யாழ் வேலைக்காரியின் 140 ஏக்கர் பண்ணை 10 .000 தென்னைகள்| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வெள்ளைக்காரியின் 140 ஏக்கர் பண்ணை 10 .000 தென்னைகள்| இலங்கை செய்திகள்

யாழில் வெள்ளைக்காரியின் 140 ஏக்கர் பண்ணை 10 .000 தென்னைகள்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |யாழ்ப்பாணத்தில் வெள்ளைக்காரி ஒருவர் 140 ஏக்கரில் பண்ணை செய்கிறார் .
இந்த பண்ணையில் தற்போது 10.000 தென்னைகள் வளர்க்க படுகின்றன .

அதாவது பல்லாண்டு பயிர் செய்கை இடம்பெறுகிறது .
அதற்குள் ஆடு மாடு கோழிகள் ,தென்னை ஏனைய பல்லாண்டு பயிர்களும் உற்பத்தி செய்ய படுகின்றன .

நமது இலங்கையர்கள் அங்கிருந்து மண் சரியில்லை தண்ணி இல்லை என்ற காரணங்களை கூறியவாறு காலத்தை கடத்தியவாறு செல்கின்ற ,கால கொடுமைகள் தொடரத்தான் செய்கின்றன .

வெள்ளைக்காரியி பெயரில் பெரும் அரசியல் முதலை ஒன்று பணம் விளையாடுகிறது.

சும்மா ஒரு ஆடம்பர கடை போட்டாலே வெள்ளை வான் தந்து நிற்கிறது .இதற்குள்ள அம்மணியை செய்திட இலங்கை அரசு விட போகிறதா என்ன .

காதில பூ கந்தசாமி .ஆனால் அவருக்கு எம் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் .

No posts found.
மீன்பூனை நடமாடுவதால் முடங்கிய மக்கள் |இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

மீன்பூனை நடமாடுவதால் முடங்கிய மக்கள் |இலங்கை செய்திகள்

மீன்பூனை நடமாடுவதால் முடங்கிய மக்கள் |இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காசல்ரீ லெதன்டி தோட்டக் குடியிருப்புகளுக்கு அண்மையில், மீன்பூனை(Fish cat) நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் அந்த தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் பெரும் அச்சத்துடன் ஒவ்வொரு நாளையும் கழித்துக்கொண்டிருக்கின்றனர்.

மீன்பூனைகள் தங்களுடைய குட்டிகளுடன் இவ்வாறு நடமாடுகின்றன. பற்றைக்காட்டுக்குள் வசிக்கும் இவ்வாறான மீன்பூனைகள், வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான நாய்கள், கோழிகளை கொன்று தின்றுவிடுகின்றன என்றும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

மீன்பூனை நடமாடுவதால் முடங்கிய மக்கள் |இலங்கை செய்திகள்

இவ்வாறு, நேற்று (21) சுற்றித்திரிந்த மீன்பூனைகள் தொடர்பில், நல்லத்தண்ணி வனஜீவராசிகள் காரியாலய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, தோட்டத்துக்கு விரைந்த அதிகாரிகள், மீன்பூனைகளின் நடமாட்டத்தை அவதானித்தனர்.

தோட்டங்களுக்கு அண்மையில் இருக்கும் பற்றைக்காடுகளுக்கு தீ மூட்டுவதால், இவ்வாறான மிருகங்கள், குடியிருப்புகளை நோக்கி படையெடுக்கின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மீன்பிடி பூனைகள் மனிதர்களுக்கு எவ்விதமான
தீங்குகளையும் விளைவிக்காத போதிலும்,
செல்லப்பிராணிகளை கொன்று தின்றுவிடுகின்றன என மக்கள் தெரிவித்துள்ளனர்.

No posts found.
காரை ஏற்றி நாய்க்குட்டிகளைக் கொன்ற பெண்ணுக்குப் பிணை|இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

காரை ஏற்றி நாய்க்குட்டிகளைக் கொன்ற பெண்ணுக்குப் பிணை|இலங்கை செய்திகள்

காரை ஏற்றி நாய்க்குட்டிகளைக் கொன்ற பெண்ணுக்குப் பிணை|இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |நாய் குட்டிகள் இரண்டின் மீது காரொன்றை ஏற்றிய குற்றச்சாட்டின் கீழ் 27 வயதான பெண் ஓட்டுனர் மதுரட்ட பொலிஸாரால் கைது செய்யப் பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் ரிகிலகஸ்கட வீதி கதுரகடே பட்டியப்பெலெல்ல பகுதியில், வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் கடந்த 17 ஆம் திகதி பதிவாகியுள்ளது.

வாகனமேற்றி நாய்க்குட்டிகள் கொல்லப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை அடுத்து மதுரட்ட பொலிஸ்க்கு கொடுக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

காரை ஏற்றி நாய்க்குட்டிகளைக் கொன்ற பெண்ணுக்குப் பிணை|இலங்கை செய்திகள்

அந்தப் பெண், பொலிஸ் நிலையத்துக்கு வாக்குமூலம் அளிக்க வந்த சமயத்தில், மிருகவதைத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட அந்தப் பெண், வலப்பன நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தப்பட்டபோது,குற்றத்தை ஒப்புக் கொண்டார்.


அதனையடுத்து ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் அப்பெண் விடுவிக்கப்பட்டார்.

No posts found.
No posts found.
புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி| இலங்கை செய்திகள்

புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – கண்டி புகையிரத பாதையின் கிரிவல்லபிட்டிய பகுதியில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (20) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

உயிரிழந்தவர் 60 வயதுடையவர் எனவும் அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் கேகாலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ரம்புக்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
பாராளுமன்றத்தினுள் போராட்டம்| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்றத்தினுள் போராட்டம்| இலங்கை செய்திகள்

பாராளுமன்றத்தினுள் போராட்டம்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |தேர்தலை நடத்துமாறு கோரி பாராளுமன்றத்தினுள் சற்றுமுன்னர் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடியது முதல் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் கோரி பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டனர்.

தேர்தலை பிற்போடுவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் முன்னிலையாகி தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்த சபாநாயகர், இன்று பிற்பகல் 2 மணிக்கு கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.

எனினும், அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் அனைத்து அரசியல்
கட்சிகளும் இருக்கையில் இருந்து எழுந்து கண்டன பதாகைகளை ஏந்தியவாறு
சபையின் நடுவில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No posts found.
இலங்கையை விட்டு ஓட்டம் பிடிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையை விட்டு ஓட்டம் பிடிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்| இலங்கை செய்திகள்

இலங்கையை விட்டு ஓட்டம் பிடிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து யப்பான் மிட்சுபிஷி மற்றும் தாய்சே நிறுவனங்கள் என்பன ஓட்டம் எடுக்கின்றன .

இதை போன்று இறுக்கமான கட்டுபாடுகள் தொடர்ந்து நீடிக்குமென்றால்,
ஜெர்மன் நிறுவனங்களும் இலங்கையில் இருந்து ,
வெளியேறும் என ஜேர்மன் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது .

தொடர்ந்து தமது அரசியலை பாதுகாக்கும் நோக்கில் ,
குறிவைத்து இலங்கை அரசு செயல்படுகிறது, என்ற குற்ற சாட்டுக்கள்
வலுப்பெற்றுள்ளன .

No posts found.
யாழில் வெள்ளை வானில் இளம் பெண் கடத்தல்| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வெள்ளை வானில் இளம் பெண் கடத்தல்| இலங்கை செய்திகள்

யாழில் வெள்ளை வானில் இளம் பெண் கடத்தல்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |யாழ்ப்பாணத்தில் வெள்ளை வானில் இளம் பெண் கடத்தப்பட்டுளளார் .யாழ்ப்பாணம் டச்சு வீதியில் வசித்து வந்த 31 வயது பெண்ணு அவரது மூன்று வயது குழந்தையும் கடத்த பட்டுள்ளது .

இந்த கடத்தலை புரிந்தவர்கள் யார் என்பது தொடர்பாக தெரியவரவில்லை .
கடத்தலை மேற்கொண்ட குழுவை, கண்டு பிடிக்கும் பணியில்
பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் .

யாழில் மீளவும் அரங்கேறி வரும் வெள்ளை வான்
கடத்தல் சம்பவங்கள், மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.
ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் இலங்கையில் எகிறும் கொலைகள்
Posted in இலங்கை செய்திகள்

பிள்ளைகளின் பசியை போக்க உயிரை விட்ட தாய் |இலங்கை செய்திகள்

பிள்ளைகளின் பசியை போக்க உயிரை விட்ட தாய் |இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |நான்கு பிள்ளைகளின் தாயொருவர் தனது பிள்ளைகளின் பசியை போக்குவதற்காக தனது தோட்டத்தில் உள்ள பலா மரத்தில் ஏறி பலாக்காய் பறிக்க முற்பட்ட போது மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கம்பளை, நாரங்விட்ட பண்டாரவத்த பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய போபவிட்ட கெதர சாந்தி குமாரி என்ற நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவருக்கு நான்கு மகள்கள் உள்ளனர், அவர்களில் மூன்று பேர் பாடசாலை செல்லும் வயதுடையவர்கள்.

சாந்தியின் கணவர் தனியார் துப்புரவு நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

பிள்ளைகளின் பசியை போக்க உயிரை விட்ட தாய் |இலங்கை செய்திகள்

கணவனின் வருமானம் குடும்ப செலவுகளை பராமரிக்க போதாததால் அவர்கள் கடும் சிரமத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 10 ஆம் திகதி மதிய உணவை தயார் செய்வதற்காக பலாமரத்தில் ஏறி பலாக்காய் ஒன்றை பறிக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது மரத்தில் இருந்து தவறி விழுந்த குறித்த தாய் படுகாயமடைந்துள்ளார்.

பின்னர் கிராம மக்களின் உதவியுடன் கம்பளை வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் 5 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

No posts found.
பேருந்துக்கு அடியில் இருந்து நபரொருவரின் சடலம் மீட்பு| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

பேருந்துக்கு அடியில் இருந்து நபரொருவரின் சடலம் மீட்பு| இலங்கை செய்திகள்

பேருந்துக்கு அடியில் இருந்து நபரொருவரின் சடலம் மீட்பு| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |நோர்டன்பிரிட்ஜ் தியகல வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தின் பின்னர் பஸ்ஸுக்கு அடியில் புதையுண்டிருந்த இளைஞனின் சடலம் லக்ஷபான இராணுவ முகாம் படையினர் மற்றும் நோர்டன்பிரிட்ஜ் பொலிஸ் அதிகாரிகளால் இன்று (20) காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஹிக்கடுவ களுபே பகுதியைச் சேர்ந்த டிலான் கௌசல்யா என்ற 33 வயதுடைய நபரின் சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (19) இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில், 26 பேர் காயமடைந்து , இரண்டு யுவதிகள் உயிரிழந்திருந்த நிலையில், பேருந்தில் வந்த ஒருவர் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து
பேருந்தை சோதனையிட்ட போது காணாமல் போன இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தலை நடத்த வேண்டாம் என்ற மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு| இலங்கை செய்திகள்

தேர்தலை நடத்த வேண்டாம் என்ற மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |ஓய்வூ பெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மற்றுமொரு மனுவை ஆராய்வதற்கு தேவையில்லை என அவரது சட்டத்தரணி உயர்நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலை ஒத்தி வைக்குமாறு உத்தரவொன்று பிறக்க கோரி, ஓய்வூ பெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தரவினால் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் இந்த மனுவை, 23ம் திகதிக்கு முன்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை ஆராய்வதற்கு தேவையில்லை என அவரது சட்டத்தரணி உயர்நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் 23ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

No posts found.
விபத்தில் கர்ப்பிணி மரணம்
Posted in இலங்கை செய்திகள்

கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கடற்படை சிப்பாய்| இலங்கை செய்திகள்

கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கடற்படை சிப்பாய்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |பிறந்தநாள் விழாவின் போது கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கடற்படை சிப்பாய் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், கணேமுல்ல அமுனுகொட வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

உதைக்கு இலக்கான நான்கு மாத கர்ப்பிணிப் பெண், பொரளை டி சொய்சா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், உதையால் கரு அழிந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகத்திற்குரிய கடற்படை சிப்பாயின் சகோதரி ஒருவரின் வீட்டில் பிறந்தநாள் நிகழ்வு இடம்பெற்றதுடன் அதில் இந்த கடற்படை சிப்பாயும் கலந்துகொண்டார்.

இந்த கடற்படை சிப்பாயின் சகோதரியின் கணவரின் சகோதரர் ஒருவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகமடைந்த இராணுவ வீரர், தன்னையும் தாக்கியதாகவும், கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் பலமுறை உதைத்ததாகவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

உதைக்கப்பட்ட கர்ப்பிணி தரையில் வீழ்ந்ததாகவும் கூறப்படுகின்றது.கர்ப்பிணிப் பெண்ணை உதைத்ததாகக் கூறப்படும் கடற்படைச் சிப்பாய்
சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டதுடன் அவர் புல்முடே பிரதேசத்தில் உள்ள முகாமில் பணிபுரிந்து வந்தார்.

தடம் புரண்ட ரயில் போக்குவரத்து பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் கார் பஸ் மோதல் |இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் கார் பஸ் மோதல் |இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் | கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இடம்பெற்ற பச மோதியது .


என்னினும் பஸ்சில இருந்த பயணிகள் காயங்கள் இன்றி தப்பித்து கொண்டனர் .

ரயில்வே கடவையை கடக்கும் பொழுதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
மேலும் கார் ஒன்றும் சேதமடைந்துள்ளது .

No posts found.
கோடீஸ்வரர் விபச்சார நிலையம் முற்றுகை |இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

கோடீஸ்வரர் விபச்சார நிலையம் முற்றுகை |இலங்கை செய்திகள்

கோடீஸ்வரர் விபச்சார நிலையம் முற்றுகை |இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் | இலங்கை கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி ,ஆடம்பர வீடொன்றில் இரகசியமாக இயங்கி வந்த விபச்சார நிலையம் முற்றுகையிட பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் இருந்து இலங்கை வந்தடைந்த ,
பெண்களை வைத்து நடத்த பட்ட விபச்சார நிலையமே
முற்றுகைக்கு உள்ளாகியுள்ளது .

இங்கு குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகள் மற்றும் பணம் ,,
மது போத்தல்கள் உள்ளட்டவை மீட்க பட்டுள்ளன .

காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்தே
இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்க பட்டுள்ளதாக ,
இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

இலங்கையில் இதற்கு முன்னரும், இவ்வாறான விபச்சார நிலையங்கள்,
சிக்கி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .

No posts found.
பிரான்சிய தூதுவர் பிரான்கொயிசுடன் மனோ கணேசன் எம்பி உதயகுமாருடன் சந்திப்பு |இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

பிரான்சிய தூதுவர் பிரான்கொயிசுடன் மனோ கணேசன் எம்பி உதயகுமாருடன் சந்திப்பு |இலங்கை செய்திகள்

பிரான்சிய தூதுவர் பிரான்கொயிசுடன் மனோ கணேசன் எம்பி உதயகுமாருடன் சந்திப்பு |இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |இலங்கைக்கான பிரான்சிய தூதுவர் ஜீன் பிரான்கொயிஸ் பேச்லட்டை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி சந்தித்துள்ளார். இதன்போது கூட்டணி சார்பாக நுவரெலியா மாவட்ட எம்பி உதயகுமார் மற்றும் பிரான்சிய தூதரகம் சார்பாக நயன கணேசன் ஆகியோரும் உடன் இருந்துள்ளனர்.

பிரான்சிய தூதரகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு பற்றி மனோ கணேசன் எம்பி கூறியதாவது,

இலங்கை அரசியல் பரப்பில் இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்கள் தொடர்பில் அறிவதில் தற்போது சர்வதேச சமூகம் பெரிதும் காட்ட தொடங்கி இருக்கும் விசேட அக்கறையை நாம் மீண்டும், மீண்டும் கோரிக்கைகளை விடுத்து உருவாக்கியுள்ளோம்.

இதன் வெளிப்பாடாகவே பிரான்சிய தூதுவர் ஜீன் பிரான்கொயிஸ் பேச்லட் உடனான இந்த நட்புரீதியான சந்திப்பு நடைபெற்றது. மிகவும் அக்கறையுடன் இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்கள் எதிர் நோக்கும் அரசியல், சமூக, பொருளாதார சவால்கள் தொடர்பில் தூதுவர் பிரான்கொயிஸ் கேட்டு

பிரான்சிய தூதுவர் பிரான்கொயிசுடன் மனோ கணேசன் எம்பி உதயகுமாருடன் சந்திப்பு |இலங்கை செய்திகள்

அறிந்துக்கொண்டார். இனிமேல் பிரான்சிய குடியரசின் இலங்கை தொடர்பான கொள்கையில் இங்கு வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்களுக்கும் உரிய இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான ஒரு நாடான பிரான்ஸ், இலங்கையின் இன்றைய கடன் சீரமைப்பு முயற்சிகளுக்கு எந்தளவு ஒத்துழைப்பு வழங்குகிறது என்பது பற்றியும், தூதுவர் பிரான்கொயிஸ் எமக்கு விளக்கி கூறினார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி தொகுத்துள்ள மலையக மக்களின்
அரசியல் அபிலாசை ஆவணத்தில் இடம்பெற்றுள்ள “நிலவரம்பற்ற சமூக சபை”தொடர்பில் பிரான்ஸ் நாட்டின், அதேபோல் ஐரோப்பிய ஒன்றியத்தின்


அனுபவங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பில் நமக்கிடையே மேலும்
உரையாடல்களை முன்னெடுக்கவும் தூதுவர் பிரான்கொயிஸ் தனது அக்கறையையும்,ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார்

No posts found.
யாழில் சிக்கியய பெரிய முதலை
Posted in இலங்கை செய்திகள்

முதலையிடம் சிக்கி மயிரிழையில் உயிர் தப்பிய பிக்கு| இலங்கை செய்திகள்

முதலையிடம் சிக்கி மயிரிழையில் உயிர் தப்பிய பிக்கு| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |பேருவளை பிரதேசத்திலிருந்து கதிர்காமத்துக்கு யாத்திரைச் சென்ற பிக்கு ஒருவர், முதலையிடம் சிக்கி மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் (17) பதிவாகியுள்ளது.

குறித்த பிக்கு 17ஆம் திகதி இரவு 7 மணியளவில் மாணிக்கக்கங்கையில் நீராடிக்கொண்டிருந்த போது, அங்கிருந்த

முதலையொன்று பிக்குவின் முதுகை தாக்கியுள்ளது. இதன்போது பிக்கு முதலையிடமிருந்து தப்புவதற்காக முயற்சித்த போது அது பிக்குவின்

கையையும் கடித்து காயப்படுத்தியதையடுத்து, பிக்கு உடனடியாக மாணிக்கக் கங்கையிலிருந்து வெளியேறியுள்ளார்

இதனையடுத்து அருகிலிருந்தவர்களால் பிக்கு உடனடியாக கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No posts found.
80 அடி பள்ளத்துக்குள் விழுந்த பௌசர்| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

80 அடி பள்ளத்துக்குள் விழுந்த பௌசர்| இலங்கை செய்திகள்

80 அடி பள்ளத்துக்குள் விழுந்த பௌசர்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |நுவரெலியா -பதுளை வீதியில் ஹக்கல பகுதியில் இன்று (19) அதிகாலை எரிபொருள் (சிபேட்கோ) பௌசர் விபத்துக்குள்ளானதில் அதன் சாரதியும் உதவியாளரும் காயமடைந்துள்ளனர்.

கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து – கெப்பட்டிபொல எரிபொருள் நிலையத்திற்கு டீசல் ஏற்றிச் சென்ற பௌசரே ஹக்கல பூங்கா பகுதியில் சுமார் 80 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

சீரற்ற வானிலையால் சாரதியின் கட்டுப்பாட்டை மீறி வாகனம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த பௌசரில் 13,200 லீற்றர் டீசல் இருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் குறித்த பௌசர் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன்,
மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
காவல்துறை வேட்டை 35 பேர் அதிரடியாக கைது |இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

காவல்துறை வேட்டை 35 பேர் அதிரடியாக கைது |இலங்கை செய்திகள்

காவல்துறை வேட்டை 35 பேர் அதிரடியாக கைது |இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |ஹட்டன் பொலிஸ் கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக சுற்றுலா பயணிகளை சோதனை செய்த போது பல்வேறு போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க சென்ற சுமார் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் கோட்ட குற்றத்தடுப்பு பிரிவக் பொறுப்பதிகாரி பிரேமலால் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் பெற்றோர்கள் இன்றி நண்பர்களுடனும் அயலவர்களுடனும் இணைந்து சிவனொளிபாதமலை தரிசிப்பதற்காக வருகை தந்தவர்கள் என்றும் இவர்கள் சுமார் 18 வயதிற்கும் 35 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காவல்துறை வேட்டை 35 பேர் அதிரடியாக கைது |இலங்கை செய்திகள்

ஹட்டன் மோப்ப நாய் பிரிவின் ஸ்டூவட் என்ற மோப்ப நாயின் உதவியுடன் நேற்று (18) திகதி கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் யட்டிபேரிய பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, ஹோமாகம, பொலன்நறுவை உள்ளிட்ட நாட்டின் பல பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர்களிடமிருந்து கேரள கஞ்சா 50 கிராம், மதன மோதக்க 120 கிராம், 12 போதை மாத்திரை, 500 மில்லிகிராம் ஏஸ் போதைப்பொருள், உள்ளிட்ட போதை

பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் இவர்கள் அனைவரையும் இன்று (19) ம் திகதி ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்வதற்கான
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No posts found.
இராணுவ மேஜர் வீட்டில் கை வைத்த திருடன்| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

இராணுவ மேஜர் வீட்டில் கை வைத்த திருடன்| இலங்கை செய்திகள்

இராணுவ மேஜர் வீட்டில் கை வைத்த திருடன்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள புனானை பகுதியில் ஒய்வு பெற்ற இராணுவமேஜர் வீட்டில் 7 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான 4 பவுண் தங்க ஆபரணங்களை திருடிச் சென்ற திருடன் ஒருவரை நேற்று (18) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

குறித்த பிரதேசத்திலுள்ள ஒய்வு பெற்ற இராணுவ மேஜர் வீட்டில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 25 ம் திகதி வீடடில் அனைவரும் இருந்துள்ள நிலையில் அங்கு வந்து சென்ற நபர் அங்கிருந்து தங்கசங்கலி காப்பு, தோடு என்பவற்றை திருடிச் சென்றுள்ளார்.

இராணுவ மேஜர் வீட்டில் கை வைத்த திருடன்| இலங்கை செய்திகள்

இந்த நிலையில் பொலிசாருக்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிசார் திருடனை நேற்று கைது செய்துள்ளனர்.

திருடப்பட்ட தங்க ஆபரணங்களை திருடன் நீர் கொழும்பில் உள்ள அடகு கடைகளில் அடகு வைத்து 5 இலச்சத்து 50 ஆயிரம் ரூபாவை

பெற்றுள்ளதாகவும் அவற்றை கைப்பற்றுவதற்காக நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை
பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
ஒருவர் சுட்டு கொலை | இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் சுட்டு கொலை | இலங்கை செய்திகள்

ஒருவர் சுட்டு கொலை | இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |ஹம்பாந்தோட்டை – வீரகெட்டிய பகுதியில் நபர் ஒருவர் மீது துப்பாககி சூட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த சூட்டு சம்பவத்தில் அவர் சம்பவ இடத்தில் பலியாகியுளளார்

மோட்டார் சைக்கிள் ஒட்டி சென்றவர்கள் நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலிலேயே இவர் பலியாகியுள்ளார் .

குறித்த சூட்டு சம்பவம் தொடர்ப்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

No posts found.
2023 ஆம் ஆண்டுக்கான அகல் விருது வழங்கள் விழா |இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

2023 ஆம் ஆண்டுக்கான அகல் விருது வழங்கள் விழா |இலங்கை செய்திகள்

2023 ஆம் ஆண்டுக்கான அகல் விருது வழங்கள் விழா |இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |பயன்களை எதிர்பாராமல் நன்நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சமூக சேவைகளை, சமூக வெளியில் கொண்டு
செல்லாம் பல்வேறுபட்ட உதவிகளைச் செய்து வருகின்றவர்ளூடாக,
கற்றுக்கொண்ட பாடங்களையும், அவர்களின் முன்மாதிரியான


செயற்றிட்டங்களைப்பற்றி இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக
முன்னிருத்தி செயற்படவேண்டும்.

அப்போதுதான் இளம் தலைமுறையினர்
இவ்வாறான பணிகளைச் செய்ய முன்வருவார்களென சமூக சேவைகள்
திணைக்களத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ஏ.ஜி.தெய்வேந்திரன் தெரிவித்தார்.

திருகோணமலை அன்பின் பாதை சமூகத்தின் ஒருங்கிணைப்பின்
கீழ் “விளிம்புநிலை மக்களின் வாழ்வை ஒளியேற்ற தம் வாழ்நாளினை
அர்ப்பணிக்கும் பெருமக்களை கொண்டாடி மகிழல்”


என்ற தொனிப்பொருளில் அறம் செய்வோம்
அறக்கட்டளையின் முதலாவது அகல் விருது –
2023 வழங்கள் விழா இன்று (18) திருகோணமலை
நகரசபை நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இவ்விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், சமூக சேவைகளைச்
செய்யவேண்டும் என்ற நன்நோக்கில் இளம் வயதிலிருந்தே
தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்பட்டுவருகின்ற

2023 ஆம் ஆண்டுக்கான அகல் விருது வழங்கள் விழா |இலங்கை செய்திகள்


சன்முகா மகளிர் இல்லத்தின் முகாமையாளர்
செல்வி விமலா நடராஜாவின் சமூக சேவைகளைப் பாராட்டியாக
வேண்டும்.

அவர் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு
மறைமுகமாக பல்வேறுபட்ட சமூக சேவைகளைச் செய்து
வருவதென்பது மிக இலகுவான விடயமல்ல.

அது கடும் சவால் மிக்கதொன்றாகும்.
இவ்வாறான பணிகளைச் செய்து வருகின்றவர்கள் தங்களின்
சேவைகள் சமூக வெளியில் கொண்டு செல்வதை எதிர்பார்ப்பதும் இல்லை,
விரும்புவதும் இல்லை.

இவரைப்போன்ற பலர் இன்னும் மறைமுகமாக இருந்துகொண்டு
செயற்பட்டு வருவார்கள். அவ்வாறானவர்களையும் அறம் செய்வோம்
அறக்கட்டளை அடையாளம் கண்டு அவர்களின் நற்செயற்பாட்டினை


இளம் தலைமுறையினர்களுக்கு எடுத்துக்காட்டி அவர்களையும்
இவ்வாறான சமூக செயற்பாடுகளை முன்னெடுக்க நாம் உதவி புரியவேண்டும்.

அறம் செய்வோம் அறக்கட்டளை கடந்த மூன்றாண்டு
காலமாக இலங்கையிலுள்ள காப்பகங்கள், வலையமைப்புக்கள்,
சமூக சேவை நிறுவனங்கள் ஊடாக சிறுவர்கள்,விசேட தேவையுள்ளோர் மற்றும் முதியோர்களின் வாழ்வை மேம்படுத்த பல உதவிகளைச் செய்து வருகின்றார்கள்.

அவர்கள் மக்களின் மேம்பாட்டிற்காகவே தங்களின் நேரகாலங்களைச்
செலவிடுகின்றனர். அவர்களின் சேவைகளுக்கு எங்களாலான
உதவிகளைச் செய்ய முன்னிப்போம் என்றார்.

இவ்விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக நன்நடத்தை
மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் கிழக்கு மாகாண
ஆணையாளர் (திருமதி) றிஸ்வாணி றிபாஸ், சமூக சேவைகள்


திணைக்களத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ஏ.ஜி.தெய்வேந்திரன்
மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி சுபாசினி சித்திரவேல் உள்ளிட்ட பல அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கடந்த பல ஆண்டு காலமாக, தன்னலமற்ற ஒன்றிணைந்த
எண்ணிலடங்கா சமூக சேவைகளைச் செய்துவருகின்ற
சன்முகா மகளிர் இல்லத்தின் முகாமையாளர் செல்வி


விமலா நடராஜாவுக்கு பொன்னாடை போர்த்தி 2023
ஆம் ஆண்டுக்கான அகல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுன்
அவருக்கு 2 இலட்சம் ரூபா பணமும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அபு அலா

No posts found.