ஒரு பேரல் டீசல் 286 அமெரிக்க டாலர்
Posted in இலங்கை செய்திகள்

ஒரு பேரல் டீசல் 286 அமெரிக்க டாலர்

ஒரு பேரல் டீசல் 286 அமெரிக்க டாலர்

ஒரு பேரல் டீசல் 286 அமெரிக்க டாலர் ,ஒரு பேரல் டீசல் 286 அமெரிக்க டாலர் விலையில் கொள்முதல் செய்யப்பட்டதை இலங்கை பெட்ரோலியக் கழகம் (சிபிசி) உறுதி செய்துள்ளது; அதிக விலை நிர்ணயிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அது நிராகரித்துள்ளது.

ஒரு பேரல் டீசல் 286 அமெரிக்க டாலர் விலை

ஒரு பேரல் டீசல் 286 அமெரிக்க டாலர் விலையில் கொள்முதல் செய்யப்பட்டதை இலங்கை பெட்ரோலியக் கழகம் (சிபிசி) உறுதி

செய்துள்ளதுடன், எரிபொருள் இறக்குமதி மிகைப்படுத்தப்பட்ட அல்லது முறையற்ற விலைகளில் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் உறுதியாக நிராகரித்துள்ளது.

கச்சா எண்ணெயோ அல்லது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளோ அதிக விலையில் கொள்முதல் செய்யப்படவில்லை என்று சிபிசி நிர்வாக இயக்குநர் மயூர நெத்திகுமாரகே பத்திரிகையிடம் தெரிவித்தார்.

மேலும், சமீபத்திய ஊடக அறிக்கைகள் தவறானவை என்றும் அவர் நிராகரித்தார்.

கச்சா எண்ணெய் விலை

பொதுவாக, உலகளாவிய அளவுகோல்களின்படி கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 அமெரிக்க டாலருக்கும் அதிகமாகவும், சுத்திகரிக்கப்பட்ட டீசல் விலை 200 அமெரிக்க டாலருக்கும் அதிகமாகவும் இருக்கும் என்று அவர் விளக்கினார்.

மேலும், கூறப்படுவது போல, சிபிசி ஒருபோதும் திரிபுபடுத்தப்பட்ட விலை வரம்புகளில் இறக்குமதி செய்ததாகக் கூறவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

எச்எஸ்பிசி-யின் உலகளாவிய தலைமைச் செயல் அதிகாரியின் கருத்துக்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் “வீட்டிற்கே வந்து வழங்கும்” விலை நிர்ணய முறை குறித்த குறிப்புகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக நெத்திகுமாரகே மேலும் தெளிவுபடுத்தினார்.

அத்தகைய விலை நிர்ணயம், மொத்த இறக்குமதி செலவுகளுக்குப் பதிலாக, நடமாடும் விநியோக முறைகள் மூலம் நுகர்வோருக்கு நேரடியாக வழங்கப்படும் எரிபொருளுக்குப் பொருந்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய சிபிசி, முறைகேடுகள் அல்லது அதிகப்படியான விலை நிர்ணயம் குறித்த குற்றச்சாட்டுகளை நிராகரித்து,

சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல் 71 அமெரிக்க டாலர் முதல் 113 அமெரிக்க டாலர் வரையிலான வரம்பிற்குள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறியது.

முன்னதாக, காப்பீடு, கப்பல் போக்குவரத்து மற்றும் விநியோகக் கட்டுப்பாடுகள் போன்ற கூடுதல் செலவுகள் காரணமாக ஆசிய

வாங்குபவர்களுக்கான எண்ணெய் விலைகள் நிர்ணய விலைகளைத் தாண்டக்கூடும் என்று சமீபத்தில் சுட்டிக்காட்டிய HSBC-யின் தலைமை நிர்வாக

அதிகாரி ஜார்ஜஸ் எல்ஹெடெரியின் கருத்துக்களைத் தொடர்ந்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டது.

இலங்கையில் டீசல் மண்ணெண்ணெய் விலை குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

தரம்குறைந்த டீசல் விநியோகிக்கப்படுகிறது

தரம்குறைந்த டீசல் விநியோகிக்கப்படுகிறது

தரம் குறைந்த 40,000 மெற்றிக் தொன் டீசல் சந்தைக்கு வெளியிடப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நவம்பர் 5 ஆம் திகதி சிங்கப்பூரில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு வந்த 40,000 மெற்றிக் தொன் டீசல் மாதிரிகள் தர பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாகவும் , கொலன்னாவையில் குறிப்பிட்ட டீசல் விநியோகம் செய்யப்படுவதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

டீசல் கையிருப்பின் மாதிரிகளில் இரண்டு LIOC ஆய்வக சோதனை அறிக்கைகளில்
அவற்றின் தரம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் டீசல் மண்ணெண்ணெய் விலை குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

சீனாவின் டீசல் கிளிநொச்சியில் முதற்கட்டமாக விநியோகம்

சீனாவின் டீசல் கிளிநொச்சியில் முதற்கட்டமாக விநியோகம்

சீன அரசாங்கம் இலங்கையின் விவசாயத்துறைக்காக வழங்கிய டீசலை விநியோகிக்கும் நடவடிக்கை கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பமாகியுள்ளது.

சீன அரசாங்கம் நாட்டின் விவசாயத்துறைக்காக 68 இலட்சம் லீற்றர் டீசலை வழங்கியுள்ளது இதனை விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக அறுவடை ஆரம்பமாகி உள்ள கிளிநொச்சி மாவட்டத்திற்கு முதலில் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்த எரிபொருளை வழங்குகிறது.. கமநல அபிவிருத்தித் திணைக்களம் விவசாயிகளுக்கு வழங்கியுள்ள வவுச்சர் மூலம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரை ஏக்கரிலிருந்து இரட்டரை ஏக்கர் வரை நெற்செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு ஹெக்டெயருக்கு 15 லீற்றர் வீதம் டீசல் இலவசமாக வழங்கப்படும்.

அறுவடை மேற்கொள்ளும் விதத்திற்கு அமைய அனைத்து மாவட்டங்களுக்கும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்த எரிபொருளை வழங்கும்.


கமநல அபிவிருத்தித் திணைக்களம் விவசாயிகளுக்கு வழங்கியுள்ள வவுச்சர் மூலம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலை பெற்றுக்கொள்ள முடியும்.

No posts found.
Posted in இலங்கை செய்திகள்

யாழில் பெற்றோல், டீசல் விநியோகத்தை சீராக முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கை

யாழில் பெற்றோல், டீசல் விநியோகத்தை சீராக முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கை

தேசிய எரிபொருள் விநியோக திட்டத்திற்கு அமைவாக யாழ் மாவட்டத்தில் நேற்றைய தினம் (21) தொடக்கம் பெற்றோல் மற்றும் டீசல் விநியோகத்தை

சீராக முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோக நடைமுறைகள் தொடர்பில் நேற்றைய தினம் (21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யாழ் மாவட்டத்தில் 8 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் விநியோகமும், 15 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் விநியோகமும் இடம்பெறுகின்றன..

நேற்று (21 ஆம் திகதி) தொடக்கம் 29 ஆம் திகதி வரை பெற்றோல் 15 எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் தொடர்ச்சியாக வழங்கப்படவுள்ளது.

மக்கள் எந்த விதமான நெருக்கடி மற்றும் குழப்பங்களை
ஏற்படுத்தாது அமைதியான முறையில் எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை சராசரியாக 7 – 10 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 25 ஆம் திகதி வரையில் டீசல் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கான

அட்டவணை இலங்கை பெற்றோலிய கூட்டத்தாபனத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டு குழப்ப நிலையை தோற்றுவிப்பதற்கான சூழலை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதற்கமைவாக அரசாங்கத்தினால் தேசிய எரிபொருள் விநியோக அனுமதிப் பத்திரம் ( National fuel Pass வெளியிடப்பட்டுள்ளது.
QR code முறை மூலமாக இதனை பெற வேண்டும்.

இதனைப் பெறுவதில் சில நடைமுறை பிரச்சினைகள் காணப்படுவதனால் அது முதல்கட்டமாக மேல் மாகாலத்திலும் அடுத்த கட்டமாக நாடு பூராகவும்

அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டம் 25ஆம் திகதிக்கு பின்னர் அமுலில் இருக்கும்.

இந்த திட்டம் யாழ் மாவட்டத்தில் அமுல்படுத்தப்படும் வரையில் பிரதேச செயலகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் விநியோக

பங்கீட்டு அட்டைகளை பயன்படுத்துமாறும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

வாகனங்களின் இறுதி இலக்க அடிப்படையில் இந்த விநியோகம் இடம்பெறும்.

பொதுமக்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் நெருக்கடி நிலையை ஏற்படுத்தாமல் அமைதியாக அந்தந்த பிரதேசங்களில் உள்ள எரிபொருள்

நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருளை பெற்றுக் கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

எரிபொருள் பங்கீட்டு அட்டை இதுவரை கிடைக்கப் பெறாதவர்கள் கிராம அலுவலர் ஊடாக பிரதேச செயலகங்களில் அவற்றைப் பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை பிற மாவட்டங்களில் பணிபுரியும் அரச உத்தியோகத்தர்கள் தங்களின் உரிய ஆவணங்களை அந்தந்த பிரதேச செயலகங்களில் சமர்ப்பிப்பதன் மூலம் அவர்களுக்குரிய எரிபொருள் பங்கீட்டு அட்டையை

பெற்றுக் கொள்ள முடியும். யாழ் மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைகளை முன்னெடுப்பதற்காக யாழ் பல நோக்கு கூட்டுறவு சங்கம் மட்டுப்படுத்திய எரிபொருள் விநியோகத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இங்கு எரிபொருளை பெறுபவர்கள் கட்டாயமாக மாவட்ட செயலகங்களில் முன் அனுமதியை பெற்றிருத்தல் வேண்டும்.

யாழ் மாவட்டத்தில் கருப்பு சந்தை எரிபொருள் விற்பனையை தடுக்கும் முகமாக
இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இது பொது மக்களை அசௌகரியத்திற்கு


உட்படுத்தப்படும் செயல் அல்ல. எனவே அனைவரும் ஒத்துழைத்து எரிபொருள் விநியோகத்தை
முன்னெடுப்பதற்கு உதவுமாறும் அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

    Posted in இலங்கை செய்திகள்

    எரிபொருள் பொலிசுக்கு மட்டும் – மக்கள் பொலிஸ் மோதல்

    எரிபொருள் பொலிசுக்கு மட்டும் – மக்கள் பொலிஸ் மோதல்

    இலங்கை மக்களுக்கு எரிபொருள் வழங்குதல் நிறுத்த பட்டு இராணுவம் மற்றும் பொலிஸ் பெற்று கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மக்கள் வரிசையில் காத்திருக்க பொலிசார் இராணுவம் தமது வாகனங்களில் வருகை தனது பெற்றோல் டீசல் பெற்று செல்லும் நிலை மக்கள் மத்தியில் முறுகளை ஏற்படுத்தியுள்ளது.

    கோட்டபாய ராஜபக்சவின் இந்த நடவடிக்கை சிங்கள மக்கள் மத்தியில் மோதலை ஏற்படுத்தியுள்ளது.

    அதே சிங்கள மக்களை பொலிசார் ஆடு மாடுகள் போல விரட்டும் நிலை ஏற்பட்டுள்ளது .


    இலங்கை காவல்துறையின் இந்த செயல்பாடு மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதால் பெரும் போராட்டம் அரசுக்கு எதிராக வெடிக்கும் என எதிர் பார்க்கலாம்.

    அத்துடன் அரச உடைமைகள் சூறையாடப்பட்டு அரச சொத்துக்கள் எரிக்க படும் நிலையும் தோற்றம் பெற போகிறது .

    மாத்தளையில் இடம்பெற்ற இந்த போலீஸ் மக்கள் மோதல் சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

    எரிபொருள் பொலிசுக்கு மட்டும் எனும் சிங்கள ஆளும் அரசின் செயல் பாடு மக்கள் பெரும் போருக்கு தயாராகும் நிலையை உருவாக்கியுள்ளது.

    எரிபொருள் பொலிசுக்கு மட்டும் - மக்கள் பொலிஸ் மோதல்
      Posted in இலங்கை செய்திகள்

      ஆயிரம் லீற்றர் டீசல் காவல்துறையால் மீட்பு

      ஆயிரம் லீற்றர் டீசல் காவல்துறையால் மீட்பு

      கொட்டகலை, கொமர்ஷல் பகுதியிலுள்ள மொத்த வியாபார நிலையமொன்றில் பதுக்கி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆயிரம் லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது.

      ஐந்து பெரல்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த டீசலே திம்புள்ள – பத்தனை பொலிஸாரால் இன்று (26) பிற்பகல் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

      குறித்த வர்த்தக நிலையத்தில் டீசல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திம்புள்ள – பத்தன பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றில் அடிப்படையில், சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

      இதன்போது ஆயிரம் லீற்றர் டீசல் மீட்கப்பட்டுள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட நடவடிக்கைக்காக அவர் நாளை (27) அட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

      ” நாங்கள் மொத்த வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள். போக்குவரத்து சேவைக்கு எமக்கு டீசல் தேவை. அதற்காகவே சேமித்து வைக்கப்பட்டது.” என கைதானவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

      இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

        Posted in இலங்கை செய்திகள்

        எரிபொருள் விலை 60 ரூபாவால் அதிகரிப்பு

        எரிபொருள் விலை 60 ரூபாவால் அதிகரிப்பு


        இலங்கையில் உடனடி அமுலுக்கு வரும் நிலையில் எரிபொருள் விலை அதிகரிக்க பட்டுள்ளது.


        இதன் அடிப்படையில் பெட்ரோல் 50 ரூபாவினால் அதிகரிக்க பட்டு 470 ரூபாவாகவும்


        டீசல் ஓரி லீட்டர் 60 ரூபாவினால் அதிகரிக்க பட்டு 460 ஆகவும்


        ஓக்கேடான ஒரு லீற்றர் 100 ரூபாவினால் அதிகரிக்க பட்டு 550 ரூபாவான் விலை அதிகரிக்க பட்டுள்ளது.

        கோட்டாபய ராஜபக்சவின் இந்த விலை அதிகரிப்பு செயல் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

          Posted in இலங்கை செய்திகள்

          உடையார் கட்டில் புலிகளினால் புதைக்க பட்ட டீசல்,பெட்ரோல் மீட்பு- இராணுவம் குவிப்பு

          உடையார் கட்டில் புலிகளினால் புதைக்க பட்ட டீசல்,பெட்ரோல் மீட்பு- இராணுவம் குவிப்பு

          உடையார்கட்டு பகுதியில் இறுதி போர் உக்கிரம் பெற்ற காலத்தில் புலிகள் அமைப்பினால் பதுக்கி வைக்க பட்ட எரிபொருள் கலங்கள் மீட்க பட்டுள்ளன

          போர் உக்கிரம் , பெற்று இலங்கை சிங்கள படைகள் முன்னேறி வந்த நிலையில் மக்கள்; வீடுகளில் வெட்ட பட்ட பதுங்கு குளிகளுக்குள் இந்த பொருட்கள் பதுக்கி வைக்க பட்டன

          தற்போது உரிமையாளர்களினால் அந்த புட்டி பகுதி மண் நிரவப்பட்ட பொழுது ,மேற்படி கலங்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளது

          மேற்படி விடயம் குற்ற புலனாய்வு துறையினருக்கு தெரிய வந்த நிலையில் ,குறித்த வீடு சுற்றி வளைக்க பட்டு இராணுவம் குவிக்க பட்டுள்ளது

          மேலும் நீதிபதி ஒருவர் தலைமையில் அந்த அகழ்வு பணிகள் கண்காணிக்க படுவதாக தெரியவருகிறது ,

          குறித்த பகுதியில் விடுதலை புலிகளின் பல்வேறு பட்ட அமைப்பின் முகாம்கள் நிர்வகிக்க பட்டு இருந்தன என்பது இங்கே கவனிக்க தக்கது

          போர் முடிந்த 13 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் இவ்விதமான தடய பொருட்கள் தற்போது வரை கண்டு
          பிடிக்க பட்டு வருகிறது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

          தற்போது குறித்த வீட்டார் ,விசாரணை வளையத்திற்குள் முடக்க பட்டுள்ளனர் ,விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

            Posted in இலங்கை செய்திகள்

            40,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கைக்கு

            40,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கைக்கு

            மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசலுடனான கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதாக

            தெரிவிக்கப்படுகின்றது.

            இந்திய உதவித்திட்டத்தின் கீழ் இந்த கப்பல் நேற்று மாலை கொழும்பை வந்தடைந்துள்ளது.

              Posted in இலங்கை செய்திகள்

              இலங்கைக்கு பெட்ரோல் ,டீசல் வழங்கி அதிரடி காட்டிய இந்தியா

              இலங்கைக்கு பெட்ரோல் ,டீசல் வழங்கி அதிரடி காட்டிய இந்தியா

              இந்திய கடந்த 24 மணித்தியாலத்தில் 2,70,000 மர்டிக் தொன் டீசல் மற்றும் பெட்ரோலை
              வழங்கியுள்ளது

              சீனாவுடன் ஒட்டி உறவாடி இந்தியாவை பகைத்து கொண்டு ஆணவத்தில்

              ஆடிய இலங்கை தற்போது இந்தியாவுக்கு நல்ல பிள்ளையாக தன்னை காட்டி கொள்கிறது

              முதுகில் குத்திய கோட்டா ,மகிந்த அரசுகளை மீளவும் மோடி அரசு

              நம்புகின்றமை கோமாளித்தனம் என்பது குறிப்பிட தக்கது