Tag: இலங்கை
ஐநாவில் இலங்கைக்கு பொறி – கயேந்திரகுமார் முழக்கம்
ஐநாவில் இலங்கைக்கு பொறி – கயேந்திரகுமார் முழக்கம்
ஐநாவில் இலங்கைக்கு பொறி – கயேந்திரகுமார் முழக்கம்
ஐக்கிய நடக்குகள் மனித உரிமை அவையில் இம்முறை இலங்கை சிக்கி தவிக்கும் நிலை ஏற்படும் என கயேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்
இலங்கையில் தொடர்ந்து மீறப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களும் ,ஆளும் அரசின் கண் மூடித்தனமான செயல் பாடுகளுமே இந்த நிலைக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது
தமிழர்கள் ஒன்றிணைந்து செயல்பட முன்வர வேண்டும் பீரிஸ் கூக்குரல்
தமிழர்கள் ஒன்றிணைந்து செயல்பட முன்வர வேண்டும் பீரிஸ் கூக்குரல்
இலங்கையில் தமிழ் தேசிய விடுதலைக்கு போராடிய புலிகள் அமைப்புடன் பேச்சு மேசையில் கலந்து கொண்டவர்களில் பீரிஸ் முதன்மையானவர் ,அவ்வாரண ஒரு தேர்ச்சி பெற்ற ஒருவர் புலிகள் அழிக்க
பட்டதன் பின்னரும் தற்போது தமிழர்கள் ஒன்றிணைந்து தீர்வு காண வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்
தென்கொரியாவுக்கு வேலைக்கு படையெடுக்கும் இலங்கையர்கள்
தென்கொரியாவுக்கு வேலைக்கு படையெடுக்கும் இலங்கையர்கள்
தென்கொரியாவுக்கு வேலைக்கு படையெடுக்கும் இலங்கையர்கள்
தென் கொரியாவுக்கு இலங்கையில் இருந்து வேலைவாய்ப்பு தேடி அதிக
இலங்கையர்கள் ஒரு மாதத்தில் பயணித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மையம் தெரிவித்துள்ளது
இதன் பிரகாரம் சுமார் 169 க்கு மேற்பட்டவர்கள் கடந்த ஒரு மாதத்தில் மட்டும்
வேலைவாய்ப்பு தேடி பயணித்துள்ளதாக புதிய புள்ளி விபரம் வெளியிட பட்டுள்ளது
யாழில் உருவான சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை மையம் …..
சத்தியத்திற்கு வந்த சவால் photo
சத்தியத்திற்கு வந்த சவால் photo
யாழில் உருவான சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை மையம் …..
சத்தியத்திற்கு வந்த சவால் photo
யாழ் ஆஸ்பத்திரி பணிப்பாளர் நாட்டை விட்டு வெளியேறிய காலங்களில் அரசமருத்துவ சங்கம் என்னும் மருத்துவர்கள் அமைப்பு பல அதிரடியான திறன் மிகு
திட்டங்களை மாஸ்டர் பிளானுடன் நகர்த்திவந்தது குறித்த காலத்தில் கடமையாற்றி பதில் பணிப்பாளரின் நேர்மை யும் மக்களிற்காக அற்பணிப்புடன் பணியாற்றும்
மருத்துவர்களின் சிந்தனையும் ஒருமித்த செயல் வடிவமே இதுவாகும் குறித்த காலப் பகுதியில் நிகழ்ந்த அபிவிருத்திகள் யாவுமே முன்னுதாரணமானவை என்றே கூறவேண்டும்
இங்கு கட்டிடங்களை இடிப்பதும் விற்பதும் பின் புதிய கட்டிடம் கட்டுவதும் என்று ஒரு கட்டமைக்கப்பட்ட நிதித்திருட்டை ஒரு வழிப்பண்ணுமுகமாகவும்
மக்களின் தேவைக்கான அபிவிருத்தி என்னும் புதிய தொணிப்பொருளுடன் சத்தியத்திற்கு வந்த சவால் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்க விடயமேயாகும்
நிருபர் – யாழவன் –



கால்களை வெட்டி நபரை கொலை செய்த கொடூரம்
கால்களை வெட்டி நபரை கொலை செய்த கொடூரம்
மரம் வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் இயந்திரத்தைப் பயன்படுத்தி, நபர்
ஒருவரின் கால்களைத் துண்டாக்கி, அவரைக் கொலை செய்த சம்பவமானது கட்டுகஸ்தோட்டைப் பகுதியில் பதிவாகியுள்ளது.
நேற்று (30) இருவருக்கிடையில் வேலி எல்லைப் பிரச்சினை தொடர்பில் ஏற்பட்ட
வாய்த்தர்க்கம் முற்றியதால், ஒருவர் மற்றையவரின் கால்களை மரம் வெட்டும் இயந்திரத்தைக் கொண்டு துண்டுகளாக்கியுள்ளார்.
இதனையடுத்து கால்கள் துண்டாக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 28 வயதான திருமணமாகாதவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சந்தேகநபரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவ்வாறு கைது
செய்யப்பட்டவர் உயிரிழந்தவரின் சித்தப்பா என்பதுடன், இவர் தொழில் ரீதியாக மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருபவர் என்றும் தெரியவந்துள்ளது.
கொழும்பு கால்வாயில் ஆணின் சடலம் – மிரட்டும் கொலைகள்
கொழும்பு கால்வாயில் ஆணின் சடலம் – மிரட்டும் கொலைகள்
இலங்கை கொழும்பு பொரளை, லேக் ட்ரைவ் வீதியிலுள்ள கால்வாய் ஒன்றில் இருந்து
ஆண் ஒருவரது சடலம் மீட்க பட்டுள்ளது
இவர் கொலை செய்ய பட்டு கணவாயில் வீச பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,
இவ்வாறான சடலங்கள் சமீப காலங்காக மீட்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
ஆறு மாணவர்கள் கொரானாவுக்கு மரணம்
ஆறு மாணவர்கள் கொரானாவுக்கு மரணம்
இலங்கையில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு சிக்கி
Dhammissara National school லாய் சேர்ந்த ஆறு மாணவர்கள்
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டிருந்த பொழுதும் சிகிச்சை பலனின்றி
இறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது
ஐக்கிய நாடுகள் சபைக்கு மகயர் அனுப்பும் கூத்தமைப்பு
ஐக்கிய நாடுகள் சபைக்கு மகயர் அனுப்பும் கூத்தமைப்பு
தற்போதைய நிலைமைகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு தெளிவுபடுத்தும் முகமாக அறிக்கையொன்று
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தயார் செய்யப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் மத்தயிகுழுக் கூட்டம் வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இடம்பெற்ற நிலையில் அதன் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த சுமந்திரன்,
“வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படும் பிரச்சினை தற்போது பூதாகாரமாக மாறியிருந்கின்றது. இது தொடர்பாக சில பொது அமைப்புகள் ஏனைய கட்சிகளுடன் இணைந்து பொது வேலைத்திட்டத்தை உடனடியாக
அமுல்ப்படுத்தவேண்டும் என கலந்துரையாடடியுள்ளோம். இந்நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து எமது நிலங்கள் அபகரிக்கப்படுவதை தடுப்பது எமது பிரதான கடமையாக கருதுகின்றோம்.
எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் எழுத்துமூலான அறிக்கையை உயர்ஸ்தானிகர் அலுவலகம் வெளியிடும். மார்ச் 3ஆம் திகதி இலங்கை தொடர்பாக ஒரு ஆய்வு இடம்பெறும். அதற்கு உதவியாக இன்றைய
சூழலை அவர்கள் அறியும் முகமாக தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடனும் ஏனைய பங்காளி கட்சிகளுடனும் இணைந்து ஆவணமொன்றை தயார் செய்கின்றோம். ஏற்கனவே தயார் செய்யப்பட்ட ஆவணமும்
இரா. சம்பந்தனிடம் உள்ளது. அது நாளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு பகிரப்படும். மிக விரைவில் அதற்கு இணக்கம் காணப்பட்டு தமிழ்த்
தேசியக்கூட்டமைப்பின் கடிதமாக இரா. சம்பந்தனின் ஒப்பத்தோடு அனுப்பி வைக்கப்படும்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் நீதி அமைச்சரையும், வெளிவிவகார அமைச்சரையும் சந்திக்க கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. இதன்போது சிங்கள பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தியான மாகாண சபை முறைமை புதிய அரசியல் அமைப்பில்
இல்லை என்கின்ற விடயம் தொடர்பாக கேட்டேன். அவர்கள் அதனை அடியோடு மறுக்கின்றார்கள். அவ்வாறான பிரேரணை வரவில்லை எனவும் தெரிவித்தனர்.
அத்துடன் அந்த செய்தி தவறானது என அமைச்சர்கள் எனக்கு கூறினார்கள். இதில் பத்திரிகை சொல்வது உண்மையா அமைச்சர்கள் சொல்வது உண்மையாக என்பது எனக்கு தெரியாது.
அத்துடன் வெள்ளிக்கிழமை காலையில் பயங்கரவாத தடைச்சட்டம் மறுசீரமைக்கப்படுகின்றது என ஒரு திருத்தம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அது கண்துடைப்பு நாடகம் என்று கூட சொல்ல முடியாது. ஏனெனில் அதில் எதுவுமே
இல்லை. அதில் உள்ள ஒவ்வொரு விடயத்தையும் எடுத்துப் பார்த்தால் அதில் ஒரு மாற்றமும் கிடையாது. ஆகவே வெளிவிவகார அமைச்சர் பீரிஸிடம் ‘ரிபோம்’ (Reform) என்ற ஆங்கில வார்த்தைக்கு அகராதியில் புதிய விளக்கம்
கொடுக்கப்படவேண்டியுள்ளது என தெரிவித்திருந்தேன். அவர் சிரித்து விட்டு எங்கோ ஒரு இடத்தில் ஆரம்பிக்க வேண்டும் என என்னிடம் தெரிவித்தார். எனினும் இது தொடர்பில் ஏற்கனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர்ஸ்தானிகராலயத்துக்கு
நான் அறிவித்துள்ளேன் என்பதை அவருக்கு தெரிவித்தேன். இது தொடர்பாக உயர்ஸ்தானிகரின் அறிக்கையிலும் வரும் என நான் எதிர்பார்க்கின்றேன். இலங்கை
அரசாங்கம் இவ்வாறான மோசமான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது என்பதனையும் அவருக்கு தெரிவித்தபோது அவர் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை” எனத் தெரிவித்தார்,
லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு பெண் சிப்பாய்கள்
லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு பெண் சிப்பாய்கள்
லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு செல்லும் 13 வது பாதுகாப்பு குழுவின் விடுகை அணிவகுப்பு, ஞாயிற்றுக்கிழமை (30) திகதி பனாகொடை இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை இராணுவ மகளிர் படையணி பெண் சிப்பாய்களும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய இராணுவ மரியாதை வழங்கினர்.
6லெபனானுக்குச் செல்லும் இலங்கையின் பாதுகாப்புப் படை 10 அதிகாரிகள் மற்றும் 115 சிப்பாய்களைக் கொண்டுள்ளது. இதில் இலங்கை காலாட் படையணி ,இலங்கை பொறியியலாளர் படையணி, இலங்கை சமிக்ஞைப் படையணி, இயந்திரவியல் காலாட்
படையணி ,கமாண்டோ படையணி, விஷேட படையணி ,பொறியாளர் சேவை படையணி, இலங்கை இராணுவ சேவை படையணி, இலங்கை இராணுவ மருத்துவப்
படையணி, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி, இலங்கை இராணுவ போர் கருவிகள் படையணி, இலங்கை இராணுவ பொலிஸ் படையணி,
இலங்கை இராணுவ மகளிர் படையணி மற்றும் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி என்பவற்றின் படையினர் அடங்குவர்.
ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள், ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கான இராணுவ பணிப்பகம் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் விளைவாக லெபனானின் பாதுகாப்புப் பணிகளை
மேற்கொள்வதற்காக, இரண்டு பெண் அதிகாரிகள் மற்றும் இலங்கை மகளிர் படையணியின் ஏழு பெண் சிப்பாய்களை உள்ளடக்கிய லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கான முதல் பெண் படைக் குழு இதுவாகும்.
நுழைவாயிலில் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிப்பாய்களால் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை, அன்றைய பிரதம அதிதிக்கு வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.
சில நிமிடங்களுக்குப் பின்னர், இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் தளபதியும் பிரதி பதவி நிலைப் பிரதானியுமான மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவாக்கு, அன்றைய பிரதம அதிதியை வரவேற்றதுடன் அணிவகுப்பு மைதானத்திற்கு அழைத்துச்
சென்றதுடன்இ அணிவகுப்பின் தளபதியின் வேண்டுகோளுக்கமைவாக, அன்றைய பிரதம அதிதியிடம் அணிவகுப்பு மீளாய்வு செய்யுமாறு அழைக்கப்பட்டனர்.
ஐக்கிய நாடுகளின் பணிக்கு அடையாளத்தின் முக்கியத்துவத்தைச் சேர்க்கும் வகையில், அன்றைய பிரதம அதிதியினால் தேசியக் கொடிஇ இராணுவக் கொடி,
ஐக்கிய நாடுகளின் கொடி மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கொடி ஆகியவற்றை சம்பிரதாயங்களின் ஒரு பகுதியாக கையளித்தனர், இவை
அவர்களின் பணிகளுக்கான முன்னேற்றத்தினை குறிக்கிறது. மேலும் முழுமையான பாதுகாப்புப் பொறுப்புகளை ஏற்கவும் இவர்கள் தயாராக உள்ளனர் என்பதையும் எடுத்துக்காட்டுகின்ற வகையிலும் அமைந்தது.
இராணுவத்தின் அணிவகுப்பு முடிந்தவுடன் இராணுவத் தளபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், நாட்டிற்கு பெருமையையும் கௌரவத்தையும் பெற்றுத்தருமாறும்
அவர்களின் வெளிநாட்டு பணிகளுக்கான மதிப்பையும் எடுத்துரைத்தார. லெபனானில் நமது படைகள் ஐக்கிய நாடுகளின் அதிகாரிகளிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றதால்,
பணியாற்றும் போது மிக உயர்ந்த ஒழுக்கத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும், லெபனானில் அவர்களின் பணிகளுக்கான அர்ப்பணிப்பையும் அவர்களுக்கு நினைவூட்டினார்.
“1881 இல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இலேசாயுத காலாட் படையணியானது, 1900 ல் ஆபிரிக்காவின் போயர் போருக்கு இலேசாயுத காலாட் படையணியின் சிப்பாய்களை அனுப்பிய பின்னர் அதன் அனுபவங்களுக்காக புகழ்பெற்றது மற்றும் 2004 இல் ஐக்கிய
நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்காக ஹைட்டிக்கு செல்லும் முதல் குழுவை அனுப்பியது இலங்கை இலேசாயுத காலாட் படையணியாகும். ஐக்கிய நாடுகளுக்கான இலங்கைத் தூதுவராகவும், இலங்கையின் துணை நிரந்தரப்
பிரதிநிதியாகவும் நான் கடமையாற்றிய காலத்தில், 2010ஆம் ஆண்டு முதல் குழுவை லெபனானுக்கு அனுப்ப முடிந்தமையையிட்டு ஐக்கிய நாடுகளின் தூதுவராகவும் நிரந்தரப் பிரதிநிதியாகவும் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் நியூயோர்க்கில் ஐக்கிய
நாடுகளில் பணியாற்றிய போது இதுபோன்ற பல வெளிநாட்டு வாய்ப்புகளைப் பெற முடிந்தது. லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை குழுவில் முதன்முறையாக பெண் சிப்பாய்கள் இணைந்ததைக் கண்டு நான் சமமான
மகிழ்ச்சியடைகிறேன். இதற்காக முயற்சி செய்த அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன் தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளைப் பொருட்படுத்தாமல், நீங்கள் அனைவரும் மிக உயர்ந்த ஒழுக்கம், கடமைகளில் அர்ப்பணிப்பு ஆகியவற்றைப்
பேணுவீர்கள் என்று நம் நாடும் நானும் எதிர்பார்க்கிறோம். என்று பிரதம அதிதியான இராணுவத் தளபதி படையினரிடம் கூறினார்.
ஏற்கனவே ஐக்கிய நாடுகளில் இடைக்காலப் பணியில் சேவை செய்து வரும் 12 வது இலங்கைக் குழு, ஐக்கிய நாடுகளின் விதிகளுக்கு இணங்க லெபனானில் தங்கள் சேவைக் காலம் முடிந்தவுடன் விரைவில் நாடு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது
. அன்றைய பிரதம அதிதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடனான குழு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதை அடுத்து இலங்கை இலேசாயுத காலாட் படையணியின்
தலைமையகத்தின் பிரதம அதிதியினால் பார்வையாளர் பதிவேட்டுப் புத்தகத்தில் தனது கையொப்பமிட்டதுடன், அன்றைய நிகழ்ச்சி நிரல் முடிவுக்கு வந்தது.
நிகழ்வில் இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, , பிரதி இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு, முதன்மை
பணிநிலை அதிகாரிகள், பணிப்பாளர்கள் பிரதான, இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அழைப்பாளர்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
2010 ஆம் ஆண்டிலிருந்து, ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கை இராணுவம் லெபனானில்
சேவையாற்றுவதற்காக இது போன்ற 11 குழுக்களை இன்றுவரை அனுப்பியுள்ளது. இந்த பணி 1978 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது மற்றும் 2010 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் முதலாவது பெரிய குழு அங்கு அனுப்பப்பட்டது.
யாழில் சிறுநீரக அறுவை சிகிச்சை மையம் உதயம் – குஷியில் மக்கள் video
யாழில் சிறுநீரக அறுவை சிகிச்சை மையம் உதயம் – குஷியில் மக்கள்
யாழ்ப்பாண மருத்துவமனையில் இதுவரை சிறுநீராக மாற்று சிகிச்சை மையம் இல்லாமை இருந்தது ,இதனை அடுத்துசிறுநீரக சிகிச்சை நிபுணர்கள் மற்றும்
குத்திக்கலன் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்களின் முயற்சியால் தற்போது புதிய சிறுநீரக மாற்று சிகிச்சை மையம் ஒன்று புதிதாக ஆரம்பிக்க படுகிறது
இந்த சிகிச்சையை மேற்கொள்ள மக்கள் கண்டி ,மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு செல்லும் நிலையே இதுவரை இருந்து வந்தது
மேற்படி நிலையம் இங்கு புதிதாக அமைய பெறுவதால் ,வடக்கு மக்கள் இங்கே இதே
சிகிச்சையை, கொரனோ காலத்திலும் மேற்கொள்ள முடியும் என மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்
செய்தி காட்சி – யாழவன்
ஆட்சியை கைப்பற்றுவதால் மாத்திரம் நாடு முன்னேறப் போவதில்லை-சரத் பொன்சேகா
ஆட்சியை கைப்பற்றுவதால் மாத்திரம் நாடு முன்னேறப் போவதில்லை-சரத் பொன்சேகா
தற்போதைய நிலையில் தமது கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் நாட்டை அபிவிருத்தி
செய்ய முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
நாம் நிச்சயமாக நமக்கு என்ற ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் நமது தலைவர்கள் திருந்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரனோ பரவல் – நாட்டை முடக்க கோரிக்கை
கொரனோ பரவல் – நாட்டை முடக்க கோரிக்கை
நாட்டை முடக்குமாறு பல்வேறு தரப்பினர் விடுத்து வரும் கோரிக்கை தொடர்பில், எவ்விதத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பயணிப்பாளர்
நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
எனினும், இத்தருணத்தில் நாட்டை முடக்குவது பிரச்சினைக்குத் தீர்வாகாது என்றும் அவர் தெரிவித்தார்.
நாடு திறந்திருக்கும் போதே, கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுவதன் வேகம் அதிகரித்துள்ளமையால், சகலரும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
துருக்கி வெளியுறவு அமைச்சர் இலங்கை வந்தார்
துருக்கி வெளியுறவு அமைச்சர் இலங்கை வந்தார்
துருக்கி குடியரசின் வெளியுறவு அமைச்சர் மெவ்லட் சாவுசோக்லுவுடன் 2022 ஜனவரி 28, வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பில், இலங்கைக்கும்
துருக்கிக்கும் இடையில் நிலவும் ‘மிதமான, சுமூகமான மற்றும் பரஸ்பர ஆதரவான பங்காளித்துவத்தை’ வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சுட்டிக் காட்டினார்.
இந்த வகையில், துருக்கி தனது ‘ஆசியா புதிய முயற்சி’ என்ற கட்டமைப்பில் இலங்கையுடன் இன்னும் நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கு
வெளிப்படுத்திய விருப்பத்தை அமைச்சர் பீரிஸ் வரவேற்றார். துருக்கியுடனான இருதரப்பு உறவுகளில் பரஸ்பர ‘நண்பர், நட்பு நாடு மற்றும் மதிப்புமிக்க பங்காளி என்ற
வகையில்’ இலங்கையின் முக்கியத்துவத்தை துருக்கிய வெளிவிவகார அமைச்சர் சாவுசோக்லு எடுத்துரைத்தார்.
இலங்கையில் நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பாக துருக்கியினால் பேணப்படும் கொள்கை ரீதியான நிலைப்பாட்டையும், பிராந்திய மற்றும் பலதரப்பு மன்றங்களில் வெளிப்படுத்தப்பட்ட ஒற்றுமையையும் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர்
பாராட்டி, ஒப்புக்கொண்டார். மேலும் விளக்கமளித்த அமைச்சர், இலங்கையில் வாழும் அனைத்து சமூகங்கள் மற்றும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அதே
வேளையில், நம்பகமான, அனைத்தையும் உள்ளடங்கிய உள்நாட்டு செயன்முறையின் மூலம் நல்லிணக்கத்தின் எஞ்சிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு வெளிநாட்டு அமைச்சர்களும் கலந்துரையாடினர். பொருளாதார ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டி,
ஜூன் 2021 இல் நடைபெற்ற இலங்கை – துருக்கி பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான துருக்கி கூட்டுக் குழுவின் இரண்டாவது அமர்வில் அடையாளம் காணப்பட்டவாறு, வர்த்தகத்தை மேலும் பன்முகப்படுத்தி, ஆண்டுக்கு 500 மில்லியன்
அமெரிக்க டொலர் வர்த்தக இலக்கை அடைந்து கொள்வதற்காக சீராக செயற்பட வேண்டியதன் அவசியத்தை அவர்கள் அடையாளம் கண்டனர். முதலீடு மற்றும் வணிக இணைப்புக்களை மேம்படுத்துதல், சுற்றுலா மற்றும் இணைப்பை மேம்படுத்துதல்
மற்றும் ஒத்துழைப்பின் சாத்தியமான புதிய பகுதிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான தொடர்பை மேம்படுத்துவதில் துருக்கிய விமான சேவையின் பங்களிப்பை அமைச்சர் பீரிஸ் பாராட்டினார்.
எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இரு அமைச்சர்களும் இந்த விஜயத்தின் போது இரட்டை வரி விதிப்பைத் தவிர்ப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இரு அமைச்சர்களும் பாதுகாப்பு, காவல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பரஸ்பர ஆர்வமுள்ள ஏனைய பகுதிகள் குறித்தும் ஆலோசித்ததுடன், எதிர்காலத்தில் உயர்மட்ட விஜயங்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் எதிர்பார்த்தனர்.
கோவிட்-19 தொற்றின் தாக்கத்தை குறைப்பதற்காக 2021 ஆம் ஆண்டு துருக்கிய ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு முகவரமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட மருத்துவ உதவிகள் மற்றும் 2004 சுனாமிக்குப் பின்னர் தென்னிலங்கையில் வீட்டுக்
கட்டுமானத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகளுக்காக துருக்கி அரசாங்கத்திற்கு இலங்கையின் பாராட்டுக்களை அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.
பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த இருதரப்பு சந்திப்பில் கலந்துகொண்டனர்.
வெளிவிவகார அமைச்சர் சாவுசோக்லுவுடன் இலங்கைக்கான துருக்கித் தூதுவர் டிமெட் செகெர்சியோகுலு மற்றும் வெளிவிவகார அமைச்சரின் ஆலோசகர்களும்
இணைந்திருந்தனர். இந்த விஜயத்தின் போது துருக்கிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
இதற்கு முன்னர் ஜூன் 2016 இல் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த வெளிவிவகார அமைச்சர் சாவுசோக்லு இலங்கைக்கு மேற்கொண்ட இரண்டாவது விஜயம் இதுவாகும்.
வெளிநாட்டு அமைச்சு
முதலாம் திகதி முதல் புதிய சொகுசு போக்குவரத்து சேவை
முதலாம் திகதி முதல் புதிய சொகுசு போக்குவரத்து சேவை
புதிய சொகுசு போக்குவரத்து சேவை பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா இதுதொடர்பாக தெரிவிக்கையில்,
புதிய சொகுசு போக்குவரத்து சேவையின் அடிப்படையில் 24 பிரதேசங்களை
உள்ளடக்கியவகையில் சுமார் 72 சொகுசு ,அதி சொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.
அவுஸ்ரேலியாவில் இரு பிள்ளைகளை கொன்று இலங்கையர் தற்கொலை
அவுஸ்ரேலியாவில் இரு பிள்ளைகளை கொன்று இலங்கையர் தற்கொலை
அவுஸ்ரேலிய பேர்த் நகரில் 40 வயதுடைய இந்தி குணதிலக என்பவர் தனது மகள் ,மகனை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார்
மனைவியை பிரிந்து வசித்து வரும் இவரே இந்த தற்கொலையினை புரிந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
அதிக மன விரக்தியில் இருந்த நிலையில் இந்த தற்கொலை இடம்பெற்றுள்ளது
மக்கள் கண்ணீருடன்குழந்தைகள் கொலை புரிய ப்பட்ட பகுதியில் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
இலங்கையர்கள் வெளி நாடுகளில் அதிக மன அழுத்தம் காரணமாக இவ்வாறான
மரணங்கள் இடம்பெற்று வருவது குறிப்பிட தக்கது
இலங்கையில் கொரானாவுக்கு 14 பேர் மரணம்
இலங்கையில் கொரானாவுக்கு 14 பேர் மரணம்
இலங்கையில் கடந்த தினம் கொரானாவுக்கு 14 பேர் மரணமாகியுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
மேலும் குறித்த நோயானது வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
நீரில் மூழ்கி நான்கு பேர் மரணம் – தொடரும் சோகம்
நீரில் மூழ்கி நான்கு பேர் மரணம் – தொடரும் சோகம்
இலங்கை எம்பிலிபிட்டிய பகுதியில் அருவியில் நீராடிய நால்வர் நீரோட்ட்தில் அடித்து செல்ல பட்டு பலியாகியாகியுள்ளனர்
காணாமல் போன இவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் சுழியோடிகள் ஈடுபடுத்த பட்டுள்ளனர்
சமீப காலங்களாக இவ்வாறான மரணங்கள் இலங்கையில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
பிரபல பாடசாலையொன்றின் அதிபர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது
பிரபல பாடசாலையொன்றின் அதிபர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது
பாணந்துறையிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நேற்று (28) பாணந்துறை மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பெப்ரவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
150,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற முற்பட்ட போதே அதிபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச, ஊழல் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று அவர் கைது செய்யப்பட்டிருந்தார்..
சந்தேகத்திற்குரிய அதிபர், மாணவர் ஒருவரை முதலாம் தரத்திற்கு அனுமதிப்பதற்காக 200,000 ரூபாவை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் அது 150,000 ரூபாவாக குறைக்கப்பட்டு அதனை பெற்றுக்கொள்ள முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிபர் இலஞ்சம் கோரியதாக குழந்தையின் தந்தை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பண்டாரகம பகுதியில் வைத்து அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லஞ்சம் , ஊழல் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரியொருவர், அதிபர் இலஞ்சம் வாங்கும் வேளையில் மாணவரின் தாயாகக் தன்னை அடையாளப்படுத்தி சந்தேக நபரைக் கைது செய்துள்ளார்
பள்ளத்தில் விழுந்த பயணிகள் பஸ்
பள்ளத்தில் விழுந்த பயணிகள் பஸ்
ஹட்டன் – டிக்கோயா சலங்கந்தை பிரதான வீதியில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 17 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று காலை 6.45 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சலங்கந்தை பகுதியிலிருந்து ஹட்டனில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸூக்கு இடம் கொடுக்க முயன்ற போது, குறித்த தனியார் பேருந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
விபத்தில் காயங்களுக்கு உள்ளான 17 தொழிலாளர்களும் டிக்கோயா கிலங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் .
சம்பவத்தில் மரியசவரி என்ற 55வயதுடைய ஆண் தொழிலாளி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்..
சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரை ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
40 இற்கு மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு ஒமிக்ரோன்
40 இற்கு மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு ஒமிக்ரோன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒமிக்ரோன் வைரஸ் பரவல் அதிகரித்துக் காணப்படுகின்றது.
கடந்த ஒரு வாரத்திற்குள் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்றாளர்கள் 1300 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த 3 தினங்களுக்குள்
தொற்றுக்குள்ளான 500 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரோ நாளில் நூற்றுக்மேட்பட்ட நோயாளர்களும், 20 கற்பினித்தாய்மார்களும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
மொத்தமாக மாவட்டத்தில் 40 இற்கு மேற்பட்ட கற்பினித்தாய்மார்கள் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளாகியிருப்பது அறியப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இதன்
அபாயத்தினை உணர்ந்தவர்களாக அனைத்து நடவடிக்கைகளிலும் செயற்படவேண்டும் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணன் கேட்டுக்கொண்டார்.
மட்டக்களப்பில் ஒமிக்ரோன் பரவலைத் தடுக்க பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு விசேட ஆலோசனைகள் மாவட்ட செயலகத்தில்
வழங்கப்பட்ட போதே பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைவாக இவ்வாலேசனைகள் வழங்கும் நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் நேற்று (28) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
















