Tag: நீர்
நீர் இன்றி தவிக்கும் மக்கள் அனுரா அரசின் வண்டவாளம்
நீர் இன்றி தவிக்கும் மக்கள் அனுரா அரசின் வண்டவாளம்
நீர் இன்றி தவிக்கும் மக்கள் அனுரா அரசின் வண்டவாளம் ,கலத்துவாவ மற்றும் லபுகம நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைவு
நீண்டகால வறண்ட வானிலையின் காரணமாக கலத்துவாவ மற்றும் லபுகம நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு வேகமாக குறைந்து வருகிறது.
கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதி
கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்கான நீர் விநியோகம் இந்த இரண்டு நீர்த்தேக்கங்களையே சார்ந்துள்ளது.
இந்நிலையைச் சமாளிப்பதற்காக, இடையிடையே நீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை, நுகர்வோரை நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
- ஹிஸ்புல்லாவுடனான தொடர்புகள் காரணமாக 21 நபர்கள் மற்றும் குழுக்கள் மீது அபுதாபி தடை

- ஈரான் எண்ணெய் விறபனையை காட்டி தந்தால் 15மில்லியன் சன்மானம்

- லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 15பேர் பலி

- கார்க் எண்ணெய் கசிவு வெளிநாட்டுக் கப்பலால் ஏற்பட்டது என ஈரான்

- இறுதிப்போர் சாபம் 33 குளங்கள் திறப்பு வெள்ளத்தில் சிங்கள கிராமங்கள்

- டிரம்ப் சீனா பயணம்

- இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், ரூபாய்க்கு ஆதரவளிக்கவும் இந்தியா

- கனமழைக்கு மத்தியில் நிலச்சரிவு அபாயங்கள்

- மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களில் 200 மி.மீ-க்கு மேல் கனமழைக்கான எச்சரிக்கை

- மிதவாத-வலதுசாரி அரசியல் முகாமை விட்டு வெளியேறப் போவதில்லை என ஹர்ஷா

- மொசாட் தலைவர் நெதன்யாகு மோதல்

- இலங்கை விவகாரம் ஜெய்சங்கருக்கு விஜய் கடிதம்

நீர் விநியோகம் துண்டிப்பு செய்தி பொய்யானா செய்தி
நீர் விநியோகம் துண்டிப்பு செய்தி பொய்யானா செய்தி
நீர் விநியோகம் துண்டிப்பு செய்தி பொய்யானா செய்தி ,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில்
வெளியாகியுள்ள செய்தி பொய்யானது என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தி தொடர்பிலான விசாரணையின் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகாமையில் உள்ள
மற்றுமொரு இடத்தில் நிலுவைத்தொகை செலுத்தப்படாததன் காரணமாக நேற்று (13) நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்ததாக சபை கூறியுள்ளது.
ஆனால் அந்த இடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லம் அல்ல என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி ஒருவரிடம் நீர் வழங்கல் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் மேற்கொண்ட
விசாரணையின் போது, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் அந்த இடத்தில் தங்கியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த ஆண்டு ஒக்டோபரில் அந்த இடத்தை விட்டு வெளியேறினர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு உத்தியோகத்தரோ அல்லது முன்னாள் ஜனாதிபதியோ அந்த இடத்தில் உள்ள நீர் விநியோகத்தில்
உள்ள தண்ணீரை பயன்படுத்தமாட்டார்கள் என பாதுகாப்பு அதிகாரி கூறியதாகவும், நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த இடத்தில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டமையால் முன்னாள் ஜனாதிபதிக்கோ அல்லது அவரது பாதுகாப்பு
உத்தியோகத்தர்களுக்கோ எவ்வித இடையூறும் ஏற்படவில்லை என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
நீரின்றி தவித்தவர்களுக்கு உதவிய சட்ட ஆலோசர் பிரியன்
நீரின்றி தவித்தவர்களுக்கு உதவிய சட்ட ஆலோசர் பிரியன்
நீரின்றி தவித்தவர்களுக்கு உதவிய சட்ட ஆலோசர் பிரியன் ,நமக்காக போராடி காயமடைந்த நிலையில் ,காணப்படும் முன்னாள் போராளிகளின் கண்ணீரை தனது கரம், கொண்டு துடைத்து இருக்கிறார் சட்ட ஆலோசகர் பிரியன் அவர்கள் .
பிரிட்டனில் மிக பெரும் சட்ட ஆலோசகர் பிரியன்
பிரிட்டனில் மிக பெரும் சட்ட ஆலோசகராக விளங்கி வரும் பிரியன் அவர்கள் வழங்கிய இந்த உதவி என்பது பாராட்டுதலுக்கு உரியது .
ஓம் பராசக்தி அறக்கட்டளையின் ஊடாக அதன் ஸ்தாபகர் ,சட்ட ஆலோசகரும் மனித நேயவாதியும் ,மக்கள் நல திட்டத்தில் தன்னை அர்ப்பணித்திருக்கும் பிரியன் அவர்கள் வழங்கியுள்ளார் .
போராளி குடும்பத்தின் நீர் தேவை
முன்னாள் போராளி குடும்பத்தின் நீர் தேவைக்கு ,ஓம் பராசத்தி அறக்கட்டளையின் ஊடக ,ஒரு லட்சத்து பத்து ஆயிரம் ரூபா நிதி உதவி வழங்க .பட்டுள்ளது
அந்த நிதி உதவியின் ஊடாக ,பாதிக்க பட்டு வாழ்வாதாரத்தில் திணறி கொண்டிருந்த ,காயமடைந்த போராளி அவர்களுக்கு இந்த நன்கொடை உதவி திட்டம் வழங்க பட்டுள்ளது .
இவ்வேளை ஓம்பராசக்தி அறக்கட்டளை நிறுவத்தாருக்கு எமது நன்றிகள்
Featured
வரட்சியான காலநிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை
வரட்சியான காலநிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மக்களைக் கோரியுள்ளது.
வரட்சியான காலநிலை 2 மாதங்களுக்கு மேல் நீடித்தால், பகுதியளவில் நீர் வழங்கப்பட வேண்டும் என சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அபிவிருத்தி திருமதி அனோஜா களுவாராச்சி தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தற்போதைய நீர்மட்டம் போதுமானதாக இருப்பதாகவும், முடிந்தவரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே தண்ணீரை பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
நீர் கட்டணத்தை குறைக்க தீர்மானம்
நீர் கட்டணத்தை குறைக்க தீர்மானம்
இடம்பெறவுள்ள மின் கட்டண குறைப்புக்கு இணைந்ததாக, நீர் கட்டணமும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கண்டியில் இன்று (11) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மக்களுக்கு அதிகபட்ச நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
“எதிர்காலத்தில் நீர் கட்டணம் தொடர்பான விலைச்சூத்திரத்தை அறிமுகப்படுத்த உள்ளோம்.
இதனூடாக மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாங்கள் செயற்படபோவதில்லை. தண்ணீரை சுத்திகரிக்க தேவையான முக்கிய காரணிகளில் மின்சாரம் ஒன்று.
எனவே மின் கட்டணம் குறைக்கப்பட்டால் நிச்சயமாக நீர் கட்டணமும் குறைக்கப்படும்.
- இறுதிப்போர் சாபம் 33 குளங்கள் திறப்பு வெள்ளத்தில் சிங்கள கிராமங்கள்

- இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், ரூபாய்க்கு ஆதரவளிக்கவும் இந்தியா

- கனமழைக்கு மத்தியில் நிலச்சரிவு அபாயங்கள்

- மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களில் 200 மி.மீ-க்கு மேல் கனமழைக்கான எச்சரிக்கை

- மிதவாத-வலதுசாரி அரசியல் முகாமை விட்டு வெளியேறப் போவதில்லை என ஹர்ஷா

கொழும்பின் சில பகுதிகளில் நாளை நீர் வெட்டு
கொழும்பின் சில பகுதிகளில் நாளை நீர் வெட்டு
கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை மாலை 5.00 மணி முதல் மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
- இறுதிப்போர் சாபம் 33 குளங்கள் திறப்பு வெள்ளத்தில் சிங்கள கிராமங்கள்
- இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், ரூபாய்க்கு ஆதரவளிக்கவும் இந்தியா
- கனமழைக்கு மத்தியில் நிலச்சரிவு அபாயங்கள்
- மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களில் 200 மி.மீ-க்கு மேல் கனமழைக்கான எச்சரிக்கை
- மிதவாத-வலதுசாரி அரசியல் முகாமை விட்டு வெளியேறப் போவதில்லை என ஹர்ஷா
- இலங்கை விவகாரம் ஜெய்சங்கருக்கு விஜய் கடிதம்
- கடத்தலில் ஈடுபட்ட பிக்குகள்
- 717 சாராய கடைகளை அடித்து பூட்டிய முதல்வர் விஜய்
- இணையவழித் திருட்டுகள் இந்தியா இலங்கை பேச்சு
- 200 வெளிநாட்டினர் கைது
கொழும்பில் நாளை 10 மணித்தியால நீர் வெட்டு
கொழும்பில் நாளை 10 மணித்தியால நீர் வெட்டு
கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (25) 10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நாளை முற்பகல் 11 மணி முதல் இரவு 9 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மற்றும் கடுவெல நகர சபை அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
மேலும், மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகரசபை பகுதிகள், கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரிய பிரதேச சபை பகுதிகள் மற்றும் இரத்மலானை மற்றும் கட்டுபெத்த பிரதேசங்களிலும் நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.
கொழும்பின் சில பகுதிகளில் 18 மணிநேரம் நீர் விநியோகம் தடை
கொழும்பின் சில பகுதிகளில் 18 மணிநேரம் நீர் விநியோகம் தடை
கொழும்பின் சில பகுதிகளில் நாளை மறுதினம் சனிக்கிழமை (07) இரவு 10.00 மணி முதல் ஞாயிறு (08) பி.ப. 4.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, கொழும்பு 01, 02, 03, 04, 07, 09, 10, 11 ஆகிய பகுதிகளில் ,சனிக்கிழமை இரவு 10.00 மணி முதல் 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் பிரதேசங்கள் பின்வருமாறு:
கொழும்பு 1 – கோட்டை
கொழும்பு 2 – கொம்பனித்தெரு, யூனியன் பிளேஸ்
கொழும்பு 3 – கொள்ளுப்பிட்டி
கொழும்பு 4 – பம்பலப்பிட்டி
கொழும்பு 5 – ஹெவ்லாக் டவுன், கிருலப்பனை, கிருலப்பனை வடக்கு, நாரஹேன்பிட்டி
கொழும்பு 6 – வெள்ளவத்தை, பாமன்கடை
கொழும்பு 7 – கறுவாத்தோட்டம்
கொழும்பு 8 – பொரளை
கொழும்பு 9 – தெமட்டகொட
கொழும்பு 10 – மருதானை, பஞ்சிகாவத்தை
கொழும்பு 11 – புறக்கோட்டை
கொழும்பு 12 – புதுக்கடைஇ வாழைத்தோட்டம்
கொழும்பு 13 – கொட்டாஞ்சேனை, புளூமெண்டல்
கொழும்பு 14 – கிராண்ட்பாஸ்
கொழும்பு 15 – மோதறைஃமுகத்துவாரம், மட்டக்குளி, மாதம்பிட்டிய
நீர் கட்டணத்தை செலுத்த தவறிய 60 எம்பிக்கள்
நீர் கட்டணத்தை செலுத்த தவறிய 60 எம்பிக்கள்
இலங்கையில் மக்களை வழி நல்வழி படுத்த அரசியலுக்கு வந்துள்ள இலங்கை எம்பிக்கள் ,அறுபது பேர் தாம் பெற்றுக்கொள்ளும், நீருக்கு அதன் கட்டணத்தை செலுத்த தவறியுள்ளதாக நீர் வடிகால் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த அறுபது எம்பிகளினால், ஒருகொடியே முப்பது லட்சம் ரூபா நீருக்கு வழங்க படாமை உள்ளதாக , நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை எம்பிக்கள் இந்த முறைகேடான, நடவடிக்கை மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மக்களைவழிநடத்த வந்த எம்பிக்கள், வழிகெட்ட செயல், மக்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது.
நீர் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது – அமைச்சர் வாசுதேவ
நீர் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது – அமைச்சர் வாசுதேவ
சுபீட்சத்தின் தொலைநோக்கு’ கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக 2025 ஆம் ஆண்டளவில் அனைவருக்கும் தூய குடிநீரை வழங்கும் நோக்கில் பல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நீர் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது.தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள காலத்தில் நீர் கட்டணத்தை செலுத்துவதற்கு சலுகைக் காலத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்றும் அமைச்சர் கூறினார்
2025 ஆம் ஆண்டளவில் அனைவருக்கும் தூய குடிநீர் என்ற தொனிப்பொருளில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த வியத்தை குறிப்பிட்டார்.
நீர் விநியோகிக்கும் விடயத்தை அரசியலாக்க எவருக்கும் இடமளிக்க போவதில்லை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
‘நீரையும், நீர் மூலங்களையும்’ பாதுகாக்கும் வேலைத்திட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் பரிட்சார்த்த செயற்திட்டம் குருவிட்ட பிரதேச செயலக பிரிவில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பில் 18 மணித்தியால நீர்வெட்டு
கொழும்பில் 18 மணித்தியால நீர்வெட்டு
கொழும்பில் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை(19) காலை 9 மணிமுதல் மறுநாள் (20) அதிகாலை 3
மணிவரையான காலப்பகுதியில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு 01, 02, 10 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும் என, நீர்வழங்கள் வடிகாலமைச்சபை கூறியுள்ளது.
அதேநேரத்தில், கொழும்பு 03, 04, 07, 08 மற்றும் 09 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும்.
இலங்கை தலைநகர் கொழும்பில் 18 மணிநேர நீர்வெட்டு
இலங்கை தலைநகர் கொழும்பில் 18 மணிநேர நீர்வெட்டு
கொழும்பின் சில பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு
அமல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு 13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமல்படுத்தப்பட உள்ளதுடன் கொழும்பு 1, 11 மற்றும் 12 ஆகிய
பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது





















