கொரானா
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரானாவுக்கு 14 பேர் மரணம்

இலங்கையில் கொரானாவுக்கு 14 பேர் மரணம்

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் மட்டும் 14 பேர்

பலியாகியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    சட்டத்தை மீறி அத்தியவசியப் பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு அபராதம்

    சட்டத்தை மீறி அத்தியவசியப் பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு அபராதம்

    அம்பாறை மாவட்டத்தில் கடந்த வருடம் 2021 ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி அத்தியவசியப் பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட

    359 வழக்குகளுக்கு நீதிமன்றங்களினால் 15 இலட்சத்தி 43 ஆயிரம் ரூபாய் அபராதம்

    விதிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் கே.எம்.ஏ. றிஸ்லி தெரிவித்துள்ளார்.

    நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி அத்தியவசியப் பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் 522 வர்த்தகர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

    இதில் 428 வர்த்தகர்களுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    பயணத்தடை மற்றும் கொவிட் -19 காலப்பகுதியில் கூடுதலான விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோரின் முறைப்பாட்டையடுத்து அம்பாறை, தெஹியத்தக்கண்டி,

    பொத்துவில், அக்கரைப்பற்று, கல்முனை, சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களிலுள்ள வர்த்தக நிலையங்களில் திடீர் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

      Posted in இலங்கை செய்திகள்

      டெங்கு ஒழிப்பு திட்டத்தில் இராணுவத்தினர்

      டெங்கு ஒழிப்பு திட்டத்தில் இராணுவத்தினர்

      மேல்மாகாணத்தில் பரவிவரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் கடமையாற்றும் படையினர், கம்பஹா, குருநாகல், புத்தளம்,

      கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களை உள்ளடக்கிய விஷேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டமொன்றை அண்மையில் முன்னெடுத்தனர்.

      மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கிடைக்கப்பெற்ற சுகாதார அதிகாரிகளின் அறிக்கையை அடுத்தே இந்த

      சமூக நலத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

      இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் சுமார் 105 சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், அரச அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோருடன் இணைந்து 900

      க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் ஆகியோர் பங்குபற்றியுள்ளனர்.

      இராணுவத் தளபதியின் பணிப்புரைக்கு அமைவாக பொது கட்டளைத் தளபதிகள், படைத்

      தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் ஆகியோர் இந்த திட்டத்தில் பங்களித்துள்ளதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

      Posted in Uncategorized

      காதலியை கற்பழித்த 4 பேர் – யாழில் நடந்த பயங்கரம்

      காதலியை கற்பழித்த 4 பேர் – யாழில் நடந்த பயங்கரம்

      தவறுதலான தொலைபேசி அழைப்பின் (miss Call) ஊடாக அறிமுகமான காதலனை நம்பி சென்ற 18

      வயது யுவதியை நான்கு பேர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் யுவதியை வீதியில் இறக்கி விட்டு தலைமறைவாகியுள்ளனர்.

      நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பாதிக்கப்பட்ட யுவதி நேற்றைய தினம் (11) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

      குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

      தொலைபேசிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வந்திருந்த தவறுதலான தொலைபேசி அழைப்பின் ஊடாக அறிமுகமான இளைஞனுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியுள்ளது.

      இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்காத நிலையில் காதலித்து வந்துள்ளனர்.

      அந்நிலையில் நேற்றைய தினம் குறித்த இளைஞன், யுவதியை திருமணம் செய்வதற்கு தயாராக

      இருப்பதாகவும், வீட்டை விட்டு வெளியேறி தன்னுடன் வருமாறும், அதன் போது வீட்டில் இருந்து நகைகள் மற்றும் பணம் என்பவற்றை எடுத்து வருமாறும் கூறியுள்ளார்.

      இளைஞனின் ஆசை வார்த்தையை நம்பிய குறித்த யுவதி, தன்னுடைய சங்கிலி உள்ளிட்ட சொற்ப நகைகளையும் , 40 ஆயிரம் ரூபாய் பணத்தினையும் எடுத்துக்கொண்டு நேற்று காலை இளைஞன் கூறிய இடத்திற்கு சென்றுள்ளார்.

      அங்கு நின்றிருந்த குறித்த இளைஞன் அப்பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு , ஐஸ்கிறீம் கடை ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளார்.

      அங்கு இருவரும் சிற்றுண்டி சாப்பிட்டு, ஐஸ் கிறீம் குடித்த பின்னர் காலை 10 மணியளவில் இளைஞன், அந்த யுவதியை தன்னுடைய தாய்க்கு அறிமுகம் செய்து வைப்பதாக, வடமராட்சி திக்கம் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

      அங்கு ஆள் நடமாற்றம் அற்ற பகுதி ஒன்றுக்கு யுவதியை அழைத்து சென்று ஆசை வார்த்தைகளை கூறி, உறவு கொண்டுள்ளார். பின்னர் தண்ணீர் வாங்கி வருவதாக கூறி அவ்விடத்தில் யுவதியை தனியே விட்டு விட்டு சென்றுள்ளார்.

      இளைஞன் சென்று சில நிமிடங்களில் மூன்று இளைஞர்கள் அவ்விடத்திற்கு சென்று யுவதியை பலாத்காரமாக வன்புணர்ந்து உள்ளனர்.

      பின்னர் யுவதியை அழைத்து சென்ற இளைஞனும் அவ்விடத்திற்கு வந்து நான்கு பேருமாக யுவதியை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர். பின்னர் யுவதியிடம் இருந்த 40

      ஆயிரம் ரூபாய் பணம், நகைகள், தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்த பின்னர் யுவதியை அழைத்து வந்த இளைஞன் யுவதியை மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று யுவதியின் கிராமத்திற்கு அருகில் வீதியில் இறக்கி விட்டு தலைமறைவாகியுள்ளார்.

      சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் யுவதியினால் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், சம்பவம் இடம்பெற்ற பகுதி பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி

      என்பதனால் முறைப்பாட்டை நெல்லியடி பொலிஸார் பருத்தித்துறை பொலிஸாரிடம் பாரப்படுத்தியுள்ளனர்.

      பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் துன்னாலை பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்களை அடையாளம் கண்டுள்ளனர்.

      அவர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்க முயன்ற போது நான்கு பேரும் நேற்றைய தினத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளமை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

      அதனால் குறித்த நான்கு இளைஞர்கள் மீதும் பொலிஸாருக்கு வலுவான சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

      இதேவேளை , கடந்த வருடம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த யுவதி ஒருவரை முகநூல் ஊடாக அறிமுகமான இளைஞன் அந்த யுவதியை காதலிப்பதாக கூறி முள்ளி பகுதிக்கு அழைத்து சில

      இளைஞர்கள் இணைந்து கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

        Posted in இலங்கை செய்திகள்

        கஞ்சாவுடன் பிக்கு கைது

        கஞ்சாவுடன் பிக்கு கைது

        இலங்கையில் மொட்டை பிக்குகளின் அடாவடி அதிகரித்து செல்கிறது ,இவ்விதம் சம்பவங்கள்

        இடம்பெற்று கொண்டிருக்க போதையில் போலீசாருடன் தர்க்கம் புரிந்த பிக்கு ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்ய பட்டுள்ளார்

        மத விதிகளை மீறி இவர் இவ்விதம் போதையில் உலவியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

          Posted in இலங்கை செய்திகள்

          அரச வங்கியொன்றில் பணியாற்றும் 17 ஊழியர்களுக்கு கொரோனா

          அரச வங்கியொன்றில் பணியாற்றும் 17 ஊழியர்களுக்கு கொரோனா

          கொழும்பில் டியூக் வீதியில் உள்ள அரச வங்கியொன்றில் பணியாற்றும் 17 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று 
          
          உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்க படுகிறது 
          
          இவ்விதம் நோயின் தொற்றுக்கு உள்ளானவர்கள் தலைமை அப்டுத்த பட்டுள்ளனர் 
            செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
            Posted in இலங்கை செய்திகள்

            இரு குழு மோதலில் – ஒருவர் பலி

            இரு குழு மோதலில் – ஒருவர் பலி

            இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

            நிவிதிகல – கிரிமடுவ கோட்டத்தின் கீழ் பகுதியில் நேற்று (11) இரவு இக்கொலை இடம்பெற்றுள்ளது.

            இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஒருவரைத் தள்ளும் போது தவறி விழுந்ததன் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

            இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக சந்தேகநபர்கள் இந்த கொலையை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

            உயிரிழந்தவர் கீழ் நிவித்திகல, கிரிமடுவ லைம பகுதியைச் சேர்ந்த 77 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

            சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

            இவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நிவித்திகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

              Posted in இலங்கை செய்திகள்

              முல்லையில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

              முல்லையில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

              இலங்கை முல்லைத்தீவில் இருந்து கொழும்புக்கு வாகனம் ஒன்றில் கஞ்சா கடத்தி சென்ற


              வாலிபர்கள் இருவரை இராணுவத்தினர் கைது செய்தனர்

              இவர்களினால் கடத்தி செல்ல பட்ட 22 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்ய பட்டுள்ளது

                Posted in இலங்கை செய்திகள்

                வெலிக்கடை சிறைச்சாலை மோதல்

                வெலிக்கடை சிறைச்சாலை மோதல்

                கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற

                துப்பாக்கிச்சூட்டில் கைதிகள்உயிரிழந்தமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று(12) அறிவிக்கப்படவுள்ளது.

                கடந்த 6ஆம் திகதி குறித்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட இருந்த நிலையில், இன்றுவரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

                நீதியரசர்களான கிஹான் குலதுங்க, பிரதீப் ஹெட்டியாராச்சி மற்றும் மஞ்சுள திலக்கரத்ன

                ஆகியோர் அடங்கிய கொழும்பு மூவரடங்கிய விசேட நீதிமன்றில் இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.

                இந்தப் சம்பவம் தொடர்பில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் முன்னாள் பொலிஸ்

                பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்குத் தொடரப்பட்டது.

                  பெண்ணை காணவில்லை
                  Posted in Uncategorized

                  15 வயது அழகிய பெண்ணை காணவில்லை – தேடும் போலீஸ்

                  15 வயது அழகிய பெண்ணை காணவில்லை – தேடும் போலீஸ்

                  இலங்கை மகரகம பகுதியில் கடந்தஏழாம் திகதி முதல் பதின் ஐந்து வயதுடைய அழகிய பெண்

                  ஒருவர் காணாமல் போயுள்ளார்
                  இவரை கண்ணுற்றால் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

                  இவர் கடத்த பட்டாரா அல்லது உறவினர்கள் ,நண்பர்கள் வீடுகளுக்கு சென்றாரா என்பது

                  தொடர்பில் தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                    இராணுவ முகாமிற்குள் குண்டு
                    Posted in இலங்கை செய்திகள்

                    பெரும் குண்டு தாக்குதல் முறியடிப்பு – குண்டுகள் மீட்பு

                    பெரும் குண்டு தாக்குதல் முறியடிப்பு – குண்டுகள் மீட்பு

                    இலங்கை பொரளை Borella All Saints’ Church premises தேவாலய பகுதியில் கைவிட ப்பட்ட நிலையில்

                    கைக்குண்டு ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது

                    குறித்த குண்டை வெடிக்க செய்திடும் முகமாக நபர் ஒருவர் அங்கு எடுத்து வந்திருந்ததாக

                    இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது

                    கைது செய்வ பட்ட நபரிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                      Posted in இலங்கை செய்திகள்

                      இலங்கைக்குள் நுழைந்த மர்ம நபர் கைது

                      இலங்கைக்குள் நுழைந்த மர்ம நபர் கைது

                      பிரான்சில் இருந்து இலங்கைக்குள் அபுதாபிவழியாக போலி கடவுசீட்டில் நுழைந்த நபர் ஒருவர்


                      இலங்கை பண்டாரநாயக்க வான் தளத்தில் வைத்து கைது செய்ய பட்டுளளார்

                      இவ்விதம் நுழைந்தகவர் யார் என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                        Posted in Uncategorized

                        கொழும்பு வீதிகளில் மூன்று மர்ம மனித உடல்கள் – உடல் பாகங்கள் மாயம்

                        கொழும்பு வீதிகளில் மூன்று மர்ம மனித உடல்கள் – உடல் பாகங்கள் மாயம்

                        கொழும்பு மற்றும் வெள்ளவத்தை பீச் பகுதியில் அடையாளம் தெரியாத மூன்று அஆண்களுடைய சடலங்கள் மீட்க பட்டுள்ளன

                        சமீப காலங்களாக கடல் நீரேரிகளை மையமாக வைத்து மனித உடல்கள் மீட்க பட்டு வருகிறது ,.

                        இது ஆளும் கோத்தபாயவின் நிழல் டிவிஷன் படைகளினால் கொலை செய்ய பட்டு வீச படும்

                        மனித உடல்கள் என தகவல்கள் வெளியாகி வருகின்றது

                        இவ்வாறு கொலை செய்ய பட்டுள்ள மனித உடல்களில் சில மனித பாகங்கள் காணாமல்

                        போயுள்ளதாக திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

                          கள்ள காதலி
                          Posted in இலங்கை செய்திகள்

                          கள்ள காதலியை கொன்று கிணற்றில் வீசிய காதலன் – முல்லையில் பயங்கரம்

                          கள்ள காதலியை கொன்று கிணற்றில் வீசிய காதலன் – முல்லையில் பயங்கரம்

                          முள்ளியவளை பூதன் வயல் கிராமத்தில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்ப பெண்

                          கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                          கடந்த 08 ஆம் திகதியன்று முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் தென்னந்தோட்ட கிணறு ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் 36 அகவையுடைய குடும்ப பெண் ஒருவர் உடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

                          இந்த சம்பவத்தின் போது குறித்த பெண்ணின் கள்ளக்காதலனாக வாழ்ந்து வந்த நபரை விசாரணைக்கு அழைத்து சென்ற முள்ளியவளை பொலிசார் பின்னர் நேற்று (09) அவரை கைது செய்துள்ளனர்.

                          பொலிசாரால் கைது செய்யப்பட்ட 33 அகவையுடைய கிளிநொச்சி ஜெயபுரத்தினை சேர்ந்த ஆணினை இன்று (10) முள்ளியவளை பொலிசார் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்கள்.

                          முல்லைத்தீவு நீதிமன்றின் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

                          இதன்போது கொலைக் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபரை எதிர்வரும் 20.01.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

                            சீனா வெளிநாட்டு அமைச்சர்
                            Posted in இலங்கை செய்திகள்

                            தமிழர் பகுதிகளில் அகல கால் பதிக்கும் சீன நிறுவனம் – வேலை வாய்ப்பாம்

                            தமிழர் பகுதிகளில் அகல கால் பதிக்கும் சீன நிறுவனம் – வேலை வாய்ப்பாம்

                            தமிழர் தாயாக பகுதிகளை இலக்கு வைத்து சீன நிறுவனம் நிறுவ படுகிறது ,இந்த நிறுவனம்

                            தமிழர்கள் வாழ் வாதாரத்தை பெருக்குவதாக கூறி கொண்டு அங்கு தனது அகல கால் பாதிப்பை நிலை நாட்டை முயல்கிறது

                            இதற்கு ,கோட்டா ,மகிந்தாவுக்கு பல கோடி லஞ்சமாக வழங்க பட்டுள்ளதாக செய்திகளும் கசிகிறது

                            நாட்டில் விலைவாசிகளை உயர்த்தியும் பொருட்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதன் ஊடக

                            இந்த நிறுவனங்களை அங்கு அகல கால் ஊன்ற வைக்கும் நகர்வு முன்னெடுக்க பட்டுள்ளது

                              Posted in Uncategorized

                              தனது பிறந்த நாளில் மாணவர்களுக்கு உதவி புரிந்த சுவிஸ் தமிழச்சி -படங்கள் உள்ளே

                              தனது பிறந்த நாளில் மாணவர்களுக்கு உதவி புரிந்த சுவிஸ் தமிழச்சி -படங்கள் உள்ளே

                              இன்று திருமதி ச நவநீதமணி ஆசிரியை அவர்களால் ,சகானா திருச்செல்வம் (சுவிஸ்) அவர்களின் பிறந்தநாள் நினைவாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கிவைக்கப்பட்டது,

                              நாடு கடந்து புலத்தில் வசித்தாலும் தமது தொப்பிள் கொடி உறவுகளை மறவாது இவ்விதம் இவர்களுக்கு உதவி புரிந்தமை நம்மை எல்லாம் நெகிழ வைக்கிறது

                              இன்று போல் என்றும் நீடூழி வாழ வாழ்துகொறோம் ,மேலும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

                              மேற்படி தகவலை குறித்த கல்விசாலை அதிபர் அவர்கள் தனது முக நூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ,சகானாவுக்கு எதிரி இணையமும் நெஞ்சார வாழ்த்துகிறது .வீழ்க தமிழ்,வளர்க உன் புகழ் ,

                                வீட்டுக்குள் புகுந்த கார்
                                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                வீட்டுக்குள் புகுந்த கார் – லண்டனில் நடந்த பயங்கரம்

                                வீட்டுக்குள் புகுந்த கார் – லண்டனில் நடந்த பயங்கரம்

                                லண்டன் Albany Road, Sittingbourne. பகுதியில் கார் ஒன்று வீட்டு மதிலை இடித்து உள்ளே ;புகுந்தது

                                ,இதில் வீடு மதில் பலத்த சேதமடைந்துள்ளது

                                வேகமாக பயணித்த அவுடி ரக கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து இவ்விதம் விபத்தில் சிக்கியது ,சாரதி கைது செய்ய பட்டுள்ளார்

                                போதையில் காரை செலுத்தியதுடன் காருக்கு காப்புறுதியும் இல்லை என தெரிவிக்க பட்டுள்ளது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  கணவனை அசிட் ஊற்றிக் கொன்ற மனைவி , மாமி கைது

                                  கணவனை அசிட் ஊற்றிக் கொன்ற மனைவி , மாமி கைது

                                  தினமும் மதுபோதையில் வந்து தகராறை ஏற்படுத்தும் இரண்டு பிள்ளைகளின் தந்தை மீது அசிட் வீச்சு தாக்குதலை நடத்தி, கோடரியால் வெட்டிக்​ கொன்ற சந்தேகநபர்கள் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.

                                  உயிரிழந்தவரின் மனைவியும் மாமியாருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

                                  இந்த மாதம் 20ஆம் திகதி வரை சந்தேகநப​ர்களை விளக்கமறியலில் வைக்குமாறு, இரத்தினபுரி பதில் நீதவான் பிரியங்க குணவர்ணசூரிய நேற்று உத்தரவிட்டுள்ளார்.

                                  35 வயதுடைய நபரே இவ்வாறு அசிட் வீச்சுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதுடன், 31 வயதுடைய அவருடைய மனைவியும் 52 வயதுடைய மாமியாரு​மே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

                                  இந்த மாதம் 8ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் உயிரிழந்த நபர் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளதுடன், கையில் கத்தியை வைத்தக்கொண்டு மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

                                  இதன்போது தனது தம்பியின் வீட்டுக்கு உயிரிழந்தவரின் மனைவி சென்ற நிலையில், அவர் அங்கேயும் சென்று தகராறு செய்துள்ளார்.

                                  இதன்போதே, ஆத்திரமடைந்த மனைவி தனது கணவன் மீது அசிட்டை ஊற்றியுள்ளதுடன், தம்பியின் வீட்டிலிருந்த கோடரியால் தாக்கியுள்ளார்.

                                  இதன்போது காயமடைந்த நபர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

                                  இதனையடுத்து, சந்தேகநபர்களான தாயும் மகளும் குருவிட்ட பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்டு நேற்று (9) இரத்தினபுரி பதில் நீதவான் பிரியங்க குணவர்ணசூரிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்

                                    Posted in Uncategorized

                                    குடும்பத்தை கடத்தி 75 லட்சம் கொள்ளையடித்த கொள்ளையர்கள் மடக்கி பிடிப்பு

                                    குடும்பத்தை கடத்தி 75 லட்சம் கொள்ளையடித்த கொள்ளையர்கள் மடக்கி பிடிப்பு

                                    இலங்கை குடா ஓயா பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் பூசகர் மற்றும் அவரது மனைவி

                                    பிள்ளைகளை வானில் கடத்தி சென்று எழுபத்தி ஐந்து லட்சம் கொள்ளையடித்த நல்லவர் அடங்கிய குழு ஒன்று காவல்துறையின் விசேட வேட்டையில் சிக்கினார்

                                    இந்த கடத்தல் காரர்கள் பயன்படுத்திய வான் உள்ளிட்டவை மீட்க பட்ட நிலையில் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                                      பேரூந்து டிப்பர் மோதல்
                                      Posted in இலங்கை செய்திகள்

                                      பேரூந்து டிப்பர் மோதல் – 26 பேர் காயம்

                                      பேரூந்து டிப்பர் மோதல் – 26 பேர் காயம்

                                      அம்பாறையில் இருந்து திருகோணமலை போக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பேரூந்து

                                      ஒன்றுடன் டிப்பர் ரக வாகனம் மோதியதில் அதில் பயணித்த 26 பேர் படுகாயமாடைந்தனர்

                                      காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,மேற்படி

                                      விபத்து தொடர்பில் மூதூர் போலீசாரை விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்