Tag: துஷ்பிரயோகம்
ஆசிரியர் கைது மாணவி துஷ்பிரயோகம்
ஆசிரியர் கைது மாணவி துஷ்பிரயோகம்
ஆசிரியர் கைது மாணவி துஷ்பிரயோகம் என மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன .
தெவி நிவார பகுதியில் உள்ள பாடசாலை ஆங்கில ஆசிரியர் ஒருவர், மாணவி ஒருவரை பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கினார் என்கின்றகுற்ற சாட்டின் அடிப்படையில் ,தற்போது சிறுவர் மற்றும் மகளிர் பணியாகத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரளமாக ஆங்கிலம் பேசக்கூடிய இந்த ஆசிரியர். அங்கு கல்வி கற்ற ஒரு மாணவியுடன் நெருங்கி பழகினார் என்கின்ற அடிப்படையில், இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சமீப காலங்களாக பாடசாலைகளில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் ,தவறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதான குற்றச்சாட்டுக்கள் ,அதிகரித்து வரும் இடையில் இந்த கைது இடம் பெற்றுள்ளது.
இந்த கைதின் பின்புலத்தில் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது ஆசிரியர்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட சதியா .அல்லது உண்மையில் இந்த குற்றச்சாட்டுக்கள் இடம்பெறுகின்றனவா .என்பது தொடர்பாக தெரிய வரவில்லை.
தொடர்ந்தும் அதிகரித்து வரும் ,இவ்வாறான குற்றச்சாட்டுகள் சம்பவங்களினால் பெற்றவர்கள் அச்ச நிலையில் காணப்படுகின்றனர் .
இதனை தடுப்பதற்கு கல்வி அமைச்சு சீரான ஒரு நடவடிக்கை மேற்கொண்டால் மட்டும்தான் ,இவ்வாறு நடவடிக்கையை தடுக்க முடியும்.
இலங்கையில் மாணவர்களை நெறிப்படுத்த வேண்டுமாக இருந்தால் ,சீரிய வழியில் செல்ல வேண்டுமாக இருந்தால் ,கல்வி அமைச்சு தகுந்த நெருக்கமான ,நடவடிக்கை மேற்கொண்டால் மட்டும்தான், இவ்விதமான சம்பவங்கள் தடுக்கப்படும்.
இவ்வாறான குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்படுபவர்கள், ஆசிரியர் பணியிலிருந்து நீக்கப்பட்டு ,அவர்கள் அரச உத்தியோகத்தில் ஈடுபட முடியாது என்ற சட்டம் ,அமல்படுத்தப்பட்டால் மட்டும்தான் இதனை தடுக்க முடியும்.
ஆனால் கல்வி அமைச்சு ஆளு அரசுகள் இதனை செய்யுமா என்பதுதான் இன்றைய கேள்வியாக உள்ளது .
கிளிநொச்சியில் 16 சிறுவர்கள் துஷ்பிரயோகம்
கிளிநொச்சியில் 16 சிறுவர்கள் துஷ்பிரயோகம்
கிளிநொச்சியில் 16 சிறுவர்கள் துஷ்பிரயோகம் ,16 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த விளையாட்டு பயிற்றுனர் கைது செய்யப்படுவார் என மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.
கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய விளையாட்டு பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவார் என இலங்கை
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜிடம் கிளிநொச்சி பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன்
சனிக்கிழமை (12) தொடர்புகொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ், குறித்த
விடயம் தொடர்பில் பொலிஸார் மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகள் குறித்து வினவிய போதே கிளிநொச்சி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேற்கண்டாறு தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறார்களின் வாக்குமூலங்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னர் இதுவரை சந்தேகநபர் கைது
செய்யப்படாமை தொடர்பில் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகின்றது. 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை என்பது மிகப்பெரிய சமூக அனர்த்தம்.
ஆனால் இந்த விடயம் தொடர்பில் சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வோர் அசமந்த போக்கில் இருப்பது பெற்றோர்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண் சிறப்பு மருத்துவர் துஷ்பிரயோகம்
பெண் சிறப்பு மருத்துவர் துஷ்பிரயோகம்
பெண் சிறப்பு மருத்துவர் துஷ்பிரயோகம் ,அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பயிற்சி பெற்ற பெண் சிறப்பு மருத்துவரை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ வீரரை பரிசோதனைக்காக ஆஜர்படுத்தி, தொடர்புடைய மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில்
சமர்ப்பிக்குமாறு அனுராதபுரம் தலைமையக பொலிஸாருக்கு அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய இன்று உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று அனுராதபுரம் பிரதம நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தார்.
பெண் மருத்துவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.
எனவே, சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்தை கோரியுள்ளனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய, சந்தேகநபரான முன்னாள் இராணுவ வீரரை இம்மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்
பாடசாலை மாணவியை ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்தவர் கைது
பாடசாலை மாணவியை ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்தவர் கைது
மீகஹகிவுல, களுகஹகந்துர பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவியை ஏமாற்றி உறவினர் வீட்டில் தங்க வைத்து துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மஹியங்கனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹியங்கனை பூஜா நகரைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை மாணவியை ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்தவர் கைது
சிறுமியின் பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமி இன்று (06) பதுளை சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
அதேநேரம் சந்தேக நபர் இன்று பதுளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கந்தகெட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரியப்பாவால் துஷ்பிரயோகம் சிறுமி சொல்ல மறுத்தது ஏன்
பெரியப்பாவால் துஷ்பிரயோகம் சிறுமி சொல்ல மறுத்தது ஏன்
11 வயதும் 10 மாதங்களுமான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், அவருடைய பெரியப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம், மொனராகலை, மெதகம பொலிஸ் பிரிவில் ரத்தனதெனிய ஹொகொல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
11 வயதும் 10 மாதங்களுமேயான இச்சிறுமி, 2019 ஆம் ஆண்டில் இருந்து பெரியப்பாவினால், அச்சிறுமியின் வீட்டில் வைத்தே, இரண்டு வருடங்களாக அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
அச்சிறுமியின் வீட்டில் ஒருவர் திருடுவதற்கு மறைந்துள்ளார் என்பது தொடர்பில் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு வந்த அயலவர்கள், அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், 15 வயதான சிறுமியுடன் காதல் உறவை கொண்டிருப்பதால் அந்த வீட்டுக்குச் சென்றதாகவும், அச்சிறுமியை எவ்விதமான தொந்தரவுக்கும் உட்படுத்த வில்லையென பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பெரியப்பாவால் துஷ்பிரயோகம் சிறுமி சொல்ல மறுத்தது ஏன்
எனினும், சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய போது, அச்சிறுமி, அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையின், தன்னுடைய பெரியப்பா, அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார். எனினும், வெளியில் சொன்னால், இரு வீட்டாருக்கும் இடையில், பிரச்சினை ஏற்படும் என்ற பயத்தால், வெளியில் சொல்லவில்லை என்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஹொகொல்ல ரத்தனதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த ‘சமந்த” என்றழைக்கப்படும் பெரியப்பாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரை பிபில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த மெதகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
பெண் வைத்தியர் துஷ்பிரயோகம்: ஆண் வைத்தியர் கைது
பெண் வைத்தியர் துஷ்பிரயோகம்: ஆண் வைத்தியர் கைது
மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் 28 வயதுடைய பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் வியாழக்கிழமை (8) கைது செய்யப்பட்டதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.
அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் 45 வயதுடைய திருமணமான வைத்தியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெண் வைத்தியர் துஷ்பிரயோகம்: ஆண் வைத்தியர் கைது
பெண் வைத்தியரின் தந்தை அளித்த முறைப்பாட்டின் பிரகாரம் ஆண் வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் வைத்தியர் வேறு வைத்தியசாலையில் இருந்து இடமாற்றம் பெற்று கடந்த 5ம் திகதி அரநாயக்க மாவட்ட வைத்தியசாலைக்கு பணிக்காக வந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான வைத்தியர் மற்றும் அப்போது கடமையில் இருந்த 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவத்திற்கு முகம் கொடுத்த பெண் வைத்தியர் கேகாலை போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
2 சிறுமிகள் துஷ்பிரயோகம்: பெரிய தந்தை கைது
2 சிறுமிகள் துஷ்பிரயோகம்: பெரிய தந்தை கைது
இரண்டு சிறுமிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட, அவ்விரு சிறுமிகளின் பெரிய தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாமிமலை ஸ்டொக்கம் தோட்ட பகுதியில் 12 மற்றும் 13 வயதான இரண்டு சிறுமிகளும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டிக் கைது செய்யப்பட்ட பெரிய தந்தை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹட்டன் நீதவான் நீதிமன்றில் சந்தேக நபரை முன்னிலைப்படுத்திய போதே ஹட்டன் நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இரண்டு சிறுமிகளின் தாய் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றார். இவர்களின் தந்தை மறுமணம் முடித்துள்ளார் இந்த இரண்டு சிறுமிகளும் பெரிதந்தையின் பாராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளனர்.
2 சிறுமிகள் துஷ்பிரயோகம்: பெரிய தந்தை கைது
பெரிய தந்தையானால் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தி வந்தமை தொடர்பில் இவ்விரு சிறுமிகளும் தனது வகுப்பாசிரியரிடம் கூறியுள்ளனர். அதனை அடுத்து பாடசாலையின் நிர்வாகத்தின் ஊடாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கையினை பெற்றுகொள்வதற்காக டிக்கோயா -கிளங்கன் ஆதாரவைத்திய சாலையில் இவ்விரு சிறுமிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த நோர்வூட் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்
20 வயதான யுவதியை கட்டிவைத்து துஷ்பிரயோகம் | இலங்கை செய்திகள்
20 வயதான யுவதியை கட்டிவைத்து துஷ்பிரயோகம் | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்| வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதான யுவதியொருவர் அந்த வீட்டின் எஜமானால் 4 தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என மொறட்டுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
60 வயது மதிக்கத்தக்க ஒருவரே அந்த யுவதியை கட்டிவைத்து மூன்று நாட்களாக துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.
அவரது பிடியில் இருந்து தப்பிவந்த யுவதி, மொரட்டுவ பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் முறைப்பாடு செய்துள்ளார்.
நோர்வூட்டைச் சேர்ந்த தரகர் மூலமாக அந்த யுவதி, 20 நாட்களுக்கு முன்னரே அந்த வீட்டில் பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.
20 வயதான யுவதியை கட்டிவைத்து துஷ்பிரயோகம் | இலங்கை செய்திகள்
சந்தேகநபரான அந்த நபர், அவ்வப்போது அந்த யுவதியிடம் அங்க சேஷ்டைகளை விட்டுவந்துள்ளார். இந்நிலையில், அவ்வீட்டைச் சேர்ந்த ஏனைய அங்கத்தவர்கள் விடுமுறையை கழிப்பதற்காக வெளியில் சென்றுள்ளனர்.
அந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டே, அந்த யுவதியை அச்சுறுத்தி, இவ்வாறு கட்டிவைத்து, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது பிடியில் இருந்து தப்பி வீட்டைவிட்டு வெளியேறிய யுவதி, வீதியில் சென்றுக்கொண்டிருந்தவரிடம் பொலிஸ் நிலையத்தின் தகவலைப் பெற்று, பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறையிட்டுள்ளார்.

























