Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

மகளை கர்ப்பமாக்கிய தந்தை – சிசுவை கொன்று வீசிய கொடூரம்

மகளை கர்ப்பமாக்கிய தந்தை – சிசுவை கொன்று வீசிய கொடூரம்


பிறந்து மூன்று நாள்களேயான சிசுவின் சடலம், கிட்டங்கி ஆற்றங்கரைக்குள் வீசப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை (05) பொலிஸாரால் மீட்கப்பட்டது.

சம்மாந்துறைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அம்பாறை மாவட்டத்தின் சொறிக் கல்முனை – சம்மாந்துறை பிரதான வீதியின் கிட்டங்கி ஆற்றில் இச்சிசுவின் சடலம் மீட்கப்பட்டது.

இது தொடர்பாக, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்னல் கிராமம் – 01 கிராம சேவையாளர் பிரிவில் வசித்துவரும் பக்கீர் தம்பி அஸ்பர் (வயது-41) என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

தனது 19 வயதுடைய மகளுடன் தகாத உறவில் ஈடுபட்டு பிறந்த சிசுவையே இவ்வாறு ஆற்றுக்குள் வீசியதாக கைதாகிய சந்தேகநபர், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபருடன் குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் மற்றும் அம்பாறை மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர், இராணுவத்தினர் ஒன்றிணைந்து வீசப்பட்ட சிசுவின் சடலத்தை மீட்டெடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான், உயிரிழந்து சிசுவை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

இதனையடுத்து, அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு சிசுவின் சடலம் எடுத்துச்செல்லப்பட்டது.

நாளாந்த கூலி தொழிலாளியான சந்தேக நபர், இரண்டு திருமணம் செய்தவர் என்பதுடன், தற்போது மனைவிமார்களுடன் இல்லாத நிலையில், முதல் திருமணத்தில் பிறந்த 19 வயதுடைய தனது மகள் மற்றும் இரண்டாவது திருமணத்தில் பிறந்த 2 பிள்ளைகளுடனும் வாழ்ந்து வந்த நிலையில், இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை, சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

    Posted in Uncategorized

    காவல்துறை திடீர் சோதனை – 1,019 பேர் கைது

    காவல்துறை திடீர் சோதனை – 1,019 பேர் கைது

    இலங்கை மேல்மனத்தில் காவல்துறை அணியினர் நடத்திய திடீர் சோதனைநடவடிக்கையின்

    பொழுது


    சுமார் 1,019 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

    இவர்கள் நீதிம்னற பிடியாணை பிறப்பிக்க பட்டு தலைமறைவாக இருந்த நூற்றுக்கு

    மேற்பட்டவர்கள் கைதாகியுள்ளமை குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      யாழில் வாள்வெட்டு – ரவுடிகள் அட்டகாசம்

      யாழில் வாள்வெட்டு – ரவுடிகள் அட்டகாசம்

      யாழ்ப்ப்பாணம் கொக்குவில் – கேணியடிப் பகுதியில் ஊந்துருளியில் வருகை தந்த மூவர்
      திடீரென வாலிபர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதலை நடத்தினர்

      இதில் பலத்த காயமடைந்த வாலிபர் யாழ்ப்பாண மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

      மகிந்த ஆட்சியில் உருவாக்க பட்ட வாள்வெட்டு குழுவினர் பெரும் அடாவடியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

        Posted in இலங்கை செய்திகள்

        காலநிலை சீர் கேட்டில் சிக்கி ஐவர் மரணம்

        காலநிலை சீர் கேட்டில் சிக்கி ஐவர் மரணம்

        இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை சீர்கேட்டில் சிக்கி இதுவரை ஐவர் பலியாகியுள்ளனர் ,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்

        வெள்ள பெருக்கில் சிக்கிய மக்கள் தற்காலிக தங்கும் இடங்களில் தங்க வைக்க பட்டுள்ளனர்

          Posted in இலங்கை செய்திகள்

          வீடு பெற்றுத்தருவகக மோசடி புரிந்த நபர் கைது

          வீடு பெற்றுத்தருவகக மோசடி புரிந்த நபர் கைது

          இலங்கையில் அரச வீடுகளை பெற்று தருவதாக கூறி மக்களிடம் பணமோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் காவல்துறையினரால கைது செய்ய பட்டுள்ளார்

          பாதிக்க பட்டடவர்கள் மக்களுக்கு வழங்கிய தகவலை அடுத்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது
          குறிப்பிட தக்கது

            Posted in Uncategorized

            மனைவி தாய் ,தந்தையை கோடரியால் வெட்டிய மருமகன்

            மனைவி தாய் ,தந்தையை கோடரியால் வெட்டிய மருமகன்

            இலங்கை வாழைச்சேனை காவல்துறை பகுதியில் குடும்ப தகராறு காரணாமாக மனைவியை

            விட்டு பிரிந்த கணவன் ,பெண்ணின் தாயார் வீடு புகுந்து அவரது தந்து ,மற்றும் தாயை

            கோடரியால் சரமாரியாக வெட்டியுள்ளார்

            இதில் பலத்த காயமடைந்த நிலையில் இருவரும் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய வண்னம் உள்ளனர்

            மேற்படி செயல் அந்த கிராம பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

              Posted in இலங்கை செய்திகள்

              தமிழக மீனவர்கள் 23 பேர் யாழ் சிறையில் அடைப்பு

              தமிழக மீனவர்கள் 23 பேர் யாழ் சிறையில் அடைப்பு

              இலங்கை கடல் பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்ற சாட்டில் சிங்கள கடல்

              படையால் கைது செய்ய பட்ட தமிழக மீனவர்கள் 23 பேர் யாழ்ப்பாண சிறையில் அடைக்க

              பட்டுள்ளனர்

              நீதி விசாரணைகள் முடிவில் இவர்கள் விடுதலை செய்ய படுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது

                Posted in Uncategorized

                பணமோசடி காவல்துறை அதிகாரி கைது

                பணமோசடி காவல்துறை அதிகாரி கைது

                இலங்கை வந்துரம்ப பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி ஒருவர் பத்து லட்சம் ரூபா பணம்

                லஞ்சமாக பெற்றார் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்


                சாமீப காலங்களாக இவ்வாறான குற்ற சாட்டுக்கலில் சிக்கி சில காவல்துறை அதிகாரிகள் கைது

                செய்ய பட்டு இருந்தமை குறிப்பிட தக்கது

                  Posted in Uncategorized

                  மக்களை தாக்கிய காவல்துறை அதிகாரி இடமாற்றம்

                  மக்களை தாக்கிய காவல்துறை அதிகாரி இடமாற்றம்

                  சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் நபர் ஒருவரை தாக்கும்

                  காணொளியுடன் தொடர்புடைய சப்ரகமுவ சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

                  அவர் வைத்திய சேவைகள் மற்றும் நலன்புரி சிரேஷ்ட் பிரதி பொலிஸ்மா அதிபராக

                  இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

                  பொலிஸ் அதிகாரியின் தவறான நடத்தை தொடர்பில் விசாரணை ஒன்று

                  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இன்று முற்பகல் பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டிருந்தது.

                    Posted in Uncategorized

                    சூடானில் இராணுவம் ஆட்சி கவிழ்ப்பு – பிரதமர் சிறை பிடிப்பு – 140 பேர் காயம்


                    சூடானில் இராணுவம் ஆட்சி கவிழ்ப்பு – பிரதமர் சிறை பிடிப்பு – 140 பேர் காயம்

                    சூடானில் ஆளும் கூட்டணி ஆட்சிக்கு எதிராக இராணுவத்தினர் ஆட்சி கபிவிழ்ப்பை மேற்கொண்டு வருகின்றனர்

                    இதில் ஆளும் பிரதமர் இராணுவத்தினரால் கைது செய்ய பட்டு வீட்டு காவலில் வைக்க பட்டுள்ளார்

                    மேலும் இந்த ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராக மக்கள் வீதி இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்

                    இவ்வாறான மக்கள் மீது நடத்த பட்ட சூட்டு தாக்குதலில் 7பேர் பலியாகியும் 140 பேர் படுகாயமடைந்துள்ளனர்

                      Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                      மனைவியை கத்தியால் குத்திய கணவன்

                      மனைவியை கத்தியால் குத்திய கணவன்

                      குடும்ப தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்திய கணவர் தலைமறைவாக உள்ள நிலையில் , அவரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

                      வலி.வடக்கு தையிட்டி பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் நேற்றைய தினம் மாலை கணவன், மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

                      இதன்போது , 22 வயதான தனது மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்திய கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாகியுள்ளார்.

                      கத்திக்குத்து காயத்திற்கு உள்ளான மனைவியின் அவல குரல் கேட்டு , அயலவர்கள் அவரை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

                      சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதுடன் ,

                      தலைமறைவாகி உள்ள கணவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        போலீசார் வேட்டை – 36 பேர் திடீர் கைது

                        போலீசார் வேட்டை – 36 பேர் திடீர் கைது

                        தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று (26) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 29 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

                        குறித்த குற்றச்சாட்டில் 2020 ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 81,353 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

                        இதேவேளை மேல் மாகாணத்தின் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 13 நுழையும் மற்றும்

                        வெளியேறும் சோதனைச் சாவடிகளில் பயணித்த 2,244 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

                        அத்துடன், மாகாண எல்லைகளை கடக்க முயன்ற 272 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

                          Posted in Uncategorized

                          பெரும் போதைவஸ்து கடத்தல் மன்னன் கைது

                          பெரும் போதைவஸ்து கடத்தல் மன்னன் கைது

                          கொலம்பியாவில் தேடப்பட்டு வந்த முதல்தார போதைவஸ்து கடத்தல் மன்னன் போலீசாரின் திடீர் சுற்றிவளைப்பில் கைது செய்ய பட்டுள்ளார்
                          59 வயதுடைய இவர் அமெரிக்கா உளவு த் துறையாலும் தேட பட்டு வந்தவர்

                          பல மில்லியன் சொத்துக்களுக்கு இவர் அதிபதியாக உள்ளவர

                          அவ்வாறான அரசியல் ,ஆள்,பண பலம் படைத்த நபரே போலீசாரினால் கைது செய்ய பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                            Posted in Uncategorized

                            இலங்கை காவல்துறை விசேட சோதனை – 948 பேர் கைது


                            காவல்துறை விசேட சோதனை – 948 பேர் கைது

                            மேல் மாகாணத்தில் பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையில் 948 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                            நேற்று (23) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                            இவர்களில் 531 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                              Posted in Uncategorized

                              மதுபானம் அருந்தும் இடங்களிலேயே, அதிகம் கொரோனா தொற்று

                              மதுபானம் அருந்தும் இடங்களிலேயே, அதிகம் கொரோனா தொற்று

                              மதுபானம் அருந்தும் இடங்களிலேயே, அதிகம் கொரோனா தொற்று பரவுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

                              எனவே, இவ்வாறான இடங்களில் ஒன்றுக் கூடுவதை, கூடியளவு தவிர்த்துக்கொள்ளுவது அவசியம் என்றார்.

                              மேலும் புதிய தொற்று நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கு, சுகாதார அமைச்சு பாரிய அவதானத்துடன் செயற்படுவதாகத் தெரிவித்த அவர், தடுப்பூசிக்கு அப்பாற்பட்ட தொற்று பிரழ்வு , நாட்டுக்குள் நுழைய வாய்ப்புள்ளதென்றார்.

                                Posted in Uncategorized

                                காரில் சென்று திருடி வந்த திருடன் கைது

                                காரில் சென்று திருடி வந்த திருடன் கைது

                                இரவு வேளைகளில் காரில் சென்று, வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபர் ஒருவர், காருடன் மொரட்டுவ பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

                                மொரட்டுவ- கொரலவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

                                இதற்கமைய, குறித்த சந்தேகநபரால் மொரட்டுவ பிரதேசத்தில் 5 வீடுகளும் கல்கிஸ்ஸ பிரதேசத்தில் ஒரு வீடும் உடைக்கப்பட்டு தங்க நகைகள், வெளிநாட்டு நாணயங்கள், மதுபானம் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                                இவ்வாறு திருடும் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  யாழில் -பிசுங்காண் போத்தல்களுடன் வீடு புகுந்து அட்டூழியம்

                                  யாழில் -பிசுங்காண் போத்தல்களுடன் வீடு புகுந்து அட்டூழியம்

                                  கோப்பாய் பூதர்மடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் வாள்கள், கூரிய ஆயுதங்கள் மற்றும் பிசுங்காண் போத்தல்களுடன் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                                  அத்துடன், வன்முறையில் ஈடுபட்டோர் வாடகைக்கு அமர்த்திச் சென்ற முச்சக்கரவண்டியின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

                                  இந்த வன்முறைச் சம்பவம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றது.

                                  முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 11 பேர் கொண்ட கும்பல் வீடொன்றுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டது.

                                  இந்த சம்பவத்தில் கதிர்காமநாதன் குணரட்ணசிங்கம் (வயது-58) என்பவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                                  வீட்டு ஜன்னல்கள், மோட்டார் சைக்கிள், மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹைஏஸ் வாகனத்தின் கண்ணாடி என்பன அடித்துடைத்து சேதம் விளைவிக்கப்பட்டன.

                                  பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கும் அவர்களது அயலில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஒன்று ஏற்பட்டிருந்தது. இதற்கு பழிவாங்குவேன் என சபதம் போட்ட அந்த இளைஞன் சிலரை அழைத்து இந்த அடாவடியில் ஈடுபட வைத்தார் என்று கோப்பாய் பொலிஸ் நிலையில் முறைப்பாடு வழங்கப்பட்டது.

                                  சம்பவத்துடன் தொடர்புடைய நீர்வேலியைச் சேர்ந்த இருவர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் இன்று கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் இருவரும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டனர்.

                                  அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் வாடகைக்கு அமர்த்திச் சென்ற முச்சக்கர வண்டி பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது. அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

                                  சம்பவம் தொடர்பில் ஏனைய 9 பேர் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

                                    Posted in Uncategorized

                                    குண்டை காட்டி மனைவியை மிரட்டிய கணவன்

                                    குண்டை காட்டி மனைவியை மிரட்டிய கணவன்

                                    கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூவரசன் தீவு பகுதியில் கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த நபரை, இம்மாதம் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.பி.அன்பர், நேற்று (20) உத்தரவிட்டார்.

                                    கிண்ணியா,பூவரசந்தீவு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

                                    இலங்கை இராணுவத்தின் பொறியியல் பிரிவில் சேவையாற்றிய இவர், முறையான அங்கிகாரத்துடன் இராணுவ சேவையில் இருந்து விலகிவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                                    கணவனுக்கும் மனைவிக்குமிடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ள நிலையில், கணவரான முன்னாள் இராணுவ வீரர், தனது மனைவியை கைக்குண்டை காட்டி பயமுறுத்துவதற்காக பயன்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                                    சந்தேகநபர் தொடர்பாக கிண்ணியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேகநபரை கைக்குண்டுடன் கைது செய்து, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

                                      Posted in Uncategorized இலங்கை செய்திகள்

                                      வீட்டில் நித்திரையில் இருந்த பெண்ணுக்கு நடந்த பயங்கரம்

                                      வீட்டில் நித்திரையில் இருந்த பெண்ணுக்கு நடந்த பயங்கரம்

                                      தூங்கிக் கொண்டிருந்த யுவதி ஒருவரின் தங்கச் சங்கிலியை திருடன் ஒருவன் அறுத்துச் சென்றுள்ள சம்பவமொன்று, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – பதுரியா நகரிலுள்ள வீடொன்றிலே நேற்றிரவு (20) இடம்பெற்றுள்ளது.

                                      வீட்டார் தூங்கிக் கொண்டிருக்கும் போது, கதவை உடைத்து உள்நுழைந்த திருடன், அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 10,000 ரூபாய்க்கும் மேற்பட்ட பணத்தையும் நகையையும் திருடிவிட்டு, தூங்கிக்

                                      கொண்டிருந்த யுவதியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியையும் அறுத்துச் சென்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

                                      இவ்வாறு திருட்டில் ஈடுபட்ட திருடன், அலுமாரியில் இருந்த விலையுயர்ந்த கையடக்கத் தொலைபேசியை திருடாமல் சென்றுள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

                                      இத் திருட்டுச் சம்பவத்தை கண்டுபிடிக்க வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்..

                                        Posted in Uncategorized

                                        லண்டனில் லொறியில் இருந்து குதித்து ஓடும் அகதிகள்

                                        லண்டனில் லொறியில் இருந்து குதித்து ஓடும் அகதிகள்

                                        லண்டன் கென்ட் பகுதியில் உள்ள வேக சாலை ஒன்றில் பயணித்த லொறி ஒன்றுக்குள் பதுங்கி

                                        வந்த சட்ட விரோத குடியேற்ற வாசிகள் அதில் இருந்து குதித்து தப்பி ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளன

                                        மேற்படி சம்பவம் தொடர்ப்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்