ரஷ்ய அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை
Posted in உலக செய்திகள்

ரஷ்ய அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை

ரஷ்ய அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை

ரஷ்ய ; உக்கிரேன் நாட்டில் முழுமையாக நுழைந்து தமது இராணுவத்தினருக்கு எதிராக அமெரிக்கா இராணுவம் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளதாக ரஷ்ய குற்றம் சுமத்தியுள்ளது.

தமது உளவுத்துறை ஆதாரங்களுடன் இந்த தகவலை திரட்டியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஸ்யாவின் இந்த நேரடி அறிவிப்பு அமெரிக்கா மற்றும் நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

இதுவே மேலும் பலமான போரினை நாடுகள் ரீதியில் ஏற்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

உக்கிரேன் நாட்டையும் அதன் இராணுவத்தையும் தமது இராணுவம் பாதுகாக்கும் என அமெரிக்கா பிரிட்டன் தொடர்ந்து
தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது.

அமெரிக்கா வெள்ளத்தில் சிக்கி 37 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா வெள்ளத்தில் சிக்கி 37 பேர் மரணம்

அமெரிக்கா வெள்ளத்தில் சிக்கி 37 பேர் மரணம்

அமெரிக்கா கென்டிக்கி பகுதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை 37 பேர் மரண மாகியுள்ளனர் .

மேலும் 12 ஆயிரம் பேர் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர் ,

நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் அழிந்துள்ளன .

இங்கே ஏற்பட்ட வெள்ள பெருகினால் பல மில்லியன் டொலர் சொத்து சேதங்கள் ஏற்பட்டுள்ளன .

தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

அமெரிக்கா வெள்ளத்தில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது.

    அமெரிக்காவில் கோர விபத்து 7 பேர் உடல் சிதறி மரணம்
    Posted in உலக செய்திகள்

    அமெரிக்காவில் கோர விபத்து 7 பேர் உடல் சிதறி மரணம்

    அமெரிக்காவில் கோர விபத்து 7 பேர் உடல் சிதறி மரணம்

    அமெரிக்கா சிக்காக்கோ பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கி ஏழுபேர் பலியாகியுள்ளனர்

    கார் மாற்றும் வான் என்பன நேரெதிர் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .

    இரண்டு வாகனங்களும் மோதிய வேளையில் கார் வெடித்து தீ பற்றி கொண்டது .

    ஐந்து சிறுவர்கள் உள்ளிட்ட ஏழுபேர் பலியாகியுள்ளனர்.

    சிறுவரக்ளை ஏற்றிய வண்ணம் காரை ஓட்டி சென்ற பெண் தவறான வழியூடாக காரினை செலுத்தி சென்ற நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

    ஏன் இவ்வாறு தவறான வழியின் ஊடாக சிறுவர்களுடன் காரினை செலுத்தி சென்றார் என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .


    காயமடைந்த இருவர் உலங்குவானூர்தி மூலம் மருத்துவ மனைக்கு எடுத்து செல்ல பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

    அமெரிக்காவில் இடம்பெற்ற இந்த கோர விபத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

      Posted in உலக செய்திகள்

      அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல்

      அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல்

      ஈராக் Saladin பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா இராணுவ வாகன தொடரணியை இலக்கு வைத்து கண்ணிவெடி தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது.

      இதில் அமெரிக்கா வாகன தொடரணி பலத்த சேதங்களை சந்தித்துள்ளது .


      இந்த வீதியோர கண்ணிவெடி தாக்குதலில் அமெரிக்கா இராணுவத்தின் கவசவண்டிகள் சேதமடைந்துள்ளது.

      இவ்வேளை அதில் பயணித்த இராணுவத்தினர் பலியாகியும் காயமடைந்துள்ளனர்.

      எனினும் அமெரிக்கா இராணுவம் தமது இழப்புக்களை வெளியிடவில்லை.

      தொடர்ந்து ஈராக்கில் அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

        Posted in உலக செய்திகள்

        அமெரிக்கா வெள்ளத்தில் 25 பேர் மரணம்

        அமெரிக்கா வெள்ளத்தில் 25 பேர் மரணம்

        அமெரிக்கா கென்டிக்கி பகுதியி ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை இருபத்தி ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.

        வெள்ள நீர் தொடர்ந்து வடியா நிலையில் காணப்படுவதால் மக்கள் வீடுகளில் இருந்து அகற்ற பட்டுள்ளனர்.

        நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.மின்சாரம் முற்றாக துண்டிக்க பட்டுள்ளது .

        வெள்ளத்தில் சிக்கிய பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

        அமெரிக்கா வெள்ளத்தில் 25 பேர் மரணம்
        அமெரிக்கா வெள்ளத்தில் 25 பேர் மரணம்


        குறித்த பகுதி எங்கும் அவசரகால பிரகடன படுத்த பட்டு உதவி சேவைகள் வழங்க பட்ட வண்ணம் உள்ளது.

        மின்சாரம் தொலைத் தொடர்புகள் என்பன துண்டிக்க பட்டுள்ளன .

        அமெரிக்காவில் இடம்பெற்ற இந்த வெள்ள பெருக்கில் உயிர் இழப்புக்கள் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .

        அமெரிக்கா அதிபர் பாதிக்க பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்குபடி பணித்துள்ளார்.

          Posted in உலக செய்திகள்

          வெள்ளத்தில் மிதக்கும் அமெரிக்கா 16 பேர் பலி

          வெள்ளத்தில் மிதக்கும் அமெரிக்கா 16 பேர் பலி

          அமெரிக்கா Kentucky பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 16 மக்கள் பலியாகியுள்ளனர் .

          மேலும் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்ல பட்டுள்ளது .

          .இந்த வெள்ளத்தில் சிக்கி இருபத்தி மூவாயிரம் மக்கள் மின்சாரம் இன்றி தவித்த வண்ணம் உள்ளனர்.


          மீட்பு படையினர் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்.

          Kentucky ஆளுநர் பாதிக்க பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகள் வழங்க பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.


          வீடுகள் வெள்ளத்தில் மூக்கியுள்ளதால் பல மில்லியன் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளது .

          வெள்ளநீர் தொடர்ந்து நீடித்து செல்வதால் மக்கள் பெரும் இடர்களுக்கு உள்ளாகியுள்ளனர் .


          வாகனங்கள் என்பன வெள்ள நீரில் அடித்து செல்ல படும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

          இந்த அமெரிக்கா வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பு அதிகரிக்க படலாம் என எதிரி பார்க்க படுகிறது .

            Posted in இலங்கை செய்திகள்

            அமெரிக்கா இலங்கை திடீர் சந்திப்பு

            அமெரிக்கா இலங்கை திடீர் சந்திப்பு

            பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

            பிரதமர் அலுவலகத்தில் நேற்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

            நாட்டின் பொருளாதார சவால்களை சமாளிக்க அமெரிக்கா எந்த வழிகளில் ஆதரவை வழங்க முடியும் என்பது குறித்து இதன்போது கவனம்

            செலுத்தப்பட்டதாக அமெரிக்க தூதர் ஜூலி சங் தனது ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

            சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான உரிய நடைமுறைகள் குறித்தும் இரு தரப்பினருக்கும் இடையில் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளது.

            நீதிக்கான அணுகல் மற்றும் சட்டத்தின் ஆட்சி குறித்தும் விரிவாக
            கலந்துரையாடப்பட்டதாக அமெரிக்க தூதுவர் தனது டுவிட்டர் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

              Posted in உலக செய்திகள்

              தாய்வான் விவகாரம் அமெரிக்கா சீன அதிபர்கள் போனில் பேச்சு

              தாய்வான் விவகாரம் அமெரிக்கா சீன அதிபர்கள் போனில் பேச்சு

              தாய்வான் விவகாரம் தொடர்பில் சீனா அதிபர் மற்றும் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோர் தொலைபேசி மூலம் பேச்சில் ஈடுபட்டனர்.

              இந்த பேச்சின் மூலமாக தாய்வானை ஆக்கிரமிக்க முனையும் சீனா விட்டு கொடுப்புகளுடன் பதட்டத்தை தணிக்குமா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது .

              விசேட தாக்குதல் மூலம் தாய்வானை ஆக்கிரமிக்கும் நகர்வில் சீனா ஈடுபட கூடும் என எதிர் பார்க்க படுகிறது.

              அதனால் அமெரிக்கா சீனாவுடன் அவசரமாக தொலைபேசி மூலம் பேச்சுக்களில் ஈடுபட்டதாக தெரிவிக்க படுகிறது.

              இந்த சீனா அமெரிக்காவுக்கு இடையிலான பேச்சு சுமுகமாக முடிந்துள்ளதா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது.

                Posted in இலங்கை செய்திகள்

                அமெரிக்காவில் 9 இலங்கையர்கள் தலைமறைவு

                அமெரிக்காவில் 9 இலங்கையர்கள் தலைமறைவு

                அமெரிக்கா , இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற ஒன்பது இலங்கையர்கள் தலைமறைவாகியுள்ளனர் .

                அமெரிக்காவினால் வழங்க பட்ட கப்பலை இலங்கைக்கு எடுத்து வரும் முயற்சியில் இலங்கையில் இருந்து அமெரிக்கா சென்றவர்களில் ஒன்பது பணியாளர்களே இவ்விதம் தலைமறைவாகியுள்ளனர்.

                இவ்விதம் அமெரிக்காவில் காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  கோத்தபாயாவுக்கு எதிரான கையெழுத்துப் போராட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் பங்கெடுப்பு

                  கோத்தபாயாவுக்கு எதிரான கையெழுத்துப் போராட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் பங்கெடுப்பு

                  உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌சவினை கைது செய்து நீதியின் முன் நிறுத்தக் கோரும் கையெழுத்து போராட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்து வருகின்றனர்.

                  சிங்கப்பூரில் தற்போது கோத்தபாயாவுக்கு எதிரான கையெழுத்துப் போராட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் பங்கெடுப்பு நிலைகொண்டுள்ள நிலையில், அந்நாட்டு சட்டமா அதிபரை நோக்கியதாக இந்தக் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

                  குறுகியகால விசாவில் தங்கியிருக்கும் கோத்தபாய இராஜபக்‌சே, எந்த சமயத்திலும் சிங்கப்பூரை விட்டு வெளியேறும் நிலை காணப்படுவதால், உலகத் தமிழர்கள் அனைவரும் விரைவாக கையெழுத்திட்டு இதற்கு வலுச்சேர்க்க வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தது.

                  இந்நிலையில் பிரான்ஸ் தமிழர்களின் கொண்டாட்டமாக இருக்கின்ற தமிழர் விளையாட்டு விழாவில் பங்கெடுத்திருந்த மக்கள், ஆர்வத்துடன் இக்கையெழுத்து போராட்டத்தில் பங்கெடுத்திருந்ததோடு, இனப்படுகொலைக்கு எதிரான தமது உணர்வலைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

                  கைபேசி செயலிவாயிலாகவும், பிரதி ஒப்பங்களாகவும் இப்போராட்டத்தில் மக்கள் பங்கெடுத்திருந்தனர்.

                  குறித்த https://chng.it/rQVfCj4KdQ இந்த இணைப்பின் ஊடாக அனைவரும் இலகுவாக பங்கெடுத்துக் கொள்ள முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                  கோத்தபாய இராஜபக்சே, இனப்படுகொலை, மானிடத்திற்கெதிரான குற்றம் மற்றும் போர்க் குற்றங்களைப் புரிந்ததற்கான நம்பத்தகுந்த சாட்சியங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகள் அறிக்கைகள் கூறியுள்ளன.

                  1948ம் ஆண்டு இன அழிப்புச் சட்டத்தின் கீழும், 1949ம் ஆண்டு ஜெனீவாச் சட்டங்களின் கீழும் மற்றும் 1977ம் ஆண்டு additional protocol 1 இன் கீழும் சர்வதேச சட்டங்களின் கீழ் சிங்கப்பூர் சட்டமாஅதிபரினை நோக்கி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

                  சர்வதேச சட்டங்கள் மட்டுமின்றி, சிங்கப்பூரின் உள்நாட்டுச் சட்டங்களின் அடிப்படையிலும் கூட,


                  ஜெனீவா சட்டம் தொடர்பாக சிங்கப்பூர் உள்நாட்டுச் சட்டம், சிங்கப்பூரின் குற்றவியல் சட்டத்தின் கீழும்,


                  அவரைக் கைது செய்து நீதியின் முன் நிறுத்த வேண்டிய கடமைப்பாடு சட்டமாஅதிபருக்கு உண்டு என்பதை நாம்


                  இங்கு சுட்டிக்காட்டி இருக்கின்றோம் என எனத் நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

                  https://youtu.be/FUdhloyFrO0
                    Posted in உலக செய்திகள்

                    காட்டு தீயில் எரியும் அமெரிக்கா மக்கள் தப்பி ஓட்டம்

                    காட்டு தீயில் எரியும் அமெரிக்கா மக்கள் தப்பி ஓட்டம்

                    அமெரிக்கா கலிபோனியா பகுதியில் காட்டு தீயில் சிக்கி 6000 கெட்டயர் அளவில் காடுகள் பற்றி எரிந்த வண்ணம் உள்ளது .

                    இந்த காட்டு தீயில் சிக்கி பலநூறு வீடுகள் மற்றும் வாகனங்கள் என்பன எரிந்து நாசமாகியுள்ளன .

                    இந்த பகுதியில் வசித்து வந்த மக்கள் காட்டு தீயின் அகோரம் காரணமாக வீடுகளை விட்டு அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர் .

                    கலிபோனியாவில் வேகமாக பரவி வரும் காட்டு தீயினை கட்டு படுத்த இரண்டாயிரம் தீயணைப்பு வீரர்கள் மாற்று விமானங்கள் என்பன ஈடுபடுத்த பட்டுள்ளன.

                    காட்டு தீயில் எரியும் அமெரிக்கா மக்கள் தப்பி ஓட்டம்
                    காட்டு தீயில் எரியும் அமெரிக்கா மக்கள் தப்பி ஓட்டம்

                    எனினும் இவர்கள் கட்டுப்பட்டை மீறி காட்டு தீ வேகமாக பரவி வருவதால் மக்கள் தொடர்ந்து பீதியில் உறைந்துள்ளனர்.

                    அதிக வெப்பம் காரணமாக இந்த கட்டு தீ ஏற்படுவதக தெரிவிக்க படுகிறது.

                      Posted in உலக செய்திகள்

                      அமெரிக்கா வீதி விபத்து 5 பேர் மரணம்

                      அமெரிக்கா வீதி விபத்து 5 பேர் மரணம்

                      அமெரிக்கா ,Texas ; அமெரிக்கா கிழக்கு Texas அதி வேகசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி ஐந்து பேர் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர்.

                      அமெரிக்கா டெக்ஸாஸ் வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி மேலும் பலர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்.

                      பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியதால் இந்த உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டுள்ள்ளது .

                      இந்த வீதி விபத்தினால் குறித்த வீதி போக்குவரத்து பலமணி நேரம் தடை பட்டது .

                      இந்த அமெரிக்கா வீதி விபத்து தொடர்பில் தொடர் விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன .

                        Posted in இலங்கை செய்திகள்

                        அமெரிக்கா தூதர் ரணிலுடன் திடீர் சந்திப்பு

                        அமெரிக்கா தூதர் ரணிலுடன் திடீர் சந்திப்பு

                        இலங்கை ,கொழும்பு ; இலங்கைக்கான அமெரிக்கா தூதர் ஜூலி சங் மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுக்கு இடையில் திடீர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

                        இலங்கையில் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்ற முதல் நாள் போராட்டக்கார்கள் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது.

                        இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்த அவர் இலங்கையின் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் ஆராய்ந்தார் .

                        மேலும்அமெரிக்காவின் முக்கிய கண்டிப்பான தகவலையும் ரணிலிடம் வழங்கி சென்றுள்ளார் .

                        அமெரிக்கா தூதுவரின் விரைவான சந்திப்பு இலங்கைக்கு முக்கிய விடயத்தை அமெரிக்கா வலியுறுத்தி சென்றுள்ளதை காணமுடிகிறது .

                          Posted in உலக செய்திகள்

                          அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரனோ

                          அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரனோ

                          அமெரிக்கா ,நியூயோர்க் ; அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் கொரனோ தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

                          70 வயதாகும் ஜோ பைடன் நித்திரை கொள்ள கடினப்படுகிறார் என அந்த குறிப்பில் தெரிவிக்க பட்டுள்ளது.

                          அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரனோ தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்கின்ற செய்தி ஊடாக அமெரிக்காவில் வேகமாக மீளவும் கொரனோ நோயானது பரவி வருகிறது என்பதை அமெரிக்கா தெரிவித்துள்ளது .

                          இவ்விதம் நோக்கின் விரைவில் அமெரிக்கா அடித்து பூட்டும் நிகழ்வுக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது.

                          போலந்தில் பிட்சா சாப்பிட்ட அமெரிக்கா ஜனாதிபதி

                          பிரேசில் நாட்டில் நாள் தோறும் முன்னூறுக்கு மேற்பட்டவர்கள் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகிய வண்ணம் உள்ளனர் .

                          அவ்விதம் அமெரிக்காவில் ஏற்படலாம் என எதிர்பார்க்க படுகிறது .

                          .

                            Posted in உளவு செய்திகள்

                            உக்கிரேனுக்கு விமானங்களை அனுப்பும் அமெரிக்கா தாக்குதல் தீவிரம்

                            உக்கிரேனுக்கு விமானங்களை அனுப்பும் அமெரிக்கா தாக்குதல் தீவிரம்

                            உக்கிரேன் நாட்டின் மீது ரஷ்ய இராணுவம் தாக்குதலை தொடர்ந்த வண்ணம் உள்ளது .

                            இவ்வேளை ரஷ்ய இராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து உக்கிரேன் இராணுவத்தை காப்பாற்றிட அமெரிக்கா போர் விமானங்களை வழங்குகிறது .

                            மேலும் உக்கிரேன் விமான படையினருக்கு வான் படை பயிற்சிகளையும் வழங்கி வருகிறது .

                            உக்கிரேனுக்குள் நுழைந்த நேட்டோ கப்பல்கள் விமானங்கள் பதட்டம் அதிகரிப்பு

                            உக்கிரேனுக்கு 42 உளவு விமானங்களை விற்ற துருக்கி ரசியா கண்டனம்

                            ரஷ்ய இராணுவத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தவும் .ரஷ்ய இராணுவத்தின் ஆயுதங்களை சோதனை செய்யும் முகமான பரீட்ச்சார்த்த களமாக உக்கிரேனை அமெரிக்கா , பிரிட்டன் என்பன பயன்படுத்தி வருகின்றன .

                            உக்கிரேன் இராணுவத்தில் எண்பது வீதமான படைகள் இறந்தோ அல்லது காயமடைந்து உள்ளனர் என்கிறது மேற்குலக உளவு நிறுவனம் .

                            உக்கிரேனுக்கு விமானங்களை அனுப்பும் அமெரிக்கா தாக்குதல் தீவிரம்

                            இவ்வாறாக மாற்றமடைந்து வரும் களமுனையை தனது நலன் சார்ந்த நிலையில் அமெரிக்கா மாற்றியமைத்து நகர்கிறது .

                            நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் இராணுவத்தினர் வழங்களுடன் நேரடி பயிற்சிகளையும் அமெரிக்கா வழங்கி வருகிறது.

                            அமெரிக்காவின் இந்த செயல் பாடு ரஷ்யாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உக்கிரேன் மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து பலத்த ஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது.

                            முக்கிய பகுதிகளை மீட்கும் நோக்குடன் அணுமின் உற்பத்தி நிலையங்கள் மீதும் நேரடி தாக்குதலை ஆரம்பித்துள்ளது .

                            ரஷ்ய இராணுவத்தின் இவ்வகையான தாக்குதல்கள் அமெரிக்கா மற்றும் மேற்குலகத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் முகமாக அமைந்துள்ளதை ஆடுகளம் காண்பித்து செல்கிறது .

                            உக்கிரன் ரஷ்ய போர் உலக நாடுகளில் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது .

                            மேலும் எரிபொருள் தட்டுப்பாட்டுடன் உணவு பற்றாகுறையும் நிலவி வருகிறது .உக்கிரேன் ரசியா போரானது தொடர்ந்து நீடித்து செல்லும் என்றால் உணவு தட்டுப்பாட்டால் உலகில் பஞ்ச நிலை ஏற்படும் எனப்படுகிறது .

                            உக்கிரேன் நாட்டில் போர் மூண்ட நாள் முதல் இன்றுவரை பல மில்லியன் டொலருக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்று பணத்தை அள்ளியுள்ளது .

                            தொடர்ந்து மேற்குலக முதுகில் ஏறி நின்று ஆடிவரும் உகிரேனை ,அமெரிக்கா குருதீஸ் போராளிகளை கைவிட்ட நிலையை போன்று ,உக்கிரேனிலும் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம் .

                            Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

                            சீனா கடனால் சீரழிந்தத இலங்கை உண்மையை உடைத்த அமெரிக்கா உளவுத்துறை

                            சீனா கடனால் சீரழிந்தத இலங்கை உண்மையை உடைத்த அமெரிக்கா உளவுத்துறை

                            ,

                            இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணம் சீனா வழங்கிய கடன் பொறியே என அமெரிக்கா உளவுத்துறை உண்மையை உடைத்து தெரிவித்துள்ளது.

                            அமெரிக்காவின் உளவுத்துறை தலைவர் நிகழ்வு ஒன்றில் பேசும் பொழுது இன்று இந்த பொருளாதார நெருக்கடியில் இலங்கை நாடு சிக்கி தவிக்க சீனாவின் கடன் பொறியும் அதிகமான வட்டி வீதமும் மூலம் என இடித்துரைத்துள்ளார்.

                            ஆசை காட்டி சீனா நாடுகளை கடன் நிலைக்கு தள்ளி அந்த நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நரி திட்டமே இது என்கிறது .

                            இலங்கையில் நெருக்கடி ஏற்படும் ரணில் எச்சரிக்கை

                            இலங்கையை கைவிட்ட உலக நாடுகள் பிச்சைக்கார நாடான இலங்கை

                            இலங்கை இன்று இந்த நிலையில் சிக்கி தவிக்க சீனாவே காரணம் என அமெரிக்கா உளவுத்துறை விடயத்தை போட்டுடைத்துள்ளது.

                            பவுத்த மதம் என்ற நிலையில் சீனாவுடன் ஒட்டி உறவாடிய இலங்கைக்கு இன்று இந்த பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படக்காரணமாக அமைந்தது.

                            சீனா கடனால் சீரழிந்தத இலங்கை உண்மையை உடைத்த அமெரிக்கா உளவுத்துறை

                            மேலும் சீனா வழங்கிய பல பில்லியன் டொலர் காரணமாக அதில் லஞ்ச ஊழல் மோசடி புரிந்து ஏப்பம் விட்டது மறு காரணம் என தெரிவிக்க படுகிறது.

                            சீனாவின் இந்த நெருக்கடி ஏனைய நாடுகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என அமெரிக்கா உளவுத்துறை எச்சரித்துள்ளது.


                            அப்படி என்றால் மேலும் சில நாடுகள் சீனாவின் கடன் பொறிக்குள் சிக்கியள்ளது என்பதையே அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கிறது.

                            வளர்ந்து வரும் நாடுகளில் அபிவிருத்தி என்கின்ற போர்வையில் காபட் வீதிகளை அமைக்கும் ஒப்பந்தத்தில் சீனா களம் இறங்குகிறது .

                            அதன் ஊடாக வீதிகளை அபிவிருத்தி செய்வதுடன் தனது தயாரிப்பு வாகனங்களையும் அங்கே இறக்குமதி செய்து விடுகிறது .

                            அந்த நாட்டி செல்வ செழிப்பை சுரண்டிட இவ்விதமான ஆடம்பர ஆசைகளை காண்பித்து அந்த மக்களையும் நாட்டையும் இவ்விதம் நெருக்கடியில் சிக்க வைத்து தனது அரசியல் மேலாண்மையை அந்த நாடுகளில் நிறுவி விடுகிறது .

                              Posted in உலக செய்திகள்

                              அமெரிக்கா இராணுவ தளபதி சிரியாவுக்கு திடீர் பயணம்

                              அமெரிக்கா இராணுவ தளபதி சிரியாவுக்கு திடீர் பயணம்

                              அமெரிக்காவின் Lieutenant General Michael Kurilla முக்கிய தளபதி ஒருவர் சிரியாவுக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் .

                              இவரது இந்த பயணம் அதி முக்கியதத்துவம் வாய்ந்த ஒன்றாக கருத படுகிறது.

                              அமெரிக்கா இராணுவ முகாமில் வெடிப்பு சத்தங்கள்

                              அமெரிக்கா இராணுவ தொடரணி மீது தாக்குதல்

                              சிரியா மீது அமெரிக்கா மற்றும் அதன் நேச படைகள் தாக்குதலை நடத்தி வருகின்ற பொழுதும் ரசியாவின் கடும் எதிர்ப்பினால் அது கை கூடவில்லை .

                              இவ்வாறான நிலையில் அமெரிக்கா இராணுவ தளபதி திடீர் பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிது.

                              அமெரிக்கா இராணுவத்தினர் ரசியாவினால் கைது

                              போலந்தில் முகாம் அமைக்கும் அமெரிக்கா இராணுவம்

                              அமெரிக்கா இராணுவ படையணியின் முக்கிய தளபதியின் இந்த பயணத்தின் பின்னர் முக்கிய தாக்குதல் நகர்வுகள் உள்ளடங்கி இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

                                Posted in உளவு செய்திகள்

                                ஈரான் உளவு விமானங்களை வாங்கி குவித்த ரசியா உக்கிரேனில் தாக்குதல் தீவிரம்

                                ஈரான் உளவு விமானங்களை வாங்கி குவித்த ரசியா உக்கிரேனில் தாக்குதல் தீவிரம்

                                உக்கிரன் நாட்டின் மீது போரினை தொடுத்துள்ள ரசியா நாடு பெரும் எதிர் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது.

                                உக்கிரேன் போர் முனையில் துருக்கியின் உளவு விமானங்கள் பெரும் பங்களிப்பு புரிந்து வரும் நிலையில் ரசியா ஈரானின் உளவு விமானங்களை கொள்வனவு செய்துள்ளது .

                                இந்த ஈரான் உளவு விமானத்தின் செயல் திறன் ரசியா இராணுவத்தினருக்கு கை கொடுத்து வருவதால் ஈரானிடம் இருந்து மேலும் இதே உளவு விமானங்களை வாங்கி குவித்திட ரசியா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

                                ஈரான் உளவு விமானங்களை வாங்கி குவித்த ரசியா உக்கிரேனில் தாக்குதல் தீவிரம்

                                உக்கிரேன் ரசியா போரினால் உலக நாடுகளில் உணவு மற்றும் எரிபொருள் விலை ஏற்றம் அதிகரித்துள்ளது.

                                உக்கிரேன் ரசியா போர் முடிவுக்கு வந்தால் மட்டும் இந்த பேரவலத்தின் இருந்து நாடுகளை பாதுகாக்கலாம் என்ற நிலை உருவாக்கம் பெற்றுள்ளது .

                                இவ்வாறான நிலையில் ரசியா உக்கிரேனில் போரினை வேகப்படுத்த ஈரான் உளவு விமானங்களை அதிகம் நம்பியுள்ளதாக எதிர் பார்க்க படுகிறது.

                                ஈரானின் உளவு விமனங்கள் உக்கிரேன் களமுனையில் பறப்பதை அமெரிக்கா உளவு துறையினர் செய்தி படங்களுடன் வெளியிட்டுள்ளமை குறிப்பிட தக்கது.

                                  Posted in உளவு செய்திகள்

                                  உக்கிரேனுக்கும் ஏவுகணைகள் 150 ஆயிரம் ஆட்டிலறி குண்டுகளை அனுப்பிய அமெரிக்கா

                                  உக்கிரேனுக்கும் ஏவுகணைகள் 150 ஆயிரம் ஆட்டிலறி குண்டுகளை அனுப்பிய அமெரிக்கா

                                  உக்ரேன் மீது ரஷ்ய இராணுவம் தொடராக போரினை தொடுத்த வண்ணம் உள்ளது .இவ்வேளை உக்கிரேனுக்கு அவசர உதவியாக அமெரிக்கா ஏவுகணைகள் மற்றும் ஆட்டிலறி குண்டுகள் 150ஆயிரம், மற்றும் ராடர் உள்ளிட்ட முக்கிய ஆயுத தளபாடங்களை வழங்கியுள்ளது .

                                  ரசியாவின் ஏவுகணை தாக்குதல்கள் பலமாக உள்ளதால் தமது முதல்தர ஆயுதங்களை உக்கிரேனில் வைத்து அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் சோதனையை நடத்திய வண்ணம் உள்ளனர்.


                                  அதன் ஒரு அங்கமாக உதவி என்ற போர்வையில் அமெரிக்கா உக்கிரேனுக்கு ஏவுகணை ஆட்டிலறி குண்டுகளை பெருமளவில் அள்ளி வழங்கிய வண்ணம் உள்ளது .

                                  அமெரிக்கா வழங்கிய ஆயுதங்கள் மூலம் ரசியாவின் உக்கிர தாக்குதல்களை தடுத்துவிட முடியுமா என்ற கேள்வி எழுகிறது .

                                  என்று தணியும் இந்த போர் ..?

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  அமெரிக்கா அதிகாரிகள் குழு இலங்கை வருகை

                                  அமெரிக்கா அதிகாரிகள் குழு இலங்கை வருகை

                                  இலங்கை ;அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மற்றும் அமெரிக்க திறைச்சேறி திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் இலங்கை வந்தடைந்துள்ளனர்.

                                  மூன்று நாட்களுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு
                                  அவர்கள் இன்று காலை இலங்கை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

                                  இவ்வாறு இலங்கை வந்தடைந்த அமெரிக்கா அக்குழுவினர் பதமர் ரணில் விக்கிரமசிங்கே மற்றும் ஜனாதிபதி கோட்டபாயவுடன் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார் .

                                  இதில் இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டு அவற்றுக்கு உதவும் திட்டங்களும் முன் வைக்க படும் என எதிர் பார்க்க படுகிறது .