Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னை தா எனக்கு

உன்னை தா எனக்கு

உனக்குள்ளும் ஒரு காதல் பூத்திருக்குதே – இதை
உணராமல் நீ இன்று மறந்திருக்குதே
வார்த்தைகளை கோர்த்து இன்று பேசிவிடு
வளையல்கள் உடையுமுன்னே நீட்டிவிடு

நாளை என்று காத்திருந்தால் இறந்திடுவாய்
நல்ல காதலை நீயும் இழந்திடுவாய்
இறக்கும் முன்னே வாழ்ந்துவிட வந்துவிடு
இதயமதை ஓடி வந்து தந்துவிடு

நீ சிரிச்சா நான் மகிழ்வேன் ஏற்றுவிடு -அந்த
நீர் உறங்கும் கன்னக்குழி தந்துவிடு
மூச்சிழக்க பேசும் உன் உதடு
முத்தமிட நீ எனக்கு தந்துவிடு

உலகாளும் அத்தனையும் உனக்கிருக்கு – நீ
உறங்குமிடம் ஏனோ இங்கிருக்கு ..?
உன் திறனை ஏன் மறைத்தாய் சொல்லெனக்கு
உலகாள வைத்திடுவேன் உனை தாயெனக்கு …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 27-07-2022

    தவிக்கிறேன்
    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    உன்னை எண்ணி தவிக்கிறேன் ..!

    உன்னை எண்ணி தவிக்கிறேன் ..!

    என்ன செய் தாயோ
    என்னை ஏங்க வைத்தாயோ
    என்னை ஏங்க வைத்தேனோ
    என் இதயம் பறித்தாயோ

    முன் பனியாய் பின்னிரவில்
    முன்னே வாராயோ – நான்
    முழு நிலவில் குளித்திட
    முழு உலா வாராயோ

    எதுகை மோனை எனதாகும் – என்
    ஏக்கம் வாங்கு உனதாகும்
    படித்து பாரு புதிராகும்
    படைக்க முனை விழிப்பாகும்

    சந்தம் இல்லா பாட்டுக்குள்ளே
    சங்கதி இருக்காதே
    அந்தி சாயும் வேளையிலே
    ஆள் மனம் தூங்காதே

    முத்தம் தரவா முன்னே வரவா
    முழு நிலவே பதில் தர வா
    நித்தம் வரவா நீளும் இரவா
    நினைவில் வைத்திட வா

    உன்னை எண்ணி தவிக்கிறேன்
    உருகி மெழுகாய் அழுகிறேன்
    வின் விட்டு வாராயோ
    விழுந்து உடல் தழுவாயோ ..?

    வன்னி மைந்தன்
    ஆக்கம் 03-01-2022