Posted in மருத்துவம்

உணவுகள் ஏற்படுத்தும் விளைவுகள்

உணவுகள் ஏற்படுத்தும் விளைவுகள்

செரிக்க கடினமான, கனமான உணவுப் பொருட்களை, செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் உணவுகளை அரை வயிறு உண்டுவிட்டு நிறுத்திவிட வேண்டும்.

அஜீரண உணவுகள் ஏற்படுத்தும் விளைவுகள்


பழைய காலங்களில் சாதாரண நாட்களில் இனிப்பு, கார வகைகள், நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது வழக்கமாக இருந்ததில்லை.

என்றைக்காவது வரும் பண்டிகை நாட்களில்தான் இட்லி, தோசையே கிடைத்து வந்தது. ஆனால் இன்றைக்கு தடுக்கி விழுந்தால் ஒரு நொறுக்குத்தீனி

கடையில் முட்டும் அளவுக்கு கடைகள் பெருகிவிட்டன. நொறுக்குத்தீனி உண்பதும் கட்டுப்பாடு இல்லாமல் பெருகிவிட்டது.

ஏன் எல்லா நாட்களிலும் அளவுடன் உண்ண வேண்டும் என்பதை ஆயுர்வேதம் மாத்ராதீசியம் என்ற பெயரில் விளக்குகிறது. தக்க முறைப்படி உண்பதுதான்

மாத்திரை. அளவை குறைத்தோ, கூட்டியோ உண்ணக் கூடாது. அஜீரணத்தை ஏற்படுத்தும் உணவை பற்றி நினைக்கவும் கூடாது; நன்மை பயக்கும் உணவையும், கெட்ட உணவையும் சேர்த்து உண்ணக் கூடாது;

ஒரு முறை சாப்பிட்ட உணவு செரிமானம் அடைவதற்கு முன்பு உண்ணக் கூடாது.

உணவின் அளவை பொறுத்து உடலில் இருக்கின்ற ஜடாராக்னி வேலை செய்கிறது. ஒருவருடைய செரிக்கும் சக்தியான அக்னியின் பலத்தை பொறுத்து, உணவின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது.

எந்த அளவு உணவு இயற்கையாக உடலை கெடுக்காமல், உரிய காலத்தில் ஜீரணமாகிறதோ அது ஒருவருக்கு தேவையான உணவாகும். அக்னியின் தன்மைக்கேற்ப உணவை உண்ண வேண்டும்.

அக்னியின் பலத்தை பொறுத்தே, மனிதனின் பலம் உருவாகிறது. அதன் அடிப்படையிலேயே நம்முடைய செயல்பாடுகள், வேலைகள் அமைகின்றன. செரிக்க கடினமான, கனமான உணவுப்

பொருட்களை, செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் உணவுகளை அரை வயிறு உண்டுவிட்டு நிறுத்திவிட வேண்டும்.

இலகுவான உணவுப் பொருட்களை சற்று கூடுதலாக சாப்பிடலாம். உண்ட உணவு, தக்க காலத்தில் தீங்கு செய்யாமல் செரிக்க வேண்டும்.

உணவின் அளவை மிகவும் குறைத்து உண்டால் உடலின் பலமும், பொலிவும் குறையும், வாத நோய்கள் உண்டாகும். உண்ட உணவு செரிக்காமல், வாந்தி ஆகாமல், மலம் ஆகாமல் மந்தமாக

உடலில் தங்கி இருக்கும். சில நேரங்களில் வயிற்றை ஊசியால் குத்துவது போன்று காணப்படலாம். வயிற்று வலி, வயிற்று பொருமல்,

தலைவலி, தலைச்சுற்றல், விரைப்பு, வாந்தி, சளி உருவாதல் போன்றவை காணப்படும். பலம் குறையும், இவற்றுக்கு `ஆமம்’ என்று பெயர்.

தகாத உணவை, கூடாத உணவை அளவுக்கு அதிகமாக உண்டால் அது விஷத்தன்மை பெறும். பழைய காலத்தில் இப்படிப்பட்டவர்களுக்கு வசம்பு, இந்துப்பு ஆகியவற்றைக்

கொடுத்து வாந்தி வரச் செய்வார்கள். இலகுவான அரிசி கஞ்சியைக் கொடுப்பார்கள். அஜீரண நிலையில் மருந்து

உணவுகள் ஏற்படுத்தும் விளைவுகள்

கொடுக்க மாட்டார்கள், தானாக உபவாசம் இருந்து செரிக்க விடுவார்கள். பிறகு செரிப்பதற்கான மருந்துகளைக் கொடுப்பார்கள். இந்த செமிக்காத உணவு எந்த நிலையில் இருக்கிறது என்பதை

பொறுத்து சிகிச்சை மாறும். குறைந்த நிலையில் இருந்தால் உபவாசம் இருப்பது நல்லது. நடுநிலையில் இருந்தால் உபவாசத்துடன் பக்குவ தன்மையுடைய மருந்து தரலாம். மிக அதிகமாக இருந்தால் தோஷங்களை வெளியேற்றும் சிகிச்சை செய்வார்கள்.

எப்போதும் உடலுக்கு பழக்கமான, ஒத்துக்கொள்ளக்கூடிய, சுத்தமான, நன்மை தரக்கூடிய உணவை மனதை ஒருநிலைப்படுத்தி உண்ண வேண்டும். அவசரமாகவும் இல்லாமல்,

சோம்பலாகவும் இல்லாமல் நடுத்தர அளவில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய நெய்ப்பு, உஷ்ணமுடைய, இனிப்பு, அறுசுவை உணவை உண்ண வேண்டும்.

குளித்துவிட்டு, அமைதியான மனநிலையுடன் உணவைச் சாப்பிட வேண்டும். உணவு சற்று திரவமாக இருக்க வேண்டும். அதிகமாக தயிர்,

சமைக்காத முள்ளங்கி, உளுந்து, சிறுகடலை, மாவு பண்டங்கள், சர்க்கரை பாகு ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பலாப்பழம், மாம்பழம் முதலியவை எளிதில் ஜீரணமாகாது.

    Posted in Uncategorized

    இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் – எச்சரிக்கை

    இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் – எச்சரிக்கை

    உணவு களங்சியப்படுத்தலைப் பாதுகாப்பதாக தெரிவித்து ஆட்சிபீடமேறிய அரசாங்கம், இரசாயன உர இறக்குமதியை முறையற்ற விதத்தில் நிறுத்தியுள்ளதென தெரிவித்த ஐக்கிய

    மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹாசீம், இதனால் இன்னும் சில மாதங்களில் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படும் என்றார்.

    கொழும்பில் நேற்று (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த

    போதே, மேற்கண்டவாறு தெரிவித்த அவர், உரத்தை நிறுத்தி உணவு களஞ்சியப்படுத்தலை இந்த அரசாங்கம் காட்டிக்​கொடுத்துவிட்டது என்றார்.

    “உணவு மாத்திரமல்ல இதுவரை எரிபொருள் களஞ்சியப்படுத்தலை எரிபொருள் கூட்டுதாபனமே முகாமைத்துவம் செய்து வந்தது. ஆனால், இப்போது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு

    வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து எரிபொருள் களுங்சியப்படுத்தலிலும் நெருக்கடி, அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

    சுகாதார பாதுகாப்பும் இல்லாமல் போயுள்ளது. மறுபுறம் நிதி முகாமைத்துவமும் சீரழிந்து இறுதியில் பங்களாதேஷிடம் கடன் வாங்கியுள்ளது எனத் தெரிவித்த அவர், இந்த அரசாங்கத்தின்

    மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாத நிலையில், இந்த அரசாங்கம் பதவி விலகுவதே சிறந்தது என்றார்.

      Posted in இலங்கை செய்திகள்

      பிரான்ஸ்,கனடா மருத்துவர்களுக்கு உணவளித்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !படம் உள்ளே

      பிரான்ஸ்,கனடா மருத்துவர்களுக்கு உணவளித்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !படம் உள்ளே

      கொரோனா வைரஸ் பெருந்தொற்று மனிதகுலத்திற்கு பெரும் உயிரச்சுறுத்தலாக மாறியுள்ள இவ்வேளையில், இதனை

      எதிர்கொள்ளும் வகையில் உலகத் தமிழர்களுக்கான சிறப்புக்குழுவினை ( Corona – Tamils Task Force) நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைத்து செயற்படத் தொடங்கியுள்ளது.

      கொரோனா நெருக்கடி நீண்டகாலத்துக்கு நீடிக்க இருக்கின்ற நிலையில், தமிழர்களின் நலன்களின் அடிப்படையில்

      உடனடியானதும், நீண்டகாலத்துக்குமான செயற்திட்டங்களை வகுத்து தமிழர் தாயகம், புலம்பெயர் தமிழர்கள், உலகத் தமிழர்கள் என செயற்படத் தொடங்கியுள்ளது.

        மருத்துவம், விழிப்பு, பொருளாதாரம், சுற்றுச்சூழல், சமூகம், அரசியல் என பல்வேறு பரிமாணங்களில் கொரோனாக்காலம்,

        கொரோனாவுக்கு பிந்திய காலம் என தனது செயற்திட்டத்தை கொரோனா – தமிழர்கள் சிறப்புக்குழு வகுத்து வருகின்றது.

        குறிப்பாக கொரோனா வைரஸ் பெருந்தொற்று இலங்கைத்தீவில் இனம்காணப்பட்ட உடனேயே, அது தொடர்பிலான விழிப்பு

        பிரச்சாரங்களை தமிழர் தாயகம் எங்கும் உள்நாட்டு தொண்டு அமைப்புக்கள் வழியே மேற்கொள்ளப்பட்டதோடு, ஒரு தொகுதி

        முதியவர்களுக்கு உள்ளுரில் தயாரிக்கப்பட்ட சுவாச்சகவசங்களும் வழங்கப்பட்டன.

        தொடர்ந்து ஊரடங்கு உத்தரவினால் வீடுகளில் முடங்கியுள்ள வறியநிலை மக்களுக்கு உணவுப்பொதிகள், அத்தியாவசிய

        பொருட்களும் வழங்கப்பட்டு வருவதோடு, மக்களை சுயநிறைவுடன் எதிர்காலத்தில் இருக்கும் வகையில் வீட்டுத் தோட்டங்களை ஊக்குவிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றது.

        இதேவேளை கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக களமாடிவரும் சுகாதாரப் பணியாளர்களுக்கு உணவுகளை வழங்கி

        தமிழர்களின் நன்றியினையும் தோழமையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செயலாற்றி வருகின்றது.

        கனடாவின் ரொன்ரோவின் பெரும்பாகத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு உணவுப்பொதிகளை வழங்கும் பொருட்டு, முதற்கட்டமாக உணவுப்பொதிகள் வழங்கபட்டன. இதுபோல்

        பிரான்சிலும் தலைநகர் பரிசில் Hôpital Bicêtreமருத்துமவனையின் அவரசப்பிரிவு சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன.

        கொரோனாவுக்கு எதிராக போராடிவரும் தேசங்களுக்கு தமிழர்களின் தோழமையினை நல்லெண்ணத்தோடு இவைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

        மறுபுறம் புலம்பெயர் தேசங்களில் கொரோனாவுக்கு இரையாகியுள்ள தமிழர்களின் விபரங்களையும் திரட்டி ஆவணப்படுத்தும் பணியிலும் இச்சிறப்புக்குழு ஈடுபட்டுள்ளது.

            Posted in இலங்கை செய்திகள்

            கண்டாவளையில் தில் 1500குடும்பங்களுக்கு -உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு – photo

            கண்டாவளையில் தில் 1500குடும்பங்களுக்கு -உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு – photo

            கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேசத்தில் 1500 வரைரயான குடும்பங்களுக்கு

            அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையத்தினால்  தலா 1200 பெறுமதியான  உலர்உணவுப்பொருட்கள்        வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


            கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவில் உள்ள     பதினாறு கிராம

            அலுவலர்; பிரிவுகளிலும் வசித்து வரும் மாற்றுத்திறனாளிகளைக்கொண்ட குடும்பங்கள்

            முதியோரைக்கொண்ட குடும்பங்கள், பெண்தலைமைத்துவம்கொண்ட குடும்பங்கள்  என தெரிவு

            செய்யப்பட்ட 1500 குடும்பங்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனமான அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை

            மையத்தினால்  E.U நிதியுதவியுடன் மேற்படி உலர் உணவுப்பொருட்கள்வழங்கி வைக்கப்பட்டன

            கண்டாவளையில் தில்
            கண்டாவளையில் தில்
              Posted in இலங்கை செய்திகள்

              வன்னியில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கிய ஊடக போராளிகள் – படஙகள் உள்ளே

              வன்னியில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கிய ஊடக போராளிகள் – படஙகள் உள்ளே

              இலங்கை வன்னி முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் வறுமை கோட்டுக்கு

              கீழ் உள்ள அடையாள காணப்பட்ட குறிப்பிட பட்ட மக்களுக்கு தமிழ் ஊடக போராளிகள்

              இணைந்து உதவிகளை வழங்கியுள்ளனர் .வவுனியா தொடர் வன்னி வரை இவர்கள் இந்த உதவும் உணவு வழங்கும் பணி இடம்பெற்று வருகிறது

              அமைப்புக்கள் நிறுவனங்கள் இவ்விதம் வழங்குவது கண்டிருப்போம் ,முதன்முதலாக இந்த ஊடக போராளிகள் களத்தில் கால்

              பதிக்கின்றனர் இது மகிழ்வா இல்லை அதன் பின்னால் அரசியலா ..? என்பதை காத்திருந்து பார்க்கலாம் .

              எது எப்படியோ இவர்கள் உதவும் மன நிலைக்கு வாழ்த்துக்கள் ,பாராட்டுக்கள்

              வன்னியில் ஏழை
              வன்னியில் ஏழை
              Posted in இலங்கை செய்திகள்

              ஏழ்மை குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கிய பல்கலைகழக மாணவர்கள் -photo

              ஏழ்மை குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கிய பல்கலைகழக மாணவர்கள் -photo

              ஊவா வெல்லஸ்ஸ பல்கலைகழக மாணவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்

              இன்று (07) புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் காணப்படும் தோட்டங்களில் நிவாரணங்கள் எதுவும்


              கிடைக்காத பெருந்தோட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு

              பொருட்கள் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைகழகத்தின்

              நமக்காக நாம் செயற்திட்டத்தில் அன்றாடம் தொழில் புரியும் பின்தங்கிய குடும்பங்களுக்கு ஊவா வெல்லஸ்ஸ


              பல்கலைகழக மாணவர்களின் பூரண அணுசரனையில் உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன

              பல்கலைகழக மாணவர்களின்
              பல்கலைகழக மாணவர்களின்
              Posted in இலங்கை செய்திகள்

              வீடு வீடாக சென்று மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் பொலிஸ் photo

              வீடு வீடாக சென்று மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் பொலிஸ் photo

              புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தின் பொருப்பதிகாரியான பிரதான பொலிஸ்

              பரிசோதகர் இந்திக்க ஹேமகுமார அவர்களின் தலைமையில் பிரதேசத்திற்கு

              உட்பட்ட வருமைகோட்டிற்கு கீழ் காணப்படும் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்


              வீடு வீடாக சென்று இன்று (07) கையளிக்கபட்டன. இந்த உன்னதமான

              செயற்பாட்டில் பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் பலரும்

              கலந்துக் கொண்டனர்.

              வீடு வீடாக சென்று மக்களுக்கு
              வீடு வீடாக சென்று மக்களுக்கு