Tag: பரபரப்பு
அமிதாப் பச்சன் படத்தில் நடித்தவர் படுகொலை வெளியான பரபரப்பு தகவல்
அமிதாப் பச்சன் படத்தில் நடித்தவர் படுகொலை வெளியான பரபரப்பு தகவல்
அமிதாப் பச்சன் படத்தில் நடித்தவர் படுகொலை வெளியான பரபரப்பு தகவல் ,இந்தியில் நாகராஜ் மஞ்சுலே இயக்கி நடிகர் அமிதாப் பச்சன் நடித்த படம் “ஜுண்ட்”. இந்த திரைப்படம் ஸ்லம் சாக்கர் என்ற அரசு நிறுவனத்தின் .
நிறுவனர் விஜய் பார்சியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது
நிறுவனர் விஜய் பார்சியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. ஓய்வுபெறும் தருவாயில் உள்ள விளையாட்டு ஆசிரியர்
ஒருவர், குடிசைப்பகுதியை சேர்ந்த குழந்தைகளுக்காக ஒரு கால்பந்து அணியை உருவாக்குகிறார்.
அது அவர்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றுகிறது என்பதுதான் படத்தின் கதை.
இந்தப்படத்தில் பாபு சேத்ரி என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானவர் பிரியான்ஷு என்ற பாபு சேத்ரி(வயது21). இவர் நாக்பூர் நகரில் உள்ள லும்பினி நகர் பகுதியில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் பாபு சேத்ரி நேற்று அதிகாலை 3 மணி அளவில் அங்குள்ள ஜரிபட்கா பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீட்டின் அருகே அரை நிர்வாண நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.
கை, கால்கள் பிளாஸ்டிக் வயர்களால் கட்டப்பட்டு இருந்தது
மேலும் அவரது கை, கால்கள் பிளாஸ்டிக் வயர்களால் கட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்,
பாபு சேத்ரியை மீட்டு அருகில் உள்ள மேயோ ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுபோதையில் 2 பேருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சாகு, பாபு சேத்ரியை கம்பியால் தாக்கி பிளாஸ்டிக் வயரால் கட்டிப்போட்டுவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது.
இதையடுத்து சாகுவை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாபு சேத்ரி மற்றும் கைதான சாகு ஆகியோர் மீது திருட்டு மற்றும் தாக்குதல் வழக்குகள் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஓடிய விமானத்தின் கதவை திறந்த பயணி லண்டனில் பரபரப்பு
ஓடிய விமானத்தின் கதவை திறந்த பயணி லண்டனில் பரபரப்பு
ஓடிய விமானத்தின் கதவை திறந்த பயணி லண்டனில் பரபரப்பு ,பிரித்தானியாவில் சவூதி விமானத்தில் விமானி அறைக்குள் செல்ல கதவைத் திறந்த பயணியால் லண்டனில் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது .Passenger opens door of flying plane, causing a stir in London
சவுதி விமான தளத்துக்கு சொந்தமான விமானம்
சவுதி விமான தளத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று பிரித்தானியாவின் லண்டன் கீத்திரோ விமான தளத்தை நெருங்கிக் கொண்டிருந்தது ,விமானம்
தரையிறங்குவதற்கு தயாராகிக் கொண்டிருந்த பொழுது, அதில் பயணித்த பயணி ஒருவர் விமானியின் கட்டுப்பாட்டு அறைக்குள் செல்வதற்கு கதவைத் தள்ளியுள்ளார்.
அப்பொழுது அங்கு இருந்த சிப்பந்திக்கும் விளக்குமிடையில் வாய் திறக்க மேற்பட்டுள்ளது .
விமான சிப்பந்தி மீது தாக்குதல்
அப்பொழுது அந்த விமான சிப்பந்தி மீது தாக்குதலை நடத்தி இருக்கிறார். இதனால் பதட்டமான விமானி உடனடியாக போலீசாருக்கு அறிவித்திருக்கிறார் .
விமானத்தை சுற்றிவளைத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் ஐந்துக்கு மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் என்பனவும் ,அங்கு நடந்த சம்பவத்தை அறிந்து அந்த பயணியை கைது செய்துள்ளார்கள்.
லண்டன் கீத்திரோ விமானத்தளத்தில் ,விமானத்தின் சிப்பந்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் ,பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இதன் பொழுது அதில் பயணித்த பயணிகளுக்கு இடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானியின் அருகில் நுழைய முற்பட்டார் என்ற அடிப்படையில் ,குறித்த பயணி கைது செய்யப்பட்டுள்ளதாக ,பிரித்தானிய போலீசாரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இதற்கான முழுமையான காரணங்கள் உடனடியாக தெரிய வரவில்லை.
விஜய் மாநாடு விவகாரம் சீமான் பரபரப்பு
விஜய் மாநாடு விவகாரம் சீமான் பரபரப்பு
விஜய் மாநாடு விவகாரம் சீமான் பரபரப்பு விஜய் மகாநாடு செந்தமிழன் சீமான் பரபரப்பு போட்டி வழங்கியுள்ளார் .பிரபல தமிழ் திரையுலக நடிகர் விஜய் அவர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கின்றார்.
இந்த அரசியல் கட்சி நடவடிக்கை தொடர்பாக மிகப்பெரிய மாநாடு ஒன்றை அவர் வைத்தார்.
நடிகர் விஜய் அவர்கள் எப்படியானவர்
தம்பி விஜய் அவர்கள் எப்படியானவர் அவரது அரசியல் நகர்வு எப்படி இருக்க போகிறது என்பது தொடர்பாக நாம் தமிழர் கட்சியினுடைய செந்தமிழ் சீமான் விளக்கம் அளித்துள்ளார் .
கீழே உள்ள காணொளியில் மிக நீண்ட நெடிய விளக்கத்தை அளித்துள்ளார் .
பிரபல நடிகர் விஜய் அவர்கள் அரசியலில் வெற்றி பெறுவாரா
பிரபல நடிகர் விஜய் அவர்கள் அரசியலில் வெற்றி பெறுவாரா என்பது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் வழங்கிய செவ்வி இந்த காணொளியில் உள்ளது பாருங்கள்.
இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்

- திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்

- நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி

- திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில்

- தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்

பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள்
பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள்
பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள் , அர்ச்சனா ராமநாதன் அவர்களுக்கு பெண் ஒருவர் மிக முக்கியமான கவிதை ஒன்றை படித்திருக்கிறார்.
அந்த கவிதை ஊடாக அந்தப் பாவலர் பல விடயங்களை ஆளுமையாக எடுத்து விளக்கி இருக்கிறார்.
இந்த கவிதையை கேட்கின்ற பொழுது ஈர் விழிகளும் அழுகிறது இரு செவிகளும் குதுகளிக்கிறது.
மனம் தள்ளாடுகிறது வார்த்தைகள் கொப்பளிக்கிறது அவ்வாறான மிக அருமையான கவிதை ஒன்று படித்திருக்கிறார் .
தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும் அர்ச்சனா ராம் நகர் வழக்கமாக எடுத்து ஒரு கவிதை இந்த காலில் காணப்படுகிறது.
கேட்டுப்பாருங்கள் அதனுடைய வரிகள் சொற்கள் மிகவும் உக்கிரமானதாகவும் அழகானதாகவும் கம்பீரமானதாகவும் கவிநடையில் காணப்படுகிறது .
கேட்கும் பொழுதே நெஞ்சு ஒரு குணம் புல்லரித்து போகிறது கவிதைகளை இப்படி கவிதை உடைகின்ற பாவலர்கள் படிப்பது இது முதல் தடவை அல்ல.
இருந்தாலும் அது தேன் போல அந்த வார்த்தைகள் சுரக்கிறது ஒருமுறை இந்த காணொளியை நீங்கள் கேட்டுப் பாருங்கள் சொல்வது நாங்கள் தீர்மானிக்க போவது நீங்கள்.
- மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா இராமநாதன்

- பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன்

- சுத்தியலால் மாணவர்களை தாக்கிய கொடூரன்

- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்

- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்

- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

- பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள்

- பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன்

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

நீதிபதி மீது குற்றவாளி பாய்ந்து தாக்கியதால் பரபரப்பு
நீதிபதி மீது குற்றவாளி பாய்ந்து தாக்கியதால் பரபரப்பு
தனக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதியை, அவரது மேஜை மீது பாய்ந்து குற்றவாளி ஒருவர் தாக்கிய சம்பவம், அமெரிக்காவின் லாஸ் வேகாஸின் மாகாண நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீதிமன்ற வளாகத்தில் உள்ள கேமராவில் பதிவான இந்த வன்முறைத் தாக்குதல் காட்சிகள் வெளியாகியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான க்ளார்க் கவுன்ட்ரி மாகாண நீதிபதி மேரி கே.ஹோல்தஸ் தனது இருக்கையில் இருந்து பின்னால் சுவரில் விழுந்ததில் சிறு காயம் அடைந்தார்.
எனினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு காயங்கள் இல்லை. ஆனால், நீதிபதியின் உதவிக்கு வந்த காவலாளிக்கும் காயம் ஏற்பட்டது. அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்தக் குற்றவாளி, நீதிபதியின் மேஜையின் பின்னால் சிறை அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களுடன் சண்டையிடுவதும் வீடியோவில் பதிவாகியிருந்தது.
நீதிபதி மீது குற்றவாளி பாய்ந்து தாக்கியதால் பரபரப்பு
லாஸ் வேகாஸில் உள்ள மாகாண நீதிமன்றத்தில், அமெரிக்க நேரப்படி புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து நீதிமன்ற அலுவலர்களும், நேரில் பார்த்தவர்களும் கூறுகையில்,
“குற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர், திடீரென பாதுகாப்பு மேஜை மீது பாய்ந்து நீதிபதியின் மேஜை மீதேறி, அவரைக் கடுமையாக தாக்கினார்” என்றனர்.
இந்தத் தாக்குதல் குறித்து, மாகாண தலைமை வழக்கறிஞர் ரிச்சர்ட் ஸ்கோவ் கூறுகையில், “என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்வதற்குள் எல்லாமே நடந்து முடிந்துவிட்டது” என்றார்.
இந்தச் சம்பவத்துக்கு காரணமான குற்றவாளி 30 வயதான டேபோரா டெலோன் ரெட்டன்.
அவர் பல குற்ற வழக்குகளுக்காகவும், நீதிபதி முதலானோரை தாக்கியது உள்ளிட்ட சில புதிய குற்ற வழக்குகளுக்காகவும் கிளார்க் கவுண்ட்ரி தடுப்பு மையத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
முன்னதாக, நீதிமன்றத்துக்கு வந்து தனது வழக்கறிஞர் அல்மாஸுக்கு அருகில் நின்று கொண்டிருந்த ரெட்டன், தன்னைப் பற்றி நீதிபதி கேட்டபோது, “நல்லதை செய்வதற்காக எதையும் செய்யத் தயங்காத நபர்.
நான் கலகக்காரன் இல்லை. நான் சிறைக்குச் செல்ல வேண்டியவன் இல்லை என்று நினைக்கிறேன். ஆனால், நீங்கள் அதுதான் சரியென்று நினைத்தால் நீங்கள் விரும்பிதைச் செய்யலாம்” என்றார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி, ரெட்டனை சிறையில் அடைக்க உத்தரவிடுகிறேன் என்றுக் கூறியதும், குற்றவாளியின் கையில் நீதிமன்ற காவலாளி கைவிலங்கிட நகர்ந்தார்.
அப்போது ரெட்டன் உடனடியாக நீதிபதியின் மேஜை மீது பாய்ந்து தாக்குதலில் ஈடுபட்டார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து ரெட்டனின் வழக்கறிஞர் அல்மாஸ் எந்த பதிலும் சொல்லவில்லை. இந்த நிலையில் நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் மேரி ஆன் பிரைஸ் கூறுகையில், “அனைத்து நடைமுறைகளையும் நாங்கள் ஆய்வு செய்து வருகிறேன்.
எங்கள் நீதிபதிகள், பொதுமக்கள் மற்றும் ஊழியர்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.




















