Tag: ரயில்
ரயில் மோதி ஒருவர் பலி
ரயில் மோதி ஒருவர் பலி
ரயில் மோதி ஒருவர் பலி ,கொழும்பிலிருந்து பதிலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த 35 வயதுடைய வாலிபர் ஒருவர் ரயிலில் மோதி பலியாகியுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
கடவையில் இடம்பெற்ற இடைச் சம்பவத்தில் ரயிலில் மோதி பலியான வாலிபர் சங்கம் மீட்கப்பட்டு தற்பொழுது மருத்துவ பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர் யார் என்பதை அடையாளம் காணும் நடவடிக்கையில் தற்பொழுது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் அடையாளம் காண்பதற்கு மக்கள் உதவியை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான ரயில் தடுப்புகளை கடந்து செல்கின்ற பொழுது இவ்வாறான விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக மக்கள் கூட்டம் சுமத்தி வருகின்றனர்.
இந்த கடவுள் மேல் அதிக காவலர்களின் நியமித்து அதனுடைய பாதுகாப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையில் அரசு மெத்தனமற்ற திறமான போக்கை கடைபிடித்ததாக மக்கள் கூட்டம் சுமத்தி வருகின்றனர்.
இலங்கையில் இடம்பெற்று வருகின்ற இவ்வாறான ரயில் விபத்துகளில் பல மக்கள் ஆண்டுதோறும் பலியாகி வருகின்றதும் ஆபத்தான ரயில்வே கடைகளில் பாதுகாப்பை கருதி,
அதற்குரிய செயல் உருவாக்கத்தை கொடுப்பதற்கு ஆளுமரசுகள் தவறி வருவதாக மக்கள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றமை இங்கே கவனிக்கத்தக்கது.
- கார்மூஸ் கடலில் இந்திய கப்பல் மீது தாக்குதல்

- தீ விபத்தில் மிச்சிகன் வீட்டில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்

- சவூதி அரேபியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு ஹூதிகள்

- மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் இந்தியக் கல்வி அமைச்சர் ராஜினாமா

- ஈரானின் அஹ்வாஸ் மீதான அமெரிக்கத் தாக்குதலில் நால்வர் பலி

ரயில் விபத்து 20பேர் காயம்
ரயில் விபத்து 20பேர் காயம்
ரயில் விபத்து 20பேர் காயம் ,இந்திய உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரயில் தடம் புரண்டதில் அதில் பயணித்த இருவர் பலியாகியும் ,ஏறத்தாழ 20க்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
சண்டிகாரில் இருந்து திப்புருகர் நோக்கி பயணித்த தொடர்ந்து ஹோண்டா பகுதியில் இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தின் பொழுது நான்கு பொட்டிகள் கவிழ்ந்ததாகவும் ,அவ்வேளை அந்த பெட்டிகளில் பயணித்த மக்களில் இருவர் பலியாகி 20 பேர் காயம் அடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது .
நரேந்திர மோடியின் ஆட்சியின் காலப்பகுதியில் இடம்பெற்ற மிகப்பெரிய ரயில் விபத்தாகவும் இது பார்க்கப்படுகின்றது.
பாரிய ரயில் விபத்து
கடந்து சில மாதங்களுக்கு முன்னதாக பாரிய ரயில் விபத்து இடம்பெற்றுள்ளது .
அதனை அடுத்து தற்பொழுது இந்த ரயிலில் விபத்து இடம்பெற்று இங்கே குறிப்பிடத்தக்கது.
குறித்த விபத்து தொடர்பான விசாரணை தாங்கள் தீவிரப்படுத்தி ஆராய்ந்து வருவதாக இந்திய ரயில்வே தழைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ரயில்களில் அதிகளவான மக்கள் நாள்தோறும் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர் .
அவர் என்ன காலப் பகுதியில் இந்த ரயில் விபத்தில் சிக்கியது அந்த மக்களுக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கார்மூஸ் கடலில் இந்திய கப்பல் மீது தாக்குதல்

- தீ விபத்தில் மிச்சிகன் வீட்டில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்

- சவூதி அரேபியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு ஹூதிகள்

- மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் இந்தியக் கல்வி அமைச்சர் ராஜினாமா

- ஈரானின் அஹ்வாஸ் மீதான அமெரிக்கத் தாக்குதலில் நால்வர் பலி

- பென்டகன் இணையதளத்தில் அமெரிக்க இராணுவ இறப்பு எண்ணிக்கை திடீரெனக் குறைக்கப்பட்டது

- பஹ்ரைன் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

- ஈரான் அமெரிக்கா மோதல் கப்பல் போக்குவரத்து தடை

- ஈரான் முழுதும் தாக்குவோம் டிரம்ப் மிரட்டல்
- பிரிட்டன் தளங்களிலிருந்து அமெரிக்க குண்டுவீச்சு விமானங்களைப் பறக்க ஈரான் எச்சரிக்கை

சடலம் ரயில் நிலையத்தில் மீட்பு
ரயில் நிலையத்திற்கு முன்பாக சடலம்மீட்பு
சடலம் ரயில் நிலையத்தில் மீட்பு ,சடலம் ரயில் நிலையத்தில் மீட்பு ,கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக மனித சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டை போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை எடுத்து 65 வயது உடைய ஒல்லியான உயரம் கொண்டவராது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இறுதியாக அரை காற்சட்டை மற்றும் சிவப்பு நிற சார அணிந்திருந்த தெரிவிக்கப்பட்டுள்ளது .
விசாரணை கோட்டை போலீஸ் மேற்கொண்டு வருகின்றனர்
சம்மந்தமாக மேலதிக விசாரணை கோட்டை போலீஸ் மேற்கொண்டு வருகின்றனர்.
50 வயதுடைய நபரை உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இறந்தவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில் மனைவி தாய் வீட்டுக்கு சென்றுள்ளார் ,
போலீஸ் விசாரணை தெரிய வந்துள்ளது சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர் .
இதை இயற்கை மரணமா அல்லது திட்டமிடப்பட்ட படுகொலை சம்பவம் என்பது தொடர்பாக தெரிய வரவில்லை.
நாள்தோறும் இவ்வாறான மனித உடல்கள் வீதிகளில் ,பற்றை காடுகளில் ,நீர் ஏரிகளில், இருந்து மீட்கப்பட்டு வருகின்றன .
அதனை அடுத்து மக்கள் மத்தியில் ஒருவித பதட்டமும் அச்சமும் காணப்படுகின்றது.
இந்த கொலைகளின் பின்னால் உள்ளவர்கள் யார் என்பதை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்ற பொழுது இதுவரை உரிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள விடையமே சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
நாடளாவிய ரீதியில் அதிகரித்துச் செல்லும் இவ்வாறான படுகொலை வன்முறை சம்பவங்களினால்,
நாடு அச்சமற்ற ஒரு நிலை காணப்படுவதுடன் ,இலங்கை ஒரு பாதுகாப்பாற்ற நாடாக தற்பொழுது மாறி வருகிறதா என்கின்ற, சந்தேகத்தையும் இவ்வாறான விடயங்கள் எடுத்துக்காட்டி இருக்கின்றன.
அதிக மக்கள் கூடும் கோட்டை ரயில்வே நிலையத்திற்கு முன்பாக மறுக்கப்பட்ட சடலம் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடம் புரண்ட ரயில்
தடம் புரண்டது ரயில்
தடம் புரண்ட ரயில் ,கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் என்று தடம் புரண்ட நிலையில் தற்போது அந்த வழிச்சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாகவே தடம் புரண்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன
அதனை அடுத்து பாதிக்கப்பட்ட தொடருந்து சாலையை புணரவைத்து மீளவும் இயக்கும் நிலையில் பொறியியல் பிரிவு ஈடுபட்டு வருகின்றனர் .
இலங்கையில் இவ்வாறான விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றது.
காலநிலை காரணமாக தொடர்ந்த பாதைகளில் விரிசலை ஏற்பட்டதா என்கின்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது .
எனினும் இந்த தண்டவாள விரிசல்கள் காரணம் உடனடியாக தெரிய வரவில்லை.
தடம் புரண்ட நிலையில் மீட்கப்பட்டு மூலமும் இயல்பு நிலைக்கு திரும்பவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .
இந்த ரயில் தடம் புரண்டதை அடுத்து கொழும்பு கோட்டை பதுளை பகுதிக்கான போக்குவரத்துக்கள் யாவும், தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ..
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து வரும் இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
10 கோடி ரயில்வேக்கு இழப்பு
10 கோடி ரயில்வேக்கு இழப்பு
10 கோடி ரயில்வேக்கு இழப்பு ,.பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் காரணமாக இலங்கை ரயிக்வேக்கு 10 கோடி ரூபாய் இரண்டு நாட்களில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
சம்பள உயர்வு கோரி தற்போது மக்கள் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
இவ்வாறு ரயில் நிலைய பயணிகள் போக்குவரத்து டிக்கெட் வருமானம் நாள் ஒன்றுக்கு 5 கோடி ரூபாயாகும் ,
அந்த வருவாயின் சரக்கு உள்ளிட்ட வருவாயெம் சேர்த்து தினசரி வருமானம் 5 கோடி ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர் .
அவ்வாறு இரண்டு நாட்கள் இடம்பெற்ற இந்த வருமானம் 10 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ரயில்வே க்கு ஏற்பட்ட திடீர் இழப்பு
ரயில்கள் பல முக்கிய சாலை வழியாக செல்வது தடுக்கப்பட்ட நிலையிலும் அதனை இயக்க முடியாத நிலையில் ,இரண்டு நாட்களில் 10 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த பத்து கோடி ரூபாய் அந்த மக்களுக்கு ஊழியர்களுக்கு ஊதியமாக கொடுத்திருந்தால் ரயில்வேக்கு கிளப்பு ஏற்பட்டுள்ளதாக ஏற்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் ரயில்வே துறைகளிடத்தில் அதிகமான மக்கள் பயன்படுத்தி இந்த ரயில்களில் ஊடாக பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர் .
ரயில் சேவைகள் இரத்து
அவ்வாறான ரயில்கள் கடந்த இரண்டு நாட்களாக உரிய முறையில் சேவையில் ஈடுபடாத காரணத்தினால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ரயில்வே ஒட்டி சென்ற ரயில்வே சாரதி கள் ரயில்வே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிய சம்பவங்கள் காணப்பட்டிருந்தன .
அதன் பின்னராக இவ்வாறான ரயில்வே நிலைய ஊழியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது ,
ஆளு இலங்கை ரயில்வே அரசாங்கத்திற்கு மிகப்பெரும் பின்னடைவையும் நெருக்கடியை ஏற்படுத்தும், ஒரு திட்டமிடப்பட்ட செயலாகவே பார்க்கப்படுகிறது.
- வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைது

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது

- பாலங்கொட கல் குவாரியில் காணாமல் போன இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்

- ஜனாதிபதியைச் சந்திக்க ஆறு தமிழ் பேசும் கட்சிகள்

- பேருந்து மோதி மரத்தில் மோதியதில் 19 பேர் காயம்

- தலைமன்னார் ரயில் வழித்தடம் மீண்டும் திறக்கப்படுகிறது

- அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு

- இறக்குமதி-ஏற்றுமதி நிதி மோசடி

- 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது கல்வியாண்டு இன்று நிறைவடைகிறது

- ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தொழிலாளர் துறை சேவைகள் கிடைக்காது

பணி புறக்கணிப்பு ரயில்கள் தாமதம்
பணி புறக்கணிப்பு ரயில்கள் தாமதம்
பணி புறக்கணிப்பு ரயில்கள் தாமதம் ,இலங்கையில் பணி புறக்கணிப்பு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதால் ரயில்வே போக்குவரத்திலும் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரண்டு ரயில்கள் இவ்வாறான தமது பயணங்களில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கையின் ரயில்வே திணைக்களங்கள் தெரிவித்துள்ளது .
அதன் அடிப்படையில் நீர் கொழும்பு மற்றும் கொழும்பு பண்டாரவளை ரயில் காலி ,போன்ற போக்குவரத்துகளை இவ்வாறு தாமதப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்க படுகிறது .
சில ரயில் பயணங்கள் விரைவில் சேவைக்கு மீள வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இடம்பெற்று வருகின்ற இந்த நடவடிக்கை தொடர்பாக மக்கள் சொல்லென்னா துயரங்களை சந்தித்து வருகின்றனர்.
அவ்வாறான ஒரு காலப்பகுதியில் இடம்பெற்று கொண்டிருக்கின்ற இந்த இடைத்த தடையை காரணமாக மக்கள் பெரும் இழப்புக்களை சந்தித்து வருகின்றனர் .
தொலைதூரங்களுக்கு செல்பவர்களும் வேலை நிமித்தம் செல்பர்களும் இந்த ரயில் போக்குவரத்து புறக்கணிப்பினால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் .
தேர்தல் வருகின்ற நிலையில் அதனை மையப்படுத்தி நாடளாவிய ரீதியில் ஆளும் அரசுக்கு அழுத்தங்களை கொடுக்கும் வகையில் இவ்வாறான ரயில் போக்குவரத்தில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்து வருகின்ற தடைகளை தாண்டி தாங்கள் பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கொரோனா காலத்தில் எவ்வாறான ரயில் பயணங்கள் தடை செய்யப்பட்டதோ அதேபோல ஒரு நிலை தமக்கும் ஏற்பட்டு விடுமோ என மக்கள் மத்தியில் சிலர் இவ்வாறு பேசிக் கொள்கின்றனர்.
- வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைது

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது

- பாலங்கொட கல் குவாரியில் காணாமல் போன இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்

- ஜனாதிபதியைச் சந்திக்க ஆறு தமிழ் பேசும் கட்சிகள்

- பேருந்து மோதி மரத்தில் மோதியதில் 19 பேர் காயம்

- தலைமன்னார் ரயில் வழித்தடம் மீண்டும் திறக்கப்படுகிறது

- அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு

- இறக்குமதி-ஏற்றுமதி நிதி மோசடி

- 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது கல்வியாண்டு இன்று நிறைவடைகிறது

- ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தொழிலாளர் துறை சேவைகள் கிடைக்காது

இலங்கையில் போதையில் ரயிலை செலுத்தியவர் பணி நீக்கம்
இலங்கையில் போதையில் ரயிலை செலுத்தியவர் பணி நீக்கம்
இலங்கையில் போதையில் ரயிலை செலுத்தியவர் பணி நீக்கம் செய்யப்பட்டுளளார் ,இலங்கையில் போதையில் ரயிலை செலுத்தி சென்ற சாரதி ஒருவர் தற்பொழுது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அதிகார சபை தெரிவித்துள்ளது .

பயணிகள் பயணித்த ரயிலை அதிக அளவாக போதையை அருந்தி ரயிலை செலுத்தி சென்றதன் காரணத்தினால் ,அவர் அங்கு உடனடியாக பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக போதை காரணமாக ஓடிச் சென்ற ரயிலை இடையில் நிறுத்திவிட்டு அவர் தப்பியுள்ளார் .
அதை எடுத்து மக்கள் நபரை துரத்தி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் .
போதை காரணமாக ஓடிச் சென்ற சாரதிக்கு ஆப்பு
அதனை அடுத்து தற்போது போக்குவரத்து பிரிவு மேற்கொண்ட தீவிர விசாரணை எடுத்து அவர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது அவர் ரயில்வே பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இவர் அதிகமான போதையில் இருந்த போதும் பயணிகள் தப்பித்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் ரயில்வே சாரதிகள் பேருந்து சாரதிகள் இவ்வாறு நடந்து கொள்வது மிகப் பெரும் ஆபத்தையும் அபாயத்தையும் ஏற்படுத்தும் சம்பவமாக பார்க்கப்படுகின்றது .
சமீப காலங்களாக இலங்கையில் இடம் பெற்று வருகின்ற ரயில் விபத்துக்கள் பேருந்து விபத்துக்கள் தொடர்பான விசாரணைகள் தீவிரம் பெற்று வருகின்றன.
இலங்கையில் நாள்தோறும் பேருந்துகள் விபத்தில் சிக்கி வருகின்ற சம்பவம் சாரதிகளின் அலட்சியப் போக்கும் போதையில் அவர்கள் வண்டிகளை செலுத்துவதை காரணம் என்கின்ற தகவலும் வெளியாகியுள்ளது.
தப்பிய ரயில் பயணிகள் அரச அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை
தற்பொழுது ரயில்வே சாரதி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது .
இவ்வாறானவர்கள் தொடர்ந்து பணியில் வைத்திருந்தால், மேலும் பெரும் ஆபத்தினை மக்கள் சந்திப்பார்கள் என்பதால் ,அவர் இந்த பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் .
தனது மகிழ்வுக்காக அருந்தபட்ட போதையினால் அவர் தனது பணியை இழந்து தற்போது நிர்கதியாக நிற்கிறார் என முடியும் இந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைது

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது

- பாலங்கொட கல் குவாரியில் காணாமல் போன இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்

- ஜனாதிபதியைச் சந்திக்க ஆறு தமிழ் பேசும் கட்சிகள்

- பேருந்து மோதி மரத்தில் மோதியதில் 19 பேர் காயம்

- தலைமன்னார் ரயில் வழித்தடம் மீண்டும் திறக்கப்படுகிறது

- அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு

- இறக்குமதி-ஏற்றுமதி நிதி மோசடி

- 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது கல்வியாண்டு இன்று நிறைவடைகிறது

- ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தொழிலாளர் துறை சேவைகள் கிடைக்காது

ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்
ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்
ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் ,கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து ரம்புக்கவா பகுதி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் ரயில்மீது கற்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த ரயிலில் அதிக பயணிகள் பயணித்துக் கொண்டிருந்த பொழுது இந்த கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
ரயில் மீது கல்வீச்சு நடத்தியது யார் ..?
ரயில் கண்ணாடிகளை உடைத்து கற்கள் சேதமாகிய பொழுது கநடைகள் உடைந்து துகள்கள் பறந்துள்ளன .
எனினும் மக்கள் காயங்கள் இன்றி தப்பித்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஒருவரின் கால்களுக்கு முன்னால் கல் வந்து விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில பயணிகள் மீது கண்ணாடி துண்டுகளையும் வீசப்பட்டுள்ளது.
இந்த கல்வீச்சு தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பான விசாரணைகளை ,குற்றப் புலனாய்வுத்துறை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக மதுபோதையில் ரயிலை செலுத்தி சென்ற ரயில் சாரதி அந்த இடத்தில் ரயிலை நிறுத்திவிட்டு அவர் தப்பி ஓடிய நிலையில் அவரை மக்கள் துரத்தி பிடித்திருந்தனர் .
தொடரூந்து மீது தாக்குதல் நடத்தியதன் பின்புலம் என்ன ..?
அந்த சம்பவம் இடம்பெற்ற 24 மணித்தியால இடைவெளியில் தற்பொழுது பயணிகள் ரயில் மீது கல் வைத்து தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
அதிகமான பயணிகளை காவி செல்கின்ற ரயில் மீது இவ்வாறான கல்வீச்சு தாக்குதலை நடத்தியது யார் என்பதும் , இவ்வாறான பெரிய கற்களை கொண்டு எவ்வாறு அந்த ரயில் மீது இவர்களால் தக்க முடிந்தது என்ற விசாரணைகள் ஆரம்ப[ஆரம்பிக்க பட்டுள்ளன .
தாக்குதலை நடத்திய குறித்த நபரை கைது செய்தால் மட்டுமே ,அவர் ஏன் எதற்காக தாக்குதல் நடத்தினார் என்கின்ற விடயம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது .
நாள்தோறும் இவ்வாறான வன்முறைகள் சமூக விரோத செயல்பாடுகள் அதிகரித்து காணப்படுகிறது .
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் போதைவஸ்து பாவனையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுவதுடன் ,போலீசாறுடைய அலட்சியின்மையும் இதற்கு ஒரு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி ரயில் கல்வீச்சு சம்பவம் பொது பயன்பாட்டில் ஈடுபடுகின்ற ,மக்கள் நடமாட்டத்திற்கு விடுக்க பட்டுள்ள எச்சரிக்கையாக இதனை பார்க்க முடிகிறது .
- வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைது

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது

- பாலங்கொட கல் குவாரியில் காணாமல் போன இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்

- ஜனாதிபதியைச் சந்திக்க ஆறு தமிழ் பேசும் கட்சிகள்

- பேருந்து மோதி மரத்தில் மோதியதில் 19 பேர் காயம்

- தலைமன்னார் ரயில் வழித்தடம் மீண்டும் திறக்கப்படுகிறது

- அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு

- இறக்குமதி-ஏற்றுமதி நிதி மோசடி

- 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது கல்வியாண்டு இன்று நிறைவடைகிறது

- ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தொழிலாளர் துறை சேவைகள் கிடைக்காது

போதையில் ரயிலை செலுத்திய சாரதி
போதையில் ரயிலை செலுத்திய சாரதி
போதையில் ரயிலை செலுத்திய சாரதி மக்களால் துரத்தி பிடிப்பு ,கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலை போதையில் செலுத்தி கொண்டிருந்த சாரதி கைது .
ஒன்றை செலுத்திக் கொண்டிருந்த சாரதி அளவுக்கு அதிகமாக மதுபானத்தை அருந்திவிட்டு அமைதியற்ற முறையில் நடந்து கொண்டதை அடுத்து பெரும் பதட்டம் ஏற்பட்டது .
குறித்த சாரதி கண்டிக்கு அருகில் சொல்கம் என்ற இடத்தில் ரயிலை நிறுத்திவிட்டு ரயிலிருந்த தப்பி ஓடிய நிலையில் ,அவரை மக்கள் துரத்தி பிடித்து ரயில்வே துறைகள் அதிகாரிகள் ஒப்படைத்தனர் .
தொடரூந்தை விட்டு தப்பி ஓடிய சாரதி
அந்த ரயிலை உதவி சாரதி மூலம் , ரயில் தற்போது உரிய ரயில்வே நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அதிக மது போதை காரணமாக ரயிலை செலுத்தி சென்ற இந்த சாரதி மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு இவர் பணியில் இருந்து நீக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறுப்பு வாய்ந்த நிலையில் வண்டிகளை செலுத்தி செல்ல வேண்டிய இவ்வாறான சாரதிகள் அத்துமறி இவ்வாறு ரயிலை செலுத்தி செல்வது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பாதுகாப்பான ரயில்வே கடமைகளை கடந்து செல்ல வேண்டிய இந்த ரயிலில் இவ்வாறு ரயில்வே சாரதிகள் மதுவை அருந்திவிட்டு செலுத்து செல்வதால் ,
அந்த ரயில்வே கடவைகளில் பயணிக்கும் மக்களும் இரயில் பயணிக்கும் மக்களும் பலியாக வேண்டிய இக்கட்டான சூழல் ஏற்படுவதாக மக்கள் கூட்டம் சுமத்தி இருக்கின்றனர் .
ஆபத்தாக மாறிய தொடரூந்து பயணம்
கைது செய்யப்பட்ட ரயில் சாரதி , தற்பொழுது தொடர்ந்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார் .
ரயிலில் பயணித்த மக்கள் அலறி அடித்து சம்பவங்கள் ,தற்பொழுது வெளியாகி உள்ளது .
தொடரூந்து சாரதி தப்பியோடும் காட்சிகள் தற்போது அதனை படம் பிடித்த சிலர் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருவதான தகவல்களும் வெளியாகி வருகின்றன.
இலங்கை எதை நோக்கி எங்கு செல்கிறது என்பது தொடர்பான ,விடயங்கள் இதன் ஊடாகவும் காணமுடிகின்றது .
பேருந்து விபத்துக்கள் மதுவை அருந்திவிட்டு ,தப்பி ஓடுதல் என்பன ,இலங்கை கட்டுக்கடங்காத தலை தெறித்து ஓடுவதையே இந்த சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
இலங்கையில் 11 ரயில் பயணங்கள் இரத்து பயணிகள் அவதி
இலங்கையில் 11 ரயில் பயணங்கள் இரத்து பயணிகள் அவதி
இலங்கையில் 11 தொலை தூர ரயில் பயணங்கள் திடீரென இரத்து செய்ய பட்டுள்ளது ,இதனால் ரயில் பயணிகள் அவதியுற்றுள்ளனர் .
தொடரூந்து பாதையில் ஏற்பட்ட விரிசல்கள் காரணமாக திருத்த பணிகள் இடம்பெறுவதால் கொழும்பு கோட்டை முதல் Moratuwa, Panadura, Wadduwa, Negombo, Ambepussa, Padukka and Ragama ஆகிய ரயில் பயண சேவைகள் பாதிக்க பட்டுள்ளன .
வேலைகள் நிறைவடைந்ததும் வளமை போன்று ரயில் பயணங்கள் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது .
Featured
ரயில் சேவைகள் சில இன்று இரத்து
ரயில் சேவைகள் சில இன்று இரத்து
இன்று சில அலுவலக ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
விசேட நேர அட்டவணையின் கீழ் 6 ரயில்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது
Featured
புத்தாண்டு காலத்தில் விசேட ரயில் சேவைகள்
புத்தாண்டு காலத்தில் விசேட ரயில் சேவைகள்
எதிர்வரும் தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து காலி, பெலியத்த, கண்டி, மாத்தறை, ஹட்டன் மற்றும் பதுளை ஆகிய பகுதிகளுக்கு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது
- வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைது

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது

- பாலங்கொட கல் குவாரியில் காணாமல் போன இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்

- ஜனாதிபதியைச் சந்திக்க ஆறு தமிழ் பேசும் கட்சிகள்

- பேருந்து மோதி மரத்தில் மோதியதில் 19 பேர் காயம்

- தலைமன்னார் ரயில் வழித்தடம் மீண்டும் திறக்கப்படுகிறது

- அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு

- இறக்குமதி-ஏற்றுமதி நிதி மோசடி

- 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது கல்வியாண்டு இன்று நிறைவடைகிறது

- ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தொழிலாளர் துறை சேவைகள் கிடைக்காது

ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு
ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு
கரையோர ரயில் வீதியின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து வெள்ளவத்தை ரயில் நிலையம் வரையான பகுதியில் ஒரு ரயில் வீதிக்கு ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (09) நாளை (10) மற்றும் நாளை மறுதினம் (11) ஆகிய மூன்று நாட்களுக்கு இது அமுல்படுத்தப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
கெம்பனித்தெரு வீதி மற்றும் கொள்ளுப்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான பாலம் ஒன்றின் பராமரிப்பு பணிகள் மற்றும் நீர் வழங்கல் சபையின் குழாய் பதிக்கும் பணிகள் காரணமாகவே இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கரையோர வீதியில் ரயில் தாமதம் ஏற்படக் கூடும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
புகையிரதத்தில் மோதி 14 வயது மாணவன் பலி
புகையிரதத்தில் மோதி 14 வயது மாணவன் பலி
புகையிரதத்தில் அடிபட்டு 14 வயது மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
தம்பலகமுவ மொல்லிப்பொத்தானை புகையிரத நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கெலிஓயாவில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மாணவன் மோதுண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மொல்லிப்பொத்தானை பிரதேசத்தில் வசித்து வந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
தம்பலகமுவ பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
மலையக ரயில் போக்குவரத்து பாதிப்பு
மலையக ரயில் போக்குவரத்து பாதிப்பு
நாவலப்பிட்டியில் இருந்து நானுஓயா வரை பயணித்த சரக்கு ரயில் தடம் புரண்டதால் மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இன்று மாலை 5:00 மணியளவில் ரயிலின் இயந்திரம் மற்றும் ஒரு பெட்டி தடம் புரண்டுள்ளது.
இதனையடுத்து, கொழும்பில் இருந்து பதுளை வரை செல்லும் ரயில்கள் வட்டவளை ரயில் நிலையத்துக்கும், பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் ரயில்கள் ஹட்டன் நிலையம் வரை இயக்கப்படும் என ஹட்டன் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
ரயிலின் சிற்றுண்டிச்சாலைக்கு சீல்
ரயிலின் சிற்றுண்டிச்சாலைக்கு சீல்
மனித நுகர்வுக்கு தகுதியற்ற உணவுகளை விற்பனை செய்ததற்காக, மீனகயா ரயிலின் சிற்றுண்டிச்சாலையை தற்காலிகமாக சீல் வைக்க நீதிமன்ற உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவொன்று மீனகயா ரயிலின் சிற்றுண்டிச்சாலைக்கு பெப்ரவரி 08 ஆம் திகதி வரை சீல் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 22ஆம் திகதி பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த ரயிலின் சிற்றுண்டிச்சாலையை ஆய்வு செய்திருந்தனர்.
ரயிலின் சிற்றுண்டிச்சாலைக்கு சீல்
இதன்போது, மனித நுகர்வுக்கு தகுதியற்ற உணவுகளை விற்பனை செய்தமை தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்ததையடுத்து, குறித்த உணவகத்தை தற்காலிகமாக மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, குறித்த உணவகம் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் 8ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டும், மனித நுகர்வுக்கு தகுதியற்ற உணவுகளை விற்பனை செய்ததாக மீனகயா ரயிலின் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு ரயில்வே தற்காலிகமாக மூடப்படும் ரயில்வே திணைக்களம்
வடக்கு ரயில்வே தற்காலிகமாக மூடப்படும் ரயில்வே திணைக்களம்
வடக்கு ரயில்வேயின் மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான மார்க்கம் இன்று (07) முதல் தற்காலிகமாக மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான அபிவிருத்தி நடவடிக்கைக்காக 06 மாத காலத்திற்கு இந்த மார்க்கம் மூடப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே குறிப்பிட்டார்.
அதன்படி இன்று முதல் கொழும்பில் இருந்து மஹவ மற்றும் அனுராதபுரத்தில் இருந்து காங்கேசன்துறை வரை மட்டுமே ரயில் சேவைகள் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு ரயில்வே தற்காலிகமாக மூடப்படும் ரயில்வே திணைக்களம்
இதேவேளை, வடக்கு ரயில் மார்க்கத்திற்கு மேலதிகமாக, மட்டக்களப்பு மார்க்கத்தையும் இவ்வருடம் புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன் கீழ் மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை புதிய ரயில் சேவையையும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிரதேசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
வடக்கிற்கான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்
வடக்கிற்கான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்
வடக்கு ரயில் மார்க்கத்தை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனவரி 07 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையான வடக்கு ரயில் மார்க்கம் அன்றைய தினம் முதல் 06 மாத காலத்திற்கு மூடப்படும் என அதன் பிரதி முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே குறிப்பிட்டார்.
இந்த காலப்பகுதியில் கொழும்பில் இருந்து மஹவ மற்றும் அனுராதபுரத்திலிருந்து காங்கசன்துறை வரை மட்டுமே ரயில் சேவைகள் இடம்பெறும்.
வடக்கிற்கான ரயில் சேவைகள் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளன
வடக்கிற்கான ரயில் சேவைகள் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளன
கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும் காங்கசந்துறைக்கும் இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு ரயில் மார்க்கத்தின் நவீனமயமாக்கல் நடவடிக்கை காரணமாக இவ்வாறு ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ளன.
வடக்கு ரயில்வேயின் மஹவ மற்றும் ஓமந்தை வரையிலான நவீனமயமாக்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, 07.01.2024 அன்று மஹவ மற்றும் அநுராதபுரத்திற்கு இடையிலான வீதி நவீனமயமாக்கல் பணிகள்
வடக்கிற்கான ரயில் சேவைகள் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளன
ஆரம்பிக்கப்படுவதால், ஜனவரி 07 ஆம் திகதியிலிருந்து 06 மாத காலத்திற்கு தற்காலிகமாக மஹவ மற்றும் அநுராதபுரத்திற்கும் இடையிலான ரயில் சேவைகள் இடம்பெறாது என பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜனவரி 07ஆம் திகதி முதல் வடக்கு ரயில் மாரக்கத்தின் கொழும்பு கோட்டையில் இருந்து மஹவ வரையிலும், காங்கேசன்துறையில் இருந்து
அனுராதபுரம் வரையிலும் மட்டுமே ரயில் சேவைகள் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது
- வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைது
- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது
- பாலங்கொட கல் குவாரியில் காணாமல் போன இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்
- ஜனாதிபதியைச் சந்திக்க ஆறு தமிழ் பேசும் கட்சிகள்
- பேருந்து மோதி மரத்தில் மோதியதில் 19 பேர் காயம்
- தலைமன்னார் ரயில் வழித்தடம் மீண்டும் திறக்கப்படுகிறது
- அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு
- இறக்குமதி-ஏற்றுமதி நிதி மோசடி
- 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது கல்வியாண்டு இன்று நிறைவடைகிறது
- ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தொழிலாளர் துறை சேவைகள் கிடைக்காது
- வத்தளையில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
- நீதி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் தொடங்கியது
பெண்ணுக்கு எமனாக வந்த ரயில்
பெண்ணுக்கு எமனாக வந்த ரயில்
புகையிரதம் வருவதை அவதானிக்காமல் தண்டவாளத்தில் நடந்து சென்ற பெண் ஒருவர் புகையிரதத்தில் மோதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் இன்று பிற்பகல் 1: 30 மணியளவில் பாமஸ்டன் – கிரேட்வெஸ்றன் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது
பெண்ணுக்கு எமனாக வந்த ரயில்
புகையிரத நிலைய அதிகாரிகள் 1990 ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புகையிரதத்தின் மோதி உயிரிழந்தவர் நானுஓயா உடரதல்ல தோட்டத்தை சேர்ந்த சண்முகம் சந்திரமதி (வயது-40) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து சடலம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மரண விசாரணையும் பிரேத பரிசோதனையும் இடம்பெற உள்ளது












































