இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கை திரும்பினார்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதி புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

புதுப்பித்தல் வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கை தரும். புதுப்பிப்புக்களின் அடிப்படையிலேயே நாடு, தேசம் உலகம் முன்னேற முடியும். புதிய சிந்தனைகளினாலேயே புத்தாக்கம் பிறக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தச் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய வருடம் பிறத்தல், புதிய நாற்காட்டி, பருவத்திற்குப் பருவம் ஏற்படும் புதிய மாற்றங்கள் உலக மக்களுக்கான வாய்ப்புக்களை புதுப்பிக்கின்றன.

இந்த புதுப்பித்தல்களுக்குப் பின்னால் மற்றொரு மிக முக்கியமான விடயமும் உள்ளது. அதுவே சமூக ஒற்றுமையும் ஒருமைப்பாடும் ஆகும். தமிழ், சிங்களப்

புத்தாண்டை உறவுகளையும் ஒற்றுமையையும் அடிப்படையாகக் கொண்டே புதுப்பித்துக் கொள்கிறோம். உலக நாடுகள் அனைத்தும் இந்த சம்பிரதாயத்தைப் பின்பற்றியே புத்தாண்டுக் கொண்டாட்டங்களை கட்டமைத்துள்ளன.

புத்தாண்டு நமக்கு சொல்லும் பாடத்தை இந்த தருணத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமானது என நம்புகிறேன்.

புதிய ஆண்டில், ஒரு நாடு என்ற வகையில் சரியான வழியில் முன்னேறுவதற்கு சமூக உறவுகளும் ஒற்றுமையுமே அடிப்படைக் காரணிகளாகும் என்பதை நினைவுக்கூறுவதோடு அனைவருக்கும் புத்தாண்டுப் பிறப்பு சிறப்பானதாக அமையட்டும் என பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்

தமிழர் பிரச்சனையை தீர்க்க அனைத்து காட்சிகளை அழைக்கும் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் 2024 ரணில் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் 2024 ரணில் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் 2024 ஆண்டு நடைபெறும் என இலங்கை ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் .

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியாது என அறிவிக்க பட்டிருந்தது .

அதனை அடுத்து தற்போது எதிர்வரும் ஆண்டு இடம்பெறும் என ரணில் விக்கிரமசிங்க அறிவித்து ,கட்சிகளை அலறவிட்டுள்ளார்

வீடியோ

தென் கொரிய ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்
Posted in இலங்கை செய்திகள்

தென் கொரிய ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

தென் கொரிய ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யெயோல் ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான தென் கொரிய நிரந்தர வதிவிட தூதுக்குழு அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் செயற்றிட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தென் கொரிய ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டையும் மக்களையும் விடுவிப்பதற்கான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை தென் கொரிய ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.

எகிப்துக்கு பறந்தார் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
Posted in இலங்கை செய்திகள்

G77+ சீனா மாநாட்டுக்கு புறப்பட்டார்‌ ஜனாதிபதி

G77+ சீனா மாநாட்டுக்கு புறப்பட்டார்‌ ஜனாதிபதி

தற்போதைய அபிவிருத்தி சவால்களுக்கு மத்தியில், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தின் வகிபாகம்” என்ற தொனிப்பொருளில்

செப்டம்பர் 14 முதல் 16 வரை கியூபாவின் ஹவானாவில் நடைபெறவுள்ள “G77+ சீனா” அரச தலைவர் மாநாட்டில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (13) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டார்.

மோடியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்
Posted in இலங்கை செய்திகள்

மோடியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

மோடியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

இந்தியாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(21) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

எகிப்துக்கு பறந்தார் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி ரணில் கைதிகளுக்கு பொது மன்னிப்பு

ஜனாதிபதி ரணில் கைதிகளுக்கு பொது மன்னிப்பு

பொசன் போயாவை முன்னிட்டு கைதிகள் குழுவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அரச மன்னிப்பை வழங்கியுள்ளார்.

அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த மன்னிப்பு வழங்கப்படுமென சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பல கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுடன் கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு வழங்கப்பட உள்ளது.

அபராதம் செலுத்தாததால் சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் எஞ்சிய தண்டனை காலத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அபராதம் உட்பட 40 வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு நாளையுடன் 20 வருட சிறைத்தண்டனையை அனுபவித்த கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

கானா ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்
Posted in இலங்கை செய்திகள்

கானா ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

கானா ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கானா நாட்டு ஜனாதிபதி நானா அட்டோ அக்குபோ – அட்டோவையும் லண்டனில் சந்தித்து கலந்துரையாடினார்.

இலங்கை மற்றும் கானாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், ருவண்டா ஜனாதிபதி பவுல் ககமேவையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்து, கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது இலங்கை மற்றும் ருவண்டா நாடுகளுக்கிடையிலான உறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டதோடு, குறிப்பாக விவசாயம் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்த முதலீடுகளுக்கான வாய்ப்புக்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் மன்னாருக்கு விஜயம்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி ரணில் மன்னாருக்கு விஜயம்

ஜனாதிபதி ரணில் மன்னாருக்கு விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று (20) காலை மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.


மன்னார் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்வதும் அந்தப் பிரச்சினைகளுக்கு வழங்கக் கூடிய தீர்வுகள் குறித்து கலந்துரையாடுவதுமே ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

மன்னார் நகருக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் , முதலில் மன்னார் ஒல்லாந்து கோட்டையின் புனரமைப்பு பணிகள் தொடர்பாக ஆராய்ந்தார்.

அதன் பின்னர், நடுக்குடா மீனவ கிராமத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மீனவ சமூகத்தவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடியதுடன், அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார்.

நடுக்குடா மீனவ கிராம மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டதோடு , அது தொடர்பில் துரிதமாக ஆராய்ந்து தேவையான தீர்வுகள் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ரணில் மன்னாருக்கு விஜயம்

மன்னார் காற்றாலை மின் நிலையம் நிர்மாணிக்கப்பட்டு வரும் பிரதேசத்தையும் ஜனாதிபதி அவதானித்ததுடன் காற்றாலை மின் நிலையத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் ஆராய்ந்ததுடன் அப்பகுதி மக்களின் பிரச்சினைகளை கேட்டறியத் தவறவில்லை.


கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்சக்தி ,வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர,வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்

, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க,மன்னார் மாவட்ட
செயலாளர் திருமதி ஸ்ரென்லி டிமேல் மற்றும் அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ரணில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனெக் பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி ரணில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனெக் பேச்சு

ஜனாதிபதி ரணில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனெக் பேச்சு

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனிக்குடன் இலங்கை ஜனாதிபதி ரணில் பேச்சு

எகிப்துக்கு பயணித்துள்ள இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனிக்கை சந்தித்து பேசியுள்ளார் .

இதில் அவர் பிரதமராக வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து கொண்டார் .

மேலும் இவ்வேளை இலங்கை தொடர்பான விடயங்களும் பேச பட்டுள்ளதாக எதிர் பார்க்க படுகிறது.

ஜப்பான் வெளியுறவு மந்திரியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

ஜப்பான் வெளியுறவு மந்திரியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சு

ஜப்பான் வெளியுறவு மந்திரியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சு

ஜப்பான் வெளியுறவு மந்திரியுடன் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் .

ஜப்பானுக்கு இரண்டு நாள் அரசமுறை பயணத்தை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்கா ,,ஜப்பான் வெளியுறவு மந்திரி , நிதியமைச்சர் ,மற்றும் ஜப்பான் நாட்டு பிரதமர் ஆகியோரை சந்திக்க உள்ளார் .

இலங்கைக்கு உதவிகள் வழங்கும் முகமாக ,நிதி உதவி கோரும் நடவடிக்கையில் ,இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா ஈடுபட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

Posted in இலங்கை செய்திகள்

ஜப்பான் பறக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா

ஜப்பான் பறக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செப்டெம்பர் 26ஆம் திகதி ஜப்பான் செல்லவுள்ளார்.

ஜப்பானுக்கான விஜயத்தின் போது ஜனாதிபதி, ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் ஜப்பானிய அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளை சந்திக்க உள்ளார்.

ஜப்பானுக்கான விஜயத்தின் பின்னர் பிலிப்பைன்ஸ் செல்லும் ஜனாதிபதி, அங்கு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பொங்போங் மார்கோஸை சந்தித்து பேச்சுவார்த்தை

நடத்தவுள்ளார். ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் விஜயத்தின் போது, ​​
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி நடைபெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.

    Posted in இலங்கை செய்திகள்

    ரணில் வீட்டில் சாராய போத்தல் திருடியவர் கைது

    ரணில் வீட்டில் சாராய போத்தல் திருடியவர் கைது

    இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வீட்டில், சாராய போத்தல் திருடிய குற்ற சாட்டில் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் .

    ரணில் விக்கிரமசிங்க வீட்டை சுற்றிவளைத்து எரியூட்டிய பொழுது, அங்கிருந்த விலை உயர்வான மதுபான போத்தல்களை, திருடி சென்றனர்என்ற குற்ற சாட்டில் ,இந்த நபர் கைது செய்ய பட்டுள்ளார்.

    போராட்டக்காரர்களை தொடராக கைது செய்து மிரட்டும் நகர்வை, ரணில் விக்கிரமசிங்க அரசு முடுக்கி விட்டுள்ளது .

    இவை கோட்டபாய மீள நாடு வரும் பொழுது இவ்வாறான போராட்டங்கள் ,மீள் எழுச்சி கொள்ளாது இருக்க ,ரணில் விக்கிரமசிங்க அதனை புரிந்து வருகிறார்.

    ஆனால் ரணில் அரசுக்கு எதிராக விரைவில் மக்கள் போராட்டம் ,நாடு முழுவதும் வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது.

      Posted in இலங்கை செய்திகள்

      ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றத் தயார் ரணில்

      ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றத் தயார் ரணில்

      ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட தான் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.

      நாம் இப்போது பொருளாதாரப் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்கள், அந்தப்

      பொருளாதாரப் போராட்டத்தின் வெற்றிக்கு போராட்டக் களத்தில் உள்ள அனைத்து இளைஞர், யுவதிகளையும் சகல வழிகளிலும் பங்கேற்கச் செய்ய தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

      இப்போது பொருளாதாரப் போராட்டத்தில் வெற்றி பெற வேண்டும்.

      அதற்கு இளைஞர்களின் அர்ப்பணிப்பு அவசியம்.

      ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பல தரப்பினருக்கும் இடையில் இன்று (05) ஜனாதிபதி

      அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

      ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றத் தயார் ரணில்

      ஜனநாயக விரோத அரசியலையும் வன்முறையையும் தாம் எதிர்ப்பதாகவும், ஒடுக்குமுறைக்காகவே செயற்படுபவர்கள், பல்கலைக்கழக செயற்பாட்டின்

      ஊடாக பகிடிவதையை நிறுத்தி சிறந்த சமூக ஜனநாயகத்துக்காக முன்வர வேண்டும் எனவும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

      இன்று நமது பல்கலைக்கழகக் கட்டமைப்பு சீர்குலைந்து இருப்பதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று பகிடிவதை ஆகும். வேலைநிறுத்தங்கள் எல்லா காலத்திலும் தொடர்ந்தன.

      வேலைநிறுத்தங்கள் மூலம் ஒரு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்றும், பேச்சுவார்த்தை மூலம் மத்தியஸ்த நிலைக்கு வந்து

      கோரிக்கைகளை பெற்றுக்கொள்வதைப் போன்று, நாட்டுக்காக செய்ய வேண்டிய பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

      அனைத்து ஆர்ப்பாட்டக்காரர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான குழுவொன்றை உருவாக்குமாறு கூறிய ஜனாதிபதி அவர்கள், அக்குழுவிற்கு

      அனைத்து மதங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் அவசியமானது எனவும் குறிப்பிட்டார்.

      இளைஞர்களின் தேவைகளுக்காக அரச அனுசரணையுடன் செயற்படுத்துவதற்கு, கொழும்பு கோட்டை மிதக்கும் சந்தை மற்றும் பல்வேறு இடங்களை முன்மொழிய தான் விரும்புவதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில்

      விக்கிரமசிங்க அவர்கள், அது தொடர்பில் முறையான ஆலோசனைகளை பெரும்பான்மையான ஆர்ப்பாட்டக்காரர்களின் பங்களிப்புடன் தயாரித்து கையளிக்குமாறும் தெரிவித்தார்.

      அந்தச் செயற்பாட்டில், கல்விக்கான நூலகங்கள், அரசியல் கல்விக்கான வசதிகள், இசை, கலை, நாடகம் போன்ற இளைஞர்களின் திறன்கள் மற்றும்

      தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு மத்திய நிலையமாக அது உருவாக்கப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

      ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றத் தயார் ரணில்

      அவசரகால நிலையை முடிந்தவரை விரைவில் நீக்குவது நாட்டின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மைக்கு முக்கியமாக

      இருப்பதைப்போன்று, தற்போதுள்ள நிலைமைகள் காரணமாக நாட்டின் நிர்வாகத்திலும் அதன் தாக்கம் இருப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

      தற்போது LGBT சமூகம் தொடர்பில் அவசரகாலச் சட்டம் காரணமாக பிரச்சினைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமக்கு

      தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை நீக்குவதற்கு தேவையான சட்டப் பின்னணியை தயார் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

      மேலும், பொதுமக்கள் சபைகளை ஸ்தாபிப்பது தொடர்பில் ஏற்கனவே பல தரப்பினரிடமிருந்து முன்மொழிவுகள் தமக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக

      சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், அடுத்த வாரம் குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

      ஆர்ப்பாட்டக்காரர்களை பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்தவர்களின் கோரிக்கையானது, அமைதியான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள

      ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை சட்ட விரோதமாகவோ அல்லது தன்னிச்சையாகவோ கைது செய்வதைத் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்பதாகும்.

      தற்போது எந்த தவறும் செய்யாது தளத்தில் இருக்கின்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்படுவதால் அங்கிருந்து வெளியே செல்ல பயப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

      இப்போராட்டத்தின் மிகவும் கடினமான பகுதி தற்போது ஆரம்பமாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் சிந்தனைகளிலும் புரட்சி ஏற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

      இளம் தலைமுறையினர் எல்லையற்ற அர்ப்பணிப்புடன் நாட்டிற்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தவே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்ததாகவும், அரசியலமைப்பு ரீதியில் சாதகமான பலனைப் பெறுவதே தமது எதிர்பார்ப்பு

      எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் சமூக சீர்திருத்தங்கள் உட்பட நாட்டை முறையான மற்றும் ஸ்திரமான நிலைக்கு

      கொண்டு வர விரைவான சீர்திருத்த செயல்முறையை நிறுவ வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைத்தனர்.

      நாட்டின் முன்னேற்றத்தை விரும்புவோரின் ஆர்ப்பாட்டத்தின் முன்னேற்றம் கலந்துரையாடல் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் செய்துகொள்ளப்படுகின்ற இணக்கப்பாடுகளில் அடங்கியுள்ளதாகவும், அதற்காக ஜனநாயக

      நடவடிக்கைகள் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியிலும் மேற்கொள்ளப்படும் என நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

      போராட்டத்தின் மூலம் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பல பெரிய வெற்றிகளை இளைஞர்கள் பெற்றுத் தந்தது தங்களது தலைமுறையின்

      தனிச்சிறப்பு என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். உலகம் முழுவதும் ஜனநாயகத்தைப் போற்றும் மக்களால் இந்தப் போராட்டம் மதிக்கப்படுதாகவும்,


      அதன் காரணமாகவே நமது நாடு உலகின் கவனத்தைப் பெற்றதாகவும் அவர்கள் கூறினர்.

        Posted in இலங்கை செய்திகள்

        எரிபொருள் விநியோகத்தை முறையாக முன்னெடுக்க ஜனாதிபதி உத்தரவு

        எரிபொருள் விநியோகத்தை முறையாக முன்னெடுக்க ஜனாதிபதி உத்தரவு

        இலங்கை ,கொழும்பு ; நாடுமுழுவதும் எரிபொருள் விநியோகத்தை விரைவாகவும் முறையாகவும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

        இதேபோன்று பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து பஸ்கள் மற்றும் வேன்களுக்கு ,நாடுமுழுவதும் உள்ள அனைத்து இலங்கை போக்குவரத்து

        டிப்போக்கள் மூலம் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை செய்யுமாறு ஜனாதிபதி போக்குவரத்து அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

        எரிபொருள் பிரச்சினை மற்றும் அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் உரிய தரப்பினருடன் பிரதமர் அலுவலகத்தில் இன்று (23)

        இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

        கடற்றொழில், சுற்றுலாத்துறை , உர விநியோகம் உள்ளிட்ட விவசாய நடவடிக்கைகளுக்காகவும், பொது போக்குவரத்து சேவைகளுக்காகவும்

        முன்னைய முறைப்படி இலங்கை போக்குவரத்து டிப்போக்கள் மற்றும்
        நாடளாவிய ரீதியில் உள்ள முப்படைத் தளங்களில் எரிபொருளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

          Posted in இலங்கை செய்திகள்

          ராஜபக்சாக்களுக்கு நான் நண்பன் இல்லை ரணில் கூவல்

          ராஜபக்சாக்களுக்கு நான் நண்பன் இல்லை ரணில் கூவல்

          இலங்கை கொழும்பு ; இலங்கையில் எட்டாவது புதிய ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்துள்ள ரணில் விக்கிரமசிங்க தான் ராஜபக்சக்கள் நண்பன் இல்லை என தெரிவித்துள்ளார் .

          மொட்டு கட்சியின் ஆதரவுடன் மகிந்தவின் ஆசிர்வாதத்துடன் ஜனாதிபதியாக தெரிவான ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சக்கள் நண்பன் இல்லை என்கின்ற தகவல் மக்களை சிரிப்பில் மூழ்கடித்துள்ளது.

          எரிபொருள் கப்பல் வருகை அரசியல் நடத்தும் ரணில்

          ரணில் வீடு முன்பாக பொலிஸ் மக்கள் மோதல் 26 பேர் காயம்

          இதெல்லாம் அரசியலில் சகயமப்பா என்பதை ரணிலின் இந்த காமடி பேச்சில் தெரியப்படுத்த பட்டுள்ளது.

          இலங்கை புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ள நிலையில் மக்களை குஷி படுத்த ரணில் இவ்விதம் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .

            Posted in இலங்கை செய்திகள்

            ரணிலுக்கு ஒட்டு போட்டவர்களும் ரணிலும் வீட்டுக்கு செல்வார் மக்கள்அறிவிப்பு

            ரணிலுக்கு ஒட்டு போட்டவர்களும் ரணிலும் வீட்டுக்கு செல்வார் மக்கள்அறிவிப்பு

            இலங்கை ,கொழும்பு ; இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்ட ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவருக்கு வாக்களித்த 134 பேரையும் வீட்டுக்கு அனுப்புவோம் என போராட்ட காரர்கள் தெரிவித்துள்ளனர் .

            மக்கள் விரோதி மற்றும் ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்க மகிந்தாவினால் நியமிக்க பட்ட ரணில் விக்கிரமசிங்க முப்பது நாளுக்குள் வீட்டுக்கு செல்வார் என போராட்ட கார்கள் தெரிவித்துள்ளனர் .

            மேலும் ரணில் விக்கிரமசிங்காவிற்கு வாக்களித்த 134 பேரையும் மக்கள் கவனித்து கொள்வார்கள் என்கின்றனர்.

            எங்கள் ஆதரவு ரணிலுக்கு மைத்திரி குத்துக்கரணம்

            அவ்வாறு எனினம் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிக்கள் உள்ளிட்ட 134 எம்பிக்கள் வீடுகள் போராட்ட காரர்களினால் முற்றுகையிட பட போகிறது .

            மேலும் இலங்கையில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டு விட்டார்.

            நீங்கள் உங்கள் வேலைகளை பாருங்கள் என போராட்டக்கார்களை பார்த்து மகிந்த ராஜபக்ச கேவலமாக கூறிய வார்த்தை. போராட்ட கார்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது.

            ரணிலுக்கு ஒட்டு போட்டவர்களும் ரணிலும் வீட்டுக்கு செல்வார் மக்கள்அறிவிப்பு

            வரும் வாரம் அளவில் போராட்டம் மீளவும் உக்கிரம் பெறும் என எதிர் பார்க்க படுகிறது .

            மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பவர்களை குறிவைத்து கைது செய்யும் நகர்வில் ரணில் உத்தரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

            போராட்டக்காரர்கள் கூறுவது போன்று மீளவும் நாடு முடக்க பட்டால்
            இலங்கை வரலாற்றில் குறைந்த நாட்கள் ஜனாதிபதியாக அங்கம் வகித்த பெருமை ரணிலுக்கு சாரும் என்பதை அடித்து கூறலாம் .

              Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

              கோட்டபாயா பிடியில் ரணில் அரசியல் சதுரங்கம் ஆரம்பம்

              கோட்டபாயா பிடியில் ரணில் அரசியல் சதுரங்கம் ஆரம்பம்

              ,

              இலங்கையில் மக்களினால் துரத்த பட்ட ஒருவர் இலங்கையின் ஜனாதிபதியான வரலாறு இடம்பெற்றுள்ளது .


              ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக விளங்கிய ரணில் விக்கிரமசிங்க தனது பாராளுமன்ற உறுப்பு அங்கத்துவத்தை இழந்த நிலையில் இன்று இலங்கையின் ஜனாதிபதியானார் .

              யாரும் சற்றும் எதிர் பார்த்திராத அரசியல் சித்து விளையாட்டில் ரணில் வென்று முடி சூடினார் .


              பேரம் பேச்சுக்களின் அடிப்படையில் வாக்குகள் சிதறடிக்க பட்டு அரியணையில் அமர்ந்தார் .

              இந்த அரியணை ஏற்றத்திற்காக பல கோடிகள் பேரம் பேச்சில் மாற்ற பட்டுள்ளன .

              தனது ஜனாதிபதி ஆசையையும் வரலாற்றில் இலங்கை ஜனாதிபதி என்கின்ற கீரீடத்தையும் ரணில் தட்டி சென்றுள்ளார் . எனினும் இவரது ஆட்சி 18 மாதங்களில் கவிழ்க்க படும் நிலையே உள்ளது.

              அதன் பின்னர் பொது தேர்தலை சந்திக்க வேண்டும்.

              இதற்குள்ளாக கொந்தளித்த மக்களை குஷி படுத்த வேண்டும் மீளவும் இயல்பு நிலைக்கு நாட்டை அழைத்து செல்ல வேண்டும் .

              அவ்விதம் வென்றால் மட்டுமே தனது கட்சியை காப்பாற்றி கொள்வதுடன் மேலும் மக்கள் நன்மதிப்பை பெற்றுக்கொள்ள முடியும்.

              ஆனால் மக்கள் விதிக்கும் கோரிக்கை என்னவென்றால் ராஜபக்ச அரசின் லஞ்ச ஊழல் மோசடி விசாரிக்க பட வேண்டும் .

              மேலும் அவர்கள் கொள்ளையடித்த பணம் மீள நாட்டுக்கு கொண்டுவரப் படவேண்டும் ராஜபக்சாக்கள் சிறையில் அடைக்க படவேண்டும்

              இவ்வாறான பலத்த சவாலுக்கு மத்தியில் ரணில் போராட்டம் இடம்பெறுகிறது.

              தான் ஜனாதிபதியானேன் என்ற மமதையை ரணில் விக்கிரமசிங்காவில் காண முடியவில்லை .மேலும் எதிர்கால நெருக்கடியை எவ்வாறு கையாள போகிறார் என்பதே ரணில் உடல் அசைவில் அவதானிக்க முடிகிறது .

              தனக்கு எதிராக கொதித்துள்ள மக்களுக்கு ரணில் விக்கிரமசிங்க என்ன செய்ய போகிறார் …?


              கோட்டாவை போல ரணிலும் விரட்டியடிக்க படுவாரா..? அல்லது மக்கள் போராட்டத்தை நீர்த்து போக வைப்பாரா ..?

              மக்கள் கொதிப்பு இவ்விதம் எழுந்தால் ரணில்விக்கிரமசிங்கா கோட்டாவை போல விரட்டியடிக்க படுவார் என்பதே களநிலவரம் .

              மக்கள் கோரிக்கைக்கு கட்டு பட்டு பதவி விலகும் நிலையே ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்படும் என்பதை இப்பொழுதே இங்கே பதிந்து வைக்கிறோம் .

              மக்களை கட்டாய படுத்த பல இலவச அறிவிப்புகளை ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்வார் ,அதில் மயங்கி மக்கள் ரணிலை மக்கள் ஏற்று கொள்வார்களா என்பதே சந்தேகமாக உள்ளது .

              கடன் தள்ளுபடி என்பன இதனை காண்பிக்கிறது .ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான மறு மணித்தியாலம் சர்வதேச நாணய நிதியம் பேசிட அழைக்கிறது .

              அவ்வாறு எனின் ரணில் விக்கிரமசிங்காவின் நிகழ்ச்சி நிரலின் கீழ் யாவும் நடக்கிறது என்பதை இதன் மூலம் கணிக்க முடிகிறது .

                Posted in இலங்கை செய்திகள்

                ரணில் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் தள்ளாடும் புதிய அரசு

                ரணில் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் தள்ளாடும் புதிய அரசு

                இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பாரளுமன்றினால் நியமிக்க பட்டுள்ள ரணில் விக்கிரசிங்கா ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்க தயாராகிறது .

                நரி ரணில் குட்டையை குழப்பி மீனை பிடித்து ஆட்சியில் ஏறி அமர்ந்தார் .அதே குட்டையை மீள குழப்பிட மக்கள் போராட்டம் தயாராகி வருகிறது.

                இரும்பு கரம் கொண்டு பிரதமர் மற்றும் ஜனாதிபதி மாளிகைகள் என்பன பாதுகாப்பு இறுக்கம் மேற்கொள்ள பட்டுள்ளது .

                ரணில் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் தள்ளாடும் புதிய அரசு

                கோட்டாவை துரத்தி ஜனாதிபதியாகும் ரணில் ஆட்டத்தை ஆரம்பித்தார்

                இருந்த பொழுதும் இந்த இராணுவ தடைகளை உடைத்து மக்கள் போராட்டம் வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது.

                ரணில் ஜனாதிபதி என்ற அறிவிப்பு போராட்ட காரர்கள் மத்தியில் கொதிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ளது .

                பொம்மை ரணில் ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றுவதில் தனது நாட்களை கழிப்பார் என்கின்ற நிலையில் மக்கள் போராட்டம் மீள வெடிக்க தயாராகி வருகிறது.

                இவ்வாறு ரணில் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தால் இலங்கையில் குறுகிய நாட்கள் ஜனாதிபதியாக அங்கம் வகித்தவர் என்ற பெருமையை ரணில் தட்டி செல்வர் என்பதாகும்.

                இவ்வாறு எனினும் 18 மதங்களில் ரணில் ஆட்சி கவிழ்க்க படும் நிலையே உள்ளது.