தூக்கில்தொங்கியபடி பெண்ணின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

தூக்கில்தொங்கியபடி பெண்ணின் சடலம் மீட்பு

தூக்கில்தொங்கியபடி பெண்ணின் சடலம் மீட்பு

தூக்கில்தொங்கியபடி பெண்ணின் சடலம் மீட்பு ,வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று காலை

தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில்

தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 62 வயதுடைய பெண்ணின் சடலத்தை பொலிஸ் மீட்டுள்ளனர்.

இறந்த பெண் கண்ணன் மணிராணி என அடையாளம் காணப்பட்டதாக வட்டவளை பொலிஸ் தலைமைஆய்வாளர் சந்தன கமகே தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் தனது சேலையுடன் மரத்தில் தொங்கிய நிலையில் காணப்படுவதாக தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்ததை அடுத்து, சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா

இந்த சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என்பதை தீர்மானிக்க வட்டவளை பொலிஸார், ஹட்டன் பொலிஸ் பிரிவு புலனாய்வுக் குழுவுடன் இணைந்து விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

900ஆண்டுகள் பழமையான பெண்ணின் மண்டைஓடு
Posted in உலக செய்திகள்

900ஆண்டுகள் பழமையான பெண்ணின் மண்டைஓடு

900ஆண்டுகள் பழமையான பெண்ணின் மண்டைஓடு

900ஆண்டுகள் பழமையான பெண்ணின் மண்டைஓடு ,இங்கிலாந்தின் கெண்டல் நகரில் கடந்த 2022-ம் ஆண்டு நீர் மேலாண்மை பணிகள்

தேவாலயம் அருகே எலும்பு கூடு

தொடங்கியது. அப்போது அங்குள்ள தேவாலயம் அருகே சில எலும்பு கூடுகள் கிடைத்தன.

அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி தொல்லியல் துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் நடத்திய ஆய்வில் அந்த எலும்பு கூடுகள் 900 ஆண்டுகள் பழமையானவை என்பது உறுதியானது.

பெண்ணின் மண்டை ஓடு

இதற்கிடையே அங்கு கைப்பற்றிய ஒரு பெண்ணின் மண்டை ஓடு மறுகட்டமைப்புக்கு ஏற்ற நிலையில் இருந்தது.

எனவே அந்த பெண்ணின் முகம் எப்படி இருந்திருக்கும் என்பதை கண்டறியும் பணியில் லிவர்பூல் ஜார் மூர்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட அந்த பெண்ணின் முகம் கெண்டல் தேவாலயத்தில் பொதுமக்களின் பார்வைக்காக தற்போது வைக்கப்பட்டு உள்ளது.

பெண்ணின் கையை பிடித்தவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

பெண்ணின் கையை பிடித்தவர் கைது

பெண்ணின் கையை பிடித்தவர் கைது

பெண்ணின் கையை பிடித்தவர் கைது ,காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் வீடு ஒன்றில் அத்துமீறி உள்நுழைந்து தனிமையில் இருந்த பெண்ணின் கையைப்பிடித்து இழுக்க முற்பட்ட குற்றச்சாட்டில் கைது

திருமணச் சேவை

செய்யப்பட்ட திருமணச் சேவை தரகரை எதிர்வரும் 12 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (25) உத்தரவிட்டார்.

குறித்த பிரதேசத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் திருமண தரகர், ஒரு பெண் ஒருவரை ஆண் ஒருவருக்கு திருமணம் பேசி திருமணம் முடித்துவைத்து

அதற்கான தரகு பணத்தை பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டாரிடம் பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் அண்மையில் திருமணம் முடித்த பெண்ணின் கணவர் வேலைக்குச் சென்ற பின்னர் வீட்டில் பெண் தனிமையில் இருந்து வந்துள்ள

நிலையில், வீட்டின் வாசல் கதவை திறந்து சட்டவிரோதமாக நுழைந்து வாசல் கதவில் அவரது தொலைபேசி இலக்கத்தை பெறித்துவிட்டு சென்றுள்ளார்.

திருமண தரகரின் இந்த செயற்பாடு தொடர்பாக கணவனிடம் மனைவி தெரிவித்ததையடுத்து அவரை கணவர் தொலைபேசி ஊடாக எச்சரித்த நிலையில், குறித்த திருமண தரகர் சம்பவதினமான வியாழக்கிழமை (24) பகல்

தனிமையில் இருந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்த ஆசாமி

பெண்ணின் வீட்டிற்குள் உள்நுழைந்து தனிமையில் இருந்த பெண்ணின் கையை பிடித்து இழுக்க முற்கட்டதையடுத்து அவர் அலறியடித்துக் கொண்டு ஓடி வீட்டை விட்டு வெளியேறி அயலவர் வீட்டிற்குள் புகுந்துள்ளதையடுத்து,

அவர் அங்கிருந்து தப்பி ஒடியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து குறித்த பெண் பொலிஸ் நிலைய பெண்கள் பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கமைய 2 பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய திருமண தரகரை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையில்

நேற்று (25) ஆஜர்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 12 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு

காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு

காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு,இலங்கை மதவாச்சி மயானத்தின் அருகில் 30 வயதுக்கு உள்ளிட்ட பெண் ஒருவருடைய சடலம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இவர் கொழும்பில் இருந்து இலவச பேருந்து ஊடாக வருகை தந்துள்ளது அதனுடைய பற்றி சீட்டுகள் மற்றும் அவரது உடைகள் பைகள் என்பன கொலை செய்யப்பட்ட இடத்தில் காணப்படுகின்றன.

உடலில் பலத்த காயங்கள் காணப்படுவதால் இவள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சடலம் எடுக்கப்பட்டு மரண பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ள பொழுது இவர் யார் என்பது தொடர்பாக இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

இந்த இளம் பெண் அடுத்த படுகொலை செய்யப்பட்ட நிலையில் மயானத்துக்கு அருகில் உள்ள குழி தோண்டிக் அருகிலே இந்த சடலம் கைவிடப்பட்ட நிலையில்

வீடியோ

செல்லப்பட்டுள்ளதாகவும் இந்த கொலையை செய்தவர்கள் யார் என்பது தொடர்பாக கண்டுபிடிக்க நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் மீட்பு

ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் மீட்பு

ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் மீட்பு ,பாணந்துறை கல்கொட ஸ்ரீ மகா விகாரஸ்த வீதியிலுள்ள வீடொன்றில் ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த பெண்ணின் சடலம் வீட்டின் தரையிலும் , ஆணின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையிலும் காணப்பட்டதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இருவரும் தகாத தொடர்பில் இருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் பெண்ணை கொலை செய்து விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

47 வயதுடைய ஆணும் 42 வயதுடைய பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பாணந்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம்மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம்மீட்பு

கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம்மீட்பு

கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம்மீட்பு யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மடத்துவெளி எட்டாம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதுடைய சிவகுகானந்தன் சிந்துயா யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இராணுவ பிரிவினரால் விதவை பெண்ணின் வாழ்வாதாரத்திற்கு உதவி
Posted in இலங்கை செய்திகள்

இராணுவ பிரிவினரால் விதவை பெண்ணின் வாழ்வாதாரத்திற்கு உதவி

இராணுவ பிரிவினரால் விதவை பெண்ணின் வாழ்வாதாரத்திற்கு உதவி

இலங்கை இராணுவ யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 55ஆவது படைப்பிரிவின் தலைமையகம் யாழ்ப்பாணம் கெவில் பகுதியில் வசித்துவரும்

விதவை பெண்ணின் வாழ்வாதாரத்திற்கு வலுவூட்டும் வகையில் தையல் இயந்திரம் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியது.

திருமதி மதுரன் நதியா மற்றும் அவரது இரண்டு மகள்கள் மற்றும் மகனின் பொருளாதார சுமைக்கு நிவாரணம் வழங்குவதற்காக, கொழும்பைச் சேர்ந்த

இராணுவ பிரிவினரால் விதவை பெண்ணின் வாழ்வாதாரத்திற்கு உதவி

திருமதி பி சுபத்ரா அவர்களால் 175,000/= பெறுமதியான தையல் இயந்திரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும், 55ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அவர் தைக்கும் ஆடைகளை விற்பனை செய்வதற்கான தனியான இடம் ஒன்றையும் வழங்கியது.

இந்த நிகழ்வில், குறித்த படைப் பிரிவின் கட்டளைத் தளபதி
மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன அவர்கள் கலந்துகொண்டார்.

Posted in இலங்கை செய்திகள்

குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம்- மிரட்டும் கொலைகள்

குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம்- மிரட்டும் கொலைகள்

மல்லாக்க மிதந்த பெண்ணொருவரின் சடலம் இன்று (31) மீட்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து

பெண்ணின் சடலமொன்று மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட பெண் தன்னுயிரை மாய்த்துக்கொண்டாரா? அல்லது படுகொலைச்

செய்யப்பட்டாரா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம் யாருடையது என இதுவரைஅடையாளம் காணப்படவில்லை.

உருக்குலைந்த நிலையிலேயே சடலம் காணப்படுகின்றது எனவும் மேலதிக

விசாரணைகளை தொடர்வதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட


வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.