலங்கைத் தமிழர்களுக்குத் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு உரிய வசதியை செய்து தருமாறும், யாழ்ப்பாணம் சிறையில்

                  அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்குத் தேவையான சட்டப்பூர்வ உதவிகளை மேற்கொள்ளுமாறும் கோரி இந்திய வெளியுறவுத் துறை

                  அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
                  இலங்கையில் தற்போது நிலவும் மோசமான பொருளாதார நிலைமையைக் கருத்தில்

                  கொண்டு விரைவில் பொருட்களை அனுப்புவதற்கான வசதியை செய்து தருமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.​


                  இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் பதில் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப்

                  பொருட்கள் வழங்க அனுமதி அளிக்கப்படுவதாகவும், பொருட்களை மத்திய அரசு மூலம் அனுப்பலாம் என்றும் கூறி உள்ளார்.


                  தமிழக அரசு விரும்பினால் இலங்கையில் பொருட்களை விநியோகம் செய்யும் பணிகளை ஒருங்கிணைக்க


                  தலைமைச் செயலாளரை அனுப்பி வைக்கலாம் என்றும் ஜெய்சங்கர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

                    Posted in மருத்துவம்

                    வெண் புள்ளியிலிருந்து விடுதலை

                    வெண் புள்ளியிலிருந்து விடுதலை


                    வெண்புள்ளிகள் சருமத்தில் தோன்றுவதை தொழுநோயாக கருதுவது தவறு. தென்னிந்தியர்கள் இந்த நோயைபற்றி போதுமான அளவில் தகவல் பெற்றிருக்கவில்லை.

                    வெண் புள்ளியிலிருந்து விடுதலை தரும் வைத்தியம்
                    வெண்புள்ளி நோய்


                    மனித இனத்தை பாதித்து வருகின்ற பல நோய்களில் தோலின் மேற்பகுதியில் ஏற்படும் வெண் புள்ளிகளையும் சேர்க்கலாம். மேலை நாட்டு மருத்துவத்தில் இந்தக்

                    குறைபாட்டிற்கு நிவாரணியில்லை. ஆனால் தொன்றுதொட்டு மனிதர்களை பாதித்து வரும் வெண் புள்ளிகளுக்கு ஆயுர்வேதத்தில் மருந்து உள்ளது.

                    சரக் வைத்தியர் என்பவர் தான் இந்த நோய்க்கு முதல் முதலாக மருத்துவத்தை கொண்டு வந்தார். ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்த நோய்க்கு ஆயுர்வேதம்

                    அரியதொரு தீர்வை தந்திருக்கிறது. இந்த நோய் பாதித்தவர்கள் பலரும் முழுமையாக குணமடைந்து விட்டார்கள். பலர் குணமடைந்து வருகிறார்கள்.

                    குடியாத்தம் அருகே உள்ள பாக்கம் கிராமத்தைச்சேர்ந்த வைத்தியர் ரமேஷ் நாயுடு தன்னுடைய வைத்தியத்தால் 28 ஆண்டுகளுக்கு மேலாக வெண்புள்ளிகளுக்குச்

                    சிகிச்சை அளித்து வருகிறார். இவரின் வைத்தியம் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் குணமாகி உள்ளனர்.

                    இந்த நோயின் அடிப்படை காரணம் என்ன?

                    நமது உடலில் வைட்டமின் பி, ஹீமோகுளோபின், ரத்தம் இவை போதுமான அளவில் இல்லாதபோது இந்த நோய் தாக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த நோய் எந்த

                    வயதினரையும் தாக்கலாம். இந்த நோய் குணமாவதற்கு காலக்கெடு எதுவும் இல்லை. குணமாவது நோயாளியின் வயது, நோயின் தீவிரம், உடல்நிலை மாறுபாடு,

                    மனஅழுத்தம் என்ற பல அம்சங்களை சார்ந்தது. கபம், பித்தம், வாதம் ஆகியவற்றில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை பொறுத்து நோயின் நிலை மாறுபடும். இந்த மாற்றங்கள்

                    சமன்பாட்டில் இருக்க வேண்டும். இவை ஏறுமுகமாக இருக்குமாயின் சருமத்தில் வெண் புள்ளிகள் தோன்றுகின்றன.

                    உணவில் மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் இந்த வெண்புள்ளிகளை குணப்படுத்த முடியுமா?

                    வெண் புள்ளியிலிருந்து விடுதலை

                    கொய்யா, ஆரஞ்சு பழங்கள் உண்ணுவதை குறைக்க வேண்டும். மேலும் ஸ்வீட் லைம், கருப்பு திராட்சை,

                    பச்சை வாழைப்பழம், முள்ளங்கி, பூசணிக்காய், மீன், கோழிக்கறி, முட்டை, உளுத்தம் பருப்பில் தயாரிக்கப்பட்ட பதார்த்தங்கள், புளி இவைகளை முடிந்த

                    அளவிற்கு நமது உணவு பட்டியலில் இருந்து குறைக்க வேண்டும். வெங்காயம், தக்காளி, சிவப்பு மிளகாய் ஆகியவற்றை வேகவைத்து

                    சேர்க்க வேண்டிய உணவு

                    உணவில் சேர்க்க வேண்டும். செவ்வாழை, மாதுளம்பழம், பப்பாளி, பொன்னாங்கன்னி கீரை, வெந்தயம், சுரைக்காய், கருப்பு

                    மூக்கடலை, வாழைத்தண்டு, வாழைப் பூ ஆகியவற்றை போதுமான அளவு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வைத்தியர் ரமேஷ்நாயுடு சொந்தமாக மருந்து

                    தயாரிக்கிறார். இந்த மருந்து 24 மணி நேரத்திற்குள் மாறுபாட்டை கொண்டு வரும். வைத்தியர் ரமேஷ்நாயுடு இந்த மருத்துவ சேவையில் கடந்த 27 ஆண்டு காலமாக ஈடுபட்டிருக்கிறார்.

                    வெண்புள்ளிகள் சருமத்தில் தோன்றுவதை தொழுநோயாக கருதுவது தவறு. இது தொடர் சிகிச்சையால் குணமாகும் தன்மை உடையது.


                    தென்னிந்தியர்கள் இந்த நோயைபற்றி போதுமான அளவில் தகவல் பெற்றிருக்கவில்லை. இது பரம்பரை நோய் அல்ல.


                    நூறில் ஒருவருக்குத்தான் இந்த நோயின் பாதிப்பு இருக்கிறது
                    . அலோபதி மருத்துவத்தில் இந்த நோய்க்கு இதுவரையிலும் மருந்து கண்டு பிடிக்கவில்லை.


                    ஆயுர்வேதம் ஒன்றுதான் இந்த நோயை குணப்படுத்தும்.

                      Posted in மருத்துவம்

                      பிளாஸ்டிக் டப்பாவில் சூடான உணவை சாப்பிடலாமா?

                      பிளாஸ்டிக் டப்பாவில் சூடான உணவை சாப்பிடலாமா?
                      பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனப் பொருட்கள் உணவுப் பொருட்களில் கலந்து உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதை பலரும் கவனத்தில் கொள்வதில்லை.

                      பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடியவை என்றாலும் அவை பல்வேறு நோக்கங்களுக்காக பயன்பாட்டில் இருக்கத்தான் செய்கின்றன.

                      நிறைய பேர் உணவு பொருட்களை பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்துத்தான் உபயோகப்படுத்துகிறார்கள்.

                      சூடான உணவு பொருட்களையும் பிளாஸ்டிக் கொள்கலன்களில் அடைத்து வைத்து சாப்பிடவும் செய்கிறார்கள். பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனப் பொருட்கள் உணவுப்

                      பொருட்களில் கலந்து உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதை பலரும் கவனத்தில் கொள்வதில்லை.

                      1. ஹார்மோன் வளர்ச்சியை சீர்குலைக்கும்:

                      ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, பிளாஸ்டிக் பொருட்களில் டைதைல் ஹெக்ஸைல் பித்தலேட் எனப்படும் சேர்மங்கள் உள்ளன.

                      இவை புற்றுநோய்க்கு வழிவகுக்கக்கூடியவை. மேலும் ஹார்மோன் செயல்பாடுகளை

                      சீர்குலைக்கக்கூடியவை. பிளாஸ்டிக் பாத்திரங்களில் சாப்பிடுவதால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் மற்றொரு ஹார்மோன், தைராய்டு ஹார்மோனாகும். இது

                      படிப்படியாக தைராய்டு பாதிப்புக்கு வழிவகுத்துவிடும். பாலியல் ஹார்மோன் செயல்பாடுகளும் பாதிப்புக்குள்ளாகும். குறிப்பாக விந்தணு உற்பத்தியை சீர்குலைத்துவிடும்.

                      1. சிறுநீரக கற்கள்:

                      பிளாஸ்டிக் கொள்கலனில் சூடான உணவை சேமித்துவைத்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதனை சூழ்ந்திருக்கும் வெப்பநிலை

                      உணவில் உள்ள மெலமைனின் அளவை அதிகரிக்க செய்துவிடும். இது சிறுநீர் கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகப்படுத்திவிடும்.

                      குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். எனவே சூடான உணவு

                      வகைகளை பிளாஸ்டிக் பொருட்களில் அடைப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக பீங்கான், எக்கு அல்லது கண்ணாடி பாத்திரங்களை பயன்படுத்தலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

                      1. மார்பக புற்றுநோய்:

                      பிளாஸ்டிக் டப்பாவில் சூடான உணவை சாப்பிடலாமா?

                      மார்பகப் புற்றுநோய் அதிகரிப்பதற்கு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடும் முக்கிய காரணமாகும். ஹார்வர்ட் ஹெல்த்கேர் இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வின்படி,

                      கடந்த 10 ஆண்டுகளில் மார்பகப் புற்றுநோய் 37 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு தினசரி

                      புழக்கத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துக்கொண்டிருப்பதே காரணமாகும். பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவு அல்லது தண்ணீரை சேமித்து வைக்கும்போது

                      அதிலிருக்கும் நச்சுக்கள் வெளியேறும். அது உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதித்துவிடும். குறிப்பாக அதிலிருக்கும் டையாக்சின் மார்பக புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடியது.

                      1. கல்லீரல் புற்றுநோய்:

                      நோய் பாதிப்பை ஏற்படுத்தும் மற்றொரு ரசாயன பொருள், பித்தலேட்ஸ். இது சாக்லெட்டுகள், இனிப்புகள் மற்றும் பிற உணவுப் பொருட்களின் வெளிப்புற கவர்கள் (ரேப்பர்கள்) தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. இது உணவு பொருளுடன் வினை

                      புரிந்து கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். கல்லீரல் புற்றுநோய்க்கும் வழிவகுத்துவிடும். விந்தணுக்களின் எண்ணிக்கையையும் குறைத்துவிடும். ஆண்களின்

                      ஹார்மோன் அளவும் பாதிப்படையக்கூடும். பெரும்பாலும் பிளாஸ்டிக் பாட்டில்கள் அல்லது பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்களில் உள்ள தண்ணீரை குடிப்பதால் கல்லீரல் புற்றுநோய் உண்டாகக்கூடும்.

                      1. நோய் அபாயத்தை அதிகரிக்கும்:

                      ஊட்டச்சத்து நிபுணரின் கருத்து படி, பிளாஸ்டிக் பாத்திரங்களில் சூடான உணவை

                      உட்கொள்வது அல்லது உணவை சூடாக்க பிளாஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்துவது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் பிளாஸ்டிக்கில்

                      பைபினைல் ஏ உள்ளது. இது உடல் பருமன், நீரிழிவு, புற்றுநோய், ஆஸ்துமா, கருத்தரிப்பில் சிக்கல் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும். மேலும் பெண்களுக்கு

                      பருவமடைதல் தொடர்பான சில உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.
                      மேலும் பிளாஸ்டிக் பயன்பாடு நரம்பியல் சார்ந்த பிரச்சினைகளையும் உண்டாக்கும்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கையில் உணவு தட்டு பாடு ஏற்படலாம் – அபாய எச்சரிக்கை

                        இலங்கையில் உணவு தட்டு பாடு ஏற்படலாம் – அபாய எச்சரிக்கை

                        இலங்கையில் உணவு தட்டு பாடு ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது ,நாடு முழுதாக முடக்க

                        பட்டுள்ள நிலையில் மக்கள் தொழில் வாய்ப்பு இன்றி உள்ள நிலையிலும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                        விரைந்து வரும் நாட்களில் இந்த நிலைகளை அவதானிக்க முடியும் என எதிர்வு கூற பட்டுள்ளது ,ஆனால் அரசோ அவ்வாறு ஏற்படாது என அறிவித்துள்ளமை இங்கே குறிப்பிட்ட தக்கது