Tag: நீர் வெட்டு
நீர்கொழும்பு கட்டான பகுதிகளில் நீர் வெட்டு
நீர்கொழும்பு கட்டான பகுதிகளில் நீர்வெட்டு
நீர்கொழும்பு கட்டான பகுதிகளில் நீர் வெட்டு ,நீர்கொழும்பு மற்றும் கட்டான பகுதிகளில் வியாழக்கிழமை 16 மணி நேர நீர் வெட்டு
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம்
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (NWSDB) மார்ச் 12 ஆம் தேதி நீர்கொழும்பு மற்றும் கட்டான பகுதிகளை பாதிக்கும் வகையில் 16 மணி நேர நீர் விநியோக தடையை அறிவித்துள்ளது.
பம்புகுளிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 8:00 மணி முதல்
நள்ளிரவு 12:00 மணி வரை நீர் விநியோக தடை அமலில் இருக்கும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.
நீர் விநியோக தடை
அதன்படி, நீர் விநியோக தடை பின்வரும் பகுதிகளை பாதிக்கும்:
- நீர்கொழும்பு நகராட்சி மன்றத்தின் கீழ் உள்ள அனைத்து பகுதிகளும்
- கட்டான பிரதேச சபையின் கீழ் உள்ள பகுதிகள் மற்றும் பின்வரும் கிராம சேவையாளர் பிரிவுகள்:
எட்டியவல, ஜான்குராவெல, களுவாரிப்புவ, மிரிஸ்வத்த, கொங்கொடமுல்ல, ஹல்பே, ஆண்டிமுல்ல, அம்பலயாய, தோப்புவ, வைக்கல்
பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் வருத்தம் தெரிவித்ததுடன், இந்த தடையின் போது நுகர்வோர் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டது.
கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு
கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு
கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று (24) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர திருத்தப்பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நாளை 10 மணித்தியால நீர் வெட்டு
கொழும்பில் நாளை 10 மணித்தியால நீர் வெட்டு
கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (25) 10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நாளை முற்பகல் 11 மணி முதல் இரவு 9 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மற்றும் கடுவெல நகர சபை அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
மேலும், மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகரசபை பகுதிகள், கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரிய பிரதேச சபை பகுதிகள் மற்றும் இரத்மலானை மற்றும் கட்டுபெத்த பிரதேசங்களிலும் நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.









