Posted in Uncategorized

தமிழகத்தில் திமுக முன்னிலையில் – மகிழ்ச்சியில் ஸ்டாலின்

தமிழகத்தில் திமுக முன்னிலையில் – மகிழ்ச்சியில் ஸ்டாலின்

தமிழகத்தில் வெளியான இதுவரையிலான தேர்தல் முடிவுகளின் பிரகாரம் திமுக கருணாநிதிகட்சி 140 இடங்களில்

வென்று முன்னிலை வகிக்கிறது
அதே பல எடப்பாடியின் அதிமுகா 91 இடங்களில் வென்று இரண்டாம் நிலையில் உள்ளது

ஆட்சியை கருணா நிதி கட்சியே பிடிக்கும் என்பதாக களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன

தொடர்ந்து வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

நாம் தமிழர் இதுவரை எதிலும் வெற்றி பெறவில்லை ,அதேபோல கமல் ஒரு இடத்தில முன்னிலை

வகிக்கின்றார் ,ராமதாஸ் ஆறு இடஙக்ளில் முன்னிலை ,அதேபோல விஜயகாந்த கட்சியும் 4

இடங்களில் முன்னிலை ,வைகோவும் அதே போல முன்னிலையில் உள்ளமை களத்தில் மாற்றங்களை காண்பித்துள்ளது

மோடி கட்சியும் முன்னிலையில் உள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    நடமாடும் வாக்களிப்பு வேலைத்திட்டம் இடம்பெறாது- தேர்தல் ஆணையம்

    நடமாடும் வாக்களிப்பு வேலைத்திட்டம் இடம்பெறாது- தேர்தல் ஆணையம்

    தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வாக்களிப்பதற்காக ஜுலை மாதம் 30 ஆம் திகதி

    ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடமாடும் வேலைத்திட்டம் மேற்கொள்ள

    முடியாது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

    தற்பொழுது ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகள் காரணமாக இதனை

    திட்டமிட்ட வகையில் மேற்கொள்ள முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

    அரசியல் கட்சி செயலாளர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு

    பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

        Posted in இலங்கை செய்திகள்

        இதுவரையில் 5073 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு

        இதுவரையில் 5073 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு

        2020.07.24 ஆம் திகதி பி.ப 4:00 மணி முதல் 2020.07.25 ஆம் திகதி பி.ப

        4:00 மணி வரையிலான 24 மணி நேர காலப்பகுதிக்குள்

        அறிக்கையிடப்பட்ட மொத்த தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில்

        தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு..

        Posted in இலங்கை செய்திகள்

        2020 பொதுத் தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு திங்கட்கிழமை ஆரம்பம்

        2020 பொதுத் தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு திங்கட்கிழமை ஆரம்பம்

        பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

        2020 பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் பல கட்டங்கின் கீழ் இடம்பெறவுள்ளன.

        இதற்கமைவாக சுகாதார பணியாளர்கள், குடும்ப சுகாதார சேவையாளர்கள் உள்ளிட்டோர் திங்கட்கிழமை ; வாக்களிக்கவுள்ளனர்.

        எதிர்வரும் 14ஆம் 15ஆம் தினங்களில் அரச பணியாளர்களுக்கும் 16ஆம் 17ஆம் திகதிகளில் பொலிஸார் மற்றும் முப்படையினருக்கும் தபால் மூலம் வாக்களிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன..

            Posted in இலங்கை செய்திகள்

            இலங்கையில் ஓட்டுக்கு காசு – தேர்தல் ஆணையம் ஆப்பு – கடுப்பில் கோட்டா

            இலங்கையில் ஓட்டுக்கு காசு – தேர்தல் ஆணையம் ஆப்பு – கடுப்பில் கோட்டா

            இலங்கையில் பாராளுமனற தேர்தல் இடம் பெற உள்ள நிலையில் மக்களை

            கவரும் நோக்குடன் இந்தியாவை போல ஓட்டுக்கு பணம் வழங்கும் புதிய

            நடைமுறையை மகிந்த குடும்ப ஆட்சி தொடக்கி வைத்துள்ளது

            சமுர்த்தி நிறுவனத்தின் ஊடாக இந்த உதவிகள் கிராமம் தோறும் மக்களுக்கு வழங்க பட்டு வருகின்றன


            இவை தேர்தல் நோக்கம் கொண்டவை என்ற நிலையில் தேர்தல் ஆணையாளர் கோட்டபாய மற்றும் மகிந்தவுக்கு இது தொடர்பாக அறிவித்துள்ளார்

            இதனால் கோட்டா ,மகிந்த கடுப்பில் உறைந்துள்ளனர்

                Posted in இலங்கை செய்திகள்

                ஆபத்தாக மாறும் கொரனோ – ஆட்சி கவிழும் அபாயத்தில் ஆளும் அரசு

                ஆபத்தாக மாறும் கொரனோ – ஆட்சி கவிழும் அபாயத்தில் ஆளும் அரசு

                இலங்கையில் தற்போது உக்கிரப் பெற்றுள்ள கொரனோ நோயினது தாக்கம் பல்கி பெருகி செல்கிறது,


                மக்களை துரத்திய கொரனோ தற்பொழுது இராணுவத்தை துரத்தி செல்கிறது .

                இதுவரை கசியும் உள்ளக தகவலின் அடிப்படையில் 1,400 இராணுவத்தினர் பாதிக்க பட்டுள்ளதாகவும் ,அனைவரும் தனிமை படுத்த பட்டுள்ளனர் .

                    இந்த நோயினால் ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டது ,இவ்வேளை மக்களுடன் மிக நெருக்கமாக இராணுவத்தினர்

                    நெருங்கி பழகினார் ,அவர்களுக்கான உதவி பொருட்களை வீடு வீடாக சென்று வழங்கினார் ,ஒரு குடுப்பதிற்கு ஐந்தாயிரம் ரூபா விகிதம் பணம் வழங்க பட்டது

                    அது தவிர வட்டி தள்ளுப்படி ,என பல சலுகைகளை கோட்டபாய அரசு அறிவித்தது .


                    இது பல்லின மக்களுக்கும் கோட்டபாய மீது அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியது

                    இனவாதியாக இருந்தாலும் நல்லது செய்கின்றார் என்ற மனோ நிலைக்கு தமிழர்கள் மாற்றம் பெற்றனர் ,பலருடைய உதடுகள் இதனை உறுதி செய்தன

                    ஆனால் தற்போது பயண படும் கள நிலவரம் கோட்டபாய ஆட்சியை கவிழ்க்கும் நிலைக்கு சென்று விடும் அபாயம் எழுந்துள்ளது

                    பாராளு மன்ற தேர்தலை ஜூன் மாதம் முன்னர் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளார் ,

                        தனி பெரும்பான்மையுடன் கூட்டணி இன்றி ஆட்சி அமைக்க இது நல்ல சந்தர்ப்பம் என கணக்கு போட்டார் ,அது இப்பொழுது கேள்வியாக மாறியுள்ளது .

                        நாட்கள் கடந்து செல்லின் அடுத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்ட தொடர் வருகிறது, அதனை எதிர்கொள்ள வேண்டும்

                        ,ஆகையால் விரைந்து தேர்தலை எதிர்நோக்க வேண்டும் ,அதற்கு இந்த கொரனோ கோட்டாவுக்கு வழிவிடுமா …?

                        என்ற அச்சத்துடனே இப்பொழுது ஆட்சியாளர்கள் பயணிக்கின்றனர் .கொரனோவால் கோட்டாவுக்கு வந்த சோதனை ..!

                        ஆபத்தாக மாறும் கொரனோ
                        ஆபத்தாக மாறும் கொரனோ
                            Posted in இலங்கை செய்திகள்

                            கொரோனா வைரஸ் – பின் போடப்பட்ட பாராளுமன்றத் தேர்தல்

                            கொரோனா வைரஸ் – பின் போடப்பட்ட பாராளுமன்றத் தேர்தல்

                            அமெரிக்கா, இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகள் அண்மைக் காலத்தில் துரிதமான பொருளாதார வளர்ச்சியை அடைந்துக்

                            கொண்டு, பலமாக காணப்பட்ட நிலையிலேயே அந்த நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பாதிப்பு ஏற்பட்டது.

                            எனினும், இலங்கை கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் மத்தியிலேயே இந்த பேரிடருக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது. 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு

                            வரை இடம்பெற்ற மோசமான ஆட்சி காரணமாக எமது கடன் சுமை 71% இதனால் அதிகரித்தது. ரூபாயின் பெறுமதி 30% இதனால் வீழ்ச்சியடைந்தது. பொருளாதார வளர்ச்சி வேகம் 2.7% வரை

                            குறைவடைந்தது. 2019 நவம்பரில் நாம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று புதிய அரசாங்கமொன்றை அமைத்த போதிலும்,

                            எமக்குப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமையினால், கடந்த அரசாங்கத்தின் மருந்து மற்றும் உர வழங்குனர்களுக்கு

                            நிலுவைப் பணத்தைச் செலுத்துவதற்கேனும் இடைக்கால கணக்கறிக்கையொன்ற நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலையேற்பட்டது.

                            இச்சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பின் 150(3) ஆம் உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு கிடைக்கும் நிதி தொடர்பான ஏற்பாடுகள் மாத்திரமே ஆறுதலாக உள்ளது. இந்த அனைத்து பாதகமான

                            நிலைமைகளின் மத்தியிலேயே நாம் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது. கடந்த மார்ச் 11 ஆந் திகதி முதலாவது கொரோனா நோயாளி அடையாளங்

                            காணப்பட்டவுடன், நாம் நோயினை முன்னரே இனங்காணுதல், நோயாளிகளை வேறுபடுத்தி சிகிச்சையளித்தல், அபாயத்தை எதிர்நோக்கிய நபர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தல்,

                            நோயாளிகளுடன் பழகிய நபர்களைக் கண்டறிதல், சமூக இடைவெளியைப் பேணுதல் போன்ற கட்டுப்பாட்டு முறைமைகளை அறிமுகப்படுத்தினோம். எமது வாழ்க்கையில் இவ்வாறானதொரு

                            நடவடிக்கையை ஒருபோதும் கண்டதில்லை. நோய் பரவுவதைத் தடுப்பதற்காக பல வாரங்கள் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டியேற்பட்டது.

                            நாடு முழுவதும் தமது வீடுகளிலிருந்து வெளியேற முடியாத மக்களுக்கு உணவு, மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான முறைமையொன்றைத்

                            தயாரிக்க வேண்டியேற்பட்டது. குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு உதவி வழங்க வேண்டியேற்பட்டது. நாட்டின்

                            உற்பத்திச் செயற்பாட்டை நடாத்திச் செல்வதற்காக விவசாயிகள், மரக்கறி விவசாயிகள் மற்றும் மீனவர்களின உற்பத்திகளைக்

                            கொள்வனவு செய்ய வேண்டியேற்பட்டது. இந்த அனைத்தையும் ஒரே தடவையில் மிகவும் குறுகிய காலப்பகுதியில் ஒழுங்குபடுத்திக்

                            கொள்ள முடிந்தமை உண்மையில் முகாமைத்துவத்தின் பிரதிபலனாகும்.

                            கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை பெற்றுக்கொண்டுள்ள வெற்றியை இன்று முழு உலகமும் ஏற்றுக்கொள்கிறது. ஜனாதிபதி அவர்கள் இது தொடர்பாக

                            தனித்துவமான தலைமைத்துவத்தை வழங்கியுள்ளார். எமது அரசாங்கத்தின் மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாட்தொகுதியினர் முழு உலகினதும் கவனத்தை

                            ஈர்த்துள்ளனர். நோயாளிகள் பழகிய நபர்களைக் கண்டறிவதில் எமது உளவுப் பிரிவு வெளிப்படுத்தியுள்ள திறமை, அர்ப்பணிப்பு

                            காரணமாகவும், தனிமைப்படுத்தல் செயற்பாட்டை மேற்கொண்டு செல்வதில் முப்படையினர் வெளிப்படுத்தியுள்ள வினைத்திறன் காரணமாகவும் நோய் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

                            பொலிசார் உள்ளிட்ட அனைத்து மட்டங்களிலான அரச ஊழியர்களும் கொரோனா தடுப்பு வேலைத்திட்டத்தின்

                            வெற்றிக்குப் பங்களிப்பு வழங்கியுள்ளனர். இன்று கொரோனா வைரஸ் காரணமாக பாதுகாப்பற்றதாக மாறியுள்ள உலகில் எமது நாடு மிகவும் பாதுகாப்பான இடமாக மாறியுள்ளது. அழிக்கப்பட்ட

                            பொருளாதாரம், இயலுமான எல்லா சந்தர்ப்பங்களிலும் அரசாங்கத்திற்கு இடையூறு விளைவிக்கின்ற, நாட்டின் மீது அன்பு

                            இல்லாத சந்தர்ப்பவாத எதிர்க்கட்சியொன்று இந்த நாட்டில் உள்ள நிலைமையிலேயே நாம் இவ்வாறான கட்டத்தை அடைந்துக் கொண்டோம்.

                            தனிமைப்படுத்தலுக்குச் செல்வதை நிராகரித்தவர்களை ஊக்குவித்தமை மூலம் எதிர்க்கட்சித்தலைவர் ஆரம்பத்திலிருந்தே கொரோனா தடுப்பு வேலைத்திட்டத்தினைச் சீர்குலைக்க

                            முயற்சித்தார். அதன் பின்பு, பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அரச நிதியை செலவிடுவதற்கு ஜனாதிபதிக்கு

                            அதிகாரம் இல்லை எனக் கூறி அவர்கள் சுகாதார சேவை உள்ளிட்ட அனைத்து அரச சேவைகளையும் சீர்குலைக்க முயற்சித்தனர்.

                            புதிய பாராளுமன்றம் ஜூன் இரண்டாம் திகதிக்கு முன்னர் கூட வேண்டும் எனவும், பாராளுமன்றத் தேர்தலை அதற்கு முன்னர்

                            நடாத்த முடியாது எனவும், அதனால் பாராளுமன்றத்தைக் கலைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை ரத்துச் செய்ய வேண்டும் எனவும் இன்று அவர்கள் கூறி வருகின்றனர்.

                            நல்லாட்சி அரசாங்கம் மூன்று வருடங்களுக்கு உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைத்தமையை நாம் அறிவோம். வழக்குகள் இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்களுக்கேனும் தேர்தலை

                            நடாத்துவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தமையினால் மாத்திரமே நீதிமன்றம் சென்று தேர்தலை குறிப்பான திகதியின்றி ஒத்திவைக்க அவர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில்

                            முடிந்தது. 2017 ஆம் ஆண்டு மாகாண சபைகள் கலைக்கப்படுவதற்கு சில நாட்களே இருந்த சமயத்தில், மாகாண

                            சபைத் தேர்தல் நடாத்தப்படுவதைத் தடுப்பதற்காக நல்லாட்சி அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல் முறைமையை மாற்றியமைத்தது.

                            அந்த திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம் என சட்டமா அதிபர்

                            தெரிவித்தபோது, அவர்கள் பாராளுமன்றத்தின் நடைக்கூடத்தில் மேற்கொண்ட பேரம் மூலம் வாக்குகளுக்காக கொள்கைகளைக்

                            காட்டிக்கொடுத்து தேவையான பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டனர்.

                            அந்த இழிவான கொடுக்கல் வாங்கலின் பிரதிபலனாக 2017 ஆகஸ்ட் 25 ஆந் திகதி நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச்

                            சட்டத்தில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ சதவீதம் 40% ஆக காணப்பட்டதுடன், அதன் ஒரு மாதத்தின் பின்பு நிறைவேற்றப்பட்ட

                            மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ சதவீதம் 50% ஆக காணப்பட்டது.
                            உயர் நீதிமன்றத்தில் மனுச் சமர்ப்பித்து,

                            பிரகடனப்படுத்தப்பட்டிருந்த பாராளுமன்றத் தேர்தலை ரத்துச் செய்த அரசியல் கட்சிகள் உள்ள உலகின் ஒரே ஜனநாயக நாடு இலங்கையாகும். தற்போதைய பாராளுமன்றத் தேர்தலை

                            ஒத்திவைப்பதற்கு இன்று மேற்கொள்ளும் முயற்சி அந்த இழிவான வரலாற்றின் ஒரு நீட்சியாகும். நாட்டில் எந்த சந்தர்ப்பத்திலாவது

                            பொது சமூக வாழ்வு மீண்டும் ஆரம்பமாக வேண்டியுள்ளது. எமது 25 நிர்வாக மாவட்டங்களில், பதினொரு மாவட்டங்களில் கொரோனா

                            வைரஸ் தொற்றுள்ள ஒருவரேனும் இல்லை. மேலும் ஏழு மாவட்டங்களில் தொற்றுடைய ஒருவர் அல்லது இருவரே

                            அடையாளங் காணப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு மாவட்டங்களில் ஐந்திற்கும் ஏழுக்குமிடையிலான எண்ணிக்கையைக் கொண்ட

                            நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். ஐந்து மாவட்டங்களில் மாத்திரமே குறிப்பிடத்தக்களவான நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

                            கடந்த மார்ச் இரண்டாம் திகதி ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்து, தேர்தல் நடாத்தப்படும் திகதி ஏப்ரல் 25 எனவும், புதிய

                            பாராளுமன்றம் முதலாவது கூடும் திகதி மே 14 எனவும் அறிவித்தார். அதன் பிறகு பத்து நாட்களின் பின்பு முதலாவது கொரோனா நோயாளி கண்டறியப்பட்ட சந்தர்ப்பத்தில் தேர்தல் நடாத்தப்படும்

                            திகதியை ஒத்திவைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படவில்லை. 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 24(3) ஆம் பிரிவுக்கு ஏற்ப,

                            ஜனாதிபதி குறிப்பிட்ட திகதியில் பாராளுமன்றத் தேர்தலை நடாத்த முடியாவிடின், அதற்கு வேறொரு திகதியைக் குறிப்பதற்கான கடப்பாடு தேர்தல் ஆணைக்குழுவுக்கு காணப்படுகிறது.

                            திகதியொன்றைக் குறிப்பிடாது பாராளுமன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடையாது. எதிர்காலத்தில் பல வாரங்களில் அல்லது பல

                            மாதங்களில் இடம்பெற முடியுமான அல்லது இடம்பெற முடியாத விடயங்கள் தொடர்பாக ஏற்படுத்திக்கொள்ளும் ஊகங்களின்

                            அடிப்படையில் கட்டாயமாகப் பின் பற்ற வேண்டிய சட்டரீதியான ஏற்பாடுகளை ஒதுக்கித்தள்ளி விட முடியாது.

                            தேர்தல் ஆணைக்குழு முதலில் 24(3) ஆம் பிரிவின் கீழ் அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைப்பொறுப்பினை சட்டத்திற்கு

                            ஏற்புடையவாறு நிறைவேற்றி விட்டு, அதன் பின்பு கலந்துரையாட வேண்டிய விடயம் ஏதாவது இருப்பின், அது தொடர்பாக கவனஞ் செலுத்த வேண்டும்.


                            பிரதம அமைச்சர்
                            மஹிந்த ராஜபக்ஷ

                            Posted in இலங்கை செய்திகள்

                            தேர்தல் பிரச்சாரங்கள் இன்றுடான் முடிவு

                            தேர்தல் பிரச்சாரங்கள் இன்றுடான் முடிவு

                            இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தல் பரப்புரைகள் இன்றுடன் முடிவுக்கு வருகின்றன ,அதனால் இன்று அதி உச்ச கட்ட பரப்புரையில் இரு பிரதான வேட்ப்பாளர்களும் களத்தில் குதித்துள்ளன ,இதன் பின்னர் நாளை கொழும்பில் பல அதிரடி எதிர்மறை மாற்றங்கள் நிகழ கூடும் என எதிர்பார்க்க படுகிறது

                            Posted in இலங்கை செய்திகள்

                            வாக்கு பெட்டிகளை காவி செல்ல 1000 பேரூந்துகள் பணியில்

                            வாக்கு பெட்டிகளை காவி செல்ல 1000 பேரூந்துகள் பணியில்

                            இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்கு பெட்டிகளை காவி செல்ல அரச பேரூந்துகள் ஆயிரம் சேவையில் ஈடுபடுத்த படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது