உன்னை நினைக்கையில் புதிய காதல்பாடல்
Posted in பாடல்கள்

உன்னை நினைக்கையில் புதிய காதல்பாடல்

உன்னை நினைக்கையில் புதிய காதல்பாடல்


உன்னை நினைக்கையில் புதிய காதல் பாடல் |இளங்கோ செல்லப்பா |பாவேந்தன் | அருளினி லண்டன் |new tamil songs
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசை – இளங்கோ செல்லப்பா


பாடல்வரிகள் – அருளினி லண்டன்
-தயாரிப்பு – சந்தன் லண்டன்
வெளியீடு – எதிரி இணையம்

வன்னிமைந்தன் டிக்டாக் தளத்தின் ஊடாக அறிமுக படுத்திய ஒன்பதாவது பாடலாசிரியர் .இவரை அறிமுக ப்படுத்திய இளங்கோ செல்லப்பா அவர்களுக்கு மிக்க நன்றிகள்.


|இளங்கோ செல்லப்பாசிறந்த இசையில் |மதுக்குரோலன் பாவேந்தன் பாடி அசத்தியுள்ளார் .


|வன்னி மைந்தனின் எதிரி இணையம் வெளியீடு செய்துள்ளது . srilanka tamil song

இணைப்பில் அழுத்தி காணொளி பார்க்க

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னை நினைத்தால் அழுகை வரும் ..!

உன்னை நினைத்தால் அழுகை வரும் ..!

இன்றைய பொழுதில் எம் நிகழ்வு
இதயமே உனக்கு தெரிகிறதா
இன்றைய நாளில் இணைந்தோம்
இன்றந்த நாள் புரிகிறதா

ஆண்டுகள் நூறு கழிந்தாலும்
அதுபோல் சுகமொன்று மீள்வருமா
அத்தனை ஆனந்தம் அதிலிருக்கு
அன்பே உனக்கு தெரிகிறதா

துளியாய் கழிந்த நிமிடங்களை
தூசி தட்டி பார்த்திடுவாய் – கண்
தூரிகையால் எனை வரைந்த
துடிப்பை நீயும் புரிந்திடுவாய்

கொட்டிய கண்ணீர் துளிகளையே – ஒரு
கொள்கலன் கொண்டு நிரப்பிடலாம்
கொண்டை கலைந்த நிமிடங்களை
கொட்டி சேதி சொல்லிடலாம்

பக்கத்தில் நீ இருந்த நிமிடங்களோ – ஒரு
பட்டி பொங்கல் போலிருக்கும் – இன்று
பக்கங்கள் திறந்து பார்க்கையிலே
பார்விழி இரண்டில் நீர் இருக்கும் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 02-06-2022

வன்னி மைந்தன் கவிதைகள்