சஜித் அறிவிப்பு 20 000ரூபா இலவசம்
Posted in இலங்கை செய்திகள்

சஜித் அறிவிப்பு 20 000ரூபா இலவசம்

20 000ரூபா இலவசம் சஜித் அறிவிப்பு

சஜித் அறிவிப்பு 20 000ரூபா இலவசம் ,நாட்டை வங்குரோத்து அடைய செய்த தற்போதைய அரசாங்கத்தில் உள்ள தலைவர்களின் விவேகமற்ற, அக்கறையில்லாத கொள்கைகளினால் இலட்சக்கணக்கானோர் வறுமைக்கு

உள்ளாகி இருக்கின்றார்கள். அவர்கள் வறுமையில் சிக்கி எல்லையற்ற அளவில் அசாதாரண நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அத்தோடு வாழ்க்கைக்கான வழிகள் இன்றி தெளிவான வருமான வரிகள் இன்றி, ஒவ்வொரு நாளுக்கும் மூன்று வேளை உணவையும் பெற்றுக் கொள்ள முடியாத வறிய மக்களுக்காக ஜனசவிய, சமூர்த்தி, அஸ்வெசும, மற்றும்

கெமிதிரிய ஆகிய வேலை திட்டங்களில் உள்ள சிறந்த விடயங்களை ஒன்றாக சேர்த்து, அவற்றின் குறைபாடுகளை நீக்கி, சிறந்த வேலை திட்டமொன்றை முன்னெடுப்போம். உணவுத் தேவை, உணவு தேவை அல்லாத வேறு தேவைகள்

, சேமிப்பு, நுகர்வு, முதலீடு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி போன்ற விடயங்களை கருத்தில் கொண்டும், வறுமை ஒழிப்பு திட்டத்தின் ஊடாக மாதாந்தம் 20 ஆயிரம் ரூபா வழங்கி, 24 மாதங்களில் வறுமையை ஒழிக்கும் தேசிய

வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த பதினாறாவது மக்கள் வெற்றி கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் இன்று(26) முற்பகல் கந்தளாய், சேருவில

நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து யாரும் வறுமையில் இருக்கக் கூடாது. வறுமை எனும் அடிமைத்தனத்திற்கு கட்டுப்படாது. பல்வேறு நிகழ்வுகளினாலும் அரசாங்கத்தின் விவேகம் அற்ற, அக்கறை இல்லாத கொள்கை

திட்டங்களினால் மக்கள் வறுமையில் சிக்கி இருக்கின்றார்கள். வறுமையில் இருந்து கொண்டு கையேந்துகின்ற, சமூகமொன்றை உருவாக்காது, அபிமானம் உள்ள மக்கள் வாழ்கின்ற, எமது நாட்டில் எவருடைய அடிமை சேவகர்களாக இல்லாமல் தன்னம்பிக்கையுடன், தன்னிறைவோடு எழுந்து

நிற்க நம்பிக்கை உள்ள சமூகம் இருப்பதால் குறிப்பிட்ட காலத்துக்குள் வறுமையை இல்லாது செய்வோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த 20,000 ரூபா நிவாரணம் வழங்கப்படுகின்ற போது 24 மாதங்களில் வறுமையை ஒழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வீட்டில் உள்ள பெண்களுக்கு இந்த சலுகைகளை பெற்றுக்கொடுத்து, வீடுகளிலேயே

அனைத்து விடயங்களையும் நேர்த்தியாகவும், வளமாகவும் முன்னெடுப்பதால் அவர்களை மையமாகக் கொண்டே இந்த வேலை திட்டம் முன்னெடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

வறுமை என்பது சுமையல்ல நாட்டை கட்டி எழுப்புகின்ற பின்புலத்தை உருவாக்குகின்றவர் என்ற அடிப்படையில் இந்த நிவாரணங்களை வழங்குகின்றோம். பொய் இல்லாமல் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

பங்களாதேஷில் கிராமிய வங்கி கருத்திட்டத்தின் ஊடாகவும் உலகின் பல நாடுகளிலும் குறுகிய காலத்துக்குள் வறுமைப் பிடியிலிருந்து மீண்டு இருக்கிறார்கள். அதற்கான உதாரணங்கள் உண்டு. இதற்காக அரசாங்கத்தின் நிவாரணங்கள் மற்றும் குறித்த நபர்களின் அர்ப்பணிப்பு என்பன தேவை. நாடு

வீழ்ச்சி அடைந்திருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான நிவாரணங்களை மிகவும் சிரமத்திற்கு மத்தியிலே வழங்குவதால் அதை மக்கள் பொறுப்புணர்வுடன் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக தரமான 50 கிலோ நிறையுள்ள உர மூடையுன்றை 5000 ரூபாவிற்கு வழங்குகின்றோம். மக்களால் சகித்துக் கொள்ள முடியுமான தொகைக்கு உர மருந்துகளை வழங்குவதோடு,

இருட்டடிப்பு வர்த்தகத்தை நிறுத்தவும் நடவடிக்கை எடுத்து, இவற்றை கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் ஊடாக வழங்குவோம். விவசாயிகளுக்கு, மீன்பிடியாளர்களுக்கு, சக்கர வண்டி சாரதிகளுக்கு, பாடசாலை போக்குவரத்து

வழங்குனர்களுக்கும் சக்தி அரசி ஆலை உரிமையாளர்களுக்கும் நிவாரண அடிப்படையில் எரிபொருளை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கொரோனா அச்சுறுத்தல் நாட்டின் வங்கரோத்து நிலை என அனைத்து விடயங்களினாலும் விவசாயிகள் அனைத்து விதங்களிலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தரமற்ற உர விநியோகம், உரத் தட்டுப்பாடு, சேதன உர மோசடி என்பனவற்றினாலும், தமது தங்க

ஆபரணங்களையும் சொத்துக்களையும் அடகு வைத்து விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. எனவே விவசாயிகளுடைய விவசாய கடனை நாங்கள் இரத்து செய்வோம்.

அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களின் நட்புறவாளர்கள், நண்பர்கள், பினையின்றி கடனைப் பெற்றுக் கொண்டு அவற்றை மீள செலுத்தாமல் கடன்களை இரத்திச்செய்திருக்கின்றார்கள். வர்த்தகர்களின் கடன்களையும் இரத்துச் செய்து இருக்கின்றார்கள். இவ்வாறான வர்த்தகர்களின்

கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவி சாய்த்தாலும், இந்த வரிய எளிய விவசாயிகளின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவி சாய்க்கவில்லை.

தனது நட்புறவாளர்களுக்காக சட்டத்தை மீறி இரத்து செய்து, கொடுக்கப்பட்ட இந்தக் கடன் தொகைகள் அனைத்தையும் மீண்டும் அரசாங்கத்திற்கு பெற்றுக்

கொண்டு விவசாயிகளின் கடன்களை அரசாங்கம் இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கும் என்றும் இதன் போது எதிர்க்கட்சித் தலைவர் சுட்டி காட்டினார்.

அத்தோடு விவசாயிகளின் உற்பத்திகளுக்கு நிர்ணய விலை ஒன்றை பெற்றுக் கொடுப்பதோடு, பாரிய ஆலை உரிமையாளர்களின் தந்திரமான ஒப்பந்தங்களின் ஊடாக விவசாயிகளின் நெல்லை குறைந்த விலைக்கு கொள்ளையடித்து அவர்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்கி இருக்கின்றார்கள்.

எனவே இந்த விவசாயிகளின் நெல்லுக்கு நிர்ணய விலையை ஏற்படுத்தி, அவர்கள் இலாபத்தை பெற்றுக் கொள்வதோடு, நுகர்வோருக்கும் தகுந்த

விலையில் அரிசியை பெற்றுக் கொள்ளும் விதமாக விலைசூத்திரமொன்றை அறிமுகப்படுத்துவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கு சீருடை இலவசம்
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு சீருடை இலவசம்

பாடசாலை மாணவர்களுக்கு சீருடை இலவசம்

பாடசாலை மாணவர்களுக்கு சீருடை இலவசம் ,இலங்கையில் 2025 ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக உடைகள் புத்தகங்கள் என்பன வழங்குவதற்கு, இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

பொருளாதார நழிவடைந்து நிலையில் காணப்படும் இலங்கை பல்வேறுபட்ட நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது .

அவ்வாறன காலப்பகுதியில் சீனா வழங்கும் உதவி திட்டத்தில் இந்த சீருடைகள் புத்தகங்களை, பாடசாலை மாணவர்களுக்கு தாங்கள் வழங்க உள்ளதாக இலங்கை இவ்வாறு தெரிவிக்கின்றது.

ஜனாதிபதி ஊடகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு பொழுது கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சரின் இந்த பேச்சு மாணவர்கள் மத்தியில் வரவேற்பையும் நன்மதிப்பையும் பெற்றுள்ளது.

தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் மக்களுக்கு இலவசங்கள் வரிக்குறைப்பு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் ,என பல் வேறுபட்ட விடயங்களை ரணில் அரசாங்கம் வேகமாக நடத்தி வருகின்றது.

தேர்தலில் எப்படியாவது வந்து விட வேண்டும் என்கின்ற நிலையில் தற்போது ரணில் விக்கிரமசிங்க காணப்படுவதாகவும் அதற்காகவே அவர் இவ்வாறான பல்வேறுப்பட்ட கவர்ச்சிகரமான நடவடிக்கை திட்டத்தை ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தனது இரண்டு வருட ஆட்சியின் காலத்தின் பொறுப்பு மக்களுக்கு இவ்வாறான இலவசங்களை செயல்படுத்த முடியாத ரணில் விக்கிரமசிங்கா .

இப்பொழுது தேர்தெடுகின்ற காலப்பகுதியில் ஏன் இதனை அறிவிக்க வேண்டும் என்கின்ற கேள்வியையும் சார்புள்ள வாதிகள் வருகின்றனர்.

விவசாயிகளுக்கு இலவச உரம்
Posted in இலங்கை செய்திகள்

விவசாயிகளுக்கு இலவச உரம்

விவசாயிகளுக்கு இலவச உரம்

விவசாயிகளுக்கு இலவச உரம் ,விவசாயிகளுக்கு எதிர் வரும் இரண்டு போங்களுக்கான இலவசமாக உரம் வழங்க உள்ளதாக இலங்கை ஆளும் அரசு தெரிவித்துள்ளது.

பெருந்தோட்டத்துறை அமைச்சர் இவ்வாறு தனது கருத்தை தெரிவித்துள்ளார் .

சில மாதங்களில் இலங்கையில் தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் தற்பொழுது விவசாயிகளுக்கு உரத்தை தாங்கள் இலவசமாக வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது .

மகிழ்ச்சியில் விவசாயிகள்

இந்த அறிவிப்பால் மக்களை குஷி படுத்தி அதனூடாக வாக்குகளை பெற்றுக் கொள்ள ஒரு தந்திரமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது .

ஆளும் தேசிய கட்சி எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்று விட வேண்டும் அதன் அடிப்படையில் வெளியிடப்பட்ட இலவச உரமாகவே இதனை எடுத்து கொள்ள முடிகின்றது.

தொடராக மக்களுக்கு இலவசமாக பல சலுகைகளை வழங்கி வருவதுடன் ,வெள்ளங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வீடுகள் புபுனர்நிர்மாணம் செய்வது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுகள் என்பனவற்றையும் அரசு தாரளமாக வழங்கி வருகின்றது .

இரண்டு போகங்களுக்கு விவசாயத்திற்கு இலவச உரம்

அதன் அடிப்படையில் எதிர்வரும் இரண்டு போகங்களுக்கான உரத்தினை தாங்கள் வழங்க உள்ளதாக இலங்கை அரசு இவ்வாறு அறிவித்துள்ளது .

பல்வேறுபட்ட சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

அறிவிக்கப்பட்டதன் படி தொடர்ந்து இந்த இலவசங்களை ஐக்கிய தேசியக் கட்சியி அரசாங்கம் வழங்குமா ,அல்லது தேர்தல் முடிந்தவுடன் அவற்றை காற்றில் மறந்து விட்டு பறந்து விடுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

பிரிட்டனில் இருந்து இன்று முதல் மின்சாரம் காஸ் விலை அதிகரிப்பு 400 இலவசம்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் இன்று முதல் மின்சாரம் காஸ் விலை அதிகரிப்பு 400 இலவசம்

பிரிட்டனில் இன்று முதல் மின்சாரம் காஸ் விலை அதிகரிப்பு 400 இலவசம்

பிரிட்டனில் இன்று முதல் மின்சாரம் மற்றும் காஸ் விலை 27 வீதம் அதிகரிக்கிறது .

மேலும் ஒவ்வொரு வீட்டினருக்கும் வருடம் 2500 பவுண்டுகள் மின்சாரம் மற்றும் எரிபொருள் விலை காணப்படும் .

இந்த விலை அதிகரிப்பை கட்டு படுத்த மக்களுக்கு வருடம் தோறும் 400 இலவசமாக வழங்க படும் என அரசு தெரிவித்துள்ளது .

பிரிட்டனில் இன்று முதல் மின்சாரம் காஸ் விலை அதிகரிப்பு 400 இலவசம்

பாரளுமன்றில் இந்த அறிவிப்பை ஆளும் பிரிட்டன் பிரதமர் தெரிவித்துளளார் .

இதில் வேடிக்கை என்னவென்றால் 27 வீதம் விலையை அதிகரித்து விட்டு அதில் 400 பவுண்டுகள் மட்டும் வருடம் ,மக்களுக்கு மீள் செலுத்துவதாக தெரிவிப்பது ,என்பது அரசியல் கபடி நாடகமாக பார்க்க படுகிறது .

எதிர்வரும் தேர்தலில் ஆளும் கன்சவேர்டி பாரிய தோல்வியை சந்திக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு பத்தாயிரம் இலவசம் – அறிவிப்பில் மட்டுமா இலவசம்

மக்களுக்கு பத்தாயிரம் இலவசம் – அறிவிப்பில் மட்டுமா இலவசம்

இலங்கையில் புதிய இடைக்கால வரவு செலவு திட்ட வாசிபில் ,குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு , பத்தாயிரம் இலவசமாக வழங்க படும் என அறிவிக்க பட்டுள்ளது .

இவ்வாறு அறிவிக்க பட்ட இந்த இலவசம் ,அறிவிப்பில் மட்டும் அறிவிக்க பட்ட இலவசம் ,என மக்கள் பேசுபொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விகிரமசிங்கா , மக்களை குஷி படுத்தும் நகர்வில் ஈடுபட்டு வருகிறார் .


.தான் புரியும் இந்த சேவை அறிவிப்பின் ஊடக ,ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்த அவர் முனைகின்றார் .


அதன் எதிரொலி இந்த இடைக்கால வரவு செலவு திட்ட வாசிப்பில் அவதானிக்க முடிகிறது .

ரணில் விக்கிரமசிங்காவின், இந்த திட்டமிடப்பட்ட விளையாட்டு ,எதுவரை தொடரும் என்பதே கேள்வியாக உள்ளது .

ரணில் என்ன எல்லாம் எப்படி எல்லாம் சொன்னார் ,இதில் அழுத்தி முழுமையாக பாருங்கள்